Jump to content

ஜெ. மீதான சொத்துக்குவிப்பு வழக்கு - ஜெ., ஜாமின் வழக்கில் ஆஜராவேன் : சுப்பிரமணியன் சாமி அறிவிப்பு


Recommended Posts

ஜெயலலிதாவுக்கு 4 வருட சிறை, ரூ. 25 கோடி அபராதம்- ஜாமீன் இல்லை- உடனே சிறைக்கு செல்ல வேண்டும்

Link to comment
Share on other sites

  • Replies 118
  • Created
  • Last Reply

ஜெயாவின் அசுர வெற்றியைப் பார்த்து தமிழ்தேசிய அரசியல் எப்படி முன்னுக்கு வரும் என்று ஒருசமயம் கேட்டார்கள். காலம் ஒருபோதும் நேர்கோட்டில் பயணிப்பதில்லை. இந்த நிகழ்வு பல வாய்ப்புகளை தமிழுக்குத திறந்துவிட்டுள்ளது. இனியாவது ஒரு தமிழர் தமிழகத்தை ஆளும் நிலை வரவேண்டும்.

Link to comment
Share on other sites

ஜெயலலிதாவுக்கு ரூ. 25 கோடி அபராதம் -

சசிகலாவுக்கும் ரூ. 25 கோடி அபராதம் -

இளவரசி, சுதாகரனுக்கும் தலா ரூ. 25 கோடி அபராதம்

-மொத்தத்தில் 4 பேருக்கும் சேர்த்து ரூ. 100 கோடி அபராதம் விதித்து நீதிபதி குன்ஹா தீர்ப்பு

 

 

http://tamil.oneindia.in/news/india/jayalalitha-assets-case-verdict-bangalore-court-live-2-211803.html

Link to comment
Share on other sites

4 வருட சிறை என்பதால் ஜெயலலிதாவுக்கு உடனடியாக ஜாமீன் இல்லை

-ஜெயா, சசி, இளவரசி, சுதாகரன் ஆகியோர் உடனே சிறைக்கு சென்றே ஆக வேண்டும்

-ஜெயலலிதாவுக்கு ரூ. 25 கோடி அபராதம் -சசிகலாவுக்கும் ரூ. 25 கோடி அபராதம்

-இளவரசி, சுதாகரனுக்கும் தலா ரூ. 25 கோடி அபராதம் -மொத்தத்தில் 4 பேருக்கும் சேர்த்து ரூ. 100 கோடி அபராதம் விதித்து நீதிபதி குன்ஹா தீர்ப்பு

-10 வருடங்களுக்கு எந்தத் தேர்தலிலும் ஜெயலலிதா போட்டியிட முடியாது!

Read more at: http://tamil.oneindia.in/news/india/jayalalitha-assets-case-verdict-bangalore-court-live-2-211803.html

Link to comment
Share on other sites

-அடுத்த 10 ஆண்டுகளுக்கு ஜெயலலிதா தேர்தலில் போட்டிய முடியாது!

-ஜெயலலிதாவின் முதல்வர் பதவி பறிபோனது!!- எம்எல்ஏ பதவியும் பறிக்கப்படும்

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சூப்பர் ஸ்ரார் கொடுப்புக்குள் சிரித்தபடி வேட்டியை மடித்துக்கட்டுவதாக
எனக்கு ஒரு கனவு வந்தது பகல் கனவா?? தெரியவில்லை :o

Link to comment
Share on other sites

செய்தி மாற்றம்


-ஜெயலலிதாவுக்கு ரூ. 100 கோடி அபராதம்

-சசிகலாவுக்கும் ரூ. 10 கோடி அபராதம்

-இளவரசி, சுதாகரனுக்கும் தலா ரூ. 10 கோடி அபராதம்

-மொத்தத்தில் 4 பேருக்கும் சேர்த்து ரூ. 130 கோடி அபராதம் விதித்து நீதிபதி குன்ஹா தீர்ப்பு

http://tamil.oneindia.in/news/india/jayalalitha-assets-case-verdict-bangalore-court-live-2-211803.html

 

 

2G அலைகற்றை வழக்கில் கருணாநிதி குடும்பமும் உள்ளே போனால் நல்லது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த நிலையில் இவாவை பாப்பேன் என்று நான் கொஞ்சமும் எதிர் பார்த்தது இல்லை cbuNC.jpg ....................

Link to comment
Share on other sites

அடுத்த முதல்வர் யார் கவுண்டனா ...வன்னியரா ஆரம்பிச்சுட்டாங்க தமிழ்நாடு உருப்படும் இதில தமிழர் ஆண்டு ம்ம் .

Link to comment
Share on other sites

ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டு சிறை: ரூ.100 கோடி அபராதம்

 

 

சரியாக மாலை 5 மணிக்கு ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகிய நால்வருக்கும் தலா 4 ஆண்டு சிறை தண்டனை என்ற விவரம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. ஜெயலலிதாவுக்கு ரூ.100 கோடியை அபராதமாகவும் நீதிபதி விதித்தார். மற்ற மூவருக்கும் தலா ரூ. 10 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

 

பெங்களூர்: சொத்துக்குவிப்பு வழக்கில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் குற்றவாளிகள் என்று காலையில் அறிவிக்கப்பட்ட நிலையில், ஜெயலலிதா உள்ளிட்ட நால்வருக்கும் தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா மாலையில் தீர்ப்பளித்தார். சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் இன்று மதியம் தீர்ப்பு வழங்கியது.

 

இதையடுத்து தீர்ப்பு விவரத்தை உணவு இடைவேளைக்கு பிறகு அறிவிப்பதாக நீதிபதி கூறினார். எனவே குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட நால்வரும் கோர்ட் வளாகத்திற்குள்ளேயே உள்ளனர். எந்த நேரத்தில் வேண்டுமானாலும் தீர்ப்பு குறித்த விவரம் வெளியே வரும் என்பதையடுத்து அதிமுகவினரும், பொதுமக்களும், மீடியாக்காரர்களும் எதிர்பார்த்து காத்திருந்தனர். தீர்ப்பில் அறிவிக்கப்படும் தண்டனையை பொறுத்துதான் ஜெயலலிதாவின் அரசியல் எதிர்காலம் இருப்பதால் நாடு முழுவதுமே மிகுந்த பரபரப்புடன் தீர்ப்பை எதிர்பார்த்து காத்திருந்தது.

 

இதனிடையே தீர்ப்பு வெளியே வந்ததும், அதிமுகவினர் வன்முறையில் ஈடுபடக்கூடும் என்பதால் கோர்ட் அமைந்துள்ள பரப்பன அக்ரஹாரா பகுதியில் குவிந்திருந்த 200க்கும் மேற்பட்ட அதிமுகவினரை பெங்களூர் போலீசார் கைது செய்துள்ளனர். கோர்ட்டை சுற்றி 1 கிலோமீட்டருக்கு போடப்பட்டிருந்த 144 தடையுத்தரவு 5 கிலோமீட்டர் வரை நீட்டிக்கப்பட்டு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

http://tamil.oneindia.in/news/india/jayalalithaa-sentenced-four-years-imprisonment-assets-case-211837.html


அத்துடன் இந்த வழக்கில் ஜெயலலிதாவுக்கு ரூ100 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோருக்கு தலா ரூ10 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 4 ஆண்டுகாலம் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால் ஜெயலலிதாவின் முதல்வர் பதவி உடனடியாக பறிபோய்விட்டது. அதே நேரத்தில் அவரது எம்எல்ஏ பதவியும் விரைவில் பறிக்கப்படும்.

 

4 ஆண்டு சிறை தண்டனை என்பதால் இந்த நீதிமன்றத்தில் உடனடியாக ஜாமீனும் கிடைக்காது. இதனால் நீதிமன்றத்தில் இருந்து அப்படியே சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அடைக்கப்படுகின்றனர்.

 

இவர்கள் அடுத்து கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தான் ஜாமீன் கோர முடியும். ஆனால், அடுத்த 10 நாட்கள் தசராவுக்காக உயர் நீதிமன்றத்துக்கு விடுமுறை என்பது குறிப்பிடத்தக்கது.

 

Link to comment
Share on other sites

10 வருடங்களுக்கு ஜெயலலிதா தேர்தலில் போட்டியிட முடியாது!

 

பெங்களூர்: நான்காண்டுகள் சிறை தண்டனை பெற்றுள்ள ஜெயலலிதா இன்னும் இரு பொதுத் தேர்தல்களில் போட்டியிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951, பிரிவு 8 (3)ன்படி நீதிமன்றத்தால் குற்றவாளி என்று தீர்மானிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்குக் குறையாமல் சிறை தண்டனை விதிக்கப்பட்டால் அவர் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்ட நாள் முதல், தேர்தலில் போட்டியிட தகுதியை இழந்தவராக ஆகிறார்.

 

இந்தத் தகுதி இழப்பு அவர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட நாளிலிருந்து மேலும் 6 ஆண்டுகளுக்கு நீடிக்கும். இது தேர்தல் ஆணையத்தின் சட்டம். எனவே ஜெயலலிதாவுக்கு நான்காண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளதால் விடுதலையான பிறகும் 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டிய முடியாது.

 

ஒரு சட்டசபை அல்லது மக்களவையின் பதவிக்காலம் 5 ஆண்டுகளாகும். எனவே 6 ஆண்டு போட்டியிட முடியாது என்றால் இரு பொதுத் தேர்தல்களில் குற்றவாளியால் போட்டியிட முடியாது என்றே அர்த்தம். எனவே ஜெயலலிதாவின் தண்டனை காலத்தை தவிர்த்து இப்போதுள்ள சூழ்நிலையை வைத்து பார்த்தாலும் கூட இன்னும் 2 சட்டமன்றத் தேர்தல்களில் ஜெயலலிதாவால் போட்டியிட முடியாது.

 

http://tamil.oneindia.in/news/india/jayalalitha-can-t-contest-elections-6-years-211838.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
Link to comment
Share on other sites

பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார் ஜெயலலிதா!

 

 

பெங்களூர்: சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட முதல்வர் ஜெயலலிதா பெங்களூர் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு கடந்த 18 ஆண்டுகளாக நடந்தது. இந்த வழக்கை விசாரித்து வந்த பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது.

 

முதலில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் குற்றவாளி என்று நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா அறிவித்தார். அதன் பிறகு மாலை 5 மணியளவில் தண்டனை அறிவிக்கப்பட்டது. ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அவருக்கு ரூ.100 கோடி அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட உடனேயே பெங்களூர் போலீசார் ஜெயலலிதாவை தங்கள் பொறுப்பில் எடுத்தனர்.

 

27-parappana-agrahara-jaya-600.jpg

 

இந்நிலையில் சிறை தண்டனை அறிவிக்கப்பட்டதும் அவர் பரப்பன அக்ரஹாராவில் அமைந்துள்ள பெங்களூர் மத்திய சிறைச்சாலையில் அடைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. முன்னதாக சிறைச்சாலை வளாகத்திலுள்ள மருத்துவமனையில் ஜெயலலிதாவுக்கு மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டன. அதேபோல, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கும் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. அதன்பிறகு சிறையில் அடைக்கப்பட்டனர்.

 

ஜெயலலிதாவை சிறையில் அடைத்தது குறித்து அறிந்த அதிமுகவினர் கண்ணீர் விட்டு அழுதனர். சிறப்பு நீதிமன்றம் அமைந்துள்ளது பெங்களூரில் என்பதால் நீதிமன்ற எல்லைக்கு உட்பட்ட சிறையில் ஜெயலலிதா உள்ளிட்ட மூவரும் அடைக்கப்பட்டுள்ளனர். எனவேதான் சென்னை சிறைக்கு அழைத்து வரவில்லை என்று சட்ட வல்லுநர்கள் தெரிவித்தனர். கர்நாடக உயர் நீதிமன்றத்தை அணுகி ஜாமீன் பெறும் வரை இந்த சிறையில் தான் ஜெயலலிதா உள்பட 4 பேரும் அடைக்கப்பட்டிருப்பர். அது எத்தனை காலம் ஆனாலும்...

http://tamil.oneindia.in/news/india/jaya-locked-behind-bars-211840.html

Link to comment
Share on other sites

அ.தி.மு.க தலைவர் சிறையில், தி.மு.க உட்கட்சி பிரச்சனை.. தனது கட்சியை வளர்க்க காவிக்காரர்கள் (பா.ஜ.க) இதை சரியான் தருணமாக கருதி, சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி ஆட்சியைக் கலைக்காமல் இருக்க வேண்டும். ஏற்கனவே சு.சாமி தனது திருவாயை மலர்ந்து தமிழ்நாட்டில் புலி, இஸ்லாமிய தீவிரவாதம், நக்சலைட் என சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டது. இரண்டு வாரங்களில் ஆட்சி கலைக்கப்படும் என்று சொல்லிவிட்டார்.

சந்தோசப்படக் கூடிய ஒரு விடயம்:
குற்றவாளி தண்டிக்கப்பட்டுவிட்டார். (ஆனால் தமிழக மக்கள் அவரை குற்றம் செய்தவராக எண்ணிய நாட்கள் எல்லாம் போயி இப்பொழுது அனுதாபமாக பார்க்கிறார்கள்)

வருத்தப்படக் கூடிய விடயம்:
தமிழகத்தின் தேவைகளையும், எண்ணங்களையும் டெல்லிக்கு அஞ்சாமல் சொல்லக்கூடிய ஒரு தலைமை இல்லாமல் போய் அல்லக் கைகளின் ஆட்டம் அதிகமாகிவிடும். டெல்லிக்கு சாதகமாகி விடும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அ.தி.மு.க தலைவர் சிறையில், தி.மு.க உட்கட்சி பிரச்சனை.. தனது கட்சியை வளர்க்க காவிக்காரர்கள் (பா.ஜ.க) இதை சரியான் தருணமாக கருதி, சட்டம் ஒழுங்கை காரணம் காட்டி ஆட்சியைக் கலைக்காமல் இருக்க வேண்டும். ஏற்கனவே சு.சாமி தனது திருவாயை மலர்ந்து தமிழ்நாட்டில் புலி, இஸ்லாமிய தீவிரவாதம், நக்சலைட் என சட்டம் ஒழுங்கு கெட்டு விட்டது. இரண்டு வாரங்களில் ஆட்சி கலைக்கப்படும் என்று சொல்லிவிட்டார்.

சந்தோசப்படக் கூடிய ஒரு விடயம்:

குற்றவாளி தண்டிக்கப்பட்டுவிட்டார். (ஆனால் தமிழக மக்கள் அவரை குற்றம் செய்தவராக எண்ணிய நாட்கள் எல்லாம் போயி இப்பொழுது அனுதாபமாக பார்க்கிறார்கள்)

வருத்தப்படக் கூடிய விடயம்:

தமிழகத்தின் தேவைகளையும், எண்ணங்களையும் டெல்லிக்கு அஞ்சாமல் சொல்லக்கூடிய ஒரு தலைமை இல்லாமல் போய் அல்லக் கைகளின் ஆட்டம் அதிகமாகிவிடும். டெல்லிக்கு சாதகமாகி விடும்.

 

அதிமுக  உடைவு

கருணாநிதியின் ஊழல் மற்றும் தமிழ்த்துரோகப்போக்கு

காங்கிரசின் அழிவு...

 

எல்லாவற்றையும் கணக்கிட்டு

தமிழ்  உணர்வாளர்கள்  ஒன்றாகி  பலமானால்

தமிழக மக்கள் இவர்கள் பக்கம் திரும்பும் வாய்ப்புள்ளது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

இப்படி ஒரு எதிர்ப்பை.. முள்ளிவாய்க்காலில் எம்மினம் கருணாநிதியின் நயவஞ்சக யுத்த நிறுத்த அறிவிப்பால் அழிந்து கொண்டிருந்த போது.. அதிமுக வினர் செய்திருந்தால்.. இப்ப மனசு ஜெ வுக்காக கொஞ்சம் கசியும். ஆனால்...????????????????! :icon_idea::rolleyes:

Link to comment
Share on other sites

அதிமுக  உடைவு

கருணாநிதியின் ஊழல் மற்றும் தமிழ்த்துரோகப்போக்கு

காங்கிரசின் அழிவு...

 

எல்லாவற்றையும் கணக்கிட்டு

தமிழ்  உணர்வாளர்கள்  ஒன்றாகி  பலமானால்

தமிழக மக்கள் இவர்கள் பக்கம் திரும்பும் வாய்ப்புள்ளது

 

 

கொஞ்சமேனும் கொள்கைக்காக கட்சி நடக்குதேன்றால் அது ம.தி.மு.க தான். மற்றபடி தே.மு.தி.க, பா.ம.க அனைவரும் ஒரு ராஜ்யசபா இருக்கை கொடுத்தால் போதும் என்று இருப்பவர்கள். இவர்களால் உருப்படியாக யோசிக்கவும் முடியாது.. செய்யவும் முடியாது.

தமிழ் உணர்வாளர்கள்... ??!! இவர்கள் கருத்துக்களை விதைக்கலாம்.. அதன் மூலம் கட்சிகளுக்கு அழுத்தம் கொடுக்கலாம். ஆனால்  சாமானியர்களின் வாக்குகளை அறுவடை செய்ய முடியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவருக்கு (சுப்புக்கு) புலியை இழுக்காட்டி.. மகிந்த பிச்சை போடமாட்டார் போல. :D:lol:

Link to comment
Share on other sites

கொஞ்சமேனும் கொள்கைக்காக கட்சி நடக்குதேன்றால் அது ம.தி.மு.க தான். மற்றபடி தே.மு.தி.க, பா.ம.க அனைவரும் ஒரு ராஜ்யசபா இருக்கை கொடுத்தால் போதும் என்று இருப்பவர்கள். இவர்களால் உருப்படியாக யோசிக்கவும் முடியாது.. செய்யவும் முடியாது.

தமிழ் உணர்வாளர்கள்... ??!! இவர்கள் கருத்துக்களை விதைக்கலாம்.. அதன் மூலம் கட்சிகளுக்கு அழுத்தம் கொடுக்கலாம். ஆனால்  சாமானியர்களின் வாக்குகளை அறுவடை செய்ய முடியாது.

 

சாமானியர்களின் வாக்குகளை அறுவடை செய்ய.. ஒரு தகுந்த புறக்காரணி தேவையாக‌ இருக்கிறது.. :rolleyes:

 

பின்புலத்தில் இராணுவ உடையில் யாரோ வந்து போகிறார்கள்??

Link to comment
Share on other sites

சாமானியர்களின் வாக்குகளை அறுவடை செய்ய.. ஒரு தகுந்த புறக்காரணி தேவையாக‌ இருக்கிறது.. :rolleyes:

 

 

 

அந்தப் புறக்காரணி அவர்களின் அப்போதைய தேவைகளையும்/ உணர்வுகளையும்  சார்ந்தது...

Link to comment
Share on other sites

ஜெயலலிதாவுக்கு வழங்கிய தீர்ப்பை பட்டாசு வெடித்து கொண்டாடக்கூடாது -திமுகவினருக்கு கருணாநிதி வேண்டுகோள்

Link to comment
Share on other sites

ஜெயலலிதாவுக்கு வழங்கிய தீர்ப்பை பட்டாசு வெடித்து கொண்டாடக்கூடாது -திமுகவினருக்கு கருணாநிதி வேண்டுகோள்

பிறகு நான் உள்ளே போதும்போது அவர்களும் கொண்டாடிவிடுவர்கள்.. (சொல்லாமல் விட்டது)

Link to comment
Share on other sites

சரி... மேன்முறையீடு, உச்ச நீதி மன்றம், அதி உச்ச நீதிமன்றம்...என்றெல்லாம் இனி இழுத்தடிப்பு செய்ய முடியாதா? இந்திய அரசியல் வாதிகளில் இதில் கை தேர்ந்தவர்களாயிற்றே.......

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜெயலலிதாவுக்கு வழங்கிய தீர்ப்பை பட்டாசு வெடித்து கொண்டாடக்கூடாது -திமுகவினருக்கு கருணாநிதி வேண்டுகோள்.

 

மருந்து சாப்பிடும்போது குரங்கை நினைக்கக் கூடாது என்பது போல் உள்ளது.  நன்றாகப் பட்டாசு வெடுத்துக் கொண்டடுங்கள் என ஞாபகப் படுத்துகின்றார்...!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.