Jump to content

ஜெர்மனியில் தமிழர்கள் நிகழ்வுகளை. நடத்துவதர்க்காக ஒரு மண்டபத்தை திறக்க இருக்கும் சபேசன் அண்ணாவை வாழ்த்துவோம்


Recommended Posts

தமிழர்கள் தமது நிகழ்வுகளை நடத்துவதற்கு வசதியாக ஜேர்மனியில் டோட்முண்ட் நகரில் ஒரு மண்டபத்தை திறக்கின்றேன். 150 பேர் வரை அமரக்கூடிய இடத்தினைக் கொண்ட மண்டபம் அது.

டோட்முண்டில் உள்ள முக்கிய வீதிகளில் ஒன்றான றைனீச ஸ்ராஸ (Rheinische Str) ஒரு தமிழர் பகுதியாக மாறிக் கொண்டு வருகின்றது. 30இற்கும் மேற்பட்ட தமிழர் நிறுவனங்கள் அமைந்திருக்கின்ற பகுதி அது. அதில்தான் 'தமிழர் அரங்கு' என்று பெயரிடப்பட இருக்கும் இந்த மண்டபமும் அமைந்திருக்கிறது.

கலை நிகழ்வுகள், புத்தக வெளியீடுகள், மொழி வகுப்புகள், கலை வகுப்புக்கள் போன்ற பல விடயங்களை இந்த மண்டபத்தில் நடத்திக் கொள்ளலாம்.

பல தமிழர்கள் வந்து செல்கின்ற வீதியில் அமைந்திருப்பதால், ஒரு நூல்நிலையத்தை இந்த மண்டபத்தில் அமைக்கவும் திட்டமிட்டுள்ளேன்.

மண்டப முகவரி:

Rheinische Str 76

44137 Dortmund

08.10.2014 புதன்கிழமை 11 மணியிலிருந்து இந்த மண்டபம் திறக்கப்படுகிறது. வரக்கூடிய தொலைவில் வசிப்பவர்கள் அன்றைய நாள் வந்து மண்டபத்தை பார்வையிட்டு, தமது கருத்துக்களையும் வாழ்த்துக்களையும் வழங்கினால் மிக்க மகிழ்ச்சி அடைவேன்.

FB

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் சபேசன். மாவீரர் நிகழ்வு நடத்தக்கூடிய மண்டபத்தை நீங்கள் அமைக்கும் நிலை வர வாழ்த்துக்கள்.

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் சபேசன். வேலைநாள் ஆனபடியால் நேரில் வரமுடியாது. இன்னொரு நாள் உங்கள் மண்டபத்திற்கு வருவேன் குடும்ப சகிதம். உங்கள் முயற்சி வெற்றிபெற வேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெற்றிபெற  வாழ்த்துக்கள்...

 

தமிழர் எவராயினும் சுய  தொழிலில் ஈடுபடவேண்டும் என எங்கும் சொல்பவன்

இங்கும் தொடர்ந்து எழுதிவருபவன்....

 

நல்லதொரு செய்தி எனக்கு..

 

மேலும் மேலும் வளர்ந்து ஆயிரக்கணக்கானவர்கள்  அமரக்கூடிய  வசதிகளுடன் வளர வாழ்த்துகின்றேன்.

 

இந்த மண்டப தொழிழில் நண்பர்கள் சிலர் ஏற்கனவே இருப்பதால் ஒரு விடயத்தை சொல்லலாம் என நினைக்கின்றேன்

மண்டபத்துடன் நின்றுவிடாது

மண்டப அலங்காரம்

ஒலி ஒளி  அமைப்பு

படப்பிடிப்பு

வாகன சேவை   மற்றும் வாகன தரிப்பிடம்

சிற்றூண்டிகள் சாப்பாடு மற்றும்  குளிர்பானங்கள்

மண்டப துப்பரவு..........

 

இவற்றையும் சேர்த்து செய்வதே  லாபகரமானது....

 


அத்துடன் யாழுக்கும் ஒரு விளம்பரம் கொடுத்துவிடுங்கள்....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல முயற்சி சபேசன் வாழ்த்துக்கள்.இந்துக்களது திருமணத்திற்கு மண்டபத்தை வாடகைக்கு கொடுப்பாரா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல முயற்சி சபேசன் வாழ்த்துக்கள்.இந்துக்களது திருமணத்திற்கு மண்டபத்தை வாடகைக்கு கொடுப்பாரா?

 

ஆசை தோசை அப்பளம் வடை.....

Link to comment
Share on other sites

சிறு துளி பெருவெள்ளம். 150 இருக்கைகள் 1500ஆகி 3000தொட்டு மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்!! :rolleyes:  
 
அத்துடன் எங்களுடைய சில அனுபவங்களையும் தங்களுடன் பகிர்ந்து கொள்ளவது நல்லது. மண்டபத்தை இலகுவாகவும், துரிதமாகவும் சுத்தம் செய்யக்கூடிய வகையில் இருக்கைகளை அமைத்துக் கொள்ளவும்.  :icon_idea:
 
இனிப்புச் சுற்றிய காகிதங்களையும், கச்சான் கடலை வடை காவிய பைகளையும், மீளளிப்புப் பெறமுடியாத பானக புட்டிகளையும் சில வேளைகளில் பிள்ளைகளின் சந்தணம் தீர்த்தம் நிரம்பிய பொதிகளையும் யேர்மன்காரனது மண்டபத்தில் வீசி எறிவதற்கு மனம் சற்றே கூச்சமடைந்து நாங்கள் சிலர் கவலைகொள்வோம்.  :(
 
தமிழனுடைய மண்டபம் ஆகா.....! எங்கள் மண்ணின் மைந்தனது மண்டபம்...!! ஆனந்தமாக எதையும் எங்கும் வீசி எறியலாம்...!!!.  :D  :lol:  :wub:
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள்..!

 

 

...
தமிழனுடைய மண்டபம் ஆகா.....! எங்கள் மண்ணின் மைந்தனது மண்டபம்...!! ஆனந்தமாக எதையும் எங்கும் வீசி எறியலாம்...!!!.  :D  :lol:  :wub:

 

 

குழுச் சண்டை போடுவதானாலும் 'தமிழன்' மண்டபத்துக்குள்ளேயே வைத்துக்கொள்ளலாம் தானே? :):lol:
 

Link to comment
Share on other sites

வாழ்த்துக்கள் சபேசன்..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது வர்த்தக விளம்பரமா.. சேவை விளம்பரமா..??!

 

எதுஎப்படியோ.. முயற்சிக்கு வாழ்த்துக்கள். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது வர்த்தக விளம்பரமா.. சேவை விளம்பரமா..??!

 

எதுஎப்படியோ.. முயற்சிக்கு வாழ்த்துக்கள். :)

 

வர்த்தக சேவை கேள்விப்பட்டதில்ல?  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உலகத்தமிழர் பண்பாட்டு இயக்க மாநாட்டில் வாரவிடுமுறை நாட்களில் சபேசனைச் சந்தித்த போது இப்படியான நிகழ்வு நடக்க இருப்பதாகக் கூறினார். நேரம் இருந்தால் என்னையும் வந்து கலந்துகொள்ளும்படி கூறினார்.

 

அழைப்பிற்கு நன்றி சபேசன். அவசியம் வருவேன்.

பல முறை அவரைக் கண்டாலும் சனிக்கிழமை அவருடன்  சில நிமிடங்கள் கதைத்தேன். என்னை அறிமுகம் செய்து விட்டு நீங்கள் யாழ்ப்பக்கம் இப்போது அடிக்கடி வருவதில்லையே என்றேன்.
முகநூலில் அதிகம் நேரத்தை இழப்பதால் எழுதுவது குறைவு. ஆனாலும் தவறாமல் யாழை வாசிப்பதாகக் கூறினார். பொதுவாக யாழைப்பற்றிக் கதைத்தோம். முன்பு இருந்த மாதிரி இப்போது யாழ்  இல்லை எனக் குறைப்பட்டுக்கொண்டார்.

கதைப்பதற்கும் பழகுவதற்கும் இனிமையானவராக இருந்தார்.
இளம் வயதில் இந்த எழுத்தாற்றல் உங்களிடம் எப்படி வந்தது என வியந்தேன் . யாழில் பல காலமாக இருந்தாலும் அன்றைய காலகட்டத்தில் கருத்துக்களால் மோதியது போன்று இன்று கருத்தாடுவது மிகவும் கடினமானதாக இருப்பதாக அங்கலாய்த்தார்.

மிகுதி எழுத நேரம் இல்லை ..... :D:lol:



.
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் சபேசன். :)

எட்டாம் திகதி  வர முடியாவிட்டாலும், டோட்முண்ட் பக்கம் வரும் போது... நிச்சயம் உங்கள் மண்டபத்திற்கு வருவேன்.
மண்டபத்தை பார்க்கும்... ஆவலை, கட்டுப்படுத்த முடியாமல் இருப்பதால்... மண்டபத்தின், அஞ்சாறு படங்களை இணைத்து விடவும். :D

Link to comment
Share on other sites

மிக்க மகிழ்ச்சி , வாழ்த்துக்கள் சபேசன். 

சுவிஸ் , ஜேர்மன் யாழ் கள உறவுகளின் ஒன்றுகூடல் ஒன்றினை உங்கள் மண்டபத்தில் நடாத்துவோம்

Link to comment
Share on other sites

நன்றி நண்பர்களே!

நேற்று வாத்தியார் வந்து வாழ்த்தி விட்டு போனார். அவர் சொல்லித்தான் இங்கே யாழ் களத்தில் இப்படி என்னை வாழ்த்துகிறார்கள் என்பதை அறிந்து கொண்டேன். மண்டப வேலையால் யாழ் களப் பக்கம் சில நாட்கள் வரவில்லை.

நேற்று 11 மணியிலிருந்து மாலை 7 மணி வரை பலர் தொடர்ச்சியாக வந்து வாழ்த்தியும் தமது கருத்துக்களை பகிர்ந்தும் சென்றிருந்தார்கள்.

சில படங்கள் எனது முகநூல் பக்கத்தில் இருக்கின்றன.

https://www.facebook.com/shabesanv/media_set?set=a.734848759896956.1073741827.100001155168574&type=1

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாழ்த்துக்கள் சபேசன்...!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தமிழக தேர்தல் நிலவரம் – தந்தி டிவி கருத்துக்கணிப்புகள் தெரிவித்திருப்பது என்ன? திமுக 34 இடங்களில் வெல்லும். அதிமுக ஒரு இடத்தில் கூட வெற்றிபெறாது. பாஜக 1 இடத்தில் வெற்றிபெறும். இழுபறி நீடிக்கும் இடங்கள் 5 என தந்திடிவி தெரிவித்துள்ளது இந்திய நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் 5 தொகுதிகளில் கடுமையான இழுபறி நீடிக்கும் என்று தந்தி டிவி கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த தொகுதிகளில் பாஜக அதிமுக திமுக இடையே கடுமையான போட்டி நிலவும் என்று கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் நாளை மறுநாள்  தேர்தல் நடக்க உள்ளது. திமுக அதிமுக பாஜக நாம் தமிழர் கட்சிகள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. தமிழ்நாட்டில் 4 முனை போட்டி தீவிரமாக நிகழ்ந்து வருகிறது. இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டிருக்கிறது. தமிழ்நாட்டை பொறுத்த அளவில் வரும் ஏப்ரல் 19ம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. இதில் திமுக 21 தொகுதிகளும் அதன் கூட்டணி கட்சிகள் மற்ற தொகுதிகளிலும் போட்டியிடுகின்றன. தேர்தல் தொடர்பாக வரிசையாககருத்துக்கணிப்புகள்   வெளியாகி வருகின்றன. அந்த வகையில்  தேர்தல் தொடர்பாக தந்தி டிவி கருத்துக்கணிப்பை மேற்கொண்டுள்ளது மொத்தமாக திமுக 34 இடங்களில் வெல்லும். அதிமுக ஒரு இடத்தில் கூட வெற்றிபெறாது. பாஜக 1 இடத்தில் வெற்றிபெறும். இழுபறி நீடிக்கும் இடங்கள் 5 என தந்திடிவி தெரிவித்துள்ளது : வேலூர் திருநெல்வேலி கோயம்புத்தூர் கள்ளக்குறிச்சி பொள்ளாச்சி உச்சக்கட்ட  ஆகிய இடங்களில் இழுபறி நீடிக்கும் என்று கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதில் வேலூர் திருநெல்வேலி கோயம்புத்தூர் ஆகிய தொகுதிகளில் திமுக – பாஜக இடையே இழுபறி நீடிக்கும். கள்ளக்குறிச்சி பொள்ளாச்சி ஆகிய தொகுதிகளில் அதிமுக – திமுக இடையே இழுபறி நீடிக்கும் என்று தந்தி டிவி கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. வாக்கு சதவிகிதம்: திமுகவிற்கு வாக்கு அளிப்போம் என்று 42 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர். அதிமுகவிற்கு வாக்கு அளிப்போம் என்று 34 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர். பாஜகவிற்கு வாக்கு அளிப்போம் என்று 18 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர். நாம் தமிழருக்கு வாக்கு அளிப்போம் என்று 5 சதவிகிதம் பேர் தெரிவித்துள்ளனர் : புதுச்சேரியில் பாஜகவிற்கான வெற்றி வாய்ப்பு உள்ளதாக கருத்து கணிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.   https://akkinikkunchu.com/?p=274079
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.