Jump to content

ஊடகத்தின் மேலான மிரட்டலும், பிரான்ஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவின் நிலைப்பாடும்


Recommended Posts

அன்பான தமிழீழமக்களே !

புலம்பெயர்ந்த தமிழீழ மக்களின் வாழ்வியலில், ஊடகங்கள் ஒரு வளர்ச்சிப்பாதையில் இருக்கின்றன. இன்றைய கணனி உலகில் ஒரு தனிமனிதன்; தனது கருத்துகளை இலகுவாக மற்றவருக்கு எடுத்துச்செல்கின்ற நிலையில், ஒரு பத்திரிகையின் கருத்தை கருத்து ரீதியாக எதிர்கொள்ளாது மிரட்டல் வன்முறை மூலம் எதிர்ப்பதை தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவானது முற்றும் முழுதாக நிராகரிக்கின்றது.

தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவானது பிரான்சு நாட்டில் பதிவு செய்ததோர் அமைப்பாக பிரெஞ்சு நாட்டு சட்டதிட்டங்களுக்கு மதிப்பளித்து அதற்குட்பட்ட அரசியல், சனநாயக மனிதநேய தொண்டர் அமைப்பாக அனைத்து செயற்பாடுகளை முன்னெடுத்து வருகின்றது என்பதை பிரெஞ்சு அரசும், எமது மக்களும் நன்கு அறிவார்கள். இந்த அரசியல் ரீதியான செயற்பாடுகள் சிங்கள அரசுக்கு சர்வதேச ரீதியில் பல அழுத்தங்களை ஏற்படுத்தியுள்ளது. சிங்கள தேசத்தில் தமிழ் மக்கள் அடக்கி ஒடுக்கப்பட்டு, சனநாயக உரிமை மறுக்கப்பட்டு, ஊடகங்கள், ஊடகவியாளர்கள் மிரட்டப்படுவதும், படுகொலை செய்யப்படுவதும் போலவே புலம்பெயர் நாடுகளிலும் ஆயுதக்கலாச்சாரத்தை முன்னெடுத்து வருகின்றது. அந்த வகையில் 2012 இல் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுப் பொறுப்பாளர் கேணல் பரிதி அவர்களை சிங்களம் பலி எடுத்திருந்தது. அதனுடைய தொடர்ச்சியாகவே இதனையும் நாம் பார்க்கின்றோம்.

சிறீலங்கா அரசானது எல்லாளன் படை என்கின்ற பெயரில் மக்களைக் கொலை செய்து பல துன்பங்களையும் தந்து தமிழீழ விடுதலைப்புலிகளுக்கும் தமிழீழ விடுதலைப்போராட்டத்திற்கும் அவப்பெயரினை பெற்றுத்தந்தது வரலாறு. அதே போன்ற முறையில் புலம் பெயர் மண்ணில் இந்த அணுகுமுறை தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவை பயங்கரவாதப்பட்டியலிட்டு விட்டு அதனை உறுதி செய்ய எல்லாளன் படை ஊடாக ஆயுதமிரட்டல் செய்து ஊடக இல்லத்தின் ஆவணங்களை தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவிடம் கையளிக்கச் சொல்வது தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவை பயங்கரவாத அமைப்பாக சர்வதேசரீதியில் காட்ட முற்படுவதாகவே பார்க்கின்றோம்.

நீண்ட காலமாக (1995 ம் ஆண்டு முதல்) ஈழமுரசுப்பத்திரிகையானது உலகத் தமிழர்கள் மத்தியிலே அர்ப்பணிப்புடன் செயற்பட்டு சிங்களத்தின் கொலைக்கரங்களால் அதன் ஆசிரியர் மாவீரர் கப்டன் கஐன் அவர்களின் உயிர் பறிக்கப்பட்டும் இன்று வரை பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் பிரெஞ்சு வாழ் தமிழ்மக்களுக்கு தனது சேவையை செய்துவருகின்றது. என்பதை அனைவரும் அறிவார்கள். ஒரு பத்திரிகை ஸ்தாபனமானது தனது முடிவை தீர்மானிப்பது பத்திரிகையின் குழுமத்திற்குரிய உரிமையாகும். ஆனால் அப்பத்திரிகை ஆயுத மிரட்டல் மூலம் நிறுத்தப்படுவதானது மிகுந்த வருத்தத்திற்குரியதாகும்.

கடந்த 24.09.2014 அன்று பிரெஞ்சு பாராளுமன்றத்தில் தமிழர் ஆரதவு பாராளுமன்ற உறுப்பினர் குழுவினருடனான சந்திப்பு பாராளுமன்றத்திற்குள் நடைபெற்றபோது அதில் கலந்து கொண்ட அனைத்து தமிழர் அமைப்புகளும் சில விடயங்களை முன்வைத்திருந்தன. அதில் முக்கியமாக 2012ல் பிரான்சில் படுகொலை செய்யப்பட்ட கேணல் பரிதி அவர்களின் படுகொலைக் குற்றவாளியை கண்டு பிடிக்க தாமதிப்பது பற்றியும் அதனைத்தொடர்ந்து மீண்டும் ஓர் ஆயுதமிரட்டல், ஊடகவியலாளர் மீதான அச்சுறுத்தல் பற்றி அவர்கள் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இங்கு தமிழர் வாழ்வுக்கான பாதுகாப்பில் உள்ள அச்சத்தை வெளிப்படுத்தியதோடு அதற்கான பாதுகாப்பை எங்களுக்கு உறுதி செய்யும் படியும் கேட்டுக்கொள்ளப்பட்டது.

பிரான்சு தமிழர் ஊடகஇல்லம் மீதான அச்சுறுத்தலையும், தமிழர் தாயகத்தில் ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்படுவதும், கடத்தப்படுவதும், காணாமல் போவதும் சர்வதேசமெங்கும் கருத்துச்சுதந்திரம் மறுக்கப்பட்டு பத்திரிகையாளர்கள் படுகொலைசெய்யப்படுவதும், கண்டிக்கப்பட வேண்டியவைகளாகும்.

அந்த வகையில் கடந்த 18.09.2014 ஊடகவியலாளர்கள் மீதான மிரட்டல் கண்டனத்துக்குரியது என்பதை தமிழர் ஒருங்கிணைப்புக்குழு தெரிவித்துக்கொள்கின்றது.

                                                            “தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம்”

தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – பிரான்சு

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நமக்குள் இருக்கும் பிளவுகளை  வைத்து எவரோ புகுந்து விளையாடுகிறார்கள்...

இதில் சம்பந்தப்பட்டவர்கள் மிகவும் சாதாரணமானவர்கள் போல தெரிகிறது

அவர்களது செயல்களே எம்மை ஆட்டங்காண  வைக்கின்றன என்றால்

அவர்கள் பலசாலிகள் என்பதல்ல அர்த்தம்

அந்தளவுக்கு  நாம் பலமிளந்துள்ளோம் என்பதே அர்த்தம்

இதை நாம் உணர்ந்து

ஒன்றுபடாதவரை...........??? :(  :(  :(

Link to comment
Share on other sites

எல்லாம் நாங்களே யாரிடம் முறையிடுவது இறைவா ....மாவீரர் நாள் நெருங்குது அடுத்த ரவுண்டு ஆரம்பிச்சாச்சு அருமை ஓங்குக ஒற்றுமை .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"செல்லம், நான் அடிக்கிற மாதிரி அடிப்பனாம். நீ அழுகிற மாதிரி அழுவியாம்" என்ற விளையாட்டாக இருக்கே :blink:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பத்திரிகையாளன் எந்த மிரட்டலுக்கும் பயப்பிடமாட்டான். அதுவும் பிரான்ஸ்போன்ற ஐரோப்பிய தேசத்தில் பத்திரிகையாளர்களுக்கு நல்ல மரியாதை உண்டு.பத்திரிகை நடாத்த காசு இல்லையென்று நேரடியாகச் சொல்ல வேண்டியதுதானே!!!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

    • இந்த நியாயத்தை சொன்னவர் தான் எதை சொன்னாலும் அதை அப்படியே சாப்பிட ஆட்கள் உள்ளனர் என தெரிந்தே சொல்கிறார்🤣. பயிற்று மொழிதொகு அதிக அளவிலான தனியார் பள்ளிகள் ஆங்கிலத்தைப்பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. அதே வேளையில் அரசுப் பள்ளிகள் தமிழை முதன்மைப் பயிற்று மொழியாகக் கொண்டுள்ளன. மேலும், நடுவண் அரசால் நடத்தப்படும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகள் ஆங்கிலத்தையும் இந்தியையும் பயிற்றும் மொழியாகக் கொண்டுள்ளன. https://ta.m.wikipedia.org/wiki/தமிழ்நாட்டில்_கல்வி சீமான் பள்ளி படிப்பு தமிழில்தானே? நல்லாத்தானே தமிழ் பேசுறார்? அதிலே சேர்த்திருக்கலாம். ஒட்டு மொத்த தமிழ்நாட்டில் தமிழில் படிக்க சரியான பள்ளி இல்லை என்பதை எதையும் தாங்கும் புலன்பெயர்ந்தோர் ஏற்கலாம். தமிழ்நாட்டு மக்கள்?  
    • யாழ்களத்தில் சீமான் தொடர்பாக ஆதரவு எதிர்ப்புனு இரு பிரிவுகள் உண்டு. இரண்டுக்கும் தொடர்பில் இல்லாமல் பொதுவான சில விசயங்கள். சீமான் மீதான ஆதரவு ஈழதமிழருக்காக அவர் குரல் எழுப்புவதால் அவர் எமக்கு ஏதும் செய்யக்கூடிய வலிமை உள்ளவர் என்று நம்புகிறோம். சீமான் கட்சி தமிழகத்தில் ஆட்சியமைக்கும் அவர் தமிழக முதல்வரானால் நாம்  ஈழத்தில் வலிமைபெற அது பெரிதும் உதவும் என்றும் நம்மில் சிலர் நம்புகிறோம். தமிழகம் என்பது இந்திய மத்திய அரசின் நேரடி மறைமுக ஆளுகைக்குட்பட்டயூனியன் பிரதேசங்களுட்பட்ட  36 மாநிலங்களில் ஒன்று, மாநிலங்களுக்குள்ளேயுள்ள அரசியல் காவல்துறை நீதி பொது போக்குவரத்தில் மத்திய அரசு ஒருபோதும் தலையிடாது. ஆனால் மாநிலத்தை கடந்து இன்னொரு விஷயத்தில் அங்கு ஆட்சியிலிருப்பவர்கள் இருக்கபோகிறவர்கள் எது செய்வதென்றாலும் மத்திய அரசின் அனுமதியின்றி எதுவுமே செய்ய முடியாது, செய்வதென்றால் மத்திய அரசின் அனுமதி பெற்றே ஆகவேண்டும், அதையும்மீறி எதுவும் செய்தால் சட்ட ஒழுங்கை மீறியவர்கள் இந்திய ஒருமைப்பாட்டை துஷ்பிரயோகம் செய்தவர்கள் என்று காரணம் சொல்லி ஆட்சியை கலைக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் உண்டு. அது எவர் முதல்வராக இருந்தாலும் அதுதான் நிலமை. எம் விஷயத்தில் யாரும் உதவுவதென்றாலும் இந்திய வெளியுறவுதுறையின் அனுமதி இன்றி இம்மியளவும் எம் பக்கம் திரும்ப முடியாது, எம் விடயத்தில் தலையிடுமாறு கடிதங்கள் மட்டும் வேண்டுமென்றால் மத்திய அரசுக்கு எழுதிவிட்டு காத்துக்கொண்டிருக்கலாம். காலம் காலமாக நடப்பதும் அதுதான்  நடக்க போவதும் அதுதான். மத்திய அரசை அழுத்தம் கொடுத்து வேண்டுமென்றால் எதாவது செய்ய பார்க்கலாம், அப்படி எம் விஷயத்தில் அழுத்தம் கொடுக்க மாநிலத்தில் ஆட்சி கலைக்கப்பட்டாலும் மீண்டும் படுத்தபடியே ஆட்சியை பிடிக்கும் வல்லமை அந்த கட்சிக்கு இருக்கவேண்டும் , அந்த வலிமை இருந்த ஒரேயொரு முதல்வர் எம்ஜிஆர் மட்டுமே  அவரால்கூட எம் விஷயத்தில் மத்திய அரசை அழுத்ததிற்குள் கொண்டுவந்து எமக்கு எதுவும் செய்யவைக்க முடியவில்லை, இதுவரை ஓரு சில தொகுதிகள்கூட ஜெயித்திராத சீமான் இனிமேல் அதிமுக, திமுக, இப்போ விஜய் என்று பாரம்பரிய மற்றும் திடீர் செல்வாக்கு பெற்ற கட்சிகள் என்று அனைத்தையும் துளைத்து முன்னேறி தமிழக ஆட்சியை பிடித்து அரியணையேறுவது சாத்தியமா? சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழீழ தமிழரின் ஆசையா இருந்து எந்த காலமும் எதுவும் ஆகபோவதில்லை, சீமான் தமிழக முதல்வராக வேண்டுமென்பது தமிழக மக்களில் பெரும்பான்மையினரின் ஆசையா இருக்கவேண்டும், அந்த ஆசை அங்கே நிலவுகிறதா? யதார்த்தங்களை புரியாது வெறும் உணர்ச்சி அடிப்படையில் ஆதரவு எதிர்ப்பு என்று நிற்பது எம்மிடையே பிளவுகளை வேண்டுமென்றால் அதிகரிக்கலாம், சீமானின் வாக்கு வங்கியை ஒருபோதும் அதிகரிக்காது. உணர்ச்சி பேச்சுக்களால் எதுவும் ஆகபோவதில்லை என்று உறுதியாக நம்பியதால்தான் எமது தலைமைகள் ஆயுதம் ஏந்தின, அவர்கள் போன பின்னர் மீண்டும் உணர்ச்சி பேச்சுக்களை நம்பி எமக்குள் நாமே முட்டிக்கிறோமே,  நாம் எமது தலைமையை அவர்கள் சொல்லிபோன  வழியை/வலியை அவமதிக்கிறோமா?
    • என்னுடைய மகன்கள் இருவரும் (வளர்ப்பு மகன் உட்பட) ஆங்கில வழிக் கல்வியில்தான் படிக்கின்றனர். இதற்காக நான் அவமானப்படுகிறேன். என் பிள்ளைகள் தமிழ்ப் படிக்க தமிழ்நாட்டில் பள்ளிகளே இல்லை. நாங்கள்தான் வீட்டில் அவர்களுக்கு தமிழைச் சொல்லிக் கொடுக்கிறோம். இவ்வாறு சீமான் கூறினார்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.