Jump to content

'உன்­னிடம் மயங்­கு­கிறேன்', 'கல்­யாண சாப்­பாடு போடவா', 'அடுத்­தாத்து அம்­பு­ஜத்தை பார்த்­தேளா' முத­லான பாடல்­க­ளுக்கு இசை­ய­மைத்த வி.குமார்


Recommended Posts

அ.கலைச்செல்வன், சிட்னி, அவுஸ்திரேலியா
 
"மத­னோற்­சவம் ரதி­யோ­டுதான்" - 1978 இல் வெளி­யான சது­ரங்கம் என்ற ரஜி­னியின் படப்­பா­ட­லிது. இந்தப் பாடலைக் கேட்டு எத்­த­னையோ வரு­டங்­க­ளா­கி­ன்றன. ஆனால் பாலுவின் குரல் அப்­ப­டி­யேதான் இருக்­கின்­றது.
 
பாடலின் முத­லா­வது சர­ணத்தில்
மீனாடும் கண்­ணி­லி­ருந்து
 நானா­டவோ..
தேனாடும் செவ்­விதழ் தன்னில்
நீரா­டவோ..
என்று பாலு இரண்­டு­ த­டவை பாடு­கிறார். இரண்டு தட­வையும் வித்­தி­யா­ச­மாகப் பாடு­கிறார். அதற்குள் இரண்­டா­வது தடவை நீரா­டவோ என்று பாடும்­போது அதை நீ...ரா..டவோ என்று சில்­மிஷம் வேறு வைக்­கிறார். அது மட்­டு­மல்ல..
 
பாலு உச்­சஸ்­தா­யியில் பாடி முடிக்­கவும் வாணி அம்மா ,
.. புரி­யாத பெண்­மை­யிது .
பூப்­போன்ற மென்­மை­யிது..
பொன்­னந்தி மாலை .
என்­னென்ன லீலை..
என்று கீழ் ஸ்தாயில் பாடும் அழகே தனிதான்.
 
 
 
 
உண்­மையில் இதன் காங்­கோ­வுடன் கூடிய வித்­தி­யா­ச­மான தாளக் கட்டும் பின்­ன­ணியில் கிட்டார் செய்யும் அலங்­கா­ரமும் 70 களின் கடை­சியில் வெளி­வந்த இசை­ஞா­னியின் பாடல்­க­ளி­லுள்ள ஆர்­கஸ்ட்­ரே­ஷ­னையே நினை­வு­ப­டுத்­து­கின்­றது. ஆனால் ...
இந்தப் பாட்­டுக்கு இசை இசை­ஞா­னி­யல்ல, வி.குமார்.
 
29_vkumar2.jpg
 
மெல்­லிசை மன்­னர்கள் பிரிந்து அவர்­களில் எம்.எஸ்.வி. உச்­சத்தில் கோலோச்­சிய காலத்தில் அறி­மு­க­மான மற்றைய இசை­ய­மைப்­பா­ளர்­களில் வி.குமார் குறிப்­பி­டத்­தக்­கவர். இவரின் மெல­டிப்­பா­டல்கள் எம்.எஸ்.வியின் பாணி­யி­லி­ருந்து வித்­தி­யா­ச­மாக இருந்­தன. உன்­னிடம் மயங்­கு­கின்றேன், என்ற ஜேசு­தாசின் மகு­டத்தில் வைர­மாக ஜொலிக்கும் பாடலை உரு­வாக்­கி­யவர் இவர்தான்.
 
சில வரு­டங்­க­ளுக்கு முன்னர் பழைய சஞ்­சி­கை­யொன்றில் ஒரு பேட்டி படித்த நினைவு. . அது வி.குமாரின் மனைவி திரு­மதி.சொர்­ணா­வி­னு­டை­யது. இவரும் ஒரு பாட­கி­யாக அறி­மு­க­மாகி வி,குமா­ருடன் ஏற்­பட்ட காதல், திரு­ம­ணத்தில் முடிந்­த­வுடன் பாடு­வதை நிறுத்­தி­யவர் .
 
அந்தக் கட்­டு­ரையில் சொர்­ணாவும் அவ­ரது மகனும் தமிழ்த்­தி­ரை­யு­லகை மிகவும் வெறுப்­பது தெரிந்­தது. அமெ­ரிக்­காவில் செட்­டி­லாக முயற்­சிக்கும் மக­னுடன் எப்­ப­டி­யா­வது போய்த் தங்­கி­விட வேண்டும் என அந்தத் தாய் ஆதங்­கப்­பட்­டி­ருந்தார். அந்த வெறுப்­புக்­கான காரணம் வி.குமார் என்ற இசை­ய­மைப்­பா­ளரின் இறுதிக் காலத்தில் அவ­ருக்கு சினிமா உலகம் இழைத்த அநீ­தி­யெனக் குறிப்­பிட்­டுள்­ளார்கள். 
 
ஒரு காலத்தில் மிகப் பிர­ப­ல­மாக இருந்து பல நடி­கர்­களை உயர்த்­தி­விட்ட இந்தக் கலைஞன் தனக்குக் கிடைத்த ஏமாற்­றத்­தாலோ என்­னமோ 80 களில் ஒருநாள் திடீ­ரென வந்த மார­டைப்பால் தனது குடும்­பத்தை தவிக்க விட்டு இறந்­து­போனார்.
 
வி.குமார் எம்.எஸ்.வி. கோலோச்சிக் கொண்­டி­ருந்த கால­கட்­டத்தில் பால­சந்­தரால் "நீர்க்­கு­மிழி" படத்தில் அறி­மு­க­மாகி அவரின் படங்­க­ளுக்கு தொடர்ந்து இசை­ய­மைத்துக் கொண்­டி­ருந்­தவர், நீர்க்­கு­மி­ழியில் சீர்­காழி நாகேஸுக்­காகப் பாடும் ஆடி அடங்கும் வாழ்க்­கை­யடா என்ற பாடல் இன்றும் ஒலித்­த­ப­டி­யேதான் இருக்­கின்­றது.
 
 
பி.பி.ஸ்ரீவாஸின் "தாம­ரைக்­கன்­னங்கள்.. தேன் மழைக் கிண்­ணங்கள்..." என்ற அதி அற்­பு­த­மான பாடலும் வி.குமாரின் இசையில் வெளி­வந்­த­துதான்.
---
 
70 களின் ஆரம்­பத்தில் வெளி­வந்த அவ­ரது மெல­டிப்­பா­டல்கள் ராஜாவின் பாடல்­க­ளாக இருக்­கலாம் என்ற பிர­மையை ஏற்­ப­டுத்­து­வ­தென்­னமோ உண்­மைதான்.
 
பாலு பாடி­யுள்ள "பொன்னை நான் பார்த்­த­தில்லை" என்ற பாடல் உரு­வாக்­கப்­பட்­டுள்ள விதமும் அதில் ட்ரம்பட் முக்­கிய வாத்­தி­ய­மாக பயன்­ப­டுத்­தப்­பட்­டுள்ள பாங்கும் அந்­தப்­பா­டலை ராஜாவின் பாடல் என்றே என்னை பல வரு­டங்­க­ளாக எண்ண வைத்­தி­ருந்­தது. இவ­ரது உத­வி­யா­ள­ராக இருந்­தவர் ஏ.ஆர்.ரஹ்­மானின் தந்தை சேகர்.
 
'மோகம் என்னும் ராகம் பாடும் முத்துப் பல்­லக்கு... எனும் பாடல்
ஜேசு­தா­சுக்கு வி.குமார் கொடுத்த இன்­னொரு மாஸ்டர் பீஸ்.
 
கடந்த வருடம் தொலைக்­காட்சி பாடல் போட்டி நிகழ்ச்­சி­யொன்றில் எம்.எஸ்.வி யையும் கே.பால­சந்­த­ரையும் சிறப்பு விருந்­தி­னர்­க­ளாக அழைத்து அவர்கள் இரு­வரும் சேர்ந்து படைத்த பாடல்கள் என் சில­வற்றை போட்­டி­யா­ளர்­களைக் கொண்டு பாட வைத்­தார்கள். பால­சந்­தரும் அருமை ..அருமை என்று எம்.எஸ்.வியுடன் சேர்ந்து போட்­டி­யா­ளர்­களை வாழ்த்தி விட்டுச் சென்­று­விட்டார்.
 
 ஆனால் உண்­மையில் பாலச்­சந்தர் என்ற இயக்­குனர் பிர­ப­ல­மா­கி­யதன் பிற்­பா­டுதான் எம்.எஸ்.வியுடன் சேர்ந்து படங்­களை உரு­வாக்­கினார். ஆனால் இதே பால­சந்தர் தன்னை நிலை நிறுத்தப் போரா­டிய ஆரம்­ப­கா­லத்தில் அவரின் ஆஸ்­தான இசை­ய­மைப்­பா­ள­ராக வி.குமார்  இருந்­துள்ளார்.
 
பால­சந்­தரின் நாட­கங்­க­ளுக்கு இசை­ய­மைத்­தவர் குமார். அதே பால­சந்தர் பின்னர் பட இயக்­கு­ன­ராக வாய்ப்புப் பெற்­ற­போது வி.குமாரையே தனது நீர்க்­கு­மிழி படத்­துக்கு இசை­ய­மைக்­கும்­படி வேண்டிக் கொண்டார். தொடர்ந்து பல படங்கள் இரு­வரும் சேர்ந்து பணி­யாற்­றினர்.
 
அந்­தப்­ப­டங்­கள்தான் பால­சந்தர் என்ற இயக்­கு­னரின் தனித்­து­வத்தை தமிழ்த்­திரையுல­கிற்கும் ரசி­கர்­க­ளுக்கும் வெளிப்­ப­டுத்தி அவரை பிர­ப­லப்­ப­டுத்­திய படங்கள். அவற்றால் கிடைத்த பிர­ப­லத்தின் பின்­னர்தான் எம்.எஸ்.வி. போன்ற நட்­சத்­திர இசை­ய­மைப்­பா­ள­ருடன் படம் பண்­ணத்­தொ­டங்­கினார். 
 
ஆனால், இவற்­றைப்­பற்றி எந்த நிரு­பர்­களோ டி.வி. தொகுப்­பா­ளர்­களோ எங்­குமே பால­சந்­தரைக் கேட்­ப­தில்லை பால­சந்­தரும் ஏனோ வி.குமா­ரைப்­பற்றி எங்கும் கூறி நான் கேட்­ட­தில்லை.
 
பல ஹிட் பாடல்­களைக் கொடுத்தும், பால­சந்­தரின் ஆத­ரவு இருந்தும், பல வெற்­றிப்­ப­டங்­க­ளிற்கு இசை­ய­மைத்­தி­ருந்தும் வி.குமாரால் 70 களின் நடுப்­ப­கு­திக்குப் பின்னர் ஒரு எல்­லைக்கு மேல் பய­ணிக்க முடி­ய­வில்லை. இதற்கு இளை­ய­ராஜா என்ற இளம் இசை­ய­மைப்­பா­ளரின் வரு­கையும் அவர் உரு­வாக்­கிய வித வித­மான பாடல்கள் மற்றும் பின்­ன­ணி­யி­சை­யுமே காரணம் என பலர் நினைக்­கலாம் அது ஓர­ள­வுக்கு ஏற்­றுக்­கொள்­ளப்­பட வேண்­டிய கார­ண­மாக இருந்­த­போ­திலும் என் மனதில் வேறு எண்­ணங்­களும் தோன்­று­கின்­றன.
 
ஒரு இசை­ய­மைப்­பா­ள­ரா­னவர் தான் இசை­ய­மைக்கும் படத்தின் ஒரு பாடலை அல்­லது இரண்டு பாடல்­களை மட்டும் ஹிட்­டாக்­கினால் போதாது. தொடர்ந்து வெற்­றி­களைக் கொடுக்க வேண்டும். அது­த­விர அவர் அமைக்கும் பின்­ன­ணி­யி­சை­யா­னது அதன் காட்­சி­க­ளுடன் பேச­வேண்டும். அந்த விட­யத்தில் வி.குமாரின் சாத­னைகள் என்று கூறக்­கூ­டி­யவை எவை என எனக்குப் புரி­ய­வில்லை.
 
வி.குமார் மிகச்­சி­றந்த சில மெல­டிப்­பா­டல்­களை தமிழ்த் திரை­யி­சைக்கு விட்டுச் சென்­றுள்­ளார்தான் ஆனால் அவர் தன்னை மென்­மேலும் வித்­தி­யா­ச­மா­ன­வ­ராக காட்ட முய­ல­வில்­லையோ என்றே நான் எண்­ணு­கின்றேன்.
 
அவர் வித்­தி­யா­ச­மாக செய்­துள்­ளது என எண்­ணும்­போது துள்­ளல் நடனப் பாடல்­க­ளுக்குப் பாடிக்­கொண்­டி­ருந்த எல்.ஆர்.ஈஸ்­வ­ரியை "காதோ­டுதான் நான் பாடுவேன்" என்ற சிறந்த மெல­டிப்­பா­டலைப் பாட வைத்து ஈஸ்­வ­ரியால் இப்­ப­டிக்­கூடப் பாட­மு­டியும் என நிரூ­பித்து வென்ற ஒரு விட­யமே நினை­வுக்கு வரு­கின்­றது.
 
எந்த ஒரு இசை­ய­மைப்­பா­ளரும் புதிது புதி­தாகத் தேட வேண்டும், நதி­போல ஓடிக்­கொண்டே இருக்க வேண்டும் குளம் போல தேங்­கக்­கூ­டாது அப்­படி ஓடிக்­கொண்­டி­ருப்­ப­தைத்தான் அவர்கள் புதிது புதி­தாகத் தேடு­வ­தாகக் கொள்­ளப்­படும். அந்த வகையில் தனக்குக் கிடைத்த படங்களில் ஓரிரு பாடல்களைக் ஹிட்டாக்கினாலே போதுமென நினைத்திராமல். புதியவைகளைப் பரீட்சித்திருந்தால் இந்தத் திறமைசாலி இன்னும் தொலைதூரம் நிதானமாகப் பயணித்திருக்கலாம் என எண்ணத் தோன்றுகின்றது.
 
வி.குமாரின் இசையமைப்பில் ஹிட்டான  சில பாடல்கள்:
 
* சிகப்புக் கல்லு மூக்குத்தி
* உன்னிடம் மயங்குகிறேன்
* புன்னகை மன்னன் பூவிழி கண்ணன்
* தேவன் கீதமும் கண்ணன் கீதையும்
* உன்னை வாழ்த்திப் பாடுகிறேன்
* ஒருநாள் யாரோ
* மோகம் என்னும் ராகம் பாடும்
* மதனனோற்சவம் ரதியோடுதான்
* ஆடி அடங்கும்
* உன்னை தொட்ட காற்று வந்து
* நேற்று நீ சின்ன பப்பா
* கல்யாண சாப்பாடு போடவா
* வாழ்வில் சௌபாக்கியம்
* கண்ணொரு பக்கம்
* இளமை கோவில் ஒன்று
--
 
 
://www.metronews.lk/others.php?othernews=29&display=0#sthash.Nccr2peY.dpuf
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றிகளும் வாழ்த்துக்களும் கலைச்செல்வன் .....இணைப்புக்கு நன்றிகள் ஆதவன்....

Link to comment
Share on other sites

வீ. குமார், ஏ.எம். ராஜா இருவரும்கூட எனக்குப் பிடித்த இசையமைப்பாளர்கள். ஆனால் துரதிர்ஷ்டவசமாக குறுகிய காலமே பயணித்தார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்குப் பிடித்த இன்னுமோர் இசையமைப்பாளர் 'சிற்பி'.

அற்புதமான பாடல்களைத் தருவார்

Link to comment
Share on other sites

பொன்னை நான் பார்த்ததில்லை
 
 
 
மிகவும் இனிமையான பாடல்.

ஒரு செவ்வியில் தனக்கு பிடித்த பாடலாக இப்பாடலை குறிப்பிட்டு இருந்தார்.
 
Link to comment
Share on other sites

1380404_10204710127254277_68922946411625

V .குமார் என்ற இந்த தமிழ் இசைஅமைப்பாளர், " மென்மையான மேலோடி கிங் "என்று அழைக்கப்பட்டவர், அவர் காலத்தில் இருந்த M S விஸ்வநாதன் ,K V மகாதேவனுக்கு சவாலாக அருமையான பல பாடல்களை MILD MELODY ஸ்டைலில் உருவாகினார்! "உன்னிடம் மயங்குகின்றேன் உளத்தால், நெருன்குகின்றேன் " என்றபாடலுக்கு அவர் இசைஅமைத்தபோது அந்தப் பாடலுக்கு இசைஞானி இளையராஜா கிடார் வாசித்ததாக சொலுறார்கள், அந்தப் பாடல் " தேன் சிந்துதே வானம் " என்ற ஒரு படத்தில் வந்ததாம்.,"உன்னிடம் மயங்குகின்றேன்" என்ற இந்தப் பாடல் ஸ்டைலில், வெஸ்டர்ன் "சோல் ." ப்ளூ கிராஸ் " கர்நாடிக் கலந்தது போல வேறு யாரும் பாடல் இசை அமைத்ததா எனக்கு தெரியவில்லை!

சத்தமில்லாமல் பல புதுமை செய்த V .குமார்ஐ தமிழ் சினிமாவுக்கு கொண்டு வந்தவர் டைரக்டர் K பாலச்சந்தர்,அதால் அவரும் எப்பவுமே அவரோட படங்களுக்கு இசை அமைதாரம், அதை பிடிக்காத அந்தகாலகட்ட " ஜாம்பவான்கள் " அவரை திடமிட்டு ஒதுக்கியதாக சொல்லுறார்கள் .மற்ற எல்லா துறைகளை விடவும் இசைதுறையில் உள்ளவர்களுக்கு போட்டி,பொறாமை, அல்டர் ஈகோ அதிகம் என்கிறார்கள்,,,ஜோசித்துப் பார்த்தல் இந்த உண்மை அப்பவும்தான் இப்பவும் தான் இந்தப்பாடலை நீங்கள் ரசித்தால் அதன் எல்லாப் புகழும் V ,குமார் என்ற இந்த இசை மேதைக்கே சேரும்...

 

https://www.youtube.com/watch?v=aa8Z72qh2P8

 

முகநூல்
நாவுக் அரசன் 
ஒஸ்லோ
Link to comment
Share on other sites

  • 1 year later...
  • கருத்துக்கள உறவுகள்

மிகவும் நன்றி ஆதவன் , இந்தப், பக்கத்தை எடுத்துத் தந்ததற்கு...! அவர் ஒரு அற்புதமான ஜாம்பவான், என்ன வெளிச்சம் படவில்லை....!

Link to comment
Share on other sites

பாடல்: ஓராயிரம் கற்பனை
படம்: ஏழைக்கும் காலம் வரும் (1975)

சரணத்தில் (நான் பாடும் ராகங்கள்..) மெட்டு அமைத்த விதம் எப்பிடி இருக்கு..?! 50px-Facebook_logo_thumbs_up_like_transptw_blush:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
        • Like
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.