Jump to content

தேர்தல் ஆணையாளரால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைக் அரசியல் கட்சியாகப் பதிவு செய்ய முடியாத நிலை – சுரேஸ் பிரேமசந்திரன்


Recommended Posts

தேர்தல்கள் ஆணையாளரால் புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்ய முடியா நிலை காணப்படுகின்றதன் காரணமாகவே தமிழ் தேசிய கூட்டமைப்பை அரசியல் கட்சியாக பதிவு செய்ய முடியாதிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

கட்சியின் பேச்சாளர் சுரேஷ் பிரேமசந்திரன் இதனைத் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பை அரசியல் கட்சியாக பதிவு செய்வதற்கான கோரிக்கை பல்வேறு தரப்பினரால் முன்வைக்கப்பட்டு வருகிறது.
இலங்கை தமிழரசு கட்சியைத் தவிர, கூட்டமைப்பின் ஏனைய பங்காளி கட்சிகள் அனைத்தும் கட்சியை அரசியல் கட்சியாக பதிவு செய்ய இணக்கம் தெரிவித்துள்ளன.

தமிரசு கட்சி மாத்திரம் இதற்கு ஏன் மறுப்பு தெரிவிக்கிறது என்று தமக்கு புரியவில்லை என்று சுரேஷ்பிரேமசந்திரன் கூறியுள்ளார்.

அதேநேரம், முல்லைத்தீவு – உள்ளுராட்சி தேர்தல் தொடர்பிலான வழக்கு ஒன்று நீதிமன்றத்தில் உள்ள நிலையில், தேர்தல் ஆணையாளரால் புதிய அரசியல் கட்சிகளை பதிவு செய்ய முடியாத நிலை காணப்படுவதாகவும், அதனால் தமிழ் தேசிய கூட்டமைப்பை பதிவு செய்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் அவர் கூறி இருக்கிறார்.http://www.pathivu.com/news/34343/57//d,article_full.aspx

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.