Jump to content

இதுதான் கனடா .


arjun

Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

அருமையான சமூகவியல் ஆய்வை தங்கள் பாதுகாப்பைப் பணயம் வைத்துச் செய்திருக்கிறார்கள். கனடா கனடா தான்! 9/11 இற்குப் பிறகு அமெரிக்கர்கள் இப்படி நடந்திருந்தால் "உள்வீட்டில் வளர்ந்த" இஸ்லாமியக் கடும்போக்கு வாதத்தைக் குறைத்திருக்கலாம் என நினைக்கிறேன், டென்சல் வாஷிங்ரனின் "முற்றுகை" (The siege) படம் பாருங்கள்! இதே கருத்தை அருமையாகச் சொல்லும் படம்!

Link to comment
Share on other sites

அருமையான காணொளி.. இணைப்பிற்கு நன்றி அர்ஜுன் அண்ணா..!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அருமையான காணொளி.. இணைப்பிற்கு நன்றி அர்ஜுன் அண்ணா..!

Link to comment
Share on other sites

நெகிழவைத்த அன்புப் பரிமாற்றம்

 

11_2162774g.jpg

 

 

12_2162773g.jpg

 

 

உலகம் முழுக்க முஸ்லிம்கள் தியாகத் திருநாளைக் கொண்டாடிக்கொண்டிருந்த நேரத்தில் சில ஆஸ்திரேலிய சகோதரிகள் சத்தமில்லாமல் ஒரு நல்ல செயலில் இறங்கினார்கள். பூரண ‘ஹிஜாப்’ தரித்து (உடல், தலையை மறைக்கும் ஆடை) அவர்கள், முஸ்லிம் பெண்களுக்கு மலர்ச் செண்டுகளை வழங்கி தங்கள் பெருநாள் வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொண்டார்கள்.
 
இதில் என்ன ஆச்சரியம் என்கிறீர்களா? முஸ்லிம்களுக்கு எதிராகத் தங்கள் நாட்டில் ஏற்பட்டுவரும் கசப்புணர்வைக் களையவும், சக முஸ்லிம் பெண்களுடன் நல்லிணக்கம் பேணவும் இந்தச் செயலில் இறங்கியவர்கள் பெண்கள்.
 
அனைவரும் முஸ்லிம் அல்லாத ஆஸ்திரேலியப் பெண்கள்! மலர்ச் செண்டுகளை அளித்து பெருநாள் வாழ்த்துக்களைப் பகிர்ந்துகொண்டதோடு மட்டுமல்லாமல் தங்கள் நாட்டில் முஸ்லிம்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுவரும் தவறான பிரச்சாரத்துக்கும் கசப்புணர்வுக்கும் அவர்கள் வருத்தமும் தெரிவித்திருக்கிறார்கள். “நாங்கள் உங்களுக்கு ஆதரவாக இருக்கிறோம். நீங்கள் கவலைப்பட வேண்டாம். வெறுப்புக்கு பதிலாக நாம் அன்பை பறிமாறிக் கொள்வோம்” என்று ஆறுதலும் சொல்லியிருக்கிறார்கள்.
 
ஆஸ்திரேலிய முஸ்லிம் பெண்களுடனான நல்லிணக்க நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர் 26 வயதாகும் அன்னாபெல்லி லீ. “அன்பையும், ஒற்றுமையையும் தோற்றுவிப்பதே இதன் நோக்கம்” என்கிறார் அன்னாபெல்லி.
 
ஆஸ்திரேலியாவில் 200 ஆண்டுகளுக்கும் மேலாக முஸ்லிம்கள் வசித்துவருகிறார்கள். அந்நாட்டின் மொத்த மக்கள் தொகை 2 கோடி. இதில் முஸ்லிம்களின் பங்கு 1.7 சதவீதம். செப்டம்பர் 11 சம்பவத்துக்குப் பிறகு ஆஸ்திரேலிய முஸ்லிம்களின் நாட்டுப்பற்று கேள்விக்குறியானது. பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கை என்ற பெயரில் கடந்த மாதம் ஆஸ்திரேலிய காவல்துறையினர் வடமேற்கு சிட்னியில் 15 பேரை கைது செய்தது இன்னும் பிரச்சினையை மோசமாக்கியது.
 
இதைத் தொடர்ந்து முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை அதிகரித்ததோடு குயின்ஸ்லாந்தின் வழிப்பாட்டுத்தலம் ஒன்றும் தாக்கப்பட்டது. அந்நாட்டின் தலைமை இமாமும் அச்சுறுத்தலுக்கு ஆளானார்.
 
இந்நிலையில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்தன. மூன்று வாரத்தில் பெண்கள் மீதான 30 தாக்குதல் சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. அதிலும் குறிப்பாக ஹிஜாப் அணிந்து செல்லும் பெண்கள் தாக்கப்படுகின்றனர் அல்லது பொது இடங்களில் அவமதிக்கப்படுகின்றனர். பெண்கள் வெளியில் தனியே செல்ல முடியாமல் பாதுகாவலர்களுடன் செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.
 
இப்படியொரு சூழ்நிலையில் அன்பையும் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தும்விதமாக முஸ்லிம் அல்லாத பெண்கள் ஹிஜாப் அணிந்து பெருநாள் வாழ்த்துக்களைப் பகிர்ந்துகொண்டது தங்களுக்கு நம்பிக்கை ஊட்டுவதாக உள்ளது என்கிறார்கள் ஆஸ்திரேலிய முஸ்லிம் பெண்கள். நல்லதொரு மாற்றத்துக்கு வழி வகுத்திருக்கும் இந்தப் பெண்கள் பாராட்டுக்குரியவர்களே.
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காணொளி அருமை. ஆனால் எனக்கொரு கேள்வி, அப்பாவி முஸ்லீமுக்கும் மத அடிப்படைவாதத்தால் தூண்டப்பட்டு மற்றயவர்களைக் கொல்லத் துடிக்கும் மிருகங்களுக்கும் இடையிலான வித்தியாசத்தை ஒருவர் கண்டறிவது எப்படி ? ஏனென்றால், அண்மையில் போலீஸ் நிலையத்திற்கு விசாரணைக்கென்று சென்ற 18 வயதுடைய ஆப்கானியன் மறைத்து வைத்திருந்த கத்தியொன்றை எடுத்து பொலிச்சர் இருவரை கடுமையாகத் தாக்கியிருக்கிறான். ஒருவர் கீழே விழ, மற்றையவர் துப்பாக்கியல் அவனைச் சுட்டுக் கொன்றிருக்கிறார். இவ்வளவுக்கும் அந்த முஸ்லீம் அவுஸ்த்திரேலியாவில் பிறந்தவன். இவனைப் போலவே இங்கே பிறந்த இன்னொரு 17 வயது முஸ்லீம் இன்று ஐஸிஸ் பிரச்சார வீடியோவில் மேற்கு நாடுகளை அழித்து இஸ்லாமியக் கலிபேட்டாக மாற்றுவோம், மேற்குலகத் தலைவர்களின் தலைகளைத் துண்டாடுவோம் என்று கூக்குரலிடுகிறான். இவன் கூட சாதாரண அவுஸ்த்திரேலியர்களைப்போல இங்கே வாழ்ந்தவன் தானே??

 

அமெரிக்காவில் ரெட்டைக் கோபுரத் தாக்குதலிலிருந்து, ஸ்பெயின் புகைவண்டிக் குண்டுவெடிப்பு, லண்டன் நிலக்கீழ்ச் சுரங்க ரயில் குண்டுவெடிப்பு, லண்டன் பஸ் குண்டுவெடிப்பு...இவை எல்லாவற்றையும் செய்தது அந்த நாடுகளில் சாதாரண மக்களைப்போல வாழ்ந்து வந்த முஸ்லீம்கள் தானே?? 

 

மனிதாபிமானமும், சக மனிதனை மனிதனாக மதிக்கும் போக்கும் மேற்கு நாடுகளுக்கு மட்டுமே பொருந்தும். இஸ்லாமிய அடிப்படைவாதிகளுக்கு இவை தெரியாது,

 

முஸ்லீம்கள் மேல் மனிதாபிமானத்தின்பேரில் இரக்கப்படுவது சரிதான், ஆனால் எச்சரிக்கையாக இருப்பது தவறில்லை. ஏனென்றால், மதம் என்ன சொல்கின்றதோ அதை அப்படியே செய்யும் வெறி கொண்டவர்கள் அவர்கள்.

 

என்னைப் பொறுத்தவரை பெரும்பாலான முஸ்லீம்கள் மத  அடிப்படைவாதிகள். வெளியே சொல்ல முடியாவிட்டாலும்கூட உள்ளூர தீவிரவாதிகளை ஆதரிப்பவர்கள். மேற்குலகின் சனநாயக, சமூக, பொருளாதார வசதிகளை அனுபவித்துக்கொண்டே அந்த நாடுகளை அழிக்க நினைப்பவர்கள். தங்கள் நாடுகளின் இஸ்லாமிய அடிப்படைவாதத்தின் மிருகத்தனமான அடக்குமுறைகளுக்கு முகம் கொடுக்க முடியாமல் மேற்குநாடுகளுக்குக் குடிபெயர்ந்து வந்துவிட்டு இன்று தங்களுக்கு அடைக்கலமும், பாதுகாப்பும், மனிதர்களாக வாழும் உரிமையும் , கனவிலும் நினைத்திராத வசதிகளையும் கொடுத்திருக்கும் மேற்குலகின் நாடுகளுக்கும் மக்களுக்கும் எதிராக தமது மிருகத்தனத்தைக் காட்டுவதுடன், அந்த நாடுகளிலும் தமது மிருகத்தனாமன இஸ்லாமிய அடிப்படைவாதத்தை விதைத்து, இறுதியில் அந்த நாடுகளையும் தமது ஆளுகைக்குள் கொனண்டுவர நினைப்பவர்கள். இவர்கள் மேல் இரக்கப்படுவது இன்னும் அழிவுகளுக்கே வழிவகுக்கும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காணொளி அருமை. ஆனால் எனக்கொரு கேள்வி, அப்பாவி முஸ்லீமுக்கும் மத அடிப்படைவாதத்தால் தூண்டப்பட்டு மற்றயவர்களைக் கொல்லத் துடிக்கும் மிருகங்களுக்கும் இடையிலான வித்தியாசத்தை ஒருவர் கண்டறிவது எப்படி ? ஏனென்றால், அண்மையில் போலீஸ் நிலையத்திற்கு விசாரணைக்கென்று சென்ற 18 வயதுடைய ஆப்கானியன் மறைத்து வைத்திருந்த கத்தியொன்றை எடுத்து பொலிச்சர் இருவரை கடுமையாகத் தாக்கியிருக்கிறான். ஒருவர் கீழே விழ, மற்றையவர் துப்பாக்கியல் அவனைச் சுட்டுக் கொன்றிருக்கிறார். இவ்வளவுக்கும் அந்த முஸ்லீம் அவுஸ்த்திரேலியாவில் பிறந்தவன். இவனைப் போலவே இங்கே பிறந்த இன்னொரு 17 வயது முஸ்லீம் இன்று ஐஸிஸ் பிரச்சார வீடியோவில் மேற்கு நாடுகளை அழித்து இஸ்லாமியக் கலிபேட்டாக மாற்றுவோம், மேற்குலகத் தலைவர்களின் தலைகளைத் துண்டாடுவோம் என்று கூக்குரலிடுகிறான். இவன் கூட சாதாரண அவுஸ்த்திரேலியர்களைப்போல இங்கே வாழ்ந்தவன் தானே??

 

அமெரிக்காவில் ரெட்டைக் கோபுரத் தாக்குதலிலிருந்து, ஸ்பெயின் புகைவண்டிக் குண்டுவெடிப்பு, லண்டன் நிலக்கீழ்ச் சுரங்க ரயில் குண்டுவெடிப்பு, லண்டன் பஸ் குண்டுவெடிப்பு...இவை எல்லாவற்றையும் செய்தது அந்த நாடுகளில் சாதாரண மக்களைப்போல வாழ்ந்து வந்த முஸ்லீம்கள் தானே?? 

 

மனிதாபிமானமும், சக மனிதனை மனிதனாக மதிக்கும் போக்கும் மேற்கு நாடுகளுக்கு மட்டுமே பொருந்தும். இஸ்லாமிய அடிப்படைவாதிகளுக்கு இவை தெரியாது,

 

முஸ்லீம்கள் மேல் மனிதாபிமானத்தின்பேரில் இரக்கப்படுவது சரிதான், ஆனால் எச்சரிக்கையாக இருப்பது தவறில்லை. ஏனென்றால், மதம் என்ன சொல்கின்றதோ அதை அப்படியே செய்யும் வெறி கொண்டவர்கள் அவர்கள்.

 

என்னைப் பொறுத்தவரை பெரும்பாலான முஸ்லீம்கள் மத  அடிப்படைவாதிகள். வெளியே சொல்ல முடியாவிட்டாலும்கூட உள்ளூர தீவிரவாதிகளை ஆதரிப்பவர்கள். மேற்குலகின் சனநாயக, சமூக, பொருளாதார வசதிகளை அனுபவித்துக்கொண்டே அந்த நாடுகளை அழிக்க நினைப்பவர்கள். தங்கள் நாடுகளின் இஸ்லாமிய அடிப்படைவாதத்தின் மிருகத்தனமான அடக்குமுறைகளுக்கு முகம் கொடுக்க முடியாமல் மேற்குநாடுகளுக்குக் குடிபெயர்ந்து வந்துவிட்டு இன்று தங்களுக்கு அடைக்கலமும், பாதுகாப்பும், மனிதர்களாக வாழும் உரிமையும் , கனவிலும் நினைத்திராத வசதிகளையும் கொடுத்திருக்கும் மேற்குலகின் நாடுகளுக்கும் மக்களுக்கும் எதிராக தமது மிருகத்தனத்தைக் காட்டுவதுடன், அந்த நாடுகளிலும் தமது மிருகத்தனாமன இஸ்லாமிய அடிப்படைவாதத்தை விதைத்து, இறுதியில் அந்த நாடுகளையும் தமது ஆளுகைக்குள் கொனண்டுவர நினைப்பவர்கள். இவர்கள் மேல் இரக்கப்படுவது இன்னும் அழிவுகளுக்கே வழிவகுக்கும்.

 

சரியான பார்வை  ரகு..

நாமே இதற்கு ஒரு சாட்சி..

கனடா கனவுலகில் வாழப்புறப்படுகிறது என்பதற்கு இது சாட்சி... :(

Link to comment
Share on other sites

ரகுநாதன்.. உங்கள் வாதம் விளங்குகிறது. ஆனால் ஒருவரின் தோற்றத்தை வைத்து அவரை மதிப்பிடக்கூடாது என்பதுதான் அந்தக் காணொளி சொல்லும் செய்தி. இதை அனுமதித்தீர்கள் என்றால் நாளை உங்களை யாராவது கப்பலில் வந்தியா என்று திட்டினாலும் உங்களால் ஒன்றும் செய்ய முடியாது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

என்ன தான் மற்றவா்கள் சொன்னாலும் தமிழ் சமூகம் முஸ்லீம்களை ”முனா” என்று விழிப்பதையும் சீனா்கள ”சப்பட்டை” என்று விழிப்பதையும்  பாக்கிஸ்தானியா்களை ” பாக்கி” (வெள்ளையளுக்கு நாமும் பாக்கி தான்) என்னறழைப்பதையும் இந்தியா்களை ”வடக்கு” என்று அழைப்பதையும் மாற்ற மாட்டம்...

இன்னும் 

வடை - இந்தியா்கள்
சோறு - இலங்கையா்கள்

என்றும் சொல்லுறாங்க

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பகிர்வுக்கு நன்றி அர்ஜூன்...! சுமார் 45 / 50 வயதுக்கு மேற்பட்ட வர்கள் மிகவும் நல்லவர்கள்...!

Link to comment
Share on other sites

அவுஸ் கொஞ்சம் வித்தியாசம். தற்போது ஹலால் உணவுகளையும் அவற்றை உற்பத்தி செய்யும் நிறுவனங்களையும் புறக்கணிக்கிறார்கள். அவுஸ்களுக்கு பிடித்த வெஜிமைட் தற்போது ஹலால் சான்றிதழோடு வருகிறது. அதையே புறக்கணிக்க வேண்டும் என்று சொல்லுகிறார்கள். காட்பரி சொக்கிலேட் நிறுவனமும் இந்த ஹலால் சான்றிதலால் கஷ்டப்பட்டார்கள். இரு நாட்களுக்கு முன்னர் அவுஸ் பாராளுமன்றத்துக்கு ஹிஜாப் அணிந்து வந்து போராத்தில் ஈடுபட்டிருந்தார்கள். குயீன்சஸ்லாந்திலும் நிலைமை கஷ்டம்.    

Link to comment
Share on other sites

இந்த வீடியோ என்ன சொல்லி நிற்கின்றது என்று புரிதல் தான் முக்கியம் .

 

எமது பார்வை வேறாக இருக்கலாம் ஆனால் அதுவல்ல வீடியோ சொல்வது .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்ன தான் மற்றவா்கள் சொன்னாலும் தமிழ் சமூகம் முஸ்லீம்களை ”முனா” என்று விழிப்பதையும் சீனா்கள ”சப்பட்டை” என்று விழிப்பதையும்  பாக்கிஸ்தானியா்களை ” பாக்கி” (வெள்ளையளுக்கு நாமும் பாக்கி தான்) என்னறழைப்பதையும் இந்தியா்களை ”வடக்கு” என்று அழைப்பதையும் மாற்ற மாட்டம்...

இன்னும் 

வடை - இந்தியா்கள்

சோறு - இலங்கையா்கள்

என்றும் சொல்லுறாங்க

 

ஏதோ நமக்குள் மட்டும்தான் எல்லாம் நடக்கின்றது என நினைத்து விடாதீர்கள். நவநாகரீக நாடுகளிலும் பட்டப்பெயர் வைத்து அழைப்பது சர்வசாதாரணம். திரியின் நலன்கருதி மேலதிகமாக எழுத விரும்பவில்லை.

Link to comment
Share on other sites

காணொளி அருமை. ஆனால் எனக்கொரு கேள்வி, அப்பாவி முஸ்லீமுக்கும் மத அடிப்படைவாதத்தால் தூண்டப்பட்டு மற்றயவர்களைக் கொல்லத் துடிக்கும் மிருகங்களுக்கும் இடையிலான வித்தியாசத்தை ஒருவர் கண்டறிவது எப்படி ? ஏனென்றால், அண்மையில் போலீஸ் நிலையத்திற்கு விசாரணைக்கென்று சென்ற 18 வயதுடைய ஆப்கானியன் மறைத்து வைத்திருந்த கத்தியொன்றை எடுத்து பொலிச்சர் இருவரை கடுமையாகத் தாக்கியிருக்கிறான். ஒருவர் கீழே விழ, மற்றையவர் துப்பாக்கியல் அவனைச் சுட்டுக் கொன்றிருக்கிறார். இவ்வளவுக்கும் அந்த முஸ்லீம் அவுஸ்த்திரேலியாவில் பிறந்தவன். இவனைப் போலவே இங்கே பிறந்த இன்னொரு 17 வயது முஸ்லீம் இன்று ஐஸிஸ் பிரச்சார வீடியோவில் மேற்கு நாடுகளை அழித்து இஸ்லாமியக் கலிபேட்டாக மாற்றுவோம், மேற்குலகத் தலைவர்களின் தலைகளைத் துண்டாடுவோம் என்று கூக்குரலிடுகிறான். இவன் கூட சாதாரண அவுஸ்த்திரேலியர்களைப்போல இங்கே வாழ்ந்தவன் தானே??

 

அமெரிக்காவில் ரெட்டைக் கோபுரத் தாக்குதலிலிருந்து, ஸ்பெயின் புகைவண்டிக் குண்டுவெடிப்பு, லண்டன் நிலக்கீழ்ச் சுரங்க ரயில் குண்டுவெடிப்பு, லண்டன் பஸ் குண்டுவெடிப்பு...இவை எல்லாவற்றையும் செய்தது அந்த நாடுகளில் சாதாரண மக்களைப்போல வாழ்ந்து வந்த முஸ்லீம்கள் தானே?? 

 

மனிதாபிமானமும், சக மனிதனை மனிதனாக மதிக்கும் போக்கும் மேற்கு நாடுகளுக்கு மட்டுமே பொருந்தும். இஸ்லாமிய அடிப்படைவாதிகளுக்கு இவை தெரியாது,

 

முஸ்லீம்கள் மேல் மனிதாபிமானத்தின்பேரில் இரக்கப்படுவது சரிதான், ஆனால் எச்சரிக்கையாக இருப்பது தவறில்லை. ஏனென்றால், மதம் என்ன சொல்கின்றதோ அதை அப்படியே செய்யும் வெறி கொண்டவர்கள் அவர்கள்.

 

என்னைப் பொறுத்தவரை பெரும்பாலான முஸ்லீம்கள் மத  அடிப்படைவாதிகள். வெளியே சொல்ல முடியாவிட்டாலும்கூட உள்ளூர தீவிரவாதிகளை ஆதரிப்பவர்கள். மேற்குலகின் சனநாயக, சமூக, பொருளாதார வசதிகளை அனுபவித்துக்கொண்டே அந்த நாடுகளை அழிக்க நினைப்பவர்கள். தங்கள் நாடுகளின் இஸ்லாமிய அடிப்படைவாதத்தின் மிருகத்தனமான அடக்குமுறைகளுக்கு முகம் கொடுக்க முடியாமல் மேற்குநாடுகளுக்குக் குடிபெயர்ந்து வந்துவிட்டு இன்று தங்களுக்கு அடைக்கலமும், பாதுகாப்பும், மனிதர்களாக வாழும் உரிமையும் , கனவிலும் நினைத்திராத வசதிகளையும் கொடுத்திருக்கும் மேற்குலகின் நாடுகளுக்கும் மக்களுக்கும் எதிராக தமது மிருகத்தனத்தைக் காட்டுவதுடன், அந்த நாடுகளிலும் தமது மிருகத்தனாமன இஸ்லாமிய அடிப்படைவாதத்தை விதைத்து, இறுதியில் அந்த நாடுகளையும் தமது ஆளுகைக்குள் கொனண்டுவர நினைப்பவர்கள். இவர்கள் மேல் இரக்கப்படுவது இன்னும் அழிவுகளுக்கே வழிவகுக்கும்.

 

தமிழர்கள் தமிழர்களை அழிக்கும் சிங்களப் பகுதிகளில் வாழும் போது அவர்கள் நிலை என்னவோ அதுபோல்தான் இஸ்லாமியர்கள் மீது போர் தொடுத்திருக்கும் மேற்கு நாடுகளில் வாழும் இஸ்லாமியர்களும்.

 

கதிர்காமர் போன்றவர்களும் அவ்வாறான போக்குள்ள தமிழர்களும் சிங்களத்துடன் குலாவி வாழ்வது போல் பல இஸ்லாமியர்களும் மேற்கு நாடுகளுடன் இணைந்து வாழ்கின்றனர்.

 

தமிழர்கள் ஆயிரம் வருடம் சாதியை காவித்திரிகின்றார் புலம்பெயர் நாட்டிலும் கொண்டு திரிகின்றனர் அதுபோல் மதத்தை அவர்கள் கொண்டு திரின்றனர். இரண்டினது வீரியமும் அக புற சூழலும் வேறாகினும் இரண்டும் அறிவுக்கு முரணானதுதான்.

 

கனடா இந்தப் பிரச்சனையை முடிந்தவரை புத்திக் கூர்மையுடன் அணுக முற்படுகின்றது. இரவோடு இரவாக இஸ்லாமியச் சமூகத்தையே வெளியேற்றிய நிகழ்வை அனுபவமாக கொண்ட எமது அணுகுமுறைக்கும் கனடாவின் அணுகுமுறைக்கும் இடையில் உள்ள இடைவெளி கடலளவு.

 

தமிழர் எல்லோரும் புலி அல்லது பயங்கரவாதி என்ற அணுகுமுறை சிங்களத்திடம் இருந்திருந்தால் தமிழர் இன்று ஈழத்தில் இல்லை.

Link to comment
Share on other sites

கனடா இந்தப் பிரச்சனையை முடிந்தவரை புத்திக் கூர்மையுடன் அணுக முற்படுகின்றது. இரவோடு இரவாக இஸ்லாமியச் சமூகத்தையே வெளியேற்றிய நிகழ்வை அனுபவமாக கொண்ட எமது அணுகுமுறைக்கும் கனடாவின் அணுகுமுறைக்கும் இடையில் உள்ள இடைவெளி கடலளவு.

இரண்டாவது உலகப்போர் சமயத்தில் கனடாவில் வாழ்ந்து வந்த ஜப்பானியர்களை அள்ளிக்கொண்டுபோய் மெனிக் ஃபார்ம் மாதிரியான முகாம்களில் போட்டு அடைத்து வைத்த நாடு கனடா. அது ஏன் சண்டமாருதன்?? :rolleyes:

அன்று சின்னாபின்னமாக்கப்பட்ட அந்த ஜப்பானியக் குடும்பங்கள் இன்றும் மேற்கு கனடாவில் உள்ளார்கள். ஒரு சுதந்திரமடைந்த நாடே இவ்வாறான வேலயை செய்துள்ளது. இதை ஒப்பிடும்போது ஒடுக்கப்பட்ட தமிழர் விடுதலை வரலாறு எவ்வளவோ பரவாயில்லை.

Link to comment
Share on other sites

இரண்டாவது உலகப்போர் சமயத்தில் கனடாவில் வாழ்ந்து வந்த ஜப்பானியர்களை அள்ளிக்கொண்டுபோய் மெனிக் ஃபார்ம் மாதிரியான முகாம்களில் போட்டு அடைத்து வைத்த நாடு கனடா. அது ஏன் சண்டமாருதன்?? :rolleyes:

அன்று சின்னாபின்னமாக்கப்பட்ட அந்த ஜப்பானியக் குடும்பங்கள் இன்றும் மேற்கு கனடாவில் உள்ளார்கள். ஒரு சுதந்திரமடைந்த நாடே இவ்வாறான வேலயை செய்துள்ளது. இதை ஒப்பிடும்போது ஒடுக்கப்பட்ட தமிழர் விடுதலை வரலாறு எவ்வளவோ பரவாயில்லை.

 

உலகப்போரையும்  தமிழர் விடுதலைப்போராட்டதையும் ஒப்பிட முடியாது.

கனடா அமரிக்கா போன்றன சில நூறாண்டுகள் வரலாற்றைக் கொண்ட நாடுகள். செவ்விந்தியர்களின் பூர்வீகமான வட அமரிக்காவில் குடியேறியபோது செவ்விந்தியர்களையும் அழித்து எஞ்சியவர்களை ரிசேர்வில் கொண்டுபோய் தள்ளினார்கள். இது நீங்கள் சொன்ன ஜப்பானிய உதாரணத்தை விட மோசமானது. ஆபிரிக்காவில் இருந்து அடிமைகளை கப்பல்களில் ஏற்றிவந்து அவர்கள் விதைகளை கசக்கிப்பார்த்து விலைக்கு விற்றனர் வாங்கினர். வரலாற்றில் இன்னும் ஏராளம். ஆனால் இவ்வாறான அணுகுமுறைகளை எல்லாம் அவர்கள் மாற்றிக்கொண்டார்கள். என்னும் மாற்றிக்கொண்டிருக்கின்றார்கள். ஒரு கறுப்பினத்தவரை அமரிக்கர்கள் தம்நாட்டுத் தலைவராக ஏற்கும் அளவுக்கு மாற்றிக்கொண்டார்கள். நிற இன மத பேதங்களை உணர்சிவசப்பட்டு அணுகுவதில் இருந்து அறிவு பூர்வமாக அணுக பழகிக்கொண்டார்கள். உணர்சிவசமான அணுகுமுறையின் பின்விழைவுகள் என்ன என்பதை அறிவுபூர்வமாகப் பாரக்கின்றார்கள்.

 

ஆனால் வரலாறு தெரிந்த காலங்கள் தொட்டு சாதி மத பிரசேவாத அணுகுறைகளில் அறிவுபூர்வமாக எந்த மாற்றமும் எமக்குள் நிகழவில்லை. போத்துக்கேயே ஒல்லாந்த அங்கிலேய சிங்கள ஆக்கிரமிப்புகள் என அனைத்தையும் கண்டபின்னர் கூட எந்த மாற்றமும் வரவில்லை. ஒல்லாந்த ஆங்கிலேயர்கள் எமது மண்ணை ஆக்கிரமித்தபோதும் இந்த பேதங்கள் எம்முடன் இருந்தது அவர்கள் நாடுகளில் பின்னர் வந்த போதும் இந்த பேதங்களை காவிக்கொண்டுவந்தோம். எந்த மாற்றமும் கிடையாது. பேதங்களை கடந்து ஐக்கியப்படவே போராடுவார்கள் ஆனால் புறச் சூழல் அழுத்தத்தால் அதிஸ்டவசமாக மத பிரதேசவாதங்களை கடந்து ஐக்கியப்பட்ட போராட்ட சூழலைக் கூட அறிவுகெட்டதனத்தால் குலைத்தவர்கள் தமிழர்கள். இந்த அறிவுகெட்டதனத்தை யூத மூளைக்கு அவ்வப்போது ஓப்பிட்டுக்கொள்வது வேறு.

எமது அணுகுமுறையில் உள்ள அறிவுக்குறைபாட்டிற்கும் மாற்றங்களை காண முடியாத மனநோய்கும் உணரச்சிவசத்திற்கும் கடந்தகால ஆயுதப்பாவனையும் விடுதலைப்போராட்டத்தை பயங்கரவாதமாக்கியதும் சமூகத்தை இருப்பில் இருந்ததை விட ஆழமாக சிதைத்தம் என பல  உதாரணங்கள் கண்முன்னே வரலாறாக விரிந்து கிடக்கின்றது.

 

பிழைகள் திருத்தப்படவேணும் தவிர நியாயப்படுத்தவேண்டியதில்லை. திருத்தப்படுவதற்கே உலகில் உள்ள உதாரணங்கள் அனுபவமாக அமைய முடியும். இங்கே நியாயப்படுத்துவதற்கே ஒவ்வொன்றையும் இழுத்துவருகின்றார்கள். உள்ளுர மாற்றத்தை விரும்பாதவர்கள்  நியாயப்படுத்திக்கொண்டே இருப்பார்கள். அந்த வகையில் தமிழர் போராட்டத் தவறுகள் பரவாயில்லை என்ற நியாயப்படுத்தல்களும் அதற்கு ஆமாம் ஆமாம் என்ற ஆதரவுகளும் தவறுகளை தக்கவைக்கவைப்பதற்கே. இது தான் வரலாறு நீளவும் தொடர்கின்றது. கனடாவும் ஜப்பானும் இருக்கும் அரபு தேசங்களும் கனடாவும் இருக்கும். பல நூறு பிரச்சனைகள் கடந்து செல்லப்பட்டுக்கொண்டே இருக்கும். ஆனால் எமக்கென்று ஒரு தேசம் இருக்காது அதற்குப் பதலாக சாதி மதம் பிரதேசவாதங்கள் தொடர்ந்து இருந்துகொண்டே இருக்கும்.

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இவர் என்ன சொல்ல வாறார் என்றால்... இசைக்கலைஞன் சொல்வது போன மாசம்... நான்(இவர்) சொல்வது இந்த மாசம்!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சில வருடங்களுக்கு முன்னர், கனடாவின் முதற்குடிகள் நிகழ்வு ஒன்றுக்குப் போய் இருந்தேன். அதில் ஒருவர் தங்களின் பிரச்சனைகள் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தார். தங்களின் சமூகத்திற்கு கனடா அரசால் உதவிகள் செய்யப்படுகின்றன. குறித்த பிரதேசத்தில் இலவசமாகவோ, அல்லது மிகக் குறைவான விலையில் பொருள் வாங்கமுடியும். ஆனால் அந்த வசதி என்பது அந்தப் பிரதேசத்தை விட்டு வெளியேறினால் அவர்களால் அனுபவிக்க முடியாது. இது கூட ஒருவகை அடக்குமுறை தான். இதனால் அவர்களுக்குப் படித்து முன்னேற வேண்டிய தேவை இல்லை. அவர்களின் இடத்தில் தாரளமான போதைவஸ்துக் கிடைக்கின்றது. தவிர, இப்படி வசதிகள் இருந்தபோதும், அவர்களால் முழப் பலனையும் அனுபவிக்க முடியாது. ஏனென்றால் அவர்களின் இடத்தில் உதாரணத்துக்கு ஒரு ரிம் ஹட்டன் கூட இல்லை. இது எவ்வளவு மிகைப்படுத்தாலா இல்லை என்பது எல்லாம் தெரியவில்லை. ஆனால் இன்றைய வடக்குக் கிழக்குத் தமிழர்களின் நிலைமையும் இதுவாகத் தான் இருக்கின்றத. அரசுக்குப் பதிலாக வெளிநாட்டில் உள்ளவர்கள் பணம் அனுப்பிக் கொண்டிருக்கின்றனர். மிகுதிப்படி எல்லா விடயங்களும் இதில் பொதுவானது....

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சில வருடங்களுக்கு முன்னர், கனடாவின் முதற்குடிகள் நிகழ்வு ஒன்றுக்குப் போய் இருந்தேன். அதில் ஒருவர் தங்களின் பிரச்சனைகள் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தார். தங்களின் சமூகத்திற்கு கனடா அரசால் உதவிகள் செய்யப்படுகின்றன. குறித்த பிரதேசத்தில் இலவசமாகவோ, அல்லது மிகக் குறைவான விலையில் பொருள் வாங்கமுடியும். ஆனால் அந்த வசதி என்பது அந்தப் பிரதேசத்தை விட்டு வெளியேறினால் அவர்களால் அனுபவிக்க முடியாது. இது கூட ஒருவகை அடக்குமுறை தான். இதனால் அவர்களுக்குப் படித்து முன்னேற வேண்டிய தேவை இல்லை. அவர்களின் இடத்தில் தாரளமான போதைவஸ்துக் கிடைக்கின்றது. தவிர, இப்படி வசதிகள் இருந்தபோதும், அவர்களால் முழப் பலனையும் அனுபவிக்க முடியாது. ஏனென்றால் அவர்களின் இடத்தில் உதாரணத்துக்கு ஒரு ரிம் ஹட்டன் கூட இல்லை. இது எவ்வளவு மிகைப்படுத்தாலா இல்லை என்பது எல்லாம் தெரியவில்லை. ஆனால் இன்றைய வடக்குக் கிழக்குத் தமிழர்களின் நிலைமையும் இதுவாகத் தான் இருக்கின்றத. அரசுக்குப் பதிலாக வெளிநாட்டில் உள்ளவர்கள் பணம் அனுப்பிக் கொண்டிருக்கின்றனர். மிகுதிப்படி எல்லா விடயங்களும் இதில் பொதுவானது....

 

சிறிய  காலத்துக்குப்பின் ஈழத்தமிழர்  நிலையும் இது தானா  தாயகத்தில்.. :(  :(

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆட்களை செட் பண்ணிப் போட்டு செய்தால் எல்லா நாடும் நல்ல நாடு தான்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சில வருடங்களுக்கு முன்னர், கனடாவின் முதற்குடிகள் நிகழ்வு ஒன்றுக்குப் போய் இருந்தேன். அதில் ஒருவர் தங்களின் பிரச்சனைகள் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தார். தங்களின் சமூகத்திற்கு கனடா அரசால் உதவிகள் செய்யப்படுகின்றன. குறித்த பிரதேசத்தில் இலவசமாகவோ, அல்லது மிகக் குறைவான விலையில் பொருள் வாங்கமுடியும். ஆனால் அந்த வசதி என்பது அந்தப் பிரதேசத்தை விட்டு வெளியேறினால் அவர்களால் அனுபவிக்க முடியாது. இது கூட ஒருவகை அடக்குமுறை தான். இதனால் அவர்களுக்குப் படித்து முன்னேற வேண்டிய தேவை இல்லை. அவர்களின் இடத்தில் தாரளமான போதைவஸ்துக் கிடைக்கின்றது. தவிர, இப்படி வசதிகள் இருந்தபோதும், அவர்களால் முழப் பலனையும் அனுபவிக்க முடியாது. ஏனென்றால் அவர்களின் இடத்தில் உதாரணத்துக்கு ஒரு ரிம் ஹட்டன் கூட இல்லை. இது எவ்வளவு மிகைப்படுத்தாலா இல்லை என்பது எல்லாம் தெரியவில்லை.

 

 

உண்மையில் முதல் குடிமக்களுக்கு வாிச்சலுகை கனடா முழுவதும் கிடைகிறது. அவா்கள் Nunavut பகுதிக்குள் மட்டும் வாழ்ந்தால் மட்டுமே இந்த சலுகைகள் என்பது உண்மையில்லை. ஆனால் அவா்களுக்கென்று வழங்கப்பட்டுள்ள சிறப்புாிமைகள் ... போதைப்பொருளின் அளவீடு, வேட்டையாடுதல், போன்றன Nunavut மட்டுமே ஏற்புடையது என்று நினைக்கிறேன். அதை விட ஒன்ராாியோவிலே பல முதற்குடி மக்களது பகுதிகளுக்கு சிறப்புாிமை வழங்கப்பட்டுள்ளது. 

படிப்பு  தொடா்பாக அந்த மக்களே முடிவு செய்ய வேண்டும். அரசாங்க உதவி மற்றும் மிதமிஞ்சி போதைப்பொருள் பாவனையாலே அந்த சமூகம் கீழ்நோக்கிப் போகின்றது. அதை பற்றி சுய ஆட்சி (மற்றைய மாநிலங்களை விட அதிகாரமிக்க) அதிகாரத்தை கொண்ட Nunavut றில் இவற்றை அவா்களே மாற்ற முடியும்... 

 

நாடு முழுவதும் அவா்களுக்கான சிறப்புாிமையை எதிா்பாா்க்க முடியாது... நாளை மற்றைய இனங்களும் தமது இனங்களுக்கும் சிறப்புாிமை தேவை என்று வாதிட முடியும் ஏன் எனில் இது பாரம்பாிய நாடு அல்ல... புலம்பெயா்ந்தவா்களால் உருவாக்கப்பட்ட நாடு..!

Link to comment
Share on other sites

உண்மையில் முதல் குடிமக்களுக்கு வாிச்சலுகை கனடா முழுவதும் கிடைகிறது. அவா்கள் Nunavut பகுதிக்குள் மட்டும் வாழ்ந்தால் மட்டுமே இந்த சலுகைகள் என்பது உண்மையில்லை. ஆனால் அவா்களுக்கென்று வழங்கப்பட்டுள்ள சிறப்புாிமைகள் ... போதைப்பொருளின் அளவீடு, வேட்டையாடுதல், போன்றன Nunavut மட்டுமே ஏற்புடையது என்று நினைக்கிறேன். அதை விட ஒன்ராாியோவிலே பல முதற்குடி மக்களது பகுதிகளுக்கு சிறப்புாிமை வழங்கப்பட்டுள்ளது. 

படிப்பு  தொடா்பாக அந்த மக்களே முடிவு செய்ய வேண்டும். அரசாங்க உதவி மற்றும் மிதமிஞ்சி போதைப்பொருள் பாவனையாலே அந்த சமூகம் கீழ்நோக்கிப் போகின்றது. அதை பற்றி சுய ஆட்சி (மற்றைய மாநிலங்களை விட அதிகாரமிக்க) அதிகாரத்தை கொண்ட Nunavut றில் இவற்றை அவா்களே மாற்ற முடியும்... 

 

நாடு முழுவதும் அவா்களுக்கான சிறப்புாிமையை எதிா்பாா்க்க முடியாது... நாளை மற்றைய இனங்களும் தமது இனங்களுக்கும் சிறப்புாிமை தேவை என்று வாதிட முடியும் ஏன் எனில் இது பாரம்பாிய நாடு அல்ல... புலம்பெயா்ந்தவா்களால் உருவாக்கப்பட்ட நாடு..!

 

Reserveகளில் விற்கப்படும் பொருட்களுக்கு சிலவேளை  வரி விதிக்கப்படாமல் இருக்கும்...ஏனென்றால் reserveகளில் சிகரெட், பீர் வாங்க எல்லோரும் திருட்டுத்தனமாக (கனடிய-மூத்த குடி கொண்டு) வாங்குபவர்கள் இருக்கிறார்கள்....

மூத்தகுடிகள் பணம் வெளியே இருந்தாலும் எடுக்கலாம்...ஆனால் மற்ற சலுகைகள் அவர்களது இடத்தில் மட்டும் தான் கிடைக்குமாக்கும்...ஆகவே தான் தாங்களே தங்களை ஆள அவர்கள் கேட்கிறார்கள்....

என்னோடு படித்த மூத்தகுடியிணன் ஒருவனும் எப்போதுமே அரசுமீது "கோபமாக" இருப்பான்....தனது எதிர்காலத்தை எப்போதுமே இருண்டதாகவே கதைத்துகொண்டிருப்பான்....இடையில் கல்லூரியை விட்டும் போய்விட்டான்... இவ்வளவுக்கும் கல்லூரி கட்டணம் கூட அவன் கட்ட வேண்டியிருக்கவில்லை

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 29 MAR, 2024 | 10:23 AM   காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவிற்குள் தடையற்ற விதத்தில் உணவுப்பொருட்களையும் மருந்துப்பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அவசரமாக தேவைப்படும் அத்தியாவசியபொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை காசாவிற்குள் அனுமதிப்பது தொடர்பில் இஸ்ரேல் உடனடியாக செயற்படவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது.   காசாவில் அடுத்த சில வாரங்களில் கடும் பட்டினி நிலைமை உருவாகலாம் என் எச்சரிக்கை வெளியாகியுள்ள நிலையில் சர்வதேசநீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. காசா பட்டினி ஆபத்தினை எதிர்கொள்ளவில்லைமாறாக அந்த நிலைமை ஏற்கனவே உருவாகிவிட்டது என தெரிவித்துள்ள சர்வதேச நீதிமன்றம் மந்தபோசாக்கு போன்றவற்றினால் 27 சிறுவர்கள் உட்பட 31 பேர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டனர் என ஐநா நிபுணர்கள் தெரிவித்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ளது. மனிதாபிமான உதவிகள் வர்த்தக பொருட்கள் காசாவில் நுழைவதை இஸ்ரேல் கடுமையாக கட்டுப்படுத்தியமையும்   பொதுமக்கள் இடம்பெயர்வு மற்றும் உட்கட்டமைப்புகள் அழிக்கப்பட்டமை போன்ற காரணங்களாலேயே காசாவில் பட்டினி நிலை  உருவாகியுள்ளது என ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் தெரிவித்திருப்பதையும் சர்வதேச நீதிமன்றம்  சுட்டிக்காட்டியுள்ளது. https://www.virakesari.lk/article/179954
    • தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - கிட்ணண் செல்வராஜ் Published By: VISHNU   29 MAR, 2024 | 01:56 AM 1700 ரூபா எனும் வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணண் செல்வராஜ் தெரிவித்தார். சம்பள விவகாரம் தொடர்பில் பெருந்தோட்டத்  தொழிலாளர்களை தெளிவூட்டும் வகையில் இன்று வியாழக்கிழமை (28) ஹப்புத்தளை பிட்டரத்தமலையில் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டன. அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கம் இதனை ஏற்பாடு செய்திருந்தது.  இதன்போதே அகில இலங்கைத் தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் கிட்ணன் செல்வராஜ் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “சம்பள நிர்ணய சபைக்கு 2000 ரூபா அடிப்படை சம்பளத்தை வழங்குவதற்கு ஏதுவான பிரேரணை கொண்டுசெல்லப்பட வேண்டும். அவ்வாறு கொண்டு செல்லும் பொழுது அகில இலங்கை தோட்டத் தொழிலாளர் சங்கமாகிய நாங்கள் முழுமையான ஆதரவினை தருவோம். அதைவிடுத்து 1700 ரூபாவுக்குள் தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை வரையறுக்கக் கூடாது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதிக்கு ஒரு நாளைக்கு 1700 ரூபாவை சம்பளமாக வழங்கினால் போதுமா? அதுப்போல அரசியல்வாதிகளுக்கு நாட்சம்பளமாக 1700 ரூபா வழங்கினால் போதுமா?  அதனால் 1700 ரூபா என்ற வசனத்தை ஒதுக்கி வைத்துவிட்டு, தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000 ரூபாவை வழங்குவதற்கு ஏதுவான நடவடிக்கைகளை அரசாங்கமும், அரசாங்கத்தோடு தூணாகவிருக்கும் மலையகத்தின் பினாமி அமைச்சரும் தொழிற்சங்கத் தலைவர்களும் உடனடியாக முன்னெடுக்க வேண்டும்.” என்று மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179943
    • Published By: VISHNU   29 MAR, 2024 | 01:27 AM கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் கிளிநொச்சி பாரதிபுர செபஸ்ரியார் வீதியின் பாலம் புனரமைத்தலுக்கான அடிக்கல் நாட்டு விழா வியாழக்கிழமை (28) இடம்பெற்றிருந்தது. குறித்த நிகழ்வில்  கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், வன்னி பாராளுமன்ற உறுப்பினர் திலீபன், ஒப்பந்ததாரர்கள், பிரதேச செயலாளர்கள், கிராம மக்கள் மற்றும் வீதி அதிகார சபை உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் அவர்களினால் பாலம் புனரமைப்புக்கான திரைநீக்கம் செய்யப்பட்டு பின் பால புனரைப்புக்கான அடிக்கல்லும் நாட்டி வைத்தார்.குறித்த பாலமானது 15,329,888.18 நிதி பங்களிப்பில் 90நாட்கள் ஒப்பந்த அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட கல்மடு நகர் பகுதியில் அமைந்துள்ள மூலிகைப் பண்ணையின்  பிரதான வீதியினை புனரமைப்பதாகவும் அதற்குரிய நிதியினை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படுவதாகவும் தெரிவித்து அத்துடன் மேலும் தெரிவிக்கையில் பல சிறிய பாலங்கள் உடனடியாக புனரிப்பு செய்வதற்கான நடவடிக்கையினை  உடன் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வேண்டுகோள் விடுத்ததுடன் இப்பகுதிகளில் உள்ள பலகிராமிய வீதிகளை புணரமைப்பு செய்வதற்குசம்பந்தப்பட்ட அமச்சுடன் கலந்துரையாடயிருப்பதாகவும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/179939
    • புவி வெப்பமயமாதலால், துருவப் பனிக்கட்டிகள் வேகமாக உருகி வருகின்றன. திடமான பனிக்கட்டி உருகுவதால் பூமியின் மையப்பகுதியில் ஏற்படும் மாற்றங்கள் காரணமாக பூமியின் சுழற்சி வேகம் அதிகரித்து அதன் மூலம் பூமியின் நேரம் மாறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், இன்னும் சில ஆண்டுகளில் பூமியின் நேரம் ஒரு நாளைக்கு ஒரு நொடி வீதம் குறையும் என்று விஞ்ஞானிகள் தற்போது கணித்துள்ளனர் ஒரு வினாடி என்பது மிக குறுகிய காலப்பகுதி என்ற போதிலும், அது கணினி பயன்பாட்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர். https://thinakkural.lk/article/297441
    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.