Jump to content

மாட்டிறைச்சியும் மதமும்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

மாட்டிறைச்சியும் மதமும்

வணக்கம் ஜெயமோகன்

நான் தங்கள் தளத்தை தொடர்ந்து படித்து வருகிறேன். ஏற்கனவே ஒரு சிலமுறை கேள்வி கேட்டுள்ளேன். இந்து மதம்தொடர்பாக நீங்கள் விரிவாக எழுதியுள்ளதால் இதை இதை உங்களிடம் கேட்கிறேன்.ஏன் இந்து மதத்தில் பசுவுக்கு மட்டும் இவ்வளவு முக்கியதுவம் தரப்படுகிறது. என்னை பொருத்த வரை புலால் மறுத்தல் தன் அனுபவத்தின் மூலம்வரும் என்றால் மதிக்கதக்கதுதான். ஆடு மாடு போல தானே பசுவும். அதுவும் இவைகள் மாதிரி ஒரு உயிர் தானே.

ஆனால் மற்ற உயிர்களை விட நமது முன்னோர்கள்பசுவுக்கு மட்டும் இவ்வளவு முக்கியதுவம் கொடுப்பது ஏன்? அதுவம்மாட்டுக்கறி சாப்பிடுவோரை பெரிய பாவிகள் மாதிரி மற்றவர்கள் பார்ப்பதுமனசை உறுத்துகிறது. என்னமோ நம்ம எல்லாம் பெரிய புத்தர் மாதிரி. இதற்குபதிலை இணையத்தில் தேடினேன். ஒரு பக்கம் மாட்டு சாணம், மூத்திரத்திற்குகூட விஞ்ஞான விளக்கம் கொடுத்து அதை புனிதப்படுத்தும்ஆர்.எஸ்.எஸ்காரர்கள். இதே விளக்கத்தை மனிசனோட மூத்திரத்திற்கு கூடகொடுத்து விடலாம். இதற்கு உதவிக்கு மொராஜி தேசாய் அவர்களை அழைத்துக்கொள்ளலாம். மற்றொரு பக்கம் மாட்டுக்கறியின் மகிமையை விளக்கும்பெரியாரிஸ்டுகள் மற்றும் இஸ்‌லாமிய மதவெறியர்கள். என்னமோ மாட்டுக்கறிசாப்பிட்டால் நோய் நொ‌டியில்லாம் 100 வருடம் வாழலாம் என்பது போல. சகிக்கமுடியல.

நான் புரிந்து கொண்டது என்னவன்றால் ”ஒரு காலத்தில் யாகம் என்ற பெயரில்ஆயிரக்கணக்கான பசுக்களை பிராமணர்களே கொன்றிருக்கிறார்கள். அவர்கள்மாட்டுக்கறி சாப்பிட்ட குறிப்புகள் வேதங்களில் இருப்பதாகவும் திராவிடஇயக்க பதிப்புகளில் படித்த நியாபகம். (இது உண்மையா? எங்கோ படித்தது).அந்த சமயத்தில் தான் புத்தர் வந்தார் அவர் கொல்லாமையைவலியுருத்தினார்(எல்லா உயிர்களையும் தான்) அவர் காலத்தில் எந்த நியாயமானகாரணமும் இன்றி யாகம் என்ற பெயரில் மூட நம்பிகைகளால் கொல்லப்படும்பசுக்களுக்காக மட்டும் சிறிது கூடுதல் முக்கியத்துவம் கொடுத்து பேசினார்.புத்தர் மறைந்த பின் நாளடைவில் பௌத்தம் பலமைந்த போது பசுக்களின் மீதுபுனித பிம்பம் உண்டானது. அப்படியே கொஞ்ச கொஞ்சமாக வைதீக மதம் அதைஉள்வாங்கிக் கொண்டது. பௌத்தம் வீழ்ச்சிக்கு பின்னும் இது தொடர்கிறது.”

என்று நினைக்கிறேன். இது சரியா? வேறு ஏதாவது வரலாற்று ரீதியிலான காரணங்கள் அல்லது ஆன்மீக ரீதிலான காரணங்கள் இருக்கிறதா?

கடைசியாக மற்றொரு சந்தேகம் நம் நாட்டில் தலித்துகள் எல்லாம் முன்னால் பவுத்தர்கள் என்று நீங்கள் என்று நீங்கள்எழுதியதாக நினைவு. அயோத்தி தாசர் கூட இதை உறுதிபடுத்துறார்னுநினைக்கிறேன். ஆனால் தார்த்தத்தில் தலித்துகள் மாட்டுக்கறிசாப்பிவார்கள் என்று கேள்விபட்டிருக்கிறேன். இது முரண்பாடாக தெரிகிறதே?இந்த பழக்கம் எப்படி வந்தது என்று கொஞ்சம் விளக்க முடியுமா?

நன்றி

அன்புடன்

கார்த்திகேயன் J

------------

அன்புள்ள கார்த்திகேயன்,

இத்தகைய விஷயங்களைப் பற்றி நம் கருத்துக்களை உருவாக்குவதற்கு முன்பு முதலில் இவற்றை விரிவான வரலாற்றுப்பார்வையில் சரியான தரவுகளுடன் முன்வைக்கும் நூல்கள், ஆய்வுகள் உண்டா என்று பார்க்கவேண்டும். தமிழில் அதிகமும் சில்லறை அரசியல்சார்ந்த எளிய கருத்துக்கள்தான் எழுதப்பட்டுள்ளன. ஆனால் ஆங்கிலத்தில் வாசிக்கும் ஒருவர் மிகச்சிறந்த ஒரு வரலாற்றுச்சித்திரத்தை உருவாக்கிக்கொள்ளமுடியும்.

1. பண்டைக்காலத்தில் மக்கள்தொகை குறைவு. நிலம் அளவிறந்தது. நிலம் நிறைய இருக்குமென்றால் குறைவான மனித உழைப்பில் அதிகமான லாபம் சம்பாதிக்கும் தொழில் மேய்ச்சல். ஆஸ்திரேலியா போன்றநாடுகளில் இப்போதும் அப்படித்தான் உள்ளது.

ஆகவேதான் இந்தியா முழுக்க யாதவர்கள் அல்லது ஆயர்கள் முக்கியமான சாதியினராக உருவாகி வந்தனர். பல்லாயிரக்கணக்கான எண்ணிக்கையில் பசு மந்தைகள் வளர்க்கப்பட்டன. ஆயிரம் மாட்டுக்கு ஒரு இடையனே போதும்.

பாலை பேணுவதற்குரிய தொழில்நுட்பம் இல்லாத காலத்தில் பசுவிலிருந்து கிடைக்கும் நெய், இறைச்சி, தோல் ஆகியவையே முக்கியமான வருமானங்களாக இருந்திருக்கும்.

ஆகவே பசு இறைச்சி அதிகமாக உண்ணபட்ட காலம் இது. யாக்ஞவல்கியர் போன்ற பிராமண ரிஷியே பசு இறைச்சியை புகழ்ந்து எழுதியிருக்கிறார். மாட்டின் தோல் பதனிடும் பகுதிகள் ஏராளமாக இருந்தன.சர்மாவதி என்னும் ஆற்றங்கரை தோல்பதனிடும் இடம் என மகாபாரதம் சொல்கிறது- இன்றைய சம்பல் ஆறு. மதுரா நகரம் நெய் வணிகத்தின் மையமாக விளங்கியது.

வேதகாலத்தில் எதை உண்டனரோ அதுவே அவிஸாக்கப்பட்டது. பல்லாயிரம் பசுக்கள் பலியிடப்பட்டது பெரு விருந்தும்கூடத்தான்.

மெர்வின் ஹாரீஸ்

2. காலப்போக்கில் மக்கள்தொகை பெருகி வளமான நிலங்கள் வேளாண்மைக்குள் வந்தபோது மேய்ப்பர்களின் ஆதிக்கம் குறைந்தது. ஆனாலும் அவர்கள் கங்கைகரையில் இருந்து சற்று வரண்ட நிலங்களுக்கு இடம்பெயர்ந்தனர்

விவசாயிகளைப் பொறுத்தவரை மாடு என்பது விவசாயத்தின் தோழன். ஆகவே உணர்வுரீதியாக அதனுடன் உறவுள்ளது. அத்துடன் இந்தியா என்பது அடிக்கடி பருவமழை பொய்க்கும் தன்மை கொண்டது. மாட்டை உண்ணும் வழக்கம் இருந்தால் கண்டிப்பாக அதைத்தான் பஞ்ச காலத்தில் முதலில் உண்பார்கள். மழைபெய்யும்போது மீண்டும் மாடுகள் தேவைப்படுகையில் மாடுகள் எஞ்சியிருக்காது.

ஆகவே எக்காரணம்கொண்டும் மாட்டை உண்ணக்கூடாது என்ற விதி விவசாயிகளிடம் உருவாகி வந்தது. மெல்ல அது எல்லா சமூகத்துக்கும் பரவியது.வரண்டநிலத்தில் மேய்த்த ஆயர்களும் அதை ஏற்றுக்கொண்டு விதியாக ஆக்கிக்கொண்டனர்

ஆனால் இறந்த மாடுகள் உண்ணப்பட்டன. தோல்தொழில் செய்தவர்கள் அதை உண்டனர். சமூகம் முழுக்க இருந்த தடை காரணமாக அவர்கள் இழிந்தவர்கள் என எண்ணப்பட்டனர்.

3 சமூகத்தடைகள் எவையும் மூடநம்பிக்கைகளாக உருவானவை அல்ல. அவற்றுக்கு தெளிவான பொருளியல் -சமூகவியல் நோக்கங்கள் இருக்கும். இல்லையேல் அவை நீடிக்காது. அந்நோக்கங்கள் முடிந்தபின்னரும் வெறும் நம்பிக்கையாக அவை நீடிக்கையிலேயே நாம் அவற்றை மூடநம்பிக்கைகள் என்கிறோம்

பாலைவனநாடுகளில், இஸ்லாம் மதத்தில் இதேபோல பன்றிகளை உண்பதற்கும் நாய்களை வளார்ப்பதற்கும் தடை உள்ளது. மதத்தின் தடை. காரணம் அவை மனிதன் உண்ணச்சாத்தியமான உணவை உண்பவை என்பதுதான். அவற்றை வளர்க்க அனுமதித்தால் எங்கோ எவரோ உண்ணவேண்டிய உணவை அவற்றுக்குக் கொடுப்பதாகவே ஆகும்

இவற்றை விரிவாக மெர்வின் ஹாரீஸ் என்னும் ஆய்வாளர் எழுதியிருக்கிறார். அது ‘பசுக்கள் பன்றிகள் போர்கள்’ என்ற பேரில் துகாராம் அவர்களால் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. வாசியுங்கள்

4. இன்றும் புலால் உணவுக்கு எதிராக, குறிப்பாக மாட்டிறைச்சிக்கும் பன்றியிறைச்சிக்கும் எதிராக, சூழியல் சார்ந்த இதே போன்ற எதிர்ப்பு உருவாகி வந்துள்ளது . ஒரு பசுவின் இறைச்சியை அந்தப்பசு அது அந்நாள் வரை தின்ற புல்லை உருவாக்கத் தேவையான நிலம் மற்றும் நீரின் அடிப்படையில் நோக்கினால் பிரம்மாண்டமான இயற்கைவளம் செலவிடப்பட்டிருப்பதைக் காணலாம் என வாதிடுகிறார்கள். அதாவது ஒரு கிலோ இறைச்சி அதைவிட பலநூறு மடங்கு தானியத்தை உருவாக்கத் தேவையான நிலத்தையும் நீரையும் பயன்படுத்தி உருவாக்கப்படுகிறது. ஐரோப்பா உண்ணும் பன்றியும் பசுவும்தான் உலகில் உணவுப்பஞ்சம் நிலவ ஒரு காரணம் என்கிறார்கள்

5 சமீபகால ஆய்வுகள் பன்றியிறைச்சி மானுட உணவே அல்ல என்று கூறும் எல்லைவரை சென்றுள்ளன. பன்றியின் உடலில் உள்ள சில நுண்ணுயிரிகள் எந்த வெப்பத்திலும் அழிவதில்லை. அவை மனித உடலில் தங்கி வாழவும் மூளையை பாதிக்கவும் கூடியவை. பன்றியிறைச்சியை தவிர்க்கவேண்டுமென்ற கோரிக்கை ஐரோப்பிய நாடுகளில் உள்ளது.

6. சைவ உணவு சிறந்தது என்பதில் ஐயமில்லை. ஆனால் கடந்தகாலத்தில் பூமத்தியரேகை நாடுகள் தவிர வேறெங்கும் தரமான புரோட்டீனை தாவரங்களில் இருந்து உருவாக்கக்கூடிய நிலை இருக்கவில்லை. ஆகவே ஊனுணவு தவிர்க்கமுடியாததாக இருந்தது. ஊனுணவு மறுப்பை மாறாநெறியாக வைத்த சமணம் இந்தியாவுக்கு அப்பால் செல்லமுடியவில்லை. அதை கைவிட்ட பௌத்தம் பரவியது.

7 வரும்காலத்தில் மிகச்சிறந்த புரோட்டின் உணவுகள் செயற்கையாக உருவாக்கப்படும்போது கொஞ்சம்கொஞ்சமாக ஊனுணவு இல்லாமலாகும் என்று நினைக்கிறேன்

8. எந்தச்சமூகத்திலும் நிலமிழந்தும் அதிகாரமிழந்தும் ஒதுக்கப்படுபவர்கள் மற்றும் அச்சமூகத்திற்கு அகதிகளாகவோ அடிமைகளாகவோ வந்துசேர்பவர்கள் அச்சமூகம் இழிவென நினைக்கும் தொழிலையே செய்யும்படி ஆவார்கள். இழிந்த வாழ்க்கையை நோக்கி தள்ளவும்படுவார்கள். இந்திய சமூக்கம் துப்புரவு, தோல் தொழில் இரண்டையும் இழிவென எண்ணியது.

8. இந்த நம்பிக்கைகள் சென்றகாலத்தின் எச்சங்கள். இன்று அவை வெறும் மூடநம்பிக்கைகள் அவ்வளவுதான்

ஜெ

http://www.jeyamohan.in/?p=54893

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • சாத்தான்... அந்த நேரம் இணைய வசதி இருந்திருந்தால், காலத்தால் அழியாத   காதல் ரசம் சொட்டும் பாடல்கள்  .உருவாகி இருக்க மாட்டாது. 
    • இலங்கை இராணுவம் பலவீனமாக்கப்பட்டு, இலங்கையரசு செயலிழந்துபோவதை இந்தியா ஒருபோதும் அனுமதிக்காது - போராளித் தலைவர்களிடம் விளக்கிய ரோ அதிகாரி    இந்தியாவின் இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாடு போராளித் தலைவர்களைச் சினங்கொள்ள வைத்திருந்தது. இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே ஏற்பட்டிருந்த இந்த இணக்கப்பாடு இலங்கையைப் பொறுத்தவரையில் ஒரு வெற்றியென்று போராளிகள் கருதினர்.  ஊடகங்களுடன் பேசிய பாலசிங்கம், "நாம் யுத்த நிறுத்தத்திற்கு இணங்கவேண்டுமென்றால், இலங்கை அரசாங்கம் நாம் முன்வைக்கும் நிபந்தனைகளை ஏற்றுக்கொள்ளவேண்டும். வடக்கு கிழக்கு மாகாணங்களில் செயற்பட்டுவரும் தமது இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்க வேண்டும். எமது பிரதேசங்களில் சில பகுதிகளில் ஏற்படுத்தப்பட்டிருக்கும் சுதந்திரமான மக்கள் நடமாட்டத்திற்கான தடையினை அவர்கள் நீக்க வேண்டும். தடைசெய்யப்பட்ட பிரதேசங்கள் என்று அவர்களால் அறிவிக்கப்பட்ட பகுதிகளை விடுவிப்பதோடு, சகட்டுமேனிக் கைதுகளையும் அவர்கள் நிறுத்திக்கொள்ள வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார்.  தொடர்ந்து பேசிய பாலசிங்கம், தென்பகுதி எதிர்க்கட்சிகளினதும், பெளத்த பிக்குகளினதும் அனுமதியுடன் உருவாக்கப்பட்ட அரசியல்த் தீர்வினையே அரசாங்கம் பேச்சுவார்த்தை மேசையில் முன்வைக்க வேண்டும் என்றும் கூறினார். பிரபாகரனுடன் அன்டன் மற்றும் அடேல் பாலசிங்கம் இலங்கையரசாங்கம் தனது இராணுவத்தினருக்கான கால அவகாசத்தை வழங்கவே பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதாகக் கூறுகின்றது என்பதை ஈழத் தேசிய விடுதலை முன்னணியின் தலைவர்கள் உணர்ந்துகொண்டுள்ளார்கள் என்றும் பாலசிங்கம் கூறினார். "சிங்கள மக்களைப் பாதுகாக்கத் தவறியிருக்கும் ஜெயவர்த்தன அரசின் கையாலாகாத் தனத்தை பார்க்கத் தவறியிருக்கும் சிங்கள மக்கள் ஏமாற்றப்பட்டிருக்கிறார்கள். இச்சந்தர்ப்பத்தைப் பாவித்து தனது பதவியைப் பலப்படுத்திக்கொள்ளவும், தனது இராணுவத்தைப் பலப்படுத்திக்கொள்ளவும் ஜெயார் முயல்கிறார். இது ஒரு பொறி" என்றும் அவர் கூறினார். தமிழீழ விடுதலைப் போராளிகள் கொண்டிருந்த நிலைப்பாடு சரியென்பதை எதிர்க்கட்சித் தலைவியாகவிருந்த சிறிமாவின் கூற்றும் உறுதிப்படுத்தியிருந்தது. சிங்கள பெளத்தர்களின் புனித நகரான அநுராதபுரத்தையும், திருகோணமலையில் வசிக்கும் சிங்களவர்களையும் பாதுகாக்கத் தவறியமைக்காக அரசாங்கத்தை சிறிமா கடுமையாக விமர்சித்திருந்தார். அரசியல் தீர்விற்கான ஆதரவினை தனது கட்சி வழங்கும், ஆனால் அவர்கள் கேட்பவை எல்லாவற்றையும் வழங்க நாம் அனுமதிக்கமாட்டோம் என்றும் அவர் கூறினார். சிங்கள மக்களிடையே ஒருமித்த கருத்துருவாக்கத்தை ஏற்படுத்துவதற்குப் பதிலாக, சிங்களவரிடையே மேலும் பிளவினை உருவாக்க நினைத்த அவர், சிறிமாவின் சிவில் உரிமைகளை இரத்துச் செய்ததுடன், பாராளுமன்ற நடவடிக்கைகளிலிருந்தும் அவரை தடைசெய்தார். ஜெயாரின் இந்த நடவடிக்கைகளால் சிறிமா சிங்கள‌ தீவிரவாத பெளத்த பிக்குகளை நோக்கித் தள்ளப்பட்டார். சிறிமாவை தீவிரவாத சிங்கள பெளத்தர்களை நோக்கித் தள்ளி, அரசிற்கெதிரான நிலைப்பாட்டினை எடுக்கவைத்து, உள்நாட்டில் சமாதானப் பேச்சுக்களுக்கு எதிரான சிங்களவர்களினதும், பெளாத்த மகாசங்கத்தினதும் எதிர்ப்பு தீவிரமடைந்து வருவதாகக் கூறி,  ரஜீவ் காந்தி கேட்டுக்கொண்ட மாகாண சபை அலகை தன்னால் தரமுடியாது என்றும், மாவட்ட சபையே தன்னால் வழங்க இயலுமான அதிகப‌ட்ச  அதிகார அலகு என்றும் இந்தியாவிற்கும், சர்வதேசத்திற்கும் ஜெயார் அறிவித்தார்.  சிங்களக் கட்சிகளில் எது ஆட்சியில் இருந்தாலும்,  தமிழர்களுக்கான தீர்வென்று வரும்போது, ஆளும்கட்சி கொண்டுவருவதை எதிர்க்கட்சி எதிர்ப்பதென்பது, தமிழர்களுக்கான தீர்வினை வழங்குவதைத் தவிர்க்கும் தந்திரம் என்பதைத் தமிழ் மக்கள் 50 களிலிருந்தே கண்டுவருகின்றனர்.அதனாலேயே, சிங்கள மக்களின் ஆதரவு அரசியல்த் தீர்வு விடயத்தில் நிச்சயம் இருக்கவேண்டும் என்பதனை ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் ஒரு நிபந்தனையாக முன்வைத்தனர். சிங்களத் தலைவர்களின் தந்திரத்தை நன்கு அறிந்து வைத்திருந்த பிரபாகரன், சிங்கள மக்களின் ஆதரவின்றி கொண்டுவரப்படும் எந்தத் தீர்வும் இறுதியில் தூக்கியெறியப்பட்டுவிடும் என்பதால், சிங்களத் தலைவர்களின் தந்திரத்தினை முடக்க, சிங்கள மக்களின் ஆதரவு நிச்சயம் தேவை என்பதை இந்திய அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.    ஈழத் தேசிய விடுதலை முன்னணியினரின் கூட்டத்தின் பின்னரே பாலசிங்கம் பத்திரிக்கையாளர்களிடம் பேசியிருந்தார். தில்லியில் ரஜீவிற்கும், ஜெயாரிற்கும் இடையே செய்துகொள்ளப்பட்ட ஒப்பந்தம் குறித்துப் பேசுவதற்காக ஆனி 4 ஆம் திகதி ஈழத்தேசிய விடுதலை முன்னணியினர் சந்திப்பொன்றினை நடத்தியிருந்தனர். அங்கு பேசிய பிரபாகரன், ஜெயவர்த்தன விரித்த வலையில் ரஜீவ் காந்தியும், பண்டாரியும் முற்றாக வீழ்ந்துவிட்டனர் என்று கூறினார். "தமிழர்களின் சுதந்திர விடுதலைப் போராட்டத்தை அழித்துவிட கிழவன் (ஜெயவர்த்தன)  உறுதிபூண்டிருக்கிறான். இந்தியாவிற்கும் எமக்கும் இடையே ஆப்பொன்றினைச் சொருகுவதன் மூலம் இதனைச் செய்யலாம் என்று அவன் எண்ணுகிறான். நாம் இதனை அனுமதிக்கக் கூடாது" என்று கூறினார். ஜெயாரின் தந்திரத்தை உடைக்க போராளிகளும் தமது பாணியில் ஒரு திட்டத்தினை வகுத்தனர். அதன்படி இந்திய அரசியல்வாதிகளிடமிருந்து, இந்திய உளவுத்துறை அதிகாரிகளிடமிருந்தும் மேலதிக தகவல்களும், அறிவித்தல்களும் வரும்வரை காத்திருப்பது என்று முடிவெடுத்தனர். யுத்த நிறுத்தம் தொடர்பாக தமக்கிடையே ஒருமித்த இணக்கப்பாடு ஒன்றினை ஏற்படுத்தி அதன்படி அனைத்து அமைப்புக்களும் நடப்பதென்று அவர்கள் தீர்மானித்தனர். ஆனி 18 ஆம் திகதி, தனது அமெரிக்க, ரஸ்ஸிய விஜயத்தினை வெற்றிகரமாக  முடித்துக்கொண்டு நாடு திரும்பவிருக்கும் ரஜீவ் காந்தியின் தலையில் இலங்கையில் நடக்கவிருக்கும் யுத்தநிறுத்தம் தொடர்பான விடயங்களைச் சுமத்துவது குறித்து பண்டாரியும், ஏனைய அதிகாரிகளும் தயக்கம் காட்டினர். மேலும், அதற்கு முன்னர் யுத்தநிறுத்தம் தொடர்பான தனது நிலைப்பாட்டினை மேலும் பலப்படுத்த பண்டாரியும் விரும்பியிருந்தார்.  தமிழ்ப் போராளிகளுடன் இக்காலத்தில் தொடர்புகொண்டிருந்த ரோ அதிகாரியான சந்திரசேகரன், இந்தியாவின் திட்டத்திற்கு அமைய போராளிகளை பணியவைப்பதில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். ஆனி 5 ஆம் திகதி, சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களை சென்னையில் சந்தித்தார். பிரபாகரன், சிறீசபாரட்ணம், பாலகுமார், பத்மநாபா ஆகியோருடன் இன்னும் சில போராளிகளும் இதில் பங்குபற்றினர். சந்திரசேகரனைச் சந்தித்த போராளித் தலைவர்களின் அமைப்பின் தலைமைப்பொறுப்பை பிரபாகரனே எடுத்திருந்தார். யுத்த நிறுத்தம் மூலம் தமிழ்ப் போராளிகளுக்குப் பாதகமான நிலைமையே ஏற்படும் என்று அவர் கூறினார். ஏனெனில், இராணுவத்தினரை அவர்களது முகாம்களுக்குள் முடக்கும் நடவடிக்கைகளில் போராளிகள் தீவிரமாக அப்போது ஈடுபட்டிருந்தார்கள். இந்த முயற்சியில் வெற்றிபெறும் நிலையினை அவர்கள் எட்டவிருந்தார்கள். ஜெயவர்த்தனவும், இராணுவ தளபதிகளும் இதனை நன்கு அறிந்தே வைத்திருந்தனர். சுமார் ஒரு வாரகாலத்திற்கு முன்னதாக, வடமாகாண இராணுவத் தளபதி ஹமில்ட்டன் வணசிங்க வெளிநாட்டுச் செய்தியாளர் ஒருவருக்கு வழங்கிய செவ்வியயினை மேற்கோள் காட்டிப் பேசினார் பிரபாகரன்.  ஜெயார் காலத்து போர்க்குற்றவாளி  - ஜெனரல் ஹமில்ட்டன் வணசிங்க வணசிங்க தனது செவ்வியில், "பயங்கரவாதிகள் முன்னரை விடவும் துணிவாகப் போராடுகிறார்கள். எமக்கெதிரான தாக்குதல்களின்போது பல அமைப்புக்கள் ஒன்றாக இணைந்து வந்து மோதுகிறார்கள். வீதிகளில் கண்ணிகளைப் புதைத்து வைக்கிறார்கள். வீதிகள் ஒவ்வொன்றையும் சல்லடை போட்டுத் தேடியபின்னரே இராணுவத்தினரால் நடமாட முடிகிறது. அவர்களைச் சமாளிப்பதே கடுமையாக இப்போது இருக்கிறது" என்று கூறியிருந்தார்.  வணசிங்கவின் கருத்தினை அடிப்படையாக வைத்தே பிரபாகரன் பேசியிருந்தார். "எம்மால் எமது இலக்குகளை விரைவில் அடைந்துகொள்ள முடியும். நாம் அதனைச் செய்யுமிடத்து, இலங்கையரசின் நிலை பலவீனமாகிவிடும். அதனைத் தடுக்கவே யுத்தநிறுத்ததினை ஜெயவர்த்தன கோருகிறார்" என்று அவர் வாதிட்டார். "யுத்த நிறுத்தத்தினைப் பயன்படுத்தி இராணுவம் தம்மை மீள் ஒருங்கிணைக்கவும், ஆயுதங்களைப் பெருக்கிக் கொள்ளவும், தமது போரிடும் திறணைப் புதுப்பித்துக் கொள்ளவும் முயலப்போகிறது. மேலும், யுத்த நிறுத்தம் போராளிகளிடையே போரிடும் திறணைக் குலைத்துவிடும். இலங்கை இராணுவத்திற்கெதிரான செயற்பாடுகளில் போராளிகளின் கை ஓங்கியிருக்கிறது. இந்த நிலையில் அவர்களை போரிடுவதை நிறுத்துங்கள் என்று கேட்பதன் மூலம் அவர்களை விரக்தியடைய வைக்கப்போகிறோம்" என்றும் அவர் கூறினார். ஆனால், வழமையாக தமிழ்ப் போராளிகளின் கருத்துக்களைச் செவிமடுத்துவரும் சந்திரசேகரன், அன்றோ, பிரபாகரனின் வாதங்களை கேட்கும் மனோநிலையில் இருக்கவில்லை என்று போரும் சமாதானமும் எனும் தனது புத்தகத்தில் பாலசிங்கம் எழுதுகிறார். யுத்த நிறுத்தத்தினை எப்படியாவது நடைமுறைப்படுத்தவேண்டும் என்று விடாப்பிடியாகப் பேசிய சந்திரசேகரன், போராளிகளை யுத்தநிறுத்தத்தம் ஒன்றிற்குள் கொண்டுவரும் இந்தியாவின் முயற்சியின் பின்னால் இருக்கும் காரணத்தையும் விளக்கினார். இதுகுறித்து பாலசிங்கம் இவ்வாறு கூறுகிறார்,  "இலங்கை இராணுவத்தினர் மீது மிகக்கடுமையான இழப்புக்களை நீங்கள் ஏற்படுத்தி விட்டிருக்கிறீர்கள். இதற்குமேலும் நீங்கள் இராணுவத்தின் மீது தாக்குதல் நடத்தினால், அது இலங்கையரசைப் பலவீனப்படுத்திவிடும். இலங்கையரசு பலவீனப்பட்டு, செயலிழப்பதை இந்தியா ஒருபோது அனுமதிக்காது" என்று சந்திரசேகரன் போராளிகளின் தலைவர்களிடம் கூறியிருக்கிறார். (2000 இல் ஆனையிறவு கைப்பற்றப்பட்டு, புலிகள் யாழ்நகர் நோக்கி முன்னேறும்போது இந்தியா தலையிட்டு அம்முன்னேற்றத்தைத் தடுத்து நிறுத்தியதாகக் கூறப்பட்டது. மேலும், பலாலியில் இருக்கும் இராணுவத்தினரைப் பாதுகாக்கவும், தேவைப்படின் அவர்களைப் பத்திரமாக கொழும்பிற்கு அழைத்துவரவும் அது முன்வந்திருந்தது. அதுமட்டுமல்லாமல், இலங்கைக் கடற்படைக் கப்பல்கள் தமது கடற்பாதையினை இந்தியக் கடற்பகுதியூடாகவே நடத்தியும் வந்தனர் என்பதும் குறிப்பிடத் தக்கது). அன்றிருந்த இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையென்பது, ஜெயவர்த்தனவைப் பலவீனப்படுத்தி தனது விருப்பத்திற்கேற்ப ஒழுகப் பண்ணுவதேயன்றி, அரசை செயலிழக்கப்பண்ணுவதல்ல. இலங்கையரசு செயலிழந்துபோனால், இந்தியாவின் நலன்களுக்கெதிரான சக்திகள் இலங்கைக்குள் நுழைந்துவிடும், அது இந்தியாவின் நலன்களையும், பாதுகாப்பையும் வெகுவாகப் பாதிக்கும் என்று இந்திய அதிகாரிகள் தொடர்ச்சியாகக் கூறி வந்தார்கள். தமிழரின் விடுதலைப் போராட்டத்தின்மீது இந்தியா கட்டுப்பாடுகளை விதிப்பதை விளக்கிய சந்திரசேகரன், போராளித் தலைவர்கள் இதன்போது அதிருப்தியடைவதையும் கண்டுகொண்டார். ஆகவே , சூழ்நிலையினைத் தணிக்கும் விதமாக ஒரு விடயத்தைக் கூறினார். அதுதான், ரஜீவும், பண்டாரியும் ஜெயவர்த்தன மீது  கடுமையாக அழுத்தம் கொடுத்து, அவர் போராளித் தலைவர்களுடன் நேரடியாகப் பேசுவதற்கு இணக்கவைத்திருக்கிறார்கள் என்று கூறினார்.  அதாவது, தமிழ் மக்களின் பிரதிநிதிகள் என்கிற தகைமையினை பேச்சுவார்த்தையில் இந்தியா போராளிகளுக்குப் பெற்றுக்கொடுத்திருக்கிறது என்று சந்திரசேகரன் கூறினார். "உங்களுக்கான அங்கீகாரத்தை நாம் பெற்றுத்தந்திருக்கிறோம் " என்று அவர்களைப் பார்த்து சந்திரசேகரன் கூறினார்.  யுத்தநிறுத்தத்திற்கு எப்படியாவது சம்மதியுங்கள் என்று போராளிகளைத் தலைவர்களுடன் கெஞ்சிய சந்திரசேகரன், பேச்சுவார்த்தைகளில் ஏற்றுக்கொள்ளப்படும் விடயங்களை ஜெயவர்த்தன நிறைவேற்ற மறுக்கும் தறுவாயில், இந்தியா நிச்சயமாகப் போராளிகளுக்கு மீண்டும் உதவும் என்றும் உறுதியளித்தார்.
    • கந்தையர் எப்பவும் முதல்வர் பதவியிலைதான் கண்ணும் கருத்துமாய் திரியுறார்....ஏதாவது புதிசாய் யோசியுங்கப்பா 🤣
    • இந்தக் காலத்திலை கலியாணம் பேசிச்செய்யிறதை விட பேஸ்புக்கிலை ஆரையாவது பாத்து புடிக்கிறது சுகம் 😂
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.