Jump to content

பேஸ்புக்கிற்கு போட்டியாக பிரபலமாகும் எல்லோ !


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

எல்லோ (Ello )  பற்றி நீங்கள் கேள்விபட்டிருக்கலாம். இல்லை என்றால் நிச்சயம் இனி வரும் நாட்களில் எல்லோ பற்றி கேள்விப்படலாம். ஏனெனில் இப்போது இணையத்தில் எல்லோ பற்றி தான் பேச்சாக இருக்கிறது. வெகுவேகமாக வளர்ந்து வரும் எல்லோ அதைவிட வேகமாக பிரபலமாகி வருவதால், திடிரென உங்கள் நண்பர்களில் யாரேனும் ,நான் எல்லோவில் சேர்ந்துவிட்டேன், நீங்கள் இன்னுமா உறுப்பினராகவில்லை என்று கேட்கலாம்.

ello1.jpg

எல்லோ என்றால் என்ன?

இது என்ன எல்லோ புதிதாக இருக்கிறது ? எங்கிருந்து முளைத்தது இந்த எல்லோ! இது என்ன சேவை ? ஏன் இதைச்சுற்றி இத்தனை பரபரப்பு?

எல்லோ , பேஸ்புக் போல புதிய சமூக வலைப்பின்னல் சேவை. பேஸ்புக்கிற்கு போட்டியாக உருவாகி இருக்கும் சமூக வலைப்பின்னல் சேவை.

பேஸ்புக்கிற்கு போட்டியா? இப்படி சொல்லிக்கொள்ளும் எத்தனை சமூக வலைப்பின்னல் சேவைகளை கேள்விபட்டாயிற்று என்று அலட்சியம் கொள்வதற்கு இல்லை. ஏனெனில் எல்லோ, பேஸ்புக் மீது சொல்லப்படும் குறைகளை எல்லாம் களைந்து முற்றிலும் புதிதான பயனாளிகளை மையமாக கொண்ட சமூக வலைப்பின்னலாக அறிமுகமாகி இருப்பதாக சொல்லப்படுவது தான் முக்கிய விஷயமாக இருக்கிறது.

பேஸ்பிக்கிற்கு மாற்று

’ உங்கள் சமூக வலைப்பின்னல் சேவை விளம்பர நிறுவனங்களால் சொந்தம் கொண்டாடப்படுகிறது என எல்லோ நெத்தியடியாக பேஸ்புக் மீது தாக்குதல் நடத்தி வீட்டு, விளம்பரங்கள் இல்லாத சேவையாக அறிமுகம் செய்து கொள்கிறது. பயனாளிகளின் டைம்லைனில் விளம்பரங்களை இடம்பெற வைப்பதில்லை என்பதையும் பயனாளிகள் பற்றிய விவரங்களை சேகரித்து மூன்றாவது நிறுவனங்களுக்கு விற்பதில்லை என்பதையும் எல்லோ தனது சேவையின் சிறப்பம்சமாக சொல்கிறது. இவை இரண்டுமே பேஸ்புக் மீது வைக்கப்படும் முக்கிய குற்றச்சாட்டாக இருக்கிறது. 

பேஸ்புக் உங்களை வைத்து காசு பார்க்கிறது என்று சொல்லப்படுவதை பொருட்படுத்தாதவர்கள் கூட பேஸ்புக் டைம்லைன் முழுவதும் விளம்பரமயமாகி வருவதால் நிச்சயம் அதிருப்தி கொண்டிருப்பார்கள். நண்பர்களுடன் தகவல்களை பகிர்ந்து கொண்டு அவர்களின் தகவல்களை தெரிந்து கொள்வதற்கான சேவை என்பதை மீறி பேஸ்புக்கில் எப்போதும் விளம்பர செய்திகளும் தகவல்களும் எட்டிப்பார்த்து கொண்டிருக்கின்றன.

இந்த தொல்லைகள் எல்லாம் இல்லாமல்  நட்பு பகிர்வுகளுக்கானதாக மட்டுமே இருக்கும் எளிமையான தூய்மையான சமூக வலைப்பின்னல் சேவை இருந்தால் எப்படி இருக்கும் ? என்ற ஏக்கம் பலருக்கு இருக்கலாம்.

ello2.jpg

அமோக வரவேற்பு

இந்த ஏக்கத்திற்கான பதிலாக இருக்கும் என்ற நம்பிக்கையில் தான் எல்லோ உருவாக்கப்பட்டுள்ளது. அதனால் தான் துவக்கப்பட்ட சில வாரங்களிலேயே பெரிய அளவில் கவனத்தை ஈர்த்திருக்கிறது. அழைப்பு மூலம் உறுப்பினர்களை அனுமதிக்கும் இந்த சேவையில் சேர மணிக்கு 30,000 பேருக்கு மேம் விருப்பம் தெரிவிப்பதாக ஒரு தகவல் தெரிவிக்கிறது. இந்த சேவையில் இணைவதற்கான அழைப்புகள் பிரபல ஏல் இணையதளமான இபேவில் விற்கப்படும் அளவுக்க் இதற்கு கிராக்கி இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

இவற்றை விட முக்கியமான விஷ்யம் ஒன்று இருக்கிறது. சமீபத்தில் பேஸ்புக் , பயனாளிகள் தங்கள் உண்மையான பெயரில் தான் பதிவு செய்து கொள்ள வேண்டும் , பொய்யான பெயர்கள் செல்லுபடியாகாது என தெரிவித்தது. இதனால் குறிப்பிட்ட பாலின கொள்கையை கொண்டவர்கள் கடும் அதிருப்தி கொண்டுள்ளனர். இவர்களில் பலர் பேஸ்புக்கிற்கு எதிர்ப்பு தெரிவித்து வெளியேற விரும்பும் நிலையில் , எந்த பெயரில் வேண்டுமானாலும் பதிவு செய்து கொள்ளும் சுதந்திரம் அளிக்கும் எல்லோ கவனத்தை மேலும் ஈர்த்துள்ளது. இதனால் தான் எல்லோ பற்றி எல்லோரும் பேசத்துவங்கியிருக்கின்றனர்.

எல்லோவில் என்ன இருக்கிறது

எல்லாம் சரி, எல்லோ சேவை எப்படி இருக்கிறது? அதில் எப்படி சேரலாம்?

எல்லோ சமூக வலைப்பின்னல் மிக எளிதாக இருப்பதாக சொல்கிறார்கள். அதன் வடிவமைப்பில் அலங்காரமோ குழப்பமோ கிடையாது. அதன் அமசங்களிலும் ஆர்ப்பாட்டம் இல்லை என்கின்றனர். இதில் உறுப்பினராக சேர்ந்தால், தகவல்களை பகிர்ந்து கொள்ளலாம். ( இணைப்புகள் மற்றும் வீடியோக்களும் உண்டு) . நண்பர்கள் பகிர்வை பார்க்கலாம். அவ்வளவு தான் என்கிறனர்.  லைக்,ஷேர் எல்லாம் கிடையாது. திடிரென எட்டிப்பார்க்கும் வீடியோ மற்றும் விளம்பரங்களும் கிடையாது. டைம்லைனிலும் அதிக குழப்பம் இல்லை. பதிவுகள் நண்பர்களின் பதிவுகள் , பொதுவானவை (நாய்ஸ்) என்று மட்டுமே பிரிக்கப்பட்டுள்ளன.

நண்பர்களை அறிமுகம் செய்து கொள்ளலாம். ஆனால் தேடல் வசதி இன்னும் முழுமையாக இல்லை என்கின்றனர். பேஸ்புக் சேவை ஆரம்பத்தில் எப்படி இருந்ததோ அப்படி எளிமையாக இருப்பதாகவும் ஒரு கருத்து இருக்கிறது. ஆக , நட்பை பகிர்ந்து கொண்டு நட்பு வட்டார தகவல்களை தெரிந்து கொள்ள உதவும் சேவையாக எல்லோ இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. உறுப்பினராக சேரும் போதும், பேஸ்புக் போல பிறந்த ஊர், படித்த பள்ளி எல்லாம் கேட்பதில்லை. உங்கள் பெயர் ( பயனர் பெயர் தான்) சுருக்கமான அறிமுகத்தை தெரிவித்து நட்பு கொள்ளத்துவங்கிவிடலாம்.

ello3.jpg

எல்லோவின் அழைப்பு

பேஸ்புக்கின் குழப்பமான அம்சங்களுக்கு பழகியவர்களுக்கு இதன் அடிப்படையான வசதி மட்டும் கொண்ட எளிமை வியப்பையும் புத்துணர்ச்சியையும் அளிக்கலாம். எல்லோ பரபரப்பை ஏற்படுத்தியிருந்தாலும் இன்னும் முழுவீச்சில் அறிமுகமாகமல் பீட்டா வடிவில் தான் உள்ளது. எனவே உறுப்பினராக சேர அழைப்பு தேவை. ஒன்று உங்கள் நண்பர்கள் உறுப்பினராக இருந்து அழைக்க வேண்டும். இல்லை என்றால் இதில் அழைப்பு கேட்டு கோரிக்கை சமர்பித்து காத்திருக்கலாம். பேஸ்புக்கிற்கு போட்டி என்று சொல்லப்படுகிறதே பேஸ்புக்கை தூக்கி சாப்பிடுமா? பேஸ்புக்கிற்கு முழுக்கு போட்டு இதற்கு மாறலாமா?  என்று கேட்கலாம். பேஸ்புக் மீது ஆயிரம் குறைகள் இருந்தாலும் அதன் வீச்சு மற்றும் பிரம்மாண்ட வளர்ச்சியுடன் மல்லு கட்டுவது என்பது எளிதானதல்ல. அதோடு பல சமூக வலைப்பின்னல் சேவைகள் பேஸ்புக்கிற்கு போட்டி என கூறி அறிமுகமாகி மண்ணைகவ்வி இருக்கின்றன. இவ்வளவு ஏன் ஜி பிளஸ்சே திண்டாடுகிறது. ஆனால் பேஸ்புக்கின் விஸ்வரூப வளர்ச்சியாலேயே அதற்கு மாற்று தேவை இல்லை என்று சொல்ல முடியாதே. மேலும் பேஸ்புக்கிற்கான மாற்று தேவை எனும் ஏக்கமும் உள்ளது.

எல்லோவுக்கு மாறலாமா?

பேஸ்புக்கில் இருந்து எல்லோவுக்கு மாறலாமா? என்பது தனிப்பட்ட விருப்பம் சார்ந்து. பேஸ்புக்கின் வீச்சும் வேண்டாம், அதன் தொல்லைகளும் வேண்டாம் என்று நினைத்தால் எல்லோவை முயற்சித்து பார்க்கலாம். ஆனால் ஒன்று பேஸ்புக் கூறப்படும் அந்தரங்க மீறல் புகார் விஷ்யத்தில் எல்லோவும் பெரிய அளவில் எந்த உறுதியையும் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. அதோடு எல்லோ விளம்பரம் இடம்பெற வைக்காத்தை முக்கிய அம்சமாக சொல்கிறது. அப்படி என்றால் வருவாய்க்கு வழி ?வருங்காலத்தில் புதிய அம்சங்கள் கட்டண சேவையாக அறிமுகமாகும் என்கிறது எல்லோ. ஆக அதற்கும் தயாராக இருங்கள். எல்லோ சேவையின் பூகோள பரப்பு பற்றி இன்னும் தெளிவாக தெரியவில்லை. இப்போதைக்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் பரபரப்பாக இருக்கிறது. எதற்கும் இமெயில் முகவரியை சமர்பித்து காத்திருங்கள். அதற்கு முன்,

எல்லோவின் கொள்கை அறிக்கையை அவசியம் படித்துப்பாருங்கள்!

எல்லோ  சேவை: https://ello.co/wtf/post/manifesto

சைபர்சிம்மன்

(http://cybersimman.wordpress.com/

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த விசயத்தில நான் 'ஏக பத்தினி' விரதன்!

 

இணைப்புக்கு நன்றிகள், பெருமாள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த விசயத்தில நான் 'ஏக பத்தினி' விரதன்!

 

இணைப்புக்கு நன்றிகள், பெருமாள்!

 

ஏக பத்தினி விரதன் என்றால், எல்லோவிலும்... புங்கை சேர மாட்டாரா? :D

Link to comment
Share on other sites

  • 4 months later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அருமையான பதிவு

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அபிவிருத்தி லொத்தர் சபை அதன் 40 வருட வரலாற்றில் 2023 இல் அதிகூடிய இலாபத்தை பதிவு செய்துள்ளது. இதன்படி, அபிவிருத்தி லொத்தர் சபையானது 2022-2023 ஆம் ஆண்டில் 32% இலாபமீட்டி புதிய சாதனையை படைத்துள்ளது, இது 2022 இல் பெற்ற இலாபத்தின் இருமடங்காகும். இதன்டபடி, ஜனாதிபதி நிதியத்திற்கு அபிவிருத்தி லொத்தர் சபையினால் வழங்கப்பட்ட பங்களிப்பு கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது 13 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது. 3,622,506,725 ரூபா 03 பில்லியன் இலக்கை கடந்துள்ளது. அதே சமயம், அரசாங்கத்திற்கான பங்களிப்பை 6% உயர்த்தி 5,193,833,721 ரூபாவினை வழங்கியுள்ளது. அவிருத்தி லொத்தர் சபையின் தலைவரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான அஜித் குணரத்ன நாரங்கல இது குறித்து கருத்து தெரிவிக்கையில், சவாலான காலப்பகுதியில் நாட்டின் பொருளாதாரத்தின் எதிர்மறையான விளைவுகளை குறைக்க அபிவிருத்தி லொத்தர் சபை கையாண்ட உத்திகளால் மிகக் குறுகிய காலத்தில் வருமான அதிகரிக்க வழி செய்துள்ளது. வழமையான லொத்தர் சீட்டுகள் மற்றும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள விசேட சீட்டுகளுக்கு வழங்கப்படும் பரிசுத் தொகையை அதிகரிக்க அபிவிருத்தி லொத்தர் சபை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்நாட்டு பயனாளிகளுக்கு புதிய அனுபவத்தை வழங்கும் வகையில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் ஊடாக லொத்தர் சீட்டுகளை அறிமுகப்படுத்தும் நடவடிக்கையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தலைவர் தெரிவித்தார். அபிவிருத்தி லொத்தர் சபையின் வருமானத்தில் 50% இந்த நாட்டில் கல்வி மற்றும் சுகாதாரத்திற்காக ஒதுக்கப்படுவதாகவும் அவர் அவர் மேலும் குறிப்பிட்டார். https://thinakkural.lk/article/297543
    • Published By: DIGITAL DESK 3   29 MAR, 2024 | 12:09 PM பிரபல வர்த்தக நாமங்கள் மற்றும் அவர்களின் வர்த்தக முத்திரைகளை பயன்படுத்தி பரிசுகள் வழங்கப்படும் எனக் கூறி  சமூக ஊடகங்களில் பகிரப்படும் இணைப்புகளை கிளிக் செய்ய வேண்டாம் என இலங்கை கணினி அவசரநிலை தயார்நிலைக் குழு (SLCERT) மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளது. இது குறித்து இலங்கை கணினி அவசர நடவடிக்கை பிரிவின் சிரேஷ்ட தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் சாருக தமுனுபொல  தெரிவித்துள்ளதாவது, குறித்த இணைப்புகள் குறுஞ்செய்தி, வட்ஸ்அப், எக்ஸ் (ட்விட்டர்) மற்றும் பேஸ்புக் மற்றும் கையடக்க தொலைபேசியில் பெறப்பட்ட அழைப்பு ஆகியவற்றினூடாக பகிரப்படுகிறது. எனவே இவ்வாறான இணைப்புகள் வந்தால்  கிளிக் செய்யவதற்கு முன்பு அவற்றின் நம்பகத்தன்மையை முதலில் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இதுபோன்ற இணைப்புகளை உங்கள் நண்பர்கள் வட்டாரத்தில் இருந்து உங்களுக்கு வரலாம். சில சமூக ஊடகங்களில் பகிரப்படும் இவ்வாறான இணைப்புகளை கிளிக் செய்வதால் தனிப்பட்ட தரவுகளை திருடப்படலாம். மேலும், உங்களின் தேசிய அடையாள அட்டை இலக்கம் (NIC), சாரதி அனுமதி பத்திரம், வங்கிக் கணக்கு விவரங்கள், ஒரு முறை பயன்படுத்தப்படும் கடவுச்சொல் (OTP), வேலை செய்யும் விவரங்கள் போன்ற தனிபட்ட விவரங்களை பெற்றுகொள்வார்கள். சில நேரங்களில் மூன்றாம் தரப்பு கையடக்க தொலைபேசியில் இணைப்புகள் பதிவிறக்கம் செய்யப்பட்டு, குறித்த கையடக்க தொலைபேசியில்  சேமித்து வைக்கப்பட்டுள்ள தனிபட்ட விவரங்களை திருடலாம். எனவே அவர்களும் பாதிக்கப்படலாம் என்பதால், அந்த இணைப்புகளை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/179956
    • உண்மைதான் இது ஒரு மதத்திற்கெதிரான பிரச்சார படமாக காட்டப்பட்டிருந்தாலும் இந்த படத்தினை அனைவரும் பார்க்கவேண்டிய படமக உணர்கிறேன். ஆனால் இதனை ஒத்த இன்னொரு மதமும் கேரளாவிலும் அதனை அண்டிய தமிழ்நாட்டுப்பகுதியிலும் இதனை விட அதிகளவில் மதமாற்றம் செய்துவருகிறார்கள். விளங்கநினைப்பவன், புத்தன் இந்த திரைப்படம் தொடர்பான உங்கள் கருத்துகளையும் பதிவிடுங்கள்.
    • புதிய மின்சார சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்படும் மின்சார சபையை மறுசீரமைப்பதற்கான ஏற்பாடுகளை உள்ளடக்கிய புதிய மின்சார சட்டமூலம் அடுத்த இரண்டு வாரங்களில் வர்த்தமானியில் வெளியிடப்பட்டு, ஏப்ரல் இறுதி வாரத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என மின்சக்தி, எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார். மின்சார சபையின் மறுசீரமைப்பு தொடர்பிலான முன்னேற்றத்தை ஆராயும் மீளாய்வுக் கூட்டத்தின் போது இது தொடர்பில் கலந்துரையாடியதாக அமைச்சர் X வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். சட்டமூலத்தை மீளாய்வு செய்த பின்னர், அதனை நடைமுறைப்படுத்துவதற்கான உறுதிப்பாடு கடந்த திங்கட்கிழமை சட்டமா அதிபரால் வழங்கப்பட்டது. அதனடிப்படையில், வர்த்தமானி பிரசுரிக்கப்பட்டதன் பின்னர் எந்தவொரு நபருக்கும் மீளாய்வு செய்வதற்கு குறைந்தபட்சம் இரண்டு வாரங்கள் அவகாசம் வழங்கப்படும் என  தெரிவிக்கப்பட்டுள்ளது.   https://thinakkural.lk/article/297573
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.