Jump to content

தீய காரியங்களின் பாவங்களிலிருந்து தப்பிக்க முடியாதென்பதை உணர்த்தும் சூரசம்ஹாரம்


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

 

இன்று சூரன் போர்

 

ஹீருமம் ஒன்றே நிலையானது. நாம் செய்கின்ற நல்வினை தீவினைகளுக்கு ஏற்பவே சகல காரண காரியங்களும் இடம்பெறுவதுடன் தீய செயல்களை செய்தால் அதிலிருந்து தப்பிக்க முடியாது என்பதுடன் இதனால் ஏற்படுகின்ற துன்பங்களையும் வேதனைகளையும் அனுபவித்தே ஆக வேண்டும் என்பதை மானிடர்களுக்கு உணர்த்துவதே சூரசம்ஹாரம் ஆகும்.

f1410291.jpgஉலகில் அதர்மம் தலைதூக்கினால் தருமம் தலைசாய்க்கும் ஆனால் அழியாது. தருமம் நாணல் புல்போல் வளைந்து கொடுத்து வீறுகொண்டெழும். தேவர்கள் கை ஓங்கினால் அசுரர்களுக்கு ஆபத்து. அசுரர்கள் கை ஓங்கினால் தேவர்களுக்குத் திண்டாட்டம். ஒரு முறை தேவர்கள் அசுரர்களை வென்று அவர்களை கொடுமைப்படுத்தினர். இதனால் அசுரர்கள் தங்கள் குலப் பெருமைகளை இழந்து தவித்தனர்.

இதனால் அசுர குலத் தலைவன் அசுரேந்திரன் மகள் மாயை குலகுருவாகிய சுக்கிராச்சாரியாரை அணுகி ஆலோசனை கேட்டார். இதற்கு அவர் காசிய முனிவரை திருமணம் செய்து புத்திரரர்களை பெற்று இழந்த அசுர குலப் பெருமைகளை மீட்டெடு என கூறினார்.

சுக்கிராச்சாரியாரின் கோரிக்கை ஏற்ப மாயை காசிய முனிவரை மணந்து சூரன், சிங்கன், தாரகன் என்னும் மூன்று ஆண் மகவுகளையும் அசுமுகி என்னும் பெண் குழந்தையையும் பெற்றெடுத்தாள். பிள்ளைகளுக்கு காசிய முனிவர் தருமத்தைப் போதித்தார். ஆனால் மாயை தடுத்து வேறு மார்க்கத்தில் புகுத்தி அசுரகுலப் பெருமையினை அடைய வழிகாட்டினாள்.

தாயான மாயை சூரனை யாகஞ்செய்ய அனுப்பினாள். பத்தாயிரம் ஆண்டுகள் சிவனை நோக்கி கடுந் தவம் புரிந்தான். சிவபெருமான் வரம் கிட்டவில்லை.

சூரன் ஆகாயத்தை அடைந்தான். அங்கிருந்து தன் உடலிலிருந்து அரிந்த தசைகளையும். குருதியையும் யாக குண்டத்தில் இட்டான். அப்பொழுதும் சிவ தரிசனம் கிட்டவில்லை. கவலையடைந்த சூரன் ஓம குண்டத்தில் நடப்பட்டிருந்த வச்சிர தம்பத்தில் பாய்ந்து தன்னை அழித்துக் கொண்டான். சிவபெருமான் காட்சி கொடுத்தார். சூரன் உயிர்பெற்று எழுந்தான். சிவபெருமான் சூரபத்மனுக்கு ஆயிரத்து எட்டு அண்டங்களையும் வழங்கி நூற்றெட்டு யுககாலம் அரசாட்சி செய்ய அருள் வழங்கியதுடன் சகல அண்டங்களுக்கும் வாயு வேகத்தில் சென்று வரக்கூடிய இந்திர மாஞாலத் தேரையும் சூரபத்மனுக்கு வழங்கி அருளினார்.

இதன் பின் சூரன் வீரமகேந்திரன் என்னும் நகரை உருவாக்கி அரசாண்டு தேவர்களை சிறைப்பிடித்தான். தேவலோகம் அசுரர்கள் வசமானது. இந்திரனும் இந்திராணியும் மறைந்து வாழ்ந்தனர்.

தேவர்கள் சிவனிடம் சென்று வணங்கினார்கள். பிரதமையில் சிவபெருமானது நெற்றியிலிருந்து தெறித்த பொறிகள் ஆறும் சரவணப் பொய்கையில் விழுந்து ஆறு குழந்தைகளாக கார்த்திகைப் பெண்களினால் வளர்க்கப்பட்டு அதனை உமாதேவியார் எடுக்க ஆறு திருமுகமும் பன்னிரண்டு திருக்கையுமுடைய ஒருருவாய் எழுந்தருளிய நாள் இந்த கந்தசஷ்டி நாளாகும். உலகத்தின் முழுமுதற் கடவுளாகிய பரமசிவன் உலகத்தாரை உய்விப்பதற்கு கந்தப் பெருமானை தந்தருளினார்.

சிவபெருமான் பதினொரு உருத்திரர்களையும் அழைத்து அவர்களைப் பதினொரு படைகளாக்கி அவற்றை முருகப் பெருமானிடம் வழங்கியதுடன் வேலாயுதத்தையும் முருகனிடம் கொடுத்தார்.

“சூரனை அசுணர் குலத்தோடு அழித்து இந்திரனுக்கு விண்ணரசைக் கொடுத்து வேதநெறியை நிறுவ செல்கபோருக்கு என்றார் தந்தை. அசுரர்களை அழித்து தேவர்கள் குறை நீக்கி உலக ஒழுங்கினை நிலைநாட்டி வருக என உமையாள் ஆசி வழங்கினாள்.

முருகப் பெருமான் திருச்செந்தூருக்குச் சென்றார். வீரபாகு தேவரை சூரபத்மனிடம் தூது அனுப்பி தேவர்களை விடுவிக்குமாறும் யுத்தம் தேவையற்றது எனவும் கூறினார். ஆனால் சூரன் தூது சென்ற வீரபாகு தேவரை அவமதித்து அனுப்பி வைத்தான். போர் தொடங்குவத்கு முன்னர் சமாதானப் பேச்சுக்கள் இடம்பெற்று பிரச்சினைக்குத் தீர்வுகாணுதல் என்பது கந்த புராணத்தின் மூலமும் எடுத்துக் கூறப்பட்டுள்ளது.

யுத்தம் ஆரம்பமானது. சூரனின் தம்பிமார்கள் பிள்ளைகளான பானுகோபன் அக்கினி முகாசுரன் முதலியோர் உட்பட படைகளும் அழிந்தன. சூரன் தனித்து நின்று போரிட்டான். முருகப் பெருமான் சூரனிடம் நீ அளவு கடந்த பல மாய வடிவங்களையெல்லாம் எடுத்தாய் என் அம்புகளால் உன் மாயை உருவங்கள் அத்தனையும் அழிந்துவிட்டன. எமது திருப்பெருவடிவத்தை இப்போது காண்பாயாக எனக் கூறி முருகப் பெருமான் தனது திருப்பெரு வடிவத்தைக் காண்பித்தார்.

இந் நிலையில் முருகப் பெருமா னின் திருப்பெருவடிவத்தை விலக்கி மயில் மீதிருந்த திருக்கோலத்தோடு சூரன் முன் தோன்றினார். அப்பொழுதும் அவனது மாயை அடங்கவில்லை. நடுக் கடலில் சூரன் மாமரம் வடிவில் நின்றான். வேற்படை அங்கு சென்று மாமரத்தை வெட்டி வீழ்த்தியது.

சூரன் தனது சொந்த வடியில் நின்று போர் செய்தான். முருகனின் வேல் சூரனின் மார்பினைப் பிளந்து இரு கூறாக்கியது. சூரன் சேவலும் மயிலுமாக மாறினான். மயில் முருகனின் வாகனமாகவும் சேவல்கொடி யாகவும் விளங்கும் பேற்றினை பெற்றான். குற்றமிழைத்தவனை தண்டிப்பதை விடுத்து அவனை நல்வழிப்படுத்துவதே முருகப்பெருமானின் நோக்கமாக இருந்துள்ளது.

குற்றங்கள் இழைப்பது மனிதனிடம் காணப்படுகின்ற விலங்கு இயல்பு குற்றங்களை மன்னித்து குற்றமிழை த்தவனைத் திருத்தி வாழச் செய்வது மனிதனிடமுள்ள தெய்வீக இயல்பு கந்தபுராண கலாசாரம் உணர்த்தும் வாழ்க்கை விழுமியம் இதுவாகும்.

ஆர். நடராஜன்

(பனங்காடு தினகரன் நிருபர்)

 

http://thinakaran.lk/2014/10/29/?fn=f1410291

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இப்ப‌த்தை ஆயுத‌ங்க‌ளை ப‌ற்றி நூற்றுக்கு நூறு உங்க‌ளுக்கு தெரியுமா இல்லை தானே நான் ஒரு ஆய்வில் தெரிந்து கொண்டேன் இந்த வ‌ருட‌ம்.................. அதை ஈரானே வெளிப்ப‌டையா அறிவித்த‌து😏............................. அவ‌ங்க‌ யாழுக்கு அதிக‌ம் வ‌ராட்டியும் அத‌தூற‌ ப‌ரப்ப வ‌ருவ‌தில்லை......................... அவாக்கும் குடும்ப‌ம் பிள்ளைக‌ள் வேலைக‌ள் என்று அதிக‌ம் இருக்கு உங்க‌ளை மாதிரி யாழுக்கை 24ம‌ணித்தியால‌ம் கும்பி அடிக்க‌ முடியாது தான் அவவாள்😁..........................
    • இந்த இரண்டு சம்பவமும் அண்மையில் நடந்ததாகவே தெரிகின்றது. ஏனென்றால்... இது சம்பந்தமாக சமூக ஊடகங்களில் பல நூற்றுக் கணக்கானவர்கள்  அதனைப்  பற்றிய கருத்துக்களை பதிவு செய்த போதும்... ஒருவர் கூட, அந்த 800 ரூபாய்  வடை இரண்டு வருசத்துக்கு முன்பு வந்த காணொளி என்று தெரிவிக்கவில்லை. இத்தனைக்கும் அவர்கள் இலங்கையில் வசிப்பவர்கள். அப்படி இருக்க... பையன் எப்படி அது இரண்டு வருடத்துக்கு முன் பார்த்த காணொளி என்று சொன்னார் என்று தெரியவில்லை. சில வேளை மனப் பிராந்தியோ.... நானறியேன். 😂 "ஆடு களவு போகவில்லை. களவு போனமாதிரி கனவு கண்டேன்". என்ற கதை மாதிரி இருக்கு. 🤣
    • யாழில் திறந்து வைக்கப்பட்ட உயிர்காப்பு நீச்சல் பிரிவு! இனியபாரதி. யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பொலிஸாரினால் பிராந்திய உயிர்காப்பு நீச்சல் பிரிவு ஸ்தாபிக்கப்பட்டு இன்று வெள்ளிக்கிழமை(19) வடக்கு மாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் திலக்.சி.ஏ.தனபாலவினால்  திறந்து வைக்கப்பட்டது. கடற்கரையில் குளிக்கும் போது, விளையாட்டுக்களில் ஈடுபடும்போது உயிர் இறப்பு மற்றும் அசம்பாவிதங்கள் ஏற்படாது தடுக்கும் வகையில் குறித்த பிரிவு செயற்படவுள்ளது. இதன்போது குறித்த பகுதியில் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் வகையில் பொலிஸ் காவலரணும் திறந்து வைக்கப்பட்டது. குறித்த நிகழ்வில் காங்கேசன்துறை பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகர், உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள், காங்கேசன்துறை பிராந்திய பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர். (ச) யாழில் திறந்து வைக்கப்பட்ட உயிர்காப்பு நீச்சல் பிரிவு! (newuthayan.com)
    • (இனியபாரதி)  யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் இதய சத்திர சிகிச்சையின் போது தவறிழைக்கப்பட்டதாக உறவினர்கள் குற்றச்சாட்டு தெரிவித்தனர். குறித்த சம்பவம் தொடர்பாக (18)இன்று யாழ் ஊடக அமையத்தில் நடத்திய ஊட சந்திப்பில் சத்ர சிகிச்சையின் போது இருந்த பெண்ணின் தாயார் மற்றும் சகோதரர் விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்தனர் யாழ் போதனா  மருத்துவமனையில் இதய சத்திரசிகிச்சை  மேற்கொள்ளப்பட்ட சுரேஸ்குமார் பாக்கியச்செல்வி வயது 44 ஜெயபுரம் தெற்கு பல்லவராயன்கட்டு என்ற குடும்பப் பெண் கடந்த 08 திகதி நடைபெற்ற இதயச் சத்திரசிகிச்சையின் போது உயிரிழந்துள்ளார். தவறுதலான முறையில் சத்திரசிகிச்சை நடைபெற்றதாகவும் உறவினர்கள்  குற்றச் சாட்டுகின்றனர். அரச  மருத்துவமனையில் சத்திர சிகிச்சைகாக பணம் கேட்டதாகவும் குற்றச்சாட்டுகின்றனர்.இவ்வாறான இந்தச் சம்பவத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர். அத்தோடு இறந்த பெண் கணவனால் கைவிடப்பட்ட மிகவும் வறுமையான பெண் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.(ப) யாழ் போதனாவில் இதய சத்திர சிகிச்சையின் போது தவறிழைப்பு:உறவினர் குற்றச்சாட்டு! (newuthayan.com)
    • வெள்ளத்தில் மூழ்கும் கிராமம்:கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும்! (மாதவன்) செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமையின் அயற்கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கும் ; கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும் - பொ. ஐங்கரநேசன் எச்சரிக்கை! செம்மணியில் முன்னர் உப்பளம் இருந்த பகுதியில் சர்வதேசத் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான பகீரத முயற்சியில் நகர அபிவிருத்தி அதிகாரசபை ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே செம்மணியில் கட்டுமானங்களை மேற்கொள்வதற்குப் பல்வேறு தரப்பினராலும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டபோது வடக்கு மாகாணசபை அவற்றை நிராகரித்திருந்தது. தற்போது  வடக்கு மாகாணசபையில் மக்கள் பிரதிநிதித்துவம் இல்லாத நிலையில் செம்மணியில் சர்வதேசத்தரத்தில் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான முயற்சிகள் சாதக பாதகங்களை ஆராயாது முடுக்கிவிடப்பட்டுள்ளன. செம்மணியில் இத் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயற்பிரதேசங்கள் மாரியில் வெள்ளத்தில் மூழ்கும் அபாயமும், கோடையில் கடும் நீர்ப்பஞ்சத்துக்கு ஆளாகும் அபாயமும் நேரிடும் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார். செம்மணியில் சர்வதேசத் தரத்திலான துடுப்பாட்ட மைதானத்தை அமைப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை தொடர்பாக பொ.ஐங்கரநேசன் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு எச்சரித்துள்ளார். அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவிக்கையில், செம்மணி உப்பளப்பகுதி குடா நாட்டின் பிரதான கடல் நீரேரிகளில் ஒன்றான உப்பாற்றுக் கடல் நீரேரியை அண்டிய தாழ்வான ஈரநிலம் ஆகும். வெளிப்பார்வைக்கு முக்கியத்துவமற்ற வெட்டவெளியாகத் தென்படும் இப் பகுதி  சூழலியல்ரீதியாக இன்றிமையாத பங்களிப்புகளை வழங்கி வருகிறது. மாரியில் சுற்றயல் கிராமங்களில் இருந்து வரும் வெள்ள நீரைத்தேக்கி வைத்து  நிலத்தடி நீர் மட்டத்தைப் பேணுவதோடு, நிலம் உவராவதையும் தடுக்கிறது. கூடவே, மேலதிகநீரைக் குடாநாட்டின் இன்னுமொரு கடல்நீரேரியான யாழ்ப்பாணக் கடல் நீரேரிவழியாகக் கடலுக்குள் அனுப்புவதன் மூலம் குடியிருப்புகளையும் வயல் நிலங்களையும் வெள்ளத்தில் மூழ்காமல் பாதுகாக்கவும் செய்கிறது. அபிவிருத்தி முதலீட்டாளர்களின் வசதிகளையும் நலன்களையும் மாத்திரமே கருத்திற் கொள்வதாயின் அது நிலைபேறானதாக ஒருபோதும் அமையாது. அபிவிருத்தியில் சுற்றுச்சூழலினதும், அது சார்ந்த சமூகத்தினதும், நலன்கள் முன்னுரிமை பெறும்போதே அது நீடித்த – நிலையான - அபிவிருத்தியாக அமையும். அந்த வகையில் யாழ் நகரின் நுழைவாசல் என்பதற்காக மாத்திரமே செம்மணியில் துடுப்பாட்ட மைதானத்தை அமைப்பதற்கு முற்படுவது எவ்வகையிலும் ஏற்புடையது அல்ல. இதனை இதுவரையில் அபிவிருத்திகள் எதனையும் காணாத தீவகத்தின் பகுதிகளில் ஒன்றில்  நிறுவுவதே சாலச்சிறந்தது ஆகும். என்றும் தெரிவித்துள்ளார்.(ப) வெள்ளத்தில் மூழ்கும் கிராமம்:கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும்! (newuthayan.com)
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.