Jump to content

இராஜபட்சேவின் முகத்திரையை கிழிக்க வத்திகானில் இன அழிப்புக்கு நீதி கேட்கும் புகைப்பட கண்காட்சி!


Recommended Posts

மகிந்த இராஜபட்சே தான் செய்த இனப்படுகொலையை மூடி மறைப்பதற்காக ஒவ்வொரு நாடாக ஓடிக்கொண்டிருக்கிறார். ஐக்கிய நாடுகள் சபை இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றங்களுக்கான சாட்சியங்களை பதிவு செய்து கொண்டிருக்கிறது.
 

kajan_photos.1.png

இந்தவேளையில் மகிந்தா தான் தப்புவதற்கு வழியில்லாமல் கடந்த 3 ஆம் தேதி வத்திகானில் புனித பாப்பரசரை சந்தித்துள்ளார். தான் செய்த இனவழிப்பை மூடி மறைப்பதற்காகவும், சர்வதேச மக்களை ஏமாற்றுவதற்காகவும், இரத்தக்கறை படிந்த கையோடு புனித பரிசுத்த பாப்பரசரை சந்தித்திருக்கிறார் இந்த இனப்படுகொலையாளன் மகிந்த இராஜபட்சே.
 

kajan_photos.2.png

இதே மகிந்த இராஜபட்சே இலங்கையில் பல கிறுஸ்துவ தேவாலயங்களை குண்டுகள் போட்டு அழித்தவர்.பல கிறுஸ்துவ மக்களை கொன்று குவித்தவர். 2009 ஆம் ஆண்டு இறுது கட்ட போர் நடந்த வேளையில் மக்களையும்,போராளிகளையும் அழைத்துச் சென்று இராணுவத்திடம் சரணடைந்த பிரான்ஸிஸ் ஜோசப் போன்ற மதகுருமார்கள் நிலை உயிரோடு இருக்கின்றார்களா என்று கூட இதுவரை தெரியவில்லை.அதற்கு காரணமானவர் இந்த மகிந்த இராஜபட்சே.

மனிதகுலத்தால் ஏற்றுக்கொள்ளமுடியாத மனிதன் இனப்படுகொலையாளன் மகிந்த இராஜபட்சே புனித பரிசுத்த பாப்பரசரை சந்தித்து கைகுலுக்கியது என்பது மனித குலத்திற்கே அழுக்கை ஏற்படுத்தியுள்ளது.

இந்தவேளையில் எமக்கு நடந்த இனவழிப்புப் புகைப்படங்களை புனித பாப்பரசருக்கும், அங்குள்ள மக்களுக்கும் காண்பித்து, சர்வதேச மத்தியில் போலிப்பரப்புரை செய்யும் இனப்படுகொலையாளன் இராஜபட்சேவின் முகத்திரையை கிழிக்கும் முகமாய், மகிந்தா வந்து சென்ற அதே வத்திகானிலேயே காட்சிப்படுத்த உள்ளோம்.

அதற்கு புலத்தில் வாழ்கின்ற எமது மக்களின் ஆதரவைக் கோரி நிற்கின்றோம்.

இப்படிக்கு
மனித நேய செயற்பாட்டாளர்
ம கஜன்
தொடர்புகளுக்கு 0033 752534892 http://www.pathivu.com/news/34402/57//d,article_full.aspx

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.