Jump to content

வசந்த மண்டபத்துத் தெய்வங்கள்-(2)


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வசந்த மண்டபத்துத் தெய்வங்கள் (1) ஐப் பார்க்க....http://www.yarl.com/forum3/index.php?/topic/147924-%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-1/

 

blog-jeya-1-dsc_0167.jpg

 

சரி.. கதைக்கு வருவோம்!

 

விசரனின் தகப்பன் ஒரு தோட்டக்காரன்! பரம்பரை, பரம்பரையாய்க் குடும்ப நிலத்தில் தோட்டம் செய்து வருபவர்! மிளகாய், புகையிலை போன்ற காசுப்

பயிர்களுடன் தனது குடும்பத் தேவைக்காக கத்தரி, தக்காளி, பயத்தங்காய், பாகல் மற்றும் கொத்தவரங்காய் என்பனவற்றை நடுவதுடன் அவரது தோட்டம் முடிந்து விடும்! பரம்பரை நிலம் தவிர்த்து, ஒரு கிணறு, துலா, மண்வெட்டி, மற்றும் சில கடகங்களும், சில பட்டைகளும் தான் அவரது மூலதனம்! மிகவும் முக்கியமான முதலீடு அவரது ‘அயராத உழைப்பு' மட்டுமே! அதிகாலையில் ‘குருவிகள்' எழும்ப முன்பே எழுந்து விடுவதால்.. அவரது பெயரும் ‘குருவியர்' ஆகி விட்டது!

 

தாயாரைப் பற்றி அதிகம் கூறுவதற்கில்லை! அவருக்கும் ஒரு பெயர் உண்டு! அது தான் ‘குருவியம்மா'! குருவியம்மாவும் வெறுங்கையோட வந்த மனுசியில்லை!  அந்தக்காலத்திலேயே ‘மூலைக்கை’ வைச்ச வீடு அவவுக்குச் சீதனமாகக் கொடுக்கப்பட்டது! மனுசியும் அதை பெருமையாய் இடைக்கிடை எல்லாருக்கும் சொல்லிக்காட்டுவதுண்டு!

 

மூத்தவனைப் படிப்பிச்சுப் போடுவம் எண்டு ‘குருவியாரும்' தலை கீழாய் நிண்டு பார்த்தார்! இந்த மண்ணைக் கிழறுற வேலை, தன்னுடைய தலை முறையோட முடிஞ்சு போய் விட வேண்டுமென்பது அவரது இரகசியமான ஆசை! ஆனால் அதை வாய்விட்டு ஒருவரிடமும் சொல்லியதில்லை! ஏனெனில், குருவியாரின் நண்பரொருவர் தனது மகன் படிக்கிறானா என்று ஊர் வாத்தியாரிடம் கேட்க..... அவரும் சைக்கிளில் நின்று ஒரு காலை ஊன்றிய படி..வானத்தைப் பார்த்துக்கொண்டு… பானையில இருந்தால் தானே… அகப்பையில வரும் என்று முகத்திலடிச்சது போல கூறியது.. அவரை வாய் திறக்கவே விடவில்லை! அவ்வளவுக்கு வாத்திமாரின் ‘ஊக்குவிப்பு' அந்தக்காலத்தில் இருந்தது! எனவே தனது ஊரில் படிப்பிக்காமல், பக்கத்துக்கு ஊர்ப் பாடசாலைக்கு அனுப்பிப் படிப்பித்தார்! அவனும், ஊர் வாத்தியார் சொன்னதை உண்மையாக்கி விடுபவன் போல… அப்பு எனக்குப் படிப்பு ஏறுதில்லையணை, எங்கையாவது வெளிநாடுகளுக்குப் போய் உழைச்சுத் தங்கச்சியை ஒரு நல்ல இடத்தில கட்டிக் குடுக்கலாம் எண்டு நினைக்கிறன் எண்டு சொல்லிக் கொண்டு வந்தான்!

 

அவருக்கு வந்த கோவத்திலை… அடி செருப்பாலை என்று கூறியபடி.. ஒரு சுருட்டையும் எடுத்துக் கொண்டு வெளியால போய் விட்டார்!  அந்தச் சுருட்டுத்தான் அவரது ‘டென்ஷனைக்' கொஞ்சம் குறைக்கக் கூடிய சாமான் எண்டு அனுபவத்தில அவர் கண்டு பிடிச்சிருந்தார்! ஒரு சுருட்டைப் பத்தவைச்சு, அதை வாயில வைச்சு ஆழமாகப் புகையை இழுத்து விடும் போது.. ஒவ்வொரு இழுவைக்கும் அவரது ‘டென்ஷன்' கொஞ்சம் கொஞ்சமாய் இறங்கி வாறது வழமை!

 

கொஞ்சம் இருட்டின பிறகு வீட்டுக்குள்ளை வந்து.. கிணத்தடியில கால் முகத்தைக் கழுவிப் போட்டுக் குடிசை வாசலில் தொங்கிய தேங்காய்க் குடுவைக்குள்ளிருந்து ‘திருநீற்றை' எடுத்துச் சிவ..சிவா… என்ற படி நெற்றியில் தடவியபடி.. திண்ணையில் அமர்ந்தார்!

 

சிறிது நேரத்தில்  அவர் எதிர்பார்த்தது நடந்தது!

 

குசினிக்குள்ளிருந்து குருவியம்மா தேனீரோடு ‘என்னப்பா.. தம்பி சொல்லுறது சரி போலத் தானே கிடக்கு… என்ற படி.. குருவியருக்குப் பக்கத்தில் வந்து பவ்வியமாக, அமர்ந்து கொண்டார்!

 

“சரி.. இவர் வெளிநாட்டுக்குப் போய் என்னத்தை வெட்டிப் புடுங்கப் போறார்? உழுகிற மாடு.. ஊருக்குள்ளை விலை போகும் எண்டு சொல்லுவினம்! “

 

இல்லையப்பா. அங்க போய் அகதி எண்டு பதிஞ்சால்.. சும்மா காசு குடுப்பாங்களாம்! அப்பிடித்தான் எல்லாரும் இப்ப அங்கையிருந்து ஊருக்குக் காசனுப்புகினமாம்"

 

அப்ப.. இவர் அகதி எண்டு சொல்லுறதுக்கு.. இவருக்கு என்ன நடந்தது? மூண்டு நேரமும் வேளைக்கு வேளை விழுங்கிப் போட்டுத் திமிர் எடுத்த ஆக்கள் என்னெண்டு போய் அகதி எண்டிறது…?

 

எல்லாரும் அப்பிடித் தான் அப்பா செய்யினம்.. ஆமி அங்க அடிச்சான்.. இஞ்ச அடிச்சான் எண்டு சொல்லி பனையால விழுந்த காயத்தைக் காட்டிச் சனம் அகதியாகுதுகள். வெள்ளைக்காரனுக்கு பனையில ஆக்கள் ஏறி விழுகிறது என்னண்டப்பா.. தெரியும்?

 

அது சரி… இப்ப இவரை அனுப்பிறதுக்குக் காசுக்கு எங்கை போறது?

 

நீங்கள் கோவிக்க மாட்டீங்கள் எண்டு சத்தியம் பண்ணினால், நான் ஒரு வழி சொல்லுவன்!

 

சரி..சரி.. நீங்கெல்லாம் சேந்து முடிவு பண்ணினாப் பிறகு.. நான் கோவிச்சு எத்தைச் செய்யிறது?

 

உங்கட தோட்டத்தில மேற்குப் பக்கத்துத் துண்டைத் தனக்குத் தரச் சொல்லிச் சுப்பையர் கேட்டது உங்களுக்கு மறந்து போச்சே.. உங்களுக்கு வயசும் போகுது.. இந்தப் பெரிய தோட்டத்தை வைச்சு என்னண்டு சமாளிக்கப் போறியள்? பெடியளும் தோட்டப் பக்கம் போவாங்கள் எண்டு நான் நினைகேல்லை!

 

ம்ம்ம்ம்… என்று கொஞ்சநேரம் அமைதியாக இருந்தவர்… சரி ..சரி செயிறதைச் செய்து முடியுங்கோ என்ற படி.. கண்களை மூடியபடி.. கொஞ்ச நேரம். அப்படியே ஒரு வித தியான நிலையில் இருந்தார்.

 

ஒரு வேளை.. அவரது அப்பாவின் ஆவி அவரின்ர கண்ணுக்குள்ளை வந்து போகுதோ என்று குருவியம்மா தனக்குள் நினைத்துக் கொண்டாள்!

 

அடுத்த நாளே அவனை வெளிநாட்டுக்கு அனுப்புவதற்கான ஆயத்தங்களைக் குருவியம்மா ஆரம்பித்து விட்டாள்!

 

தோட்டக்காணியைச் சுப்பையருக்கு விற்பதை நினைக்கும் போதே... தன்னில் ஒரு பாதி.. பிரிந்து போவதாகவே குருவியார் உணர்ந்தார். ஆனால்..காணியை விற்பதை விடத் தனக்கு வேறு எந்த வழியும் இல்லை என்பதும் அவருக்கு நன்றாகத் தெரிந்தும் இருந்தது!

 

வீட்டுச் சுவர் முழுவதையும்.. தனது மூத்த மகனதும்.. மகளதும்..விவேகானந்த சபையால் வழங்கப் பட்ட சான்றிதழ்கள்.. வேறு வேறு நிறங்களில் அலங்கரித்துக் கொண்டிருந்தன!

 

நாளைக்கு மறக்காமல்.. ஞானம் ஸ்டூடியோவில போய் எல்லாரும் ஒரு படம் எடுத்து வைக்க வேணும் என்று தனக்குள் நினைத்துக்கொண்டார்!

 

சிறகு முளைச்சு ஒண்டு பறந்து போறனெண்டு வெளிக்கிட்டிடுது... நாளைக்குக் கூட்டுக்குத் திரும்பி வருமோ என்னவோ என்று தனக்குள் நினைத்துக்கொண்டார்!

 

பெடியன் போய் ஏதாவது உழைச்சு அனுப்பினால்.. மகளையும் எங்கையாவது நல்ல இடத்தில கட்டிக் கொடுக்கலாம்.. ஒரு தந்தையின் மனசு கணக்குப் போட்டது...!

 

இஞ்சை பார்.. ஆடறுக்க முன்னம் நான் என்னத்துக்கோ விலை கேக்கிறன்.. எண்டு தனக்கு தானே நினைத்துக் கொண்டவர்.. அப்படியே.. திண்ணையிலிருந்த படியே நித்திரையாகி விட்டார்!

 

 

 

தொடரும்…!

 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
அவரும் சைக்கிளில் நின்று ஒரு காலை ஊன்றிய படி..வானத்தைப் பார்த்துக்கொண்டு… பானையில இருந்தால் தானே… அகப்பையில வரும்
உந்த திமிர் எங்கன்ட சனத்திற்க்கு கொஞ்சம் அதிகமாக இருக்கு ...மிகுதியை தொடருங்கோ .....அதுசரி நீங்கள் எப்ப சிட்னியில் புத்தக வெளீயீடு செய்யிற யோசனை?
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் எம் மண்ணின் மறக்க முடியாத பக்கங்களை. அடுத்த பகுதிக்காகக் காத்திருக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புங்கையின் கதையை இப்போது தான் வாசித்தேன்.
எங்கள் ஊரிலும் ரஸ்யாக்காரன் எண்ணை தேடினவன்.
ஆனால் வெண்ணெயும் கிடைக்கவில்லை. :D

தொடருங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புங்கையின் கதையை இப்போது தான் வாசித்தேன்.

எங்கள் ஊரிலும் ரஸ்யாக்காரன் எண்ணை தேடினவன்.

ஆனால் வெண்ணெயும் கிடைக்கவில்லை. :D

தொடருங்கள்

 

மோராவது அவனுக்குக் குடுத்து அனுப்பியிருக்கலாமே வாத்தியார் :D

 

சிட்நீலையும் இப்பிடி விளக்குமாறாலதான் நிலம் கூட்டுறநீங்களோ???? புங்கை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உந்த திமிர் எங்கன்ட சனத்திற்க்கு கொஞ்சம் அதிகமாக இருக்கு ...மிகுதியை தொடருங்கோ .....அதுசரி நீங்கள் எப்ப சிட்னியில் புத்தக வெளீயீடு செய்யிற யோசனை?

இந்த விதமான திமிர் எங்கையிருந்து வந்தது எண்டது தான் எனக்கும் தெரியேல்லை புத்தன்!

 

புத்தக வெளியீடா? :o

 

நாங்கள் நவீன காலத்து இலக்கியம் தான்!  :lol:

 

புத்தகங்களை எழுத, அவற்றைக் கறையான் அரிக்க.. அவற்றுக்கு உயிர் கொடுக்க சேக்கிழாரும் இல்லை.. ராஜேந்திர சோழனும் இல்லை!

 

விண் வெளிக்கு, லைக்காவை அனுப்பின மாதிரி, புத்தனை முன்னால விட்டுப்.. பின்னால வருவம் எண்டு யோசிக்கிறன்! :icon_idea:

தொடருங்கள் எம் மண்ணின் மறக்க முடியாத பக்கங்களை. அடுத்த பகுதிக்காகக் காத்திருக்கிறேன்.

நன்றிகள் காவலூர் கண்மணி !

 

இனித்தான் 'கிளைமாக்ஸ்' இருக்குது..!

 

தங்கள் போன்றவர்களின் ஊக்குவிப்பு, மேலும் எழுதும் ஆவலைத் தூண்டுகின்றது!

 

தொடர்ந்து இணைந்திருங்கள்!

Link to comment
Share on other sites

வணக்கம் புங்கை,

 

இன்றுதான் முதலாம் இரண்டாம் அங்கங்களை வாசிக்க நேரம் கிடைத்தது. தொடரை முழுமையாக வாசித்த பின் கருத்தெழுதுகின்றேன்... கெதியாய் எழுதுங்கோ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

--------

சிறகு முளைச்சு ஒண்டு பறந்து போறனெண்டு வெளிக்கிட்டிடுது... நாளைக்குக் கூட்டுக்குத் திரும்பி வருமோ என்னவோ என்று தனக்குள் நினைத்துக்கொண்டார்!

 

பெடியன் போய் ஏதாவது உழைச்சு அனுப்பினால்.. மகளையும் எங்கையாவது நல்ல இடத்தில கட்டிக் கொடுக்கலாம்.. ஒரு தந்தையின் மனசு கணக்குப் போட்டது...!

 

இஞ்சை பார்.. ஆடறுக்க முன்னம் நான் என்னத்துக்கோ விலை கேக்கிறன்.. எண்டு தனக்கு தானே நினைத்துக் கொண்டவர்.. அப்படியே.. திண்ணையிலிருந்த படியே நித்திரையாகி விட்டார்!

 

தொடரும்…!

 

அடுத்த பகுதியை... வாசிக்க கடந்த எட்டு நாட்களாக காவல் இருக்கிறோம்.

எங்க, பொறுமையை.... ரொம்ப சோதிக்காதிங்க புங்கை. :rolleyes:

Link to comment
Share on other sites

வணக்கம் புங்கை,

 

இன்றுதான் முதலாம் இரண்டாம் அங்கங்களை வாசிக்க நேரம் கிடைத்தது. தொடரை முழுமையாக வாசித்த பின் கருத்தெழுதுகின்றேன்... கெதியாய் எழுதுங்கோ

நிழலி போலத்தான் நானும் புங்கை கதையை முடியுங்கோ அதன்பிறகு கருத்து எழுதுகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரோமியோ வாய்க்கால் வரப்பிலா எல்லாரையும் வரிசைகட்டி கூட்டிப்போறீங்க பார்வைக்கு எட்டின மட்டும் பசுமைகளால் நிறைஞ்சிருக்கு.... கதை இரம்மியமாக பசுமையான நிலையில் நகர்கிறது ..... :rolleyes:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கூடா ந‌ட்ப்பு கேடா முடியும் என்று கலைஞர் சொன்னது 2011 நடுப்பகுதியில். திகார் சிறைச்சாலையில் அவரது மகள் கனிமொழி இருந்தினாலும் 2011  சட்டசபை தேர்தலில் படுதோல்வி அடைந்ததுக்கும் காரணதத்தினால்தான். 
    • ஒரு கொள்கை பற்றுள்ள தலைவன் தானும் தன் குடும்பமும் அந்த கொள்கை வழி நிண்டு காட்டல் வேண்டும். சகாயம், இஸ்ரோ விஞ்ஞானிகள், அப்துல் கலாம்….ஏன் சீமான் கூட, தமிழ் நாட்டில் தமிழ் மொழி மூலம் கல்வி கற்று வாழ்வில் நல்ல நிலையை அடைந்தோர் பலர் உள்ளனர். ஆகவே தமிழ் நாட்டில், தமிழ் வழி கல்வி அப்படி மோசமான ஒன்றல்ல. அப்படி இருந்தும் சீமான் ஆங்கில கல்வியை நாடியது அவரின் ஆங்கில மோகம், சுய நலத்தையே காட்டுகிறது.  தமிழ் மந்திர உச்சரிப்புக்கு போராடி விட்டு, மகனின் காது குத்தில் ஐயரை வைத்து சமஸ்கிருதத்தில் ஓதியது.  குடும்ப அரசியலை எதிர்த்து கொண்டே, மச்சானுக்கு சீட், மனைவிக்கு கட்சியில் பதவியில்லா அதிகாரம் வழங்கியது. அந்த வகையில் சீமானின் இன்னொரு தகிடு தத்தம்தான் இதுவும். கருணாநிதியை போலவே சீமானின் சொல்லுக்கும் செயலுக்கும் வெகுதூரம். தன் சுய நலத்துக்கு எதையும் மாற்றுவார். அவரை போலவே இவருக்கும் என்ன செய்தாலும் முட்டு கொடுக்கவும் சில கொத்தடிமைகள் இருக்கிறார்கள். #சின்ன கருணாநிதி இருக்கு. பெரிய கருணாநிதி பச்சை கள்ளன் என்பதே விடை. பொருந்தும். அச்சொட்டாக. ஏன் இல்லாமல்? தமிழ் தமிழ் என எல்லாரையும் ஏமாற்றிய கருணாநிதி குடும்ப பிள்ளைகள் ஆங்கில கல்வி கற்றதை நானும் பலரும் சிலாகித்து எழுதியுள்ளோமே. ஆகவே இந்த விடயத்தில் பெரிய கருணாநிதி கள்ளன் என்பதில் மாற்று கருத்தே இல்லை. இப்போ நான் கேட்கும் கேள்வி…. கருணாநிதி செய்ததை அப்படியே கொப்பி அடிக்கும் சீமான் கள்ளன் இல்லையா? # சின்ன கருணாநிதி
    • அடுத்த‌ பாராள‌ம‌ன்ற‌ தேர்த‌லில் ஸ்டாலின் தான் பிர‌த‌மரா போட்டி போடுவார் என்று அமெரிக்கா க‌னடா தொட்டு ப‌ல‌ நாட்டில்  க‌தை அடி ப‌டுது.....................துண்டறிக்கை பார்த்தே த‌மிழ‌ ஒழுங்காய் வாசிக்க‌ தெரியாது............ பிரத‌மர் ஆகினால் ஒட்டு மொத்த‌ உல‌க‌மே அதிரும் ஸ்டாலின் ஜயாவின் பேச்சை கேட்டு  😁😜................ வீட்டில் சீமான் பிள்ளைக‌ளுக்கு க‌ண்டிப்பாய் தூய‌ த‌மிழ் சொல்லிக் கொடுப்பார் அதில் எந்த ச‌ந்தேக‌மும் இல்லை யுவ‌ர் ஆன‌ர்.............ஆட்சிக்கு வ‌ராத‌ ஒருத‌ர‌ 68கேள்வி கேட்ப‌து எந்த‌ வித‌த்தில் ஞாய‌ம்...........ஒரு முறை ஆட்சி சீமான் கைக்கு போன‌ பிற‌க்கு அவ‌ர் த‌மிழை தமிழை வளர்க்கிறாரா அல்ல‌து திராவிட‌த்தை போல் தமிழை அழிக்கிறாரா என்று பின்னைய‌ காலங்களில் விவாதிக்க‌லாம்............இப்ப‌ அவ‌ர் எடுக்கும் அர‌சிய‌லை ப‌ற்றி விவ‌திப்ப‌து வ‌ர‌வேற்க்க‌ த‌க்க‌து...................
    • நோர்வே அனுமதித்தால் அங்கும் குரானை எரிக்கலாம்.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.