Jump to content

கூட்டமைப்பை ஒரு கட்சியாக வைத்திருக்க வேண்டும் என்பதையே விரும்புகின்றோம்! இது தொடர்பாக அழுத்தம் கொடுக்க வேண்டியவர்கள் பொது மக்களே! சுரேஷ் பிறேமச்சந்திரன்


Recommended Posts

கடந்த 2014.10.04 ஆம் திகதி கோப்பாய் தொகுதி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிளைக்குழுவை தெரிவு செய்யும் நிகழ்வு. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நீர்வேலி பணிமனையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும், பேச்சாளருமான சுரேஷ் பிறேமச்சந்திரன் கலந்து கொண்டு உரையாற்றியிருந்தார். அதில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விரைவில் பதியப்பட வேண்டுமெனவும், அதுவே ஒட்டுமொத்த தமிழ் மக்களின் கோரிக்கையாக உள்ளதெனவும் தெரிவித்தார். அதை கூட்டத்தில் கலந்து கொண்ட அனைவரும் ஏக மனதாக ஏற்றுக் கொண்டனர்.

suresh_kopai.1.png

அவரது முழுமையான உரை…

சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்ற கூட்டத்தில் வவுனியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் அவர்கள் வடமாகாண சபை முதலமைச்சரிடம் கேட்டிருந்தார் நீங்கள் கூட்டமைப்பு சார்பாக தெரிவு செய்யப்பட்டுள்ளீர்கள் நீங்கள் எந்த கட்சிகள் சார்ந்தும் கருத்துக்களை வெளியிடக் கூடாதென்றும், கூட்டமைப்பென்பது நான்கைந்து கட்சிகள் சேர்ந்த கூட்டு. நீங்கள் நீதிபதியாக இருந்தவர் நடுநிலை தவறாது எல்லோரையும் இணைத்து செயற்பட வேண்டுமென கேட்டிருந்தார். அதற்கு பதிலலித்த முதலமைச்சர் “தான் ஆயுதம் தரித்திருந்த அமைப்புகளுடன் சேர்ந்து வேலை செய்ய முடியாதென” தெரிவித்திருந்தார். அதற்கு நான் சொன்ன பதில் “இதை நீங்கள் எப்போது சொல்லியிருக்க வேண்டுமென்றால். உங்களை வேட்பாளராக நியமிக்க முன்னர் நாங்கள் அனைவரும் உங்கள் வீட்டுக்கு வந்தோம். நீங்கள் சொன்னீர்கள் கூட்டமைப்பில் உள்ள எல்லோரும் ஏற்றுக் கொண்டால் தான் வருவீர்களென்று, ஆகவே இப்ப நீங்கள் அப்படி பேசுவது பிழையான விசயம். அது மாத்திமல்லாமல் நீங்க்ள தேர்தல் காலத்திலும் பிரபாகரன் ஒரு பெரிய போராட்ட வீரன் என்றெல்லாம் நீங்கள் சொன்னீர்கள். இப்ப இப்படி கதைப்பதெல்லாம் தவறு, ஆயிரக்கணக்கான ஆண்களும், பெண்களும் தங்கள் உயிரை தியாகம் செய்ததை முக்கியத்துவப்படுத்தாவிட்டாலும் கொச்சை படுத்தக் கூடாது. இவை தான் நான் அவருக்கு சொன்ன பதில்.

suresh_kopai.2.png

கூட்டமைப்புக்குள் தமிழரசுக் கட்சி தவிர ஈ.பி.ஆர்.எல்.எவ், ரெலோ, புளொட் போன்ற கட்சிகள் ஒரு காலக்கட்டத்தில் ஆயுதம் ஏந்தி போராடின. 1987 ஆம் ஆண்டு இவர்கள் அனைவரும் தங்கள் ஆயுதங்களை கைவிட்டு இலங்கை தேர்தல்கள் திணைக்களத்தில் தங்கள் கட்சிகளை பதிவு செய்தனர். இன்றைக்கு 25 வருடங்களுக்கு மேலாக ஒரு ஜனநாயகபூர்வமான கட்சிகளாக செயற்பட்டு வருகின்றார்கள்.

நான் இப்போது பாராளுமன்றத்தில் மூன்றாவது முறையாக இருக்கின்றேன். 15 வருடங்களாக பாராளுமன்றத்தில் இருக்கின்றேன். இப்போது எங்களை ஆயுத குழுவென்று சொல்வது எந்த வகையில் நியாயம். 25 வருடங்களுக்கு முன்னர் ஆயுதங்களை கையளித்து விட்டோம். நீங்கள் இப்போது இவ்வாறு சொல்வது நியாயமற்றது என்பதுடன் போராட்டத்தை கொச்சைப்படுத்துவதாகவும் இருக்கின்றது.

suresh_kopai.3.png

மாவை சேனாதிராசா அவர்கள் இங்கிலாந்தில் வழங்கிய ஒரு செவ்வியில் கூட்டமைப்பு பதியப்பட தேவையில்லையென தெரிவித்திருந்தார். இதில் முக்கியமான விடயம் என்னவென்றால் நாங்கள் எங்கள் கட்சிக்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை. கூட்டமைப்பை ஒரு கட்சியாக வைத்திருக்க வேண்டும் என்பதையே விரும்புகின்றோம். இது தொடர்பாக அழுத்தம் கொடுக்க வேண்டியவர்கள் பொது மக்களாகவே இருக்கின்றார்கள். இது வெறும் பாராளுமன்ற உறுப்பினர்களையோ, மாகாணசபை உறுப்பினர்களையோ எடுக்கின்ற விடயமல்ல.

செல்வநாயகம் காலத்தில் தொடக்கி வைக்கப்பட்ட தமிழரின் உரிமை போராட்டம் என்பது இன்னும் முடியவில்லை. இன்னும் இராணுவ ஆக்கிரமிப்புள்ளது, மக்களின் காணிகளை இராணுவம் வைத்திருக்கின்றது. இவ்வாறான ஒரு சந்தர்ப்பத்தில் நாங்கள் அனைவரும் ஒருமித்து பயணிக்க வேண்டும்.

வலிகாமம் கிழக்கு பிரதேச சபையில் உதயகுமார் தவிசாளராக இருந்தார். அவர் மீது பல குற்றச்சாட்டுக்களை முன் வைத்து எதிர்கட்சியான ஈ.பி.டீ.பினை சேர்ந்த உறுப்பினர்களுடன், தமிழரசுக் கட்சியின் உறுப்பினர்களும் இணைந்து பல்வேறுபட்ட பிரச்சினைகளை உருவாக்கினர். அவர் மீதான எந்த குற்றச்சாட்டுக்களும் இதுவரை நிரூப்பிக்கடவில்லை. பின்னர் க.துரைசிங்கம் அவர்களை தவிவாளராக வலிகாமம் கிழக்கு பிரதேச சபைக்கு தெரிவு செய்தோம் அவருக்கும் பல பிரச்சினைகளை ஏற்படுத்தி கூட்டத்தை கூட்ட விடுகின்றார்கள் இல்லை. இன்றைக்கு இந்த நிலைமைதான் காணப்படுகின்றது. இவ்வாறு குழப்பம் விளைவிப்பவர்கள் மீது எந்தவிதமான ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க முடியாத சூழலே காணப்படுகின்றது. ஆனால் இவ்வாறு குழப்பம் விளைவிப்பவர்கள் அனைவரையும் மக்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினராகவே பார்க்கின்றனர்.

உள்ளூராட்சிமன்றங்களுக்கான ஆயுட்காலம் முடிவுறும் காலம் நெருங்கிவிட்டது. இனியாவது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஒழுங்கான முறையில் கட்டமைக்கப்பட்டு தமிழ் மக்களின் அபிலாசைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும். என தனது உரையில் தெரிவித்தார்.

இந்த கலந்துரையாடலின் நிறைவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கோப்பாய் கிளைக்குழு தெரிவு செய்யப்பட்டது, இதில் தலைவராக கணபதிபிள்ளை துரைசிங்கம் அவர்களும், செயலாளராக நவரட்ணம் காண்டீ அவர்களும், பொருளாளராக கு.சோதிலிங்கம் அவர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.

http://www.pathivu.com/news/34361/57//d,article_full.aspx

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 2 நிமிடம் மட்டுமென்பதால் பார்த்தேன். மேலே சிவகுமார் கேட்பதற்கும் செந்தமிழன் சீமான் தன் மகனை ஆங்கிலம் மூலம் கல்வி கற்பிக்கும் பாசாங்குச் செயலுக்கும் என்ன சம்பந்தம்? "தமிழ் நாட்டில் தமிழ் கட்டாயம் படிக்க வேண்டும் என்ற சட்டம் இல்லாதிருப்பது திமுக வின் தவறு, எனவே தான் சீமான் மகனை ஆங்கில மூலம் படிப்பிக்கிறார்" என்கிறீர்களா😂? "சட்டம் போட்டால் செய்வேன், போடா விட்டால் செய்யாமல் பேச மட்டும் செய்வேன்!" என்பது தானே சீமான் அவர்களின்  பாசாங்கு (hypocrisy) என்கிறோம்?  உண்மையில், சீமானும், அவர் விசிறிகளும் தமிழ் மொழிக்குச் செய்வதை விட அதிகமாக தற்போதைய திமுக அரசு செய்து வருகிறது. நானும் சில முயற்சிகளில் பங்களித்திருக்கிறேன். சொற்குவை என்ற கலைச்சொல்லாக்கத் திட்டம் பற்றி எத்தனை பேர் அறிந்திருக்கிறீர்கள்? "பேச்சுக்கு முன்னால் ஸ் போட்டு ஸ்பீச் வந்தது" என்று சீமான் அவிழ்த்து விடும் அரைவேக்காட்டு கருத்துகளுக்கு விசிலடிக்கும் சீமான் தம்பிகள் பலருக்கு, சொற்குவை, தமிழ் சொல்லாக்கப் பயிலரங்கு, தமிழ் மொழி இயக்ககம், இவை பற்றி ஏதாவது தெரியுமா என்று கேட்டுப் பாருங்கள். ஒன்றும் தெரிந்திருக்காது. ஏனெனில், எதை எப்படி பேசுகிறார் என்று கேட்டு கைதட்டும் கூட்டமாக சீமான் விசிறிகள் இருக்கிறார்கள். செயல், விளைவு ஆகியவை பற்றி ஒரு அக்கறையும் கிடையாது!
    • சிறையில் ஒரு மட்டுப்படுத்தப்பட்ட அளவில் தானே இருக்கும். அது தானை உங்கள் கவலை அண்ணா?😜
    • நீதிமன்ற அவமதிப்பு, இனங்களுக்கு இடையில் முரண்பாடு தோற்றுவித்தமைக்காக 201´ம் ஆண்டு   ஞானசார தேரருக்கு 4 வருட கடூழிய சிறைத் தண்டனையும் ஒரு இலட்சம் ரூபா அபராதமும் விதிக்கப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டிருந்த இவரை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன  பொதுமன்னிப்பு வழங்கினார். மிக  விரைவில்... இருமுறை பொதுமன்னிப்பு பெற்றவர் என்ற விதத்தில் தேரர் "கின்னஸ் சாதனை புத்தகத்தில்" இடம் பெற சாத்தியங்கள் நிறைய உண்டு.  😂 ஞானசார தேரருக்கு பிரான்சில் மனைவியும் இரண்டு பெண் பிள்ளைகளும் வசித்து வருவதாக அவரின் முன்னாள் கார் சாரதி, படங்களுடன் வெளியிட்ட  செய்தி யாழ்.களத்திலும் வந்து இருந்தது.
    • 5 எள்ளு பாகுகள் பாக்கெட்டில் அடைத்து லேபல் ஒட்டி - வீட்டில் போய் வாங்கினால் ரூ 200 ( 50 பென்ஸ்). இலண்டனில் தமிழ் கடையில் குறைந்தது £3.50? ஏற்றுமதி செலவை கழித்து பார்த்தாலும்? பிகு எள்ளை இடித்து மாவாக்கி பிசையும் உருண்டை. எள்ளுருண்டை அல்ல.
    • அவள் ஒருநாள் வீதியோரம் கூடை நிறைந்த கடவுளர்களை கூவிக் கூவி விற்றுக்கொண்டிருந்தாள்   போவோர் வருவோரிடம் 'கடவுள் விற்பனைக்கு' என்று கத்திச் சொன்னாள்   அவள் சொன்னதை யாரும் கவனித்ததாகத் தெரியவில்லை   பிள்ளை பாலுக்கு அழுதது கடவுளர்களின் சுமை அவளின் தலையை அழுத்தியது   'கடவுள் விற்பனைக்கு' அவள் முகம் நிறைந்த புன்னகையுடன் மீண்டும் கூவினாள்   கடவுள் மீது விருப்புற்ற பலரால் கடவுள் அன்று பேரம் பேசப்பட்டார்   அந்நாளின் முடிவில் அவளின் வேண்டுதலை ஏற்றுக் கடவுளர்கள் அனைவரும் விலை போயினர்     தியா - காண்டீபன் மார்ச் 29, 2024 காலை 7:20
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.