Jump to content

ஈழமுரசு மீதான தாக்குதல் என்பது தமிழ் இனம் சந்திக்கப்போகும் பேரழிவின் ஆரம்பம்


Recommended Posts

ஊடகத்துறை மீதான வன்முறைகளிற்கு முகம்கொடுப்பது என்பது ஈழத்தமிழ் மக்களுக்கு ஒரு தொடர் அச்சுறுத்தலாகவே உள்ளது. அதிலும் குறிப்பாக தமிழ்த் தேசிய ஊடகத்துறை மீதான அச்சுறுத்தல்களும் வன்முறைகளுமே அதிகமானது. தாய்நாட்டில் வைத்து எம்மீது பிரயோகிக்கப்பட்ட வன்முறைகள்; தற்போது அகதிகளாக வந்து தஞ்சமடைந்துள்ள புலம்பெயர் நாடுகளிலும் பரவியுள்ளது.
 
2009 ஆண்டில் எமது இனம் முள்ளிவாய்காலில் சந்தித்த இழப்பின் பின்னர், தமிழ்த் தேசிய விடுதலைப்போராட்டத்தின் நகர்வுத்திறன் புலம்பெயர் தமிழ் மக்களிடமும், உலகத் தமிழ் மக்களிடமுமே செறிந்துள்ளது. அதனை நன்கு புரிந்துகொண்ட எதிரியானவன் தற்போது தமிழ் தேசியத்தின் குரலை முற்றாக நிறுத்தும் முயற்சிகளை மேற்கொண்டுள்ளான். அதன் வெளிப்பாடு தான் பாரம்பரிய தமிழ்த் தேசிய அச்சு ஊடகமான ஈழமுரசு மீதான ஆயுத வன்முறை.

1987 ஆம் ஆண்டு இந்திய படையினர் தமிழ் மக்கள் மீது போரை ஆரம்பிப்பதற்கு முன்னரும் ஈழநாதம் மற்றும் முரசொலி ஆகிய ஊடகங்களை குண்டு வைத்து தகர்த்தபின்னரே தமது தாக்குதல்களை ஆரம்பித்திருந்தனர்.

தமிழ் மக்கள் மீதான மிகப்பெரும் வன்முறைகளை மேற்கொள்வதற்கு முன்னர் எப்போதும் எதிரியானவன் எமது ஊடகங்களையே முதலில் குறிவைப்பதுண்டு.
ஒரு கருத்தை கருத்தால் வெல்லமுடியாத கோழைத்தனமான இந்த செயல் வன்மையாக கண்டிக்கப்படவேண்டியதொன்று. தமிழீழத்தில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பான விசாரணைகளை ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணைக்குழு முன்னெடுத்துவரும் நிலையில் அதற்கான ஆதரவுகளை தமிழத் தேசிய ஊடகங்களே வழங்கி வருகின்றன.

சாட்சியங்களை திரட்டுதல், மக்களுக்கு உதவுதல், அவர்களை வழிநடத்துதல் போன்ற நடைவடிக்கைகளை மேற்கொள்வதற்கு எமக்கு பலமான தேசியம் சார்ந்த ஊடகங்கள் அவசியம். ஆனால் இந்த தருணத்தில் விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவின் உத்தியோகபூர்வ ஊடகமாக விளங்கிய ஈழமுரசு முடக்கப்பட்டுள்ளது.

ஒரு அச்சு ஊடகத்தின் மகத்துவத்தை புரிந்து கொண்ட பிரித்தானியாவைத் தளமாகக் கொண்ட பி.பி.சி ஊடகம் கூட அதற்கு முக்கியத்துவம் கொடுத்து செய்திகளை வெளியிட்டிருந்தது. ஆனால் புலம்பெயர் நாடுகளில் உள்ள தமிழ் அமைப்புக்களோ (தமிழர் ஒருங்கிணைப்பு குழுவைத்தவிர) அல்லது ஊடக அமைப்புக்களோ தொடர் மௌனம் காப்பது தேசியம் தொடர்பான அவர்களின் இரட்டை வேடங்களை அம்பலப்படுத்தியுள்ளது.

எமக்குள் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம், அதனை கருத்துக்களால் நாம் எதிர்கொள்ளவேண்டுமே தவிர ஆயுதமுனை மிரட்டல்களை வரவேற்று கைகட்டி மௌனம் காப்பது என்பது கண்டனத்திற்குரியது.

இன்று ஈழமுரசு மீது காட்டப்பட்ட துப்பாக்கி நாளை ஏனைய ஊடகங்கள் மீது பாய்வதற்கு அதிக காலம் எடுக்கப்போவதில்லை அல்லது அவர்களின் வலைக்குகள் நீங்கள் வீழ்வதற்கு அதிக நேரம் செல்லப்போவதில்லை.

ஈழமுரசு மீதான தாக்குதல், அச்சுறுத்தல் என்பது இன்று மட்டும் நிகழவில்லை, 1990 களில் கூட ஈழமுரசின் ஆசிரியர் பிரான்ஸ் இல் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார். அதன் பின்னர் தேசியச் செயற்பாட்டாளர் பரிதி அவர்களும் சுடப்பட்டார். அதற்கான காரணம் தமிழீழ விடுதலை தொடர்பில் செயற்பட்டதே தவிர வேறு எதுவும் இல்லை.

ஈழமுரசின் முடக்கம் என்பது முள்ளிவாய்க்காலின் பின்னர் எமது விடுதலைப்போர் சந்தித்த மற்றுமொரு பலத்த பின்னடைவாகும். இதன் மூலம் தமிழ் மக்களின் உளவுறுதி சிதறடிக்கப்பட்டுள்ளது. அதனைக் கண்டும் காணாததுபோல் இயங்கும் தமிழ் அமைப்புக்கள், ஊடகங்கள் மற்றும் ஊடக அமைப்புக்கள் ஆகியவற்றின் செயற்பாடுகள் என்பது தமிழ்த்தேசியத்தின் அழிவுக்கு துணைபோவதாகவே கருதப்படவேண்டும்.

எனவே தமிழ் மக்கள் ஒன்றை நன்கு உணர்ந்துகொள்ள வேண்டும் அதாவது எதிரியை மட்டும் இனங்காண்பது எமது போராட்டத்திற்கு வலுச்சேர்க்கப்போவதில்லை, எதிரியின் நடைவடிக்கையை வரவேற்பவர்களையும் இனங்காணுங்கள் அதன் மூலம் தான் எமது போராட்டத்தை காத்திரமான வழியில் உறுதியாக நகர்த்த முடியும்.

தமிழ் மக்களின் பாரம்பரிய அச்சு ஊடகம் மீதான சிறீலங்கா அரச பயங்கரவாதத்தின் தாக்குதலை ஈழம்ஈநியூஸ் மிக வன்மையாக கண்டிப்பதுடன், அதனை மேற்கொண்டவர்கள் பிரான்ஸ் நாட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்படவேண்டும் என்பதிலும் உறுதியாக நிற்கின்றது.

ஈழம்ஈநியூஸ். http://www.pathivu.com/news/34169/57//d,article_full.aspx

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழ்நாடு ஒரு மாநிலம்  தமிழ்நாடு தனிநாடு இல்லை  தமிழ்நாடு வெளிநாட்டு கொள்கையில் 1% கூட. இதுவரை பங்களிப்புகள் செய்யவில்லை   செய்ய முடியாது  தமிழ்நாடு இந்தியா மத்திய அரசாங்கத்தினால் ஆளப்படுகிறது  தமிழ்நாட்டில்,.சீமான் கமல்   விஐய்.  ஸ்டாலின் உதயநிதி   நெடுமாறன். வைகோ      கருணாநிதி  எம் ஜி” ஆர்    அண்ணா,.......இப்படி எவர் முதல்வர் பதவியில் இருந்தாலும்   வெளிநாட்டுத்தமிழராகிய. இலங்கை தமிழருக்கு 1% கூட பிரயோஜனம் இல்லை    தமிழ்நாட்டில் 7 கோடி தமிழனும் தமிழ் ஈழம்  மலர வேண்டும் என்று ஆதரித்தாலும்.  தமிழ் ஈழம்  கிடைக்காது  எனவே… ஏன் குதிக்க வேண்டும்???  இந்த சீமான் ஏன் குதிக்கிறார??  என்பது தான் கேள்வி??  ஆனால்  சீமான்  தமிழ்நாட்டில் அரசியல் செய்யலாம்  முதல்வராக வரலாம்”   தமிழ்நாட்டு மக்களுக்கு சேவை செய்யலாம்    எங்கள் ஆதரவு 100% உண்டு”   கண்டிப்பாக ஆதரிப்பேன் ஆனால்  இலங்கை தமிழருக்கு  அது செய்வேன் இது செய்வேன்   என்று  ஏமாற்றக்கூடாது 😀
    • பகிர்வுக்கு நன்றி ஏராளன் ........!   🙏
    • என‌க்கு தெரிஞ்சு கேலி சித்திர‌ம் வ‌ரைவ‌து உண்மையில் த‌மிழ் நாட்டில் வ‌சிக்கும் கார்ட்டூன் பாலா தான்...............த‌மிழ் நாட்டில் நிக்கும் போது ச‌கோத‌ர் காட்டூன் பாலா கூட‌ ப‌ழ‌கும் வாய்ப்பு கிடைச்ச‌து ப‌ழ‌க‌ மிக‌வும் ந‌ல்ல‌வ‌ர்............அவ‌ர் வ‌ரையும் சித்திர‌ம் அர‌சிய‌ல் வாதிக‌ளை வ‌யித்தில் புளியை க‌ரைக்கும்.....................
    • கலியாணம் என்பது சடங்குதானே. பிராமண ஐயரின் நிறத்தில், கனிவான முகத்துடனும், சில சமஸ்கிருதச் சுலோகங்களைச் சொல்லும் திறனும் இருந்தால் சடங்கைத் திறமாக நடாத்தலாம்! தேங்காயை பூமிப்பந்தை மத்தியரேகையில் பிளப்பதைப் போல சரிபாதியாக உடைக்காமல், விக்கிரமாதித்தனின் தலையை சுக்குநூறாக உடைப்பேன் என வேதாளம் வெருட்டியதை நீங்கள் தேங்காய் மீது செயலில் காட்டியிருக்கின்றீர்கள்😂
    • உங்க‌ளை மாதிரி ஆறிவிஜீவி எல்லாம் த‌மிழீழ‌ அர‌சிய‌லில் இருந்து இருக்க‌ வேண்டிய‌வை ஏதோ உயிர் த‌ப்பினால் போதும் என்று புல‌ம்பெய‌ர் நாட்டுக்கு ஓடி வ‌ந்து விட்டு அடுத்த‌வைக்கு பாட‌ம் எடுப்ப‌து வேடிக்கையா இருக்கு உற‌வே ஒன்னு செய்யுங்க‌ளேன் சீமானுக்கு ப‌தில் நீங்க‌ள் க‌ள‌த்தில் குதியுங்கோ உங்க‌ளுக்கு முழு ஆத‌ர‌வு என் போன்ற‌ முட்டாள்க‌ளின் ஆத‌ர‌வு க‌ண்டிப்பாய் த‌ருவோம்..........................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.