Jump to content

சிவாஜி கணேசன் ரசிகர்களுடன் ஒரு நீயா நானா!


Recommended Posts

https://www.youtube.com/watch?v=kNskMory0aE

Link to comment
Share on other sites

  • Replies 444
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

 

 ஒரு காலத்திலை இதுவும் மார்க்கமான வயாகரா பாட்டு... :)

Link to comment
Share on other sites

அருமையான ஒரு தத்துவப் பாடல்

 

"நித்தம் நித்தம் மாறுகின்றது எத்தனையோ? - நெஞ்சில்
 நினைத்ததிலே நடந்ததுதான் எத்தனையோ?
 கோடுபோட்டு வாழ்ந்தவர்கள் எத்தனையோ?
 குறியும் தவறிப் போனவர்கள் எத்தனையோ?''

 

http://youtu.be/vVffTg8AoWY

 

இப் பாடலை எழுதியவர் கண்ணதாசன் என பலர் தவறாக குறிப்பிடுகின்றனர். இதை எழுதியவர் கவிஞர் மாயவநாதன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

பணம் என்னடா பணம் பணம்...
குணம் தானடா நிரந்தரம்...
 
பொன்னுலகில் நீராடினேன்
கண்ணிழந்து கொண்டாடினேன்
மன்னனுக்கும் மேலாகினேன்
தன்னந்தனி ஆளாகினேன்
இரக்க மனத்தை கெடுக்கும் அரக்கன்
பணம் பணம் பணம் ஆ...
 
காசு என்ற சொல்லின் பொருள் குற்றம் என்பது
காசு வர ஓடி விடும் சுற்றம் என்பது
நாணயம் என்றால் அதன் பேர் நேர்மை என்பது
நல்லவர்க்கு காசு பணம் தேவையற்றது
பகவானின் மணியோசை கேட்கின்றது
பணம் என்னும் பேராசை மறைகின்றது
 
நல்ல புத்தி யார் தந்தது...
பிள்ளையிடம் தான் வந்தது...
 
எந்த நிலை வந்தால் என்ன
நல்ல வழி நான் செல்வது
இரக்க மனத்தை கெடுக்கும் அரக்கன்
பணம் பணம் பணம் ஆ...

 

Link to comment
Share on other sites

http://www.youtube.com/watch?v=E84Z2O9oypc

 

 

 

மயக்கம் எனது தாயகம்
மவுனம் எனது தாய் மொழி
கலக்கம் எனது காவியம்
நான் கண்ணீர் வரைந்த ஓவியம்
 
பகலில் தோன்றும் நிலவு
கண் பார்வைக்கு மறைந்த அழகு
திரை மூடிய சிலை நான்
துன்பச் சிறையில் மலர்ந்த மலர் நான்
 
நானே எனக்கு பகையானேன்
என் நாடகத்தில் நான் திரையானேன்
தேனே உனக்குப் புரியாது
அந்தத் தெய்வம் வராமல் விளங்காது
 
விதியும் மதியும் வேறம்மா
அதன் விளக்கம் நான் தான் பாரம்மா
மதியில் வந்தவள் நீயம்மா
என் வழி மறைத்தாள் விதியம்மா..
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

https://www.youtube.com/watch?v=lR__g50XI8U&index=9&list=PLNkta47zITlVRIb27Z4RpQphSMbIAvmdT

 

பார்த்து போ பார்த்து போ
நீ நடந்து போகும் சாலையிலே உன் நண்பரும் வரக்கூடும் சில நரிகளும் விளையாடும்
 
எவனெவன் மனதில் என்னென்ன இருக்கும் எவனுக்கடா தெரியும்
அட இன்றைய மனிதன் நாளைய திருடன் அவனுக்குத்தான் புரியும் அவனுக்குத்தான் புரியும் 
 
 
கடலுக்குள்ளே மனிதன் வீழ்ந்தால் மீனுக்கு உணவாகும் மீன் கரையைதேடி துள்ளி விழ்ந்தால் மனிதனுக்கு உணவாகும்
 
எவனுக்கு எவ்வளவு அது அவனவன் மனத்தளவு
 
பார்த்ததும் கிடைப்பதும் போதுமென்றால் பகலிலும் தூக்கம்வரும்
 
பணம் இன்னும் இன்னும் என்றே அலைந்தால் இரவிலும் ஏக்கம் வரும் எந்நிதியிருந்தாலும் வாழ்க்கையில் நிம்மதி வேண்டுமடா
 
நாளைக்கு நீயே ஆட்சிக்கு வந்து ராஜாவாகக்கூடும் உன் நல்லவை கெட்டவை அன்று சாட்சியம் தரக்கூடும்
 
 
   பார்த்து போ பார்த்து போ
நீ நடந்து போகும் சாலையிலே உன் நண்பரும் வரக்கூடும் சில நரிகளும் விளையாடும்
 
 
 
 
Link to comment
Share on other sites

வளர்பிறை படத்தில் பூஜ்ஜியத்துக்குள்ளே ஒரு ராஜ்ஜியத்தை ஆண்டுகொண்டு....... என்ற சிறந்த பாடல் உண்டு முடிந்தால் யாராவது பதிவிடுங்கள் நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வசந்தமாளிகையில், யாருக்காக இது யாருக்காக என்ற பாடல். முதல் எடுத்த பிரதியில், இந்த பாடல் முடிய சிவாஜி கணேஷன் இறப்பதாக காட்சி எடுத்திருந்தார்கள். பல ரசிகர்களால் சிவாஜி படத்தில் இறப்பதை ஏற்று கொள்ள முடியவில்லை. ரசிகர்களின் எதிர்ப்பினால், காட்சி மாற்றப் பட்டு, நஞ்சரிந்தின சிவாஜி உயிர் தப்பினார். இதில் சிவாஜி பேசும் ஒரு வசனம் " நீ வந்துகிட்டே இருக்கிறாய், நான் போய் கிட்டே இருக்கின்றேன்".

மரணம் எனும் தூது வந்தது

அது மங்கை எனும் வடிவில் வந்தது

சொர்க்கமாக நான் நினைத்தது

இன்று நரகமாக மாறி விட்டது

http://www.youtube.com/watch?v=DDP0_Mpqd80

Link to comment
Share on other sites

கற்பாம் மானமாம் கண்ணகியாம் சீதையாம் கடைத்தெருவில்.... எங்கள் தங்கராஜா படத்தில்

Link to comment
Share on other sites

வளர்பிறை படத்தில் பூஜ்ஜியத்துக்குள்ளே ஒரு ராஜ்ஜியத்தை ஆண்டுகொண்டு....... என்ற சிறந்த பாடல் உண்டு முடிந்தால் யாராவது பதிவிடுங்கள் நன்றி

 

நீங்கள் கேட்ட பாடல் ஒரு அருமையான பாடல், ஆனால் அந்த பாடல் காணொளி வடிவில் இல்லை. ஒலி வடிவில் இருக்கிறது.

 

உங்கள் வரவுக்கும் கருத்துகளுக்கும் நன்றி காரணிகன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

https://www.youtube.com/watch?v=VDe4s49DqMs

 

சொல்லாதே யாரும் கேட்டால்
எல்லோரும் தாங்க மாட்டார்…
 
வீடெங்கும் திண்ணை கட்டி வெறும் பேச்சு வெள்ளை வேட்டி
சோம்பலில் மனிதன் வாழ்ந்தால் சுதந்திரம் என்ன செய்யும் ?
சுதந்திரம் என்ன செய்யும் ?
 
உரிமையோ உரிமை என்று ஊரெங்கும் மேடை போட்டான்
கடமையோ கடமை என்று காரியம் செய்தால் என்ன..
காரியம் செய்தால் என்ன…?
 
விதியென்று ஏதும் இல்லை வேதங்கள் வாழ்க்கை இல்லை
உடலுண்டு உள்ளம் உண்டு முன்னேறு மேலே.. மேலே..
முன்னேறு மேலே மேலே...
 
சொல்லாதே யாரும் கேட்டால்
எல்லோரும் தாங்க மாட்டார்…

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.