Jump to content

பாதிக்கப்பட்ட மக்கள் நேரடியா சாட்சியங்களை வழங்க பொறிமுறை உருவாக்கப்பட வேண்டும் - ஐநாவில் கஜேந்திரகுமாரின் வாய் மூல அறிக்கை!


Recommended Posts

ஐ.நா மனித உரிமைகள் கூட்டத் தொடரில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சார்பாக கட்சியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் ஆகியொர் கலந்து கொண்டிருந்தனர். கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ஆற்றிய உரை  வருமாறு:
 

kajenthirakumar_un.1.png

மனித உரிமைகள் பேரவை 27வது அமர்வு

ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணையாளரின் இலங்கை சம்பந்தமான வாய்மொழி மூல அறிக்கை தொடர்பாக:-

மனித உரிமை ஆணையாளர் அலுவலகம்  சிறிலங்கா தொடர்பான வாய்மொழி மூல அறிக்கையை எமது அமைப்பு வரவேற்கிறது. மனித உரிமை ஆணையகத்தின் 25/1 (A/HRC/25/1) தீர்மானம் சம்பந்தமான் விரிவான பொருட்கோடலை /விளக்கத்தைக் கொடுத்தமையையும் நாம் வரவேற்கிறோம்.

குறிப்பாக ,மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விசாரணைக்குழுவானது பாதிக்கப்பட்டவர்களிடமிருந்து நேரடியாக தகவல்களை பெறுவதற்கும் அதனை வலிமைப்படுத்துவதற்கும் முன்னுரிமை கொடுப்பதாகக்குறிப்பிட்ட ஆணையாளரின் அறிக்கையை வரவேற்கிறோம்.

இந்த விசாரணைக்க்கு நேரடி சாட்சியங்களை வழங்கக்கூடிய மிகப்பெரும்பான்மையானோர் சிறிலங்காவின் வடக்கு கிழக்கு பகுதிகளில் வாழ்ந்துகொண்டிருக்கும் தமிழர்கள் என்பது மனித உரிமை ஆணையாளர் அறிந்ததே.

தொடர்ந்தும் பாதிக்கப்படும் மக்கள் என்றவகையில் இந்த விசாரனைக்கு தமது சாட்சியங்களை பதிவு செய்ய வேண்டுமென்பதில் தமிழர்கள் பெருதும் விருப்புக்கொண்டிருக்கிறார்கள். களத்தில் வாழுகின்ற பாதிக்கப்பட்ட மக்களின் சாட்சியங்களை பதிவு செய்யாதவிடத்து , அவ்விசாரணை முழுமையானதாகவோ தீர்க்கமானதாகவோ அமையாது .

ஆகவே, பாதிக்கப்பட்ட இந்த மக்கள் தமது சாட்சியங்களை நேரடியாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விசாரணிக்குழுவிற்கு சமர்ப்பிப்பதற்கு ஏதுவான பொறிமுறைகளை உறுப்பு நாடுகள் முன்வைக்க வேண்டும் என நாங்கள் கேட்டுக்கொள்கிறோம்.

போரின் போதும் அதன் பின்னரும் வடக்கைப்போலவே கிழக்கும் பாதிக்கப்பட்ட போதிலும் இங்கு, இலங்கையின் வடபகுதி பற்றியே முக்கியத்துவம் கொடுத்து பேசப்படுகிறது.

உதாரணமாக 2009 முள்ளிவாய்க்காலில் நிகழ்த்தப்பட்ட கொடூர குற்றங்களுக்கு சமனான குற்றங்கள் 2007 இல் கிழக்கின் வாகரையிலும் நிகழ்த்தப்பட்டது.

அத்தோடு வடக்கின் வலிகாமத்தில் நடைபெறும் நில அபகரிப்பு போலவே கிழக்கின் சம்பூரில் நிகழும் நில அபகரிப்பும் மிகவும் அபாயகரமானதாகும்.
எனவே ,கிழக்கு மாகாணம் பற்றியும் மனித உரிமைகள் ஆணையாளர் அலுவலக விசாரணைக்குழு  போதிய முக்கியத்துவம் வழங்க வேண்டும் என்று நாம் வேண்டிக்கொள்கிறோம்.

தமிழர்கள் ,அவர்களது தமிழர்கள் என்கிற தேசிய அடையாளத்தினாலேயே தொடர்ந்தும் இலக்கு வைக்கப்படுகிறார்கள் என்பதை , மனித உரிமைகள் ஆணியாளரின் வாய்மொழிமூல அறிக்கை குறிப்பிடத்தவறியமையை  நாங்கள் கவலையுடன் கவனத்தில் கொள்கிறோம்.

குறிப்பாக , (அந்த அறிக்கையில் ) மத சிறுபான்மையினர் இலக்கு வைக்கப்படுவதை கிற்ஸ்தவர்களும் முஸ்லிம்களும் இலக்குவைக்கப்படுவதாக பெயர் குறிப்பிட்டு சொல்லப்பட்டிருக்கின்ற அதேவேளை ,தமிழர்கள் என குறிப்பிடுவதை தவிர்த்திருப்பது மிகவும் ஏமாற்றத்தை தருகிறது.

மனித உரிமைகள் ஆணையாளரது வாய்மொழு மூல அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதில் பெரும்பான்மையான சம்பவங்கள் ,தமிழர்களின் / இலங்கைத்தீவில் தமிழ்தேசத்தின் அடையாளத்தை அழித்து அவர்களை அடிமைப்படுத்தும் ஒரு  கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலைப்பொறிமுறையின் ஒருபகுதியே ஆகும்.

தமிழர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை நியாயமாகவும் வெளிப்படையாகவும் புரிந்து கொள்ளல் இங்கு மிகவும் அடிப்படையானது. அந்த அடிப்படையில் விசாரணைகளைக்கொண்டு செல்லுமாறு மனித உரிமைகள் ஆணையாளர் அலுவகத்தை நாங்கள் வேண்டிக்கொள்கிறோம்.http://www.pathivu.com/news/34112/57//d,article_full.aspx

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல விடயம்

பயமில்லாத ஒரு தம்பி

வாழ்க  வளமுடன்...

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.