Jump to content

பயங்கரவாதிகள் .


arjun

Recommended Posts

ஏதேதோ நினைவுகள் வந்து மனதை தொடர்ந்தும் குழப்ப நித்திரை கொள்ளமுடியாமல் படுக்கையை விட்டு எழும்பி படிகளில் இறங்கி வீட்டின் சிற்றிங் ரூமிற்கு வருகின்றேன் .அக்காவின் மகன் எனக்கு முதலே எழும்பிவந்து தொலைகாட்சியில் சத்தத்தை குறைத்து  வைத்து Sesame Street  பார்த்துக்கொண்டு இருந்தவன் என்னை கண்டதும் சத்தம் போடவேண்டாம் என்று வாயில் விரலை வைத்து சிக்னல் போடுகின்றான் .அப்படியே அவனை தூக்கி மடியில் வைத்தபடி நானும் Elmo ,Cookie  Monster களின் விளையாட்டுகளை ரசித்தபடி  அவனுடன் சேர்ந்து Sesame Street  பார்க்க தொடங்குகின்றேன் .
 
 
இந்தியாவால் லண்டன் வந்து சேர்ந்து இருமாதங்கள் ஆகின்றது .அக்கா வீடுதான் வாசம் .அத்தானும் அக்காவும் வாரநாட்களில் வேலை என்று அலைவதால் வாரவிடுமுறையில் பிந்தித்தான் எழும்புவார்கள் .எனக்கு  இந்தியா போக முதல் பகுதி நேரவேலை செய்த ஹோட்டலில் வேலை கிடைத்துவிட்டது .கிழமையில்  ஆறு இரவுகள்  மாலை ஏழுமணி  தொடங்கி காலை ஏழுவரை வேலை .வேலை முடிய வீடு வந்து மருமகனை Daycare  கொண்டுபோய் விட்டுவிட்டுத்தான் நித்திரைக்கு செல்வேன் . இந்த இரு மாதங்களும் நான் அவரை  Daycare  கூட்டி செல்வதால்  என்னுடன் நன்றாக ஒட்டிவிட்டார் .
 
 
மாமா கொப்பி குடிக்க போகின்றார் உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டேன் , Corn Flakes  கொஞ்சம் பாலில் விட்டு தரச்சொல்லிவிட்டு தொலைகாட்சியில் திரும்ப மூழ்கிவிட்டார் .அவருக்கும் போட்டு கொடுத்துவிட்டு நானும் கோப்பியுடன் வந்து சோபாவில் அமர்கின்றேன் .
 
தொலைகாட்சியின்  திரையின் அடிப்பகுதியில் ,
 
 "கிழக்கு லண்டனில் நேற்றிரவு நடந்து கைக்குண்டுவீச்சில்  மூவர் பலி . கிழக்கு லண்டனில் பெருமளவில் குடியேறிவரும் ஆசிய  இனத்தவருக்கு எதிராக தொடரும் நிறவெறி தாக்குதலாக இதுவும் இருக்கலாம் என்று போலீசார் நம்புகின்றார்கள் " 
 
என்று எழுத்தில் ஓடிக்கொண்டிருக்கின்றது .
 
 
எனது உடம்பு சற்று குளிர்ந்து நடுங்கதொடங்கியது , உள்மனம் எதோ நடக்க கூடாதது நடந்துவிட்டது என்று சொல்லுது .நேரம் காலை எட்டுத்தான் ஆகின்றது ,ஞாயிறு காலை இந்த நேரம் நண்பர்களுக்கு தொலைபேசி அடிப்பதும் சரியில்லை .மருமகனிடம் ஒரு நிமிடம் என்றுவிட்டு சானலை மாற்றுகின்றேன் ,எரிகின்ற வீட்டை காட்டுகின்றார்கள் .எம்மவர் பலர் தான் அந்த வீட்டை சுற்றவர நிற்கின்றார்கள் .
 
அத்தான் படிகளில் இறங்கி வரும் சத்தம் கேட்கின்றது .
 
 
வேலை எப்படி போகுது ,ஆறுநாள் பன்னிரண்டு மணிநேர வேலை  கஷ்டமாகத்தான் இருக்கும் ,கொஞ்ச நாளுக்கு பல்லைகடித்துக்கொண்டு வேலை செய்து சிறிதுபணம் சேமித்துவிட்டு எதையாவது படி , எவ்வளவு காலத்திற்கு அரசியல் சினிமா விளையாட்டு என்று திரியபோகின்றாய் .உன்னோடு வந்தவங்கள் கலியாணமும் கட்டி அவனவன் வீடும் வாங்கிவிட்டான் . எனது நண்பனின் தங்கச்சி ஒரு ஆள் இருக்கு , அவன்தான் கேட்டவன், பிள்ளை  Barclays Bank இல்  வேலை செய்யுது, British Citizen  .உனக்கு விசா பிரச்சனையும் தீர்ந்துவிடும்.அத்தான் அடுக்கிக்கொண்டே போகின்றார்   .
 
 
எனக்கு மண்டை முழுக்க பிரச்சனை , இந்தியாவில் அந்த வயது போன மனுசி ரெயின் ஏற்றும் போது கையை பிடித்து தந்த பெடி இன்னமும் ஊர் போய்சேரவில்லை , கிழக்கு மாகாண பெடிகள் நாலு பேர் பங்களாதேசில் வந்து நின்று கொண்டு காசு கேட்கின்றார்கள் , அத்தானிடம் வாங்கிய கடன் இன்னமும் கொடுக்கவில்லை , பிணையில் லண்டனுக்குள் விட்டவர்கள் அடுத்த விசாரணையில் என்ன சொல்ல போகின்றார்களோ ? இவற்றுடன் சேர்ந்து  இப்ப புதிதாக இந்த குண்டுவெடிப்பு.
 
 
குண்டுவெடிப்பு 
 
நான் இந்தியாவால் வந்து இறங்கிய முதல் சனிக்கிழமையே எனது முந்நாள் நண்பர் கூடத்தில் பார்ட்டிக்கு ஏற்பாடுசெய்துவிட்டார்கள் .இரண்டு மூன்று புதியமுகங்களை தவிர அனைத்தும் பழைய நண்பர்கள் ,கிரிக்கெட் மாட்ச் முடித்து சிலர் யுனிபோர்மில் , பியர் ,விஸ்கி ,வோட்கா  ஆறாக ஓட  நான் முன்னர் வாழ்ந்த லண்டன் வார இறுதி விடுமுறைகள்  கண்ணில் வருகின்றது  .நான் இன்னமும் மாநாடு குழம்பிய நாளில்  இருந்து முற்றிலும் வெளிவரவில்லை . அங்கு தோழர்கள் படும்பாட்டையும் இங்கு நண்பர்களின் செயல்களையும் பார்க்க கோபமாக இருக்கு . புலம்பெயர்ந்தவர்களுக்கு அரசியல் என்பது பத்தோடு பதினோன்றான ஒரு விடயம் தான் , நண்பர்களில்  கோபப்பட்டு எந்த பிரயோசனம் இல்லை .
 
 
இன்ஜீனியர் நண்பர் ஆட்டு இறைச்சி கறிக்கு கடையில் வாங்கும் மிளகாய் தூள் ருசியில்லை என்று  தூள் தயாரிக்கும் பணியில் ஈடுபட,  மிளகாய் வறுக்கும் வாசம் மூக்கை துளைகின்றது .போராட்டம் எப்படி போகும் என்று விசாரித்தவர்களை  விட நான் உயிரோடு தப்பி வந்தது பெரிய விடயம் என்று ஆறுதல் சொன்னவர்களே அதிகம் .
 
 
நேரம் பத்து மணி தாண்ட யாரோ கதவு தட்டும் சத்தம் கேட்டு திறந்தால் இருவர் உள்ளே வருகின்றார்கள் .இருவரையும் எனக்கு நன்கு தெரியும் ஆனால் நெருங்கிய நண்பர்கள் இல்லை .அவர்களும் பார்ட்டியில் சங்கமிக்கின்றார்கள் .வந்தவர்களில் ஒருவர் தாங்கள் இங்கு வரமுதல் ஒரு பப்பிற்கு பியர் குடிக்க சென்றதாகவும் அங்கு ஒரு தமிழ் செட் இருந்து தேவையில்லாமல் கொளுவிக்கொண்டு இருந்ததாகவும் சொன்னார் .அவர் சொன்னதை பெரிதாக யாரும் காதில் எடுத்ததாக தெரியவில்லை .அந்த பப்பிற்குள் உந்த ஊத்தை கோஸ்டி இருக்கு என்று தெரிந்துதான் நாங்கள் எவரும் அந்த பப்பிற்கு போவதில்லை என்று வேறொரு நண்பர் சொன்னார் . 
 
 
சிறிது நேரம் செல்ல அதே நண்பர் அதே கதையை மீண்டும் தொடங்கி இவங்களை இப்படியே விட்டு வைக்ககூடாது ,ஒரு  சோலியும் சுரட்டும் இல்லாத ஆட்களே ஸ்டேசனில் இறங்கி வீடு  செல்லும் போது அலுப்பு கொடுக்கின்ற கோஸ்டி அது. பெண்களையும் கூட விட்டு வைப்பதில்லை என்றார்.
 
 
தண்ணி உள்ளே இறங்க இறங்க அவரும் திரும்ப திரும்ப அதை சொல்ல இரண்டு கார்களில் பத்து நண்பர்கள் இன்றைக்கு எப்படியும் அவர்களை ஒரு கை பார்க்கவேண்டும் என்று புறப்படுகின்றார்கள் .எவரது சொற்களையும் கேட்கும் நிலையில் அவர்கள் அப்போது இல்லை .மீதம் இருப்பவர்களுடன் பார்ட்டி தொடர்கினது .
 
 
ஒரு மணித்தியாலம் ஆகின்றது போனவர்களை காணவில்லை .
 
 
(எம்மவர் பயங்கரங்கள் தொடரும் )
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாரும் தொடரும் எண்டால் நாங்கள் என்ன செய்யிறது ????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள்...

என்னிடமும் ஒரு மறுபக்கமுண்டு

அதை எங்கும் எழுதியதில்லை

எழுதுவதில்லை

சும்மாவே பயங்கரவாதிகளாக்கப்பட்டவர் நாம்....

பொல்லைக்கொடுத்து ஏன் அடி வாங்குவான்

அதிலும் தனிப்பட எனக்கு விழுந்தால் தாங்கலாம்

ஒரு இனத்தையே சேர்த்துவிடுவார்கள்....... :(  :(  :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் அண்ணா.நீங்கள் செய்தவற்றையும்[உங்கள் பயங்கரவாதத்தையும்] எழுதுங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் அண்ணா. வாசிக்க காத்திருக்கின்றோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கோஷ்டி மோதல்களை.... வாசிக்க, ஆவலாக உள்ளது. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எழுதுங்கள் வாசிக்கின்றோம்...! :)

Link to comment
Share on other sites

தாக்குதல் வெற்றி என்று திரும்பிவந்தவர்களின் உடல்மொழியில் தெரிந்தது .தலைகள் தப்பிவிட்டதாகவும் இருந்தாலும் நாலு வாலுகளை வெளியில் இழுத்துக்கொண்டுவந்து  இரண்டு கொடுத்துவிட்டு வந்ததாக பெருமைபட்டார்கள் . அதில் ஒருவர் காலில் விழுந்து அண்ணை உங்களை எனக்கு தெரியும் ஒன்றும் செய்து போடவேண்டாம் என்று  மன்னிப்பு  கேட்கும் போது,  என்ன பிரச்சனை என்று ஓடிவந்த மலையாளிக்கு கன்னத்தில் கொடுத்தது காதிற்குள் ரெயில் ஓடியிருக்கும் என்று சொல்லி சிரித்தார்கள் .தலைகளை தேடி கார்களில் ஒரு சுற்று சுற்றி ஒரு தலையின் வீட்டு லைட் எல்லாம் அணைத்து பூட்டியிருக்க வெளியில் நின்ற காரின் கண்ணாடியை உடைத்து விட்டு வந்துவிட்டார்கள் .
 
 
எந்த ஒரு குரூப்பிற்கும் ஒரு லீடர் இருப்பார் , இந்த குருப்பின் லீடர் என்று சொன்னால் எனது உயிர் நண்பன்தான் .சிறு வயதில் இருந்து பழக்கம் . படித்தது  ஒரே பாடசாலை , ஊரில் ஒரே கிரிக்கெட் ,உதைபந்து  டீம் . ஆளைப்பார்த்தால் விஜயகாந்த் மாதிரியிருப்பார்,  அதனால் தானோ என்னவோ அவர் கடந்தகாலமும் விஜயகாந்த் படம் மாதிரி ஒரே அடிபிடிதான் .ஆள் மிகவும் மென்மையான சுபாவம் ஆனால் நண்பர்களுக்காக நியாயம்  கேட்டு போவார் பின்னர்  அது அடிபிடியில் முடிந்துவிடும் .நேற்றும் இவர்தான் தலைமை தாங்கி போனார் .
 
 
நேற்று  சபேசன்  Dortmund இல்  மண்டபம் திறந்தார்  என்று எழுதியதும் விஜயகாந்தின் நினைவுதான் எனக்கு முதலில் வந்தது . 79-84 வரை Dormund இல்  இவர் ரொம்ப பிரபலம் என்று கேள்வி . பின்னர் இலங்கை போய் லண்டன் வந்துவிட்டார். இவர் நாட்டில் போய் நின்ற சில மாதங்களும் எமது இயக்தவர்கள் சிலரை சந்திருக்கின்றார்.  அவர் வந்து சொன்ன  இயக்க கதைகளில் தான்  நானும் கொஞ்சம் இழுபட்டு லண்டனில் இருந்த  எமது அமைப்பு பொறுப்பாளரை போய் சந்தித்து பின்னர் முழுமையாக அதில் இணைந்தோம் .
 
 
இன்ஜினியரின்  ருசியான ஆட்டு இறைச்சிகறியுடன்  இரவு சாப்பாட்டை முடித்து பலரும் தமது வீடுகளுக்கு திரும்பிவிட்டார்கள் .ஒரு சிலர் மாத்திரம் Southeast  இருந்து வந்திருந்தார்கள்  மற்றவர்கள் எல்லோரும் மிக அருகில் இருப்பவர்கள் தான் . பார்ட்டி நடந்த வீட்டில் நாலு பேர்கள்  இருந்தார்கள் . அன்றிரவு நானும் அங்கேயே தூங்கிவிட்டேன் .
 
 
அடுத்த நாள் காலை பதினோருமணியிருக்கும் காலிங் பெல் அடிக்கும் சத்தம் கேட்டு  போய் கதவை திறந்தேன் .கதவை தள்ளிபடியே ஒரு கும்பல் வீட்டிற்குள் புகுந்துவிட்டது . பலர் கைகளில் கத்தி, பொல்லு.  ஒருவர் ரிவோல்வரை கொண்டுவந்து எனது கழுத்தில் வைத்திருக்க  முழு வீடும் தேடுதல் வேட்டை நடந்தது  .என்னையும் இன்னொருவரையும் தவிர வீட்டில் எவருமில்லை . அவரையும்  கீழே இழுத்துக்கொண்டுவந்தார்கள். எனக்கே மற்ற மூவரும் அதிகாலை வேலைக்கு போனது தெரியாது .என்னை ஒரு கதிரையில் இருத்திவிட்டார்கள்.  வந்த எவருக்கும் என்னை தெரியவில்லை  ,ஒரு நாளும் சந்தித்ததும் .  முழு மூச்சாக கோபத்தில் ஓடித்திரிந்த ஒருவர் என்னிடம் வந்து ,
 
உன்னை நான் ஒருநாளும் இங்கு காணவில்லையே என்றார் ,
 
போன வாரம் தான் இந்தியாவில் இருந்து வந்ததாக சொன்னேன் .
 
அசையாமல் உந்த கதிரையிலேயே இரு,  என்றுவிட்டு ரிவோல்வர் வைத்திருந்தவரை அதை எடுக்க சொன்னார் .ரிவோல்வர் வைத்திருந்தவர் ஒரு மலையாளி .சில மலையாளிகளும் அவர்களுடன் வந்திருந்தார்கள் .என்னுடன் நின்ற மற்றவரையும் பெரிதாக அவர்கள் அடையாளம் காணவில்லை .அவர் ஒரு லோயர் .திடிரென ஒருவன்  இவரும்  நேற்று சாரத்தோடு வந்தவர் நான் கண்டனான் என்றான் ,  அவருக்கு நாலு அறை விழுந்தது அவர் குனிந்துகொண்டே நின்றார் .
 
 
அவர்களும் பெரிய தலைகளின் வருகையை எதிர்பார்த்து அங்கேயே இருக்கின்றார்கள் .யாரும் வந்தால் பின்னிஎடுத்துவிடுவார்கள் .என்ன செய்வது என்று தெரியவில்லை . பின் பக்க கதவால் ஓடிஇந்த வீட்டு  வளவை தாண்டினால் அடுத்து விஜயகாந் வீடு ஆனால் அந்த துணிவு எனக்கு வரவில்லை .  மணி இரண்டு ஆகின்றது இன்னொரு நண்பர் வந்து கதவை திறக்கும் சத்தம் கேட்க நெஞ்சு பட பட என அடிக்குது ,  விசில் அடித்துக்கொண்டு உள்ளே வந்தவருக்கு சராமாரியாக அடி விழுகின்றது .தலை மயிரை பிடித்து சுவருடன் அடித்ததில் மண்டை உடைந்து இரத்தம் வழிகின்றது .  அவரையும் இப்ப இருத்தியாச்சு .  கடவுளே இனி யார் வரப்போகின்றார்களோ ?  
 
மூன்று மணியாகுது எவரும் வரவில்லை .  அவர்களுக்கும் பார்த்து பார்த்து வெறுத்துவிட்டது போல புறப்படுகின்றார்கள் , போகும் போது சுவருடன் இருந்த Heater ஐ இழுத்துவிட அது உடைந்து தண்ணி சீறுகின்றது ,ஒருவர் அயன் போக்சை தூக்கி சுவருடன் அடித்து  தூளாக்கி விட்டு போகின்றார்  .
 
 
போனில் எல்லோருக்கும் செய்தி பறக்கின்றது .  மண்டை உடைந்தவருக்கு கட்டு போடுகின்றோம் . அரை மணித்தியாலத்தில்  ஒரு கூட்டம் கூடிவிட்டது . ஆறுமணிக்கு  லண்டனின் அனைத்து பகுதியிலும் இருந்து  பெரும்படையே வந்துவிட்டது . அண்ணரும் நண்பர்களுடன் வந்திருந்தார் .  எல்லா திசையிலும் கார்கள் பறக்கின்றது அவர்களில் எவருமே எம்மவர் கண்ணில் படவில்லை . நாளை வேலை நாள் எனவே அடுத்த கிழமை பார்ப்போம் என்று ஒன்பது மணியளவில் படை கலைந்துவிட்டது .
 
 
அன்றிரவும் அங்கேயே தூங்குகின்றேன் .அந்த வீட்டில் இருந்த இருந்த நால்வரில் ஒருவர் மட்டும் எனக்கு புதியவர் .முதன் நாளிரவு பார்ட்டியின் போதே அவரை பார்த்து  யோசித்தேன்  எங்கள் செட்டில் இப்படி ஒருவர்  எப்படி வந்தார் .   அவர் நடை உடை பாவனை அத்தனையும் எமது நண்பர்களை போலல்லாது  மாறுபட்டுஇருந்தது . சினிமா நடிகர்கள் போல் வெள்ளை நிறத்தில் பிரில் வைத்த நைலான் சேர்ட் , மினுங்கல் பாண்ட்ஸ் , எப்போதும் ஒரே சினிமா கதை,  எங்கட பல பகிடிகள் அவருக்கு விளங்கின மாதிரியும் இல்லை அவர்  வேறொரு உலகில் இருந்தார் . அவர் மாஸ்டர் பெட்ரூமில் அதிக வாடகை கொடுத்துக்கொண்டு தனிய இருக்கின்றார் என்று சொன்னார்கள் .இடைக்கிடை யாரையும் தள்ளிக்கொண்டும் வருவாராம். வீட்டுக்கார நண்பனுக்கு வேலை செய்யும் இடத்தில் பழக்கம் ஆனவர் ,ஒரு ஒற்றுமை  அவரும் எமது ஊர் தான் .
 
 
தலையில் கட்டு போட்ட நண்பன் இது தேவையா என்று சிரித்துக்கொண்டு இருந்தார் . இன்ஜினியரும் சற்று வெறி ஏற இதுதான்  படிக்காத கோஸ்டிகளுடன் சேரகூடாது என்று தொடங்கிவிட்டார் . நேற்று அவர் அடிபிடிக்கு போன கோஷ்டியுடன் போகவில்லை போனவர்களை திட்டிக்கொண்டு இருந்தவர் .
 
அப்போது மினுங்கல் பான்ஸ்காரர்  " சும்மா நிண்டவன் போனவன் எல்லாம் இங்கு வந்து விலாசம் காட்டிவிட்டு போகவேண்டாம் . வீடு  தேடியா  வாறாங்கள்   , அவங்களுக்கு நான் தனிய ஒரு அலுவல் பார்க்கின்றன் . " என்றார் .
 
 
அப்போது எங்களுக்கு அந்த வசனத்தின் பாரதூரம் விளங்கவில்லை .
 
 
(குண்டெறி தொடரும் )
Link to comment
Share on other sites

நாளை மிகுதி தொடர இருக்கின்றேன் .

 

இந்த பதிவில் எவர் பெயரும் நான் குறிப்பிட  விரும்பவில்லை காரணம் வேண்டாத பிரச்சனைகள் வரலாம் .

 

ஆனால் உண்மையில் நடந்தது என்ன என்று  பலர் மனதில் சொல்லாமல் இருப்பதை சொன்ன திருப்தி தான் இப்பதிவு .

 

கழுத்தில் ரிவோல்வர் என்று கதைக்கு ருசி சேர்கின்றார் என்று யாரும் நினைக்கவேண்டாம் இது இரண்டாம் தடவை எனக்கு நடந்து .

 

முதலாவது நடந்தது 1981 December 26 பிரான்சில் Place De Clichy என்னுமிடத்தில் கிறிஸ்மஸ் பார்டி .  லண்டன் ஜெர்மன் பிரான்ஸ் நண்பர்கள் ஒன்றாக இருந்து தண்ணியடிக்க சர்வதேச மொழி ஆங்கிலமா பிரெஞ்சா என்ற விவாதத்தில் தர்க்கம் வந்தது .பிரான்ஸ் நண்பரின் நண்பராக அங்கு வந்திருந்த   ஒருவர் (இப்ப படலைக்கு படலை லண்டன் மாமா ,அப்ப அவர் பிரான்சில் தான் இருந்தார்   ) விஜயகாந்தில் கை வைக்க விஜயகாந்  கதிரையால்  லண்டன் மாமாவின் மண்டையை பதம் பார்த்துவிட்டார் .அடுத்தநாள் விஜயகாந்த் வேறு நண்பர்களிடம் போய்விட்டார் .அடுத்தநாள் இரவு   ஜெர்மனில் இருந்து வந்த விஜயகாந்தை தேடி கத்தி பொல்லுடன் பெரியதொரு  பட்டாளம்  வந்தது . அந்த கோஸ்டியின்  தலை வந்து எனக்கு நாலு சாத்து சாத்தி விஜயகாந்த் எங்கே என்று கேட்டு ரிவோல்வரை கழுத்தில் வைத்தது . அடியை வாங்கினேன் ஆனால் வாயை திறக்கவில்லை .அடித்தவர்கள் அடுத்த நாள் வந்து மன்னிப்பு கேட்டதும் நடந்தது .யாருக்கும் வேண்டுமென்றால் தலயின் பெயரை எழுதுகின்றேன் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
படிக்காத கோஸ்டிகளுடன் சேரகூடாது என்று தொடங்கிவிட்டார் .
எங்கயோ வாசித்த ஞாபகம்.....தொடருங்கள் அர்ஜுன்...
Link to comment
Share on other sites

இரண்டு வாரங்கள் ஓடிவிட அடிபிடியின் சூடும் ஓரளவு தணிந்துவிட்டது. படிப்பு வேலை என்று அனைவரும் மீண்டும் சண்டையை மறந்து ஓடத்தொடங்கிவிட்டார்கள் .கைகலப்பு என்ற நிலை மாறி கார் உடைத்தது வீடு புகுந்தது என்று பலர் மனதில் எல்லை மீறிவிட்ட ஒரு கலக்கநிலை .எதிர் கோஷ்டியும் அதே நிலைக்கு வந்திருக்கவேண்டும் நடந்தை மறந்து சண்டை இனிவேண்டாம் என்று தூது வேறு அனுப்பியிருந்தார்கள் .
 
 
இன்னொரு சனிக்கிழமை இரவு அதே நண்பர் வீடு , மினுங்கல் பான்ட்ஸ் அவர் ரூமிற்குள் ஏதோ செய்துகொண்டிருக்க, அவரிடம் வந்த அவரது  நண்பர் ஒருவர் சிற்றிங் ரூமில்  இருக்கின்றார் . இவரை எனக்கு முன்னரே தெரியும் .எழுதுபகளில் இலண்டனில் ஆரம்பித்த ஒரு இயக்கத்தின் முக்கியமானவர் .இந்தியாவிற்கு பயிற்சிக்கு சென்று பிறகு போன விடயங்கள் சரிவராமல் திரும்பி வந்த நாலு பேரில் இவரும் ஒருவர் .அந்த நேரம் பாலசிங்கம் தான் இவர்களுக்கு அரசியல்  வகுப்பு எடுத்தவர் .இப்போ முக்கிய ஐந்து இயக்கங்களை விட வேறொரு இயக்கத்தின் பிரதிநிதியாக இருந்தார் .
 
 
என்னுடன் எமது அரசியல் கதைக்க தொடங்கிவிட்டார் .ஆள் மிக விபரமான ஒரு அகாயசூரன் என்று எனக்கு தெரியும் ,லண்டனிலும் பலரால் நினைத்தும் பார்க்க முடியாத சில விளையாட்டுகள் சிங்கள அரசிற்கு எதிராக செய்தது  பற்றி அறிந்திருந்தேன் .அரசியல் கதைத்து முடிய நடந்து முடிந்த சண்டை பற்றி பேச்சு வந்தது .அதற்கு சின்னதாக ஒரு திட்டம் இருப்பதாக சொன்னார் . ஆனால் என்னிடம் அதை சொல்லவில்லை .பின்னர் அறிந்தேன் ரம்போ வில்லும் அம்பும் வாங்கி அதை தனக்கு காட்டியதாகவும்   ஒரு தலைக்கு அதை எய்ய எல்லாம் அடங்கிவிடும் என்றாராம் . ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை .நானும் வேலை எடுத்ததில் பிசியாகி கிழக்கு லண்டன் செல்வதும் குறைந்துவிட்டது.
 
 
இன்று காலை குண்டெறி செய்தி தொலைகாட்சியில் வந்த போது பழைய சண்டையும், மினுங்கல் பாண்ட்ஸ் சொன்னதும், ரம்போ கத்தியும்  நினைவு வந்ததுதான்  எனது பயத்திற்கு காரணம் .பின்னர் நண்பர்களுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டபோது அப்படி எதுவும் இல்லை என்றுவிட்டார்கள். சற்று நிம்மதியாக இருந்தாலும் எல்லோரது மனதிலும் சிறு உறுத்தல் இருந்தே வந்தது ,அதைவிட அநியாயமாக மூன்று தமிழ் மாணவர்களின் உயிர் வேறு போய்விட்டிருந்தது .
 
 
ஒரு ஞாயிறு மாலை நாலு மணி இருக்கும் அதே நண்பர் வீடு. ஏழு எட்டு பேர்கள் வீட்டில் இருந்து கதைத்துக்கொண்டு இருக்கின்றோம். கதவு தட்டபடுகின்றது திறந்தால் இரண்டு ஸ்கொட்லண்ட்  யார்ட் போலீஸ்காரர்கள் .எவரையும் அசையகூடாது என்று விட்டு ஒவ்வொருவராக பெயரை கேட்டுக்கொண்டு வருகின்றார்கள்.எனது முறை வர நான் பெயரை சொன்னதும் என்னை வெளியில் போகசொல்லிவிட்டார்கள் .என்ன நடக்கின்றது என்று தெரியாமலே ஏழு மணி வேலைக்கு அப்போதே போய்விட்டேன் . 
 
 
இரவு வேலையில் இருந்து விஜயகாந்திற்கு தொலைபேசி அடித்தால் அன்று அடிபிடிக்கு சென்ற அனைவரின் பெயர்களும் அவர்களின் சந்தேக  பட்டியலில் இருக்கு ,வெளியில் எங்கும் போககூடாது ,விசாரணை வந்தால் ஒத்துழைக்கவேண்டும் ,வீடு முழுக்க சல்லடை போட்டு தேடிவிட்டு பலரும் தொலைபேசி பாவிப்பதால் எல்லோரிடமும் சேர்த்துவைத்திருந்த நாநூறு பவுண்ஸ்சையும் கொண்டுபோய்விட்டார்களாம். இதே போல வேறு சில நண்பர்கள் வீடுகளுக்கும் சென்று அதேபோல்  சொல்லியிருக்கின்றார்கள் .மீண்டும் பயப்பிராந்தி எல்லோரிடமும் குடிபுகுந்துவிட்டது . படிப்பு ,வேலை பிரச்சனை போக லண்டனில் விசா என்பது  மிக முக்கியம் .
 
 
அடுத்த இரண்டு வாரங்களில் ஒவ்வொருவராக ஸ்டேசனுக்கு கொண்டுபோய்,  நடந்தது  நிறவெறி தாக்குதல் அல்ல உங்களில் தான் யாரோ செய்திருக்கின்றார்கள். உங்களுக்கு  தெரிந்த உண்மைகளை  சொல்லாவிட்டால் பாரதூரமான விளைவுகள் ஏற்படும் என்று எச்சரித்து விட்டுவிட்டார்களாம் . விசாரணை செய்த விதம்- பொலிஸ் ஒரு கையால் அந்த முக்கியமான இடத்தில்  பிடித்து நசிக்கொண்டு மற்ற கையால் கழுத்தை பிடித்து சுவருடன் அமத்தி வைத்திருந்தார்களாம் .ஒவ்வொரு முறையும் தாங்கள் தெரியாது என்னும் போது கீழே உள்ள பிடி இறுகி  உயிர் போய்வந்ததாக சொல்லி  ரொம்ப  கேவலம் கெட்ட பொலிஸ் என்று திட்டினார்கள் .
 
 
இரண்டு வாரங்களின் பின் ,   ஐந்துதமிழர்கள்  கைது என்று செய்தியில் வந்தது .மினுங்கல் பான்ட்ஸ்,ரம்போ கத்தி உட்பட மூன்று புதுமுகங்கள் .இவர்கள் ரம்போ கத்தியுடன் பகுதிநேர வேலை செய்யும் மாணவர்கள் . இது நண்பன் ஒருவர் சொன்ன செய்தி -பெற்றோல் குண்டிற்கு செய்த திரி ரஷ்யாவில் இருந்து வெளியாகும் ஒரு பத்திரிகையில் செய்திருந்தார்கள் அது முற்றிலும் எரியவில்லை .அந்த பத்திரிகை லண்டனுக்கு வரும் விலாசத்தை வைத்து அந்த விலாசத்தில் தேடுதல் நடாத்த சில தடயங்கள் அகப்பட்டுவிட்டது .அந்த மூன்று புதுமுகங்களும் இருக்கும் விலாசம் அது .அதில் ஒருவர் ஊரில் நான் வைத்திருந்த வாண்டு கிரிக்கெட் டீமில் ஒருவர் .
 
 
கைதானவர்கள் தமக்கு எதுவும் தெரியாது என்று ஒரேயடியாக சாதிக்கத்தொடங்கிவிட்டார்கள் . பொலிஸ் தனது ஆசை காட்டும் வேலையில் இறங்கி ,  யாராவது உண்மையை சொல்லி அரசுதரப்பு சாட்சியாக  மாறினால் அவர் குற்றத்தில் இருந்து விடுதலை ,நிரந்தர வடிவுடமை ,அதைவிட பணம் வேறு தருவோம் .
 
 
போலீசின் ஆசைவலையில் விழுந்தது  நண்பர்களுக்கு துரோகம் செய்த அந்த கருங்காலி யார் -தொடரும் .
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
நான்  வாசித்த வகையில், இருவர் மிகச் சிறப்பாக ஒரு விடயத்தினை சொல்வார்கள்.
 
ஒருவர் நம்ம அர்ஜுன் அடுத்தவர் நம்ம இசையர்,
 
பிரச்சனை என்னவென்றால், யாருக்கும் நேரம் இல்லை.
 
முடிந்தவரை எழுதுங்கள். உற்சாகம் தர உறவுகள் தயார்..  :icon_idea:
Link to comment
Share on other sites

மாதங்கள் ஓடுகின்றது .மூன்று அப்பாவி  உயிர்கள் பலி,ஐவர்  சந்தேகத்தில் கைது செய்யப்பட்டு  சிறையில் ஆனால்  லண்டன் வாழ்கையின் அழுத்தம் நடந்தவை கனவாக மறந்து மற்றவர்கள் வாழ்க்கை ஓடிக்கொண்டு இருக்கின்றது . இந்தியாவில் இருந்து  படகில் வீடு சேர்ந்து தோழரின் கடிதம் வந்திருந்தது. மீண்டும் முன்னர் கேட்டதை மறக்காமல் அக்காவை பெண் கேட்டும்  எழுதியிருந்தார் . வீடு மாறி  நண்பர் ஒருவருடன் குடி புகுந்துவிட்டேன் .வாரத்திற்கு எழுபத்திரண்டு மணி வேலை கடன் எல்லாம் கொடுத்து கையில் கொஞ்சம் சேர்ந்தும் விட்டது .
 
 
விஜயகாந்தும் சின்னக்கவுண்டர் பார்த்தாரோ தெரியாது அயலில் இருக்கும் ஒரு சுகன்யா போன்ற ஒரு பெண்ணில் கண் விழுந்துவிட்டது .இவ்வளவு அடிபிடி பின்னணியை வைத்துக்கொண்டு  எப்படி பெண் கேட்பது என்று முழுசுக்கிகொண்டு திரிகின்றார் .முன்னர் போலவே சனிக்கிழமை இரவு பார்ட்டி மட்டும் தொடர்ந்துகொண்டே இருந்தது .
 
 
ஒரு ஞாயிறு பகல் மினுங்கல் பான்ஸிடம் இருந்து தொலைபேசி அழைப்பு தான் பொலிஸ் பாதுகாப்பில் ஐந்து நட்சத்திர ஹோட்டேலில்  இருப்பதாகவும்  அரசு தரப்பு சாட்சியாக மாறிநடந்த அனைத்தையும் சொல்லிவிட்டதாக சொன்னார் .அவர்களின் பாதுகாப்பில் இருப்பதால் விசாரணை சம்பந்தமாக எதுவும் கதைக்கமுடியாது என்றுவிட்டார் .பின்னர் அடிக்கடி விஜயகாந்துடன் தொலைபேசியில் கதைக்க தொடங்கிவிட்டார் .லண்டனில் தான் வாழ்கையில் பார்க்கமுடியாத மிக ஆடம்பர நிகழ்வுகள்,சுற்றுலாக்கள் ,விளையாட்டு நிகழ்வுகள்  விம்பிள்டன் உட்பட அவர்களுடன் பார்ப்பதாக சொல்லியிருக்கின்றார் . இதே காலகட்டத்தில் நான் கனடா வந்துவிட்டேன் .
 
 
விசாரணையின் முடிவில் ராம்போ கத்தி ,எனது வாண்டு டீம் பிளேயர் இருவருக்கும் ஆயுள்தண்டனை .வாண்டு டீம் பிளேயரை  வெளியில் விட்டால் தனது உயிருக்கு ஆபத்து என்று மினுங்கல் பாண்ட்ஸ் கோர்டில் சொன்னதாக அறிந்தேன் .இருவருக்கு சிலவருடங்கள் சிறை தண்டனை ,ஒருவர் மட்டும் விடுதலை .மினுங்கல் பான்ட்ஸ் தனது விடுதலைக்கு பின்னரும் எவரையும் சந்திக்கவில்லை .பொலிஸ் சொன்ன மாதிரி விடுதலை ,நிரந்தரவதிவு பணம் இவற்றுடன்  இந்தியாவிற்கு போய்விட்டதாக கேள்விப்பட்டேன் .
 
 
இந்தியா சென்றவர்  சூரியா ,பிரித்தா(விஜயகுமார் மஞ்சுளாவின் மகள் ) வைத்து ஒரு படம் எடுத்தார் .பின்னரும் இரண்டு படங்கள் எடுத்தார் என்று நினைக்கிறேன் .
 
 
பல வருடங்களின் பின்னர் ஆயுள் தண்டனை பெற்றவர்கள் ஜெயிலில் உண்ணாவிரதம் இருந்து வழக்கு மீண்டும் விசாரணக்கு எடுக்கபட்டு இருவரும் விடுதலையானார்கள் .கிறிஸ்டியன் மிசன் ஒன்று பெரிதும் உதவியதாக அறிந்தேன் .
மினுங்கல் கல்யாணம் செய்து சந்தோசமாக இருப்பதாக கேள்வி .போன மாதம் தனது தாயாரின் மரணவிட்டிற்கு வந்திருந்தார் ஆனால் நான் போய் சந்திக்கவில்லை அதை விரும்பவும் இல்லை . 
Link to comment
Share on other sites

அன்று இரவு நடந்ததை (நான் கேள்விப்பட்டதை ) எழுதவில்லை .ஏன் வீண் வம்பு .

Link to comment
Share on other sites

அன்று இரவு நடந்ததை (நான் கேள்விப்பட்டதை ) எழுதவில்லை .ஏன் வீண் வம்பு .

 

கேள்விப்பட்டவிடயம் என்று விட்டு ஒரு கதை மாதிரி எழுதலாமே...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் அண்ணா...யாரந்த மிணுங்கல்:D

Link to comment
Share on other sites

இந்த படத்தின் திரைக்கதை வசனம் டைரக்சன் மினுங்கல் தான் .தயாரிப்பு ஆர் பி சௌத்திரி.அவற்றை அறிவிற்கு ஏற்ற படம் .

 

குண்டு எறி- -படத்திற்கு கதை திரைக்கதை வசனம் டைரக்சன் தயாரிப்பு அனைத்தும் இவர்தான் .

 

மற்றவர்கள் நடிகர்கள் மட்டுமே .அனைத்தும் தெரிந்தும் நடிக்க போனது மூன்று அப்பாவி உயிர்களை காவுகொண்ட மிகப்பெரிய பாதக செயல் .

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி அண்ணா தேடிப் பிடித்து விட்டேன். ஆள் அப்படி ஒன்றும் பேமசான ஆள் இல்லை.ஆனால் அவரது பெயரில் கிந்தியில் பேமசான டைரக்டர் ஒருவர் இருக்கிறார்:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த படத்தின் திரைக்கதை வசனம் டைரக்சன் மினுங்கல் தான் .தயாரிப்பு ஆர் பி சௌத்திரி.அவற்றை அறிவிற்கு ஏற்ற படம் .

 

குண்டு எறி- -படத்திற்கு கதை திரைக்கதை வசனம் டைரக்சன் தயாரிப்பு அனைத்தும் இவர்தான் .

 

மற்றவர்கள் நடிகர்கள் மட்டுமே .அனைத்தும் தெரிந்தும் நடிக்க போனது மூன்று அப்பாவி உயிர்களை காவுகொண்ட மிகப்பெரிய பாதக செயல் .

 

ஜோதி பாலன்?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாதமுனி,அர்ஜீன் அண்ணா எதற்காக 20 தாவது பதிவில் ஒரு வீடியோவை இணைத்தவர்:D...விஜயகுமாரின் மகள் ப்ரீத்தாவை வைத்துப் படம் எடுத்ததாக கதையில் எழுதி இருக்கிறார்.படம் சந்திப்போமா...டைரக்டர்‍ இந்திரக்குமார்:):)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
உங்க எல்லா கோஸ்டியலும், நாடு பிடிக்கிறம் எண்டு வெளிக்கிட்டு, காத்தன்குடியிலிருந்து, தின்னவேலி வரை பாங்குகளையும், சனங்களையும் கொள்ளை அடிச்சு, படங்கள் எடுத்துக் காட்டினதும், கோவில் கட்டிக் கும்பிட வைத்ததும் தான் மிச்சம்.
 
என்னெத்தை சொல்லுறது?   :o
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • எம்.எஸ்.தோனி: அதிநாயக பிம்பமும், மிகை ஈடுபாடும் உருவாவது எப்படி? ராஜன் குறை கிருஷ்ணன் எம்.எஸ்.தோனி மிகச் சிறந்த விளையாட்டு வீரர். அவர் ஆடுவதை மிகவும் ரசித்துப் பார்த்திருக்கிறேன். ஒரு வகையில் என்னை மிகவும் கவர்ந்த கிரிக்கெட் ஆட்டக்காரர் அவர்தான் எனலாம். எதனால் என்றால் எனக்குச் சமநிலை குலையாமல் விளையாடுபவர்களை மிகவும் பிடிக்கும். ‘கேப்டன் கூல்’ என்று அழைக்கப்பட்ட தோனி எந்தச் சந்தர்ப்பத்திலும் பதட்டம் அடையாமல் நிதானமாக இருப்பதை மிகவும் ரசிப்பேன்.  ஐந்து நாள் ஆடப்பட்ட டெஸ்ட் மேட்சிலிருந்து ஒரு நாள் போட்டிகளும், டி20 போட்டிகளும் மிகவும் வேறுபட்டவை. குறிப்பிட்ட எண்ணிக்கையிலான பந்துகளில் முதலில் ஆடிய அணி எடுத்த ரன்களைப் பின் தொடரும் அணி எடுத்தால் வெற்றி. இல்லாவிட்டால் தோல்வி. ஒவ்வொரு பந்தும் கணக்கு. டி20 பந்தயத்தில் மொத்தமே 120 பந்துகள்தான். இதுபோன்ற போட்டிகளில் உறுதியாக அடித்து ஆடும் தோனி போன்றவர்கள் ரசிகர்களைப் பெருமளவு ஈர்ப்பதில் வியப்பு ஒன்றுமில்லை. அதுவும் தொலைகாட்சியில் பார்த்து ரசிக்கும் கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு அவர் பெரும் நட்சத்திரமாக மாறுவதை இயல்பாகவே புரிந்துகொள்ளலாம்.  தோனி எண்ணிக்கையை துரத்தும் நிலையில் மைதானத்தில் இறங்கினால், எதிர் அணி எத்தனை ரன் வித்தியாசத்தில் முன்னணியில் இருந்தாலும், ஒரு பதட்டம் அவர்களிடையே உருவாவதை ரசித்திருக்கிறேன். ஏனெனில், அசாத்தியம் என்று நினைத்ததைப் பல சந்தர்ப்பங்களில் சாத்தியமாக்கி இருக்கிறார். அதேபோல அவர் தலமையிலான அணி பந்து வீசி எதிர் அணியின் ரன் சேர்ப்பைக் கட்டுப்படுத்த வேண்டி இருந்தால், அவர் முற்றிலும் எதிர்பாராத விதமாக பந்து வீசுபவர்களைத் தேர்வுசெய்வார். அது எதிர் அணி ஆட்டக்காரர்களைத் தடுமாறச் செய்த சந்தர்ப்பங்கள் பல. தோனியின் மேலாண்மைத் திறன் ஆய்வுப் பொருளானது. அதிநாயக பிம்பமான நாயகன் இப்படிப் பல சிறப்புகளைக் கொண்ட தோனி இன்று அதிநாயக பிம்பமாக மாற்றப்பட்டுள்ளார் என்பதுதான் சோகம். வயதாகிவிட்டதால் இந்திய அணிக்காக விளையாடுவதிலிருந்து ஓய்வுபெற்றுவிட்டார். ஆனால், பெரும் வர்த்தகமான, வெகுமக்கள் கேளிக்கையான டி20 ஆட்டத்திலிருந்து அவர் விடுபட முடியவில்லை. ஏனெனில், அவர் விளையாடுவதைப் பார்க்கவே மைதானத்திற்கு மக்கள் வருகிறார்கள்; தொலைக்காட்சி பெட்டிகளின் முன் அமர்கிறார்கள். அவர் மைதானத்தில் இறங்கும்போது மைதானமே உற்சாக ஆரவாரத்தில், கோஷங்களில் அதிர்கிறது. பணம் குவிகிறது.  அவருடைய அணியான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வெல்கிறதா, தோற்கிறதா என்பதைவிட தோனி மைதானத்தில் இறங்கினாரா, சிக்ஸர் அடித்தாரா என்பது ரசிகர்களுக்கு முக்கியமானதாக இருக்கிறது. சமீபத்தில் தொலைக்காட்சி பார்வையாளர்களிடம் “நீங்கள் எதைப் பார்ப்பற்காக வேலையை விட்டுவிட்டு வருவீர்கள், சூர்யகுமார் யாதவ் சிக்ஸர் அடிப்பதைப் பார்க்கவா அல்லது தோனி மைதானத்தில் இறங்குவதை பார்க்கவா” என்று கேட்டபோது எழுபது சதவீதம் பேர் தோனி மைதானத்தில் இறங்குவதைப் பார்க்கவே வருவோம் என்று பதில் அளித்தார்கள். தோன்றினாலே பரவசம், விளையாடவே வேண்டாம்.  சமீபத்திய மேட்ச் ஒன்றில் அவர் விளையாட வந்தவுடன் மூன்று சிக்ஸர்கள் அடுத்தடுத்த பந்தில் அடித்தார். அது கடைசி ஓவர் என்பதால் இருபது ரன் எடுத்தார். எதிர் அணியான மும்பை அணி சிறப்பாகவே பதிலடி கொடுக்கத் தொடங்கியது. சென்னை அணியின் பந்து வீச்சாளர்கள், குறிப்பாக பதிரானா என்ற இளைஞர், சிறப்பாக பந்து வீசி சென்னைக்கு 20 ரன் வித்தியாசத்தில் வெற்றி தேடித் தந்தார்கள். ஆனால், அவர்கள் எல்லோரையும்விட தோனியே, அவர் அடித்த 20 ரன்களே வெற்றிக்குக் காரணம் எனச் சமூக ஊடகங்களில் பலரும் எழுதினார்கள். ஆட்டத்தின் நுட்பங்களை ரசிப்பது, மதிப்பிடுவது, திறமைகளை ஊக்குவிப்பது எல்லாமே இரண்டாம் பட்சமாகிவிடுகின்றன. அதிநாயக வழிபாடே பிரதானமாகிறது. அதுவே வசூலைக் குவிப்பதால் ஊடகங்களும் ஒத்தூதுகின்றன. பிம்பத்தை ஊதிப் பெரிதாக்குகின்றன.    சுருக்கமாகச் சொன்னால் நன்றாக கிரிக்கெட் விளையாடியதால் உருவான தோனி என்ற நாயக பிம்பம், இன்று கிரிக்கெட்டைவிட முக்கியமான அதிநாயக பிம்பமாக மாறிவிட்டது. கிரிக்கெட்டிற்காக தோனி என்பதைவிட, தோனிக்காக கிரிக்கெட் என்று மாறுகிறது. அதனால் என்ன, எல்லோரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள், அவ்வளவுதானே என்று தோன்றலாம். பிரச்சினை அத்துடன் நிற்பதில்லை. பலவீனமான மனங்கள் இந்த அதிநாயக பிம்பங்களை வழிபடத் துவங்குகின்றன. தங்களை அந்தப் பிம்பங்களுடன் அடையாளப்படுத்திக்கொள்கின்றன. அந்தப் பிம்பங்களை யாராவது குறை சொன்னால் அவர்கள் மீது கோபம் கொள்கின்றன.  இதேபோலத்தான் டெண்டுல்கரும் கிரிக்கெட்டின் கடவுள் எனப் பூஜிக்கப்பட்டார். அவரும் மிகச் சிறந்த ஆட்டக்காரர்தான். ஆனால், அவர் ஆட்டமிழந்துவிட்டால் அத்துடன் ஆட்டத்தை பார்ப்பதையே நிறுத்திவிடுபவர்கள் பலரை அறிவேன். அவருடன் ஆடிய பல சிறந்த ஆட்டக்காரர்கள் போதுமான அளவு மக்களால் ரசிக்கப்படவில்லை. அங்கீகரிக்கப்படவில்லை. மற்ற யாரும் செஞ்சுரி அடித்தால், அதாவது நூறு ரன்கள் எடுத்தால் அது பெரிய ஆரவாரமாக இருக்காது; ஆனால் டெண்டுல்கர் நூறு ரன்கள் எடுத்தால் ஊரே தீபாவளி கொண்டாடும். அலுவலகங்களில் அனைவருக்கும் இனிப்பு வாங்கித் தருவார்கள்.        அதிநாயக பிம்பம் + மிகை ஈடுபாடு = வன்முறையின் ஊற்றுக்கண் இதுபோன்ற மிகை ஈடுபாடுகளுக்கு மற்றொரு ஆபத்தான பரிமாணமும் இருக்கிறது. மஹாராஷ்டிரத்தின் கோலாப்பூர் மாவட்டத்தில் மார்ச் 27ஆம் தேதி நடந்த சம்பவத்தைக் கவனிக்க வேண்டும். அண்டை வீட்டுக்காரர்களான இரு விவசாயிகள், நெடுநாள் நண்பர்கள், டி20 மேட்ச் சேர்ந்து பார்த்திருக்கிறார்கள். அவரகளில் 65 வயது நிரம்பிய பந்தோபந்த் டிபைல் என்பவர் ரோஹித் ஷர்மா ஆட்டமிழந்தவுடன் மும்பை இந்தியன் அணி தோற்றுவிடும், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வென்றுவிடும் என்று கூறியுள்ளார். ஐம்பைத்தைந்து வயதான பல்வந்த் ஷன்ஜகே கோபமடைந்து வாக்குவாதம் செய்துள்ளார். வார்த்தை முற்றி, பல்வந்த் ஷன்ஜகேவும் அவர் மருமகனும் சேர்ந்து டிபைலை கட்டைகளைக் கொண்டு தாக்கியதில் அவர் இறந்தே போய்விட்டார். அவர்களிடையே வேறு எந்த முன்விரோதமும் இருக்கவில்லை என்றே அக்கம் பக்கத்தார் கூறுகின்றனர்.  கிரிக்கெட் விளையாட்டை ரசிப்பதற்கும் இதுபோன்ற மனப்பிறழ்வான மிகை ஈடுபாடுகளுக்கும் தொடர்பில்லை. ஆனால், ஒவ்வொரு துறையிலும் எப்படி இத்தகைய அதிநாயக பிம்ப உருவாக்கமும், மிகை ஈடுபாடும் அடிப்படை விழுமியங்களையே சேதப்படுத்துகின்றன என்பதை நாம் கவனிக்க இந்த உதாரணங்கள் உதவும். மகிழ்ச்சிக்காக விளையாடுகிறோம்; விளையாட்டைப் பார்க்கிறோம். ஆனால், அதுவே வன்முறையை தோற்றுவிப்பது எத்தகைய விபரீதம் என்பதைச் சிந்திக்க வேண்டும். உலகம் முழுவதுமே விளையாட்டு ரசிகர்கள் கலவரத்தில் ஈடுபடுவது, வன்முறையில் ஒரு சிலர் உயிரிழப்பது நடக்கத்தான் செய்கிறது. தாங்கள் ஆதரிக்கும் அணி அல்லது ஆட்டக்காரர்கள் தோற்பதைத் தாங்க முடியாமல் ரசிகர்கள் வன்முறையில் ஈடுபடுவது பல சமயங்களில் நடக்கும்.  விளையாட்டில் மட்டும் இல்லை. தாயின் கருவறையில் உயிர்த்து, வெளிவந்து, வாழ்ந்து மாயும் நாம், நம்மை சாத்தியமாக்கும் இயற்கையை இறைவனாக உருவகித்து வழிபடுகிறோம். அதில் பரவசமாகி நாம் அனைத்தையும், அனைவரையும் நேசிக்கும் பண்பைப் பெற விழைகிறோம். ஆனால், நாம் உருவகித்து வழிபடும் இறைவனுடன் நம்மை அடையாளப் படுத்திக்கொண்டு, வேறொரு உருவகத்தை வழிபடுபவர்களை வெறுக்கத் தொடங்குகிறோம். கடவுளின் பெயரால் கொலை செய்யத் தொடங்குகிறோம். மானுட வரலாற்றில் அதிகபட்ச கொலைகள் அன்பே உருவான கடவுளின் பெயரால்தானே நடந்துள்ளன.  கணியன் பூங்குன்றனின் குரல் சமூக நன்மைக்காக பாடுபடுபவர்களைத் தலைவர்களாக ஏற்கிறோம். அவர்களைப் பின்பற்றுகிறோம். மெள்ள மெள்ள அவர்களை அதிநாயகர்கள் ஆக்குகிறோம். அவர்கள் தலமையை ஏற்காதவர்களை விரோதிகள் ஆக்குகிறோம். அதிநாயக பிம்பமும், மிகை ஈடுபாடும் இணையும்போது அங்கே பாசிஸ முனைப்பு தோன்றுகிறது. கருத்து மாறுபாடுகளை, விமர்சனங்களை வெறுக்கிறோம். அவற்றை எதிர்கொள்ள வன்முறையைக் கையாளத் துவங்குகிறோம். சமூக நன்மை இறுதியில் சமூக வன்முறையாக மாறிவிடுகிறது.  நாயகர்களை அதிநாயகர்களாக மாற்றுவதும், மிகை ஈடுபாட்டின் மூலம் நம்மை விமர்சன சிந்தனையற்ற அடிமைகளாக மாற்றிக்கொள்வதும் நம்முடைய சுயத்தின் பலவீனத்தால்தான் நிகழ்கிறது. நம்முடைய சுயத்திற்கு நாம் மரியாதை செலுத்தினால், சுயமரியாதையுடன் பகுத்தறிவுடன் வாழ்ந்தால் நாயகர்கள் அதிநாயக பிம்பமாக மாட்டார்கள். தமிழ்ப் பண்பாடு என்றோ இதனை கணியன் பூங்குன்றன் குரலில் அறிந்துகொண்டது.    விரிந்த மானுடப் பார்வையையும், சமநிலையையும் வலியுறுத்தும் பூங்குன்றன், வாழ்க்கை பெருமழை உருவாக்கிய சுழித்தோடும் வெள்ளத்தில் சிக்கிய மதகு பயணப்படுவதுபோல தற்செயல்களால் நிகழ்வது என்று உருவகிக்கிறார் எனலாம். அதனால் பெரியோரை வியத்தலும் இலமே, சிறியோரை இகழ்தல் அதினினும் இலமே என்று கூறுகிறார். அதிக நாயக பிம்பங்களின் மீதான மிகை ஈடுபாட்டிலிருந்து நம்மை தற்காத்துக்கொள்ள அவருடைய வரிகளே காப்பு.    https://www.arunchol.com/rajan-kurai-krishnan-article-on-ms-dhoni
    • பலரைத் துரத்திப் பிடிச்சுக்கொண்டு வந்த வீரப் @பையன்26க்கும் @ஈழப்பிரியன் ஐயாவுக்கும் நன்றி பல!🙏🏽 கடைசி இடத்தைப் பிடிக்க என்றே மூன்று பேர் கலந்திருக்கினம். கவலைவேண்டாம்😜
    • பலஸ்தீனர்களின் கடைசி அடைக்கலமான ரபாவையொட்டி இஸ்ரேலிய படை குவிப்பு படையெடுப்பு அச்சம் அதிகரிப்பு: தாக்குதல்களும் தீவிரம் gayanApril 20, 2024 காசா மக்களின் கடைசி அடைக்கலமாக உள்ள ரபா நகரை ஒட்டிய பகுதிகளில் இஸ்ரேலிய துருப்புகள் குவிக்கப்பட்டு வரும் நிலையில், அந்த நகர் மீதான படையெடுப்பு ஒன்று பற்றி அச்சம் அதிகரித்துள்ளது. காசாவின் தென் முனையில் எகிப்துடனான எல்லையில் அமைந்திருக்கும் ரபாவில் காசா மக்கள் தொகையில் பாதிக்கும் அதிகமானோர் அடைக்கலம் பெற்றுள்ளனர். இங்கு பெரும் நெரிசல் மற்றும் உணவுப் பொருட்களுக்கு நிலவும் பற்றாக்குறைக்கு மத்தியில் கூடாரங்கள் மற்றும் வெட்ட வெளிகளில் தங்கியுள்ள பலஸ்தீனர்கள் மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் அண்மைய நாட்களில் தீவிரம் அடைந்துள்ளன. காசாவில் இஸ்ரேலிய தரைப் படை இன்னும் நுழையாத ஒரே இடமாக இருக்கும் ரபா மீது படை நடவடிக்கை ஒன்றை மேற்கொள்ள இஸ்ரேல் நீண்ட காலமாக திட்டமிட்டு வருகிறது. எனினும் இந்த இராணுவ நடவடிக்கை குறித்து அமெரிக்கா மீண்டும் ஒருமுறை இஸ்ரேலிடம் கவலையை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் தமது அக்கறை தொடர்பில் கவனம் செலுத்தப்படுவதாக இஸ்ரேலிய பிரதமரின் பிரதிநிதிகள் இணங்கியதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. பெரும் உயிர்ச்சேதங்களை ஏற்படுத்தும் அபாயம் உள்ள ரபா நகர் மீதான படையெடுப்பை மேற்கொள்வது தொடர்பில் அமெரிக்கா, இஸ்ரேலை தொடர்ந்து எச்சரித்து வருகிறது. எனினும் ஹமாஸை ஒழிக்கும் படை நடவடிக்கையின் அங்கமாக ரபா மீதான படையெடுப்பு ஒன்றை முன்னெடுப்பது பற்றி இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். இந்நிலையில் ரபா மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் அண்மைய நாட்களில் தீவிரம் அடைந்துள்ளன. தெற்கு ரபாவில் உள்ள இடம்பெயர்ந்த பலஸ்தீனர்கள் வசித்த வீட்டின் மீது இஸ்ரேல் நடத்திய புதிய தாக்குதல் ஒன்றில் அங்கிருந்தவர்கள் உடல் சிதறுண்டு உயிரிழந்திருப்பதாக அயலவர்கள் மற்றும் உறவினர்கள் ஏ.எப்.பி. செய்தி நிறுவனத்திடம் தெரிவித்துள்ளனர். இந்த வெடிப்பில் குறைந்தது 10 பேர் கொல்லப்பட்டதாக அல் அர்ஜா என்பவர் குறிப்பிட்டுள்ளார். ‘சிறுவர்கள் மற்றும் பெண்களின் கைகள், கால்கள் என உடல் பாகங்களை மீட்டோம். அவை துண்டு துண்டாக சிதறிக் கிடந்தன. இது சாதாரணமானதல்ல, பயங்கரமாக இருந்தது’ என்று அவர் குறிப்பிட்டார். கடந்த ஒக்டோபர் 7 ஆம் திகதி போர் வெடித்த விரைவில் வடக்கு காசாவில் வசிக்கும் பலஸ்தீனர்கள் ரபா போன்ற தெற்கு காசா நகரங்களின் பாதுகாப்பு வலயங்களுக்கு வெளியேறும்படி இஸ்ரேல் உத்தரவிட்டது. ஆனால், தற்போது 1.5 மில்லியன் மக்கள் வசிக்கும் இந்த நகரை தாக்கப்போவதாக இஸ்ரேல் இராணுவம் எச்சரித்து வருகிறது. ‘ரபா எப்படி பாதுகாப்பான இடமாக இருக்க முடியும்?’ என்று கொல்லப்பட்டவர்களின் உறவினர் ஒருவரான சியாத் அய்யாத் கேள்வி எழுப்பினார். ‘கடந்த இரவில் நான் குண்டு சத்தங்களை கேட்டேன், பின்னர் படுக்கச் சென்றுவிட்டேன். எனது அத்தை வீடு தாக்கப்பட்டிருப்பது எனக்குத் தெரியாது’ என்றும் அவர் கூறினார். இந்தத் தாக்குதல் இடம்பெற்ற பகுதியில் பரிய பள்ளம் ஏற்பட்டிருக்கும் நிலையில் தேடுதல் நடவடிக்கையும் பெரும் வேதனை தருவதாக உள்ளது என்று உறவினர்கள் மற்றும் அயலவர்கள் தெரிவிக்கின்றனர். ‘அவர்களை இடிபாடுகளுக்கு கீழ் எம்மால் பார்க்க முடிகிறது. எம்மால் அவர்களை மீட்க முடியவில்லை’ என்று அல் அர்ஜா குறிப்பிட்டார். ‘இவர்கள் தெற்கு பாதுகாப்பானது என்று கூறியதால் வடக்கில் இருந்து வந்தவர்கள். எந்த முன் எச்சரிக்கையும் இல்லாமல் இவர்கள் தாக்கப்பட்டார்கள்’ என்றும் அவர் கூறினார். கடந்த செவ்வாய்க்கிழமை ரபாவின் அல் சலாம் பகுதியில் வீடு ஒன்று தாக்கப்பட்டதை அடுத்து மீட்பாளர்கள் அங்கிருந்து ஐந்து சிறுவர்கள் உட்பட எட்டு குடும்ப உறுப்பினர்களின் உடல்களை மீட்டதாக காசா சிவில் பாதுகாப்பு சேவை குறிப்பிட்டது. ‘இடம்பெயர்ந்த மக்களின் வீட்டின் மீது இஸ்ரேலிய ரொக்கெட் குண்டு ஒன்று விழுந்தது’ என்று குடியிருப்பாளரான சமி நைராம் குறிப்பிட்டார். ‘எனது சகோதரியின் மருமகன், அவளது மகள் மற்றும் குழந்தைகள் இரவு உணவை சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போதே அவர்களின் தலைகளுக்கு மேலால் ஏவுகணை விழுந்து வீட்டை தகர்த்துள்ளது’ என்றும் அவர் கூறினார். ராபாவில் தாக்குதல்கள் அதிகரிக்கப்பட்டு அந்த நகரை ஒட்டிய பகுதிகளில் இஸ்ரேலிய துருப்புகள் குவிக்கப்பட்டிருக்கும் நிலையில் அந்த நகர் மீதான படையெடுப்புகான சமிக்ஞைகள் அதிகரித்திருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. ரபா மாவட்டத்தை ஒட்டிய அனைத்து பகுதிகளிலும் மேலதிக இஸ்ரேலிய துருப்புகள் குவிக்கப்பட்டுள்ளன. ரபாவின் கிழக்கு பகுதியில் உள்ள விவசாய நிலத்தின் பெரும்பகுதியை இஸ்ரேலிய துருப்புகள் நேற்றுக் கைப்பற்றி இருப்பதாக அங்கிருக்கும் செய்தியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். ஏற்கனவே காசாவின் மற்றப் பகுதிகள் இஸ்ரேலின் தாக்குதலால் அழிக்கப்பட்டிருக்கும் சூழலில் ரபா தாக்கப்படும் பட்சத்தில் எங்கு செல்வது என்று அங்குள்ள மக்கள் அச்சத்தில் உள்ளனர். அங்குள்ள பலஸ்தீனர்களை வெளியேற்றுவது குறித்து இஸ்ரேல் கூறிவருகின்றபோதும் அது நடைமுறை சாத்தியம் இல்லை என்று அவதானிகள் தெரிவித்துள்ளனர். காசாவின் ஏனைய பகுதிகளிலும் இஸ்ரேலின் தாக்குதல்கள் நேற்றும் தொடர்ந்தன. வடக்கு காசாவின் காசா நகர் மற்றும் மத்திய காசாவின் நுசைரத் நகர் மீது இஸ்ரேலிய போர் விமானங்கள் நடத்திய தாக்குதல்களில் குறைந்தது ஒன்பது போர் கொல்லப்பட்டதாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா குறிப்பிட்டது. கடந்த ஆறு மாதங்களுக்கு மேலாக இஸ்ரேல் நடத்தி வரும் இடைவிடாத தாக்குதல்களில் காசாவில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 34 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.   https://www.thinakaran.lk/2024/04/20/world/55779/பலஸ்தீனர்களின்-கடைசி-அடை/
    • யாழ். பல்கலைக்கழகத்திலும் அன்னை பூபதியின் நினைவேந்தல் April 20, 2024     இந்தியப் படைகளின் அத்துமீறிய செயற்பாடுகளிற்கு எதிராக உண்ணாவிரதமிருந்து தன்னுயிர் நீத்த தியாக தீபம் அன்னை பூபதியின் நினைவேந்தல் நிகழ்வுகள் நேற்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் நடைபெற்றது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்நினை வேந்தல் நிகழ்வுகளின் போது பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், கல்விசாரா ஊழியர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பெருந்திரளானவர்கள் பங்கு கொண்டு அன்னை பூபதிக்கு தங்கள் புகழ் வணக்கங்களைச் செலுத்தியிருந்தனர்.   https://www.ilakku.org/யாழ்-பல்கலைக்கழகத்திலும/  
    • இல்லை, மீரா. தாம் என்ன செய்கிறோம் என்பதை நன்கு தெரிந்தே செய்கிறார்கள். ஏனென்றால், அதுதான் அவர்களின் தேவை. தேசியமும், விடுதலையும், சுய நிர்ணயமும், அடையாளமும் இல்லாது போகவேண்டும் என்பதே அவர்களின் நோக்கம். ஆகவே, அவர்கள் குறித்து உங்கள் நேரத்தையும், சக்தியையும் செலவிடாதீர்கள். நீங்கள் செய்ய வேண்டியதைச் செய்துகொண்டிருங்கள். 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.