Jump to content

சனிபகவான் தலம்.


Recommended Posts

சில வருடங்களுக்கு முன்பு அமெரிக்க செயற்கைகோள் ஒன்று பூமியின் குறிப்பிட்ட பகுதியை கடக்கும் பொது மட்டும் 3 வினாடிகள் ஸ்தம்பித்துவிடுகிறது. 3 வினாடிகளுக்கு பிறகு வழக்கம்போல் வானில் பறக்க ஆரம்பித்து விடுகிறது. எந்தவித பழுதும் அதன்
செயற்கைகோளில், அதன் கருவிகளில் ஏற்படுவதில்லை. இந்த சம்பவம் நாசாவிற்கு அதிர்ச்சி கலந்த ஆச்சரியதயை அளித்தது. இது எப்படி சாத்தியம்? என்பதை ஆராய்ந்து, கிடைத்த முடிவு நாசாவை மட்டுமல்ல, உலகையே மிரளவைத்தது. ஆம்! எந்த ஒரு செயற்கைகோளும் பூமியில் இந்தியாவின் தமிழ்நாடு அருகில் உள்ள புதுச்சேரி திருநள்ளாறு ஸ்ரீ தர்ப்பநேஷவரர் கோவிலுக்கு மேல் நேர் உள்ள வான்பகுதியை கடக்கும் 3 வினாடிகள் மட்டும் ஸ்தம்பித்து விடுகின்றன.

அப்படி நிகழ்வதற்கு என்ன காரணம் ? ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு வினாடியும் கண்ணுக்கு தெரியாத கருநீலகதிர்கள் அந்த கோவிலின் மீது விழுந்துகொண்டே இருக்கிறது. இரண்டரை வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் சனி பெயர்ச்சியின் பொது இந்த கரு நீல கதிர்களின் அடர்த்தி மிகவும் அதிகமாக இருக்கும்.
விண்வெளியில் சுற்றி கொண்டிருக்கும் செயற்கை கோள்கள் இந்த கருநீலகதிர்கள் பாயும் பகுதிக்குள் நுழையும்போது ஸ்தம்பித்து விடுகின்றன. அதே நேரத்தில் செயற்கைகோள்களுக்கு எந்த விதபாதிப்பும் ஏற்படுவதில்லை. இதில்குறிபிடத்தக்க அம்சம்
என்னவென்றால் இந்த கோவில்தான் இந்துக்களால் 'சனிபகவான்' தலம் என்று போற்றபடுகிறது. இந்த சம்பவத்திற்கு பிறகு நாசாவிலிருந்து பல முறை திருநள்ளாறு வந்து ஆராய்ச்சி செய்து விட்டனர். மனிதனை மீறிய சக்தி உண்டு என்பதை உணர்ந்தனர்.

இந்த செய்தியை கேட்டு பிரமிக்காதவர்கள் நம்முடைய
முன்னோர்களை நினைத்து கட்டயம் பிரமிக்கவேண்டும். நாம் பல செயற்கைகோள்கள் கொண்டு கண்டறியும் சனிகோளின் கதிர்வீச்சு விழும் பகுதியை கண்டு பிடித்து அதற்கென ஒரு கோயிலையும் கட்டி , கதிர்வீசுகள் அதிகள் விழும் நாட்களையும் கணக்கிட்டு அதற்க்கான
நாளை சனிபெயர்ச்சி என்று அறிவிக்கும் திறமையை, நம்மால் நினைத்துக்கூட பார்க்க முடியாத ஒரு தொலை நோக்கு பார்வை கொண்ட நம் முன்னோர்களை நினைத்து என்னால் பிரமிக்காமல் இருக்க முடியவில்லை.

இதை மிஞ்சும் வகையில் ஒரு விசயம் கேள்வி பட்டேன். நீங்கள் எதாவது சிவன் கோவிலுக்கு சென்றால் அங்கே நவகிரகங்களை நன்றாககவனியுங்கள். அந்த சிலைகளின்மேல் கட்டப்பட்டுள்ள துணிகளையும் நன்றாய் உற்று பாருங்கள்!! உங்கள் அறிவியல் அறிவையும் கொஞ்சம் தட்டிவிடுங்கள்!!!

எந்த கோள் எந்த நிறத்தில் இருக்கும் என்பதை நம் முன்னோர்கள் கட்டிவைத்திருக்கும் அந்த துணிகளில் கண்டறியுங்கள், பிரமித்து போவீர்கள்! பெரியோர்களின் அறிவாற்றலை நினைத்து, இந்த அறிவியலின் அதிசயத்தை அனைத்து தலைமுறையும் அறியவேண்டும்.

 

நன்றி ஆன்மீகம் .

Link to comment
Share on other sites

  • Replies 79
  • Created
  • Last Reply

இந்தத் தகவலை இப்பொழுதுதான் கேள்விப்படுகிறேன். தகவலுக்கு மிகவும் நன்றி!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நீங்கள் இங்கு குறிப்பிடும் நாசா சம்பந்தப்பட்ட தகவலை ஊர்ஜிதம் செய்ய முடியுமா. செய்தி பத்திரிகை, சஞ்ஜிகை அல்லது இணையத்தில் வந்திருந்தால் இணைத்துவிடுங்கள். ஆன்மீகத்தில் மிக்க ஈடுபாடு கொண்டவன் என்ற முறையில் கேட்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சில வருடங்களுக்கு முன்பு அமெரிக்க செயற்கைகோள் ஒன்று பூமியின் குறிப்பிட்ட பகுதியை கடக்கும் பொது மட்டும் 3 வினாடிகள் ஸ்தம்பித்துவிடுகிறது. 3 வினாடிகளுக்கு பிறகு வழக்கம்போல் வானில் பறக்க ஆரம்பித்து விடுகிறது. எந்தவித பழுதும் அதன்

செயற்கைகோளில், அதன் கருவிகளில் ஏற்படுவதில்லை. இந்த சம்பவம் நாசாவிற்கு அதிர்ச்சி கலந்த ஆச்சரியதயை அளித்தது. இது எப்படி சாத்தியம்? என்பதை ஆராய்ந்து, கிடைத்த முடிவு நாசாவை மட்டுமல்ல, உலகையே மிரளவைத்தது. ஆம்! எந்த ஒரு செயற்கைகோளும் பூமியில் இந்தியாவின் தமிழ்நாடு அருகில் உள்ள புதுச்சேரி திருநள்ளாறு ஸ்ரீ தர்ப்பநேஷவரர் கோவிலுக்கு மேல் நேர் உள்ள வான்பகுதியை கடக்கும் 3 வினாடிகள் மட்டும் ஸ்தம்பித்து விடுகின்றன.

அப்படி நிகழ்வதற்கு என்ன காரணம் ? ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு வினாடியும் கண்ணுக்கு தெரியாத கருநீலகதிர்கள் அந்த கோவிலின் மீது விழுந்துகொண்டே இருக்கிறது. இரண்டரை வருடங்களுக்கு ஒரு முறை நடக்கும் சனி பெயர்ச்சியின் பொது இந்த கரு நீல கதிர்களின் அடர்த்தி மிகவும் அதிகமாக இருக்கும்.

விண்வெளியில் சுற்றி கொண்டிருக்கும் செயற்கை கோள்கள் இந்த கருநீலகதிர்கள் பாயும் பகுதிக்குள் நுழையும்போது ஸ்தம்பித்து விடுகின்றன. அதே நேரத்தில் செயற்கைகோள்களுக்கு எந்த விதபாதிப்பும் ஏற்படுவதில்லை. இதில்குறிபிடத்தக்க அம்சம்

என்னவென்றால் இந்த கோவில்தான் இந்துக்களால் 'சனிபகவான்' தலம் என்று போற்றபடுகிறது. இந்த சம்பவத்திற்கு பிறகு நாசாவிலிருந்து ,பல முறை திருநள்ளாறு வந்து ஆராய்ச்சி செய்து விட்டனர். மனிதனை மீறிய சக்தி உண்டு என்பதை உணர்ந்தனர்.

-----

 

அஞ்சரன், அந்த நாசா விஞ்ஜானிகளின், (போட்டோவை, இணைக்கவும்.)

ஆடான... ஆடெல்லாம், கஞ்சிக்கு அழுததாம்....

ஒரு... ஆடு, சோத்துக்கு அழுததாம்.

Link to comment
Share on other sites

இச் செய்தி முகப்புத்தகத்தில் பரப்பப்பட்டு பின்னர் ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. தடுமாறிய செய்மதியின் பெயரையோ, நாசா தெரிவித்த கருத்தையோ எங்கும் காண முடியவில்லை. அப்படி இருக்குமானால் யாராவது இணைத்து விடுங்கள்.

 

ஆகக் குறைவான உயரத்தில் பறக்கும் செய்மதி 200 கிலோமீற்றர் உயரத்தில் பறப்பதாக வைத்துக் கொள்வோம். கோயிலின் பரப்பளவோடு ஒப்பிடும் போது ஒரு தூசு அளவில் இருக்கும். அப்படி இருக்கும்போது செய்மதி கோயிலுக்கு மேலாகப் பறந்தது என்பதை எவ்வாறு கண்டுபிடிப்பது ? இந்த உயரத்தில் தரையொடு ஒப்பிடும்போது அதன் வேகம் 1 வினாடிக்கு பல்லாயிரம் மீற்றர்கள். 3 வினாடிகள் எவ்வாறு ஸ்தம்பிக்க முடியும் ?

பூமியில் சில இடங்களில் புவியீர்ப்பு கூடுதலாகவும் சில இடங்களில் குறைவாகவும் இருக்கும். தமிழ்நாடு - இலங்கைப் பிரதேசத்தில் புவியீர்ப்பு ஏனைய இடங்களை விடக் குறைவாக உள்ளது (படத்தில் நீலமாக உள்ள பகுதி).

 

terre1.png

 

இந்த இடங்களைக் கடக்கும்போது செய்மதிகளின் வேகம் வித்தியாசப்படுவதாக நாசா ஒப்புக் கொள்கிறது. ஏன் இந்த இடத்தில் புவியீர்ப்பில் மாற்றம் உள்ளது என்பது பற்றிய சரியான விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

இந்தத் தகவலை அடிப்படையாகக் கொண்டு புனையப்பட்ட கதையாகவே இக் கட்டுரை தென்படுகிறது. சரியான தகவல்கள் யாருக்காவது தெரிந்தால் பதியுங்கள்.

 

எமது முன்னோர்கள் பல துறைகளிலும் அனுபவ ரீதியாகப் பலதரப்பட்டவற்றைக் கண்டுபிடித்துள்ளனர். இவற்றில் சில விடயங்கள் அக்காலத்தில் நடைமுறைப்படுத்துவதற்கு ஏதுவாக சமய ரீதியாகத் தொடர்பு படுத்தப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டது. விஞ்ஞானம் வளர்ந்துவிட்ட இன்றைய காலப் பகுதியில் இற்றில் பல அவசியமற்றதாகிறது. தகவல் பகிர்வு இலகுவாகிவிட்ட சமுதாயத்தில் பகுத்தறிந்து நல்ல பழக்கங்களைப் பேணியும், மாற்றங்கள் செய்தும், புதியவற்றை உருவாக்கியும் எமது இனத்தை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்ல வேண்டும். தொன்மையான பயனுள்ள கருத்துக்களை ஆராய்ந்து அவற்றை வேறு மொழிகளில் உலகம் முழுவதும் பரப்ப வேண்டும்.

 

***

 

இக் கட்டுரையில் நவக்கிரகங்கள் பற்றிய இன்னொரு பிழையான தகவல், சூரியனையும் சந்திரனையும் நவக் கிரகங்களுக்குள் சேர்த்துள்ளனர். இவை இரண்டும் கிரகங்கள் அல்ல.

Link to comment
Share on other sites

என்னுடைய சந்தேகமெல்லாம் செயற்கைக் கோளையே தடுத்து நிறுத்தும் சனிக்கு குண்டு போடப் போகும் விமானங்களையும் மக்களைக் கொல்லக் கிளப்பும் செல்கள் மற்றும் ஏவுகணைகளையும் தடுத்து நிறுத்த முடியாதா? அப்பாவீ மக்களைக் காப்பாற்ற முடியாதா? 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னுடைய சந்தேகமெல்லாம் செயற்கைக் கோளையே தடுத்து நிறுத்தும் சனிக்கு குண்டு போடப் போகும் விமானங்களையும் மக்களைக் கொல்லக் கிளப்பும் செல்கள் மற்றும் ஏவுகணைகளையும் தடுத்து நிறுத்த முடியாதா? அப்பாவீ மக்களைக் காப்பாற்ற முடியாதா? 

 

இந்த அப்பாவித்தமிழர்கள்

தமிழில் கத்தியதற்கு அவர் என்ன செய்யமுடியும்??

ஆனால் புலம் பெயர் மக்கள் பணத்தால் அபிசேகம் செய்து 

தமிழில் சொன்னால் புரியுது என்கிறார்கள் புலம் பெயர் பக்தர்கள்..

 

அத்துடன் இது கூட ஒரு அரசியல் தான்

மூடநம்பிக்கைகளுக்கு தடை வந்தபின்

இது போன்ற வியாபாரங்கள்  அடிக்கடி திறக்கின்றன... :lol:  :D

Link to comment
Share on other sites

என்னுடைய சந்தேகமெல்லாம் செயற்கைக் கோளையே தடுத்து நிறுத்தும் சனிக்கு குண்டு போடப் போகும் விமானங்களையும் மக்களைக் கொல்லக் கிளப்பும் செல்கள் மற்றும் ஏவுகணைகளையும் தடுத்து நிறுத்த முடியாதா? அப்பாவீ மக்களைக் காப்பாற்ற முடியாதா? 

மெய்யானம் என்பதை நிங்கள் மத நம்பிக்கையா பார்ப்பது தவறு அண்ணா இங்கு சொல்லப்படும் செய்தி என் முன்னோர் தொழில்நுட்பம் வளர முன் எவ்வாறு இவற்றை சிந்தித்து செய்தனர் என்பதே ..

 

சரியான கணிப்பிடு ..எதை எங்கு வைக்க வேணும் என்னும் அறிவியலை அவர்கள் எங்கு பெற்றார்கள் என்பதுதான் .

 

உங்கள் வாதத்துக்கு வந்தால் மாடு சாகும்போது கன்றுக்கு புல்லு பிடுங்கி வைத்துவிட்டு சாவது இல்லை தானா தான் தேடவேண்டும் என்பது உலக நியது ..

 

அப்பாவா பக்கத்தில் இருந்தாலும் போகும் மகனின் உயிரை தடுத்து நிறுத்த முடியாது எங்கிருத்து பெறப்பட்டதோ அங்குதான் போகும் எது எங்கு என்பதுதான் தேடல் ..

 

அதை கடவுள் என்பார்கள் அவ்வளவுதான் .

இந்த அப்பாவித்தமிழர்கள்

தமிழில் கத்தியதற்கு அவர் என்ன செய்யமுடியும்??

ஆனால் புலம் பெயர் மக்கள் பணத்தால் அபிசேகம் செய்து 

தமிழில் சொன்னால் புரியுது என்கிறார்கள் புலம் பெயர் பக்தர்கள்..

 

அத்துடன் இது கூட ஒரு அரசியல் தான்

மூடநம்பிக்கைகளுக்கு தடை வந்தபின்

இது போன்ற வியாபாரங்கள்  அடிக்கடி திறக்கின்றன... :lol:  :D

பிள்ளைக்கு கலியாணம் சாமத்தியம் எல்லாம் மூட நம்பிக்கைதான் அண்ணே முதலில் அங்கிருத்து ஆரம்பிப்பம் எங்காவது கட்டிட்டு போகட்டும் என்று விடுவமா நீங்க தயாரா அதுக்கு ..

 

காலையில் எழும்பி முகம் கழுவி சிவா சிவா என்று திருநீறு பூசிட்டு வந்து கணனியில் எதுவும் எழுதலாம் அண்ணே ஆனால் நிஜம் வேறு இல்லையா  :D  :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த அப்பாவித்தமிழர்கள்

தமிழில் கத்தியதற்கு அவர் என்ன செய்யமுடியும்??

ஆனால் புலம் பெயர் மக்கள் பணத்தால் அபிசேகம் செய்து 

தமிழில் சொன்னால் புரியுது என்கிறார்கள் புலம் பெயர் பக்தர்கள்..

 

அத்துடன் இது கூட ஒரு அரசியல் தான்

மூடநம்பிக்கைகளுக்கு தடை வந்தபின்

இது போன்ற வியாபாரங்கள்  அடிக்கடி திறக்கின்றன... :lol:  :D

 

போரில் இறந்த அனைத்து அப்பாவிதமிழர்களும் இந்துக்களா? கிறிஸ்தவர்கள் இல்லை??? கிறிஸ்தவ தேவாலயங்கள் குண்டுவீசி தகர்க்கப்படவில்லை??? :icon_idea:
 
அப்போ ஜேசு என்ன செய்தார்? வத்திக்கான் என்ன செய்தது? பாப்பாண்டவர் என்ன செய்தார்?  :icon_idea:
 
Link to comment
Share on other sites

என்னத்தைச் சொன்னாலும் சனி சாரில் எனக்கு நம்பிக்கை உள்ளது.. :D

Link to comment
Share on other sites

என்னத்தைச் சொன்னாலும் சனி சாரில் எனக்கு நம்பிக்கை உள்ளது.. :D

இசை இன்னும் பிடிக்கவில்லை உங்களை பிடிச்ச பிறகு தெரியும் சனி விடாது தொடரும் என்று ...கலியாணம் விரைவில் நடக்க வாழ்த்துக்கள்  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

போலி அறிவியல் எல்லாம் இனி இல்லை என்று சொன்ன பிறகு பல அறிவியல் போலிகளாக வந்துகொண்டிருக்கே.

நவக்கிரகங்களின் மீதுள்ள வண்ணத் துணிகளைத் தட்டிப்பார்த்தால் தூசு பறந்து தும்மல்தான் வரும்!! சந்திரனும் ஒரு கோளாகத்தானே இப்பவும் சோதிடத்தில் இருக்கு. இப்ப மாத்தீட்டார்களோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இசை இன்னும் பிடிக்கவில்லை உங்களை பிடிச்ச பிறகு தெரியும் சனி விடாது தொடரும் என்று ...கலியாணம் விரைவில் நடக்க வாழ்த்துக்கள்:D

இன்னொரு கல்யாணமா:D????????????? இசைக்கா:D:lol:

Link to comment
Share on other sites

இன்னொரு கல்யாணமா:D????????????? இசைக்கா:D:lol:

நானே கேட்டிட்டு பேசாமல் ஒரு கிளுகிளுப்போட இருக்கிறன் :D

Link to comment
Share on other sites

நானே கேட்டிட்டு பேசாமல் ஒரு கிளுகிளுப்போட இருக்கிறன் :D

அட பாவிகள் இது வேறையா அவசரபட்டுடமே  :icon_idea:

Link to comment
Share on other sites

போலி அறிவியல் எல்லாம் இனி இல்லை என்று சொன்ன பிறகு பல அறிவியல் போலிகளாக வந்துகொண்டிருக்கே.

 

 

இத்தகைய பதிவுகளை தவிர்க்க சொல்லிய பின் வேண்டும் என்றே போடுகின்றார்களோ என்று சந்தேகமாக இருக்கு. :unsure:

 

எந்த அடிப்படையும் அற்ற ஆகக் குறைந்தது விஞ்ஞான பூர்வமான விளக்கம் கொண்ட ஒரு ஆதாரத்தினையும் காட்டாது,  வெறுமனே முக நூலை மட்டும் ஆதாரமாகக் கொண்டு இணைக்கப்படும் இவ்வகையான ஆக்கங்கள் இனிமேல் தொடர அனுமதிக்கப்பட மாட்டாது என்பதை சம்பந்தப்பட்ட அனைவரும் புரிந்து கொள்ளவும்.

 

இப் பதிவில் கூறப்பட்டுள்ள செய்மதி தொடர்பான விடயத்திற்கான ஆதாரத்தினை காட்டுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

Link to comment
Share on other sites

அஞ்சரன்,

 

ஆதாரம் என்று கேட்டது தமிழக / தமிழ் சஞ்சிகைகளில் வந்தவற்றையோ அல்லது தமிழில் இருந்து ஆங்கிலத்தில் நேரடியாக மொழியாக்கம் செய்தவற்றையோ அல்ல.  தமிழக சஞ்சிகைகள் லேகியங்களின் பெருமைகள் வரைக்கும் பத்தி பத்தியாக எழுதும் திறமை படைத்தவை என்பது அனைவருக்கும் தெரியும். நாசா அல்லது தகுந்த விண்வெளி ஆராச்சி நிறுவனங்கள் இது பற்றி செய்த ஆராச்சிகள், அது பற்றி வெளியிட்ட அறிக்கைகள் தான் சரியான ஆதாரங்கள். ஆகக் குறைந்தது இந்திய விண்வெளி ஆராச்சி நிறுவனம் இஸ்ரோ வினது அறிக்கையாவது இதற்கு உண்டா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழக/ தமிழ் சஞ்சிகைகளில் வந்தவற்றை வைத்து இனி ஒரு விடயமும் இங்கு பதியப்படாது என கூறுகிறீர்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அஞ்சரன், அந்த நாசா விஞ்ஜானிகளின், (போட்டோவை, இணைக்கவும்.)

ஆடான... ஆடெல்லாம், கஞ்சிக்கு அழுததாம்....

ஒரு... ஆடு, சோத்துக்கு அழுததாம்.

 

 

அஞ்சரன்,

 

ஆதாரம் என்று கேட்டது தமிழக / தமிழ் சஞ்சிகைகளில் வந்தவற்றையோ அல்லது தமிழில் இருந்து ஆங்கிலத்தில் நேரடியாக மொழியாக்கம் செய்தவற்றையோ அல்ல.  தமிழக சஞ்சிகைகள் லேகியங்களின் பெருமைகள் வரைக்கும் பத்தி பத்தியாக எழுதும் திறமை படைத்தவை என்பது அனைவருக்கும் தெரியும். நாசா அல்லது தகுந்த விண்வெளி ஆராச்சி நிறுவனங்கள் இது பற்றி செய்த ஆராச்சிகள், அது பற்றி வெளியிட்ட அறிக்கைகள் தான் சரியான ஆதாரங்கள். ஆகக் குறைந்தது இந்திய விண்வெளி ஆராச்சி நிறுவனம் இஸ்ரோ வினது அறிக்கையாவது இதற்கு உண்டா?

 

உங்க இரண்டு பேருக்கு சனி பார்வை விழுந்துட்டுது !! அது தான் இந்த மாதிரி கேள்வியல் வருது.
 
சனியரோட  சொறிஞ்சால் கஞ்சிக்கும், சோத்துக்கும் அழவேண்டும் சிறியர்!!!  :icon_mrgreen:  அந்தாள்  ஒரு டைப் !!
 
இந்த  கட்டுரை  எங்கள மாதிரி ஆக்களுக்கு.
 
உங்களுக்கு எண்டு பெரியார் கணக்க எழுதி வச்சிருக்கிறார், வாசித்து சந்தோசமா இருங்க.  :icon_mrgreen:  :icon_idea:
Link to comment
Share on other sites

ஸ்ரீ தர்ப்பநேஷவரர் கோயில் கட்டுரை கட்டுக்கதை என்று ஆதாரபூர்வமாக விளங்கப்படுத்தியும் பிடிவாதமாக நம்புவோரைப் பார்க்கும்போது எமது சமுதாயத்தில் மூட நம்பிக்கை எவ்வாறு ஆழமாக வேரூன்றியுள்ளது என்பதைக் காணலாம். எதிர்த்துக் கதைத்தால் கடவுள் பழிவாங்குவார் என்ற பயமுறுத்தலும் இவற்றை நீண்ட தூரம் காவிச் செல்லும். இன்று நாம் நம்பிக் கொண்டிருக்கும் புராணக் கதைகளில் ஏறத்தாள அனைத்துமே கட்டுக் கதைகள்தான். முடிந்தால் பொய்யான விளக்கங்களைப் பரப்பாமல் இவற்றிலிருந்து அறிவியலைத் தேட முயலுங்கள். இதற்குள் பெரியார் என்ற மனிதன் தேவையில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜெ.. யாகம் செய்தார்.. கோவில் கும்பிட்டார்.. சனி பகவானுக்கு எள்ளெண்ணைய் எரித்தார்.. எம கண்டம்.. ராகு காலம்.. சுப நேரம் பார்த்தார்.. திடீர் திடீர் என்று.. கோவில் திருத்தல விஜயங்கள் செய்தார்.. கூட தோழி சசியும்.. தன் பங்கிற்கு.. ! இலச்சம் இலச்சமா அள்ளிக் கொடுத்து ஜோதிடக்காரங்களை கூப்பிட்டு ஜோதிடம் கணிச்சாங்க.. அப்புறம்.. என்னாச்சுன்னு.. என்று கேள்வி கேட்கும்.. அதிமுகவினர்.... கடவுள் மேல கொல வெறியில இருக்காங்களாம்.

 

இந்த தலைப்பை அவங்க முன்னாடி போட்டீங்க.. போட்டவர்.. பீஸ் பீஸாகிடுவார். :lol::D


மனித மூளையில் உள்ள பயம் என்ற சிந்தனை தான்.. இத்தனைக்கும் கடவுளை... ஜோதிடத்தை.. நாள்.. கோள்களை தேட வைக்கிறது. ஒருவேளை.. கடவுள் இருந்தாலும்.. இந்தப் பெரிய பிரபஞ்சத்தில் அவருக்கு ஆயிரெத்தெட்டு வேலை இருக்கும். பூமில உள்ள உங்களையே சதா ஜி பி எஸ் வைச்சு.. மொனிட்டர் பண்ணிக்கிட்டு இருக்க அவர் என்ன.. வேற வேலைவெட்டி இல்லாமலா இருக்கார்..!!!! ஏதோ நீங்க செய்யுறதை உங்க புத்திக்கு செய்யுங்கன்னு தானே மூளை.. முண்ணான்.. உடம்பு என்று வைச்சு படைச்சு விட்டிருக்கிறார். அதை யூஸ் பண்ணாம.. கடவுள் வருவார்.. என்று கனவு கண்டிட்டு இருந்தா... சனி என்ன.. பிரமதோசமும் பிடிக்கத்தான் செய்யும்..!!!!  :lol::icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னத்தைச் சொன்னாலும் சனி சாரில் எனக்கு நம்பிக்கை உள்ளது.. :D

அப்படியே அவரை நானும் சுகம் விசாரித்தாதாக சொல்லிவிடுங்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
எமது மூதையோர் எவளவோ நாள்கள் நேரங்கள் செலவழித்து எத்தனையோ அறிவு திறனை படைத்து வைத்தார்கள்.
 
எப்போ இந்த பாழ்பட்ட இந்துமதம் தமிழ் மண்ணை தொட்டதுவோ.
அன்று தொட்டதுதான் இந்த சனியன். இது இலகுவாக போகாது. மிகவு சக்தி பெற்று விட்டது.
 
ஜோதிகள் பற்றி மூதையோர் எழுதிவைதவையை ..... அடுத்தவனை ஏய்க்க ஜோதிடம் என்று ஆக்கினான் இந்து புறம்போக்கு. இன்றுவரை மக்களை ஏய்த்து பிளைத்துகொண்டுதான் இருக்கிறான்.
 
சித்த வைத்தியத்தை சிதறடித்து சிக்குண்டி சக்குண்டி சாமிகளை உருவாக்கி பல்லி பாம்புக்கு பால் ஊத்தி திரிய வைத்தான்.
 
கடவுளை யார் மிதிக்கிறானோ .............. அவன்தான் மதத்தை தூக்கி பிடிக்கிறான்.
கடவுள் மீது மதிப்பு இருந்தால் .......... அவனுக்கு மதம் தேவை இல்லை. கடவுளின் கீர்த்தி வேண்டி கருணைதான்  தேவை.
 
போலிகளுக்குதான் மதம் தேவை ............ மனிதனுக்கு மார்க்கம் மட்டுமே தேவை.
 
இந்து அரஜாகத்தை .... ஒரு இந்து மதவாதி மூடி மறைக்கிறான்.
சவூதி ரவுடிகளை ............. முஸ்லிம் சீலை போர்த்தி மூடுகிறான்.
கிறிஸ்தவ காம வெறியர்களை ....... கிறிஸ்தவன் வத்திகானை வைத்தே காக்கிறான்.
 
சக மனிதனையே சாகடிக்கும் குரங்குகளுக்கு மதம் ஒரு கேடு? இந்த சாக்கடையில் இப்படியான போலி செய்திகள்தான்  புனித நீராக ஓடும். அப்படியே அவர்கள் அள்ளி பருக வேண்டியதுதான்.
 
தயவு செய்து உங்கள் கைகளை மனிதத்தில் துடைகாதீர். உங்கள் கோவில் சுவர்களிலேயே துடைத்து கொள்ளுங்கள். 
Link to comment
Share on other sites

என்னத்தைச் சொன்னாலும் சனி சாரில் எனக்கு நம்பிக்கை உள்ளது.. :D

நானும்  நூறு வீதம் நம்புறன் ....... :icon_mrgreen:  :D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
    • வீரப்பன் இறந்த பின்தான் அதிகஅளவான  இயற்கை வள சுரண்டல்கள் அந்த காடுகளில் நடைபெறுவதாக எங்கோ படித்த நினைவு .
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.