Jump to content

யாழின் நவராத்திரி கொண்டாட்டம் - இறுதி பாகம்


Recommended Posts

அனைவரும் ஏதாவது ஒரு நிகழ்ச்சியில் பங்குபற்றுவதால், தானும் ஏதாவது செய்ய வேண்டும் என சி*5 அடம்பிடித்ததால், பின்வரும் நிகழ்ச்சி அரங்கேறியது:

பங்கு பற்றியது - சி*5 & தூயவன்

(திருவிளையாடல் படத்தில் வருவது போல, ஆனால் யாழை வைத்து)

தூயவன்: கேள்விகளை நான் கேட்கவா, நீர் கேட்கிறீரா?

இராவணன்: தூயவன்

தூயவன்: சரி நானே ஆரம்பிக்கின்றேன். சின்னப்பு ஆயத்தமா?

சின்னப்பு: கேளுமோய்

தூயவன்: யாழில் உமக்கு பிடித்தது?

சின்னப்பு: மப்பு

தூயவன்: யாழில் உமக்கு பிடிக்காதது?

சின்னப்பு: பத்து

தூயவன்: யாழில் தவிர்க்க வேண்டியது?

சின்னப்பு: "சந்தை கடை" போல் எங்கும் அரட்டை அடிப்பது

தூயவன்: யாழில் தற்போது வேண்டியது?

சின்னப்பு: கூரான அரிவாள்

தூயவன்: யாழின் பலம்?

சின்னப்பு: தமிழ்

தூயவன்: யாழின் -?

சின்னப்பு: மாற்றுக்கருத்தாளர்கள்

தூயவன்: யாழில் சேர்க்கப்பட வேண்டியது?

சின்னப்பு: ஒரு ஒன் லைன் க-- கடை

தூய்வன்: யாழில் இருந்து எறியப்பட வேண்டியது?

சின்னப்பு: றோயல் பமிலியின் எதிரிகள்

தூயவன்: யாழின் பிள்ளை?

சின்னப்பு: நான்

தூயவன்: யாழின் தொல்லை?

சின்னப்பு: நீ

தூயவன்: சின்னப்ப்ப்ப்ப்ப்ப்ப்பூ

சின்னப்பு: என்னலேய்

இராவணன்: அடங்குங்க!

----------------------------------------------------------------------------------------------------------

நம்முள் பலருக்கு பலரை தெரியாமல் இருந்ததால். ஒருவரை ஒருவர் கண்டுபிடிக்கும் போட்டி நடந்தது.

கண்டுபிடிக்கப்பட்டவர்களும், அவர்களை கண்டு பிடிக்க உதவிய அடையாளங்களும்:

1. புத்தன் - காவி

2. கானா பிரபா அண்ணா - மைக்

3. அஜீவன் அண்ணா - விடியோ கமேரா

4. குளக்காட்டான் - புகைப்படக்கருவி

5. சுண்டல் - பெண்கள் கூட்டம் பக்கமே இருந்ததால்

6. சாத்திரி - வரன் பார்க்கவா என கேட்டு

7. சி*5 - போத்தல்

8. சின்னாச்சி - சி*5 அர்ச்சனை குடுக்கும் போது

9. முகம்ஸ் - ஒட்டகப்பால் கையில்

10. இராவணன் அண்ணா - கையில் அரிவாள்

அனைவரும் கண்டு பிடிக்கப்பட, அழகாக சேலையில் நுழைந்த பெண் மட்டும் யார் என்று தெரியாமல் அனைவரும் மண்டையை போட்டு குளப்பி கொண்டிருந்தார்கள்.

யார் என்று கேட்டு பார்ட்தால் அது தான் "ஜமுனா". ஆங்க எதிர் பார்த்தது ஸ்லீவ்லஸ் உடையில் ஜமுனாவை....இதை கெட்டு முதலில் மயக்கம் பொட்டது "நாரதர்"

----------------------------------------------------------------------------------------------------------

அடுத்து புத்தனின் தத்துபித்து:

யாழில்:

இலகுவானது - மற்றவர் குறையை கண்டுபிடித்தல்

கடினமானது - எங்கட பிழையை உணர்தல்

இலகுவானது - ஒரு செய்தியை பார்த்ததும் யோசிக்காமல் கருத்து வைத்தல்

கடினமானது - எதையும் 2 தடவை யோசிச்சு கருத்து வைத்தல்

இலகு - உண்மையில் எம்மில் அன்பு செலுத்துபவர்களை நோகடிப்பது

கடினம் - நோகடித்த மனதை, ஆற வைப்பது

இலகு - மன்னித்து மறப்பது

கடினம் - மன்னிப்பு கேட்பது

இலகு - கண்டபாட்டுக்கு அறிக்கை விடுவது

கடினம் - அதை பின்பற்றுவது

இலகு - யாரும் எதுவும் உருப்படியான ஒரு விடயம் செய்வோம் என்றால் ஓம் என்பது

கடினம் - அந்த ஓமை நிஜமாக்குவது

இலகு - ஆளுக்கு 10 பாவனைப்பெயரில் வருவது

கடினம் - எந்த பெயரில் வந்தாலும் ஒரே போல கதைப்பதை தவிர்ப்பது

இலகு - ஒருத்தரை தனிப்பட்ட முறையில் தாக்குவது

கடினம் - போன ஆள் திரும்பி வருவது

இலகு - பாடல்களை கேட்பது

கடினம் - மற்றவர்களுக்கு உங்களிடம் உள்ள பாடலை குடுப்பது

இலகு - "கள உறவே என அழைப்பது"

கடினம் - அந்த சொல்லின் அர்த்தத்தை புரிந்து கொள்வது

இப்படியே போய் கொண்டிருந்த புத்தன்..அருகே வந்த இராவணன் அண்ணாவை பார்த்து...

இலகு - வெட்டுவது

கடினம் - கருத்தை எழுதுவது

அதற்கு இராவணன் அண்ண ,

இலகு - உம்மை தூக்கி கடலில் எறிவது

கடினம் - நீர் நீந்தி கரை சேர்வது

மதன் அண்ணா ஓடி போய் ஆளுக்கொரு இளரீர் குடுத்து சாந்த படுத்துகின்றார்...

----------------------------------------------------------------------------------------------------------

அடுத்து பாட்டுக்கு பாட்டு:

முதலில் சின்னப்புவும், சின்னாச்சியும் வருகின்றனர். இடையில் பிரச்சனைகள் வரலாம் என எதிர்பார்க்கப்பட்டதால் தொகுத்து வழங்க மதன் அண்ணாவும், நீதிபதிகளாக மோகன் அண்ணாவும், சண்முகி மாமியும்.

மதன்: வணக்கம் சின்னா நீர் ஆரம்பியும்

சி*5 : நம்ம சிங்காரி சரக்கு நல்ல சரக்கு அதை குப்புன்னு

மதன்: நன்றி போதும் போதும் இதற்கே மேல் பாடி என்னையும் வெட்டு வாங்க வைக்காதீர்கள். சின்னாச்சி நீங்கள் இப்பொழுது ...ஆ என்ன எழுத்த சொல்வது சரி :கு" இல் பாடுங்கள்

சின்னாச்சி: என்னை மானமுள்ள பொண்ணு என்று மதுரையில கேட்டாங்க, அந்த மாயவரத்தில கேட்டாங்க

சி*5: ஏன்டி இப்படி பொய் சொல்கிறார். உன்ட தம்பி பிளான் போட்டு என்னை கவுத்தவன்.

மதன்: சின்னப்பு குடும்ப பிரச்சனைகளை பின்னர் வைத்துக்கொள்ளலாம். சின்னாச்சி பிழையான எழுத்தில் ஆரம்பித்ததால் அடுத்த போட்டியாளர் முகத்தார். உங்களுடைய விருப்பமான பாடலை பாடுங்கள்

முகம்ஸ்: ஒட்டகத்தை கட்டிக்கோ கெட்டியாக ஒட்டிக்கோ வட்ட வட்ட பொட்டுக்காரி

மதன்: நன்றி முகத்தார். நீங்கள் நன்றியுள்ள மனிதர். எங்கூ போனாலும் ஒட்டகத்தை கட்டிக்கிறிங்க..சீ நினைக்கிறிங்க. சின்னப்பு நீங்கள் ஆரம்பிக்க வேண்டிய எழுத்து "ஏ"

சின்னப்பு: ஏ நாட்டு சரக்கு நச்சுன்னு தான் இருக்கு கிட்ட வந்து ஒட்டிக்கிட்டா

நிலமை மோசமாவதை உணர்ந்த மதன் அண்ணா, இரவணன் அண்ணாவை பார்த்து,

"திருப்பாச்சி அரிவாள தூக்கி கிட்டு வாடா வாடா" என பாட.

இராவணன் அண்ணா வருவதை பார்த்து பயந்து முகத்தாரும், சின்னப்புவும் ஓடியதால் நிகழ்ச்சி அத்துடன் முடிந்தது.

----------------------------------------------------------------------------------------------------------

உணவு நேரம்:

போதிய அளவு உணவு இருந்தும், இடம் இருந்தும்... அன்னதானம் போல் குடுத்தால் தான் சாப்பிடுவோம் என அடம். அதில் அந்த அழகான சேலை உடுத்த பெண்ணும் அடக்கம். இப்ப தெரியுமே அது யார் என்று... "ஜமுனா" தான்.

சரி என்று வரிசையில் நில்லுங்கள் என்றால் சின்னாவும் சாத்திரியும் முட்டி மோதி அடிபட்டு (அப்படி என்றால் தான் ருசியாக இருக்குமாம்) விழுந்து யாரோ ஒருவரில் பல் செற் கூட கீழே விழுந்துவிட்டது. (அது சாத்திரியுடையதா சின்னப்புவினுடையதா என்பது தான் கேள்வி"

பல்லை பார்த்து பயந்த்கு சுட்டி அலற.... சுட்டியை சாந்தபடுத்த பொன்னம்மாக்காவும், சின்னாச்சியும் கஸ்டபட்டார்கள்.

கடைசி வரை லொலி பொப்புடன் நின்று விட்டு, தனக்கு கடலை கிடைக்கவில்லை என நிலா அழுது ஒரே அடம்.

பிறகு ஒன்றும் செய்ய முடியாமல் முன்னால் இருந்த ஒரு கடையில போய் நிறை லொலி பொப் வாங்கி வந்து வசம்பண்ணா நிலமையை சமாளித்தார்.

எதற்கும் வாய் திறக்காத அருவி, சாப்பாட்டுக்கும் வாயை திறக்கவே மாட்டன் என்ட, பிறகு மோகன் அண்ணா தான் "தம்பி பரவாயில்லை சாப்பிடுங்கோ" என்று சொல்லி அருவியை சாப்பிட வைத்தது.

ஆதி தானும் உணவு பரிமாறுவேன் என வெளிக்கிட்டு, அவல் சட்டியுள் விழுந்து...இது தெரியாமல் சுஜேந்தன் அவலுடன் சேர்த்து ஆதியையும் வெளியே கொட்ட.. இது தேவையென தன் மேல் தொடுக்கப்பட்ட தாக்குதல் என ஆரம்பிக்க...சஜேவன் வந்து "எரியும் வீட்டுக்கு எண்ணெயை ஊத்த"...கலவரம்

----------------------------------------------------------------------------------------------------------

சாப்பாட்டின் பின்னர் ரசிகையின் எள்ளுச்சம்பல் செய்முறைக்கு போட்டியோ போட்டி.

"அடப்பவிகளா இப்ப தெரியுது எத்தனை பேர் என் செய்முறையை உண்மையாக யாழில் படித்தீர்கள் என்று" என முனுமுனுத்ததும் நன்றாகவே கேட்டது.

இலக்கியனின் சோள மா மஸ்கற்றும் பெரும் பெயரை பெற்றது.

நாரதர் அண்ணா பக்கம் சனம் கொன்சம் குறைவாய் இருந்தது..காரணம் அவரின் "கம கமக்கும் எலி பொறியல்"

----------------------------------------------------------------------------------------------------------

அடுத்து குறிப்பிட்டு சொல்லணும் என்றால் "தாயக பறவைகள்". இதை யார் நடத்துவது என்று அறிய, பெண்கள் இருந்த பக்கம் பார்த்து "தாயக பறவைகள்" என கூப்பிடுவதும். அதில் வரும் ஆக்கங்கள் பற்றி சொல்வதுமாக சில சகோதரர்கள் ...

பெண்கள் அவ்வளவு எளிதில் இதற்கெல்லாம் பிடிபடுவார்களா?

இராவணன் அண்ணாவை போய் அழைத்துவர, சகோதரங்கள் "எஸ்கேப்"

----------------------------------------------------------------------------------------------------------

இறுதியா நன்றியுரை சொல்ல "ரிஸிக்" . ஏன் என்றால் யாழில் வாழ்த்து சொல்லியே பிரபலமானவர் ஆச்சே...

இதோ :

"வணக்கம், நான் தான் ரிஸிக்..இங்கு வந்த எல்லாருக்கும் மிக்க நன்றி. நிகழ்ச்சியை ஆரம்பித்த தூயாக்கும், கூட நின்று நடத்திய தூயவனுக்கும் வாழ்த்து, வந்த உங்களுக்கு வாழ்த்து, சாப்பிட்டவங்களுக்கும் வாழ்த்து, நிர்வாக குழுக்கு வாழ்த்து, ஓபரா கவுஸுக்கும் வாழ்த்து, இதை கட்டினவனுக்கும் வாழ்த்து...எங்கட கருத்த வெட்டினவனுக்கும் வாழ்த்து " என வாய் தடுமாறி சொல்லிவிட்டு, நிர்வாக குழு பார்த்த பார்வையில் ஓடிவிடுகின்றார்.

இறுதியாக பேச வந்த மோகன் அண்ணா:

"வணக்கம், நல்லதொரு நிகழ்ச்சியை செய்த தூயாவிற்கும் (அப்புறமா உம்மை கவனிச்சுக்கிறேன் தூயா), அவருடன் சேர்ந்து பாடுபட்ட சகோதரங்களுக்கும் மிக்க நன்றி. (அடுத்து வாங்கி கட்ட போறவங்க)

சில நாட்களாக யாழில் குளப்பங்கள். சில பகுதிகளில் இருந்த அரட்டை இப்பொழுது களம் முழுதும் பரவி வருகின்றது என பல முறைப்பாடுகள். இதனால் நாங்கள் என்ன செய்ய வேண்டும் ..."

என்று எங்கள பார்த்தால்.... எல்லாரும் ஆளாலுக்கு அரட்டை..

மோகன் அண்ணா இராவணன் அண்ணாவை பரிதாபமாக பார்க்க...இராவணன் அண்ணா மதன் அண்ணாவை பார்க்க..

"விளங்கினா போல தான்"

---------------------------------------------------------------------------------------------------------

இத்துடன் நவராத்திரி விழா நிறைவு பெறுகின்றது.

உங்கள் அனைவரையும் விழாவில் இணைத்திருக்கின்றேன். சிலர் பெயர் அதிகம் பாவித்துள்ளேன். காரணம் எனக்கு அவர்களை அதிகம் தெரிந்தது தான். ஏன் எனில் நான் பிழையாக எழுதினாலும் மன்னிப்பார்கள்.

இது யாரையும் புண்படுத்தும் நோக்குடன் எழுதப்படவில்லை. பிழைகளை மன்னித்து பொருத்தருளவும்.

நன்றி

வணக்கம்

தூயா

[b]அடுத்த நாள் நடந்த நொந்- வெஜ் சாப்பாட்டு ஒன்று கூடல் படங்கள்:

http://www.yarl.com/forum3/viewtopic.php?t...=4357&start=945

எடுத்தவர்: எங்க குளம்ஸ்

Link to comment
Share on other sites

  • Replies 85
  • Created
  • Last Reply

இலங்கையில் நவராத்திரிக் கொண்டாட்டம் உண்டா?

தமிழகத்தில் பொதுவாக பிராமணர்களின் வீட்டில் தான் கொலு வைப்பது வழக்கம்.....

Link to comment
Share on other sites

தூயா :lol: அடிக்கடி இப்படி பல ஆக்கங்களை இணையுங்க....

எடுத்த புகைப்படங்களை சீக்கிரம் அனுப்பி வையுங்கள் குளம்ஸ் ;)

Link to comment
Share on other sites

இலங்கையில் நவராத்திரிக் கொண்டாட்டம் உண்டா?

தமிழகத்தில் பொதுவாக பிராமணர்களின் வீட்டில் தான் கொலு வைப்பது வழக்கம்.....

ஓம்.

கொலுவைப்பது பற்றி சரியாக தெரியவில்லை

ஆனால் நாங்கள் 9ஆம் நாளும், ஆயுத பூசையும் பெரிதாக செய்வம்

Link to comment
Share on other sites

அப்பாடா நல்லமுறையாக நடாத்தி முடிச்சிட்டீங்க கேள்வி பதில் இலகு கடினம் எல்லாம் அருமை. சூப்பரோ சூப்பர். எப்படி பபா இப்படி எல்லாம் சிந்திக்கிறீங்க. (நடந்ததை தானே எழுதினீங்க என ) :P

மீண்டும் ஓர் நிகழ்வுடன் சந்திப்பம் :P :arrow:

Link to comment
Share on other sites

அப்பாடா நல்லமுறையாக நடாத்தி முடிச்சிட்டீங்க கேள்வி பதில் இலகு கடினம் எல்லாம் அருமை. சூப்பரோ சூப்பர். எப்படி பபா இப்படி எல்லாம் சிந்திக்கிறீங்க. (நடந்ததை தானே எழுதினீங்க என ) :P

மீண்டும் ஓர் நிகழ்வுடன் சந்திப்பம் :P :arrow:

நன்றி நிலா..இந்த விழா எம்மை இணைக்கும் பாலமாக இருக்க வேண்டும்... :lol: :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புத்தனின் தத்து பித்துவும், தூயவன் சின்னப்புவின் திருவிளையாடலும் மிகவும் நன்றாக இருக்கிறது. பாராட்டுக்கள் தூயா

Link to comment
Share on other sites

புத்தனின் தத்து பித்துவும், தூயவன் சின்னப்புவின் திருவிளையாடலும் மிகவும் நன்றாக இருக்கிறது. பாராட்டுக்கள் தூயா

மிக்க நன்றி கந்தப்பு :lol:

Link to comment
Share on other sites

இலங்கையில் நவராத்திரிக் கொண்டாட்டம் உண்டா?

தமிழகத்தில் பொதுவாக பிராமணர்களின் வீட்டில் தான் கொலு வைப்பது வழக்கம்.....

.என்ன லக்கி, நீங்களும் நானும்தான் சீப் கெஸ்ட் , மறந்துட்டிங்களா....

நீங்க ஓப்ரா ஹவுஸ் முன்னாடி அழுத போது நான் கெர்சீப் கொடுத்தேன் நினைவில்லையா?

இலங்கையில் நவராத்திரிக் கொண்டாட்டம் உண்டா?

ஈழத்தில் என்று திருத்திகொள்ளுங்கள்

Link to comment
Share on other sites

லக்கி அழுததிலேயே எல்லாரும் நில்லுங்க...என்னை மாட்டிவிடுறது தானே குறிக்கோள்!

Link to comment
Share on other sites

அனைவரும் ஏதாவது ஒரு நிகழ்ச்சியில் பங்குபற்றுவதால், தானும் ஏதாவது செய்ய வேண்டும் என சி*5 அடம்பிடித்ததால், பின்வரும் நிகழ்ச்சி அரங்கேறியது:

அடுத்து பாட்டுக்கு பாட்டு:

முதலில் சின்னப்புவும், சின்னாச்சியும் வருகின்றனர். இடையில் பிரச்சனைகள் வரலாம் என எதிர்பார்க்கப்பட்டதால் தொகுத்து வழங்க மதன் அண்ணாவும், நீதிபதிகளாக மோகன் அண்ணாவும், சண்முகி மாமியும்.

மதன்: வணக்கம் சின்னா நீர் ஆரம்பியும்

சி*5 : நம்ம சிங்காரி சரக்கு நல்ல சரக்கு அதை குப்புன்னு

மதன்: நன்றி போதும் போதும் இதற்கே மேல் பாடி என்னையும் வெட்டு வாங்க வைக்காதீர்கள். சின்னாச்சி நீங்கள் இப்பொழுது ...ஆ என்ன எழுத்த சொல்வது சரி :கு" இல் பாடுங்கள்

சின்னாச்சி: என்னை மானமுள்ள பொண்ணு என்று மதுரையில கேட்டாங்க, அந்த மாயவரத்தில கேட்டாங்க

சி*5: ஏன்டி இப்படி பொய் சொல்கிறார். உன்ட தம்பி பிளான் போட்டு என்னை கவுத்தவன்.

.

சி*5 நீங்களும் இப்படித்தான் கவுந்திங்களா? :lol::lol::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓம்.

கொலுவைப்பது பற்றி சரியாக தெரியவில்லை

ஆனால் நாங்கள் 9ஆம் நாளும், ஆயுத பூசையும் பெரிதாக செய்வம்

ஈழத்தில் கொலுசு வைப்பதில்லை லக்கிலுக்கு

Link to comment
Share on other sites

லக்கி அழுததிலேயே எல்லாரும் நில்லுங்க...என்னை மாட்டிவிடுறது தானே குறிக்கோள்!

அப்ப என்ன லக்கி அழவில்லையென்று சொல்லுறீங்களா? :wink: :wink: :wink:

Link to comment
Share on other sites

இலங்கையில் நவராத்திரிக் கொண்டாட்டம் உண்டா?

தமிழகத்தில் பொதுவாக பிராமணர்களின் வீட்டில் தான் கொலு வைப்பது வழக்கம்.....

கொலு வைக்கும் பழக்கம் இல்லை. ஆனால் நவராத்திரி சிறப்பாகவே கொண்டாடப்படும், அனைவராலும்.

இதைப்பற்றிய கானபிரபா, மலைநாடான் ஆகியோரின் வலைப்பதிவுகளை படித்தால் ஈழத்தில் நடக்கும் நவராத்திரி பற்றிய விளக்கம் கிடைக்ககூடும்.

Link to comment
Share on other sites

தூயா நவராத்திரி கொண்டாட்டம் நல்லாவே இருக்கிறது. அதனை இங்கு அனைவருடனும் பகிர்ந்ததற்கு நன்றி :wink: :lol:

Link to comment
Share on other sites

எடுத்த புகைப்படங்களை சீக்கிரம் அனுப்பி வையுங்கள் குளம்ஸ் ;)

dsc000111nz8.th.jpg

untitledgp4.jpg

நித்திரை தூக்கதிலை படம் எடுத்து சரிவரேல்லை தூயா :?

மிச்ச சாப்பாடெல்லம் படம் பிடிக்க முடியலை சுண்டல் சுண்டலை எல்லாருக்கும் முதல் துக்கிகொண்டு போட்டார், அவலை ஆதி அவதியா துக்கி போட்டார் :lol:

Link to comment
Share on other sites

கனகாலத்துக்குப்பிறகு யாழில் மீண்டும் அருவி.

கந்தப்பு, ஒருவர் தன்னும் திரும்பி வந்து கருத்து தந்துள்ளாரே,,இதுவே நவராத்திரிக்கு போதுமே :lol:

அருவி, மிக்க நன்றி ;)

Link to comment
Share on other sites

படங்களுக்கு நன்றி குளம்ஸ்:lol: பரவாயில்லை தலைகீழாக் என்றாலும் படம் வந்ததே :lol:

Link to comment
Share on other sites

அசைவ பிரியர்களுக்கும் சி*5 க்கும் தூயா ஏற்பாடு பண்ணிய விருந்தின் படம் நமது கமராவுக்குள் சிக்கியவை பகுதிக்க எதிர் பாருங்க :idea: :P

Link to comment
Share on other sites

அசத்துறிங்க குளம்ஸ் :lol: இதை நான் என்னுடையதிலும் போட்டு விடுகின்றேன்

link எடுத்து போடலாமா?

Link to comment
Share on other sites

அசத்துறிங்க குளம்ஸ் :lol: இதை நான் என்னுடையதிலும் போட்டு விடுகின்றேன்

link எடுத்து போடலாமா?

தாரளமா தூயா

Link to comment
Share on other sites

ஏன் சிரிக்கிறிங்கள்??? :lol:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அண்ணை எல்லாம் அந்த அக்கரைப்பற்று அங்கிள்(63) தந்த உசார் தான் காரணமோ?!
    • சுகாதார அமைச்சுக்கு சொந்தமான 679 வாகனங்கள் மாயம்! ”சுகாதார அமைச்சுக்கு சொந்தமான 679 வாகனங்கள் காணாமற்போன விடயம் தொடர்பாக நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்படும்”என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். பிரபஞ்சம் தகவல் தொழிநுட்ப வேலைத்திட்டத்தின் கீழ், 157 ஆவது கட்டமாக 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறை உபகரணங்கள், ஹம்பாந்தோட்டை, கிரிந்த முஸ்லிம் மகா வித்தியாலயத்திற்கு வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே சஜித் பிரேமதாஸ இவ்வாறு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது ” சுகாதாரத்துறையில் இடம்பெற்ற மருந்துப் பொருள் கொடுக்கல் வாங்கல்கள் மற்றும் இலஞ்ச மோசடிகள் தொடர்பில் வெளியான அம்பலத்தினால் நாடாளுமன்றுக்கு உள்ளேயும் வெளியேயும் பல சவால்களுக்கு நாம் முகம் கொடுத்தோம். ஐக்கிய மக்கள் சக்தி பெரும் போராட்டங்களை இன்று நடத்தி திருடர்களை நீதிமன்றில் முன் நிறுத்தியுள்ளது. மருந்துப்பொருள் மோசடி குறித்து பலர் பேசுகிறார்கள். ஆனால், சுகாதார அமைச்சுக்குச் சொந்தமான 679 வாகனங்கள் காணாமல் போயுள்ளதாக தேசிய கணக்காய்வு அலுவலகம் தெரிவித்துள்ளது. இதில் 240 வாகனங்கள் குறித்த சில தகவல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ஆனால் சுகாதார அமைச்சு மேலதிக தகவல்களை கணக்காய்வு அலுவலகத்திற்கு ஒப்படைக்கவில்லை. மேலும் 439 வாகனங்கள் குறித்து எந்த தகவலும் இல்லை. வங்குரோத்து அடைந்துள்ள இந்த நாட்டில்இதுபோன்ற சம்பவங்கள் நடக்கும் போது பார்த்துக் கொண்டிருக்க முடியாது. அரச நிறுவனங்களில் இவ்வாறான பல முறைகேடுகள் காணப்படுவதால், இந்த மோசடிகள் மற்றும் திருட்டுகள் ஒவ்வொன்றும் தெளிவாக விசாரிக்கப்படும். இதுதொடர்பாக நீதிமன்றில் வழக்கும் தொடுக்கப்படும். இதற்கான நடவடிக்கைகளை எமது ஆட்சியில் முன்னெடுப்போம்” இவ்வாறு சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். https://athavannews.com/2024/1378433
    • இது தான் நான், யாழ் அத்தியடி வீட்டில்  நீங்களே வயதை தீர்மானித்து, உங்கள் ஊகம் சரியா பிழையா  என்பதை சரிபாருங்கள். கட்டாயம் நான் ஓய்வு வயதை தாண்டிய ஒருவன் !           
    • இந்த ஒலிநாடாவை நான் கேட்கவில்லை நெடுக்ஸ். நீங்கள் கேட்டீர்களா? ஏன் என்றால் அதன் சிறு விபரிப்பில் Hundreds of South Asians are fighting Russia’s war on Ukraine, including from India, Nepal, and Sri Lanka.  என உள்ளது. இதன் அர்த்தம் நூற்றுக்கணக்கான தென்னாசியர்கள் உக்ரேனில் நடக்கும் ரஸ்யாவின் போரில் பங்குறுகிறனர் என்பதல்லாவா? பிற்சேர்க்கை ஒலிப்பதிவை கேட்டேன், இதில் சிலாகிக்கபடுவது கிட்டதட்ட முழுவதும் ரஸ்யா போனவர்கள் பற்றியே. எனிலும் உக்ரேனுக்கும் இப்படி போவதாக இரெண்டு இடத்தில் சொல்லவும் படுகிறது.
    • லைக்கா தொடர்பான அவதூறுகளை வெளியிடக் கூடாது : சவுக்கு சங்கருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு! லைக்கா தொடர்பான எந்த ஒரு அவதூறுகளையும் வெளியிடக் கூடாதென சவுக்கு சங்கருக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த பங்குனி ( (March)  மாதம் 19 ஆம் திகதி  சென்னை உயர் நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்ட சிவில் வழக்கில் (Civil Suit) இந்த அதிரடி தீர்ப்பு வழங்கப்பட்டது. மேலும் இது தொடர்பான அறிவிப்பை You Tube LLC நிறுவனத்திற்கு அறிவித்ததோடு உடனடியாக அதுசம்பந்தமான காணொளிகளை (வீடியோக்களை) நீக்குமாறு உத்தரவிட்டதுடன், இதனூடாக சவுக்கு சங்கர் பெற்றுக்கொண்ட வருமானம் அனைத்தையும்  நீதிமன்றில் வைப்பிலிடுமாறும் உத்தரவிடப்பட்டது. தனது சவுக்கு மீடியா You Tube  பக்கத்தில்,  லைகா நிறுவனத்தை தொடர்புபடுத்தி சவுக்கு சங்கர் அவதூறாக பேசியுள்ளதாக குற்றம்சாட்டி, அந்நிறுவனம் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. அந்த மனுவில், தமிழக திரை உலகிலும், உலகளவிலும் நற்பெயரை கொண்டுள்ள லைகா நிறுவனத்தின் நற்பெயருக்கு களங்கும் விளைவிக்கும் வகையில் சவுக்கு சங்கரின் பேச்சு அமைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது. அத்துடன், ஒரு கோடியே ஆயிரம் ரூபாய் மான நஷ்ட ஈடாக வழங்கவும், அந்த காணொளி மூலம் கிடைத்த தொகையை வைப்பிலிட உத்தரவிட வேண்டும் எனவும் கோரப்பட்டது. மேலும், YouTube பக்கத்தில் உள்ள காணொளியை ( வீடியோவை) நீக்க உத்தரவிடவும் கேட்டுக்கொள்ளப்பட்டது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி என். சதீஷ்குமார், லைகா நிறுவனத்தின்  மீது எந்தவிதமான இழிவான/ அவதூறான குற்றச்சாட்டுகளை நேரடியாகவோ அல்லது வேறு எந்த வகையிலும் சவுக்கு மீடியா வெளியிடக்கூடாது என மார்ச் 19 அன்று இடைக்காலத் தடை விதித்தார். மேலும்  இந்த காணொளிகள்  மூலம் கிடைத்த வருமான தொகையை நீதிமன்றத்தில் வைப்பிலிட  YouTube  LLC  நிறுவனத்துக்கு உத்தரவிட்டார். இந்த வழக்கு நீதிபதி சி.வி. கார்த்திகேயன் முன்னிலையில் கடந்த ஏப்ரல் 12ஆம் திகதி  மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, லைகாவிற்கு எதிராகச் சவுக்கு சங்கர்  பேசிய காணொளி (வீடியோ) முடக்கப்பட்டதாகத் YouTube  LLC  தரப்பில்,  தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கு தொடர்பாக, ஜூன் 13ஆம் திகதிக்கு முன்  சவுக்கு சங்கர் பதிலளிக்க வேண்டும் எனவும், சவுக்கு சங்கருக்கு எதிரான இடைக்கால உத்தரவை வரை நீட்டித்தும் உத்தரவிடப்பட்டது. அத்துடன் YouTube  LLC  சார்பில் முன்னியைான சட்டத்தரணியின் வாய்மூல பதில்கள் எழுத்துபூர்வமாக ஜூன் 13ஆம் திகதிக்கு முன்   சமர்ப்பிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தி,   விசாரணையை நீதிபதி சி.வி.  கார்த்திகேயன் ஒத்திவைத்துள்ளார். https://athavannews.com/2024/1378369
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.