Jump to content

பதுளையில் அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கான அவசர உதவி வழங்குங்கள்.


Recommended Posts

பதுளையில் அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கான அவசர உதவி வழங்குங்கள்.

 

29.10.2014 அன்று இலங்கை பதுளைமாவட்டத்தில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக பாதிக்கப்பட்ட மலையகத் தமிழர்களுக்கு அவசர நிவாரண உதவியை புலம்பெயர் தமிழர்களிடமிருந்து வேண்டுகிறோம்.

தோட்டத் தொழிலாளர்களான இம்மக்கள் வாழ்வு முழுவதும் வறுமையோடு வாழ்பவர்கள். இயற்கையும் இவர்களை வஞ்சித்து இன்று அநாதரவாக்கப்பட்டுள்ளார்கள்.

மனிதர்கள் வாழக்கூடிய அடிப்படை வசதிகளையே இழந்து வாழும் இவர்களின் தற்போதைய அவலத்தில் புலம்பெயர் தமிழர்கள் ஒன்றிணைந்து உதவுமாறு நேசக்கரம் அமைப்பு வேண்டுகிறது.

கொஸ்லாந்த சிறீ கணேசா வித்தியாலயத்தில் இடம்பெயர்ந்து வாடும் மக்களின் எண்ணிக்கை விபரம் :-

12 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் – 82 (பெண்குழந்தைகள்)

100 –ஆண்குழந்தைகள் 12வயதிற்கு உட்பட்டோர்.

150 குடும்பங்கள்.

மொத்தம் 572 பேர் தங்கியுள்ளனர்.

உனகல தமிழ் வித்தியாலயத்தில் இடம்பெயர்ந்து வாடும் மக்களின் எண்ணிக்கை விபரம் :-

41 பெண் குழந்தைகள்

33 ஆண் குழந்தைகள்.

மொத்தம் 297 பேர் தங்கியுள்ளனர்.

எங்கள் சகோதர உறவுகளான இம்மக்களின் துயர் துடைக்க நேசக்கரம் தருமாறு வேண்டுகிறோம். ஓவ்வொருவரும் தங்களால் இயன்றள உதவியை நல்குங்கள். சிறுதுளி பெருவெள்ளமாகும்.

குழந்தைகளுக்கு தேவையான போர்வைகள். ஒருபோர்வையின் விலை – 600ரூபா.

256 குழந்தைகளுக்கு – 153600.00ரூபா. (அண்ணளவாக யூரோ 930€)

பால்மா – ஒன்றின் விலை – 375.00ரூபா

256 குழந்தைகளுக்கு – 96000.00ரூபா. (அண்ணளவாக யூரோ 581€)

பிஸ்கெட் – ஒரு பெட்டி விலை – 500.00ரூபா.

256 குழந்தைகளுக்கு – 128000.00ரூபா(அண்ணளவாக யூரோ 775€)

நூடுல்ஸ் – 256பெட்டி – 64000.00ரூபா (அண்ணளவாக யூரோ 387€)

கடலை 256 கிலோ – 46080.00ரூபா ((அண்ணளவாக யூரோ 280€)

மொத்தம் தேவையான உதவி :- 2944€.

உதவிகளை வழங்க விரும்புவோர் கீழ்வரும் வங்கியிலக்கம் அல்லது பேபால் ஊடாக உதவ முடியும்.

Bank information

Germany:

NESAKKARAM e.V.55743 Idar-Oberstein

Konto-Nr. 0404446706

BLZ 60010070

Postbank Stuttgart

Other countrys:

NESAKKARAM E.V

A/C 0404446706

Bank code – 60010070

IBAN DE31 6001 0070 0404 4467 06

Swift code – PBNKDEFF

Postbank Stuttgart

Germany

Paypal Account – nesakkaram@gmail.com

Telephone: +49 (0)6781 70723 /Mobile – 0049 1628037418

nesakkaram@gmail.com

Skype – Shanthyramesh

www.nesakkaram.org

நேசக்கரம்

முகவரி:

Nesakkaram e.V

Hauptstr – 210

55743 Idar-Oberstein

Germany

http://nesakkaram.org/ta/nesakkaram.3695.html

 

Link to comment
Share on other sites

நாளை காலையில் நான் 100 டொலர்கள் அனுப்புகின்றேன் சாந்தி.  என் ஒரு சில நண்பர்களும் உதவுவார்கள் என்று நம்புகின்றேன்.

Link to comment
Share on other sites

பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிகளை முன்வந்து  இதுவரை உதவியவர்கள் விபரம் :-
 
தப்பிலி (கள உறவு) -  75.00€
பெயர் குறிப்பிடவிரும்பாத உறவு - 98.45€
கார்த்திசா கனகசபை - 58.05 €
நிழலி , நண்பர்கள் நகுல் ,  சேது மாதவன் - 207.31€
இசைக்கலைஞன் - 103.65€
சபேஸ் - 69.10€
யாழ் இணையம் - 84.62€ (இவ்வுதவியானது யாழ் இணையத்தினால் வழங்கப்பட்டது)
புங்கையூரான் - 68.31€
N.கருணாகரன் - 116,38€ 
வாசி - 77.59€

 

இதுவரையில் கிடைத்த மொத்த உதவி - 923.12€

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

$100 PayPal மூலம் அனுப்பியுள்ளேன்; கிடைத்ததும் உறுதி செய்யுங்கள்.

நன்றி

Link to comment
Share on other sites

சாந்தி,

 

யாழ் இணையத்தின் சார்பாக 100 டொலர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அண்மையில் எமக்கு கிடைத்த விளம்பரங்களினூடாக பெறப்பட்ட சின்ன வருமானம் இது.

 

 

நன்றி,

யாழ் இணையம்

Link to comment
Share on other sites

என‌து குடும்பத்தின் சார்பில் $150 அனுப்பி வைத்துள்ளேன் (paypal). நன்றி உங்கள் காலமறிந்த சேவைக்கு. என்னுடைய உண்மைப் பெயரை போட்டிடாதீங்க.. :D

Link to comment
Share on other sites

நானும் என் நண்பர்கள்

 

1. நகுல்

2. சேது மாதவன்

 

ஆகியோர் இணைந்து தலா 100 கனடிய டொலர்கள் படி மொத்தமாக 300 டொலர்கள் என்  பேபால் கணக்கின் மூலம்  அனுப்பியுள்ளோம். கிடைத்தவுடன் அறியத் தரவும்.

 

எம் நண்பர் குழாமில் இருக்கும் கார்த்திசா கனகசபை ஏற்கனவே உங்களுக்கு ஒரு சிறு தொகை அனுப்பியுள்ளார் என்று குறிப்பிட்டுள்ளீர்கள்.

Link to comment
Share on other sites

சபேஸ், நிழலி மற்றும் நண்பர்கள் ,இசைக்கலைஞன் , யாழ் இணையம் மோகன் அனைவரின் உதவிகளும் கிடைக்கப்பெற்றது. மிக்க நன்றிகள்.

Link to comment
Share on other sites

 
பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிகளை முன்வந்து  இதுவரை உதவியவர்கள் விபரம் :-
 
தப்பிலி (கள உறவு) -  75.00€
பெயர் குறிப்பிடவிரும்பாத உறவு - 98.45€
கார்த்திசா கனகசபை - 58.05 €
நிழலி , நண்பர்கள் நகுல் ,  சேது மாதவன் - 207.31€
இசைக்கலைஞன் - 103.65€
சபேஸ் - 69.10€
யாழ் இணையம் - 84.62€ (இவ்வுதவியானது யாழ் இணையத்தினால் வழங்கப்பட்டது)
புங்கையூரான் - 68.31€

 

இதுவரையில் கிடைத்த மொத்த உதவி - 660.84€

 

 

Link to comment
Share on other sites

கள உறவுகள் தங்கள் முகநூலிலும் இவ் உதவி தொடர்பாக பதிந்தால் உரிய இலக்கினை எட்ட முடியும்.

 

 

அங்கு அழிந்ததும், அழுவதும், அநாதைகளாக்கப்பட்டதும் எம் சக தமிழர்கள் தான்!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கள உறவுகள் தங்கள் முகநூலிலும் இவ் உதவி தொடர்பாக பதிந்தால் உரிய இலக்கினை எட்ட முடியும்.

 

 

அங்கு அழிந்ததும், அழுவதும், அநாதைகளாக்கப்பட்டதும் எம் சக தமிழர்கள் தான்!

 

கண்டிப்பாக நீங்கள் சொல்வது முற்றிலும் உண்மை..அனேகமான உறவுகளுக்கு இப்படி ஒரு பகுதி இணைக்கபட்டு இருக்கிறது என்பது தெரியாமல் கூட இருக்கலாம்.ஆகவே அடிக்கடி இந்தப் பகுதியை பலரின் பார்வைக்கு உட்படுத்துவது நன்று.

 

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

amazon gift card/voucher வடிவில் தந்தால்.. அதற்குரிய யூரோ..பெறுமதியை.. நேசக்கரம்.. வழங்குமா..??! அறியத்தாருங்கள். paypal வழியாக அனுப்புவதில் சிக்கல் இருக்கிறது... அதுதான்.  :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாந்தி... நானும் ஒரு $100 அவுஸி டொலர்கள் அனுப்பி வைத்துள்ளேன்!

 

காலமறிந்து, நேரமறிந்து... உதவும் நேசக்கரத்தின் பணிகள்... நீண்ட காலங்களுக்கு.. நிலைக்க வேண்டும்!

 

தங்களின் தளராத முயற்சிக்கு, எனது மனமார்ந்த நன்றிகள்!

 

 

Link to comment
Share on other sites

புங்கை உங்கள் உதவி கிடைத்தது மிக்க நன்றிகள்.இன்று வந்து தகவல் :- 75மேற்பட்ட சிறுவர்கள் பெற்றோரை இழந்துள்ளார்கள். மிகுந்த வறுமையில் வாழ்ந்தவர்களின் இந்தக் குழந்தைகளை காலம் இனி எந்த வகையில் வாழ வைக்கப்போகிறது தெரியவில்லை. 


amazon gift card/voucher வடிவில் தந்தால்.. அதற்குரிய யூரோ..பெறுமதியை.. நேசக்கரம்.. வழங்குமா..??! அறியத்தாருங்கள். paypal வழியாக அனுப்புவதில் சிக்கல் இருக்கிறது... அதுதான்.  :icon_idea:

மன்னிக்கவும் தம்பி அத்தகைய வசதி இல்லை. விரும்பினால் ஊருக்கு வங்கியிலக்கம் தரலாம் அதற்கு அனுப்புவீங்களென்றால் தரலாம்.


என‌து குடும்பத்தின் சார்பில் $150 அனுப்பி வைத்துள்ளேன் (paypal). நன்றி உங்கள் காலமறிந்த சேவைக்கு. என்னுடைய உண்மைப் பெயரை போட்டிடாதீங்க.. :D

 

அடப்பாவி மக்கா ஏனப்பா இந்தக்கொலைவெறி ? :D  இசை எப்போதும் இங்கு இசையும் கலையும் சேர்ந்த கலைஞன்தான். 4வருசமாக இசையை பாதுகாத்து வருகிறேன். இரகசியம் எப்போதும் பரகசியமாகாது தம்பி. :lol: கவலை வேண்டாம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மன்னிக்கவும் தம்பி அத்தகைய வசதி இல்லை. விரும்பினால் ஊருக்கு வங்கியிலக்கம் தரலாம் அதற்கு அனுப்புவீங்களென்றால் தரலாம்.

 

யாழ்பொற்கிழி(ளி) தந்த ஊக்குவிப்பு voucher (அமேசன்) போல ஒன்றை நேசக்கர மின்னஞ்சலுக்கு அனுப்பினால் உங்களுக்கு கிடைக்கும் தொகைக்கு சமனான தொகையை கொடுப்பீங்களான்னு சொல்லுங்க. ஊருக்கு நேர அனுப்ப முடியுமுன்னா.. அதை உங்களின் வங்கி இலக்கத்துக்கே அனுப்பிடுவமில்ல. முடிஞ்சா சொல்லுங்க. இல்லாட்டி பறுவாயில்லை. வேறு வழியில் உதவுவது பற்றி சிந்திக்கிறம்.  :)

Link to comment
Share on other sites

யாழ்பொற்கிழி(ளி) தந்த ஊக்குவிப்பு voucher (அமேசன்) போல ஒன்றை நேசக்கர மின்னஞ்சலுக்கு அனுப்பினால் உங்களுக்கு கிடைக்கும் தொகைக்கு சமனான தொகையை கொடுப்பீங்களான்னு சொல்லுங்க. ஊருக்கு நேர அனுப்ப முடியுமுன்னா.. அதை உங்களின் வங்கி இலக்கத்துக்கே அனுப்பிடுவமில்ல. முடிஞ்சா சொல்லுங்க. இல்லாட்டி பறுவாயில்லை. வேறு வழியில் உதவுவது பற்றி சிந்திக்கிறம்.  :)

மன்னிக்கவும் வேறு வசதிகள் இல்லையப்பா. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மன்னிக்கவும் வேறு வசதிகள் இல்லையப்பா. 

 

இல்லையே. பறுவாயில்லை விடுங்க.  :(  :icon_idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நெடுக்கருக்கு உள்ள அதே பிரச்சினைதான் எனக்கும்.

பெயர் விபரம் தெரியாமல் பணம் அனுப்புவது எப்படி? தெரிந்தவர்கள் சொல்லவும்.

Link to comment
Share on other sites

paypal மூலம் பணம் அனுப்பினால் உங்கள் வங்கி விபரங்கள் தெரிய வராது. முற்றுமுழுதாக anonymous  ஆக பணம் அனுப்ப விரும்பினால் ஒரு pre-paid visa card ஒன்றை கொள்வனவு செய்யவும். ஒரு புதிய paypal கணக்கை துவங்கி அந்த கணக்கில் இந்த pre-paid visa card ஐ இணைத்து அதன் மூலம் பணத்தை அனுப்பலாம். இந்த முறை மூலம் உங்கள் சொந்த விபரங்களை தெரியப்படுத்தாமலயே உதவலாம். 
உதவி தான் முக்கியம். அதை எந்த விதத்தில் செய்தால் என்ன. 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சாந்தியக்கா,

https://www.justgive.org

இதில் நீங்கள் ஏன் சேரக்கூடாது? இவர்கள் anonymous donations ற்கு வழி செய்து கொடுக்கிறார்கள்.

Link to comment
Share on other sites

நெடுக்கு மற்றும் கோசான்,


நீங்கள் உங்கள் பெயர் தெரியாமல் இருக்க பின்வரும் வழிமுறையை பின்பற்றலாம் என்று நினைக்கிறேன்.

இரண்டு Paypal கணக்குகளை திறவுங்கள். ஒன்றை உங்கள் சொந்த பெயரில் வைத்திருங்கள்.

மற்றதை என்ன பெயரில் வேணும் என்றாலும் வைத்திருங்கள்.

முதலில் உங்கள் சொந்த பெயரில் உள்ள Paypal கணக்கில் இருந்து மற்ற பெயரில் உள்ள Paypal கணக்கிற்கு பணத்தை அனுப்புங்கள்.

பின்னர் மற்ற Paypal கணக்கில் இருந்து சாந்தியக்காவுக்கு அனுப்புங்கள்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இருப்பது ஒரு பிரச்சனை தான். திறக்கும் பேபால் கணக்குக்கு காட் விபரங்கள்.. கொடுக்க விருப்பமில்லை. (ஏலவே ஈபேயில் பெற்ற கெட்ட அனுபவத்தின் அடிப்படையில்). அத்தோடு வங்கியில் இருந்து பேபாலுக்கு காசு அனுப்பக் கூடிய வசதி இப்போ இல்லை. அதனால் தான் மாற்றுவழியை தேடினோம். எங்களுக்கு கொழும்பு இந்துமாமன்றம்..விவேகானந்த சபைகளோடு தொடர்பிருப்பதால் அங்குள்ளவர்களின் ஊடாகவும் செய்ய முயற்சித்துள்ளோம்.

 

நன்றி பகலவன் தங்கள் விபரத்துக்கு.  :)

Link to comment
Share on other sites

 

பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிகளை முன்வந்து  இதுவரை உதவியவர்கள் விபரம் :-
 
தப்பிலி (கள உறவு) -  75.00€
பெயர் குறிப்பிடவிரும்பாத உறவு - 98.45€
கார்த்திசா கனகசபை - 58.05 €
நிழலி , நண்பர்கள் நகுல் ,  சேது மாதவன் - 207.31€
இசைக்கலைஞன் - 103.65€
சபேஸ் - 69.10€
யாழ் இணையம் - 84.62€ (இவ்வுதவியானது யாழ் இணையத்தினால் வழங்கப்பட்டது)
புங்கையூரான் - 68.31€
N.கருணாகரன் - 116,38€ 
வாசி - 77.59€

 

இதுவரையில் கிடைத்த மொத்த உதவி - 923.12€

 

 

Link to comment
Share on other sites

சகாரா அனுப்பிய 96.16€ உதவி கிடைத்துள்ளது.

 

இதுவரையில் கிடைத்த மொத்த உதவி - 1019.28€

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.