Jump to content

ஜெயக்குமாரியை விடுதலை செய்யக்கோரி கொழும்பில் ஆர்ப்பாட்டம்! படங்கள்


Recommended Posts

அநியாயமான முறையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் கிளிநொச்சி ஜெயக்குமாரியின் விடுதலைக்காக  இன்று  கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தின் முன்பாக மாலை நான்கு மணியவில்  ஆர்ப்பாட்டம் ஒன்று நடை பெற்றது.

colombo%20news-2.jpg

கிளிநொச்சியைச் சேர்ந்த ஜெயக்குமாரி என்பவர் காணாமல் போன தனது மகனை கண்டுபிடித்துத் தருமாறு கோரி போராட்டங்களை மேற்கொண்டிருந்தார்.
 

colombo%20news-1.jpg
இந்நிலையில் அவரும் அவரது மகள் விபூசிகாவும் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரால் இந்த வருட ஆரம்பத்தில் கைது செய்யப்பட்டிருந்தனர்.colombo%20news-3.jpgபின்னர் ஜெயக்குமாரி பூசா தடுப்பு முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டார். அவரது மகள் விபூசிகா வவுனியா சிறுவர் கண்காணிப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டார்.
colombo%20news-4.jpg

ஜெயக்குமாரி கைது செய்யப்பட்டு தற்போது 200 நாட்கள் கடந்துவிட்டன. பயங்கரவாத செயற்பாடுகளுடன் அவருக்கு தொடர்பிருப்பதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

colombo%20news-6.jpg

எனினும் இதுவரை அது தொடர்பில் எந்தவொரு ஆதாரத்தையும் பாதுகாப்புத் தரப்பினர் மேற்கொள்ளவில்லை.

colombo%20news-5.jpg

குறைந்த பட்சம் அவருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்படவோ, பிணையில் விடுதலை செய்யவோ நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
 

colombo%20news-7.jpg

இந்நிலையில் குற்றச்சாட்டுகளின்றி அநியாயமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள ஜெயக்குமாரியை விடுதலை செய்யுமாறு கோரி கொழும்பில் இன்று மாலை  ஆர்பாட்டம் நடை பெற்றது.

colombo%20news-8.jpg
colombo%20news-9.jpg
colombo%20news-10.jpg
colombo%20news-11.jpg
colombo%20news-12.jpg

  http://www.pathivu.com/news/34216/57//d,article_full.aspx

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த செய்தியின் கீழ் உள்ள இணைப்புகளுக்கு சென்று ஜெயக்குமாரியின் விடுதலைக்கு உதவுங்கள்-

Jeyakumari_CI.jpg

200 நாட்களுக்கு முன்னர் கிளிநொச்சியில் பயங்கரவாத தடுப்புப் பிரிவினால் கைது செய்யப்பட்ட ஜெயக்குமாரியை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி மனித உரிமைகள் செயற்பாட்டாளர்களினால் நேற்று புறக்கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்னால்  ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்ட நிலையில் அந்த ஆர்ப்பாட்டத்திற்கு எதிராக மற்றுமொரு குழுவினரால் அதே இடத்தில் வேறொரு ஆர்ப்பாட்டமொன்று நடத்தப்பட்டது.

 
 கடந்த மார்ச் மாதமளவில் கிளிநொச்சி பகுதியில் விடுதலைப் புலி உறுப்பினர் ஒருவருக்கு தனது  வீட்டில் இடமளித்ததாக தெரிவித்து பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் ஜெயக்குமாரி என்பவர் கைது செய்யப்பட்டிருந்தார்.
 
 அவர் கைது செய்யப்பட்டு 200 நாட்கள் பூர்த்தியாகும் நிலையில் அவரை விடுதலை  செய்யுமாறு வலியுறுத்தி மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் நேற்று மாலை புறக்கோட்டை ரயில் நிலையத்திற்கு  முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
 இந்த ஆர்ப்பாட்டத்தில் ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்,  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி.யான சுமந்திரன், தேசிய ஐக்கிய முன்னணி கட்சியின் அசாத்சாலி,  மனித உரிமை செயற்பாட்டாளர் வண. சத்திவேல் ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டிருந்தனர்.
 
 இந்நிலையில் அந்தப் பகுதிக்கு வந்த தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் என்ற  20 பேர் வரையிலான குழுவொன்று அந்த ஆர்ப்பாட்டத்திற்கு எதிராக கோஷங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது.
 
 இதன்போது பொலிஸார் அவ்விடத்திற்கு வந்து இரு தரப்பு ஆர்ப்பாட்டங்களுக்கும் இடையே நின்று அங்கு ஏற்படவிருந்த பிரச்சினைகளை தடுத்து நிறுத்தும் வகையில் செயற்பட்டனர்.
 

Share her story widely and visit the Campaign blog for updates - http://freejeyakumary.wordpress.com/ 

 
- Sign the Petition calling for her release and all others held unlawfully under the PTA. You just need to go to this link https://www.change.org/p/he-president-mahinda-rajapaske-free-jeyakumary and sign on. 
 
- Here are some pix/articles from yesterday's protest. It went off relatively well, but of course there was a counter pro-govt protest alongside. Pix  
 
 
 
 
 
 
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.