Jump to content

குழைச் சாதம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சுவையான குழைச் சாதம் செய்வது எப்படி என்று யாருக்காவது தெரியுமா? தெரிந்தால் செய்முறை தந்து உதவும் படி கேட்டுக் கொள்கிறேன்.நன்றி

Link to comment
Share on other sites

சுவையான குழைச் சாதம் செய்வது எப்படி என்று யாருக்காவது தெரியுமா? தெரிந்தால் செய்முறை தந்து உதவும் படி கேட்டுக் கொள்கிறேன்.நன்றி

 

என் மகனுக்கு பிடிக்கும் என்று என் மனைவி அடிக்கடி செய்வார். மகன் பாடசாலைக்கு கூட எடுத்துச் சென்று சாப்பிடுவார். ஒருவரும் எழுதாவிடின் அவரிடம் கேட்டு இன்று மாலை அல்லது நாளை எழுதுகின்றேன் ( அல்லது தனிமடலில் தொலைபேசி இலக்கத்தினை அனுப்பி விடுகின்றேன் :rolleyes: )

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
எனக்குத் தெரிந்த வகையில், குழைச் சாதம் என்பது, பழைய சாதம், பழைய கறிகள், ஊறுகாய் சேர்த்து குழைத்து, கையில் உருண்டையாக அம்மம்மா கையால், பூவரசம் இலையில், வாங்கி தின்பது.   :wub:
 
வீட்டில் விசேசம் நடந்த மறுநாள் காலை, மிஞ்சின சோறு கறிகளைப் பார்த்தால், உற்சாகமாகும் மனது.  :icon_idea:
 
ம்ம்..ம்ம்... அது ஒரு கனாக்காலம்!!!  :rolleyes:
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என் மகனுக்கு பிடிக்கும் என்று என் மனைவி அடிக்கடி செய்வார். மகன் பாடசாலைக்கு கூட எடுத்துச் சென்று சாப்பிடுவார். ஒருவரும் எழுதாவிடின் அவரிடம் கேட்டு இன்று மாலை அல்லது நாளை எழுதுகின்றேன் ( அல்லது தனிமடலில் தொலைபேசி இலக்கத்தினை அனுப்பி விடுகின்றேன் :rolleyes: )

நன்றி நிழலி...உங்கள் மனைவியிடம் எப்படி செய்வது எனக் கேட்டு செய்முறையை இணைத்து விடுங்கள்[தொலைபேசியில் கதைப்பதற்கு இன்னும் நாள் இருக்கு:)]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் ரெம்ப பிடிக்கும் இன்று வீட்டில் இதுதான்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுபேஸ் எப்படி செய்வது என்று எனக்கும் சொல்லலாம் தானே!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுபேஸ் எப்படி செய்வது என்று எனக்கும் சொல்லலாம் தானே!

அதொண்டும் பெரிய வேலை இல்லை அக்கா.. எல்லா மரக்கறிகளையும் வெட்டி அரிசியை கழுவி அதுக்குள்ள போட்டு கொஞ்சம் பழபுளி மஞ்சள்தூள் உப்பு மிளகாய்தூள் எல்லாம் போட்டு மூடி அவிய வச்சு இறக்க வேண்டியதுதான்... நமக்கு தெரிஞ்சது அம்புட்டுதேன் அக்கா... :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதொண்டும் பெரிய வேலை இல்லை அக்கா.. எல்லா மரக்கறிகளையும் வெட்டி அரிசியை கழுவி அதுக்குள்ள போட்டு கொஞ்சம் பழபுளி மஞ்சள்தூள் உப்பு மிளகாய்தூள் எல்லாம் போட்டு மூடி அவிய வச்சு இறக்க வேண்டியதுதான்... நமக்கு தெரிஞ்சது அம்புட்டுதேன் அக்கா... :D

என்னுடைய பிடித்த உணவே அதுதான் அதில் மொட்டை கருப்பன் அரிசி சொல்லி வேலையில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதனை... தமிழ் நாட்டில், கட்டுச்சாதம் என்று சொல்வார்கள் என நினைக்கின்றேன்.
ஆனால்... இதுவரை சாப்பிட்டுப் பார்த்ததில்லை.
விரிவான செய்முறையை, அறிய... நானும் ஆவலாக உள்ளேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் குழையல் சாதம் ரொம்ப ரொம்ப....  பிடிக்கும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

எனக்குத் தெரிந்த வகையில், குழைச் சாதம் என்பது, பழைய சாதம், பழைய கறிகள், ஊறுகாய் சேர்த்து குழைத்து, கையில் உருண்டையாக அம்மம்மா கையால், பூவரசம் இலையில், வாங்கி தின்பது.   :wub:
 
வீட்டில் விசேசம் நடந்த மறுநாள் காலை, மிஞ்சின சோறு கறிகளைப் பார்த்தால், உற்சாகமாகும் மனது.  :icon_idea:
 
ம்ம்..ம்ம்... அது ஒரு கனாக்காலம்!!!  :rolleyes:

 

 

நாதமுனி,

அதனை.... குழையல் சோறு என்று சொல்வோம்.

நீங்க குறிப்பிட்ட மாதிரி... தான், சாப்பிட்டுள்ளேன்.

எங்களது வீட்டுக்கு,  50 மீற்றர் தொலைவில் தான் எனது, பெரியம்மா வீடு உள்ளது.

அவவின் கையால்... கதை சொல்லி, உருட்டி சாப்பிடத் தரும்,

அந்த குழையல் சோறு.... இன்னும் வாயில், பசுமையாக இருக்கு.

ஆகா....  அந்த ருசி, மறக்க முடியாது. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னுடைய பிடித்த உணவே அதுதான் அதில் மொட்டை கருப்பன் அரிசி சொல்லி வேலையில்லை.

ம்.. எனக்கு தயிரோட சாப்பிட பிடிக்கும் எக்ஸ்ராவ அப்பளம் மிளகாய் பொரியலும்.. :D

Link to comment
Share on other sites

கனடாவில் கோவில்களில் குழைசாதத்தினைத் தான் அன்னதானமாக தருவார்கள். சில கோயில்களில் சுப்பராக இருக்கும்.  முக்கியமாக Middlefield இல் இருக்கும் ஐயப்பன் கோவில், கனடா செல்வ சந்நிதி கோயில் ஆகியவற்றில் தரும் சாப்பாடு அருமை.

சாமியை கும்பிட போகாட்டியும் மனைவி மக்களுடன் அந்தப் பக்கம் போகும் போது அடியேன் வரிசையில் நின்று அன்னதானம் வாங்கிச் சாப்பிடுவது வழமையாக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குழை சாதம் வீட்டில் அம்மா அடிக்கடி செய்வார்.தனிய,தனிய கறியோடு சாப்பிடுவதை விட, இப்படி சாப்பிடுவது பிடித்த விடையம். ஒவ்வொருக்காக சமைக்கும் போதும் ஒவ்வொரு விதமாக இருப்பதனால் இப்போ வீட்டில் செய்யும் குழை சாதம் எனக்கு விருப்பம் இல்லாது போய்டு..சில கோயில் சாதங்கள் உண்மையாக ஜம்மி தான்... :)

 

 

 

Link to comment
Share on other sites

கனடாவில் கோவில்களில் குழைசாதத்தினைத் தான் அன்னதானமாக தருவார்கள். சில கோயில்களில் சுப்பராக இருக்கும்.  முக்கியமாக Middlefield இல் இருக்கும் ஐயப்பன் கோவில், கனடா செல்வ சந்நிதி கோயில் ஆகியவற்றில் தரும் சாப்பாடு அருமை.

சாமியை கும்பிட போகாட்டியும் மனைவி மக்களுடன் அந்தப் பக்கம் போகும் போது அடியேன் வரிசையில் நின்று அன்னதானம் வாங்கிச் சாப்பிடுவது வழமையாக்கும்.

 

ஜேர்மனியிலும் பெரும்பாலானா ஆலயங்களில் குழை சாதம்தான் அன்னதானம்.

இதிலே முக்கியமாக பூசணி.. மரவள்ளி.. கத்தரிக்காய் ஆகியவற்றின் பங்களிப்பு முக்கியம்.

எனினும் ஆலயங்களில் வரிசையில் காத்திருந்து வாங்கி உண்ணும் சாதத்தின் சுவை, வீட்டுத் தயாரிப்பில் கிடைப்பதில்லை! 

சிலவேளை நளபாகம் என்பதாலோ?!!  :o  :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாரும் நல்லாய் இருக்கும் என்று சொல்லினமே தவிர ஒருத்தரும் ஒழுங்கான செய்முறை தருகீனம் இல்லை:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குழைசாதம் மிக இலகுவாகச் செய்யக் கூடிய சத்தான  சுவையான உணவு.

 

தேவையான பொருட்கள்

 

அரிசி - உங்களுக்குப் பிடித்த அரிசி - ஒவ்வொரு அரிசிக்கும் ஒவ்வொரு சுவை வரும்.

வெங்காயம் -இதற்கு சின்ன வெங்காயம் சுவையாக இருக்கும். பெரிதும் போடலாம்.

பச்சை மிளகாய் - 2 அல்லது உங்கள் உறைப்புக்கேற்றபடி

மரக்கறிகள்  - முருங்கைக் காய், கரட். உருளைக் கிழங்கு, பூக்கோவா, செலறி,பூசணி, கத்தரிக்காய்,சுக்கினி,கோல்றாபி, போன்சி, மைசூர் பருப்பு, துவரம்பருப்பு, தக்காளி 

தாளிப்பதற்கு - சிறிது எண்ணெய்,கடுகு சீரகம்,கறிவேப்பிலை

பெருங்காயம் - சிறிதளவு

பழப்புளி - சிறிது

உள்ளி - ஒரு பூடு அல்லது அரைப் பூடு

இஞ்சி - ஒரு அங்குல அளவு

 

எல்லா மரக்கறிகளும் போடத் தேவை இல்லை. விரும்பிய நான்கு ஐந்து போட்டால் உருசியாக இருக்கும். முக்கியமாக பருப்பும் உருளைக்கிழங்கும் சுவையைக் கூட்டும்.

 

மரக்கறிகள் எல்லாவற்றையும் வெட்டி - உங்களுக்குப் பிடித்த அளவில் - அரிசியையும் நன்றாகக் கழுவி நீர் விட்டு அவியவிட வேண்டும். இத்துடன் சிறிது இஞ்சி, உள்ளி இரண்டையும் சிறிதாக அரிந்து  போடலாம். உள்ளியைப் பெரிதாகவும் போடலாம். இரண்டு அல்லது மூன்று நன்கு பச்சை மிளகாயையும் சேர்த்துப் போட்டு அவிக்க நல்ல சுவையும் மனமும் வரும். துவரம் பருப்பு என்றால் மரக்கறிகளுடன் சேர்த்துப் போடவேண்டும். மைசூர் பருப்பு மரக்கறிகள் சிறிது அவிந்தவுடன் போட்டால் கரையாது. சிறிது கறி மஞ்சள் முதலே போட்டு மரக்கறிகளும் சோறும் வெந்தவுடன் சிறிது பழப்புளி, பெருங்காயம் சிறிது விட்டு இறக்கிவிட்டு, சிறிய வெங்காயத்தைக் கடுகு சீரகம் வெடித்தவுடன் போட்டு சிறிது கறிவேப்பிலைகளும் போட்டு முக்கால் வதங்கலில் மரக்கறிச் சோற்றுக் கலவையில் போட்டுக் கலந்து மூடிவிட்டு உடனேயோ சிறிது நேரம் கழியவோ உண்ணலாம். முக்கியமாக வடகம், மோர்மிளகாய்,பப்படத்துடன் உண்ண சுவையோ சுவை. 

 

நான் இப்படிப் பந்தியாக எழுதி இருக்கிறேன் என்று பயப்பிட வேண்டாம் ரதி. மிக இலகு செய்வது. ஒரு அரை மணித்தியாலம் போதும் செய்ய.

 

 

 

 


ஜேர்மனியிலும் பெரும்பாலானா ஆலயங்களில் குழை சாதம்தான் அன்னதானம்.
இதிலே முக்கியமாக பூசணி.. மரவள்ளி.. கத்தரிக்காய் ஆகியவற்றின் பங்களிப்பு முக்கியம்.

எனினும் ஆலயங்களில் வரிசையில் காத்திருந்து வாங்கி உண்ணும் சாதத்தின் சுவை, வீட்டுத் தயாரிப்பில் கிடைப்பதில்லை! 

சிலவேளை நளபாகம் என்பதாலோ?!!  :o  :lol:

 

அப்படி இல்லை. கோவிலுக்குப் போகும்போது அநேகர் உண்ணாமல் தான் போவது. அதனால் அங்கு எப்பிடிச் செய்திருந்தாலும் பசிக்கு அமிர்தம்போல் தான் இருக்கும் சோழியன். :D  :D 
 

Link to comment
Share on other sites

அதொண்டும் பெரிய வேலை இல்லை அக்கா.. எல்லா மரக்கறிகளையும் வெட்டி அரிசியை கழுவி அதுக்குள்ள போட்டு கொஞ்சம் பழபுளி மஞ்சள்தூள் உப்பு மிளகாய்தூள் எல்லாம் போட்டு மூடி அவிய வச்சு இறக்க வேண்டியதுதான்... நமக்கு தெரிஞ்சது அம்புட்டுதேன் அக்கா... :D

 

இதை முயற்சி செய்து பாருங்கோ!

புழுங்கல் அரிசி இதற்கு சுவையானது. கழுவி சிறிது நேரம் ஊறவிடுங்கள்.

அரிசியைப் போல ஒன்றரை மடங்கு தண்ணீர் விடுங்கள். அதனுள் தேவையான பொருட்களை போட்டு குழம்பு மாதிரி வைத்து..

கொதித்து வரும்போது ஊறிய அரிசியை போட்டு கிளறி மூடிவிடுங்கள்.

தண்ணீர் சோற்று மட்டத்துக்கு வற்றியதும்... அடுப்பின் வெப்பத்தை குறைத்து.. மீண்டும் ஒருமுறை கிளறி மூடி விடுங்கள்.

 

அவ்வளவுதான்! குழை சாதம் ரெடி!!  :o  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கனடாவில் கோவில்களில் குழைசாதத்தினைத் தான் அன்னதானமாக தருவார்கள். சில கோயில்களில் சுப்பராக இருக்கும்.  முக்கியமாக Middlefield இல் இருக்கும் ஐயப்பன் கோவில், கனடா செல்வ சந்நிதி கோயில் ஆகியவற்றில் தரும் சாப்பாடு அருமை.

சாமியை கும்பிட போகாட்டியும் மனைவி மக்களுடன் அந்தப் பக்கம் போகும் போது அடியேன் வரிசையில் நின்று அன்னதானம் வாங்கிச் சாப்பிடுவது வழமையாக்கும்.

 

உப்பிடி கன புருசன்மாரை லைவ்விலை பாத்திருக்கிறம்.....மனுசி பிள்ளையளை கோயிலுக்கு கூட்டிக்கொண்டு வந்தவையாம்.......வெளியிலைதான் நிப்பினமாம்... :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாரும் நல்லாய் இருக்கும் என்று சொல்லினமே தவிர ஒருத்தரும் ஒழுங்கான செய்முறை தருகீனம் இல்லை :lol:

 

எடியே! சாம்பாருக்கை சோத்தை போட்டு கிண்டி விட்டியெண்டால் அது குழையல்சாதம் :icon_idea: .....இதுக்குப்போய் காட்டுக்கத்து கத்திக்கொண்டு...... :D  :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

 

மரக்கறிகள்  - முருங்கைக் காய், கரட். உருளைக் கிழங்கு, பூக்கோவா, செலறி,பூசணி, கத்தரிக்காய்,சுக்கினி,கோல்றாபி, போன்சி, 

 

 

 

 

இவை என்ன வகை மரக்கறிகள்? கேள்விப் பட்டதில்லையே ?
 
சரியான பெயர்களை அல்லது படங்களை தர முடியுமா ? (கூகிள் image ?)
 
முருங்கை காய் இதுக்கு சரி வருமா? ருசியாக இருந்தாலும், எங்கே கலந்து ஒளிந்து இருக்கும் என்று தெரியாத வகையில் வாயை, நாக்கினை மீன்முள்ளு மாதிரி குத்தி பதம் பார்க்குமே? 
Link to comment
Share on other sites

பூக்கோவா
400px_wei_blumenkohl.jpg

சுக்கினி
zucchini.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவை என்ன வகை மரக்கறிகள்? கேள்விப் பட்டதில்லையே ?

சரியான பெயர்களை அல்லது படங்களை தர முடியுமா ? (கூகிள் image ?)

முருங்கை காய் இதுக்கு சரி வருமா? ருசியாக இருந்தாலும், எங்கே கலந்து ஒளிந்து இருக்கும் என்று தெரியாத வகையில் வாயை, நாக்கினை மீன்முள்ளு மாதிரி குத்தி பதம் பார்க்குமே?

முருக்கங்காயா.... எனக்கு எண்டால் இது சரியாகப்படவில்லை... :D
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முருக்கங்காயா.... எனக்கு எண்டால் இது சரியாகப்படவில்லை... :D

 

 

 

நன்றி soliyan, யாயினி
 
மூன்றாவது முள்ளங்கி என நினைக்கிறேன்?
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.