Jump to content

பயனுள்ள பேஸ் புக் ட்ரிக் ....(RESTRICTED )..(FACEBOOK TRICK)


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

facebook-friend-requests.jpg

நாம் அனைவரும் பேஸ் புக் கணக்கு வைத்திருப்போம்.நமக்கு தெரியாத நபர்களிடமிருந்து வரும் பேஸ் புக் நண்பர்கள் கோரிக்கையை(Facebook Friend request) நாம் நிகாரிக்க எளிதான வழி இருக்கிறது.ஆனால் சில நபர்களிடம் இருந்து வரும் கோரிக்கையை நிராகரிக்க முடியாது,ஆனால் அந்த நபரை உங்கள் நண்பர் ஆக்கி கொள்ளவும் தயக்கம்.இந்த சூழலுக்கு  பேஸ் புக நமக்கு RESTRICTED என்ற வசதியை தந்துள்ளது.நீங்கள் நிராகரிக்க முடியாத நபரை நண்பர் ஆக்கி பின்பு அவரை Restricted User என்ற பிரிவுக்குள் கொண்டுவந்தால்,நீங்கள் பகிரும் எந்த பகிர்வையும் அவரால் பார்க்க முடியாது.நீங்கள் பப்ளிக் என்று வகைபடுத்திய தகவல்களை அவர்களால் பார்க்க முடியும்.  இதனால் நமக்கு எந்த சேதமும் வராது  :))

 

இதனை செயல்படுத்த

நண்பரை இணைத்தவுடன் ,உங்கள் நண்பரின் பக்கத்துக்கு சென்று

Facebook profile  >>>Friends drop-down >>>choose the “Add to Another List”>>> select "Restricted"

எங்க கிளம்புறீங்க....நம்ம சொந்தங்கள கள புடுங்க போறீங்களா :))

 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி இணைப்பிற்கு

நவீன் இன்றைக்கு கனக்க புடுங்கப்போறார்
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னட்டை உந்த பேஸ்புக் ஒண்டும் இல்லை....அதாலை உந்த சோலியொண்டுமில்லை...அவளை தொடுவானேன் அவலப்படுவானேன்.. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பேஸ்புக் இருக்கு , ஆனால் அக்கவுண்டில (ஒருத்தரைத் தவிர) ஆருமில்லை...!

Link to comment
Share on other sites

பேஸ்புக் இருக்கு , ஆனால் அக்கவுண்டில (ஒருத்தரைத் தவிர) ஆருமில்லை...!

 

:lol: :lol:

 

யாழ்கள பெயரில் இருந்தால் யாழ்கள உறவுகளை add பண்ணலாம்.  :rolleyes: 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னட்டை உந்த பேஸ்புக் ஒண்டும் இல்லை....அதாலை உந்த சோலியொண்டுமில்லை...அவளை தொடுவானேன் அவலப்படுவானேன்.. :)

 

கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக முக புத்தகம் வைத்திருந்தாக நினைவு..சில பல தவிர்க்க முடியாத காரணங்களால்,நிறையவே வலிகளை ஏற்படுத்திக் கொண்ட இடமாக மாறியதால் கடந்த ஒரு மாதத்திற்கு மேல் முகநூலுக்குள் உள் இடுவது,மற்றும் பதிவுகள் இடுவதிலிருந்து விடுப்பட்டு விட்டாச்சு....தங்கள் சுய நலம் கருதி வேணாம் என்று றிஜக்ட் பண்ணியவர்களின் கண்ணில் எந்த விதக் காரணம் கொண்டும் நானோ என் பதிவுகளோ என்னை விலக்கிக் கொண்டவர்களின் கண்ணில் படக் கூடாது என்ற ஒரு விதக் கோட்பாட்டுடன் விடுபட்டாச்சு..

பழைய பதிவுகள் சில வற்றை மீளவும் எடுப்பதற்காக சில வேளைகளில் போனால் யாராச்சும் மிகவும் மன வருத்தமாக மெயில் போட்டு இருப்பார்கள் கவலையாகவும் இருக்கும் என்ன செய்வது யாயினியும் மனிதப் பிறப்புத் தானே.

நான் பிறியாக இருக்கும் சமயங்களை யாழிலும்,முகப் புத்தகத்திலும் மட்டுமே நேரத்தை செலவிடுவது வழமை..இப்போ யாழ் மட்டுமே ஒரு நாளைக்கு பல தடவைகள் வந்து போகும் இடமாயிட்டு.

Link to comment
Share on other sites

கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக முக புத்தகம் வைத்திருந்தாக நினைவு..சில பல தவிர்க்க முடியாத காரணங்களால்,நிறையவே வலிகளை ஏற்படுத்திக் கொண்ட இடமாக மாறியதால் கடந்த ஒரு மாதத்திற்கு மேல் முகநூலுக்குள் உள் இடுவது,மற்றும் பதிவுகள் இடுவதிலிருந்து விடுப்பட்டு விட்டாச்சு....தங்கள் சுய நலம் கருதி வேணாம் என்று றிஜக்ட் பண்ணியவர்களின் கண்ணில் எந்த விதக் காரணம் கொண்டும் நானோ என் பதிவுகளோ என்னை விலக்கிக் கொண்டவர்களின் கண்ணில் படக் கூடாது என்ற ஒரு விதக் கோட்பாட்டுடன் விடுபட்டாச்சு..

பழைய பதிவுகள் சில வற்றை மீளவும் எடுப்பதற்காக சில வேளைகளில் போனால் யாராச்சும் மிகவும் மன வருத்தமாக மெயில் போட்டு இருப்பார்கள் கவலையாகவும் இருக்கும் என்ன செய்வது யாயினியும் மனிதப் பிறப்புத் தானே.

நான் பிறியாக இருக்கும் சமயங்களை யாழிலும்,முகப் புத்தகத்திலும் மட்டுமே நேரத்தை செலவிடுவது வழமை..இப்போ யாழ் மட்டுமே ஒரு நாளைக்கு பல தடவைகள் வந்து போகும் இடமாயிட்டு.

அக்கா,

முகநூல் என்பது எமது கட்டுப்பாட்டில் உள்ளது. நண்பர்களாக இணைந்து கொள்ளவோ விலத்திக்கொள்ளவோ உரிமை உள்ளது. எம்மை விட்டு நீங்குபவர்களை நினைத்து நாம் கவலைப்பட்டால் தான் அது எமக்கு பிரச்சினையாக தெரியும்.

உங்களை விட்டு விலகியவர்கள் உங்கள் பதிவுகளை பார்த்தாலென்ன விட்டாலென்ன. அப்படியிருந்தும் உங்கள் பதிவுகளை பார்க்க கூடாது என நினைத்தால் settings இல் நண்பர்கள் மட்டுமே உங்கள் பதிவுகளை பார்க்கக்கூடியவாறு விடலாம் தானே. அல்லது யார் உங்கள் பதிவை பார்க்க கூடாது என நினைக்கிறீர்களோ அவர்களை block பண்ணலாம்.

நீங்கள் ஒதுங்கியிருப்பதால் உங்களுக்கு எந்த நன்மையும் இல்லை, உங்கள் ஒதுங்கல் என்பது உங்களை விட்டு விலகியவர்களுக்கு குற்ற உணர்வை ஏற்படுத்தப்போவதும் இல்லை. அவர்கள் மனதை உறுத்தப்போவதும் இல்லை. மாறாக அப்பாடா முகநூலை விட்டு போய்ட்டாள் என்று சந்தோசப்படுவதே நடக்கும். சுயநலவாத உலகை இன்னும் புரிந்து கொள்ளாமல் இருக்கிறீர்கள். :D

குடும்ப உறவுகள், உறவினர்கள் தவிர்த்து வேறு நபர்களை முகநூலில் இணைக்கும் போது முகநூல் பொது தளம் ஆகிறது. அவ்வாறான நேரங்களில் எமது செய்திகளை பகிரும் ஊடகமாக அதை பேணிக்கொண்டால் மனதில் கவலைகள் வர வாய்ப்பில்லை. நீங்கள் முகநூலில் மற்றவர்களுடன் உரையாடுவதை தவிர்த்து விட்டு பதிவுகளை மட்டும் போடலாம். உங்கள் மனம் இலேசானதும் மற்றவர்களுடன் உரையாடலாம்.

யாழில் முன்னர் என்னை பற்றி பலர் வைத்த கருத்துகளை பார்த்து அதை உண்மை என நம்பி நான் ஒரு ஆண், பெண்பெயரில் ஏமாற்றுகிறேன் என்று கூறி யாழ் கள உறுப்பினர்கள் சிலரும் யாழ்கள உறுப்பினர்கள் அல்லாத யாழின் வாசகர்கள் சிலரும் முகநூலில் என்னை remove பண்ணியிருந்தார்கள். அதில் சிலர் பின்னர் மன்னிப்பு கேட்டு விட்டு மீளவும் இணைந்து கொண்டார்கள். சிலர் இன்னும் remove பண்ணின படியே உள்ளார்கள். அதுக்கெல்லாம் நான் கவலைப்பட்டு முகநூலை விட்டு நீங்கியிருக்கிறேனா? :D இதையெல்லாம் கண்டுக்க கூடாது. எம் பாட்டில் போய்க்கொண்டிருக்க வேண்டும். :D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.