Jump to content

வசந்த மண்டபத்துத் தெய்வங்கள்-(2)


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

வசந்த மண்டபத்துத் தெய்வங்கள் (1) ஐப் பார்க்க....http://www.yarl.com/forum3/index.php?/topic/147924-%E0%AE%B5%E0%AE%9A%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-1/

 

blog-jeya-1-dsc_0167.jpg

 

சரி.. கதைக்கு வருவோம்!

 

விசரனின் தகப்பன் ஒரு தோட்டக்காரன்! பரம்பரை, பரம்பரையாய்க் குடும்ப நிலத்தில் தோட்டம் செய்து வருபவர்! மிளகாய், புகையிலை போன்ற காசுப்

பயிர்களுடன் தனது குடும்பத் தேவைக்காக கத்தரி, தக்காளி, பயத்தங்காய், பாகல் மற்றும் கொத்தவரங்காய் என்பனவற்றை நடுவதுடன் அவரது தோட்டம் முடிந்து விடும்! பரம்பரை நிலம் தவிர்த்து, ஒரு கிணறு, துலா, மண்வெட்டி, மற்றும் சில கடகங்களும், சில பட்டைகளும் தான் அவரது மூலதனம்! மிகவும் முக்கியமான முதலீடு அவரது ‘அயராத உழைப்பு' மட்டுமே! அதிகாலையில் ‘குருவிகள்' எழும்ப முன்பே எழுந்து விடுவதால்.. அவரது பெயரும் ‘குருவியர்' ஆகி விட்டது!

 

தாயாரைப் பற்றி அதிகம் கூறுவதற்கில்லை! அவருக்கும் ஒரு பெயர் உண்டு! அது தான் ‘குருவியம்மா'! குருவியம்மாவும் வெறுங்கையோட வந்த மனுசியில்லை!  அந்தக்காலத்திலேயே ‘மூலைக்கை’ வைச்ச வீடு அவவுக்குச் சீதனமாகக் கொடுக்கப்பட்டது! மனுசியும் அதை பெருமையாய் இடைக்கிடை எல்லாருக்கும் சொல்லிக்காட்டுவதுண்டு!

 

மூத்தவனைப் படிப்பிச்சுப் போடுவம் எண்டு ‘குருவியாரும்' தலை கீழாய் நிண்டு பார்த்தார்! இந்த மண்ணைக் கிழறுற வேலை, தன்னுடைய தலை முறையோட முடிஞ்சு போய் விட வேண்டுமென்பது அவரது இரகசியமான ஆசை! ஆனால் அதை வாய்விட்டு ஒருவரிடமும் சொல்லியதில்லை! ஏனெனில், குருவியாரின் நண்பரொருவர் தனது மகன் படிக்கிறானா என்று ஊர் வாத்தியாரிடம் கேட்க..... அவரும் சைக்கிளில் நின்று ஒரு காலை ஊன்றிய படி..வானத்தைப் பார்த்துக்கொண்டு… பானையில இருந்தால் தானே… அகப்பையில வரும் என்று முகத்திலடிச்சது போல கூறியது.. அவரை வாய் திறக்கவே விடவில்லை! அவ்வளவுக்கு வாத்திமாரின் ‘ஊக்குவிப்பு' அந்தக்காலத்தில் இருந்தது! எனவே தனது ஊரில் படிப்பிக்காமல், பக்கத்துக்கு ஊர்ப் பாடசாலைக்கு அனுப்பிப் படிப்பித்தார்! அவனும், ஊர் வாத்தியார் சொன்னதை உண்மையாக்கி விடுபவன் போல… அப்பு எனக்குப் படிப்பு ஏறுதில்லையணை, எங்கையாவது வெளிநாடுகளுக்குப் போய் உழைச்சுத் தங்கச்சியை ஒரு நல்ல இடத்தில கட்டிக் குடுக்கலாம் எண்டு நினைக்கிறன் எண்டு சொல்லிக் கொண்டு வந்தான்!

 

அவருக்கு வந்த கோவத்திலை… அடி செருப்பாலை என்று கூறியபடி.. ஒரு சுருட்டையும் எடுத்துக் கொண்டு வெளியால போய் விட்டார்!  அந்தச் சுருட்டுத்தான் அவரது ‘டென்ஷனைக்' கொஞ்சம் குறைக்கக் கூடிய சாமான் எண்டு அனுபவத்தில அவர் கண்டு பிடிச்சிருந்தார்! ஒரு சுருட்டைப் பத்தவைச்சு, அதை வாயில வைச்சு ஆழமாகப் புகையை இழுத்து விடும் போது.. ஒவ்வொரு இழுவைக்கும் அவரது ‘டென்ஷன்' கொஞ்சம் கொஞ்சமாய் இறங்கி வாறது வழமை!

 

கொஞ்சம் இருட்டின பிறகு வீட்டுக்குள்ளை வந்து.. கிணத்தடியில கால் முகத்தைக் கழுவிப் போட்டுக் குடிசை வாசலில் தொங்கிய தேங்காய்க் குடுவைக்குள்ளிருந்து ‘திருநீற்றை' எடுத்துச் சிவ..சிவா… என்ற படி நெற்றியில் தடவியபடி.. திண்ணையில் அமர்ந்தார்!

 

சிறிது நேரத்தில்  அவர் எதிர்பார்த்தது நடந்தது!

 

குசினிக்குள்ளிருந்து குருவியம்மா தேனீரோடு ‘என்னப்பா.. தம்பி சொல்லுறது சரி போலத் தானே கிடக்கு… என்ற படி.. குருவியருக்குப் பக்கத்தில் வந்து பவ்வியமாக, அமர்ந்து கொண்டார்!

 

“சரி.. இவர் வெளிநாட்டுக்குப் போய் என்னத்தை வெட்டிப் புடுங்கப் போறார்? உழுகிற மாடு.. ஊருக்குள்ளை விலை போகும் எண்டு சொல்லுவினம்! “

 

இல்லையப்பா. அங்க போய் அகதி எண்டு பதிஞ்சால்.. சும்மா காசு குடுப்பாங்களாம்! அப்பிடித்தான் எல்லாரும் இப்ப அங்கையிருந்து ஊருக்குக் காசனுப்புகினமாம்"

 

அப்ப.. இவர் அகதி எண்டு சொல்லுறதுக்கு.. இவருக்கு என்ன நடந்தது? மூண்டு நேரமும் வேளைக்கு வேளை விழுங்கிப் போட்டுத் திமிர் எடுத்த ஆக்கள் என்னெண்டு போய் அகதி எண்டிறது…?

 

எல்லாரும் அப்பிடித் தான் அப்பா செய்யினம்.. ஆமி அங்க அடிச்சான்.. இஞ்ச அடிச்சான் எண்டு சொல்லி பனையால விழுந்த காயத்தைக் காட்டிச் சனம் அகதியாகுதுகள். வெள்ளைக்காரனுக்கு பனையில ஆக்கள் ஏறி விழுகிறது என்னண்டப்பா.. தெரியும்?

 

அது சரி… இப்ப இவரை அனுப்பிறதுக்குக் காசுக்கு எங்கை போறது?

 

நீங்கள் கோவிக்க மாட்டீங்கள் எண்டு சத்தியம் பண்ணினால், நான் ஒரு வழி சொல்லுவன்!

 

சரி..சரி.. நீங்கெல்லாம் சேந்து முடிவு பண்ணினாப் பிறகு.. நான் கோவிச்சு எத்தைச் செய்யிறது?

 

உங்கட தோட்டத்தில மேற்குப் பக்கத்துத் துண்டைத் தனக்குத் தரச் சொல்லிச் சுப்பையர் கேட்டது உங்களுக்கு மறந்து போச்சே.. உங்களுக்கு வயசும் போகுது.. இந்தப் பெரிய தோட்டத்தை வைச்சு என்னண்டு சமாளிக்கப் போறியள்? பெடியளும் தோட்டப் பக்கம் போவாங்கள் எண்டு நான் நினைகேல்லை!

 

ம்ம்ம்ம்… என்று கொஞ்சநேரம் அமைதியாக இருந்தவர்… சரி ..சரி செயிறதைச் செய்து முடியுங்கோ என்ற படி.. கண்களை மூடியபடி.. கொஞ்ச நேரம். அப்படியே ஒரு வித தியான நிலையில் இருந்தார்.

 

ஒரு வேளை.. அவரது அப்பாவின் ஆவி அவரின்ர கண்ணுக்குள்ளை வந்து போகுதோ என்று குருவியம்மா தனக்குள் நினைத்துக் கொண்டாள்!

 

அடுத்த நாளே அவனை வெளிநாட்டுக்கு அனுப்புவதற்கான ஆயத்தங்களைக் குருவியம்மா ஆரம்பித்து விட்டாள்!

 

தோட்டக்காணியைச் சுப்பையருக்கு விற்பதை நினைக்கும் போதே... தன்னில் ஒரு பாதி.. பிரிந்து போவதாகவே குருவியார் உணர்ந்தார். ஆனால்..காணியை விற்பதை விடத் தனக்கு வேறு எந்த வழியும் இல்லை என்பதும் அவருக்கு நன்றாகத் தெரிந்தும் இருந்தது!

 

வீட்டுச் சுவர் முழுவதையும்.. தனது மூத்த மகனதும்.. மகளதும்..விவேகானந்த சபையால் வழங்கப் பட்ட சான்றிதழ்கள்.. வேறு வேறு நிறங்களில் அலங்கரித்துக் கொண்டிருந்தன!

 

நாளைக்கு மறக்காமல்.. ஞானம் ஸ்டூடியோவில போய் எல்லாரும் ஒரு படம் எடுத்து வைக்க வேணும் என்று தனக்குள் நினைத்துக்கொண்டார்!

 

சிறகு முளைச்சு ஒண்டு பறந்து போறனெண்டு வெளிக்கிட்டிடுது... நாளைக்குக் கூட்டுக்குத் திரும்பி வருமோ என்னவோ என்று தனக்குள் நினைத்துக்கொண்டார்!

 

பெடியன் போய் ஏதாவது உழைச்சு அனுப்பினால்.. மகளையும் எங்கையாவது நல்ல இடத்தில கட்டிக் கொடுக்கலாம்.. ஒரு தந்தையின் மனசு கணக்குப் போட்டது...!

 

இஞ்சை பார்.. ஆடறுக்க முன்னம் நான் என்னத்துக்கோ விலை கேக்கிறன்.. எண்டு தனக்கு தானே நினைத்துக் கொண்டவர்.. அப்படியே.. திண்ணையிலிருந்த படியே நித்திரையாகி விட்டார்!

 

 

 

தொடரும்…!

 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
அவரும் சைக்கிளில் நின்று ஒரு காலை ஊன்றிய படி..வானத்தைப் பார்த்துக்கொண்டு… பானையில இருந்தால் தானே… அகப்பையில வரும்
உந்த திமிர் எங்கன்ட சனத்திற்க்கு கொஞ்சம் அதிகமாக இருக்கு ...மிகுதியை தொடருங்கோ .....அதுசரி நீங்கள் எப்ப சிட்னியில் புத்தக வெளீயீடு செய்யிற யோசனை?
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் எம் மண்ணின் மறக்க முடியாத பக்கங்களை. அடுத்த பகுதிக்காகக் காத்திருக்கிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புங்கையின் கதையை இப்போது தான் வாசித்தேன்.
எங்கள் ஊரிலும் ரஸ்யாக்காரன் எண்ணை தேடினவன்.
ஆனால் வெண்ணெயும் கிடைக்கவில்லை. :D

தொடருங்கள்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

புங்கையின் கதையை இப்போது தான் வாசித்தேன்.

எங்கள் ஊரிலும் ரஸ்யாக்காரன் எண்ணை தேடினவன்.

ஆனால் வெண்ணெயும் கிடைக்கவில்லை. :D

தொடருங்கள்

 

மோராவது அவனுக்குக் குடுத்து அனுப்பியிருக்கலாமே வாத்தியார் :D

 

சிட்நீலையும் இப்பிடி விளக்குமாறாலதான் நிலம் கூட்டுறநீங்களோ???? புங்கை

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உந்த திமிர் எங்கன்ட சனத்திற்க்கு கொஞ்சம் அதிகமாக இருக்கு ...மிகுதியை தொடருங்கோ .....அதுசரி நீங்கள் எப்ப சிட்னியில் புத்தக வெளீயீடு செய்யிற யோசனை?

இந்த விதமான திமிர் எங்கையிருந்து வந்தது எண்டது தான் எனக்கும் தெரியேல்லை புத்தன்!

 

புத்தக வெளியீடா? :o

 

நாங்கள் நவீன காலத்து இலக்கியம் தான்!  :lol:

 

புத்தகங்களை எழுத, அவற்றைக் கறையான் அரிக்க.. அவற்றுக்கு உயிர் கொடுக்க சேக்கிழாரும் இல்லை.. ராஜேந்திர சோழனும் இல்லை!

 

விண் வெளிக்கு, லைக்காவை அனுப்பின மாதிரி, புத்தனை முன்னால விட்டுப்.. பின்னால வருவம் எண்டு யோசிக்கிறன்! :icon_idea:

தொடருங்கள் எம் மண்ணின் மறக்க முடியாத பக்கங்களை. அடுத்த பகுதிக்காகக் காத்திருக்கிறேன்.

நன்றிகள் காவலூர் கண்மணி !

 

இனித்தான் 'கிளைமாக்ஸ்' இருக்குது..!

 

தங்கள் போன்றவர்களின் ஊக்குவிப்பு, மேலும் எழுதும் ஆவலைத் தூண்டுகின்றது!

 

தொடர்ந்து இணைந்திருங்கள்!

Link to comment
Share on other sites

வணக்கம் புங்கை,

 

இன்றுதான் முதலாம் இரண்டாம் அங்கங்களை வாசிக்க நேரம் கிடைத்தது. தொடரை முழுமையாக வாசித்த பின் கருத்தெழுதுகின்றேன்... கெதியாய் எழுதுங்கோ

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

--------

சிறகு முளைச்சு ஒண்டு பறந்து போறனெண்டு வெளிக்கிட்டிடுது... நாளைக்குக் கூட்டுக்குத் திரும்பி வருமோ என்னவோ என்று தனக்குள் நினைத்துக்கொண்டார்!

 

பெடியன் போய் ஏதாவது உழைச்சு அனுப்பினால்.. மகளையும் எங்கையாவது நல்ல இடத்தில கட்டிக் கொடுக்கலாம்.. ஒரு தந்தையின் மனசு கணக்குப் போட்டது...!

 

இஞ்சை பார்.. ஆடறுக்க முன்னம் நான் என்னத்துக்கோ விலை கேக்கிறன்.. எண்டு தனக்கு தானே நினைத்துக் கொண்டவர்.. அப்படியே.. திண்ணையிலிருந்த படியே நித்திரையாகி விட்டார்!

 

தொடரும்…!

 

அடுத்த பகுதியை... வாசிக்க கடந்த எட்டு நாட்களாக காவல் இருக்கிறோம்.

எங்க, பொறுமையை.... ரொம்ப சோதிக்காதிங்க புங்கை. :rolleyes:

Link to comment
Share on other sites

வணக்கம் புங்கை,

 

இன்றுதான் முதலாம் இரண்டாம் அங்கங்களை வாசிக்க நேரம் கிடைத்தது. தொடரை முழுமையாக வாசித்த பின் கருத்தெழுதுகின்றேன்... கெதியாய் எழுதுங்கோ

நிழலி போலத்தான் நானும் புங்கை கதையை முடியுங்கோ அதன்பிறகு கருத்து எழுதுகிறேன்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரோமியோ வாய்க்கால் வரப்பிலா எல்லாரையும் வரிசைகட்டி கூட்டிப்போறீங்க பார்வைக்கு எட்டின மட்டும் பசுமைகளால் நிறைஞ்சிருக்கு.... கதை இரம்மியமாக பசுமையான நிலையில் நகர்கிறது ..... :rolleyes:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள். . .
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:01 AM (எம்.ஆர்.எம்.வசீம்) இலங்கைக்கு சொந்தமான கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை நாடுவதாக இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் அதற்கு முகம்கொடுப்பதற்கு நாங்களும் தயார். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு போதுமான ஆதாரங்கள் எம்மிடமிருக்கின்றன என இலங்கை மனித நேய கட்சியின் தலைவியும் பேராசிரியருமான சந்திமா விஜேகுணவர்த்தன தெரிவித்தார். இலங்கை மனிதநேய கட்சி தலைமையகத்தில் வியாழக்கிழமை (18) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், இந்தியாவில் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழ் நாட்டு மீனவர்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் அங்குள்ள அரசியல்வாதிகள் கச்சதீவு விவகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். தேர்தல் காலம் வரும்போது இந்தியாவை பாெறுத்தவரை இது வழமையான விடயமாகும். இந்திய பிரதமரும் கச்சதீவு விடயமாக மிகவும் தீவிரமாக தேர்தல் மேடையில் உரையாற்றி இருக்கிறார். குறிப்பாக கச்சதீவு இந்தியாவுக்கு சொந்தமானது. அதனை இலங்கைக்கு வழங்கியது வரலாற்று தவறு. அதனால் கச்சதீவை இந்தியாவுக்கு மீண்டும் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்போம். முடியாவிட்டால் நெதர்லாந்தில் இருக்கும் சர்வதேச நீதிமன்றத்தை நாடுவோம் எனவும் இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். 285 ஏக்கர் பரப்பளவைக்கொண்ட  கச்சதீவு இலங்கை,, இந்திய மீனவர்கள் கடற்றொழில் செய்வதற்கு அப்பால், இந்த பூமிக்குள் பல பெருமதிவாந்த வேறு விடயங்கள் இருக்கின்றன. அதனால்தான் இந்திய அரசியல்வாதிகள் கச்சதீவை எப்படியாவது தங்களுக்கு சொந்தமாக்கிக்கொள்ள முயற்சித்து வருகின்றனர். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு  தேவையான வரலாற்று ஆதாரங்கள் எம்மிடம் இருக்கின்றன.  அதனால் கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்ற்ததை நாடுமாக இருந்தால், அதற்கு முகம்கொடுக்க நாங்களும் தயாராக வேண்டும். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கான ஆதாரங்களை சர்வதேச நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்போம். கச்சதீவு விவகாரத்தால் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இருந்துவரும் உறவில் பாதிப்பு ஏற்படக்கூடாது.இந்த விடயத்தில் இந்தியாவுடன் முரண்பட்டுக்கொள்ள நாங்கள் தயார் இல்லை. இந்தியா அயல் நாடாக இருந்துகொண்டு எமக்கு பாரிய உதவிகளை செய்துவருகிறது. குறிப்பாக கொவிட் காலத்தில் இந்திய அரசாங்கத்தின் உதவிகளை எங்களால் ஒருபோதும் மறந்துவிட முடியாது. அந்த நன்றி எப்போதும் எங்களிடம் இருக்கிறது. இருந்தாலும் கச்சதீவு விவகாரம் என்பது எமது உரிமை சார்ந்த விடயம். அதனை எங்களால் விட்டுக்கொடுக்க முடியாது. இந்திய அரசியல்வாதிகள் தங்களின் தேர்தல் பிரசாரத்திற்கே இந்த விடயத்தை கையில் எடுத்துக்கொள்கின்றனர். தேர்தல் முடிவடைந்த பின்னர் அந்த விடயத்தை மறந்துவிடுவார்கள் என்றார். https://www.virakesari.lk/article/181410
    • பட மூலாதாரம்,GETTY IMAGES 2 மணி நேரங்களுக்கு முன்னர் உலக அளவில் 840 மில்லியன் மக்கள் நாள்பட்ட சிறுநீரக கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ளதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன என இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் அர்த்தம் 10இல் ஒருவருக்கு சிறுநீரக நோய்கள் இருக்கின்றன. மேலும் சமீப காலங்களில் உயிர்களை கொள்ளும் 10 முக்கிய நோய்களில் 7வது இடத்தை பிடித்துள்ளது நாள்பட்ட சிறுநீரக நோய். இந்தியாவில் மட்டும் ஆண்டொன்றுக்கு 2 - 2.5 லட்சம் மக்கள் புதிதாக சிறுநீரக நோய்களால் பாதிக்கப்படுவதாக இந்தியன் சொசைட்டி ஆப் நெஃப்ராலஜி வெளியிட்டுள்ள இதழில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல் இந்தியாவில் உள்ள வயது வந்தோர் மக்கள்தொகையில் 8-10% பேர் நாள்பட்ட சிறுநீரக நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்த அமைப்பு கூறுகிறது. இதற்கு மிக முக்கிய காரணம் சிறுநீரகம் சார்நத நோய்களை ஆரம்ப கட்டத்தில் கண்டுபிடிக்க முடியாமல் போவதும், இவை அமைதியாக இருந்து தீவிர பிரச்னை ஏற்படும்போதே வெளியே தெரியவரும் என்பதுமே ஆகும் என்று கூறுகிறார் எம்ஜிஎம் ஹெல்த்கேர் மருத்துவமனையின் மூத்த சிறுநீரகவியல் மருத்துவர் மில்லி மேத்யூ.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பொதுவாகவே சிறுநீரகம் சார்ந்த பிரச்னைகளில் ஆரம்ப கட்டத்தில் அறிகுறிகள் தெரியாது என்கிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. சிறுநீரகத்தின் செயல்பாடு என்னென்ன? உடலின் மிக முக்கியமான உறுப்புகளில் வயிற்றுப்பகுதியில் அமைந்திருக்கும் சிறுநீரகமும் ஒன்று. சிறுநீரின் வழியாக கழிவுகளை வெளியேற்றுவதே இதன் பிரதான பணி. ரத்தத்தில் காணப்படும் கழிவுப்பொருட்கள், உடலுக்கு தேவையற்ற அளவுக்கு அதிகமான தாதுக்களை சிறுநீரின் வழியாக வெளியேற்றி தூய ரத்தத்தை உடல் முழுவதும் பரவ செய்கிறது சிறுநீரகம். ஆனால், நமது வாழ்க்கை முறை, உணவுமுறை, பழக்கவழக்கங்கள், மரபுவழி பிரச்னைகள், தேவையற்ற மாத்திரைகளை உட்கொள்வது, இதர உடல்நல கோளாறுகள் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்த உறுப்பு செயல்படுவதில் தடை ஏற்படுகிறது. அப்படி சிறுநீரகத்தின் பணியில் இடையூறு ஏற்பட்டு அதன் வழக்கமான கழிவகற்றல் பணியை சரியாக செய்யமுடியாமல் போகும்போதுதான் பல்வேறு சிறுநீரக கோளாறுகள் ஏற்படுகின்றன. இதில் மேலுமொரு அபாயம் என்னவெனில் இந்த கோளாறுகள் ஆரம்ப கட்டத்தில் எந்த விதமான அறிகுறியும் காட்டாமல் உங்களுக்குள் வந்து விடும். நாளாக நாளாக அதன் வீரியம் அதிகரிக்கும்போதே உங்களுக்கு அறிகுறிகள் தெரிய தொடங்கி, அதிலிருந்து மருத்துவ பரிசோதனைகள் மூலம், நீங்கள் எந்தளவுக்கு, எந்த விதமான நோயால் பாதிக்கப்பட்டுள்ளீர்கள் என்பதை கண்டறிய முடியும் என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. அப்படி என்ன மாதிரியான சிறுநீரகம் சார்ந்த நோய்கள் உங்களுக்கு ஏற்படலாம்? அதில் என்ன மாதிரியான அறிகுறிகள் தென்பட வாய்ப்புள்ளது? என்பதை அறிந்துக் கொள்ளலாம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,நாள்பட்ட சிறுநீரக நோய்களை குணப்படுத்த முடியாவிட்டாலும், அவை தீவிரமடையாமல் தடுக்க முடியும். நாள்பட்ட சிறுநீரக நோய் (Chronic Kidney Disease) நாள்பட்ட சிறுநீரக நோய் என்பது நீண்ட நாட்களாக தொடர்ந்து வரும் சிறுநீரக கோளாறு ஆகும். இது அதிகம் சர்க்கரை நோய் மற்றும் உயர்ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கே ஏற்படும். இதன் ஆரம்ப கட்டங்களில் எந்த விதமான அறிகுறிகளும் இருக்காது. இந்த வகை சிறுநீரக கோளாறுகள் சரி செய்ய முடியாதவை. முறையான மருத்துவ சிகிச்சை மூலம் இவை தீவிரமடையாமல் பார்த்துக் கொள்ள முடியும். அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி பசியின்மை கால் மற்றும் கணுக்கால் வீக்கம் மூச்சுத்திணறல் தூங்குவதில் சிரமம் அதிகமாக அல்லது குறைவாக சிறுநீர் கழித்தல்   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரக கல் ஒன்றிரண்டு இருக்கும்போது அதன் அறிகுறிகள் வெளியே தெரியாது. சிறுநீரகத்தில் கல் சிறுநீரகத்தில் தேங்கும் உப்பு அல்லது தாதுக்களின் படிகங்களே சிறுநீரக கல் என்று அழைக்கப்படுகிறது. பொதுவாக ஓரிரண்டு கற்கள் உருவாகும்போது அறிகுறியோ அல்லது தீவிர பிரச்னையோ ஏற்படாது என்று குறிப்பிடும் மருத்துவர், அது தீவிரமடையவும் வாய்ப்புகள் உள்ளது என்று கூறுகிறார். தண்ணீர் குறைவாக குடித்தால், உடல் பருமன், மோசமான வாழ்க்கை முறை, உணவுமுறை உள்ளிட்டவற்றால் இந்த பிரச்னை ஏற்படுகிறது. அறிகுறிகள் சிறுநீர் கழிக்கும் போது வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடைப்பு ஏற்படுதல் கல் உள்ள இடத்தில் வலி   நீரிழிவு சிறுநீரக நோய் (Diabetes Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உலகில் மூன்றில் ஒரு சர்க்கரை நோயாளிகள் சிறுநீரக கோளாறால் பாதிக்கப்படுகின்றனர். ஆய்வுத்தரவுகளின் படி சர்க்கரை நோய் உள்ள 3 பேரில் ஒருவருக்கு சிறுநீரக கோளாறு ஏற்படுகிறது. உலக அளவில் சிறுநீரக நோய்க்கான காரணிகளில் சர்க்கரை நோய் முதன்மையானதாக இருக்கிறது. அப்படி சர்க்கரை நோய் கட்டுப்பாட்டிற்குள் இல்லாதவர்களுக்கு இந்த நீரிழிவு சிறுநீரக நோய் ஏற்படுகிறது. அறிகுறிகள் கால்கள் வீக்கம் நுரையுடன் சிறுநீர் வெளியேறுதல் உடல் சோர்வு எடை குறைதல் உடல் அரிப்பு குமட்டல் மற்றும் வாந்தி   ஹைப்பர்டென்சிவ் நெஃப்ரோஸ்க்ளிரோசிஸ் (Hypertensive Nephrosclerosis) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு சிறுநீரகம் பாதிக்கும் அபாயம் அதிகம் சர்க்கரை நோய்க்கு இணையாக சிறுநீரகத்தை பாதிக்கும் மற்றுமொரு பிரச்னை உயர் ரத்த அழுத்தம். உயர் ரத்த அழுத்தம் சிறுநீரகத்தில் உள்ள ரத்த குழாய்களை சேதமடைய செய்வதால் சிறுநீரகத்தின் செயல்பாடு பாதிக்கப்படுகிறது. இதனால் ரத்தத்தில் உள்ள தேவையற்ற கழிவுகளை வெளியேற்றுதல் மற்றும் கூடுதல் தாதுக்களை வெளியேற்றுதல் ஆகியவை பாதிப்படைகிறது. இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் சிறுநீரகத்தின் செயல் பாதித்து தேவையற்ற திரவங்கள் ரத்த குழாய்களில் படிவதால், ரத்த அழுத்தம் மேலும் உயர்கிறது. அறிகுறிகள் குமட்டல் மற்றும் வாந்தி தலை சுற்றல் உடல் மந்தம் தலை வலி கழுத்து வலி   சிறுநீர் பாதைத் தொற்று பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீர் பாதையில் ஏற்படும் தோற்று சிறுநீரகத்தையும் பாதிக்கும் அபாயம் உள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீரக கோளாறு இல்லை என்றாலும் கூட, அது சிறுநீரகத்தை பாதிக்கவும் வாய்ப்புள்ளது. சிறுநீர் பாதைத் தொற்று என்பது சிறுநீர் பாதையில் ஒட்டிக்கொள்ளும் நுண்ணுயிரிகள் பெருகி பாதிப்பை ஏற்படுத்துவது. இது கீழ்நிலையில் உள்ள சிறுநீர் பாதையிலேயே தங்கி விட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்பட வாய்ப்பு குறைவு. ஆனால், பெருகி மேல்நிலை பகுதிக்கு வந்துவிட்டால் சிறுநீரகத்திற்கு பாதிப்பு ஏற்படலாம். அறிகுறிகள் முதுகுப் பக்கத்தில் வலி காய்ச்சல் சிறுநீர் கழிக்கும்போது வலி அடிவயிற்றில் வலி சிறுநீரில் ரத்தம் குமட்டல் மற்றும் வாந்தி   பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தில் அதிகரிக்கும் நீர்க்கட்டிகள் அதை செயலிழக்க செய்யுமளவு ஆபத்தானது. பாலிசிஸ்டிக் சிறுநீரக நோய் என்பது உங்களது சிறுநீரகத்தில் ஏற்படும் நீர்க்கட்டிகளை குறிப்பது. நாளடைவில் இவை வளர்ந்து உங்களது சிறுநீரகத்தை செயலிழக்கும் நிலைக்கும் கொண்டு செல்லலாம். இவை பெரும்பாலும் மரபணு ரீதியாக ஏற்படக்கூடிய சிறுநீரக கோளாறாகும். அறிகுறிகள் மேல்வயிற்றில் வலி அடிவயிற்றின் பக்கவாட்டில் வலி முதுகில் வலி சிறுநீரில் ரத்தம் வெளியேறுதல் சிறுநீர் பாதையில் அடிக்கடி தொற்று ஏற்படுதல்   ஐஜிஏ நெஃப்ரோபதி (IgA Nephropathy) பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,இந்த சிறுநீரக பிரச்சனையில் சிறுநீரில் ரத்தம் வெளியேறுவது நமக்கே தெரியாது. ஐஜிஏ நெஃப்ரோபதி என்பது பெரும்பாலும் சிறுவயதில் இளம்பருவத்தில் வரக்கூடிய ஒரு சிறுநீரக கோளாறு என்று கூறுகிறார் மருத்துவர் மில்லி மேத்யூ. இதில் சிறுநீர் வெளியேறும்போது ரத்தமும் இணைந்து வெளியாகும். இதை நாம் நேரடியாக பார்த்தால் கண்டறிவது கடினம். ஆனால், பரிசோதனையில் இதை கண்டறிய முடியும்.   பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் சிறுநீரக செயலிழப்பின் அறிகுறிகள் தெரியும் சிறுநீரக செயலிழப்பு சிறுநீரக செயலிழப்பு ஏற்படுபவர்களுக்கு அதன் முற்றிய நிலையில் மட்டுமே அறிகுறிகள் தெரியும். குறிப்பாக அதில் 5 நிலைகள் உள்ளது. இதில் நான்காவது நிலை வரையிலும் கூட அறிகுறிகள் தென்படாமல் ஒருவர் நன்றாக இருப்பார். சிறுநீரகத்தின் செயல்பாடு 100இலிருந்து 10% என்ற நிலைக்கு வரும்போது தான் அறிகுறிகள் தெரியும். அந்த நிலையில் ஒரு சில பொதுவான அறிகுறிகள் தென்படும். அறிகுறிகள் பசியின்மை வாந்தி கடுமையான உடல் சோர்வு உடல் வீக்கம் தூக்கமின்மை உப்பசம் https://www.bbc.com/tamil/articles/c2e01gql070o
    • Published By: VISHNU   19 APR, 2024 | 02:19 AM (நா.தனுஜா) டயலொக் அக்ஸியாட்டா மற்றும் பார்டி எயார்டெல் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் இலங்கையில் அவற்றின் செயற்பாடுகளை இணைந்து முன்னெடுப்பதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன.  இவ்வொப்பந்தத்தின் பிரகாரம் எயார்டெல் லங்காவின் 100 சதவீத பங்குகளை டயலொக் கொள்வனவு செய்யும் அதேவேளை, அதற்குப் பதிலாக இதுவரையில் மொத்தமாக விநியோகிக்கப்பட்ட பங்குகளில் 10.355 சதவீத பெறுமதியுடைய சாதாரண வாக்குரிமை பங்குகளை எயார்டெலுக்கு வழங்கும்.  இதுகுறித்து தெளிவுபடுத்தி நேற்றைய தினம் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கும் டயலொக் நிறுவனம், நாடளாவிய ரீதியில் தொலைத்தொடர்பு சேவையை மேம்படுத்துவதை இலக்காகக்கொண்டு முன்னெடுக்கப்படும் இந்த இணைப்புக்கு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அனுமதியளித்திருப்பதாகத் தெரிவித்துள்ளது.  அதுமாத்திரமன்றி இந்நடவடிக்கையானது போலியான தொலைத்தொடர்பு உட்கட்டமைப்பு செயன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்கும், தொழில்நுட்பத்துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும், வேகமான வலையமைப்பு இணைப்பை விரிவுபடுத்துவதற்கும், செலவினங்களைக் குறைப்பதற்கும், செயற்பாட்டு வினைத்திறனை அதிகரிப்பதற்கும் உதவும் எனவும் டயலொக் நிறுவனம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது. https://www.virakesari.lk/article/181412
    • Published By: VISHNU    18 APR, 2024 | 10:24 PM வலிப்பு ஏற்பட்ட நிலையில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் புதன்கிழமை (17) உயிரிழந்துள்ளார். இதன்போது மாதகல் - சகாயபுரம் பகுதியைச் சேர்ந்த பிரதீபன் நித்தியா (வயது 37) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில், குறித்த பெண்ணுக்கு வலிப்பு நோய் உள்ளது. இந்நிலையில் புதன்கிழமை (17) பிற்பகல் 6.30 மணியளவில் வீட்டு கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். பின்னர் சடலம் தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது. சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் வியாழக்கிழமை (18) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இரண்டு பிள்ளைகளின் தாயான இவர் வலி.தென்மேற்கு பிரதேச சபையின் பண்டத்தரிப்பு உப அலுவலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமை புரிந்து வந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/181408
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.