Jump to content

இவனை என்ன செய்யலாம் ??????


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 நாம் கடையை வாங்கியதே விற்றவர் சொன்னார்தான். களவு எடுக்க என்றே ஆட்கள் வருவார்கள் கவனம் என்று. ஒரு மாதத்தின் பின் ஒரு தமிழ் பெடியன் கடைக்கு வந்தான். வந்த உடனேயே அக்கா எப்பிடி இருக்கிறியள் என்று அவன் இயல்பாக நலம் விசாரித்தபடி கதைக்கத் தொடங்கினான். ஆளும் நல்ல ஸ்மாட். பார்க்க நல்ல பெடியன் போல் இருந்தது. அதனால் நானும் இயல்பாகி அவனுடன் கதைக்கத் தொடங்கினேன்.

 

என்னுடன் மட்டுமல்ல என் கணவருடனும் மிகவும் நட்பாகிவிட்டான் அவன். அவன் பெற்றோர் சகோதரர்கள் பற்றிச் சொன்னவை அவனை ஒரு பண்பான குடும்பத்துப் பிள்ளை என எண்ண வைத்தது. கடந்த நான்கு ஆண்டுகளாக எல்லாம் நன்றாகத்தான் போய்க்கொண்டு இருந்தது.

 

நான்கு மாதங்களின் முன்னர் ஒருநாள் நானும் கணவரும் நிற்கும்போது வந்தவன் கணவரைத் தனியே அழைத்துச் சென்று காதைக் கடித்தான். கணவர் தலையை ஆட்டிக்கொண்டு உமக்கு சாப்பாட்டுச் சாமான் ஏதும் வேணுமெண்டால் எடுத்துக்கொண்டு போட்டு பிறகு காசு தாரும். சிகரெட் கடனுக்குத் தரமாட்டன் என்று சொல்வது கேட்டது. என்ன என்று நான் கேட்க மனிசன் ஒன்றும் இல்லை என்றுவிட்டு முகத்தைக் கடுப்பாக்கிக் கொண்டு நின்றது.

 

அவன் ஒரு நிமிடம் நின்றுவிட்டுப் போய் விட்டான். பாவம் அவன் இண்டைக்கு மட்டும் குடுத்திருக்கலாம் என்றேன் நான் இரக்கத்துடன். ஏற்கனவே அவன் இருபது பவுன்ஸ் தரவேண்டும் என்று கணவர் கூற, ஏன் அவ்வளவு கடன் குடுத்தீர்கள் என நான் மனிசனைத் திட்டினேன்.

 

அவன் மாலை நேரம் வந்து வாங்கிவிட்டு அடுத்தநாள் கொண்டுவந்து தருகிறதால் அவனுக்குக் கொடுக்கிறனான். இப்ப இரண்டு வாரங்களாக திருப்பித் தரவில்லை என்றார். அப்ப இனிமேல் அவனுக்கு ஒன்றும் கடன் கொடுக்கக் கூடாது என்று கண்டிப்புடன் கணவருக்குக் கூறிவிட்டுப் போய்விட்டேன். 

 

அதன் பின் ஆரம்பித்தது வினை. ஒவ்வொரு  நாளும் மாலையில் வந்து இரண்டு பியர்களை பணம் தராமல் எடுத்துக்கொண்டு போவது அவனது வாடிக்கையானது. கணவரும் அவனுக்கு எவ்வளவோ தன்மையாகச் சொல்லியும் அவன் கேட்காது தொடர்வதுமாக இருக்க ஒருநாள் நாம் பொலிசுக்குச் சொல்லப் போகிறோம் என்றதற்கு போலிஸ் என்னை என்ன செய்வான் என்று கூறியபடியே மீண்டும் இரண்டைத் தூக்கிக்கொண்டு செல்ல உடனே கணவர் போலிசுக்கு போன் செய்தார்.

 

பொலிஸ் ஆடிப்பாடி ஒரு மணி நேரம் கழிய வந்து விபரம் கேட்டு CCTV யில் அவனையும் பார்த்துவிட்டு தாம் அக்சன் எடுக்கிறோம் என்றுவிட்டுப் போனார்கள். அடுத்தநாளும் அவன் வர, நேற்றே நான் பொலிசுக்குச் சொல்லிவிட்டேன். தயவு செய்து கடைக்கு நீர் வரவேண்டாம் என்று கணவர் சொல்லியும் அவன் கேட்கவில்லை.

 

ஏற்கனவே, கஸ்டமர் களவெடுத்தாலும் நீங்கள் ஒன்றும் செய்யக் கூடாது என்று பொலிஸ் சொன்னதாலும் எம்மூர் பெடியன் என்பதாலும்அவனைத் தடுக்கவும் முடியேல்லை. அப்பிடியிருந்தும் கணவர் ஒருநாள் அவனை மறிக்கப்போக அவன் கடைக்குள்ளேயே மனிசனோட சடுகுடு விளையாடத் தொடங்கீர்றான். சுத்திச் சுத்தி கடைக்குள்ள ஒடோட ஒவ்வொரு பொருளா எடுத்து பொக்கற்றுக்கை வச்சதுமில்லாமல் இப்ப என்ன செய்வியள் ஏன்டா கேள்வி வேற. மனிசன் அவனைக் கலைச்சபடி எனக்குப் போன் செய்து இவனை என்ன செய்யிறது எண்டு கேட்க கோவத்தில அடிச்சுக் கிடிச்சுப் போடாதேங்கோ என்றுவிட்டு நான் போலிசுக்கு அடிச்சால் வழமைபோல் பொலிஸ் வந்து கமராவைப் பார்த்துச் சிரிச்சும் போட்டு funny என்றுவிட்டு வீட்டு இலக்கத்தையும் கேட்டுக்கொண்டு போனதுதான். இனி பொலிஸ் அவனை உறுக்கி வைக்கும் எண்டு ஒரு நின்மதியில இருந்தால் திரும்பவும் இரண்டு நாளில அவன்.

இப்பிடியே அவன் வாறதும் இரண்டு பியரைத் தூக்கிறதும் அவன் போனபிறகு போலீஸ் வந்து சாட்டுக்குக் கதைச்சிட்டுப் போறதுமா நாலு மாதம் முடிஞ்சுது. அவன் யாலியா தன்பாட்டில் களவெடுத்துக் கொண்டு திரிய எனக்கு வந்த எரிச்சலில் அவனின் படத்தைப் பெரிதாக்கி கடையின் முன்கதவில ஒட்டி கள்ளன் கவனம் என்று ஆங்கிலத்தில் எழுதியும் விட்டன்.

வந்து பாத்தா மனிசன் உனக்கு என்ன விசரோ?? அவன் கல்லாலையோ அல்லது போத்திலாலையோ எறிஞ்சா கதவு போட நூறு இருநூறு ஆகும். பேசாமல் இரு என்றுவிட்டார். எல்லாமா பத்தாவதுதடவையும் அவன் வர நான் இந்தத் தடவை போலிசுக்கு போன் செய்யாமல் MP இக்கு போன் செய்து விபரத்தைச் சொன்னான். உடன MP தான் போலீசுடன் கதைப்பதாகக் கூற ஒரு நின்மதி பிறந்தது.

அன்று மாலையே திரும்ப வாறான் பியருக்கு பொடியன். அவரின் காலத்துக்கு அன்று நான் கடையில் அவரைக் கண்டதும் உள்ள வராதை. வந்தியோ வீண் பிரச்சனை வரும் என்று நான் சொல்ல, ரண்டு பியர் தாங்கோ அக்கா என்று சுரனையின்றிக் கேட்பவனை என்ன செய்வது என்று எனக்கும் தெரியவில்லை. தம்பி நாங்கள் ஏற்கனவே போலிசுக்கு உம்மைப் பற்றிச் சொல்லியாச்சு. உமக்கு நல்ல காலம் இன்னும் உம்மைப் பொலிஸ் பிடிக்கேல்லை. இதோட விட்டுவிடும் என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே முன்னால கிடந்த யூஸ் ஒன்றை எடுத்துக்கொண்டு போட்டான். நான் உடன போலிசுக்கு போன் செய்து நீ ஒரு அக்சனும் எடுகாட்டில் நான் லோக்கல் பேப்பர்ல போடப் போறன் என்றுவிட்டு வைத்துவிட்டேன்.

நேற்று பொலிஸ் என் கணவரை கூப்பிட்டு அவனுக்கு எதிரா வழக்குப் போட சாட்சியாக விசாரித்து வாக்குமூலம் எடுத்ததன் பின்னர், அவனைக் கைது செய்திட்டம். இன்னும் இரண்டு நாளில் கோட்டுக்குக் கொண்டுவருவம் என்றும் சொன்னார்கள். இன்று காலை மீண்டும் பொலிஸ். என்ன என்று பார்த்தால்  தான் அவன் இல்லை என்று அவன் வீடியோச் சாட்சியையே இல்லை என்கிறான். நாளை நீயும் கோட்டுக்கு வா என்றுவிட்டு போனை வைத்துவிட்டான்.

இதுவே மற்றைய ஐரோப்பிய நாடுகள் என்றால் ஒருதடவை திருடிய உடனேயே தண்டப்பணம் அல்லது சிறை என்று கடுமையாக இருப்பதனால் களவுகளும் இப்பிடியான கொடுமைகளும் இல்லை. ஆனாலும் என்ன செய்து என்ன. இந்த நாட்டில் இருக்க வேண்டி இருக்கிறதே. நீங்களே சொல்லுங்கோ இவனை என்ன செய்யலாம் ??????

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது தான் சொல்லுறது கண்டபடி தமிழாக்களோட தமிழில கதைக்கப்படாது என்று. தமிழ் மொழி வளர்க்கிற ஆர்வக் கோளாறில கதைக்கப் போய் இப்படி வம்பில மாட்டிக்கிறது நடக்கிற காரியம் தான்.

 

உங்க ஊர் பொலிஸ்.. சும்மா சினிமா பொலிஸ் போல இருக்கே. :lol::D


அதுசரி 20 பவுன் கடனுக்கும் கணவரோட கத்தினீங்களா..??! நம்பவே முடியல்ல..! :D

Link to comment
Share on other sites

ரொம்ப நல்ல போலீஸ் ஆக இருக்கே லண்டன் போலீஸ் :lol: எதுக்கும் உங்கள் கடை முகவரியைம் இதில் போட்டு விடுங்கோ சுமோ :o:D  கள உறவுகள் பக்கத்தில் இருந்தால் வந்து அவர்களும் ஏதாவது எடுத்து போவார்கள் :D:lol: 

Link to comment
Share on other sites

பெடியனுக்குப் 18 வயதுக்குக் குறைவாக இருந்தால் ஐரோப்பிய நாடுகளில் நடவடிக்கை எடுக்கக் காவல்துறை பஞ்சிப்படும்.

Link to comment
Share on other sites

இந்த வழக்கு சரிவராிட்டால் ஒரு தனியார் தடயவியல் நிறுவனத்தை நியமிக்கலாம். ஆள் வந்து போவதை அதி உயர் தரத்தில் படம் பிடிப்பதோடு கைரேகைகளையும் எடுக்க ஆவன செய்யலாம்.

அதை வழக்கில் பயன்படுத்தி ஓரளவுக்கு தீர்வு எடுக்கலாம். அதனோடு Restraining order பெறலாம் என நினைக்கிறேன். ஆனால் இதுக்கெல்லாம் கொஞ்சம் செலவாகும். :unsure:

அதுக்குப் பதிலா பெடிக்கு ஒவ்வொரு நாளும் இரண்டு பியரும், இனிப்பும் குடுத்து அனுப்பலாம். :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பேசாமல் கடை கண்ணாடியை நீங்களே வெளியில இருந்து கல்லால எறிஞ்சு உடைச்சிட்டு அடுத்த நாள் உங்கட கடையின்ர காப்புறுதி நிறுவனத்துக்கு போன் பண்ணி விசயத்தை சொல்லுங்கோ. அப்படியே இவர் வந்து களவெடுத்த வீடியோவையும் கோத்துவிடுங்கோ. 

பிறகு மிச்சத்தை பொலிசும் உங்கட கடை காப்புறுதி நிறுவனமும் பாத்துக்கொள்ளும். 

 

உங்கட கதை மட்டுமில்ல தமிழ் ஆக்கள் பரவலா வாழுற இடங்களில இனத்துக்குள்ள இனம் எக்கேடு கெட்டாலும் பொலிசுக்கு கவலை இல்லை  :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
முகத்தைக் கடுப்பாக்கிக் கொண்டு நின்றது.
என்ன இருந்தாலும் கணவனை இப்படி சொல்லுறதை ஏற்றுகொள்ள முடியாது.....ஆண் உரிமை மீறல் :D

போலிசுக்கு போன் செய்யாமல் EP இக்கு போன் செய்து விபரத்தைச் சொன்னான்.
ஈ.பி உங்கன்ட ஊரில இப்பவும் பெரிய பிஸ்தாக்களோ
Link to comment
Share on other sites

பாரிஸில் இப்படி இல்லை ஒரு கால் போத்தில் கொடுத்து அலுவலை முடிச்சு இருப்பினம் பாருங்கோ இங்க வன்முறை குழு மோதலுக்கு எல்லாம் முக்கிய காரணம் லாச்சப் தமிழ்கடை முதலாளிகள் தான் ...

 

அக்கா அந்த பையனுக்கு ஒரு வேலையை தேடி கொடுங்கோ  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பேசாமல் கடை கண்ணாடியை நீங்களே வெளியில இருந்து கல்லால எறிஞ்சு உடைச்சிட்டு அடுத்த நாள் உங்கட கடையின்ர காப்புறுதி நிறுவனத்துக்கு போன் பண்ணி விசயத்தை சொல்லுங்கோ. அப்படியே இவர் வந்து களவெடுத்த வீடியோவையும் கோத்துவிடுங்கோ. 

பிறகு மிச்சத்தை பொலிசும் உங்கட கடை காப்புறுதி நிறுவனமும் பாத்துக்கொள்ளும். 

 

உங்கட கதை மட்டுமில்ல தமிழ் ஆக்கள் பரவலா வாழுற இடங்களில இனத்துக்குள்ள இனம் எக்கேடு கெட்டாலும் பொலிசுக்கு கவலை இல்லை  :lol:

 

அட இது நல்ல ஐடியாவா இருக்கே

 

இது தான் சொல்லுறது கண்டபடி தமிழாக்களோட தமிழில கதைக்கப்படாது என்று. தமிழ் மொழி வளர்க்கிற ஆர்வக் கோளாறில கதைக்கப் போய் இப்படி வம்பில மாட்டிக்கிறது நடக்கிற காரியம் தான்.

 

உங்க ஊர் பொலிஸ்.. சும்மா சினிமா பொலிஸ் போல இருக்கே. :lol::D

அதுசரி 20 பவுன் கடனுக்கும் கணவரோட கத்தினீங்களா..??! நம்பவே முடியல்ல..! :D

 

ஏன் இருபது பவுன்ஸ் காசில்லையோ ???? கடன் குடுப்பது என்னைப் பொறுத்தவரை தவறுகளை மீளும் செய்யத் தூண்டும் ஆதலால் நான் எவருக்கும் கடன் கொடுப்பதுமில்லை வாங்குவதுமில்லை

 

பெடியனுக்குப் 18 வயதுக்குக் குறைவாக இருந்தால் ஐரோப்பிய நாடுகளில் நடவடிக்கை எடுக்கக் காவல்துறை பஞ்சிப்படும்.

 

அவனுக்கு முப்பத்திரண்டு வயது

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுமே...

ஒரு தொழிலுக்கு மூலதனம் வாடிக்கையாளர்கள் தான்

ஆனால் அவர்கள்  முதலாளிகள் அல்ல

இதைப்புரிந்து கொள்ளணும்

அவர்கள் முதலாளியாகி தொழிலை நடாத்த அனுமதித்தால்...

இன்றைய  உங்களது நிலை இது தான்...

 

கடன் என்பது

தங்களது பணத்தை இழப்பது மட்டும் என நினைத்துவிடாதீர்கள்

அத்துடன் ஒரு வாடிக்கையாளரையும் இழக்கின்றீர்கள்.. :(

 

என்ன  செய்யலாம் எனக்கேட்டிருப்பதால்...

ரொம்ப லேற்...

நீங்கள் அவனது வாழ்க்கை குடும்பம் வயசைக்கணக்கிட்டுக்கொண்டிருக்க

அவன் உங்கள் பலவீனங்களை  கணக்கெடுத்துவிட்டான் :lol:

ஒரே ஒருவழிதான்

வெள்ளை வான்... :D

 

Link to comment
Share on other sites

நல்ல அனுபவம் சுமே .

ஆளை உள்ளே வரமால் விட பண்ணுவதுதான் ஒரே வழி .

 

அத்தானின் கடையில் நிற்பதால் எனக்கும் இப்படி நிறைய இருக்கு ,இங்கு பியர் கடைகளில் விற்கமுடியாது அதுவரை நிம்மதி .அத்தான் அனுபவசாலி ஏமாறவும் அசையவும் மாட்டார். நான் ஏமாந்தது நிறைய தடவைகள் ,இனி ஏமாறக்கூடாது என்று நினைக்க 

சதுரங்கவேட்டை சினிமாவில் வந்தமாதிரி புது புது ஐடியாவில் வந்து சுற்றிவிட்டுபோய்விடுவார்கள் .

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன இருந்தாலும் கணவனை இப்படி சொல்லுறதை ஏற்றுகொள்ள முடியாது.....ஆண் உரிமை மீறல் :D

 

ஈ.பி உங்கன்ட ஊரில இப்பவும் பெரிய பிஸ்தாக்களோ

 

 

எழுத்து மாறீட்டுது நான் என்ன செய்ய ???

பாரிஸில் இப்படி இல்லை ஒரு கால் போத்தில் கொடுத்து அலுவலை முடிச்சு இருப்பினம் பாருங்கோ இங்க வன்முறை குழு மோதலுக்கு எல்லாம் முக்கிய காரணம் லாச்சப் தமிழ்கடை முதலாளிகள் தான் ...

 

அக்கா அந்த பையனுக்கு ஒரு வேலையை தேடி கொடுங்கோ  :D

 

ஏற்கனவே சுப்பர் மாக்கற் ஒண்டில வேலை செய்து களவெடுத்தபடியால் நிப்பாட்டிப் போட்டாங்கள். உவனுக்கு நான் எப்பிடி சிபாரிசு செய்யிறது. ????

 

சுமே...

ஒரு தொழிலுக்கு மூலதனம் வாடிக்கையாளர்கள் தான்

ஆனால் அவர்கள்  முதலாளிகள் அல்ல

இதைப்புரிந்து கொள்ளணும்

அவர்கள் முதலாளியாகி தொழிலை நடாத்த அனுமதித்தால்...

இன்றைய  உங்களது நிலை இது தான்...

 

கடன் என்பது

தங்களது பணத்தை இழப்பது மட்டும் என நினைத்துவிடாதீர்கள்

அத்துடன் ஒரு வாடிக்கையாளரையும் இழக்கின்றீர்கள்.. :(

 

என்ன  செய்யலாம் எனக்கேட்டிருப்பதால்...

ரொம்ப லேற்...

நீங்கள் அவனது வாழ்க்கை குடும்பம் வயசைக்கணக்கிட்டுக்கொண்டிருக்க

அவன் உங்கள் பலவீனங்களை  கணக்கெடுத்துவிட்டான் :lol:

ஒரே ஒருவழிதான்

வெள்ளை வான்... :D

 

உங்களிட்டை வெள்ளை வான் இருந்தால் ஒருக்கா அனுப்புங்கோ அண்ணா :lol:

நல்ல அனுபவம் சுமே .

ஆளை உள்ளே வரமால் விட பண்ணுவதுதான் ஒரே வழி .

 

அத்தானின் கடையில் நிற்பதால் எனக்கும் இப்படி நிறைய இருக்கு ,இங்கு பியர் கடைகளில் விற்கமுடியாது அதுவரை நிம்மதி .அத்தான் அனுபவசாலி ஏமாறவும் அசையவும் மாட்டார். நான் ஏமாந்தது நிறைய தடவைகள் ,இனி ஏமாறக்கூடாது என்று நினைக்க 

சதுரங்கவேட்டை சினிமாவில் வந்தமாதிரி புது புது ஐடியாவில் வந்து சுற்றிவிட்டுபோய்விடுவார்கள் .

 

இன்று இரண்டு புதுக் கள்ளர். பத்துப் பவுன்ஸ் வைனை எடுத்துப்போட்டாங்கள். பினால விட்டுக் கலைச்சும் பயனில்லை. எங்கள் கடையில் வேலை  செய்யும் 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காலாவதியான பியரை 'வழமைபோல்' திகதியை அழிச்சுப்போட்டு முன்னுக்கு அடுக்கிவிடுங்கோ,பிறகு கள்ளன் வரமாட்டான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதைவிட திறமான விவேக் கண்டுபிடித்த பியரை அடைத்துவைத்துவிட்டு அவனிடம் கொடுத்தால் ஜென்மத்துக்கு கடைப்பக்கம் எட்டிப்பார்க்கமாட்டான் :lol:  :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அதைவிட திறமான விவேக் கண்டுபிடித்த பியரை அடைத்துவைத்துவிட்டு அவனிடம் கொடுத்தால் ஜென்மத்துக்கு கடைப்பக்கம் எட்டிப்பார்க்கமாட்டான் :lol:  :lol:

 

அதென்ன பியர் ???உடையார்  சொன்னாத்தானே தெரியும்.

 

காலாவதியான பியரை 'வழமைபோல்' திகதியை அழிச்சுப்போட்டு முன்னுக்கு அடுக்கிவிடுங்கோ,பிறகு கள்ளன் வரமாட்டான்.

 

உங்களிடம் இருந்தால் கொஞ்சம் கொண்டு வந்து தாங்கோவன்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுமோ பேசாமல் அவனின்ட காலிலேயே விழுங்கோ:Dஅவனோட ஒரு டீலைப் போடுங்கோ.தினமும் அல்லது வாரத்திற்கு இத்தனை பியரைத் தருகிறேன் என சொல்லுங்கோ...மொத்த வியாபாரத்திலே ஒன்டை,இரண்டை அவனுக்கு கொடுத்தால் என்ன குறைஞ்சா போய் விடும்:lol::lol:

காலாவதியான பியரை 'வழமைபோல்' திகதியை அழிச்சுப்போட்டு முன்னுக்கு அடுக்கிவிடுங்கோ,பிறகு கள்ளன் வரமாட்டான்.

நந்தனும்,உடையாரும் சேர்ந்து சுமோவை உள்ளுக்குள் போட ஜடியா போடினம்:)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பிரச்சனையுமில்லை சகோதரி..! அவனைப் பிடித்து தஜா பண்ணி ஒரு ஆயிரம் பவுன்ட்ஸ் கடனாகக் கொடுத்து விடுங்கோ, மறக்காமல் இதுவரை அவன் எடுத்த சாமான்களுக்கு காசைக் கழித்துக் கொண்டு மிகுதியைக் கொடுங்கள். நீங்கள் நட்டப் பட்டாலும் பறவாயில்லை ,ஆனால் கடை பிஸ்னஸ் நட்டப்படக் கூடாது.

இதன் மூலம் ஒரு திருடனைத் திருத்தி விட்டீர்கள்.

உங்களின் பொருட்களுக்கான பணத்தை வசூலித்து விட்டீர்கள்.

அந்தக் கடங்காரன் இப்ப உங்களுக்கு கடன்காரன்.

அவனுக்கு உங்களிடம் ஒரு பயத்தையும் மரியாதையையும் ஏற்படுத்தி விட்டீர்கள்.

இனி அவன் உங்கள் கடைப் பக்கம் தலை வைத்துப் படுக்க மாட்டான்.

சிலசமயம் அவன் அந்த ஏரியாவை விட்டே போயிருப்பான்...!  :)

Link to comment
Share on other sites

உங்களின் ஒரு கதையை வாசிக்க குடுங்கோ அவன் பிறகு கடைபக்கம் தலை வைத்தும் படுக்கமாட்டான் .

 

(பகிடிக்கு மட்டும் )

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவனும் யாழ்கள வாசகனனோ தெரியாது. ஆனால் நான் அவனில்லை.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களிட்டை வெள்ளை வான் இருந்தால் ஒருக்கா அனுப்புங்கோ அண்ணா :lol:

 

 

நாங்கள் எல்லைகடந்து

பயங்கரவாதம் செய்வதில்லை......

அங்கே  அர்யூன் அண்ணாவின் குரூப் ஏற்கனவே நிலை கொண்டுள்ளது..... :lol:

எனவே நாம் வரமுடியாது

அவருடன் தொடர்பு கொள்ளவும்..... :lol:  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சுமோ பேசாமல் அவனின்ட காலிலேயே விழுங்கோ :Dஅவனோட ஒரு டீலைப் போடுங்கோ.தினமும் அல்லது வாரத்திற்கு இத்தனை பியரைத் தருகிறேன் என சொல்லுங்கோ...மொத்த வியாபாரத்திலே ஒன்டை,இரண்டை அவனுக்கு கொடுத்தால் என்ன குறைஞ்சா போய் விடும் :lol: :lol:

நந்தனும்,உடையாரும் சேர்ந்து சுமோவை உள்ளுக்குள் போட ஜடியா போடினம் :)

 

நீங்கள் சொல்லுற ஐடியாவில நான் கடையை சும்மா ஆருக்கன் குடுத்திட்டுப் போகவேண்டியதுதான் :lol:

 

ஒரு பிரச்சனையுமில்லை சகோதரி..! அவனைப் பிடித்து தஜா பண்ணி ஒரு ஆயிரம் பவுன்ட்ஸ் கடனாகக் கொடுத்து விடுங்கோ, மறக்காமல் இதுவரை அவன் எடுத்த சாமான்களுக்கு காசைக் கழித்துக் கொண்டு மிகுதியைக் கொடுங்கள். நீங்கள் நட்டப் பட்டாலும் பறவாயில்லை ,ஆனால் கடை பிஸ்னஸ் நட்டப்படக் கூடாது.

இதன் மூலம் ஒரு திருடனைத் திருத்தி விட்டீர்கள்.

உங்களின் பொருட்களுக்கான பணத்தை வசூலித்து விட்டீர்கள்.

அந்தக் கடங்காரன் இப்ப உங்களுக்கு கடன்காரன்.

அவனுக்கு உங்களிடம் ஒரு பயத்தையும் மரியாதையையும் ஏற்படுத்தி விட்டீர்கள்.

இனி அவன் உங்கள் கடைப் பக்கம் தலை வைத்துப் படுக்க மாட்டான்.

சிலசமயம் அவன் அந்த ஏரியாவை விட்டே போயிருப்பான்...!  :)

 

எல்லாரும் என்னைப் பிச்சைப் பாத்திரம் ஏந்த வைக்கிறதிலேயே இருங்கோ :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அவனும் யாழ்கள வாசகனனோ தெரியாது. ஆனால் நான் அவனில்லை.

 

யாழ்கள வாசகன் எண்டா கண்டிப்பா என் கதையைக் குடுத்துடவேண்டியதுதான்

 

Link to comment
Share on other sites

யக்கோவ் எனக்கு ஒரு ஜடியா இருக்கு சொல்லட்டுங்களா

 

அவன் வர முந்தியே ..முழு பியரையும் நீங்க அடிச்சிட்டீங்கள் என்றால் அவன் வரும் பொழுது பியர் இருக்காது   நீங்களும் கம்பு

 மாதிரி நிற்ப்பீங்கள் ஒரு தெம்பு இருக்கும் ..

 

.உங்களது அந்த 

காளி உருத்திர தாண்டவத்தில் பார்த்தவன்....வந்த பாதையிலே திரும்பி

ஓடிடுவான் ...இனிமேல் கடை பக்கம் வரவே மாட்டான் ....யக்கோவ் எப்படி ஜடியா...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கதை எழுதிய விதம் வழக்கம் போல நன்றாக உள்ளது..!

 

சம்பவத்தை நேரில் காண்பது போல ஒரு 'பிரமை'!

 

பாவம்... இரண்டு பியர் தானே, விட்டு விடுங்கள்...! :D

 

நாளைக்கு உங்கட கடைக்கு வேற யாராவது பிரச்சனை குடுத்தால், நீங்கள் போலிசுக்குப் போன் போடத் தேவையில்லை!

 

பொடியனிடம் ஒரு ' வார்த்தை' சொன்னால்... உங்கட கடைக்காக இல்லை.. குடிக்கிற பியருக்காகவாவது.. பிரச்சனை குடுக்கிற ஆட்களுக்கு எதிராக 'நடவடிக்கை' எடுப்பான்! :icon_idea:

 

லண்டன் போலிஸ்....  ஹா...ஹா... ! ( அனுபவத்தை நினைச்சுப்பார்த்தேன்... சிரிப்பு தன்ர பாட்டில வருகுது! :D )

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
        • Like
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.