Jump to content

நான் சிவாஜி கட்சி


Recommended Posts

sivaji_2150125f.jpg
 

என் சிலேட்டுப் பருவத்தில் ஓர் உறவினரைப் போலவே சினிமா வழியாக எனக்குப் பரிச்சயமானார் சிவாஜி கணேசன். தஞ்சாவூர் ஜில்லாவில் முடிகொண்டான் என்கிற எங்கள் கிராமத்திலிருந்து ஐந்து மைல்கல் தொலைவில் நன்னிலம் என்கிற ஊரைத் தொட்டுக்கொண்டு இருந்தது மணவாளம்பேட்டை. அங்கு இருந்த லட்சுமி டாக்கீஸில்தான் நான் முதன்முதலாக சிவாஜியை பாபுவாகப் பார்த்தேன்.

 

“டேய்… இன்னிக்கு உன்னை சினிமா கொட்டாய்க்கு அழைச்சுட்டுப் போறேன்’’ என்று காலையிலேயே அப்பா சொல்லிவிட்டார். மனசு குதி யாட்டம் போட ஆரம்பித்துவிட்டது. புத்தகங்களுக்கு லீவு கொடுத்து விட்டு, அப்பாவின் டைனமோ (லைட்) வைத்த சைக்கிளை எண்ணெயெல் லாம் போட்டு நறுவிசாகத் துடைத்து வைத்தேன். சைக்கிளில் லைட் இல்லாமல், அதிலும் டபுள்ஸ் போனால் போலீஸ் பிடிக்கிற சமயம் அது.

 

‘பீஹாரில் வெள்ளம்’

சாயங்காலம் அப்பா சைக்கிள் மிதிக்க, கேரியரில் நான் ரெண்டு பக்கமும் காலைத் தொங்கப் போட்டுக்கொண்டு உட்கார்ந்துகொண்டேன். முடிகொண்டான் ஆற்றைக் கடந்து சைக்கிள் செல்கிறபோதே… ‘விநாயகனே… வினை தீர்ப்பவனே’ என்கிற சீர்காழி கோவிந்தராஜன் பாடும் பாடலின் முதல் வரி சினிமா கொட்டாயிலிருந்து மெல்ல மிதந்து வர ஆரம்பித்திருந்தது. ‘குணாநிதியே குருவே சரணம்… குறைகள் களைய இதுவே தருணம்…’ என்கிற பல்லவிக்குப் பாடல் தாவியிருந்தபோது, இரண்டு பெஞ்சு டிக்கெட் வாங்கியிருந்தார் அப்பா.

 

அப்பாவின் கையைப் பிடித்துக்கொண்டு கனவுக்குள் நுழைவதைப் போல நான் உள்ளே போனேன். அப்போதெல்லாம் சினிமா அரங்கங்களில் எடுத்தவுடன் படம் போட மாட்டார்கள். சோப்பு, துணி போன்ற சில விளம்பரங்களைத் தொடர்ந்து, ‘வார் ரீல்’ என்கிற செய்திப் படங்கள் போடுவார்கள். அந்தச் செய்திப் படத்தில் ஒருவர் கரகர குரலில் ‘பீஹாரில் வெள்ளம்…’ என்று பேசியது நினைவில் நீந்துகிறது. இடையிடையே ‘சிகரெட் புகைக்காதீர்கள்’, ‘உங்கள் கால்களை முன் சீட்டில் போடாதீர்கள்’ என்று சிலைடுகள் போடுவார்கள். ‘எப்படா… படம் போடுவானுங்க…’ என்று மனசை அலுக்க வைத்து அப்புறம்தான் படம் போடுவார்கள்.

படம் போட்டாச்சு

படம் ஆரம்பமானது. எடுத்தவுடன் வெள்ளைத் திரையை அடைத்துக் கொண்டு ‘பாபு’ என்று படத்தின் பெயர் விரிந்து, அடுத்து ‘கலைக்குரிசில்’ சிவாஜிகணேசன் என்று கதாநாயகனின் பெயர் போடும்போதுகூட, இந்தப் பெயர் எதிர்வரும் காலங்களில் நம் அகவெளியில் உன்னத தரிசனங்களை நிகழ்த்தப்போகிறது என்பது தெரிந்திருக்கவில்லை.

 

திரையில் நான் பார்த்த முதல் சிவாஜி படம் அது. அந்த நடிப்பில் இருந்த வசீகரம் என்னை உள்வாங்கிக்கொண்டது. படத்தில் கை ரிக்‌ஷாவை இளமைத் துடிப்புடன் இழுத்துக்கொண்டு ஓடுபவராக, இளமையின் வசீகரம் உதிர்ந்து முதுமையின் கரங்களில் தன்னை ஒப்படைத்தவராக, நொடித்துப்போன ஒரு குடும்பத்துக்குத் தன்னையே அர்ப்பணித்துக்கொண்ட விசுவாசத்தின் பிரதிநிதியாக சிவாஜி தோன்றியிருப்பார். மயிற்பீலியின் ஒற்றை இழையைப் புத்தகத்துக்குள் வைத்துவிட்டு, அது குட்டி போடும் என்று நம்பிக்கொண்டிருந்த அந்த பால பருவத்தில், என் மனவயலில் நடவு செய்யப்பட்ட ‘பாபு’-வின் அத்தனை காட்சிகளும் அற்புதமான சம்பா சாகுபடி!

 

அரசியல், கொள்கை, மேடை எதுவுமே அறியாத அந்த வயதில், எங்கள் கிராமத்துத் தெருக்களில் நாங்கள் அறிந்திருந்தது இரண்டே இரண்டு கட்சிதான். ஒன்று, சிவாஜி கட்சி. இன்னொன்று எம்.ஜி.ஆர் கட்சி. காமராஜர் மீது சிவாஜி பற்றுக்கொண்டிருந்ததால் காங்கிரஸை சிவாஜி கட்சி என்றும், அண்ணா மீது எம்.ஜி.ஆர் பற்றுக்கொண்டிருந்ததால் தி.மு.க-வை எம்.ஜி.ஆர் கட்சி என்றும்தான் எங்கள் கிராமத்தினர் அப்போது சொல்லிவந்தனர். ஆனால், இந்த குல்மாஸ் எல்லாம் புரியாத நான் ‘பாபு’ படம் பார்த்துவிட்டுத் திரும்பியிருந்த அந்த ராத்திரியே, ‘ராவோடு ராவாக’ எவருக்குமே தெரியாமல் சிவாஜி கட்சியில் சேர்ந்துவிட்டேன்.

அதன் பிறகு, பல சிவாஜி படங்கள். ஒவ்வொன்றும் எனக்குள் உலகில் இதுவரை இல்லாத வண்ணத்தில்கூட வாணவேடிக்கை நிகழ்த்தின. பின்னாட்களில் தமிழ் அழகியலின் பக்கம் என் கவனம் குவிவதற்கு சிவாஜி கணேசனின் வசன உச்சரிப்புகளும் காரணமாயிருந்தன.

 

ராஜராஜ சோழன் நடித்த படம்

சிவாஜியைப் பற்றிப் பெருமையாகப் பேசுபவர்களையும், மிகை நடிப்பின் உச்சம் என்று உச்சுக் கொட்டுபவர்களின் பேச்சையும் நான் உற்றுக் கவனித்தே வருகிறேன். ஏனெனில், எந்த ஒரு கலைஞனும் எல்லா மனிதர்களுக்கும் பிடித்தமானவராக இருக்க வேண்டும் என்று கட்டாயமில்லையே. ஆனாலும், நமக்குப் பிடித்தமானவரைப் பிறர் போற்றும்போது சின்ன சந்தோஷ ராட்டினம் சுழலத்தான் செய்கிறது. அப்படித்தான், ‘ராஜராஜ சோழன் சிவாஜி கணேசனாக நடித்த ராஜராஜ சோழன்’ படம் பார்த்தேன் என்று சுஜாதா எழுதியபோதும், பாலச் சந்திரன் சுள்ளிக்காடு ‘சிதம்பர ரகசியம்’புத்தகத்தில் சிவாஜியைப் பற்றி எழுதியிருந்தபோதும் அவர்களுக்குத் தெரியாமல் அவர்களையும் நான் பால்யத்தில் இருந்த ‘சிவாஜி கட்சி’-யில் உறுப்பினராக்கியது மனசு.

 

இதோ எந்தன் தெய்வம்…

‘பாபு’ படத்தில் டி.எம்.எஸ். குரல் செதுக்கிய ‘இதோ எந்தன் தெய்வம் முன்னாலே…’ என்கிற பாடல் என் மனதில் கோந்து போட்டு ஒட்டிக்கொண்டுவிட்டது. அந்தப் பாட்டின் எல்லா வரிகளும் எனக்கு மனப்பாடமாயிருந்தன.

8-ம் வகுப்பு படிக்கும்போது நடந்த பாட்டுப் போட்டியில் ‘இதோ எந்தன் தெய்வம் முன்னாலே…’ பாடலைப் பாடித்தான் பரிசு வாங்கியிருந்தேன். என் நண்பன் மணிவண்ணன் அப்போது சொன்னான்: “டேய்… நீ நல்லா பாடுனதுனால பரிசு குடுக்கலை. எதிர்த்தாப்புல உட்கார்ந்திருந்த பெரிய சாரை (தலைமையாசிரியர்) கையைக் காட்டி, ‘இதோ எந்தன் தெய்வம் முன்னாலே’ன்னு பாடுனதுனால அவர் உனக்குப் பரிசு குடுத்துட்டாரு’’ என்றான்.

அந்த மணிவண்ணனைக் கடைசிவரை ‘சிவாஜி கட்சி’யில் நான் சேர்க்கவே இல்லை!

- மானா பாஸ்கரன்,

 

http://tamil.thehindu.com/opinion/columns/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%BF-%E0%AE%95%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF/article6493465.ece?homepage=true&theme=true

 

Link to comment
Share on other sites

தலைப்பை பார்த்தவுடன் "நான் சிவாஜி கட்சி", என்று இந்தியாவில் யாரோ கட்சி தொடங்கியருப்பதாக நினைத்து விட்டேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"8-ம் வகுப்பு படிக்கும்போது நடந்த பாட்டுப் போட்டியில் ‘இதோ எந்தன் தெய்வம் முன்னாலே…’ பாடலைப் பாடித்தான் பரிசு வாங்கியிருந்தேன். என் நண்பன் மணிவண்ணன் அப்போது சொன்னான்: “டேய்… நீ நல்லா பாடுனதுனால பரிசு குடுக்கலை. எதிர்த்தாப்புல உட்கார்ந்திருந்த பெரிய சாரை (தலைமையாசிரியர்) கையைக் காட்டி, ‘இதோ எந்தன் தெய்வம் முன்னாலே’ன்னு பாடுனதுனால அவர் உனக்குப் பரிசு குடுத்துட்டாரு’’ என்றான்"

 

இளமையிலேயே நகை சுவையுள்ளவர் மணிவண்ணன் போல, மணி(வண்ணன்) என்றாலே கடிதான் போலிருக்கு :D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • பையா நீங்கள் புதுப் பதிவு போட வேண்டிய  அவசியமே இல்லை........ அதுதான் அவர் போட்டி விதிகளில் வடிவாக சொல்லியிருக்கிறார் ....போட்டி விதி  04 ஐப் பின்பற்றி அவரின் அனுமதி பெற்று உங்களின் பதிவில் சில திருத்தங்கள் செய்யலாம்........ அவரின் அனுமதி பெறுவது உங்களின் கெட்டித்தனம் ...... ஏதோ என்னாலானது "புத்தியுள்ள பிள்ளை பிழைத்துக் கொள்ளும்".....!  😁
    • அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அலுவலகத்தில் குழப்பநிலை! முல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு மந்துவில் பகுதியில் அமைந்துள்ள கடற்தொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் அலுவலகத்தில் நேற்றையதினம் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போது குழப்பநிலை ஏற்பட்டிருந்தது. இது தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது குறித்த  மக்கள் சந்திப்பின் போது செய்தி சேகரிப்பதற்கு சென்றிருந்த முல்லைத்தீவு மாவட்ட ஊடகவியலாளர் ஒருவர் அதனை காணொளியாக பதிவு செய்திருந்த நிலையில், அமைச்சரின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு உத்தியோகத்தர் காணொளி எடுக்க வேண்டாமென  அவரைத் தடுத்ததோடு அதனை மீறி எடுத்து செய்தி பிரசுரித்தால் வீடுதேடி வருவோம் எனவும் அச்சுறுத்தல் விடுத்ததாகத்  தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து இச்சம்பவம் தொடர்பில் புதுக்குடியிருப்பு பொலிஸ் அதிகாரிக்கு அறிவிக்கப்பட்டதாகவும், பின்னர் பொலிஸார் அமைச்சருக்கு இது குறித்து தெரியப்படுத்தி இருந்ததாகவும் ஆனால் எந்த நடவடிக்கையும் இது தொடர்பாக  எடுக்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது. https://athavannews.com/2024/1378726
    • இராணுவ வீரர்களின் கவனத்திற்கு! முறையான விடுமுறையின்றி கடமைக்கு சமூகமளிக்காத மற்றும் சட்டவிரோதமான முறையில் சேவையை விட்டு வெளியேறியுள்ள இராணுவத்தினருக்கு ஏப்ரல் 20 ஆம் திகதி முதல் மே மாதம் 20 ஆம் திகதி வரை பொது மன்னிப்பு காலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொது மன்னிப்புக் காலத்தின் போது, தமது படையணி தலைமையகத்துடன் தொடர்பு கொண்டு சட்டரீதியாக சேவையை விட்டு வெளியேற வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக இராணுவ ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. அதன்படி, எதிர்வரும் ஏப்ரல் 20 ஆம் திகதிக்கு முன்னர் முறையான விடுமுறையின்றி பணிக்கு சமூகமளிக்காத அதிகாரிகள் மற்றும் சிப்பாய்கள் உரிய ஆவணங்களுடன் தத்தமது படையணி தலைமையகத்திற்கு மட்டும் சமூகளிக்க வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து இராணுவ சேவையில் இருந்து வெளியேறும் அடிப்படை அனுமதி வழங்கல் நடவடிக்கை, 72 மணித்தியலங்களுக்குள் எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இராணுவ அடையாள அட்டை அல்லது இராணுவ அடையாள அட்டை தொலைந்து விட்டது எனின் சமீபத்தில் பெற்றுக் கொள்ளப்பட்ட பொலிஸ் அறிக்கையின் பிரதி, தேசிய அடையாள அட்டை அல்லது சாரதி அனுமதி பத்திர பிரதி, சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள், வரவு வைக்கப்பட்டுள்ள வங்கி புத்தகத்தின் பிரதி ஆகியவற்றை கொண்டுவருமாறு இராணுவ ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. மேலும், முறையான விடுமுறையின்றி பணிக்கு சமூகமளிக்காமை தவிர வேறு சட்ட விரோத நடவடிக்கைகளில் சம்பந்தப்படாதவர்கள் மற்றும் முறையான விடுமுறை இன்றி தற்போது வெளிநாட்டில் இருக்கும் இராணுவ உறுப்பினர்கள் மீண்டும் சமூகமளிக்காது தனது படையணியுடன் தொடர்பு கொண்டு இந்த பொது மன்னிப்புக் காலத்தின் போது சட்டரீதியாக தமது சேவையை விட்டு வெளியேறுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் இராணுவ ஊடகப் பிரிவு மேலும் அறிவித்துள்ளது. https://athavannews.com/2024/1378764
    • கனடாவில் இடம்பெற்ற தங்கக் கொள்ளை – 6 பேர் கைது! கனடாவில் இடம்பெற்ற மிகப் பெரிய தங்கக் கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய 6 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என கனேடிய தகவல்கள் தெரிவித்துள்ளன ஏப்ரல் 2023 இல், டொராண்டோவில் உள்ள பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது இதன் மதிப்பு 16 மில்லியன் அமெரிக்க டாலர்கள் என கனேடிய தகவல்கள் தெரிவிக்கின்றன. அவற்றில் மொத்தம் 400 கிலோ எடை கொண்ட 6,600 தங்கக் கட்டிகள் மற்றும் வெளிநாட்டு பண கையிருப்பு உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. https://athavannews.com/2024/1378752
    • அமெரிக்கா உடனடி பதில் தாக்குதலை தான் ஆதரிக்கவில்லை என்று கூறிவிட்டது. அப்படியென்றால் முதல் பத்தியில் இருக்கும் 74% உம் பொருந்தும்தானே!!
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.