Jump to content

வசந்த மண்டபத்துத் தெய்வங்கள்- 1


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

37200083.jpg

 

அந்தக் கடற்கரையின் அலைகள் அவனது காலடியைத் தொட்டுச் சென்றன!

 

மாலை நேரத்தில் அவன் அந்தக் கடற்கரைக் கோவிலுக்கு வருவதும், அந்தக் கடற்கரையின் ஓரத்தில் காலடிகள் பதிய நடப்பதும், சற்று நேரத்தில் அந்தச் சிற்றலைகள் அவனது காலடிகளை நனைத்து அழிப்பதும், அவனுக்கு நினைவு தெரிந்த நாள் முதல் நடந்து வரும் சம்பவங்கள்!

 

தகிக்கும் தாம்பாளத் தட்டாக, கதிரவனும் தனது அன்றைய பணியைச் செவ்வனே செய்த ஆத்ம திருப்தியுடன், மெல்ல மெல்ல மேல் திசையில் மறையும் காட்சியும் அவனுக்கு மிகவும் பிடிக்கும்!

 

அவனது பெயர், அவனுக்கே மறந்து போய் விட்டு நீண்ட நாட்களாகி விட்டது! இப்போதெல்லாம் அவனுக்கு ஊர்ச்சனம் வைத்த பெயரே, அவனது பெயராக நிலைத்து விட்டது. அந்தப் பெயர் தான் ‘விசரன்' ! கொஞ்சம் வளர்ந்த சனங்கள், கொஞ்சம் மரியாதையாக அவனைக்காணும் போது ‘ தம்பி’ என்று அழைப்பார்கள்! மற்றவர்களும் அவரவர் வயதுக்கேற்ப… விசரன் அண்ணா என்றோ, அல்லது விசரன் மாமா என்றோ அழைப்பது கூட வழக்கமாகி விட்டது!

அவனே பல சந்தர்ப்பங்களில்… தான் உண்மையில் விசரன் தானா என்று தனக்குள்ளேயே கேள்வியை எழுப்பியிருக்கிறான்! ஆனால் இன்னும் அவனால், தான் விசரன் என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை!

 

அந்த ‘விசரன்’ என்ற பெயர் இந்தக் கோவிலடியில் தான் முதன் முதலில் தனக்கு வைக்கப்பட்டிருக்க வேண்டும் என்று தனக்குள் தானே நினைத்துக்கொண்டான்!

 

இரண்டு சம்பவங்கள் அவனுக்கு இன்னும் நன்றாக நினைவில் நிற்கின்றன!

 

ஒரு நாள் அந்தப் பத்திரகாளியம்மனுக்குப் ‘ படையல்' நடந்தது! அப்போது அவனுக்கு ஒரு பன்னிரண்டு வயதிருக்கலாம் என்று அனுமானித்துக் கொண்டான்!

 

வரிசையாகப் பொங்கல் பானைகள் பொங்கிக் கொண்டிருந்தன! ஒரு ஐந்தாறு பேர் வட்டமாக நின்று.. பறை மேளம் அடித்துக் கொண்டிருந்தார்கள்! சில பெண்கள் 'உரு' வந்து ஆடிக்கொண்டிருந்தார்கள்! அவர்களது வாய்களிலிருந்து, ஊரவர்கள் சிலரது பெயர்கள் விழுந்து கொண்டிருந்தன! அந்தப் பெயருள்ளவர்கள், தங்கள் இருதயங்கள் ஓவராகத் துடித்து, வாய்க்குள்ளால் வெளியே வந்து விடாதவாறு வாய்களை இறுக்கமாக மூடிக்கொண்டு, பத்திரகாளியில் முழு நம்பிக்கையும் வைத்துவிட்டு நின்று கொண்டிருந்தார்கள்! எந்தப் புத்துக்குள்ளால் இருந்த எந்தப் பாம்பு வருமோ என்ற பயம் பலரது முகத்தில் தெரிந்தது! சில 'உரு' வந்தவர்கள் கதைக்கின்ற ‘ மொழி' அவனுக்கு விளங்கவேயில்லை! ஒரு வேளை… அது தான் கடவுளின் மொழியோ என்றும் நினைத்துக்கொண்டான்!

 

அப்போது அந்த பறைமேளம் அடிப்பவர்களுக்குக் கிட்டப்போய்ப் பார்த்துக்கொண்டிருந்தான்! அந்தச் சத்தம் அவனுக்குப் பிடித்திருக்கவே, அங்கு மேளமடித்துக் கொண்டிருந்த ஒரு சிறுவனிடம் ஒரு சின்ன மேளத்தை வாங்கித் தட்டத் தொடங்கினான்! அந்தச் சிறுவன் அவனிடம் அந்த மேளத்தைத் தரத் தயங்கியது அவனுக்கு ஏன் என்று அப்போது புரியவில்லை! அப்போது அவனது அண்ணா அங்கு ஓடி வந்து மேளத்தைப் பறித்து எறிந்தார்! பின்னர் ஆவேசமாக அந்த மேள காரச் சிறுவனைத் தாக்கத் தொடங்கினார்! அவனது ஆச்சியும் அங்கு ஓடிவந்து …. ஐயோ. ஐயோ என்று தலையையும் விரித்துவிட்ட படி மார்பில் இரு கரங்களாலும் அடித்த படி ஏதோ பிரளயம் ஒன்று அங்கு நிகழ்ந்து விட்டதைப் போல...உரத்த குரலில் அழத்தொடங்கினார்! அவனுக்கு… ஆச்சியா அல்லது மூலஸ்தானத்தில் அமர்ந்திருப்பதா… பத்திரகாளி என்று குழப்பம் ஏற்பட்டது!

 

அவன் ஏதோ சொல்ல முயன்றபோது அவனை ஆச்சி அழைத்த பெயர் … விசரன்!

 

இரண்டாவது சம்பவம்… சிறிமாவோ ஆட்சிக்காலத்தில் நிகழ்ந்தது!

 

ஊரெல்லாம் மரவள்ளித் தடி நட்டுக்கொண்டிருந்த காலம்! படித்து விட்டு வீட்டில் இருந்தவர்களுக்கெல்லாம் ‘ முத்தரையன் கட்டில' இலவசமாய்க் காணி குடுக்கிறாங்கள் எண்டு.. முத்தரையன் கட்டை நோக்கி ஓடிய காலம்!

 

சீனிக்குப் பதிலாய்.. பேரீச்சம் பழம் வந்து.. ஊர் மக்கள் சீனியை உள்ளங்கையில் வைத்து நக்கத் துவங்கியதால்.. கை ரேகைகள் மறைந்து விடுமோ என்று ‘சாத்திரம்' சொல்லுபவர்கள் கவலைப்படத் தொடங்கிய காலம்!

 

அந்தக் காலத்தில் தான்.. நம்ம ஊரிலும்.. பெற்றோல் இருக்கலாம் என்று ‘ரஸ்ஸியாக் காரர்'  ஊரெல்லாம் ‘ அமத்து வெடி' வைச்சுத் திரிஞ்ச காலம்!

 

தமிழனுக்கு வந்து போன எத்தனையோ ‘நம்பிக்கைகளில்' பெட்ரோலும் ஒரு நம்பிக்கையாகிப் போனது! ஊர்ப்பெருசுகள் சும்மா கிடந்த கடற்கரைக் காணிகளுக்கெல்லாம் 'கதியால்' போட்டுக் கிடுகு வேலியடைக்கத் தொடங்கிய காலமும் அது தான்! ஒரு வேளை, தங்கள் வளவுகளுக்குள்ளையும் பெற்றோல் இருந்தால்…. அவர்களுக்கு அந்த நினைவே புல்லரிக்க வைத்திருக்க வேண்டும்!

 

சிலரது நடத்தைகளில் ஏற்பட்ட மாற்றத்தில், அந்தப் புல்லரிப்பே நிரந்தரமாகியும் போய் விட்டது இன்னொரு கதை!

 

அப்படியான ‘ பெற்றோல்' பரிசோதனை ஒன்றின் போது ‘காளி கோவிலடி' யிலும் சில பரீட்சார்த்தக் கிணறுகள் தோண்டினார்கள்! ‘டெரிக்' ஒன்று கடற்கரையில் துளையிட்டுக் கொண்டிருக்க.. ஒரு ‘ரஸ்சியன்' சாதாரண காற்சட்டையுடனும் வெறும் மேலுடனும், கொதிக்கும் வெயிலில் நின்று ‘திரவ சீமெந்து' போன்ற ஒன்றை அந்தத் துளைக்குள் செலுத்திக் கொண்டிருந்தான்! அந்தத் துளையைச் சுற்றித் திரவச் சீமெந்தும்.. ஊர்ச்சனமும் நிறைந்திருந்தனர்!

 

சிறிது நேரத்தில் அந்தத் திரவத்தினுள், துளையிடும் இயந்திரத்திலிருந்த ஒரு ‘நட்டு' ஒன்று கழன்று விழுந்து விட்டது! இயந்திரம் நின்று விட.. அந்த ரஸ்ஸியனும்.

அந்த சீமெந்துத் திரவத்தினுள் இறங்கி, அந்த நட்டைத் தேடிக்கொண்டிருந்தான்! அவன் தேடிய விதத்தைப் பார்க்க, அவன் அந்த நட்டைப் பெற ‘ரஷ்யாவுக்குத்' தான் போக வேண்டியிருக்கும் போல இருந்தது! அப்போது எங்கட ஊர் ‘எஞ்சினியர் ஐயா' கோவில் மதில் நிழலில் நின்று கொண்டிருந்தார்! அவருக்கு வெயில் சுட்டு விடாது நம்ம ‘விசரன்' குடை பிடித்துக் கொண்டிருந்தான்!   

 

அந்த ‘ரஸ்ஸியாக்' காரனும்.. எமது ஊர் எஞ்சினியர் ஐயாவைப் பார்த்துத் திட்டிய படியிருந்தான்! அவன் மீண்டும், மீண்டும் அவரைப்பார்த்துத் திட்டியது, அவருக்குப் புரியாவிட்டாலும்… நம்ம விசரனுக்குப் புரிந்தது!  புரிந்ததும் அவன் உடனே, நம்ம இஞ்சினியர் ஐயாவுக்குப் பிடித்திருந்த குடையைக் கொண்டு போய்.. அந்த ரஸ்ஸியாக காரனுக்குப் பிடிக்கத் தொடங்கினான்!

 

அப்போது.. அந்த இஞ்சினியர் ஐயா.. அவனை நோக்கி.. உரத்துக் கத்திய குரல்...’ விசரன்"!    

 
(ஆறுதலாகத் தொடரும்.....)
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

-----

அப்போது அந்த திரவத்தினுள், துளையிடும் இயந்திரத்திலிருந்த ஒரு ‘நட்டு' ஒன்று கழன்று விழுந்து விட்டது! இயந்திரம் நின்று விட.. அந்த ரஸ்ஸியனும்.

 

அந்த சீமெந்தும் திரவத்தினுள் இறங்கி, அந்த நட்டைத் தேடிக்கொண்டிருந்தான்! அவன் தேடிய விதத்தைப் பார்க்க, அவன் அந்த நட்டைப் பெற ‘ரஷ்யாவுக்குத்' தான் போக வேண்டியிருக்கும் போல இருந்தது!

-----

 

ஸ்ரான்லி வீதியில், கிடைக்காத நட்டா?

ஒருக்கா அங்கு விசாரித்து பார்த்து விட்டு, ரஸ்சியன்காரன்.... சீமெந்து கலவையில் காலை வைத்திருக்கலாம்.

அதற்குள்... சீமேந்து இறுகி விடும், என்று சொல்கிறீர்களா...   வாஸ்தவம் தான்..... :D

 

நீண்ட நாட்களின் பின், புங்கையின் கதையை படிக்க ஆவலாக உள்ளோம். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
தமிழனுக்கு வந்து போன எத்தனையோ ‘நம்பிக்கைகளில்' பெட்ரோலும் ஒரு நம்பிக்கையாகிப் போனது
புங்கை மீண்டும் ஒரு கலக்கல் கதை வெகு சீக்கிரம் தொடருங்கோ வாசிக்க ஆவலாய் உள்ளோம்....
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் புங்கை

Link to comment
Share on other sites

தனி மனிதர்களுக்கு இருக்க வேண்டிய மன அமைதி போல ஒரு சமுதாயத்துக்கும் மன அமைதி அவசியம்.
 
எங்கட சமுதாயத்துக்கு அது இல்லை. 
 
அது இருந்தால் குறைபாடுள்ளவர்களை அணைத்திருப்பார்கள்.
 
மிகுதியை வாசிக்க ஆவல்.  
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அட நம்ம ரோமியோ கன காலத்திற்குப்பிறகுகளத்தில குதித்துள்ளீர்கள்....... உங்கள் ஆரம்பமே எங்களை விசராக்க முன்னர் அடுத்த பதிவைப்போடுங்கள்.... ஆவலுடன் வாசிக்கவும் அதன் பின்னர் உங்களை வறுக்கவும் காத்திருக்கிறேன் :lol:  ஏன்னா நானும் விசரிதான்... :D:rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடரை எழுதத் தொடங்கிவிட்டு ஆறுதலாகத் தொடரும் என்று போட என்ன துணிவு. :lol: கெதியா மிச்சத்தையும் எழுதுங்கோ புங்கை.


 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
(ஆறுதலாகத் தொடரும்.....)

 

 

றிம்மிலை நிக்கிறதை வைச்சுக்கொண்டு என்னெண்டு கெதியாய் வாறது? :D .....எதுக்கும் உடம்பு குலுங்காமல் ஆடாமல் ஆறுதலாய் வாங்கோ :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்ரான்லி வீதியில், கிடைக்காத நட்டா?

ஒருக்கா அங்கு விசாரித்து பார்த்து விட்டு, ரஸ்சியன்காரன்.... சீமெந்து கலவையில் காலை வைத்திருக்கலாம்.

அதற்குள்... சீமேந்து இறுகி விடும், என்று சொல்கிறீர்களா...   வாஸ்தவம் தான்..... :D

 

நீண்ட நாட்களின் பின், புங்கையின் கதையை படிக்க ஆவலாக உள்ளோம். :)

வணக்கம், தமிழ் சிறி!

 

ஸ்டான்லி வீதியில் இல்லாத இல்லாத நட்டா?  :D

 

ஆனால் எனக்கும், உங்களுக்கும் மட்டுமே தெரிந்த ரகசியமாக இதை வைத்திருங்கள்!

 

அவன் தேடியெடுத்த பிறகு, நட்டைப் பார்த்தேன்... அது ஒரு சராசரிப் பனங்கொட்டையின் அளவு! :o 

 

வருகைக்கும், பச்சைக்கும் நன்றி! 

புங்கை மீண்டும் ஒரு கலக்கல் கதை வெகு சீக்கிரம் தொடருங்கோ வாசிக்க ஆவலாய் உள்ளோம்....

 

சரி...சரி...அவசரப்படாதையுங்கோ... எழுதிறன்! :lol:

 

வரவுக்கு நன்றி புத்தன்..!

விரைவா மிகுதியை போடுங்கப்பா ..

பொறுங்கப்பா.... நீங்கள் பருத்தித்துறை...மானிப்பாய்... எக்ஸ்பிரஸ் பஸ் ரூட்டில பழகின சனம்! :o

 

நாங்கள்... மணித்தியாலத்துக்கு ஒண்டு... அதுவும் ஆக்கள் சேர்ந்தால் தான் எண்டு பழகின சனம்! :lol:

 

வேகம் கொஞ்சம்  அப்படி இப்பிடித்தான் இருக்கும்.. ஆனால் ' பஸ்' இடையில நிண்டு கிண்டு குழப்படி பண்ணாது!

 

கட்டாயம் முடிவிடம் வரை போய்சேரும்..!

 

வருகைக்கு நன்றிகள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

37200083.jpg

 

அந்தக் கடற்கரையின் அலைகள் அவனது காலடியைத் தொட்டுச் சென்றன!

 

1- அந்தச் சிறுவன் அவனிடம் அந்த மேளத்தைத் தரத் தயங்கியது அவனுக்கு ஏன் என்று அப்போது புரியவில்லை! 

அப்போது அவனது அண்ணா அங்கு ஓடி வந்து மேளத்தைப் பறித்து எறிந்தார்! பின்னர் ஆவேசமாக அந்த மேள காரச் சிறுவனைத் தாக்கத் தொடங்கினார்! அவனது ஆச்சியும் அங்கு ஓடிவந்து …. ஐயோ. ஐயோ என்று தலையையும் விரித்துவிட்ட படி மார்பில் இரு கரங்களாலும் அடித்த படி ஏதோ பிரளயம் ஒன்று அங்கு நிகழ்ந்து விட்டதைப் போல...உரத்த குரலில் அழத்தொடங்கினார்! அவனுக்கு… ஆச்சியா அல்லது மூலஸ்தானத்தில் அமர்ந்திருப்பதா… பத்திரகாளி என்று குழப்பம் ஏற்பட்டது!

 

அவன் ஏதோ சொல்ல முயன்றபோது அவனை ஆச்சி அழைத்த பெயர் … விசரன்!

 

இரண்டாவது சம்பவம்… சிறிமாவோ ஆட்சிக்காலத்தில் நிகழ்ந்தது!

 

2-ஊரெல்லாம் மரவள்ளித் தடி நட்டுக்கொண்டிருந்த காலம்! படித்து விட்டு வீட்டில் இருந்தவர்களுக்கெல்லாம் ‘ முத்தரையன் கட்டில' இலவசமாய்க் காணி குடுக்கிறாங்கள் எண்டு.. முத்தரையன் கட்டை நோக்கி ஓடிய காலம்!

 

3- சீனிக்குப் பதிலாய்.. பேரீச்சம் பழம் வந்து.. ஊர் மக்கள் சீனியை உள்ளங்கையில் வைத்து நக்கத் துவங்கியதால்.. கை ரேகைகள் மறைந்து விடுமோ என்று ‘சாத்திரம்' சொல்லுபவர்கள் கவலைப்படத் தொடங்கிய காலம்!

 

அந்தக் காலத்தில் தான்..

4-நம்ம ஊரிலும்.. பெற்றோல் இருக்கலாம் என்று ‘ரஸ்ஸியாக் காரர்'  ஊரெல்லாம் ‘ அமத்து வெடி' வைச்சுத் திரிஞ்ச காலம்!

 

தமிழனுக்கு வந்து போன எத்தனையோ ‘நம்பிக்கைகளில்' பெட்ரோலும் ஒரு நம்பிக்கையாகிப் போனது! ஊர்ப்பெருசுகள் சும்மா கிடந்த கடற்கரைக் காணிகளுக்கெல்லாம் 'கதியால்' போட்டுக் கிடுகு வேலியடைக்கத் தொடங்கிய காலமும் அது தான்! ஒரு வேளை, தங்கள் வளவுகளுக்குள்ளையும் பெற்றோல் இருந்தால்…. அவர்களுக்கு அந்த நினைவே புல்லரிக்க வைத்திருக்க வேண்டும்!

 

சிலரது நடத்தைகளில் ஏற்பட்ட மாற்றத்தில், அந்தப் புல்லரிப்பே நிரந்தரமாகியும் போய் விட்டது இன்னொரு கதை!

 

அப்படியான

5-‘ பெற்றோல்' பரிசோதனை ஒன்றின் போது ‘காளி கோவிலடி' யிலும் சில பரீட்சார்த்தக் கிணறுகள் தோண்டினார்கள்! ‘டெரிக்' ஒன்று கடற்கரையில் துளையிட்டுக் கொண்டிருக்க.. ஒரு ‘ரஸ்சியன்' சாதாரண காற்சட்டையுடனும் வெறும் மேலுடனும், கொதிக்கும் வெயிலில் நின்று ‘திரவ சீமெந்து' போன்ற ஒன்றை அந்தத் துளைக்குள் செலுத்திக் கொண்டிருந்தான்! அந்தத் துளையைச் சுற்றித் திரவச் சீமெந்தும்.. ஊர்ச்சனமும் நிறைந்திருந்தனர்!

 

சிறிது நேரத்தில் அந்தத் திரவத்தினுள், துளையிடும் இயந்திரத்திலிருந்த ஒரு ‘நட்டு' ஒன்று கழன்று விழுந்து விட்டது! இயந்திரம் நின்று விட.. அந்த ரஸ்ஸியனும்.

அந்த சீமெந்துத் திரவத்தினுள் இறங்கி, அந்த நட்டைத் தேடிக்கொண்டிருந்தான்! அவன் தேடிய விதத்தைப் பார்க்க, அவன் அந்த நட்டைப் பெற ‘ரஷ்யாவுக்குத்' தான் போக வேண்டியிருக்கும் போல இருந்தது! அப்போது எங்கட ஊர் ‘எஞ்சினியர் ஐயா' கோவில் மதில் நிழலில் நின்று கொண்டிருந்தார்! அவருக்கு வெயில் சுட்டு விடாது நம்ம ‘விசரன்' குடை பிடித்துக் கொண்டிருந்தான்!   

 

அந்த ‘ரஸ்ஸியாக்' காரனும்.. எமது ஊர் எஞ்சினியர் ஐயாவைப் பார்த்துத் திட்டிய படியிருந்தான்! அவன் மீண்டும், மீண்டும் அவரைப்பார்த்துத் திட்டியது, அவருக்குப் புரியாவிட்டாலும்… நம்ம விசரனுக்குப் புரிந்தது!  புரிந்ததும் அவன் உடனே, நம்ம இஞ்சினியர் ஐயாவுக்குப் பிடித்திருந்த குடையைக் கொண்டு போய்.. அந்த ரஸ்ஸியாக காரனுக்குப் பிடிக்கத் தொடங்கினான்!

 

அப்போது.. அந்த இஞ்சினியர் ஐயா.. அவனை நோக்கி.. உரத்துக் கத்திய குரல்...’ விசரன்"!    

 
(ஆறுதலாகத் தொடரும்.....)

 

 

கதையுடன் நினைவுகளை  மீட்டுவதில் வல்லவரய்யா தாங்கள்

எனது  ஊர் பழைய  நினைவுகளை மீட்டு வந்துள்ளீர்கள்

அது ஒரு கனாக்காலம்

தொடருங்கோ...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புங்கையூரன் உங்கள் கதை வழக்கம் போல அசத்தலாக இருக்கிறது. சிறீமாடகாலத்தில அழிஞ்ச கை ரேகையை ஞாபகப்படுத்தி இருந்தீர்கள். நீங்கள் கதை சொல்லும் பாங்கே தனிதான். தொடருங்கள் காத்திருக்கிறோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் புங்கை

வருகைக்கு நன்றிகள், ரதி!

 

தனி மனிதர்களுக்கு இருக்க வேண்டிய மன அமைதி போல ஒரு சமுதாயத்துக்கும் மன அமைதி அவசியம்.
 
எங்கட சமுதாயத்துக்கு அது இல்லை. 
 
அது இருந்தால் குறைபாடுள்ளவர்களை அணைத்திருப்பார்கள்.
 
மிகுதியை வாசிக்க ஆவல்.  

 

உங்கள் கருத்துடன் உடன்படுகிறேன், ஈசன்!

 

என்ன காரணமாய் இருக்கும் என்று பல தடவைகள் சிந்தித்துள்ளேன்!

 

ஆனாலும் இதுவரை விடை கிடைக்கவில்லை!

 

வருகைக்கும், கருத்துக்கும் நன்றி..ஈசன்!

அட நம்ம ரோமியோ கன காலத்திற்குப்பிறகுகளத்தில குதித்துள்ளீர்கள்....... உங்கள் ஆரம்பமே எங்களை விசராக்க முன்னர் அடுத்த பதிவைப்போடுங்கள்.... ஆவலுடன் வாசிக்கவும் அதன் பின்னர் உங்களை வறுக்கவும் காத்திருக்கிறேன் :lol:  ஏன்னா நானும் விசரிதான்... :D:rolleyes:

உங்களுக்குத் தனித்துவமான ஒரு திறமை உண்டு என்பதைப் பல இடங்களில் அவதானித்துள்ளேன், சகாறா!

 

நீங்கள் விசரி என்பதை ஏற்றுக்கொள்ளுகின்றேன்! :D

 

அப்படியானால் 'விசரன்' யாரென்பது தான் எனக்குப் புரியவில்லை? :rolleyes:

 

வருகைக்கு நன்றிகள்!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.