Jump to content

வசந்த மண்டபத்துத் தெய்வங்கள்- 1


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

37200083.jpg

 

அந்தக் கடற்கரையின் அலைகள் அவனது காலடியைத் தொட்டுச் சென்றன!

 

மாலை நேரத்தில் அவன் அந்தக் கடற்கரைக் கோவிலுக்கு வருவதும், அந்தக் கடற்கரையின் ஓரத்தில் காலடிகள் பதிய நடப்பதும், சற்று நேரத்தில் அந்தச் சிற்றலைகள் அவனது காலடிகளை நனைத்து அழிப்பதும், அவனுக்கு நினைவு தெரிந்த நாள் முதல் நடந்து வரும் சம்பவங்கள்!

 

தகிக்கும் தாம்பாளத் தட்டாக, கதிரவனும் தனது அன்றைய பணியைச் செவ்வனே செய்த ஆத்ம திருப்தியுடன், மெல்ல மெல்ல மேல் திசையில் மறையும் காட்சியும் அவனுக்கு மிகவும் பிடிக்கும்!

 

அவனது பெயர், அவனுக்கே மறந்து போய் விட்டு நீண்ட நாட்களாகி விட்டது! இப்போதெல்லாம் அவனுக்கு ஊர்ச்சனம் வைத்த பெயரே, அவனது பெயராக நிலைத்து விட்டது. அந்தப் பெயர் தான் ‘விசரன்' ! கொஞ்சம் வளர்ந்த சனங்கள், கொஞ்சம் மரியாதையாக அவனைக்காணும் போது ‘ தம்பி’ என்று அழைப்பார்கள்! மற்றவர்களும் அவரவர் வயதுக்கேற்ப… விசரன் அண்ணா என்றோ, அல்லது விசரன் மாமா என்றோ அழைப்பது கூட வழக்கமாகி விட்டது!

அவனே பல சந்தர்ப்பங்களில்… தான் உண்மையில் விசரன் தானா என்று தனக்குள்ளேயே கேள்வியை எழுப்பியிருக்கிறான்! ஆனால் இன்னும் அவனால், தான் விசரன் என்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை!

 

அந்த ‘விசரன்’ என்ற பெயர் இந்தக் கோவிலடியில் தான் முதன் முதலில் தனக்கு வைக்கப்பட்டிருக்க வேண்டும் என்று தனக்குள் தானே நினைத்துக்கொண்டான்!

 

இரண்டு சம்பவங்கள் அவனுக்கு இன்னும் நன்றாக நினைவில் நிற்கின்றன!

 

ஒரு நாள் அந்தப் பத்திரகாளியம்மனுக்குப் ‘ படையல்' நடந்தது! அப்போது அவனுக்கு ஒரு பன்னிரண்டு வயதிருக்கலாம் என்று அனுமானித்துக் கொண்டான்!

 

வரிசையாகப் பொங்கல் பானைகள் பொங்கிக் கொண்டிருந்தன! ஒரு ஐந்தாறு பேர் வட்டமாக நின்று.. பறை மேளம் அடித்துக் கொண்டிருந்தார்கள்! சில பெண்கள் 'உரு' வந்து ஆடிக்கொண்டிருந்தார்கள்! அவர்களது வாய்களிலிருந்து, ஊரவர்கள் சிலரது பெயர்கள் விழுந்து கொண்டிருந்தன! அந்தப் பெயருள்ளவர்கள், தங்கள் இருதயங்கள் ஓவராகத் துடித்து, வாய்க்குள்ளால் வெளியே வந்து விடாதவாறு வாய்களை இறுக்கமாக மூடிக்கொண்டு, பத்திரகாளியில் முழு நம்பிக்கையும் வைத்துவிட்டு நின்று கொண்டிருந்தார்கள்! எந்தப் புத்துக்குள்ளால் இருந்த எந்தப் பாம்பு வருமோ என்ற பயம் பலரது முகத்தில் தெரிந்தது! சில 'உரு' வந்தவர்கள் கதைக்கின்ற ‘ மொழி' அவனுக்கு விளங்கவேயில்லை! ஒரு வேளை… அது தான் கடவுளின் மொழியோ என்றும் நினைத்துக்கொண்டான்!

 

அப்போது அந்த பறைமேளம் அடிப்பவர்களுக்குக் கிட்டப்போய்ப் பார்த்துக்கொண்டிருந்தான்! அந்தச் சத்தம் அவனுக்குப் பிடித்திருக்கவே, அங்கு மேளமடித்துக் கொண்டிருந்த ஒரு சிறுவனிடம் ஒரு சின்ன மேளத்தை வாங்கித் தட்டத் தொடங்கினான்! அந்தச் சிறுவன் அவனிடம் அந்த மேளத்தைத் தரத் தயங்கியது அவனுக்கு ஏன் என்று அப்போது புரியவில்லை! அப்போது அவனது அண்ணா அங்கு ஓடி வந்து மேளத்தைப் பறித்து எறிந்தார்! பின்னர் ஆவேசமாக அந்த மேள காரச் சிறுவனைத் தாக்கத் தொடங்கினார்! அவனது ஆச்சியும் அங்கு ஓடிவந்து …. ஐயோ. ஐயோ என்று தலையையும் விரித்துவிட்ட படி மார்பில் இரு கரங்களாலும் அடித்த படி ஏதோ பிரளயம் ஒன்று அங்கு நிகழ்ந்து விட்டதைப் போல...உரத்த குரலில் அழத்தொடங்கினார்! அவனுக்கு… ஆச்சியா அல்லது மூலஸ்தானத்தில் அமர்ந்திருப்பதா… பத்திரகாளி என்று குழப்பம் ஏற்பட்டது!

 

அவன் ஏதோ சொல்ல முயன்றபோது அவனை ஆச்சி அழைத்த பெயர் … விசரன்!

 

இரண்டாவது சம்பவம்… சிறிமாவோ ஆட்சிக்காலத்தில் நிகழ்ந்தது!

 

ஊரெல்லாம் மரவள்ளித் தடி நட்டுக்கொண்டிருந்த காலம்! படித்து விட்டு வீட்டில் இருந்தவர்களுக்கெல்லாம் ‘ முத்தரையன் கட்டில' இலவசமாய்க் காணி குடுக்கிறாங்கள் எண்டு.. முத்தரையன் கட்டை நோக்கி ஓடிய காலம்!

 

சீனிக்குப் பதிலாய்.. பேரீச்சம் பழம் வந்து.. ஊர் மக்கள் சீனியை உள்ளங்கையில் வைத்து நக்கத் துவங்கியதால்.. கை ரேகைகள் மறைந்து விடுமோ என்று ‘சாத்திரம்' சொல்லுபவர்கள் கவலைப்படத் தொடங்கிய காலம்!

 

அந்தக் காலத்தில் தான்.. நம்ம ஊரிலும்.. பெற்றோல் இருக்கலாம் என்று ‘ரஸ்ஸியாக் காரர்'  ஊரெல்லாம் ‘ அமத்து வெடி' வைச்சுத் திரிஞ்ச காலம்!

 

தமிழனுக்கு வந்து போன எத்தனையோ ‘நம்பிக்கைகளில்' பெட்ரோலும் ஒரு நம்பிக்கையாகிப் போனது! ஊர்ப்பெருசுகள் சும்மா கிடந்த கடற்கரைக் காணிகளுக்கெல்லாம் 'கதியால்' போட்டுக் கிடுகு வேலியடைக்கத் தொடங்கிய காலமும் அது தான்! ஒரு வேளை, தங்கள் வளவுகளுக்குள்ளையும் பெற்றோல் இருந்தால்…. அவர்களுக்கு அந்த நினைவே புல்லரிக்க வைத்திருக்க வேண்டும்!

 

சிலரது நடத்தைகளில் ஏற்பட்ட மாற்றத்தில், அந்தப் புல்லரிப்பே நிரந்தரமாகியும் போய் விட்டது இன்னொரு கதை!

 

அப்படியான ‘ பெற்றோல்' பரிசோதனை ஒன்றின் போது ‘காளி கோவிலடி' யிலும் சில பரீட்சார்த்தக் கிணறுகள் தோண்டினார்கள்! ‘டெரிக்' ஒன்று கடற்கரையில் துளையிட்டுக் கொண்டிருக்க.. ஒரு ‘ரஸ்சியன்' சாதாரண காற்சட்டையுடனும் வெறும் மேலுடனும், கொதிக்கும் வெயிலில் நின்று ‘திரவ சீமெந்து' போன்ற ஒன்றை அந்தத் துளைக்குள் செலுத்திக் கொண்டிருந்தான்! அந்தத் துளையைச் சுற்றித் திரவச் சீமெந்தும்.. ஊர்ச்சனமும் நிறைந்திருந்தனர்!

 

சிறிது நேரத்தில் அந்தத் திரவத்தினுள், துளையிடும் இயந்திரத்திலிருந்த ஒரு ‘நட்டு' ஒன்று கழன்று விழுந்து விட்டது! இயந்திரம் நின்று விட.. அந்த ரஸ்ஸியனும்.

அந்த சீமெந்துத் திரவத்தினுள் இறங்கி, அந்த நட்டைத் தேடிக்கொண்டிருந்தான்! அவன் தேடிய விதத்தைப் பார்க்க, அவன் அந்த நட்டைப் பெற ‘ரஷ்யாவுக்குத்' தான் போக வேண்டியிருக்கும் போல இருந்தது! அப்போது எங்கட ஊர் ‘எஞ்சினியர் ஐயா' கோவில் மதில் நிழலில் நின்று கொண்டிருந்தார்! அவருக்கு வெயில் சுட்டு விடாது நம்ம ‘விசரன்' குடை பிடித்துக் கொண்டிருந்தான்!   

 

அந்த ‘ரஸ்ஸியாக்' காரனும்.. எமது ஊர் எஞ்சினியர் ஐயாவைப் பார்த்துத் திட்டிய படியிருந்தான்! அவன் மீண்டும், மீண்டும் அவரைப்பார்த்துத் திட்டியது, அவருக்குப் புரியாவிட்டாலும்… நம்ம விசரனுக்குப் புரிந்தது!  புரிந்ததும் அவன் உடனே, நம்ம இஞ்சினியர் ஐயாவுக்குப் பிடித்திருந்த குடையைக் கொண்டு போய்.. அந்த ரஸ்ஸியாக காரனுக்குப் பிடிக்கத் தொடங்கினான்!

 

அப்போது.. அந்த இஞ்சினியர் ஐயா.. அவனை நோக்கி.. உரத்துக் கத்திய குரல்...’ விசரன்"!    

 
(ஆறுதலாகத் தொடரும்.....)
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

-----

அப்போது அந்த திரவத்தினுள், துளையிடும் இயந்திரத்திலிருந்த ஒரு ‘நட்டு' ஒன்று கழன்று விழுந்து விட்டது! இயந்திரம் நின்று விட.. அந்த ரஸ்ஸியனும்.

 

அந்த சீமெந்தும் திரவத்தினுள் இறங்கி, அந்த நட்டைத் தேடிக்கொண்டிருந்தான்! அவன் தேடிய விதத்தைப் பார்க்க, அவன் அந்த நட்டைப் பெற ‘ரஷ்யாவுக்குத்' தான் போக வேண்டியிருக்கும் போல இருந்தது!

-----

 

ஸ்ரான்லி வீதியில், கிடைக்காத நட்டா?

ஒருக்கா அங்கு விசாரித்து பார்த்து விட்டு, ரஸ்சியன்காரன்.... சீமெந்து கலவையில் காலை வைத்திருக்கலாம்.

அதற்குள்... சீமேந்து இறுகி விடும், என்று சொல்கிறீர்களா...   வாஸ்தவம் தான்..... :D

 

நீண்ட நாட்களின் பின், புங்கையின் கதையை படிக்க ஆவலாக உள்ளோம். :)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
தமிழனுக்கு வந்து போன எத்தனையோ ‘நம்பிக்கைகளில்' பெட்ரோலும் ஒரு நம்பிக்கையாகிப் போனது
புங்கை மீண்டும் ஒரு கலக்கல் கதை வெகு சீக்கிரம் தொடருங்கோ வாசிக்க ஆவலாய் உள்ளோம்....
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் புங்கை

Link to comment
Share on other sites

தனி மனிதர்களுக்கு இருக்க வேண்டிய மன அமைதி போல ஒரு சமுதாயத்துக்கும் மன அமைதி அவசியம்.
 
எங்கட சமுதாயத்துக்கு அது இல்லை. 
 
அது இருந்தால் குறைபாடுள்ளவர்களை அணைத்திருப்பார்கள்.
 
மிகுதியை வாசிக்க ஆவல்.  
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அட நம்ம ரோமியோ கன காலத்திற்குப்பிறகுகளத்தில குதித்துள்ளீர்கள்....... உங்கள் ஆரம்பமே எங்களை விசராக்க முன்னர் அடுத்த பதிவைப்போடுங்கள்.... ஆவலுடன் வாசிக்கவும் அதன் பின்னர் உங்களை வறுக்கவும் காத்திருக்கிறேன் :lol:  ஏன்னா நானும் விசரிதான்... :D:rolleyes:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடரை எழுதத் தொடங்கிவிட்டு ஆறுதலாகத் தொடரும் என்று போட என்ன துணிவு. :lol: கெதியா மிச்சத்தையும் எழுதுங்கோ புங்கை.


 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
(ஆறுதலாகத் தொடரும்.....)

 

 

றிம்மிலை நிக்கிறதை வைச்சுக்கொண்டு என்னெண்டு கெதியாய் வாறது? :D .....எதுக்கும் உடம்பு குலுங்காமல் ஆடாமல் ஆறுதலாய் வாங்கோ :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஸ்ரான்லி வீதியில், கிடைக்காத நட்டா?

ஒருக்கா அங்கு விசாரித்து பார்த்து விட்டு, ரஸ்சியன்காரன்.... சீமெந்து கலவையில் காலை வைத்திருக்கலாம்.

அதற்குள்... சீமேந்து இறுகி விடும், என்று சொல்கிறீர்களா...   வாஸ்தவம் தான்..... :D

 

நீண்ட நாட்களின் பின், புங்கையின் கதையை படிக்க ஆவலாக உள்ளோம். :)

வணக்கம், தமிழ் சிறி!

 

ஸ்டான்லி வீதியில் இல்லாத இல்லாத நட்டா?  :D

 

ஆனால் எனக்கும், உங்களுக்கும் மட்டுமே தெரிந்த ரகசியமாக இதை வைத்திருங்கள்!

 

அவன் தேடியெடுத்த பிறகு, நட்டைப் பார்த்தேன்... அது ஒரு சராசரிப் பனங்கொட்டையின் அளவு! :o 

 

வருகைக்கும், பச்சைக்கும் நன்றி! 

புங்கை மீண்டும் ஒரு கலக்கல் கதை வெகு சீக்கிரம் தொடருங்கோ வாசிக்க ஆவலாய் உள்ளோம்....

 

சரி...சரி...அவசரப்படாதையுங்கோ... எழுதிறன்! :lol:

 

வரவுக்கு நன்றி புத்தன்..!

விரைவா மிகுதியை போடுங்கப்பா ..

பொறுங்கப்பா.... நீங்கள் பருத்தித்துறை...மானிப்பாய்... எக்ஸ்பிரஸ் பஸ் ரூட்டில பழகின சனம்! :o

 

நாங்கள்... மணித்தியாலத்துக்கு ஒண்டு... அதுவும் ஆக்கள் சேர்ந்தால் தான் எண்டு பழகின சனம்! :lol:

 

வேகம் கொஞ்சம்  அப்படி இப்பிடித்தான் இருக்கும்.. ஆனால் ' பஸ்' இடையில நிண்டு கிண்டு குழப்படி பண்ணாது!

 

கட்டாயம் முடிவிடம் வரை போய்சேரும்..!

 

வருகைக்கு நன்றிகள்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

37200083.jpg

 

அந்தக் கடற்கரையின் அலைகள் அவனது காலடியைத் தொட்டுச் சென்றன!

 

1- அந்தச் சிறுவன் அவனிடம் அந்த மேளத்தைத் தரத் தயங்கியது அவனுக்கு ஏன் என்று அப்போது புரியவில்லை! 

அப்போது அவனது அண்ணா அங்கு ஓடி வந்து மேளத்தைப் பறித்து எறிந்தார்! பின்னர் ஆவேசமாக அந்த மேள காரச் சிறுவனைத் தாக்கத் தொடங்கினார்! அவனது ஆச்சியும் அங்கு ஓடிவந்து …. ஐயோ. ஐயோ என்று தலையையும் விரித்துவிட்ட படி மார்பில் இரு கரங்களாலும் அடித்த படி ஏதோ பிரளயம் ஒன்று அங்கு நிகழ்ந்து விட்டதைப் போல...உரத்த குரலில் அழத்தொடங்கினார்! அவனுக்கு… ஆச்சியா அல்லது மூலஸ்தானத்தில் அமர்ந்திருப்பதா… பத்திரகாளி என்று குழப்பம் ஏற்பட்டது!

 

அவன் ஏதோ சொல்ல முயன்றபோது அவனை ஆச்சி அழைத்த பெயர் … விசரன்!

 

இரண்டாவது சம்பவம்… சிறிமாவோ ஆட்சிக்காலத்தில் நிகழ்ந்தது!

 

2-ஊரெல்லாம் மரவள்ளித் தடி நட்டுக்கொண்டிருந்த காலம்! படித்து விட்டு வீட்டில் இருந்தவர்களுக்கெல்லாம் ‘ முத்தரையன் கட்டில' இலவசமாய்க் காணி குடுக்கிறாங்கள் எண்டு.. முத்தரையன் கட்டை நோக்கி ஓடிய காலம்!

 

3- சீனிக்குப் பதிலாய்.. பேரீச்சம் பழம் வந்து.. ஊர் மக்கள் சீனியை உள்ளங்கையில் வைத்து நக்கத் துவங்கியதால்.. கை ரேகைகள் மறைந்து விடுமோ என்று ‘சாத்திரம்' சொல்லுபவர்கள் கவலைப்படத் தொடங்கிய காலம்!

 

அந்தக் காலத்தில் தான்..

4-நம்ம ஊரிலும்.. பெற்றோல் இருக்கலாம் என்று ‘ரஸ்ஸியாக் காரர்'  ஊரெல்லாம் ‘ அமத்து வெடி' வைச்சுத் திரிஞ்ச காலம்!

 

தமிழனுக்கு வந்து போன எத்தனையோ ‘நம்பிக்கைகளில்' பெட்ரோலும் ஒரு நம்பிக்கையாகிப் போனது! ஊர்ப்பெருசுகள் சும்மா கிடந்த கடற்கரைக் காணிகளுக்கெல்லாம் 'கதியால்' போட்டுக் கிடுகு வேலியடைக்கத் தொடங்கிய காலமும் அது தான்! ஒரு வேளை, தங்கள் வளவுகளுக்குள்ளையும் பெற்றோல் இருந்தால்…. அவர்களுக்கு அந்த நினைவே புல்லரிக்க வைத்திருக்க வேண்டும்!

 

சிலரது நடத்தைகளில் ஏற்பட்ட மாற்றத்தில், அந்தப் புல்லரிப்பே நிரந்தரமாகியும் போய் விட்டது இன்னொரு கதை!

 

அப்படியான

5-‘ பெற்றோல்' பரிசோதனை ஒன்றின் போது ‘காளி கோவிலடி' யிலும் சில பரீட்சார்த்தக் கிணறுகள் தோண்டினார்கள்! ‘டெரிக்' ஒன்று கடற்கரையில் துளையிட்டுக் கொண்டிருக்க.. ஒரு ‘ரஸ்சியன்' சாதாரண காற்சட்டையுடனும் வெறும் மேலுடனும், கொதிக்கும் வெயிலில் நின்று ‘திரவ சீமெந்து' போன்ற ஒன்றை அந்தத் துளைக்குள் செலுத்திக் கொண்டிருந்தான்! அந்தத் துளையைச் சுற்றித் திரவச் சீமெந்தும்.. ஊர்ச்சனமும் நிறைந்திருந்தனர்!

 

சிறிது நேரத்தில் அந்தத் திரவத்தினுள், துளையிடும் இயந்திரத்திலிருந்த ஒரு ‘நட்டு' ஒன்று கழன்று விழுந்து விட்டது! இயந்திரம் நின்று விட.. அந்த ரஸ்ஸியனும்.

அந்த சீமெந்துத் திரவத்தினுள் இறங்கி, அந்த நட்டைத் தேடிக்கொண்டிருந்தான்! அவன் தேடிய விதத்தைப் பார்க்க, அவன் அந்த நட்டைப் பெற ‘ரஷ்யாவுக்குத்' தான் போக வேண்டியிருக்கும் போல இருந்தது! அப்போது எங்கட ஊர் ‘எஞ்சினியர் ஐயா' கோவில் மதில் நிழலில் நின்று கொண்டிருந்தார்! அவருக்கு வெயில் சுட்டு விடாது நம்ம ‘விசரன்' குடை பிடித்துக் கொண்டிருந்தான்!   

 

அந்த ‘ரஸ்ஸியாக்' காரனும்.. எமது ஊர் எஞ்சினியர் ஐயாவைப் பார்த்துத் திட்டிய படியிருந்தான்! அவன் மீண்டும், மீண்டும் அவரைப்பார்த்துத் திட்டியது, அவருக்குப் புரியாவிட்டாலும்… நம்ம விசரனுக்குப் புரிந்தது!  புரிந்ததும் அவன் உடனே, நம்ம இஞ்சினியர் ஐயாவுக்குப் பிடித்திருந்த குடையைக் கொண்டு போய்.. அந்த ரஸ்ஸியாக காரனுக்குப் பிடிக்கத் தொடங்கினான்!

 

அப்போது.. அந்த இஞ்சினியர் ஐயா.. அவனை நோக்கி.. உரத்துக் கத்திய குரல்...’ விசரன்"!    

 
(ஆறுதலாகத் தொடரும்.....)

 

 

கதையுடன் நினைவுகளை  மீட்டுவதில் வல்லவரய்யா தாங்கள்

எனது  ஊர் பழைய  நினைவுகளை மீட்டு வந்துள்ளீர்கள்

அது ஒரு கனாக்காலம்

தொடருங்கோ...

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புங்கையூரன் உங்கள் கதை வழக்கம் போல அசத்தலாக இருக்கிறது. சிறீமாடகாலத்தில அழிஞ்ச கை ரேகையை ஞாபகப்படுத்தி இருந்தீர்கள். நீங்கள் கதை சொல்லும் பாங்கே தனிதான். தொடருங்கள் காத்திருக்கிறோம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் புங்கை

வருகைக்கு நன்றிகள், ரதி!

 

தனி மனிதர்களுக்கு இருக்க வேண்டிய மன அமைதி போல ஒரு சமுதாயத்துக்கும் மன அமைதி அவசியம்.
 
எங்கட சமுதாயத்துக்கு அது இல்லை. 
 
அது இருந்தால் குறைபாடுள்ளவர்களை அணைத்திருப்பார்கள்.
 
மிகுதியை வாசிக்க ஆவல்.  

 

உங்கள் கருத்துடன் உடன்படுகிறேன், ஈசன்!

 

என்ன காரணமாய் இருக்கும் என்று பல தடவைகள் சிந்தித்துள்ளேன்!

 

ஆனாலும் இதுவரை விடை கிடைக்கவில்லை!

 

வருகைக்கும், கருத்துக்கும் நன்றி..ஈசன்!

அட நம்ம ரோமியோ கன காலத்திற்குப்பிறகுகளத்தில குதித்துள்ளீர்கள்....... உங்கள் ஆரம்பமே எங்களை விசராக்க முன்னர் அடுத்த பதிவைப்போடுங்கள்.... ஆவலுடன் வாசிக்கவும் அதன் பின்னர் உங்களை வறுக்கவும் காத்திருக்கிறேன் :lol:  ஏன்னா நானும் விசரிதான்... :D:rolleyes:

உங்களுக்குத் தனித்துவமான ஒரு திறமை உண்டு என்பதைப் பல இடங்களில் அவதானித்துள்ளேன், சகாறா!

 

நீங்கள் விசரி என்பதை ஏற்றுக்கொள்ளுகின்றேன்! :D

 

அப்படியானால் 'விசரன்' யாரென்பது தான் எனக்குப் புரியவில்லை? :rolleyes:

 

வருகைக்கு நன்றிகள்!

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 1988 இல் இருந்து 1997 (என நினைக்கிறேன்) நடைமுறையில் இருந்த இலங்கை தமிழ் இலக்கியம் தரம் 10, 11 பாட நூலில் “சிரிக்க தெரிந்த பாரசீகன்” என்று ஒரு கட்டுரை இருந்தது. நல்ல ஜோக்குகள் பல அதில் கையாளப்பட்டிருந்தது. அதில் (நினைவில் இருந்து) ஒரு ஜோக்: அரசவையில் ஒருவன் பொய்யாக தன்னை இறைதூதன் என கூறிய வழக்கை விசாரிக்கிறார் கலிபா. கலிபா: உனக்குத் தெரியுமா, பொய்யாக தம்மை இறைவனால் அனுப்பபட்ட தூதர் என கூறி மக்களை ஏமாற்றிய பலரை நான் கடும் சித்திரவதையுடன் கூடிய மரண தண்டணைக்கு ஆளாக்கியுள்ளேன்! குற்றம் சாட்டபட்டவர்: ஓ….கலிபா! நன்றே செய்தாய்….. நான் எவரையும் அவ்வாறு அனுப்பவில்லை!!!
    • விடுமுறைகள் தொடங்க போகுது. நம்மவர்கள் கூடுதலாக மத்திய கிழக்கூடாகவே பயணிக்கிறார்கள். ஆனபடியால் சட்டுபுட்டென்று அலுவல்களை முடியுங்கோ.
    • சிறிதோ பெரிதோ தவறு தவறு தானே அண்ணா.  இவர்கள் பலமுறை செய்து ருசிப்பட்டவர்களாக இருக்க வாய்ப்புண்டு. ஆனால் ஏழை எளிய மக்களாக இருந்து அமெரிக்க படிப்புக்கு முயற்சித்து அதன் அழுத்தம் காரணமாக இவ்வாறு நடந்திருந்தால் இவர்களுக்காக நானும் இரங்குகிறேன்.
    • இஸ்ரேல் இரானுக்குள் (நின்று, அதன் முகவர்களை பாவித்து) தாக்குதல் செய்தது போல தோன்றுகிறது. இப்படி செய்வதற்கு இஸ்ரேல்   இரு கூட்டங்களை பாவிக்கிறது. ஒன்று, ஈரானில் இருந்து இஸ்ரேலுக்கு வந்த  யூதர்களால். இவர்களால் ஈரானியர்களாகவே (Persian) இரானுக்குள் புழங்க முடியும்.  ஈரானின் இப்போதும் யூதர்கள் இருக்கிறார்கள், அனால், முன்பை விட மிக குறைவு. மற்றது, ஈரானில் கொடூர ஆட்சி ஷா வுக்கு, மொசாட், Savak எனும் கொடூர (இரகசிய) போலீசை உருவாக்கி கொடுத்தது.   உண்மையில், Savak ஐ உருவாக்கி தருமாறு ஷா கேட்டது CIA இடம். ஏனெனில், CIA தான், பிரித்தானியரின் வேண்டுதலில் , 1953 இல்  ஈரானின் உண்மையான சனநாயக   அரசை கவிட்டு, Sha ஐ ஆட்சிக்கு கொண்டுவந்தது. இந்த  ஈரானின் உண்மையான சனநாயக ஆட்சி 1953 இல்  கவிழ்த்தலின் முக்கிய காரணம், அன்றைய உண்மையான சனநாயக ஈரானிய அரசாங்கம் எண்ணெய் வளத்தை, கம்பனியை தேசியமயப்படுத்தியது, அதில் பிரித்தானியரின் BP தேசியமயப்படுத்தப்பட்டது. CIA அதன் குளிர் யுத்தத்தை வேலைப்பளுவால்,  Savak ஐ பயிற்சி அளித்து உருவாகுவதை Mosad இடம் அளித்தது. Mosad கொடூர Savak ஐ உருவாக்கியது. ஷா, Savak  இன் மிக கொடுமையான ஆட்சியை எதிர்க்க ஈரான் மண்ணில் அதுவாக பிறந்ததே இந்த முல்லாக்கள். முல்லாக்கள் ஆட்சியை பிடித்து, அகப்பட்ட Savak எல்லோரையும் (கொடூரமாக) கொன்றது, அனால், ஈரான் பெரும்பான்மை மக்கள் அதை வரவேற்றனர் அல்லது நிம்மதி அடைந்தனர். (முல்லாக்களுக்கும், ஈரான் மக்களுக்கும் உள்ள உறவு மேற்கால் சொல்லப்படுவது போல ஒரே வெறுப்பு அல்ல. சிலவற்றை எதிர்க்கிறாரக்ள் , சிலவற்றை வரவேற்றுகிறாரக்ள், முக்கியாக, அணுத்துறை, தொழில்நுட்ப வளர்ச்சி, இராணுவ வளர்ச்சி, குறிப்பாக அமெரிக்கா எதிர்ப்பு போன்றவை. மேற்கின் பிரச்சனை, மசகு, படிம எண்ணை, வாயு  நழுவி, மசகு, படிம எண்ணெய், வாயுவில் தவழ்ந்து மசகு, படிம எண்ணெய், வாயுவில் விழும்  ஈரானில், மேற்கிற்கு  ஒத்து ஊதக்கூடிய ஆட்சி இல்லாதது, ஈரானின் மக்கள் பற்றி முதலை கண்ணீர்  வடிக்கிறது).  முல்லாக்கள் கொன்று  எஞ்சிய Savak இன் எச்சம், சொச்சத்தை, Mosad தத்தெடுத்து பேணி வருகிறது, இரானுக்குள் இருந்து ஆட்தேர்வும் செய்கிறது, தாக்குதலுக்கு பாவிக்கிறது.  (சிறு குறிப்பு: இப்போதைய யூதர், தம்மை யூதர் என்று அழைக்கத்தொடங்கியது, சைரஸ் கிமு 500-550 களில் அவர்களை (யூதரை) (இப்போதைய ஈரானில்) அடிமை சிறைவாசத்தில் இருந்து  விடுவித்து, விடுவிக்கப்பட்டவர்கள் Judea வந்ததினால் என்று அவர்களே சொல்கிறார்கள். அதன் முதல் (யூதர்கள்) இஸ்ரேல் இன் புதல்வர்கள் என்றே அழைக்கப்பட்டார்கள். இங்கு இஸ்ரேல் என்பது, ஆபிரகாமின் பேரன் Jacob, இஸ்ரேல் (இராச்சியம் அல்ல) என்று பெயர் மாற்றப்பட்டவர் (கடவுளினால் என்கிறது விவிலியம்), அதுக்கும் முதல், Canaan (இப்போதைய இஸ்ரேல், பலஸ்தீன், பகுதி ஜோர்டான், சிரியா)  ஐ பிடிக்கும் வரையிலும் ஆபிரகாம் ஐயும் உள்ளடக்கி Hebrew என்ற அடையாளம் என்கிறது (Hebrew) விவிலியம். ).  (இன்னொரு வளமாக, திராவிடர் என்ற கூட்டமும், இப்போதைய ஈரானின் சாகிறோஸ் மலைப்பகுதியில் இருந்து வந்த, ஒழுங்குபடுத்தப்பட்ட விவசாயத்தை வாழ்வாதரமாக கொண்ட மக்கள் கூட்டம் என்பதற்கு விஞ்ஞான  ஆதாரங்கள் பெருகி வருகிறது. இதில் ஒரு பகுதியை சிறீனிவாச ஐயங்கார், 1920 களில் சொல்லி இருந்தார்.)
    • போட்டியில் இணைந்துகொண்ட @கறுப்பிக்கும் @Eppothum Thamizhan க்கும் வெற்றிக்கனியைப் பறிக்க வாழ்த்துக்கள்! @கறுப்பி 17 கேள்விக்கு பதிலைத் தாருங்கள்
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.