Jump to content

ஜெயலலிதா இன்று பிணையில் விடுதலை செய்யப்படுவாரா? சட்டத்தரணி ஆச்சர்யா


Recommended Posts

கர்நாடக உயர் நீதிமன்றத்தில் தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பிணை கிடைக்க வாய்ப்பு உள்ளதாக முன்னாள் அரச சிறப்பு சட்டத்தரணி ஆச்சர்யா தெரிவித்துள்ளார்.

இதுபோன்ற வழக்குகளில் ஐந்து ஆண்டுகளுக்கு குறைவாக தண்டனை விதிக்கப்பட்டால் அந்த தண்டனையை நிறுத்தி வைத்து அவர்களை பிணையில் விடுதலை செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் ஏற்கனவே கூறியுள்ளது. அதன்படி, குற்றவாளிகளுக்கு பிணை கிடைக்க வாய்ப்பு உள்ளது என்றும் ஆச்சார்யா கூறினார்.

தசரா விடுமுறை நேற்றுடன்  முடிவடைவதால் கர்நாடக உயர் நீதிமன்றம் இன்று  திறக்கப்படுகின்றது. நீதிமன்ற நீதிபதி சந்திரசேகர் முன்னிலையில் ஜெயலலிதாவின் பிணை மனு மீதான விசாரணை நடைபெறும்.

சொத்து குவிப்பு வழக்கில் சிறைத் தண்டனை பெற்று சிறையில் உள்ள ஜெயலலிதா சார்பில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் பிணை மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அந்த மனுவை விசாரிக்க மறுத்துவிட்ட உயர் நீதிமன்றத்தின் விடுமுறை கால நீதிபதி ரத்தினகலா அதன் மீதான விசாரணையை வழக்கமான அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டார்.

இந்த நிலையில், ஜெயலலிதாவுக்கு பிணை கிடைக்க வாய்ப்பு உள்ளதாக சொத்து குவிப்பு வழக்கில் பவானிசிங்குக்கு முன்பு அரசு சார்பில் சிறப்பு சட்டத்தரணியாக ஆஜராகி வாதாடிய ஆச்சார்யா கூறினார்.

அவர் மேலும் கூறியதாவது,

சொத்து குவிப்பு வழக்கில் அரசு சார்பில் நான் ஆஜராகி வந்தேன். எனக்கு பல்வேறு இடங்களில் இருந்து நெருக்கடி அதிகமாக வந்தது. வேறு வழியில்லாமல் நான் அந்த பதவியில் இருந்து விலகினேன். தமிழ்நாட்டில் இந்த வழக்கு விசாரணை சரியாக நடைபெறவில்லை என்ற காரணத்தால் தான் உச்ச நீதிமன்றம் அந்த வழக்கை கர்நாடகத்துக்கு மாற்றியது.

அரசு சட்டத்தரணியை நியமிக்கும் அதிகாரத்தையும் கர்நாடக அரசுக்கு வழங்கியது. ஆனால், உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியின் ஒப்புதலுடன் நியமிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் கூறியது. அதன்படி, வழக்கு விசாரணை முடிந்து தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. இதில் எனக்கு முக்கிய பங்கு உள்ளது என்று நான் சொல்லமாட்டேன். சட்டப்படி அது நடைபெற்று முடிந்துள்ளது.

குற்றவாளிகள் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளனர். இதுபோன்ற வழக்குகளில் ஐந்து ஆண்டுகளுக்கு குறைவாக தண்டனை விதிக்கப்பட்டால் அந்த தண்டனையை நிறுத்திவைத்து அவர்களை பிணையில் விடுதலை செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் ஏற்கனவே கூறியுள்ளது. அதன்படி, குற்றவாளிகளுக்கு பிணை கிடைக்க வாய்ப்பு உள்ளது என்றும் ஆச்சார்யா கூறினார்.http://www.pathivu.com/news/34380/57//d,article_full.aspx

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பிணைகிடைக்காது!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இன்று, ஜெயா அம்மையாரின்... ராசியான எண் 7´ம் திகதி என்ற படியால்....
பிணை கிடைக்கும்.

Link to comment
Share on other sites

பிணை கிடைக்குமோ? கிடைக்காதோ? தமிழனுக்கு விடிவு இவர்களால் கிடைக்காது...! :(  

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பசிப்பிணிக்கு அமுதும், பேச்சுத் துணைக்கு இணையும், முற்பகல் வினையும் இருக்கையில் பிணையும் வருமா..? :o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பசிப்பிணிக்கு அமுதும், பேச்சுத் துணைக்கு இணையும், முற்பகல் வினையும் இருக்கையில் பிணையும் வருமா..? :o

மதுரை யாரைச் சொல்லுறீங்கள் எண்டு யோசிச்சுப்பிடிக்க ஒரு ' பத்து நிமிடம்' வரையில் எடுத்தது!

 

அதைக் கண்டு பிடித்தபின்னர், சிரிப்பை நிப்பாட்டுவதற்கு இன்னுமொரு பத்து நிமிடம் வரை எடுத்தது! :D

Link to comment
Share on other sites

செவ்வாய் கிரகத்திலும் போராட்டம் உண்ணாவிரதம் தொடர்த்து நடக்காம் மாங்கலயன் செய்தி அனுப்பி இருக்கு அதலால் பிணை கிடைக்கும்  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜெயலலிதா உட்பட சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று கைதான அனைவருக்கும் ஜாமீன் கிடைத்தது..!

 

ஆதாரம்: தட்ஸ்தமிழ்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஜெயலலிதா உட்பட சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று கைதான அனைவருக்கும் ஜாமீன் கிடைத்தது..!

 

ஆதாரம்: தட்ஸ்தமிழ்.

 

தமிழருக்கு  நல்ல  செய்தி.....

Link to comment
Share on other sites

இருபது வருடம் மேல் இருக்கும் நளினி அப்பாக்கு உடல்நிலை சரியில்லை என்று கேட்டு விடாத ஜெயாக்கு ஒரு கிழமையில் ஜாமீன் ....

 

இதுக்கு வாழ்த்து வேற மானம் இழந்த தமிழரா நாம் விளங்கிடும் .

Link to comment
Share on other sites

ஜெயலலிதா உட்பட சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று கைதான அனைவருக்கும் ஜாமீன் கிடைத்தது..!

 

ஆதாரம்: தட்ஸ்தமிழ்.

ஜெயலலிதாவுக்கு ஜாமீன் இல்லை - கர்நாடக உயர்நீதிமன்றம்

 

புதிய தலைமுறை செய்தி ..

 

ஐ மிக்க மகிழ்ச்சி உள்ளயே கிட ஆத்தா எங்க வலி என்னவென்று புரியும் வரை .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வாலி சொன்னாத் தப்பாது!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • காசிக்குப் போறவை திரும்ப வந்து அதிக காலம் உயிரோடு இருப்பதில்லை என்று சொல்வார்கள். உண்மையா என்று தெரியவில்லை. ஆனால் என நபர் ஒருவர் அங்கு சென்றுவந்து 3 ஆண்டுகளில் இறந்துவிட்டார்.
    • கடந்த மாவீரர் தினத்திலும் ஐயா வந்து சிறிய சொற்பொழிவாற்றி இருந்தார்.
    • 'உரையாடலின் அறுவடை' என்னும் இரா. இராகுலனின் இந்தக் கவிதையை 'அகழ்' இதழில் இன்று பார்த்தேன். பல வருடங்களின் முன்னர் ஒரு அயலவர் இருந்தார். இந்தியாவில் ஒரு காலத்தில் ஐஐடி ஒன்று மட்டுமே இருந்தது. அந்தக் காலத்தில் அவர் அந்த ஐஐடியில் படித்தவர் என்று சொன்னார். அவரிடம் அபாரமான நினைவாற்றலும், தர்க்க அறிவும் இருந்தன. இங்கு அவர் எவருடனும் பழகியதாகவோ, அவருடன் எவரும் பழகியதாகவோ தெரியவில்லை. அவருடன் கதைப்பது சிரமமான ஒரு விடயம் தான். அவர் சொல்லும் பல விடயங்கள் என் தலைக்கு மேலாலேயே போய்க் கொண்டிருந்தன. அதனாலேயே அவரை எல்லோரும் தவிர்த்தனர் போலும்.     நான் எப்போதும் அவருடன் ஏதாவது கதைக்க முற்படுவேன். அவர் அடிக்கடி சலித்துக் கொள்வார், நான் ஒரு போதும் அவரிடம் ஒரு கேள்வியும் கேட்பதில்லை என்று. அவர் சொல்லும் விடயங்கள் சுத்தமாகப் புரியாமல் இருக்கும் போது, நான் என்ன கேள்வியை கேட்பது? அவர் இப்பொழுது இங்கில்லை. இந்தப் பூமியிலேயே இல்லை. இன்று இந்தக் கவிதையை பார்த்த பொழுது அவரின் நினைவு வந்தது.  '....கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது....'  என்ற வரிகளில் அவர் தெரிந்தார். *************    உரையாடலின் அறுவடை (இரா. இராகுலன்) ------------------------- கேட்கும் கேள்விகளிலிருந்தும் அளிக்கும் பதில்களிலிருந்தும் கடைபிடிக்கும் மௌனத்திலிருந்தும் நமக்கிடையேயான தூரத்தை நாம் நிர்ணயித்துக்கொள்கிறோம் தொடர்ந்து எழுப்பும் கேள்விகள் உடைத்து உடைத்து உள் பார்க்கிறது தொடர்ந்து அளிக்கும் பதில்கள் உள் திறந்து திறந்து காண்பிக்கிறது தொடரும் மௌனம் இருவரிடமும் திறவுகோலை அளிக்கிறது பூட்டினால் திறக்கவும் திறந்தால் பூட்டவும் கேள்வியும் பதிலுமற்ற உரையாடல் நாம் சந்திப்பதற்கு முன்பு இருந்த இடத்திலேயே நம்மைவிட்டு விடுகிறது https://akazhonline.com/?p=6797  
    • அவர் சிங்களத்துக்கு பஞ்சு துக்குபவர் இன்னும் அவருக்கு பெல் அடி கேட்கவில்லை போல் உள்ளது 😆
    • இருக்க‌லாம் பெருமாள் அண்ணா ஜெய‌ல‌லிதாவுக்கு க‌ருணாநிதிக்கு கோடி காசு அவ‌ங்க‌ட‌ கால் தூசுக்கு ச‌ம‌ம்..............ஜெய‌ல‌லிதா சொத்து குவிப்பு வ‌ழ‌க்கில் எத்த‌னை ஆயிர‌ம் கோடி  2ஜீ ஊழ‌லில் அக்கா க‌ணிமொழி அடிச்ச‌து எவ‌ள‌வு...............இப்ப‌ இருக்கும் முத‌ல‌மைச்ச‌ருக்கு தேர்த‌லுக்காக‌ 600 கோடி எங்கு இருந்து வ‌ந்த‌து என்ர‌  ம‌ன‌சில் வீர‌ப்ப‌ன் எப்ப‌வும்  என் குல‌சாமி🙏🙏🙏...................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.