Jump to content

மீண்டும் தமிழ் மொழியில்!!!


Recommended Posts

கொழும்பைத் தளமாகக் கொண்டு இயங்கிவரும் 'ஶ்ரீலங்கா மிரர்' என்ற இணையத்தளம் கடந்த காலங்களில் மும்மொழிகளிலும் இயங்கிவந்திருந்த நிலையில், சிறிது காலம் தமிழ்த் தளம் மட்டும் தடைப்பட்டிருந்தது.

 

ஶ்ரீலங்கா மிரர் அலுவலகத்திற்குள் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரின் உள்நுழைந்து விசாரணைகளை மேற்கொண்டதை அடுத்து மும்மொழிகளிலும் தொடர்ந்து இயங்குவதில் பெரும் சிக்கல்கள் ஏற்பட்டிருந்தன.

 

எனினும், மீண்டும் வழமைபோல ஶ்ரீலங்கா மிரர் தமிழ்த் தளமும் இயங்க ஆரம்பித்துள்ளது.

 

இலங்கையில் தற்போதுள்ள ஊடக (சுய) தணிக்கைகளுக்கு மத்தியில் செய்திகளையும், தகவல்களையும் தணிக்கையின்றி கொண்டு சேர்க்க வேண்டும் என்ற நோக்குடன் ஶ்ரீலங்கா மிரர் இணையம் செயல்பட்டு வருகிறது.

 

வழமைபோலவே உங்களின் ஆதரவுடன் தொடர்ந்தும் தமிழ்த் தளம் இயங்கும் என்ற நம்பிக்கையுடன் இந்தப் பணி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

 

உங்கள் மேலான ஆதரவுக்கு நன்றிகள்.

 

ஆசிரியர் குழாம்

http://www.tamil.srilankamirror.com/

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.