Jump to content

ஹெரோயின் போதைப் பொருள் கடத்தல் மன்னன் சென்னையில் கைது!


Recommended Posts

இலங்கை மற்றும் குவைத் ஆகிய நாடுகளுடன் தொடர்புடைய ஹெரோயின் போதைப் பொருள் கடத்தல் மன்னன் என கருதப்படும் ஒருவர் சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவு பொலிஸார் சந்தேக நபரை கைது செய்துள்ளதுடன், அவரிடம் இருந்து ஒரு கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.

சென்னையில் நேற்று ஒரு கிலோ கிராம் ஹெரோயினுடன், கைது செய்யப்பட்ட ரசூல் மைதீன் என்பவர் வழங்கிய தகவலின் அடிப்படையில் அம்ஜத் கான் என்ற நபர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் இலங்கைக்கு புறப்பட்டுச் செல்வதற்காக விமான நிலையத்திற்கு சென்றிந்ததாக இந்திய போதைப் பொருள் தடுப்பு பிரிவின் சென்னை பிராந்திய பணிப்பாளர் பிரேம் ஆனந்த் சிங்ஹா வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்டுள்ள அம்ஜத் கான் இராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்தவர் எனவும் அவர் இலங்கை பெண்ணொருவரை திருமணம் செய்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

சந்தேக நபர் இலங்கை மற்றும் குவைத் நாடுகளுக்கு போதைப் பொருள் கடத்திச் செல்வதில் சம்பந்தப்பட்டுள்ளார் எனவும் அவர் கூறியுள்ளார்.

 

http://www.pathivu.com/news/34337/57//d,article_full.aspx

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மன்னன் பிடிபட்டுவிட்டார் ரானியை என்ன செய்தாக...................... உண்மை தெரியனும்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.