Jump to content

சனிபகவான் தலம்.


Recommended Posts

 

எமது மூதையோர் எவளவோ நாள்கள் நேரங்கள் செலவழித்து எத்தனையோ அறிவு திறனை படைத்து வைத்தார்கள்.
 
எப்போ இந்த பாழ்பட்ட இந்துமதம் தமிழ் மண்ணை தொட்டதுவோ.
அன்று தொட்டதுதான் இந்த சனியன். இது இலகுவாக போகாது. மிகவு சக்தி பெற்று விட்டது.
 
ஜோதிகள் பற்றி மூதையோர் எழுதிவைதவையை ..... அடுத்தவனை ஏய்க்க ஜோதிடம் என்று ஆக்கினான் இந்து புறம்போக்கு. இன்றுவரை மக்களை ஏய்த்து பிளைத்துகொண்டுதான் இருக்கிறான்.
 
சித்த வைத்தியத்தை சிதறடித்து சிக்குண்டி சக்குண்டி சாமிகளை உருவாக்கி பல்லி பாம்புக்கு பால் ஊத்தி திரிய வைத்தான்.
 
கடவுளை யார் மிதிக்கிறானோ .............. அவன்தான் மதத்தை தூக்கி பிடிக்கிறான்.
கடவுள் மீது மதிப்பு இருந்தால் .......... அவனுக்கு மதம் தேவை இல்லை. கடவுளின் கீர்த்தி வேண்டி கருணைதான்  தேவை.
 
போலிகளுக்குதான் மதம் தேவை ............ மனிதனுக்கு மார்க்கம் மட்டுமே தேவை.
 
இந்து அரஜாகத்தை .... ஒரு இந்து மதவாதி மூடி மறைக்கிறான்.
சவூதி ரவுடிகளை ............. முஸ்லிம் சீலை போர்த்தி மூடுகிறான்.
கிறிஸ்தவ காம வெறியர்களை ....... கிறிஸ்தவன் வத்திகானை வைத்தே காக்கிறான்.
 
சக மனிதனையே சாகடிக்கும் குரங்குகளுக்கு மதம் ஒரு கேடு? இந்த சாக்கடையில் இப்படியான போலி செய்திகள்தான்  புனித நீராக ஓடும். அப்படியே அவர்கள் அள்ளி பருக வேண்டியதுதான்.
 
தயவு செய்து உங்கள் கைகளை மனிதத்தில் துடைகாதீர். உங்கள் கோவில் சுவர்களிலேயே துடைத்து கொள்ளுங்கள். 

 

 

ஆக்கபூர்வமான கருத்தாடலுக்கு வழிவிடுங்கள். மதங்களைத் தாக்கி, குறிப்பாக இந்து மதத்தினைக் கேவலப்படுத்தி எழுதுவதைக் கண்டிக்கிறேன். இவ்வாறான சாடல்கள் மூலம் நீங்கள் எதிர்பார்த்ததை நிறைவேற்றிக் கொள்ளலாம்.

Link to comment
Share on other sites

  • Replies 79
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ஆக்கபூர்வமான கருத்தாடலுக்கு வழிவிடுங்கள். மதங்களைத் தாக்கி, குறிப்பாக இந்து மதத்தினைக் கேவலப்படுத்தி எழுதுவதைக் கண்டிக்கிறேன். இவ்வாறான சாடல்கள் மூலம் நீங்கள் எதிர்பார்த்ததை நிறைவேற்றிக் கொள்ளலாம்.

உங்கள் எண்ணமும் கருத்தும் கண்டிப்பும் உயர்வானது ............ அதை ஏற்றுகொள்கிறேன்.
 
இந்துமதத்தை இந்துக்கள்தான் கேவல படுத்துகிறார்கள். அவர்கள் (இந்துக்கள் என்று சொல்லி கொள்பவர்கள்) அளவிற்கு அதை வேறு யாராலும் செய்ய முடியாது.
அதற்கு முன்பு இந்து மதம் என்ன என்பதற்கு அல்லது அதன் வரையறைக்கு எல்லைகள் இல்லை.
பல குதர்கத்திட்கு கூட்டு பெயர்தான் இந்துமதம்.
இந்துமதம் என்று எதை அடையாள படுத்துவது? கடவுள் என்றோ மூல தத்துவாதாம் என்றோ எதையாவது வரையறுக்க முடிகிறாதா?
நான் இந்து என்று சொல்லி பெருமைகொள்பவன் ........... தான் யார் என்பதே தெரியதவனாக்தான் இருக்க முடியும். 
 
இதுதான் என்று நாம் கோடு கீறும்வரை வெறும் மூட எண்ணங்களை சார்ந்தே நாம் தள்ளபடுவோம்.
பாம்பும் பல்லியும் கடவுள் என்றால் ............. முதலையும் சிலந்திக்கும் கடவுள் இல்லாதிருக்க கூடிய தகுதிதான் என்ன? என்ற கேள்விகளுக்கான பதிலைதேடியே நான் எனது கருத்துக்களை முன்வைக்கிறேன்.
 
எனது கருத்துக்கள் எனது மதத்தை சீர்செய்ய வேண்டும் என்பதே. 
மூடர்கள் அதை விளங்காது போனால் அதற்கு நான் பொறுப்பாளி ஆக முடியாது. அவர்களது மூடத்தனம்தான் அன்றி வேறில்லை. 
 
மூதையாரின் உழைப்பை சாக்கடையில் என்னால் எறிய  முடியாது. மதம் என்று கூறி சாக்கடையில் எதிர்கால சந்ததியை  தள்ளி விடுவதை என்னால் ஏற்றுகொள்ள முடியவில்லை.
 
அடுத்த மதம் இப்போதைக்கு எனக்கு அடுதவனுடையதாகவே படுகிறது. எனது வீட்டிற்கு குண்டு வைக்க வந்தால்  அதையும் சீர் பார்க்கத்தான் வேண்டும்.  
Link to comment
Share on other sites

மதுரங்கேணி, உங்களது முன்னைய கருத்தாடல்களிலிருந்து நீங்கள் கிறிஸ்தவ மதத்தை ஆதரிப்பவர் என்றே புரிந்து கொண்டேன். 

மீண்டும், மத உணர்வுகளைச் சீண்டிக் குழப்பம் செய்ய வேண்டாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மதுரங்கேணி, உங்களது முன்னைய கருத்தாடல்களிலிருந்து நீங்கள் கிறிஸ்தவ மதத்தை ஆதரிப்பவர் என்றே புரிந்து கொண்டேன். 

மீண்டும், மத உணர்வுகளைச் சீண்டிக் குழப்பம் செய்ய வேண்டாம்.

 

ஆகா,
 
மருந்தங்கேணி, உங்கள் நம்பிக்கை வேறு மதத்தில் இருந்தால், தயவுடன் விலகிக் கொள்ளுங்கள். இது போன்ற பதிவுகள் தவிர்க்கப் பட வேண்டும். 
 
அடுத்தவர் மத நம்பிக்கைகளில் புகுந்து ரண களப் படுத்தாதீர்கள்.
 
நன்றி 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
சென்ற மதம் ஒரு திருமணத்திட்கு ஐரோப்பிய நாடு ஒன்றிற்கு சென்றேன்.......
ஐவர் கூடி நான் (டியூட்டி ப்ரீ) வாங்கி சென்ற ஒரு போத்தலை குடித்துக்கொண்டு பலத்தையும் பத்தையும்  கதைத்துக்கொண்டு இருந்தோம் ..... அப்படியே எமது மதத்தின் புனிதமும் சிறப்பும் பற்றி அளவளாவல் தொடங்கியது.....
 
ஒருவர் : இந்தியா எப்படி துப்பரவு ஆகும் என்றுதான் தெரியவில்லை ...... கங்கை ஆறே மிகவும் கேடாக இருக்கிறது.
 
இன்னொருவர்: அது குப்பையாக இருக்கிறதே தவிர ..... வெள்ளை காரன் ஆராய்ச்சி செய்து சொல்லி இருக்கிறான் அதில் எந்த கிருமியும் இல்லை என்று. அவனுக்கே அது அதிசயமாக இருக்கிறதாம்.
 
எனக்குள் நான்: இப்படி மட்டமாக இருக்கும்போது இவர்கள் உண்மையை உரியகூடிய விகிதம் ஒன்று கூட இல்லை எப்போதோ ஒருமுறை சந்திக்கிறோம். பேசாமல் இருந்துவிட்டு சந்தோசமாக செல்லுவது உத்தமம்.
 
அப்படியே அது முடிந்து விமானம் ஏறிவிட்டேன் ............. விமானத்தில் மனம் பலவற்றை அசைபோட தொடங்கியது  அப்போது இதுவும் ஞாபகத்தில் வந்தது. இப்போது ஒரு குற்ற உணர்வு எனக்குள். அவர்கள் எனது நெருங்கிய  உறவுகள் அப்படி அவர்கள் மட்டமாக இருப்பது ஒரு குற்ற உணர்வாக பட்டது. அவர்கள் கேட்கிறார்களோ இல்லையோ  ......... கங்கையில் கிருமி இல்லது இருக்க ஒரு வீத சாத்தியமும் இல்லை அப்படி என்று  சொல்லி இருக்க வண்டும் என்று மனம் உறுத்திக்கொண்டு இருந்தது.
கங்கை நதியில் கிருமி இல்லது இருந்தால் இந்தியாவின் மிக பெரிய மூலதனமே அதுவாகத்தான் இருக்கும்.
தவிர காற்று இருக்கும் இடத்தில் கிருமி இல்லாத இடம் உலகில் எங்கும் இல்லை.
இப்படி ஒரு அடிமுட்டாள் தனத்தை ................. நம்பும் அளவிற்கு எமது மதம் வெறும் மூடர்களை மட்டுமே உருவாக்குகிறது.
இந்த மதத்தால் யார் பயன் பெறுகிறான்? என்னை பொறுத்தவரை யாரையும் காணோம். அடுத்தவனை யார் எயக்கிறானோ  அவன் மட்டும் சுகமாக வயிறய் வளர்க்கிறான்.
சிறுவயதில் எமக்கு மிகுந்த பயம் இருந்தது .......... வைரவர் வீரவத்திரர் என்று ஒரே பயம். அதனால் நாம் பல தவறுகளை  செய்யாது இருந்தோம். அந்த ஒரு நன்மையை மட்டுமே நான் கண்டேன்.
ஆனால் அப்படியே கேள்விகள் ஏதும் இல்லாது இருந்து இருப்பின் ......... அதைவிட 100 மடங்கு ஏமாற்ற பட்டிருப்பேன்.
 
2000- 3000 வருடங்களுக்கு முன்பு கங்கை நதி புனிதமாக தெளி நீராக இருந்திருக்கலாம். இப்போது எப்படி இருக்கிறது  என்பதை கண்ணாலேயே பார்த்துகொண்டு.......... தமது சொந்த அறிவை (கடவுள் கொடுத்த) கொஞ்சமேனும்  பாவிக்காது அப்படியே மூடமாக இருப்பதற்கு பெயர் இந்து என்றால்............ அதை எப்படி விமர்சிக்காது  கடந்துபோக முடியும்?
ஏன் நீங்கள் அதை விமர்சிக்க வேண்டாம் என்று அடிக்கடி கட்டளை இடுகிறீர்????? 
 
ஒரு பெரும் மூடத்தனத்தை மதத்தின் பெருமை என்று ஏமாற்ற பார்கிறார்கள் ........... திரி அப்படி தொடங்குகிறது.
இந்த மூட தனம் எங்கு இருந்து பிறக்கிறது? அப்படி என்று இந்த திரியில் பேசாதீர்கள் என்று .... ஏன் சொல்கிறீர்கள் என்றே  புரியவில்லை.
 
நீங்கள் தரும் ஞானஸ்தானத்தை அப்படியே ஏற்று .... ஒரு கிறிஸ்தவன் ஆகவே இருந்துவிட்டு போகிறேன்.
நான் ஏதும் பொய் எழுதுகிறேனா ?
இல்லாததை எழுதுகிறேனா ?
அப்படி நான் எழுதும்போது அதை சுட்டி காட்டுவதுதானே .... ஒரு கருத்தாடல்.  அதை விடுத்து எழுதாதே என்றால்? அது ஏன் என்று உண்மையிலேயே புரியவில்லை.
 
எனது வீட்டை ... எனது ஊரை ........... எனது நாட்டை அழிவு பாதைக்கு கொண்டு செல்லும் எல்லாவற்றையும் பற்றிதான்  எழுதுகிறேன். அதில் இந்துமதம் பெரும் பங்கு வகிக்கிறது ..... அதை ஒருபோதும் இப்படியே விட்டு விட்டு போகமுடியாது. இந்த சாக்கடையை கழுவாது எமது நாடு முன்னேறே வைப்பே இல்லை.
இவளவு வளம் இருந்தும் இந்தியா கெட்டுபோக இந்துமதமே மூல காரணம். போலிகளை மூடி மறைக்கவே விபூதி பட்டை  பெரிதும் உதவுகிறது.
தலை இடியை தடுக்கிறது அது இது என்று சும்மா கதை அளர்ப்பவர்கள் தான் தலை இடிவந்தால் பரசிட்டமோல்  போடுகிறார்கள். விபூதியை அள்ளி அப்ப வேண்டியதுதானே?? எதற்கு அஞ்ஞானத்தில் இருந்து விஞ்ஞாத்திட்கு  பல்ட்டி அடிக்கிறார்கள்???
 
பெரியவர்கள் சொன்ன மூலத்தை முழுதாக குழி தோண்டி புதைக்கிறார்கள்............. எத்தனை அறிவு சார் விடயங்களை  இன்று மூடமாக்கி வைத்திருக்கிறார்கள்.
நட்சத்திரம் பற்றி ஒரு பைனாகுலர் இல்லாத காலத்திலேயே கணித்து வைத்தார்கள். இன்று மூடர்கள்  குறிப்பு  கோதாரி என்று ஏமாந்து போகமட்டுமே பயன் படுத்துகிறார்கள். 
Link to comment
Share on other sites

பொதுவாகவே எதற்கும் இரண்டு பக்கங்கள் இருக்கின்றன. ஒன்று எவ்வாறு, எவரால் கையாளப்படுகின்றது என்பதைப் பொறுத்தே அதன் பயன்பாட்டின் பக்கம் பார்க்கப்படுகின்றது. இதைப்போன்று, மதத்தை பலர் தமது சுயநலத்திற்காகவோ அல்லது அறியாமையின் காரணமாகவோ பாவிக்கிறார்கள் என்பதற்காக, மதத்தை குறை சொல்வதுதான் அடி முட்டாள்தனம்.

 

ஒரு கத்தியை நல்ல நோக்கிலும் பார்க்கலாம். தீய நோக்கிலும் பார்க்கலாம். அது பார்ப்பவரின் மனநிலையைப் பொறுத்தது.

 

எதிரில் ஒரு அழகிய பெண் வரும்போது... ஒருவர் முகத்தைப் பார்க்கலாம்.. இன்னொருவர் மார்பைப் பார்க்கலாம்.... பார்ப்பவரின் மனதில் என்ன இருக்கிறதோ, அதுதான் பார்வையில் தெரியும். அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பதும் மெலெழுந்தவாறு நோக்கினால் முட்டாள்தனம்தான்.

 

அந்தந்த இடத்தில் இருக்கும் அது அதுகளை விட்டு, இருக்கக் கூடாத இடத்தில் இருப்பவைகளை எடுகோளாக்கினால்... எமக்காக யாவும் வளையும், ஆனால் அது உண்மை அல்ல.

 

பொது மலசலகூட சீமேந்துத் தரை நாறலாம். அதற்காக, வீட்டு சீமேந்துத் தரை நாறும் என்று முடிவெடுப்பது.....?!!!  :o  :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

 
நீங்கள் தரும் ஞானஸ்தானத்தை அப்படியே ஏற்று .... ஒரு கிறிஸ்தவன் ஆகவே இருந்துவிட்டு போகிறேன்.
நான் ஏதும் பொய் எழுதுகிறேனா ?
இல்லாததை எழுதுகிறேனா ?
 
அப்படி நான் எழுதும்போது அதை சுட்டி காட்டுவதுதானே .... ஒரு கருத்தாடல்.  அதை விடுத்து எழுதாதே என்றால்? அது ஏன் என்று உண்மையிலேயே புரியவில்லை.
 
 

 

மீண்டும் தயவுடன்:
 
உங்கள் கருத்துகள் ஆபத்தானவை. இங்கே வேண்டாம்.
 
நன்றி.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

உங்க இரண்டு பேருக்கு சனி பார்வை விழுந்துட்டுது !! அது தான் இந்த மாதிரி கேள்வியல் வருது.
 
சனியரோட  சொறிஞ்சால் கஞ்சிக்கும், சோத்துக்கும் அழவேண்டும் சிறியர்!!!  :icon_mrgreen:  அந்தாள்  ஒரு டைப் !!
 
இந்த  கட்டுரை  எங்கள மாதிரி ஆக்களுக்கு.
 
உங்களுக்கு எண்டு பெரியார் கணக்க எழுதி வச்சிருக்கிறார், வாசித்து சந்தோசமா இருங்க.  :icon_mrgreen:  :icon_idea:

 

 

என்னப்பா... இப்பிடி, பயப்பிடுத்துறீங்கள். :o  :D  :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்ரீ தர்ப்பநேஷவரர் கோயில் கட்டுரை கட்டுக்கதை என்று ஆதாரபூர்வமாக விளங்கப்படுத்தியும் பிடிவாதமாக நம்புவோரைப் பார்க்கும்போது எமது சமுதாயத்தில் மூட நம்பிக்கை எவ்வாறு ஆழமாக வேரூன்றியுள்ளது என்பதைக் காணலாம். எதிர்த்துக் கதைத்தால் கடவுள் பழிவாங்குவார் என்ற பயமுறுத்தலும் இவற்றை நீண்ட தூரம் காவிச் செல்லும். இன்று நாம் நம்பிக் கொண்டிருக்கும் புராணக் கதைகளில் ஏறத்தாள அனைத்துமே கட்டுக் கதைகள்தான். முடிந்தால் பொய்யான விளக்கங்களைப் பரப்பாமல் இவற்றிலிருந்து அறிவியலைத் தேட முயலுங்கள். இதற்குள் பெரியார் என்ற மனிதன் தேவையில்லை.

இணையவன்,அந்தக் கோயில் உண்மை,சனி உண்மை என கொஞ்சப் பேர் நம்புகிறார்கள்.நம்புகிறவர்கள் நம்பிட்டு போகட்டுமே!. அதில் என்ன பெரிய பாதகம் வந்து விட்டது?...சனி இருக்கிறான் அவன் பார்த்துப்பான் அல்லது ஆண்டவன் இருக்கிறான் அவர் பார்த்துப்பார் என்று தங்கட கடமைகளை,முயற்சிகளை செய்யாமல் விட்டார்களா? என்ன?...ஏதோ ஒரு காரணத்திற்காக எமது முன்னோர்கள் கிரகங்களை வழிபட்டார்கள் நல்லதிற்கு என எடுத்து கொள்ளுங்கள்.உங்களுக்கு வழி பட விருப்பமில்லை என்டால் ஒதுங்கி இருக்கலாம் தானே!.இதில் என்ன மூட நம்பிக்கை இருக்குது?....கொஞ்சமேனும் மானிடம் தற்போது உலகத்தில் இருப்பதற்கு கடவுள் பயம் தான் முக்கிய காரணம். மனிதாபிமானம் எல்லாம் இரண்டாம் பட்சம் தான்:D

Link to comment
Share on other sites

திருநள்ளாறு மட்டுமல்ல எல்லாக் கோவில்களுக்கும் பின்னாலும் காலகாலமாக கட்டி எழுப்பப்படும் நம்பிக்கைகள் இருக்கின்றன. சரி பிழைகளுக்கு அப்பால் இந்த நம்பிக்கைகள் எல்லா சமூகத்திலும் எல்லா காலமாற்றங்களின் போதும் நின்று நிலைக்கின்றன. இவை சமூக ஓட்டத்தில் பிரச்சனைகளை ஏற்படுத்துவதில்லை.

 

திருநள்ளாறு சனிபகவான் தலத்துக்கு வந்தால் சனிபாவம் தீரும் என்பது நம்பிக்கை, அந்த நம்பிக்கையை ஒட்டி பதிவுகள் இடும்போது அது பிரச்சனையாகுவதில்லை. அது பின்பற்றுகின்றவர்களின் நம்பிக்கை சார்ந்தது.  ஆனால் அந்த நம்பிக்கையை துருப்பிடிக்க விடாமல் வைத்திருக்க நினைத்து அசட்டுத்தனமான அறிவியல் காரணாங்களை முன்வைக்கும் போதுதான் அவை பிரச்சனையான பதிவுகளாக பார்க்கப்படுகின்றன. மிக உயரத்தில் பறந்து கொண்டிருக்கும் செய்மதிகள் 3 வினாடிகள் ஸ்தம்பித்து போகின்றன என்றும் கண்ணுக்கு தெரியாத நீல கதிர்கள் படுகின்றன என்றும் அசட்டுத்தனமாக அல்லது சந்தேகத்து இடமான விதமாக ஒருவர் பதிவினை இடும் போது தான் கேள்விகள் பிறக்கின்றன. அதற்குரிய அறிவியல் ரீதியிலான நம்பத்தகுந்த ஆதாரங்களை கேட்க வேண்டிய தேவைகள் ஏற்படுகின்றன.

 

இன்னொரு உதாரணத்துக்கு:

 

புரட்டாசி சனிக்கு காகத்துக்கு சோறு கொடுக்க வேண்டும் என்பது நம்பிக்கை. அது பற்றி எழுதும் போது அவற்றினை அனுமதிப்பதில் பிரச்சனை இருப்பதில்லை. ஆனால் அப்படி சோறு சாப்பிட்ட காகத்தின் ஜீரண இயக்கத்தில் இருந்து பிறக்கும் செம்மஞ்சள் கதிர்கள் சனி கிரகத்தில் இருந்து மனிதனை நேரடியாக தாக்கும் நாவல் நிறக்கதிர்களை நிர்மூலமாக்குகின்றன என்று விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர் என்று ஒருவர் யாழில் பதிவு இட்டாராயின் கண்டிப்பாக அங்கு எம் (யாழ் நிர்வாகத்தின்) கேள்விகளும் நம்பத்தகுந்த அறிவியல்  ஆதாரங்களை காட்டுங்கள் என்று அழுத்தங்களும் இருக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இணையவன்,அந்தக் கோயில் உண்மை,சனி உண்மை என கொஞ்சப் பேர் நம்புகிறார்கள்.நம்புகிறவர்கள் நம்பிட்டு போகட்டுமே!. அதில் என்ன பெரிய பாதகம் வந்து விட்டது?...சனி இருக்கிறான் அவன் பார்த்துப்பான் அல்லது ஆண்டவன் இருக்கிறான் அவர் பார்த்துப்பார் என்று தங்கட கடமைகளை,முயற்சிகளை செய்யாமல் விட்டார்களா? என்ன?...ஏதோ ஒரு காரணத்திற்காக எமது முன்னோர்கள் கிரகங்களை வழிபட்டார்கள் நல்லதிற்கு என எடுத்து கொள்ளுங்கள்.உங்களுக்கு வழி பட விருப்பமில்லை என்டால் ஒதுங்கி இருக்கலாம் தானே!.இதில் என்ன மூட நம்பிக்கை இருக்குது?....கொஞ்சமேனும் மானிடம் தற்போது உலகத்தில் இருப்பதற்கு கடவுள் பயம் தான் முக்கிய காரணம். மனிதாபிமானம் எல்லாம் இரண்டாம் பட்சம் தான் :D

மொக்குக்கூட்டம் என்று ஒதுங்கி இருக்கலாம்தான். ஆனால் மக்களின் நம்பிக்கைகளை வைத்தே வியாபாரம் செய்வதும், அதற்கு விஞ்ஞானத்தைக் காரணம் காட்டுவதும் ஏமாற்றும் செயல் என்பதைச் சொல்லும் சமூகப்பொறுப்பில்லாதவர்களாக இருக்கவேண்டும் என்று சொல்கின்றீர்களா? இப்படி எமது சமூகம் இருப்பதனால்தான் கனடாவில் சோதிடம் பார்க்க வந்த சாத்திரி புருஷனின் கண்டத்திற்கு பரிகாரம் செய்யவென்று ஒரு பெண்ணுடன் படுக்கின்ற நிலை வந்தது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
இங்கே நாம் யாரும் serious இல்லை என்று நினைக்கின்றேன்.
 
இவை எல்லாம் அங்கே இருக்கும் படிப்பறிவில்லா மக்களுக்கு அல்லது கண் மூடித்தனமான நம்பிக்கை உள்ளவர்களுக்கு., எழுதப் பட்டவை. எமக்கு இல்லை. அவர்களது நம்பிக்கையில், பத்திரிகை நடாத்தும் நாலு குடும்பம் ஒரு வேளை சோறு சாப்பிடும் என்ற எதிர்பார்ப்பில்.....
 
எழுத்தாளர் சுஜாத்தா, ஒரு முறை சொன்னது போல, மனித வாழ்வு, ஓர் சூதாட்டம் போல், யாரவது ஏமாறினால், தோல்வி அடைந்தால் தான் அடுத்தவர் வாழும் நிலை. இது நூறு வீதம் உண்மை. 
 
பதிவு இட்டவருக்கும், பின்னோட்டம் கொடுத்தவர்களும் ஒரு  seriousness உடன் போடவில்லை என நான் கருதுகிறேன். இவற்றினை வாசிக்கும் போதே, நமக்கு நகைச்சுவை உணர்வு வரவேண்டும். இல்லாவிடில் நமது பார்வை தவறு.
 
சும்மா ரிலாக்ஸ்க்கு ஏதோ பதிவு போட்டால், ஏதோ நாம் இந்த கதைகளை நம்புவதாயும், அதுக்கு விளக்கம், ஆதாரம் கேட்டு... நமக்கு, வேற வேலை இல்லாதது போல... 
 
அட போங்கப்பா...
 
அடுத்தவர்களின் நகைச்சுவை உணர்வுகளை பகிர்ந்து என்ஜாய் பன்னுங்க, எல்லை மீறாமல், எல்லை மீறாதவகையில்..  
 
அம்புட்டு தான் சொல்ல முடியும்.... 
 
Take it easy mates!!!
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மற்றவர்களின் நன்மை தீமைகளை மனதில் வைத்து மதங்களை எடை போடுவது நகைப்புக்குரியது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னப்பா... இப்பிடி, பயப்பிடுத்துறீங்கள். :o  :D  :lol:

 

சும்மா டமாஸ். :icon_mrgreen:

Link to comment
Share on other sites

இணையவன்,அந்தக் கோயில் உண்மை,சனி உண்மை என கொஞ்சப் பேர் நம்புகிறார்கள்.நம்புகிறவர்கள் நம்பிட்டு போகட்டுமே!. அதில் என்ன பெரிய பாதகம் வந்து விட்டது?...சனி இருக்கிறான் அவன் பார்த்துப்பான் அல்லது ஆண்டவன் இருக்கிறான் அவர் பார்த்துப்பார் என்று தங்கட கடமைகளை,முயற்சிகளை செய்யாமல் விட்டார்களா? என்ன?...ஏதோ ஒரு காரணத்திற்காக எமது முன்னோர்கள் கிரகங்களை வழிபட்டார்கள் நல்லதிற்கு என எடுத்து கொள்ளுங்கள்.உங்களுக்கு வழி பட விருப்பமில்லை என்டால் ஒதுங்கி இருக்கலாம் தானே!.இதில் என்ன மூட நம்பிக்கை இருக்குது?....கொஞ்சமேனும் மானிடம் தற்போது உலகத்தில் இருப்பதற்கு கடவுள் பயம் தான் முக்கிய காரணம். மனிதாபிமானம் எல்லாம் இரண்டாம் பட்சம் தான் :D

 

தவறான தகவல்கள் பரப்பப்படும்போது அது தவறு என்று சுட்டிக் காட்டுவதற்கும் எல்லோருக்கும் உரிமை உண்டு.

 

கடவுள் நம்பிக்கை பற்றிக் கதைக்கவில்லை. நம்புவதும் நம்பாததும் அவரவர் பிரச்சனை. கடவுளை நம்பவைக்க மூட நம்பிக்கைகளையும் தவறான காரணங்களையும் ஏன் பரப்ப வேண்டும் ? 

 

முட்டாள் தனமான முறையில் ஒன்றை நம்ப வைத்துத்தான் மானிடத்தைக் கக்க வேண்டிய அவசியம் இல்லையே. உண்மையானதை உள்ளபடியே எடுத்துக் கூறி நம்ப வைக்க முடியாதா ? மதங்களில் உள்ள பொய்களை அதிக காலம் பாதுகாக்க முடியாது. அவற்றை விலக்கி நல்ல விடயங்களை வெளிக்கொண்டு வருவதுதான் மதத்துக்கும் நல்லது.

 

மத நம்பிக்கையால்தான் மானிடம் காக்கப்படுகிறது என்ற கூற்றும் பொய்யானது. மதங்கள் ஆரம்பிக்கப்பட்ட காலத்திலிருந்தே உலகில் பெரும்பாலான பிரச்சனைகளின் பின்னணியில் மதங்களே உள்ளன.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிள்ளைக்கு கலியாணம் சாமத்தியம் எல்லாம் மூட நம்பிக்கைதான் அண்ணே முதலில் அங்கிருத்து ஆரம்பிப்பம் எங்காவது கட்டிட்டு போகட்டும் என்று விடுவமா நீங்க தயாரா அதுக்கு ..

 

காலையில் எழும்பி முகம் கழுவி சிவா சிவா என்று திருநீறு பூசிட்டு வந்து கணனியில் எதுவும் எழுதலாம் அண்ணே ஆனால் நிஜம் வேறு இல்லையா  :D  :icon_idea:

 

உங்களுக்கு பதில் எழுதுவது

நேரவிரயம்..

 

 

இப்போ

எனது குடும்பத்தை இழுத்து எழுதியதற்கான பதில்...

கிராம்சியம்பதி  முருகனின் தர்மகர்த்தாவின் மகன் நான்

அந்தக்கோவில் எனது ஒப்பாட்டனால் கட்டப்பட்டது.

 

எனது அப்பர் தான் வேட்டைத்திருவிழாவுக்கு போன முருகன்

வீடு திரும்பி உள்ளே போக வள்ளியிடம் அனுமதி  கேட்டு பாட்டுப்பாடுகிறவர்

அப்போ தான் பாடித்தான் வள்ளி  கதவைத்திறந்ததாக சொல்வார்

அவரது மூதாதையினர் அவ்வாறு  தான் சொல்லி  வளர்த்துள்ளனர்

எனக்கு இதில் கேள்விகள் எழுந்தன

இப்போ என் பிள்ளை அதை முற்றாக நிராகரிக்கின்றான்

இதைத்தான் தலைமுறை  வளர்ச்சி  என்கிறார்கள்

இதைத்தான் மூட நம்பிக்கை என்று சொல்லி  நிற்கிறார்கள்

ஒரு இந்து சமயத்தவன் என்றபோதும்

கடவுள் இருக்கிறார் இல்லை என்ற முடிவுக்கு வரமுடியாதவனாக இருந்தபோதும்

இது  மூடநம்பிக்கை தான் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ளமுடிகிறது

 

மேலும்

எனது பிள்ளை

எனது பேச்சைக்கேட்டு திருமணம் செய்யும் என்பதும் உங்களது ஒருவித மூடநம்பிக்கையே...

நான் அந்தளவுக்கு இல்லை..

Link to comment
Share on other sites

உங்களுக்கு பதில் எழுதுவது

நேரவிரயம்..

 

 

இப்போ

எனது குடும்பத்தை இழுத்து எழுதியதற்கான பதில்...

கிராம்சியம்பதி  முருகனின் தர்மகர்த்தாவின் மகன் நான்

அந்தக்கோவில் எனது ஒப்பாட்டனால் கட்டப்பட்டது.

 

எனது அப்பர் தான் வேட்டைத்திருவிழாவுக்கு போன முருகன்

வீடு திரும்பி உள்ளே போக வள்ளியிடம் அனுமதி  கேட்டு பாட்டுப்பாடுகிறவர்

அப்போ தான் பாடித்தான் வள்ளி  கதவைத்திறந்ததாக சொல்வார்

அவரது மூதாதையினர் அவ்வாறு  தான் சொல்லி  வளர்த்துள்ளனர்

எனக்கு இதில் கேள்விகள் எழுந்தன

இப்போ என் பிள்ளை அதை முற்றாக நிராகரிக்கின்றான்

இதைத்தான் தலைமுறை  வளர்ச்சி  என்கிறார்கள்

இதைத்தான் மூட நம்பிக்கை என்று சொல்லி  நிற்கிறார்கள்

ஒரு இந்து சமயத்தவன் என்றபோதும்

கடவுள் இருக்கிறார் இல்லை என்ற முடிவுக்கு வரமுடியாதவனாக இருந்தபோதும்

இது  மூடநம்பிக்கை தான் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ளமுடிகிறது

 

மேலும்

எனது பிள்ளை

எனது பேச்சைக்கேட்டு திருமணம் செய்யும் என்பதும் உங்களது ஒருவித மூடநம்பிக்கையே...

நான் அந்தளவுக்கு இல்லை..

இல்லாத நேரத்திலும் நேரம் ஒதுக்கி பதில் எழுதியதுக்கு நன்றி அண்ணே ..

 

மூட நம்பிக்கை வேறு மதம் வேறு அதை முதலில் புரிந்து கொள்ளவேணும் எம்மை கட்டுபடுத்தும் ஒருவர் இருக்கிறார் என்னும் ஒரு மாயைதான் இன்றும் பல தவறு நடக்காது காத்து நிக்கு பிழைகளை விடும்போதும் செய்யும் போதும் கடவுளுக்கு தெரியும்மே என்னும் மனச்சாட்சி இங்கு ஆழ்மனதில் எழுவதால் சிலவற்றி தவிர்த்து போகிறோம் அது மதம் என்னும் தேடல் இருப்பதால் மட்டுமே ...

 

 

வளைச்சு வளைச்சு நியாயம் எவ்வளவும் எழுதலாம் முதலில் நாம் அந்த வழிகளை பின்பற்றி கொண்டுதான் மற்றவர்களுக்கு இது பிழை என்று எடுத்து சொல்லவேணும் என்று நான் நினைக்கிறேன் அது எனது தனிப்பட்ட விடையம் எனக்கு இறைவழிபாட்டில் நம்பிக்கை இருக்கு என்பதால் அதுக்கா சாத்திரம் பார்த்துதான் பயணம் போகவேணும் என்று எல்லாம் இல்லை அப்படி போனால் அது மூடநம்பிக்கை எனலாம் ..

 

கடவுள் இருக்கிறாரா என்னும் கேள்வி நீங்கள் நான் என் பிள்ளை கேட்டு எனக்கு தெரிந்த விடையம் இல்லை இது மனிதன் தோன்றிய காலத்தில் இருந்து இருக்கு இன்னும் இதுக்கான விடை இல்லை ஆகவே கடவுள் இல்லை என்பதை நாம் தான் இப்ப கண்டுபிடிச்சது போல அலட்டிக்கொள்ள தேவையில்லை ..

 

கடவுள் இல்லை என்பதுக்கு அறிவியல் விளக்கம் எங்காவது இருந்தா சொல்லுங்க ...இருக்கிறார் என்று சொன்னால் ஆதாரம் கேட்கும் நீங்கள் இல்லை என்பதுக்கு என்ன ஆதாரம் இருக்கு உங்களிடம் ..

 

அணுவை மோதி பிளந்த பின்னும் ஆராச்சியாளன் அதுக்கு கடவுள் துகள்கள் என்றுதான் பெயர் வைத்தான் ஒழிய கடவுள் இல்லா துகள் என்று பெயர் இடவில்லை .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இல்லாத நேரத்திலும் நேரம் ஒதுக்கி பதில் எழுதியதுக்கு நன்றி அண்ணே ..

 

மூட நம்பிக்கை வேறு மதம் வேறு அதை முதலில் புரிந்து கொள்ளவேணும் எம்மை கட்டுபடுத்தும் ஒருவர் இருக்கிறார் என்னும் ஒரு மாயைதான் இன்றும் பல தவறு நடக்காது காத்து நிக்கு பிழைகளை விடும்போதும் செய்யும் போதும் கடவுளுக்கு தெரியும்மே என்னும் மனச்சாட்சி இங்கு ஆழ்மனதில் எழுவதால் சிலவற்றி தவிர்த்து போகிறோம் அது மதம் என்னும் தேடல் இருப்பதால் மட்டுமே ...

 

 

வளைச்சு வளைச்சு நியாயம் எவ்வளவும் எழுதலாம் முதலில் நாம் அந்த வழிகளை பின்பற்றி கொண்டுதான் மற்றவர்களுக்கு இது பிழை என்று எடுத்து சொல்லவேணும் என்று நான் நினைக்கிறேன் அது எனது தனிப்பட்ட விடையம் எனக்கு இறைவழிபாட்டில் நம்பிக்கை இருக்கு என்பதால் அதுக்கா சாத்திரம் பார்த்துதான் பயணம் போகவேணும் என்று எல்லாம் இல்லை அப்படி போனால் அது மூடநம்பிக்கை எனலாம் ..

 

கடவுள் இருக்கிறாரா என்னும் கேள்வி நீங்கள் நான் என் பிள்ளை கேட்டு எனக்கு தெரிந்த விடையம் இல்லை இது மனிதன் தோன்றிய காலத்தில் இருந்து இருக்கு இன்னும் இதுக்கான விடை இல்லை ஆகவே கடவுள் இல்லை என்பதை நாம் தான் இப்ப கண்டுபிடிச்சது போல அலட்டிக்கொள்ள தேவையில்லை ..

 

கடவுள் இல்லை என்பதுக்கு அறிவியல் விளக்கம் எங்காவது இருந்தா சொல்லுங்க ...இருக்கிறார் என்று சொன்னால் ஆதாரம் கேட்கும் நீங்கள் இல்லை என்பதுக்கு என்ன ஆதாரம் இருக்கு உங்களிடம் ..

 

அணுவை மோதி பிளந்த பின்னும் ஆராச்சியாளன் அதுக்கு கடவுள் துகள்கள் என்றுதான் பெயர் வைத்தான் ஒழிய கடவுள் இல்லா துகள் என்று பெயர் இடவில்லை .

 

மீண்டும்  மீண்டும் நான் எழுதியதை வாசிக்காது

உங்கள் பாணியில் மிளகாய் அரைக்கப்படாது....

 

கடவுள் இருக்கிறார்

இல்லை என்று எனக்குத்தெரியாது என்று தான் மேலே எழுதியுள்ளேன்..

 

எனக்கே முழுமையாக தெரியாதது பற்றி  நான் பேசுவதில்லை

அதில் எனக்கு  எந்த வெட்கமும் இல்லை

 

உங்களுக்கு முழுமையாக தெரிந்தால்

இங்கு அதை ஆதாரமாக வையுங்கள் என்று தான் இந்த திரியின் ஆரம்பத்திலிருந்து உறவுகளும்

நிர்வாகமும் கேட்டு நிற்கிறார்கள்

அதற்காக  கொஞ்சம  நேரத்தை செலவளித்தால்

நாமும் அறிந்து கொள்ளலாமே...

 

வாழ்வில் அடிபட்ட எனது அனுபவம்

உங்களது வயசைவிட அதிகம்

ஆனால் கடவுள் பற்றி  தங்களிடமிருந்தும் ஆதாரத்துடன் ஏதாவது வந்தால் ஏற்றுக்கொள்ள மனசு துடிக்குது..

ஏனெனில் நானும் ஒரு இந்துமதப்பற்றாளன்..

Link to comment
Share on other sites

மீண்டும்  மீண்டும் நான் எழுதியதை வாசிக்காது

உங்கள் பாணியில் மிளகாய் அரைக்கப்படாது....

 

கடவுள் இருக்கிறார்

இல்லை என்று எனக்குத்தெரியாது என்று தான் மேலே எழுதியுள்ளேன்..

 

எனக்கே முழுமையாக தெரியாதது பற்றி  நான் பேசுவதில்லை

அதில் எனக்கு  எந்த வெட்கமும் இல்லை

 

உங்களுக்கு முழுமையாக தெரிந்தால்

இங்கு அதை ஆதாரமாக வையுங்கள் என்று தான் இந்த திரியின் ஆரம்பத்திலிருந்து உறவுகளும்

நிர்வாகமும் கேட்டு நிற்கிறார்கள்

அதற்காக  கொஞ்சம  நேரத்தை செலவளித்தால்

நாமும் அறிந்து கொள்ளலாமே...

 

வாழ்வில் அடிபட்ட எனது அனுபவம்

உங்களது வயசைவிட அதிகம்

ஆனால் கடவுள் பற்றி  தங்களிடமிருந்தும் ஆதாரத்துடன் ஏதாவது வந்தால் ஏற்றுக்கொள்ள மனசு துடிக்குது..

ஏனெனில் நானும் ஒரு இந்துமதப்பற்றாளன்..

நீங்களும் வழமையான வார்த்தை ஜாலம் தான் மூடநம்பிக்கை என்பது என்ன .......மதம் என்பது என்ன அதை முதலில் விளக்கினால் எனக்கு சுகம் கடவுள் உண்டா இல்லையா என்று அறிய ..

 

 

என்ன அடைப்படியில் நீங்கள் கடவுள் இல்லை என்னும் முடிவுக்கு வாறீங்கள்...அனுபவம் என்பது வயது சார்த்தது என்று நினைப்பதே முதலில் தப்பு அது ஒருவரின் வாழ்வியல் சூழலை பொறுத்தே அவர் அவர் அனுபவம் மாறுபடும் எனக்கு இருக்கும் அனுபவம் வேறானது உங்கள் அனுபவம் வேறானது ஆகவே இங்கு வயது என்பது நான் அதிகம் தெரிந்தவன் என்று சொல்ல பயன்படுமே தவிர அனுபவத்துக்கு அல்ல ..

 

ஒருவர் இறந்து விட்டால் தூக்கி போட்டுடு வேலை பார்க்காமல் அவருக்கு சகல கிரிகைகள் எல்லாம் யாருக்கு பயந்து செய்து தகனம் செய்ய வேணும் இறந்தவர் எழும்பி எண்டா எனக்கு சந்தனம் வைக்காமல் தீ மூட்டினே என்று கேட்கவா போகிறார் பின்னர் எதுக்கு இவ்வளவு ஏற்பாடு வீட்டில் படம் வைத்து மாலை போட்டு வருடா வருடம் அவருக்கு துவசம் கொடுத்து இது எல்லாம் மூடநம்பிக்கை இல்லையா கேட்ட அவர் என் அப்பா அம்மா அதனால் செய்கிறேன் என்று சொல்வீர்கள் ஆனால் அதன் பின்னால் உள்ள பயம் என்பதுதான் இறை .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி வணக்கம்

நேரம் பொன்னானது.........

Link to comment
Share on other sites

 

கடவுள் இல்லை என்பதுக்கு அறிவியல் விளக்கம் எங்காவது இருந்தா சொல்லுங்க ...இருக்கிறார் என்று சொன்னால் ஆதாரம் கேட்கும் நீங்கள் இல்லை என்பதுக்கு என்ன ஆதாரம் இருக்கு உங்களிடம் ..

 

 

என்னைப் பொறுத்தவரையில் இயேசு, அல்லா, சிவன், ராமர் போன்ற கடவுளர்கள் எல்லோரும் டிம்பக்டூ பெரும் கடவுளின் சீடர் என்றே நம்புகிறேன். :huh: நீங்கள் கேட்கலாம்.. யாரப்பா இது புதுக்கடவுள் எண்டு.. ஆனால் டிம்பக்டூ கடவுள் இல்லை என்பதற்கு அறிவியல் விளக்கம் எங்காவது இருக்கா? இருந்தால் அதைத் தரமுடியுமா? :D

 

ஒன்று உண்டு என்று சொல்பவர்கள்தான் அதை நிறுவ வேண்டுமே தவிர இல்லை என்பவர்கள் அல்ல. உதாரணமாக, செவ்வாய் கிரக மண்ணில் இன்ன தாதுப்பொருள் உள்ளது என்று நாசா சொன்னால் அதை அவர்கள்தான் பரிசோதனைகள்மூலம் நிறுவியிருக்க வேண்டும். மற்றவர்கள் பிறகு அந்தப் பரிசோதனைகள்பற்றி விவாதிக்கலாம். அதை விட்டுவிட்டு, செவ்வாய் மண்ணில் நிறைய தங்கம் இருக்கு என்று மேலோட்டமாக சொல்லிவிட்டுப் போய்விட முடியாது. அப்படிச் சொன்னால் அடுத்த கணமே நாசாவின்  நம்பகத்தன்மை கேள்விக்குறியாகிவிடும்.  :o  :blink:  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னைப் பொறுத்தவரையில் இயேசு, அல்லா, சிவன், ராமர் போன்ற கடவுளர்கள் எல்லோரும் டிம்பக்டூ பெரும் கடவுளின் சீடர் என்றே நம்புகிறேன். :huh: நீங்கள் கேட்கலாம்.. யாரப்பா இது புதுக்கடவுள் எண்டு.. ஆனால் டிம்பக்டூ கடவுள் இல்லை என்பதற்கு அறிவியல் விளக்கம் எங்காவது இருக்கா? இருந்தால் அதைத் தரமுடியுமா? :D

 

ஒன்று உண்டு என்று சொல்பவர்கள்தான் அதை நிறுவ வேண்டுமே தவிர இல்லை என்பவர்கள் அல்ல. உதாரணமாக, செவ்வாய் கிரக மண்ணில் இன்ன தாதுப்பொருள் உள்ளது என்று நாசா சொன்னால் அதை அவர்கள்தான் பரிசோதனைகள்மூலம் நிறுவியிருக்க வேண்டும். மற்றவர்கள் பிறகு அந்தப் பரிசோதனைகள்பற்றி விவாதிக்கலாம். அதை விட்டுவிட்டு, செவ்வாய் மண்ணில் நிறைய தங்கம் இருக்கு என்று மேலோட்டமாக சொல்லிவிட்டுப் போய்விட முடியாது. அப்படிச் சொன்னால் அடுத்த கணமே நாசாவின்  நம்பகத்தன்மை கேள்விக்குறியாகிவிடும்.  :o  :blink:  

 

அடடா! null hypothesis ஐயும் alternate hypothesis ஐயும் (தமிழ் பதம் தெரியவில்லை, மன்னிக்கவும்!) இவ்வளவு எளிதாகச் சொல்ல முடியும் எண்டு இண்டைக்குத் தான் கண்டு கொண்டேன்! குருநாதா!, அடியேனையும் சிஷ்யனாகச் சேர்த்துக் கொள்ள ஒரு விண்ணப்பம் போட்டு வைக்கலாமா? :D

 

Link to comment
Share on other sites

அடடா! null hypothesis ஐயும் alternate hypothesis ஐயும் (தமிழ் பதம் தெரியவில்லை, மன்னிக்கவும்!) இவ்வளவு எளிதாகச் சொல்ல முடியும் எண்டு இண்டைக்குத் தான் கண்டு கொண்டேன்! குருநாதா!, அடியேனையும் சிஷ்யனாகச் சேர்த்துக் கொள்ள ஒரு விண்ணப்பம் போட்டு வைக்கலாமா? :D

விண்ணப்பத்துடன் ரூ.100 கட்டணத்தையும் சேர்த்து கட்டிவிடுங்கள்..  :huh: ஆனால் தலைமைச் சீடன் பதவியை ஒழித்துவிட்டேன்..  :unsure: ஒன்லி சீடிதான். :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திருநள்ளாறு மட்டுமல்ல எல்லாக் கோவில்களுக்கும் பின்னாலும் காலகாலமாக கட்டி எழுப்பப்படும் நம்பிக்கைகள் இருக்கின்றன. சரி பிழைகளுக்கு அப்பால் இந்த நம்பிக்கைகள் எல்லா சமூகத்திலும் எல்லா காலமாற்றங்களின் போதும் நின்று நிலைக்கின்றன. இவை சமூக ஓட்டத்தில் பிரச்சனைகளை ஏற்படுத்துவதில்லை.

திருநள்ளாறு சனிபகவான் தலத்துக்கு வந்தால் சனிபாவம் தீரும் என்பது நம்பிக்கை, அந்த நம்பிக்கையை ஒட்டி பதிவுகள் இடும்போது அது பிரச்சனையாகுவதில்லை. அது பின்பற்றுகின்றவர்களின் நம்பிக்கை சார்ந்தது.  ஆனால் அந்த நம்பிக்கையை துருப்பிடிக்க விடாமல் வைத்திருக்க நினைத்து அசட்டுத்தனமான அறிவியல் காரணாங்களை முன்வைக்கும் போதுதான் அவை பிரச்சனையான பதிவுகளாக பார்க்கப்படுகின்றன. மிக உயரத்தில் பறந்து கொண்டிருக்கும் செய்மதிகள் 3 வினாடிகள் ஸ்தம்பித்து போகின்றன என்றும் கண்ணுக்கு தெரியாத நீல கதிர்கள் படுகின்றன என்றும் அசட்டுத்தனமாக அல்லது சந்தேகத்து இடமான விதமாக ஒருவர் பதிவினை இடும் போது தான் கேள்விகள் பிறக்கின்றன. அதற்குரிய அறிவியல் ரீதியிலான நம்பத்தகுந்த ஆதாரங்களை கேட்க வேண்டிய தேவைகள் ஏற்படுகின்றன.

இன்னொரு உதாரணத்துக்கு:

புரட்டாசி சனிக்கு காகத்துக்கு சோறு கொடுக்க வேண்டும் என்பது நம்பிக்கை. அது பற்றி எழுதும் போது அவற்றினை அனுமதிப்பதில் பிரச்சனை இருப்பதில்லை. ஆனால் அப்படி சோறு சாப்பிட்ட காகத்தின் ஜீரண இயக்கத்தில் இருந்து பிறக்கும் செம்மஞ்சள் கதிர்கள் சனி கிரகத்தில் இருந்து மனிதனை நேரடியாக தாக்கும் நாவல் நிறக்கதிர்களை நிர்மூலமாக்குகின்றன என்று விஞ்ஞானிகள் கண்டு பிடித்துள்ளனர் என்று ஒருவர் யாழில் பதிவு இட்டாராயின் கண்டிப்பாக அங்கு எம் (யாழ் நிர்வாகத்தின்) கேள்விகளும் நம்பத்தகுந்த அறிவியல் ஆதாரங்களை காட்டுங்கள் என்று அழுத்தங்களும் இருக்கும்.

உங்கள் கருத்து ஏற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்குது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இங்கு  வைக்கப்படும் கருத்துக்களிலும் சரி

செயற்பாட்டிலும் சரி

 

மதம் நல்லது கெட்டது

சரி  பிழை என்று எவரும் வாதாடவில்லை

 

இணையவன்

நிழலி  உட்பட...

சாதாரணமாக இணையவன் இந்தளவுக்கு எழுதுபவர் அல்ல..

அவர் மினக்கெட்டு எழுதுகின்றார் என்றால்

இது எவ்வளவு முக்கியத்தவம் வாய்ந்தது என்பதை உணரணும்..

 

என்னைப்பொறுத்தவரை

எல்லோரும் இது   போன்ற தப்பான விளக்கங்கள்

மூடநம்பிக்கை விதைப்புக்கள்

உள்ளதையும் கேலிக்குரியதாக்கிவிடும்

இல்லாதொழித்துவிடும்  என்பதே பலரதும்

யாழினதும் கருத்தாக உள்ளது...

அதை எல்லோரும் புரிந்து கொள்ளணும்

ஏற்று பொறுப்புடன் எழுதணும் என்பதே வேண்டுகோள்......

 

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.