Jump to content

குழைச் சாதம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

சுவையான குழைச் சாதம் செய்வது எப்படி என்று யாருக்காவது தெரியுமா? தெரிந்தால் செய்முறை தந்து உதவும் படி கேட்டுக் கொள்கிறேன்.நன்றி

Link to comment
Share on other sites

சுவையான குழைச் சாதம் செய்வது எப்படி என்று யாருக்காவது தெரியுமா? தெரிந்தால் செய்முறை தந்து உதவும் படி கேட்டுக் கொள்கிறேன்.நன்றி

 

என் மகனுக்கு பிடிக்கும் என்று என் மனைவி அடிக்கடி செய்வார். மகன் பாடசாலைக்கு கூட எடுத்துச் சென்று சாப்பிடுவார். ஒருவரும் எழுதாவிடின் அவரிடம் கேட்டு இன்று மாலை அல்லது நாளை எழுதுகின்றேன் ( அல்லது தனிமடலில் தொலைபேசி இலக்கத்தினை அனுப்பி விடுகின்றேன் :rolleyes: )

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
எனக்குத் தெரிந்த வகையில், குழைச் சாதம் என்பது, பழைய சாதம், பழைய கறிகள், ஊறுகாய் சேர்த்து குழைத்து, கையில் உருண்டையாக அம்மம்மா கையால், பூவரசம் இலையில், வாங்கி தின்பது.   :wub:
 
வீட்டில் விசேசம் நடந்த மறுநாள் காலை, மிஞ்சின சோறு கறிகளைப் பார்த்தால், உற்சாகமாகும் மனது.  :icon_idea:
 
ம்ம்..ம்ம்... அது ஒரு கனாக்காலம்!!!  :rolleyes:
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என் மகனுக்கு பிடிக்கும் என்று என் மனைவி அடிக்கடி செய்வார். மகன் பாடசாலைக்கு கூட எடுத்துச் சென்று சாப்பிடுவார். ஒருவரும் எழுதாவிடின் அவரிடம் கேட்டு இன்று மாலை அல்லது நாளை எழுதுகின்றேன் ( அல்லது தனிமடலில் தொலைபேசி இலக்கத்தினை அனுப்பி விடுகின்றேன் :rolleyes: )

நன்றி நிழலி...உங்கள் மனைவியிடம் எப்படி செய்வது எனக் கேட்டு செய்முறையை இணைத்து விடுங்கள்[தொலைபேசியில் கதைப்பதற்கு இன்னும் நாள் இருக்கு:)]

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் ரெம்ப பிடிக்கும் இன்று வீட்டில் இதுதான்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுபேஸ் எப்படி செய்வது என்று எனக்கும் சொல்லலாம் தானே!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுபேஸ் எப்படி செய்வது என்று எனக்கும் சொல்லலாம் தானே!

அதொண்டும் பெரிய வேலை இல்லை அக்கா.. எல்லா மரக்கறிகளையும் வெட்டி அரிசியை கழுவி அதுக்குள்ள போட்டு கொஞ்சம் பழபுளி மஞ்சள்தூள் உப்பு மிளகாய்தூள் எல்லாம் போட்டு மூடி அவிய வச்சு இறக்க வேண்டியதுதான்... நமக்கு தெரிஞ்சது அம்புட்டுதேன் அக்கா... :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதொண்டும் பெரிய வேலை இல்லை அக்கா.. எல்லா மரக்கறிகளையும் வெட்டி அரிசியை கழுவி அதுக்குள்ள போட்டு கொஞ்சம் பழபுளி மஞ்சள்தூள் உப்பு மிளகாய்தூள் எல்லாம் போட்டு மூடி அவிய வச்சு இறக்க வேண்டியதுதான்... நமக்கு தெரிஞ்சது அம்புட்டுதேன் அக்கா... :D

என்னுடைய பிடித்த உணவே அதுதான் அதில் மொட்டை கருப்பன் அரிசி சொல்லி வேலையில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதனை... தமிழ் நாட்டில், கட்டுச்சாதம் என்று சொல்வார்கள் என நினைக்கின்றேன்.
ஆனால்... இதுவரை சாப்பிட்டுப் பார்த்ததில்லை.
விரிவான செய்முறையை, அறிய... நானும் ஆவலாக உள்ளேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கும் குழையல் சாதம் ரொம்ப ரொம்ப....  பிடிக்கும்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

எனக்குத் தெரிந்த வகையில், குழைச் சாதம் என்பது, பழைய சாதம், பழைய கறிகள், ஊறுகாய் சேர்த்து குழைத்து, கையில் உருண்டையாக அம்மம்மா கையால், பூவரசம் இலையில், வாங்கி தின்பது.   :wub:
 
வீட்டில் விசேசம் நடந்த மறுநாள் காலை, மிஞ்சின சோறு கறிகளைப் பார்த்தால், உற்சாகமாகும் மனது.  :icon_idea:
 
ம்ம்..ம்ம்... அது ஒரு கனாக்காலம்!!!  :rolleyes:

 

 

நாதமுனி,

அதனை.... குழையல் சோறு என்று சொல்வோம்.

நீங்க குறிப்பிட்ட மாதிரி... தான், சாப்பிட்டுள்ளேன்.

எங்களது வீட்டுக்கு,  50 மீற்றர் தொலைவில் தான் எனது, பெரியம்மா வீடு உள்ளது.

அவவின் கையால்... கதை சொல்லி, உருட்டி சாப்பிடத் தரும்,

அந்த குழையல் சோறு.... இன்னும் வாயில், பசுமையாக இருக்கு.

ஆகா....  அந்த ருசி, மறக்க முடியாது. :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னுடைய பிடித்த உணவே அதுதான் அதில் மொட்டை கருப்பன் அரிசி சொல்லி வேலையில்லை.

ம்.. எனக்கு தயிரோட சாப்பிட பிடிக்கும் எக்ஸ்ராவ அப்பளம் மிளகாய் பொரியலும்.. :D

Link to comment
Share on other sites

கனடாவில் கோவில்களில் குழைசாதத்தினைத் தான் அன்னதானமாக தருவார்கள். சில கோயில்களில் சுப்பராக இருக்கும்.  முக்கியமாக Middlefield இல் இருக்கும் ஐயப்பன் கோவில், கனடா செல்வ சந்நிதி கோயில் ஆகியவற்றில் தரும் சாப்பாடு அருமை.

சாமியை கும்பிட போகாட்டியும் மனைவி மக்களுடன் அந்தப் பக்கம் போகும் போது அடியேன் வரிசையில் நின்று அன்னதானம் வாங்கிச் சாப்பிடுவது வழமையாக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குழை சாதம் வீட்டில் அம்மா அடிக்கடி செய்வார்.தனிய,தனிய கறியோடு சாப்பிடுவதை விட, இப்படி சாப்பிடுவது பிடித்த விடையம். ஒவ்வொருக்காக சமைக்கும் போதும் ஒவ்வொரு விதமாக இருப்பதனால் இப்போ வீட்டில் செய்யும் குழை சாதம் எனக்கு விருப்பம் இல்லாது போய்டு..சில கோயில் சாதங்கள் உண்மையாக ஜம்மி தான்... :)

 

 

 

Link to comment
Share on other sites

கனடாவில் கோவில்களில் குழைசாதத்தினைத் தான் அன்னதானமாக தருவார்கள். சில கோயில்களில் சுப்பராக இருக்கும்.  முக்கியமாக Middlefield இல் இருக்கும் ஐயப்பன் கோவில், கனடா செல்வ சந்நிதி கோயில் ஆகியவற்றில் தரும் சாப்பாடு அருமை.

சாமியை கும்பிட போகாட்டியும் மனைவி மக்களுடன் அந்தப் பக்கம் போகும் போது அடியேன் வரிசையில் நின்று அன்னதானம் வாங்கிச் சாப்பிடுவது வழமையாக்கும்.

 

ஜேர்மனியிலும் பெரும்பாலானா ஆலயங்களில் குழை சாதம்தான் அன்னதானம்.

இதிலே முக்கியமாக பூசணி.. மரவள்ளி.. கத்தரிக்காய் ஆகியவற்றின் பங்களிப்பு முக்கியம்.

எனினும் ஆலயங்களில் வரிசையில் காத்திருந்து வாங்கி உண்ணும் சாதத்தின் சுவை, வீட்டுத் தயாரிப்பில் கிடைப்பதில்லை! 

சிலவேளை நளபாகம் என்பதாலோ?!!  :o  :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாரும் நல்லாய் இருக்கும் என்று சொல்லினமே தவிர ஒருத்தரும் ஒழுங்கான செய்முறை தருகீனம் இல்லை:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

குழைசாதம் மிக இலகுவாகச் செய்யக் கூடிய சத்தான  சுவையான உணவு.

 

தேவையான பொருட்கள்

 

அரிசி - உங்களுக்குப் பிடித்த அரிசி - ஒவ்வொரு அரிசிக்கும் ஒவ்வொரு சுவை வரும்.

வெங்காயம் -இதற்கு சின்ன வெங்காயம் சுவையாக இருக்கும். பெரிதும் போடலாம்.

பச்சை மிளகாய் - 2 அல்லது உங்கள் உறைப்புக்கேற்றபடி

மரக்கறிகள்  - முருங்கைக் காய், கரட். உருளைக் கிழங்கு, பூக்கோவா, செலறி,பூசணி, கத்தரிக்காய்,சுக்கினி,கோல்றாபி, போன்சி, மைசூர் பருப்பு, துவரம்பருப்பு, தக்காளி 

தாளிப்பதற்கு - சிறிது எண்ணெய்,கடுகு சீரகம்,கறிவேப்பிலை

பெருங்காயம் - சிறிதளவு

பழப்புளி - சிறிது

உள்ளி - ஒரு பூடு அல்லது அரைப் பூடு

இஞ்சி - ஒரு அங்குல அளவு

 

எல்லா மரக்கறிகளும் போடத் தேவை இல்லை. விரும்பிய நான்கு ஐந்து போட்டால் உருசியாக இருக்கும். முக்கியமாக பருப்பும் உருளைக்கிழங்கும் சுவையைக் கூட்டும்.

 

மரக்கறிகள் எல்லாவற்றையும் வெட்டி - உங்களுக்குப் பிடித்த அளவில் - அரிசியையும் நன்றாகக் கழுவி நீர் விட்டு அவியவிட வேண்டும். இத்துடன் சிறிது இஞ்சி, உள்ளி இரண்டையும் சிறிதாக அரிந்து  போடலாம். உள்ளியைப் பெரிதாகவும் போடலாம். இரண்டு அல்லது மூன்று நன்கு பச்சை மிளகாயையும் சேர்த்துப் போட்டு அவிக்க நல்ல சுவையும் மனமும் வரும். துவரம் பருப்பு என்றால் மரக்கறிகளுடன் சேர்த்துப் போடவேண்டும். மைசூர் பருப்பு மரக்கறிகள் சிறிது அவிந்தவுடன் போட்டால் கரையாது. சிறிது கறி மஞ்சள் முதலே போட்டு மரக்கறிகளும் சோறும் வெந்தவுடன் சிறிது பழப்புளி, பெருங்காயம் சிறிது விட்டு இறக்கிவிட்டு, சிறிய வெங்காயத்தைக் கடுகு சீரகம் வெடித்தவுடன் போட்டு சிறிது கறிவேப்பிலைகளும் போட்டு முக்கால் வதங்கலில் மரக்கறிச் சோற்றுக் கலவையில் போட்டுக் கலந்து மூடிவிட்டு உடனேயோ சிறிது நேரம் கழியவோ உண்ணலாம். முக்கியமாக வடகம், மோர்மிளகாய்,பப்படத்துடன் உண்ண சுவையோ சுவை. 

 

நான் இப்படிப் பந்தியாக எழுதி இருக்கிறேன் என்று பயப்பிட வேண்டாம் ரதி. மிக இலகு செய்வது. ஒரு அரை மணித்தியாலம் போதும் செய்ய.

 

 

 

 


ஜேர்மனியிலும் பெரும்பாலானா ஆலயங்களில் குழை சாதம்தான் அன்னதானம்.
இதிலே முக்கியமாக பூசணி.. மரவள்ளி.. கத்தரிக்காய் ஆகியவற்றின் பங்களிப்பு முக்கியம்.

எனினும் ஆலயங்களில் வரிசையில் காத்திருந்து வாங்கி உண்ணும் சாதத்தின் சுவை, வீட்டுத் தயாரிப்பில் கிடைப்பதில்லை! 

சிலவேளை நளபாகம் என்பதாலோ?!!  :o  :lol:

 

அப்படி இல்லை. கோவிலுக்குப் போகும்போது அநேகர் உண்ணாமல் தான் போவது. அதனால் அங்கு எப்பிடிச் செய்திருந்தாலும் பசிக்கு அமிர்தம்போல் தான் இருக்கும் சோழியன். :D  :D 
 

Link to comment
Share on other sites

அதொண்டும் பெரிய வேலை இல்லை அக்கா.. எல்லா மரக்கறிகளையும் வெட்டி அரிசியை கழுவி அதுக்குள்ள போட்டு கொஞ்சம் பழபுளி மஞ்சள்தூள் உப்பு மிளகாய்தூள் எல்லாம் போட்டு மூடி அவிய வச்சு இறக்க வேண்டியதுதான்... நமக்கு தெரிஞ்சது அம்புட்டுதேன் அக்கா... :D

 

இதை முயற்சி செய்து பாருங்கோ!

புழுங்கல் அரிசி இதற்கு சுவையானது. கழுவி சிறிது நேரம் ஊறவிடுங்கள்.

அரிசியைப் போல ஒன்றரை மடங்கு தண்ணீர் விடுங்கள். அதனுள் தேவையான பொருட்களை போட்டு குழம்பு மாதிரி வைத்து..

கொதித்து வரும்போது ஊறிய அரிசியை போட்டு கிளறி மூடிவிடுங்கள்.

தண்ணீர் சோற்று மட்டத்துக்கு வற்றியதும்... அடுப்பின் வெப்பத்தை குறைத்து.. மீண்டும் ஒருமுறை கிளறி மூடி விடுங்கள்.

 

அவ்வளவுதான்! குழை சாதம் ரெடி!!  :o  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கனடாவில் கோவில்களில் குழைசாதத்தினைத் தான் அன்னதானமாக தருவார்கள். சில கோயில்களில் சுப்பராக இருக்கும்.  முக்கியமாக Middlefield இல் இருக்கும் ஐயப்பன் கோவில், கனடா செல்வ சந்நிதி கோயில் ஆகியவற்றில் தரும் சாப்பாடு அருமை.

சாமியை கும்பிட போகாட்டியும் மனைவி மக்களுடன் அந்தப் பக்கம் போகும் போது அடியேன் வரிசையில் நின்று அன்னதானம் வாங்கிச் சாப்பிடுவது வழமையாக்கும்.

 

உப்பிடி கன புருசன்மாரை லைவ்விலை பாத்திருக்கிறம்.....மனுசி பிள்ளையளை கோயிலுக்கு கூட்டிக்கொண்டு வந்தவையாம்.......வெளியிலைதான் நிப்பினமாம்... :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாரும் நல்லாய் இருக்கும் என்று சொல்லினமே தவிர ஒருத்தரும் ஒழுங்கான செய்முறை தருகீனம் இல்லை :lol:

 

எடியே! சாம்பாருக்கை சோத்தை போட்டு கிண்டி விட்டியெண்டால் அது குழையல்சாதம் :icon_idea: .....இதுக்குப்போய் காட்டுக்கத்து கத்திக்கொண்டு...... :D  :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

 

மரக்கறிகள்  - முருங்கைக் காய், கரட். உருளைக் கிழங்கு, பூக்கோவா, செலறி,பூசணி, கத்தரிக்காய்,சுக்கினி,கோல்றாபி, போன்சி, 

 

 

 

 

இவை என்ன வகை மரக்கறிகள்? கேள்விப் பட்டதில்லையே ?
 
சரியான பெயர்களை அல்லது படங்களை தர முடியுமா ? (கூகிள் image ?)
 
முருங்கை காய் இதுக்கு சரி வருமா? ருசியாக இருந்தாலும், எங்கே கலந்து ஒளிந்து இருக்கும் என்று தெரியாத வகையில் வாயை, நாக்கினை மீன்முள்ளு மாதிரி குத்தி பதம் பார்க்குமே? 
Link to comment
Share on other sites

பூக்கோவா
400px_wei_blumenkohl.jpg

சுக்கினி
zucchini.jpg

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவை என்ன வகை மரக்கறிகள்? கேள்விப் பட்டதில்லையே ?

சரியான பெயர்களை அல்லது படங்களை தர முடியுமா ? (கூகிள் image ?)

முருங்கை காய் இதுக்கு சரி வருமா? ருசியாக இருந்தாலும், எங்கே கலந்து ஒளிந்து இருக்கும் என்று தெரியாத வகையில் வாயை, நாக்கினை மீன்முள்ளு மாதிரி குத்தி பதம் பார்க்குமே?

முருக்கங்காயா.... எனக்கு எண்டால் இது சரியாகப்படவில்லை... :D
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முருக்கங்காயா.... எனக்கு எண்டால் இது சரியாகப்படவில்லை... :D

 

 

 

நன்றி soliyan, யாயினி
 
மூன்றாவது முள்ளங்கி என நினைக்கிறேன்?
Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
    • சென்ரல் கொமாண்டின் மறுப்பு.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.