Jump to content

வசந்த மண்டபத்துத் தெய்வங்கள்-(2)


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வசந்த மண்டபத்துத் தெய்வங்கள் (1) ஐப் பார்க்க....http://www.yarl.com/forum3/index.php?/topic/147924-%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-1/

 

blog-jeya-1-dsc_0167.jpg

 

சரி.. கதைக்கு வருவோம்!

 

விசரனின் தகப்பன் ஒரு தோட்டக்காரன்! பரம்பரை, பரம்பரையாய்க் குடும்ப நிலத்தில் தோட்டம் செய்து வருபவர்! மிளகாய், புகையிலை போன்ற காசுப்

பயிர்களுடன் தனது குடும்பத் தேவைக்காக கத்தரி, தக்காளி, பயத்தங்காய், பாகல் மற்றும் கொத்தவரங்காய் என்பனவற்றை நடுவதுடன் அவரது தோட்டம் முடிந்து விடும்! பரம்பரை நிலம் தவிர்த்து, ஒரு கிணறு, துலா, மண்வெட்டி, மற்றும் சில கடகங்களும், சில பட்டைகளும் தான் அவரது மூலதனம்! மிகவும் முக்கியமான முதலீடு அவரது ‘அயராத உழைப்பு' மட்டுமே! அதிகாலையில் ‘குருவிகள்' எழும்ப முன்பே எழுந்து விடுவதால்.. அவரது பெயரும் ‘குருவியர்' ஆகி விட்டது!

 

தாயாரைப் பற்றி அதிகம் கூறுவதற்கில்லை! அவருக்கும் ஒரு பெயர் உண்டு! அது தான் ‘குருவியம்மா'! குருவியம்மாவும் வெறுங்கையோட வந்த மனுசியில்லை!  அந்தக்காலத்திலேயே ‘மூலைக்கை’ வைச்ச வீடு அவவுக்குச் சீதனமாகக் கொடுக்கப்பட்டது! மனுசியும் அதை பெருமையாய் இடைக்கிடை எல்லாருக்கும் சொல்லிக்காட்டுவதுண்டு!

 

மூத்தவனைப் படிப்பிச்சுப் போடுவம் எண்டு ‘குருவியாரும்' தலை கீழாய் நிண்டு பார்த்தார்! இந்த மண்ணைக் கிழறுற வேலை, தன்னுடைய தலை முறையோட முடிஞ்சு போய் விட வேண்டுமென்பது அவரது இரகசியமான ஆசை! ஆனால் அதை வாய்விட்டு ஒருவரிடமும் சொல்லியதில்லை! ஏனெனில், குருவியாரின் நண்பரொருவர் தனது மகன் படிக்கிறானா என்று ஊர் வாத்தியாரிடம் கேட்க..... அவரும் சைக்கிளில் நின்று ஒரு காலை ஊன்றிய படி..வானத்தைப் பார்த்துக்கொண்டு… பானையில இருந்தால் தானே… அகப்பையில வரும் என்று முகத்திலடிச்சது போல கூறியது.. அவரை வாய் திறக்கவே விடவில்லை! அவ்வளவுக்கு வாத்திமாரின் ‘ஊக்குவிப்பு' அந்தக்காலத்தில் இருந்தது! எனவே தனது ஊரில் படிப்பிக்காமல், பக்கத்துக்கு ஊர்ப் பாடசாலைக்கு அனுப்பிப் படிப்பித்தார்! அவனும், ஊர் வாத்தியார் சொன்னதை உண்மையாக்கி விடுபவன் போல… அப்பு எனக்குப் படிப்பு ஏறுதில்லையணை, எங்கையாவது வெளிநாடுகளுக்குப் போய் உழைச்சுத் தங்கச்சியை ஒரு நல்ல இடத்தில கட்டிக் குடுக்கலாம் எண்டு நினைக்கிறன் எண்டு சொல்லிக் கொண்டு வந்தான்!

 

அவருக்கு வந்த கோவத்திலை… அடி செருப்பாலை என்று கூறியபடி.. ஒரு சுருட்டையும் எடுத்துக் கொண்டு வெளியால போய் விட்டார்!  அந்தச் சுருட்டுத்தான் அவரது ‘டென்ஷனைக்' கொஞ்சம் குறைக்கக் கூடிய சாமான் எண்டு அனுபவத்தில அவர் கண்டு பிடிச்சிருந்தார்! ஒரு சுருட்டைப் பத்தவைச்சு, அதை வாயில வைச்சு ஆழமாகப் புகையை இழுத்து விடும் போது.. ஒவ்வொரு இழுவைக்கும் அவரது ‘டென்ஷன்' கொஞ்சம் கொஞ்சமாய் இறங்கி வாறது வழமை!

 

கொஞ்சம் இருட்டின பிறகு வீட்டுக்குள்ளை வந்து.. கிணத்தடியில கால் முகத்தைக் கழுவிப் போட்டுக் குடிசை வாசலில் தொங்கிய தேங்காய்க் குடுவைக்குள்ளிருந்து ‘திருநீற்றை' எடுத்துச் சிவ..சிவா… என்ற படி நெற்றியில் தடவியபடி.. திண்ணையில் அமர்ந்தார்!

 

சிறிது நேரத்தில்  அவர் எதிர்பார்த்தது நடந்தது!

 

குசினிக்குள்ளிருந்து குருவியம்மா தேனீரோடு ‘என்னப்பா.. தம்பி சொல்லுறது சரி போலத் தானே கிடக்கு… என்ற படி.. குருவியருக்குப் பக்கத்தில் வந்து பவ்வியமாக, அமர்ந்து கொண்டார்!

 

“சரி.. இவர் வெளிநாட்டுக்குப் போய் என்னத்தை வெட்டிப் புடுங்கப் போறார்? உழுகிற மாடு.. ஊருக்குள்ளை விலை போகும் எண்டு சொல்லுவினம்! “

 

இல்லையப்பா. அங்க போய் அகதி எண்டு பதிஞ்சால்.. சும்மா காசு குடுப்பாங்களாம்! அப்பிடித்தான் எல்லாரும் இப்ப அங்கையிருந்து ஊருக்குக் காசனுப்புகினமாம்"

 

அப்ப.. இவர் அகதி எண்டு சொல்லுறதுக்கு.. இவருக்கு என்ன நடந்தது? மூண்டு நேரமும் வேளைக்கு வேளை விழுங்கிப் போட்டுத் திமிர் எடுத்த ஆக்கள் என்னெண்டு போய் அகதி எண்டிறது…?

 

எல்லாரும் அப்பிடித் தான் அப்பா செய்யினம்.. ஆமி அங்க அடிச்சான்.. இஞ்ச அடிச்சான் எண்டு சொல்லி பனையால விழுந்த காயத்தைக் காட்டிச் சனம் அகதியாகுதுகள். வெள்ளைக்காரனுக்கு பனையில ஆக்கள் ஏறி விழுகிறது என்னண்டப்பா.. தெரியும்?

 

அது சரி… இப்ப இவரை அனுப்பிறதுக்குக் காசுக்கு எங்கை போறது?

 

நீங்கள் கோவிக்க மாட்டீங்கள் எண்டு சத்தியம் பண்ணினால், நான் ஒரு வழி சொல்லுவன்!

 

சரி..சரி.. நீங்கெல்லாம் சேந்து முடிவு பண்ணினாப் பிறகு.. நான் கோவிச்சு எத்தைச் செய்யிறது?

 

உங்கட தோட்டத்தில மேற்குப் பக்கத்துத் துண்டைத் தனக்குத் தரச் சொல்லிச் சுப்பையர் கேட்டது உங்களுக்கு மறந்து போச்சே.. உங்களுக்கு வயசும் போகுது.. இந்தப் பெரிய தோட்டத்தை வைச்சு என்னண்டு சமாளிக்கப் போறியள்? பெடியளும் தோட்டப் பக்கம் போவாங்கள் எண்டு நான் நினைகேல்லை!

 

ம்ம்ம்ம்… என்று கொஞ்சநேரம் அமைதியாக இருந்தவர்… சரி ..சரி செயிறதைச் செய்து முடியுங்கோ என்ற படி.. கண்களை மூடியபடி.. கொஞ்ச நேரம். அப்படியே ஒரு வித தியான நிலையில் இருந்தார்.

 

ஒரு வேளை.. அவரது அப்பாவின் ஆவி அவரின்ர கண்ணுக்குள்ளை வந்து போகுதோ என்று குருவியம்மா தனக்குள் நினைத்துக் கொண்டாள்!

 

அடுத்த நாளே அவனை வெளிநாட்டுக்கு அனுப்புவதற்கான ஆயத்தங்களைக் குருவியம்மா ஆரம்பித்து விட்டாள்!

 

தோட்டக்காணியைச் சுப்பையருக்கு விற்பதை நினைக்கும் போதே... தன்னில் ஒரு பாதி.. பிரிந்து போவதாகவே குருவியார் உணர்ந்தார். ஆனால்..காணியை விற்பதை விடத் தனக்கு வேறு எந்த வழியும் இல்லை என்பதும் அவருக்கு நன்றாகத் தெரிந்தும் இருந்தது!

 

வீட்டுச் சுவர் முழுவதையும்.. தனது மூத்த மகனதும்.. மகளதும்..விவேகானந்த சபையால் வழங்கப் பட்ட சான்றிதழ்கள்.. வேறு வேறு நிறங்களில் அலங்கரித்துக் கொண்டிருந்தன!

 

நாளைக்கு மறக்காமல்.. ஞானம் ஸ்டூடியோவில போய் எல்லாரும் ஒரு படம் எடுத்து வைக்க வேணும் என்று தனக்குள் நினைத்துக்கொண்டார்!

 

சிறகு முளைச்சு ஒண்டு பறந்து போறனெண்டு வெளிக்கிட்டிடுது... நாளைக்குக் கூட்டுக்குத் திரும்பி வருமோ என்னவோ என்று தனக்குள் நினைத்துக்கொண்டார்!

 

பெடியன் போய் ஏதாவது உழைச்சு அனுப்பினால்.. மகளையும் எங்கையாவது நல்ல இடத்தில கட்டிக் கொடுக்கலாம்.. ஒரு தந்தையின் மனசு கணக்குப் போட்டது...!

 

இஞ்சை பார்.. ஆடறுக்க முன்னம் நான் என்னத்துக்கோ விலை கேக்கிறன்.. எண்டு தனக்கு தானே நினைத்துக் கொண்டவர்.. அப்படியே.. திண்ணையிலிருந்த படியே நித்திரையாகி விட்டார்!

 

 

 

தொடரும்…!

 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
அவரும் சைக்கிளில் நின்று ஒரு காலை ஊன்றிய படி..வானத்தைப் பார்த்துக்கொண்டு… பானையில இருந்தால் தானே… அகப்பையில வரும்
உந்த திமிர் எங்கன்ட சனத்திற்க்கு கொஞ்சம் அதிகமாக இருக்கு ...மிகுதியை தொடருங்கோ .....அதுசரி நீங்கள் எப்ப சிட்னியில் புத்தக வெளீயீடு செய்யிற யோசனை?
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் எம் மண்ணின் மறக்க முடியாத பக்கங்களை. அடுத்த பகுதிக்காகக் காத்திருக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புங்கையின் கதையை இப்போது தான் வாசித்தேன்.
எங்கள் ஊரிலும் ரஸ்யாக்காரன் எண்ணை தேடினவன்.
ஆனால் வெண்ணெயும் கிடைக்கவில்லை. :D

தொடருங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புங்கையின் கதையை இப்போது தான் வாசித்தேன்.

எங்கள் ஊரிலும் ரஸ்யாக்காரன் எண்ணை தேடினவன்.

ஆனால் வெண்ணெயும் கிடைக்கவில்லை. :D

தொடருங்கள்

 

மோராவது அவனுக்குக் குடுத்து அனுப்பியிருக்கலாமே வாத்தியார் :D

 

சிட்நீலையும் இப்பிடி விளக்குமாறாலதான் நிலம் கூட்டுறநீங்களோ???? புங்கை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உந்த திமிர் எங்கன்ட சனத்திற்க்கு கொஞ்சம் அதிகமாக இருக்கு ...மிகுதியை தொடருங்கோ .....அதுசரி நீங்கள் எப்ப சிட்னியில் புத்தக வெளீயீடு செய்யிற யோசனை?

இந்த விதமான திமிர் எங்கையிருந்து வந்தது எண்டது தான் எனக்கும் தெரியேல்லை புத்தன்!

 

புத்தக வெளியீடா? :o

 

நாங்கள் நவீன காலத்து இலக்கியம் தான்!  :lol:

 

புத்தகங்களை எழுத, அவற்றைக் கறையான் அரிக்க.. அவற்றுக்கு உயிர் கொடுக்க சேக்கிழாரும் இல்லை.. ராஜேந்திர சோழனும் இல்லை!

 

விண் வெளிக்கு, லைக்காவை அனுப்பின மாதிரி, புத்தனை முன்னால விட்டுப்.. பின்னால வருவம் எண்டு யோசிக்கிறன்! :icon_idea:

தொடருங்கள் எம் மண்ணின் மறக்க முடியாத பக்கங்களை. அடுத்த பகுதிக்காகக் காத்திருக்கிறேன்.

நன்றிகள் காவலூர் கண்மணி !

 

இனித்தான் 'கிளைமாக்ஸ்' இருக்குது..!

 

தங்கள் போன்றவர்களின் ஊக்குவிப்பு, மேலும் எழுதும் ஆவலைத் தூண்டுகின்றது!

 

தொடர்ந்து இணைந்திருங்கள்!

Link to comment
Share on other sites

வணக்கம் புங்கை,

 

இன்றுதான் முதலாம் இரண்டாம் அங்கங்களை வாசிக்க நேரம் கிடைத்தது. தொடரை முழுமையாக வாசித்த பின் கருத்தெழுதுகின்றேன்... கெதியாய் எழுதுங்கோ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

--------

சிறகு முளைச்சு ஒண்டு பறந்து போறனெண்டு வெளிக்கிட்டிடுது... நாளைக்குக் கூட்டுக்குத் திரும்பி வருமோ என்னவோ என்று தனக்குள் நினைத்துக்கொண்டார்!

 

பெடியன் போய் ஏதாவது உழைச்சு அனுப்பினால்.. மகளையும் எங்கையாவது நல்ல இடத்தில கட்டிக் கொடுக்கலாம்.. ஒரு தந்தையின் மனசு கணக்குப் போட்டது...!

 

இஞ்சை பார்.. ஆடறுக்க முன்னம் நான் என்னத்துக்கோ விலை கேக்கிறன்.. எண்டு தனக்கு தானே நினைத்துக் கொண்டவர்.. அப்படியே.. திண்ணையிலிருந்த படியே நித்திரையாகி விட்டார்!

 

தொடரும்…!

 

அடுத்த பகுதியை... வாசிக்க கடந்த எட்டு நாட்களாக காவல் இருக்கிறோம்.

எங்க, பொறுமையை.... ரொம்ப சோதிக்காதிங்க புங்கை. :rolleyes:

Link to comment
Share on other sites

வணக்கம் புங்கை,

 

இன்றுதான் முதலாம் இரண்டாம் அங்கங்களை வாசிக்க நேரம் கிடைத்தது. தொடரை முழுமையாக வாசித்த பின் கருத்தெழுதுகின்றேன்... கெதியாய் எழுதுங்கோ

நிழலி போலத்தான் நானும் புங்கை கதையை முடியுங்கோ அதன்பிறகு கருத்து எழுதுகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரோமியோ வாய்க்கால் வரப்பிலா எல்லாரையும் வரிசைகட்டி கூட்டிப்போறீங்க பார்வைக்கு எட்டின மட்டும் பசுமைகளால் நிறைஞ்சிருக்கு.... கதை இரம்மியமாக பசுமையான நிலையில் நகர்கிறது ..... :rolleyes:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 2 ஆவது சந்திர இரவை கடந்து விழித்தெழுந்த ஜப்பானிய விண்கலம் Published By: SETHU   28 MAR, 2024 | 12:12 PM   சந்திரனுக்கு ஜப்பான் அனுப்பிய விண்கலம், இரண்டாவது சந்திர இரவிலும் வெற்றிகரமாக தாக்குப்பிடித்தபின் மீண்டும் விழித்தெழுந்துள்ளதுடன் பூமிக்கு புதிய படங்களையும் அனுப்பியுள்ளது. ஜப்பான் அனுப்பிய SLIM எனும் ஆளில்லா விண்கலம் கடந்த ஜனவரி 19 ஆம் திகதி, சந்திரனில் தரையில் வெற்றிரகமாக தரையிறங்கியது. இதன் மூலம் இச்சாதனையைப் புரிந்த 5 ஆவது நாடாகியது ஜப்பான்.  கடும் குளிரான சந்திரமண்டல இரவுக்காலத்தை வெற்றிரமாக கடந்த பின்னர் கடந்த பெப்ரவரி 25 ஆம் திகதி இவ்விண்கலம் விழித்தெழுந்து மீண்டும் இயங்கத் தொடங்கியது.  சந்தரனில் ஓர் இரவு என்பது பூமியின் 14 நாட்களுக்கு சமமான காலமாகும். பின்னர் இரண்டாவது சந்திர இரவையும் வெற்றிரமாக கடந்த பின்னர் இன்று வியாழக்கிழமை மீண்டும் அவ்விண்கலம் விழித்தெழுந்ததுடன் பூமிக்கு புதிய படங்களை அபுப்pயயுள்ளதாக ஜப்பானிய விண்வெளி முகவரகம் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/179891
    • 28 MAR, 2024 | 09:33 PM   இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் சில்வெஸ்டர் வோர்திங்டன்( SYLVESTER WORTHINGTON) வடக்கு விஜயத்தின் ஒரு பகுதியாக  இன்று வியாழக்கிழமை (28)  காலை மன்னாருக்கான விஜயம் மேற்கொண்டார் .  இந்த நிலையில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் ஏற்பாட்டில் பாதிக்கப்பட்டவர்கள், மனித உரிமைகள் செயற் பாட்டாளர்களை ஒன்றிணைத்து இடம்பெற்ற விசேட சந்திப்பில் கலந்து கொண்டார்.   குறித்த சந்திப்பில் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் சட்டத்தரணி ரனித்தா ஞானராஜ் உள்ளடங்களாக மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலைய பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.    குறித்த கலந்துரையாடலின் போது அவுஸ்திரேலியாவின் நிதி உதவியுடன் திட்டங்கள் அமுல் படுத்தப்பட்ட நிறுவனங்களுடன் கலந்துரையாடல் நடத்தப்பட்ட நிலையில் மன்னார் மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான நிலையத்தின் அலுவலகத்தில் பயனாளிகளுடன் கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன் போது காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டவர்கள் உடன் அவர்களின் என்னக் கருத்துக்களையும் கேட்டறிந்தார். மேலும் மன்னாரில் பால்நிலை அடிப்படையிலான வன் முறைகளும் பெண்கள் எதிர் நோக்குகின்ற பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது .  https://www.virakesari.lk/article/179920
    • காஸா போர்: ஐ.நா தீர்மானத்தால் இஸ்ரேல் தனிமைப்படுத்தப்படுகிறதா? அமெரிக்கா கூறுவது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி கட்டுரை தகவல் எழுதியவர், டேவிட் கிரிட்டன் பதவி, பிபிசி நியூஸ் 7 மணி நேரங்களுக்கு முன்னர் காஸாவில் இஸ்ரேலுடனான போர் நிறுத்தத்திற்கான தற்போதைய முன்மொழிவை ஹமாஸ் நிராகரித்துள்ளதாக இஸ்ரேல் கூறியுள்ளது. உடனடி போர் நிறுத்தம் கோரிய ஐ.நா பாதுகாப்பு சபையின் தீர்மானம் 'சேதத்தை' ஏற்படுத்தியுள்ளது என்பதை இது காட்டுகிறது. பாலத்தீன ஆயுதக் குழுவின் ஏற்க முடியாத கோரிக்கைகளுக்கு இஸ்ரேல் அடிபணியாது என்று பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது. காஸாவில் இருந்து இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் முழுமையாக வெளியேற வேண்டும் என்றும், போரை நிறுத்தவும் ஹமாஸ் கோரிக்கை விடுத்துள்ளதாக இஸ்ரேல் கூறுகிறது. அதேநேரம் இஸ்ரேலின் அறிக்கை கிட்டத்தட்ட எல்லா விஷயங்களிலும் தவறானது என்று அமெரிக்கா கூறியுள்ளது. திங்கட்கிழமை ஐ.நா. பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பு நடப்பதற்கு முன்னதாகவே ஹமாஸின் அறிக்கை தயாரிக்கப்பட்டதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வலியுறுத்தியுள்ளார். ஹமாஸ் ராணுவப் பிரிவின் துணைத் தலைவர் மர்வான் இசா இரண்டு வாரங்களுக்கு முன்னர் நுசைரத் அகதிகள் முகாமின் சுரங்கப்பாதை வளாகத்தில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதை உறுதி செய்திருப்பதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.   24 மணிநேரத்தில் 81 பேர் பலி பட மூலாதாரம்,REUTERS “உளவுத்துறை அறிக்கைகள் அனைத்தையும் நாங்கள் சரிபார்த்தோம். மார்வான் இசா வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார்,” என்று இதுகுறித்து இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி தெரிவித்தார். இஸ்ரேல் தெரிவிப்பதில் தனக்கு 'நம்பிக்கை இல்லை என்றும் அந்த அமைப்பின் ராணுவத் தலைமை மட்டுமே இதுகுறித்து 'இறுதியாக ஏதாவது சொல்லும்' என்றும் ஹமாஸ் அரசியல் தலைவரான இஸாத் அல் ரிஷ்க் கூறுகிறார். இசா இந்தக் குழுவின் 'மூன்றாம் நிலையில் இருக்கும் தலைவர்' என்றும், அக்டோபர் 7ஆம் தேதி தெற்கு இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் 'முக்கிய ஏற்பாட்டாளர்களில் ஒருவர்' அவர் என்றும் ரியர் அட்மிரல் ஹகாரி கூறியுள்ளார். இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலில், 1,200 பேர் கொல்லப்பட்டனர், 253 பேர் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து இஸ்ரேல் காஸாவில் பதில் தாக்குதல் மேற்கொண்டது. காஸாவில் இதுவரை 32,400க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாகவும், கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 81 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ஹமாஸ் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. காஸாவில் போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாக முட்டுக்கட்டை நிலவி வருகிறது. காஸாவில் உடனடியாக போர் நிறுத்தத்தை அமல்படுத்த ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் முதன்முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு எதிராக இஸ்ரேல் கடும் எதிர்வினையைப் பதிவு செய்துள்ளது.   தீர்மானத்தில் ஹமாஸை கண்டனம் செய்வது பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பின் போது அமெரிக்கா வாக்களிக்கவில்லை. இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக பிரிட்டன் உட்பட 14 பாதுகாப்பு சபை உறுப்பினர்கள் வாக்களித்தனர். போர் நிறுத்தம், மீதமுள்ள பிணைக் கைதிகளை நிபந்தனையின்றி விடுவித்தல் மற்றும் மனிதாபிமான உதவியை விரிவுபடுத்துதல் ஆகியவை இந்தத் தீர்மானத்தில் அடங்கும். இஸ்ரேலின் நெருங்கிய கூட்டாளியும் ராணுவ ஆதரவாளருமான அமெரிக்கா, அக்டோபர் 7 தாக்குதலுக்கு ஹமாஸை கண்டிக்கத் தவறிய தீர்மானத்தை விமர்சித்துள்ளது. இருப்பினும் இஸ்ரேலின் போர் முறைகள் தொடர்பாக அதிகரித்து வரும் கோபம் காரணமாக இந்தத் தீர்மானத்தின் மீது வாக்களிப்பதில் இருந்து அமெரிக்கா விலகிக் கொண்டது. ஆனால் அமெரிக்கா இந்தப் போரின் முக்கிய நோக்கங்களுக்கு முழு ஆதரவளிப்பதாகக் கூறியது. இந்த முன்மொழிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இஸ்ரேல், வாஷிங்டனுக்கான தனது தூதுக்குழுவின் பயணத்தை ரத்து செய்துள்ளது. காஸாவின் தெற்கு நகரமான ரஃபாவில் தரைவழித் தாக்குதலை நடத்துவதற்கான திட்டத்தைப் பற்றி விவாதிக்க தூதுக்குழு அங்கு செல்வதாக இருந்தது. தற்போது 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் ரஃபாவில் தஞ்சமடைந்துள்ளனர். முழு அளவிலான தாக்குதல் மனித பேரழிவாக நிரூபிக்கப்படலாம் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. பின்னர் ஹமாஸ் போர் நிறுத்த திட்டத்தை நிராகரித்து அறிக்கை வெளியிட்டது. அமெரிக்கா, கத்தார் மற்றும் எகிப்து நாடுகளின் மத்தியஸ்தத்துடன் தோஹாவில் நடைபெற்ற மறைமுக பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்தத் திட்டம் உருவானது. "நிரந்தர போர் நிறுத்தத்துடன்" காஸாவில் இருந்து இஸ்ரேலிய படைகள் முற்றிலுமாக வெளியேறவும், இடம்பெயர்ந்த பாலத்தீனியர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பவும் அழைப்பு விடுத்த தன் அசல் கோரிக்கையைத் தான் பற்றி நிற்பதாக ஹமாஸ் கூறியது. ஹமாஸின் நிலைப்பாடு, 'பேச்சுவார்த்தை மூலமான ஒப்பந்தத்தில் அதற்கு எந்த ஆர்வமும் இல்லை என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. கூடவே ஐ.நா. பாதுகாப்பு சபையின் தீர்மானத்தால் ஏற்பட்ட சேதத்தை உறுதிப்படுத்துகிறது,” என்று செவ்வாய்கிழமை காலை இஸ்ரேலிய பிரதம மந்திரி அலுவலகம் தெரிவித்தது. ஹமாஸின் திசை திருப்பும் கோரிக்கைகளை இஸ்ரேல் ஏற்றுக் கொள்ளாது என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. "ஹமாஸின் ராணுவ மற்றும் அரசாங்க திறன்களை அழித்தல், எல்லா பிணைக் கைதிகளையும் விடுவித்தல், காஸா, இஸ்ரேலிய மக்களுக்கு எதிர்கால அச்சுறுத்தலை ஏற்படுத்தாததை உறுதி செய்தல் போன்றவற்றை உள்ளடக்கிய தனது போர் நோக்கங்களை இஸ்ரேல் தொடர்ந்து அடையும்," என்றும் அறிக்கை தெரிவிக்கிறது.   இஸ்ரேலின் பேச்சுவார்த்தைக் குழு திரும்பிவிட்ட செய்தி பட மூலாதாரம்,EPA-EFE/REX/SHUTTERSTOCK அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் இந்த விமர்சனங்களை நிராகரித்துள்ளார். "இந்த அறிக்கை கிட்டத்தட்ட எல்லா வகையிலும் தவறானது. பிணைக் கைதிகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு இது நியாயம் இல்லாதது" என்று அவர் வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் கூறினார்.“செய்தி அறிக்கைகள் மூலம் ஹமாஸின் எதிர்வினை பற்றிய தகவல்கள் பகிரங்கமாயின. ஆனால் அவர்களது பதிலின் உண்மையான சாராம்சம் இதுவல்ல. இந்த எதிர்வினை ஐநா பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்புக்கு முன் தயாரிக்கப்பட்து, அதற்குப் பிறகு அல்ல என்று என்னால் கூற முடியும்,” என்றார் அவர். கத்தாரின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாஜித் அல்-அன்சாரி தோஹாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், மறைமுகப் பேச்சுவார்த்தைகள் நிறுத்தப்படவில்லை, அவை தொடர்கின்றன என்றார். "பேச்சுவார்த்தைகளுக்கான கால அட்டவணை எதுவும் இல்லை. ஆனால் நாங்கள் எங்கள் கூட்டாளர்களுடன் பேச்சுவார்த்தை முயற்சிகளைத் தொடர்ந்து செய்து வருகிறோம்," என்று அவர் கூறினார். ஆனால் 10 நாட்கள் பேச்சுவார்த்தைக்குப் பிறகு இஸ்ரேல் தனது பேச்சுவார்த்தைக் குழுவைத் திரும்ப அழைத்ததாக இஸ்ரேலிய அதிகாரிகளை மேற்கோள் காட்டி இஸ்ரேலிய ஊடகங்களும் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையும் தெரிவித்துள்ளன. இரானுக்கு பயணம் மேற்கொண்ட ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியா, இஸ்ரேல் முன்னெப்போதும் இல்லாத வகையில் அரசியல் தனிமையை எதிர்கொள்வதை ஐ.நா.பாதுகாப்பு சபையின் தீர்மானம் காட்டுவதாகத் தெரிவித்தார். கடந்த ஆண்டு நவம்பர் மாத இறுதியில் ஒரு வார கால போர் நிறுத்தத்தின் போது இஸ்ரேலிய சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த சுமார் 240 பாலத்தீன கைதிகள் 105 இஸ்ரேலிய பிணைக் கைதிகளுக்கு ஈடாக விடுவிக்கப்பட்டனர். ஹமாஸ் நிராகரித்த புதிய ஒப்பந்தம், ஆறு வாரங்களுக்கு போர் நிறுத்தத்தை முன்மொழிந்ததாகக் கூறப்படுகிறது. கூடவே 800 பாலத்தீன கைதிகளுக்கு ஈடாக ஹமாஸால் பிடிக்கப்பட்ட 40 இஸ்ரேலிய பிணைக் கைதிகளை விடுவிப்பதும் இதில் அடங்கும். ஆனால் காஸாவில் போரில் தோல்வியை ஏற்கும் அறிகுறி இன்னும் தெரியவில்லை. சமீபத்திய இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் பல டஜன் பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. ரஃபாவின் புறநகரில் உள்ள குடியிருப்பு கட்டடத்தின் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் ஒன்பது குழந்தைகள் உட்பட குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டதாக பாலத்தீன ஊடகங்களும் உள்ளூர் சுகாதார ஊழியர்களும் கூறுகின்றனர். முசாபா பகுதியில் உள்ள அபு நக்கீராவின் வீட்டில் டஜன் கணக்கான இடம்பெயர்ந்த மக்கள் தஞ்சம் அடைந்திருந்தனர் என்றும் கூறப்பட்டது. காஸா நகரில் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே வான்வழித் தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டதாக வடக்கு காஸாவில் உள்ள அபு ஹசிரா குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் தெரிவித்தனர். கடந்த 24 மணிநேரத்தில் 60 இலக்குகளைக் குறிவைத்ததாகவும், 'பயங்கரவாத சுரங்கப்பாதைகள், பயங்கரவாத உள்கட்டமைப்புகள் மற்றும் ராணுவ உள்கட்டமைப்புகள்' இதில் அடங்கும் என்றும் இஸ்ரேலிய ராணுவம் செவ்வாய்கிழமை காலை தெரிவித்தது. இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினர் 'அல்-ஷிஃபா மருத்துவமனை பகுதியில் துல்லியமான தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்' என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.   மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும் போது 18 பேர் கொல்லப்பட்டனர் பட மூலாதாரம்,REUTERS கடுமையான சண்டை காரணமாக நோயாளிகள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் இடம்பெயர்ந்த மக்கள் ஆபத்தில் இருப்பதாக பாலத்தீனர்கள் மற்றும் உதவிக் குழுக்கள் தெரிவித்துள்ளன. 175 'பயங்கரவாதிகள்' கொல்லப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்றும் ராணுவம் தெரிவித்துள்ளது. வடக்கு காஸாவில் விமானத்தில் இருந்து போடப்பட்ட மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும்போது 18 பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாக காஸாவில் உள்ள ஹமாஸின் அரசு ஊடக அலுவலகம் செவ்வாயன்று கூறியது. உணவுப் பொட்டலங்களைச் சேகரிக்கும்போது 12 பேர் கடலில் மூழ்கி இறந்தனர். அதேநேரம் பொருட்களை எடுக்கும்போது ஏற்பட்ட ' கூட்ட நெரிசலில்' சிக்கி ஆறு பேர் இறந்தனர் என்று கூறப்பட்டது. இந்த அறிக்கையில் மேலதிக தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. திங்களன்று வடக்கு நகரமான பைட் லாஹியாவில் கடற்கரைக்கு அருகே ஏர் டிராப்பின் போது குறைந்தது ஒரு நபராவது நீரில் மூழ்கியதை வீடியோ காட்சிகள் காட்டின. திங்களன்று அமெரிக்க விமானம் வடக்கு காஸாவில் 18 மனிதாபிமான உதவிப் பொட்டலங்களைப் போட்டதாக பென்டகனை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் தெரிவித்தது. ஆனால் பாராசூட்டில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அவை தண்ணீருக்குள் விழுந்தன. ஆனால் யாரும் உயிரிழந்ததை உறுதிப்படுத்த முடியவில்லை. இஸ்ரேலிய பிணைக் கைதி யூரியல் பரூச் கொல்லப்பட்டதாகவும், அவரது உடல் ஹமாஸிடம் இருப்பதாகவும் இஸ்ரேலிய ராணுவம் அவரது குடும்பத்திடம் கூறியதாக பிணைக்கைதிகள் மற்றும் காணாமல் போன குடும்பங்களின் மன்றம் தெரிவிக்கிறது. 35 வயதான, இரண்டு பிள்ளைகளின் தந்தையான பரூச், அக்டோபர் 7ஆம் தேதி சூப்பர்நோவா இசை விழாவின் போது காயமடைந்தார். பின்னர் அவர் கடத்தப்பட்டார். அதே நேரத்தில் காஸாவில் ஒரு காவலர் துப்பாக்கி முனையில் தன்னை பாலியல் வன்புணர்வு செய்ததாக நவம்பரில் விடுவிக்கப்பட்ட ஒரு பெண் பிணைக் கைதி நியூயார்க் டைம்ஸ் செய்தித்தாளிடம் கூறினார். நாற்பது வயதான அமித் சுசானா தான் சிறைப்பிடிக்கப்பட்ட போது பாலியல் வன்முறைக்கு ஆளானதாகத் தெரிவித்ததாக செய்தித்தாள் குறிப்பிடுகிறது. பிணைக் கைதிகள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டதற்கான தெளிவான மற்றும் உறுதியான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும், "அத்தகைய வன்முறை தொடரக்கூடும் என்று நம்புவதற்கு நியாயமான காரணங்கள் உள்ளன," என்றும் இந்த மாதத் தொடக்கத்தில் ஐ.நா குழு கூறியது. https://www.bbc.com/tamil/articles/cv2y4zzp76mo
    • பெரிய‌வ‌ரே நாம் த‌மிழ‌ர் க‌ட்சி 2021 ச‌ட்ட‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் பெற்ற‌ ஓட்டு ச‌த‌ வீத‌ம் 6:75 8ச‌த‌வீத‌ வாக்கு எடுத்து இருந்தா அங்கிக‌ரிக்க‌ ப‌ட்ட‌ க‌ட்சியாய் மாறி இருக்கும்...............இது கூட‌ தெரிய‌ வில்லை என்றால் உங்க‌ளுக்கு நாம் த‌மிழ‌ர் க‌ட்சியின் கொள்கை எப்ப‌டி தெரியும்...........சீமானுக்கு எதிரா எழுதுப‌வ‌ர்க‌ளின் க‌ருத்தை வாசிப்ப‌தில் உங்க‌ளுக்கு எங்கையோ த‌னி சுக‌ம் போல் அது தான் குறுக்க‌ ம‌றுக்க‌ எழுதுறீங்க‌ள்😁😜..............
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.