Jump to content

அமெரிக்கப் பல்கலையில் ஆய்வுக்குட்படுத்தப்பட்ட திருமந்திரத்தின் 6 பாடல்கள்


Recommended Posts

அமெரிக்கப் பல்கலையில் ஆய்வுக்குட்படுத்தப்பட்ட திருமந்திரத்தின் 6 பாடல்கள்
 

 

download%2B(2).jpg
 
அமெரிக்காவில் உள்ள தென்  கரோலின பல்கலையில்
 
ஆய்வுக்குள்ளான 6  பாடல்கள்
 
அல்சைமர் நோயாளிக்கு உதவும் என்று முடிவு 
 
காண்க:-
 
 
 
திருமூலர்  இயற்றிய  திருமந்திரத்தில்,  பாயிரம்  துவங்கி  ஒன்பதாந்  தந்திரம் வரை  30047  பாடல்கள்  உள்ளன. நோயற்ற வாழ்விற்கு  வழி சொல்லும்  நூல். ஆணும்  பெண்ணும் எப்படியெப்படிச்  சேரும்போது என்ன குழந்தை பிறக்கும் என்று ர்டுத்துரைத்து அறிவியல் உலகிற்குச்  சவால்  விடும் அற்புதத்  தமிழ்நூல்.ஆடிற்கு ஒரு  பாடல்வீதம்  பாடப்பட்டதாகவும், திருமூலர்  3000 ஆண்டுகள் வாழ்ந்தார் என்பதும் சைவர்களின் நம்பிக்கை. பூலோக கைலாசமாம் திருவாடுதுறையில் ஜீவசமாதி அடந்தவர் திருமூலர்..  
 
 
 மூன்றாம் தந்திரமானது,  அட்டாங்க யோகம்,  இயமம்,  நியமம்,  ஆதனம்,  பிராணாயாமம்,  பிரத்தியாகாரம்,  தாரணை,  தியானம்,  சமாதி,  
 இயமம் ( தீது  அகற்றல் ),  நியமம் ( நன்றாற்றல் )  ஆதனம்  ( இருக்கை ) பிராணயாமம்  ( வளிநிலை )  பிரத்தியாகரம்  ( தொகைநிலை )  
 தாரணை  ( பொறைநிலை ) தியானம்  ( நினதல் )  சமாதி  ( நொசிப்பு ), அட்டமா சித்தி,  அணிமா ( நுண்மை )  இலகிமா ( மென்மை )  மகிமா ( பருமை )  
 பிராத்தி  ( விரும்பியது  எய்தல் )  கரிமா ( விண் தன்மை )  
 பிராகாமியம்  ( நிறைவுண்மை  ),  ஈசத்துவம்  (  ஆட்சியன்  ஆதல் )  
 வசித்துவம்  (  கவர்ச்சி  )  கலை  நிலை,  சரீர  சித்தி  உபாயம்,  காலச்  சக்கரம்,  ஆயுள்  பரீட்சை,    வார  சரம்  வார  சூலம்,  கேசரி  யோகம்,  பரியங்க  யோகம்,  அமுரி  தாரணை,  சந்திர  யோகம்,   என்ற  பகுதிகளைக் கொண்டு  திகழ்கின்றது.
 
 
இவ்வாறாக  மூன்றாம்  தந்திரத்தில்  பாடல்  எண்  549-ல்  துவங்கி  883 வரை    234  பாடல்கள்  உள்ளன.
 
 
அவற்றுள், 5.பிராணயாமம் பகுதியில், வருகின்ற பாடல்களில், வரிசை எண் 568  முதல்  573 வரை உள்ள  பாடல்களே  ஆய்வுக்கு  எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன. அதற்குக்க்காணம் ஓர் பழந்தமிழ்ப்பாடல் என்றும் ஆய்வர்  குறிப்பிட்டுள்ளனர். ஆனால்  அந்தப்பாடல்  எது  என்பதை  வெளிப்படுத்தவில்லை.  
 
இங்கு வர்த்தமானன் பதிப்பகம் வெளியிட்டுள்ள நூல் எடுத்தாளப்பட்டுள்லது.
அதில் கடைசியாகக் குறிப்பிடும் பாடல் எண் 573 சில பதிப்புகளில் இடம்பெறவில்லை என்ற குறிப்பும்  கணப்படுகிறது.   
 
568.  ஏறுதல்  பூரகம்  ஈரெட்டு  வாமத்தால்  
 
        ஆறுதல்  கும்பம்  அறுபத்து  நாலதில்
 
         ஊறுதல்  முப்பத்து  இரண்டது  ரேசகம்
 
       மாறுதல்  ஒன்றின்கண்  வஞ்சகம்  ஆமே.- 3-ஆம் தந்திரத்தில் 5-ஆம் பாடல் 
 
 
569.  வளியினை  வாங்கி  வயத்தில்  அடக்கில்
 
         பளிங்கொத்துக்  காயம்  பழுக்கினும்  பஞ்சாம்
 
         தெளியக்  குருவின்  திருவருள்  பெற்றால்
 
         வளியினும்  வேட்டு  அளியனும்  ஆமே.  - 6- ஆம்  பாடல்
 
 
570.   எங்கே  இருக்கினும்  பூரி  இடத்திலே
 
           அங்கே  அதுசெய்ய  ஆக்கைக்கு  அழிவில்லை
 
           அங்கே  பிடித்துஅது  விட்டள  வும்செல்லச்
 
           சங்கே  குறிக்கத்  தலைவனும்  ஆமே.        -  7-ஆம்  பாடல்
 
 
571.    ஏற்றி  இறக்கி  இருக்காலும்  பூரிக்கும்
 
           காற்றைப்  பிடிக்கும்  கணகறி  வாரில்லை
 
           காற்றைப்  பிடிக்கும்  கணக்கறி  வாளர்க்குக்
 
           கூற்ற்றை  உதைக்கும்  குறியது  வாமே.     -  8-ஆம்  பாடல்
 
 
572.   மேல்கீழ்  நடுப்பக்கம்  மிக்குறப்  பூரித்துப்
 
          பாலாம்  இரேசகத்  தாலுட்   பதிவித்து
 
          மாலாகி  உந்தியுள்  கும்பித்து  வாங்கலே
 
          ஆலாலம்  உண்டான்  அருள்பெற  லாமே.  --- 9-ஆம்  பாடல்
 
 
573.   வாமத்தில்  ஈரெட்டு  மாத்திரை  பூரித்தே
 
          ஏமுற்ற  முப்பத்து  இரண்டும்  இரேசித்துக்
 
          காமுற்ற  பிங்கலைக்  கண்ணாக  இவ்விரண்டு
 
          ஓமத்தால்  எட்டெட்டுக்  கும்பிக்க  உண்மையே.  -- 10-ஆம்  பாடல்
 
 
அமெரிக்கப்  பல்கலைக்கழகம்  ஆய்வுக்கு  எடுத்துக்கொண்ட  6  பாடல்களை
,மேலே பார்த்தோம். 
 
பொருள் விளக்கம் :-
 
568.  பதினாறு  மாத்திரை  காலாளவு  இடப்பக்கமுள்ள  நாசித்  துவாரத்தில்  காற்றை  உள்ளுக்கு  இழுத்தால்  பூரகமாம்  அறுபத்துநான்கு  மாத்திரை  அளவு  இழுத்த  காற்றை  உள்ளே  நிறுத்தல்  கும்பகமாம்.  முப்பத்திரண்டு  மாத்திரை  காலஅளவு  வலப்பக்கம்  நாசித்துவாரத்தில் காற்றை  மெல்ல  விடுதல்  ரேசகமாம்.  முன்னே  சொல்லிய  முறைக்கு  மாறாக  வலப்பக்கம்  நாசித்  துவாரத்தில்  காற்றை  இழுத்து  நிறுத்தி  இடப்பக்கம்  நாசித்  துவாரத்தில்  விடுதல்  வஞ்சனையாம்.
 
569.  சாதகர்  காற்றை  இழுத்துத்  தன்  வயப்படுத்தி  அடக்கியிருந்தால்,  உடம்பு  பளிங்குபோன்று  மாசின்றித்  தூயதாய்  அது  முதுமை  எய்தினும்  இளமைத்  தன்மை  உண்டாகும்.  இதனைத்  தெளிய  குருவின்  அருளையும்  பெற்ருவிட்டால்  அவர்  உடம்பானது  காற்றைவிட  மென்மை  உடையதாகி ,  எங்கும்  செல்லும்  ஆற்றல்  பெற்று  மேன்மையடைவர்.
 
570.  நீ  எங்கே  இருந்தாலும்  இடப்பாக  நாசியாகிய  இடைகலை  வழியாகவே  பூரகம்  செய்வாயாக. அங்கே  அவ்வாறு  பூரிக்க  உடம்புக்கு  அழிவில்லை.  அங்கே  கும்பகம்  செய்து  அப்பிராணன்  செல்லும்  அளவு  மேற்செல்ல  சங்கநாதம்  உண்டாகி  மேன்மை  அடையலாம்.
 
571.  இடைகலை  பிங்கலை  வழியாக  இழுத்துப்  பூரித்து,  காற்றை  உள்லே  கும்பகம்  செய்யும்  முறையைத்  தெரிந்தவர்  இல்லை.  அவ்வாறு  காற்றைக்  கும்பகம்  செய்யும்  முறையைத்  தெரிந்தவர்  காலனைக்  கடக்கும்  இலட்சியத்தை  உடையவராவர்.
 
572.  முறையான  காற்று  தொண்டை  மூலாதாரம்,  விலா  ஆகியவற்றில்  நிரம்பும்படி  செய்து,  மறுபகுதியான  இரேசகத்தால்  ( விடுதலால் )  அவயவயங்களை  ஒன்றோடு  பதியும்படி  செய்து,  விருப்பத்தோடு  வ்பயிற்றில்  கும்பகம்  செய்து  இருக்கவே  திருநீலகண்டப்  பெருமான்  அருளைப்  பெறலாகும்.
 
573.  இடைகலை  வழியாகப்  பதினாறு  மாத்திரை  பூரகம்  செய்து,  விரும்பத்தக்க  பிங்கலையின்கண்  பாதுகாப்புற்ற  முப்பத்து  இரண்டு  மாத்திரை  இரேசகம்  செய்து,  ஒஊரித்தகும்  இரேசித்தலுமாகிய  வேள்வியால்  அறுபத்துநான்கு  மாத்திரை  கும்பகம்  செய்ய  உண்மை  விளையும்.
 
 
திருமூலர்  அருளிச்  செய்த  திருமந்திரம்,  சைவத்  திருத்தொண்டர்களால்  பத்தாம்  திருமுறையாகக்  கருதிப் போற்றப் படுகின்றது. மொத்தத் திருமுறைகள் 12.
 
12  திருமுறைகளையும் இராமானந்தா அடிகளார்  அறக்கட்டளையின்  தலைவராக,  நினைவில்வாழும்,  ‘அருட்செல்வர்’  டாக்டர்.  நா. மகாலிங்கம், பக்தி  வெள்ளம்  பரவுக  என்னும்  நோக்கோடு, முன்வெளியீட்டுத் திட்டத்தில், 1995,  1998 ஆகிய  ஆண்டுகளில்  வெளியிட்டார்.  வெளியிடும்  பொறுப்பினை   வர்த்தமானன்  பதிப்பகம், சென்னை- 600 017  ஏற்றுக்கொண்டது. ஓய்வு பெற்ற தமிழாசிரியர், வித்துவான்  M.  நாராயண  வேலுப்பிள்ளை  பதிப்பாசிரியராகத்  திகழ்ந்தார்.  அருட்செல்வரின்  அருட்திறத்தால், பன்னிரு திருமுறைகள் 24  தொகுதிகளாக  வெளிவந்தன. விலை ரூ.2500/-  மட்டுமே.
 
1998-இல்  வாங்கிய  நுல்களிலிருந்துதான்  மேற்படி  பாடல்களும் விளக்கமும் எடுத்தாளப்பட்டுள்ளன. எல்லோரும் நன்றிகள் பற்பல.
 
வர்த்தமானன்  பதிப்பகம், சென்னை-600 017. 
 
 
download%2B(4).jpg
 
திருமந்திர  நூலினைத்  தேடிப் படிக்கத்தூண்டிய
 
மேற்கண்ட
 
பல்கலைக் கழகத்தாருக்கு
 
மனமார்ந்த நன்றி.
 
.           
       பாடல்களைப் பற்றிய பதிவுக்கு நன்றி. சில திருத்தங்களைக் குறிப்பிட விரும்புகிறேன். 
 
நான் ஆய்வுக்குப் பயன்படுத்திய பாடல்கள் இரண்டு. 568 மற்றும் 573. ஏனென்றால் இவை இரண்டிலும் குறிப்பிடப்படும் முறை ஒன்றே. பிராணாயாமத்தில் மொத்தம் 14 பாடல்கள் உண்டு. நான் 6 பாடல்களை ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளவில்லை. ஒரே ஒரு பயிற்சி மட்டுமே. அந்தப் பயிற்சி 568வது பாடலிலும் 573வது குறிப்பிடப்பட்டுள்ளது. 
 
//அவற்றுள், 5.பிராணயாமம் பகுதியில், வருகின்ற பாடல்களில், வரிசை எண் 568  முதல்  573 வரை உள்ள  பாடல்களே  ஆய்வுக்கு  எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளன. அதற்குக்க்காணம் ஓர் பழந்தமிழ்ப்பாடல் என்றும் ஆய்வர்  குறிப்பிட்டுள்ளனர். ஆனால்  அந்தப்பாடல்  எது  என்பதை  வெளிப்படுத்தவில்லை//
 
- இவ்வாறு கூறியிருப்பதை நான் மேலே குறிப்பிட்ட உண்மையின் அடிப்படையில் தயவு செய்து மாற்றி எழுதவும். நான் மூலக் கட்டுரையிலும், செய்திக் குறிப்பிலும் 568 மற்றும் 573 என்று தெளிவாகக் குறிப்பிட்டுள்ளேன். 568 முதல் 573 என்று இதனைப் புரிந்துகொள்ள வேண்டாம். உங்கள் வசதிக்காகக் கீழே திருத்தியுள்ளேன். இதனைப் பயன்படுத்திக் கொள்ளலாம். 
 
//திருமந்திரத்தில் பிராணாயாமம் என்ற பகுதியில் 14 பாடல்கள் உள்ளன. இவை அனைத்தும் மூச்சுப் பயிற்சியின் பலன்களை வலியுறுத்துகின்றன. இவற்றுள் பாடல் எண்கள் 568 மற்றும் 573 ஆகிய இரண்டும் ஒரு பயிற்சி முறையைக் கூறுகின்றன. அப்பயிற்சி முறைகளைப் பின்பற்றியே இந்த ஆய்வு மேற்கொள்ளப் பட்டிருக்கிறது.//
 
30047 அல்ல 3047. எழுத்துப் பிழைகளைத் தவிர்க்கலாம். உதாரணமாக - திருவாடுதுறை. 
 
தங்கள் அன்புக்கும், இதனைப் பரப்பத் தாங்கள் மேற்கொண்ட உழைப்பிற்கும் எனது மனமார்ந்த நன்றி பல! 
 
அன்புடன்
பா.சு 
 

 http://kanichaaru.blogspot.in/2014/10/6.html#sthash.5V5oNdzY.dpuf

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 1)    ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் முன்னணியில் வரும் நான்கு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும். தவறான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் குறைக்கப்படும்.   CSK, RR, KKR, SRH 2)    முதல் நான்கு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக.      #1 - ? (சரியான பதில்: +4 புள்ளிகள், தவறான பதில்: -4  புள்ளிகள் ) RR     #2 - ?  (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3 புள்ளிகள் ) KKR     #3 - ?  (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2  புள்ளிகள்) CSK     #4 - ?  (சரியான பதில்: +1 புள்ளி, தவறான பதில்: -1 புள்ளி ) SRH 3)    ஆரம்பச் சுற்றுப் போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? (சரியான பதில்: +2 புள்ளிகள், தவறான பதில்: -2  புள்ளிகள்) RCB 4)   மே 21, வெள்ளி 19:30 அஹமதாபாத்  Qualifier 1 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Qualifier 1: 1st placed team v 2nd placed team KKR 5)    மே 22, புதன் 19:30 அஹமதாபாத் Eliminator போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Eliminator: 3rd placed team v 4th placed team SRH 6)   மே 24 வெள்ளி 19:30  சென்னை Qualifier 2 போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -3  புள்ளிகள்) Qualifier 2: Loser of Qualifier 1 v Winner of Eliminator SRH 7)    மே 26, ஞாயிறு இறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (சரியான பதில்: +5 புள்ளிகள், தவறான பதில்: -5  புள்ளிகள்) Final: Winner of Qualifier 1 v Winner of Qualifier 2 KKR 8 ) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி)   SRH 9)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) GT 10)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்)   RIYAN PARAG   11)    இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி, கேள்வி 10 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RR 12)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) JASPRIT BUMRAH 13)    இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 12 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) MI 14)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் ) Virat Kohli  15)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 14 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) RCB 16)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Jasprit Bumrah 17)    இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 16 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) MI 18)    இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the Series) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Sunil Narine   19)    இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the season) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி,  கேள்வி 18 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) KKR 20)    இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1  புள்ளி) SRH
    • ரம்பின் விசாரணை நடக்கும் நீதிமன்றம் அருகில் ஒருவர் திக்குளித்து ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். உடல் பற்ற எரிந்த போது அருகில் நின்ற பொலிசாரும் மக்களும் சேர்ந்து தீயை அணைத்துள்ளனர். https://www.cnn.com/politics/live-news/trump-hush-money-trial-04-19-24#h_6e59fcb889c2bb3a38b4b05fffa573ae
    • ஈரானின் தாக்குதல் ஓரிரவில் முடிந்துவிட்டது. ஆனால் அதன் அதிர்வு இப்போதும்  வெள்ளை மாளிகையை குலுக்கிக்கொண்டிருக்கிறதாம்,........பக்கவிழைவாக இருக்குமொ?  😁
    • "Jesus refulsit omnium" ["Jesus, light of all the nations"] என்ற பழைய பாடலின் என் தமிழ் மொழிபெயர்ப்பு  கி பி 340 இல் இருந்து தான் நத்தார் மார்கழி திங்கள் 25 ஆம் நாள் கொண்டாடப் படுகிறது.  உலகின் ஆரம்பகால லத்தீன் பாடல்களில் ஒன்றான இந்தப் பாடலின் [Saint Hilary of Poitiers, around the 4th century (368] ஆங்கில மொழிபெயர்ப்பை [English Translation by Kevin Hawthorne] நான் தமிழில் தருகிறேன்.    "உலக நாடுகளின் அன்பு இரட்சகர் உலர்ந்த தொட்டிலில் பிரகாசித்த கதையை குடும்பம் ஓங்கிட தெம்பை கொடுக்க கேளுங்கள் அதை நம்பிக்கை கொண்டு!"   "வானத்தில் ஒளிர்ந்து மினுங்கும் தாரகை கானத்தில் நிற்பவருக்கும் வழி காட்டிட மூன்று ஞானிகள் அறிகுறி அறிந்து அன்பு தெய்வத்தை தேடி வந்தனர்!"   "காடுமலைகள் தாண்டி மழலையை பார்த்திட மேடுபள்ளம் நடந்து பரிசுடன் வந்தனர் பாலகன் மேலே விண்மீன் நிற்க இலக்கு உணர்ந்து விழுந்து வணங்கினர்!"   "ஆத்மபலம் கொண்ட பரிசு கொண்டுவந்து கந்தல்களில் மறைந்திருந்த பாலகனை காட்டி உண்மை ஆண்டவனுக்கு சாட்சி பகிர்ந்து மண்ணுக்கும் விண்ணுக்கும், அடையாளம் காட்டினர்!"     [தமிழ் மொழி பெயர்ப்பு: கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்]   "Jesus, devoted redeemer of all nations, has shone forth, Let the whole family of the faithful celebrate the stories The shining star, gleaming in the heavens, makes him known at his birth and, going before, has led the Magi to his cradle Falling down, they adore the tiny baby hidden in rags, as they bear witness to the true God by bringing a mystical gift"     [Translation by Kevin Hawthorne, PhD]     
    • 71% சதவீத வாக்குபதிவாம் த. நாட்டில். அதிலும் மூன்று சென்னை தொகுதியிலும் 10% அதிக வாக்குபதிவாம். Advantage BJP? 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.