Jump to content

பேஸ்புக்கில் இதுவரை எவ்வளவு நேரம் நீங்கள் வீண் செய்துள்ளீர்கள் ?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பத்தாண்டுகளை கடந்துள்ள பேஸ்புக்கில் நாம் இழந்துள்ள நேரம் நினைத்து கொண்டிருப்பதை விட அதிகம். இன்று பலர் இணையத்திற்கு  வருவதே பேஸ்புக் தான் பயன்படுத்த தான் என்று ஆகிவிட்டது.

 

Facebook-Time-Waste-300x212.jpgநேரம் காலம் இல்லாமல் அப்படி எவ்வளவு நேரம் தான் நீங்கள் பேஸ்புக்கில் வீண் செய்துள்ளீர்கள் ? அறிந்து கொள்ள விரும்புபவர்கள் கீழே உள்ள பாக்ஸில் Next என்பதை கிளிக் செய்யுங்கள். அடுத்து ஓபன் ஆகும் பாப்-அப் விண்டோவில் “Okay” என்பதை கிளிக் செய்யுங்கள். இப்போது Next என்பது Start என்று மாறி இருக்கும்.

இப்போது நீங்கள் ஒரு நாள்/வாரம்/மாதத்திற்கு எவ்வளவு நேரம் பேஸ்புக்கை பயன்படுத்துகிறீர்கள் என்பதை குறிப்பிட வேண்டும். இதை முடித்தவுடன் “Start” என்பதை கிளிக் செய்யுங்கள். இப்போது சில நிமிடங்கள் காத்திருங்கள், நீங்கள் பேஸ்புக்கில் கணக்கை ஆரம்பித்த நாளில் இருந்து எவ்வளவு நேரம் பேஸ்புக்கில் வீண் செய்துள்ளீர்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.

(Letters க்கு மேலே உள்ள நம்பர்களை பயன்படுத்தவும். Num Lock பகுதியில் உள்ள எண்கள் மூலம் டைப் செய்ய முடியாது)

http://ti.me/1kySzM6

how-much-time-wasted-facebook.png

 

http://ti.me/1fpjFQa#FBTime

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஃபேஸ்புக்கின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்ன?

உலகம் முழுவதும் வாடிக்கையாளர்களைக் கொண்டு வெற்றிகரமாக இயங்கி வரும் ஃபேஸ்புக் இணைய தளத்தின் அடுத்த கட்ட நடவடிக்கைகள் என்னவாக இருக்கும் என தெரிந்து கொள்ள அனைவருக்கும் ஆர்வமாக இருக்கும்... சிலருக்கு குழப்பமாகக்கூட இருக்கும். ஆனால்  ஃபேஸ்புக்கின் செயலாளர் மார்க்குக்கு அதில் எவ்வித குழப்ப்பமும் இல்லை... ஏன் அடுத்த பத்து ஆண்டுகளுக்கு நாம் என்னென்ன செய்ய வேண்டும் என்று ஒரு பட்டியலையே தயாரித்துள்ளார்.


மூன்றாண்டு திட்டம், ஐந்தாண்டு திட்டம், பத்தாண்டு திட்டம் என அடைய வேண்டிய இலக்குகளை நிர்ணையத்துள்ளார். அதுமட்டுமல்லாமல் தேர்தல் நேரங்களில் ஆளுங்கட்சியினர் வெளியிடுவது போல் கடந்த கால சாதனைகள் பட்டியலும் தயார் செய்யப்பட்டுள்ளது. அந்த பட்டியலில் சுவாரஸ்யமான பல தகவல்களும் உள்ளன..

தினமும் 864 மில்லியன் பயனாளர்கள் ஃபேஸ்புக்கைப் பயன்படுத்துகிறார்கள். ஃபேஸ்புக் குழுவின் மூலம் கிட்டத்தட்ட 700 மில்லியன் நபர்கள் தொழில் சார்ந்த இணைப்பை பெறுகிறார்கள். இதுபோன்ற பெருமளவில் நமது தயாரிப்பு பயன்படுத்தப்படுவதின் மூலம் நம் சேவை தரம் நன்றாக உள்ளது என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. 
   
ஃபேஸ்புக் பிரபலமான மனிதர்களையும் அவர்களின் ரசிகர்களுக்கும் ஒரு பாலமாக மாறியுள்ளது. பிரபலங்களுக்கும், ரசிகர்களுக்குமிடையே வாராவாரம் ஒரு பில்லியன் உரையாடல்களுக்கு மேல் நடைபெற்று வருகிறது. வீடியோ பரிமாற்றத்திலும் பெரும் வெற்றியை கண்டுள்ளோம். ஐஸ்பக்கெட் சேலஞ்ச் சார்பாக 10 மில்லியன் வீடியோக்கள் தரவேற்றப்பட்டு 440 மில்லியன் மக்களால் பார்வையிடப்பட்டுள்ளதே இந்த துறையில் நமது செயல்பாட்டிற்கான சான்று.

போட்டோ பரிமாற்ற இணைய தளமான இன்ஸ்டாகிராமும் பெருமளவு மக்களிடையே சென்றடைந்துள்ளது. இன்ஸ்டாகிராம் பயனாளர்கள் சராசரியாக 21 நிமிடம் இன்ஸ்டாகிராம் தளத்தில் செலவிடுகிறார்கள். 

facebook%20mark.jpgஇதுபோன்ற சாதனைகளின் பட்டியலை வெளியிட்டவர், அடுத்த 10 ஆண்டுகளில் என்னென்ன நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்பது குறித்தும் நிர்வாகிகளிடம் விளக்கினார்.
  
அதில், அவர்களின் முக்கியமான குறிக்கோளாக உள்ளது மெசேஜிங்தான். ''இன்னும் மெருகூட்டப்பட்ட, வேகமான தகவல் பரிமாற்ற சேவையை வழங்க வேண்டும் என்பதுதான் முக்கிய குறிக்கோள்.அனைத்து சேவைகளிலும் பயனாளர்களின்  எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும். மேலும் ஃபேஸ்புக்கை ஒரு கிராஷ்பிளாட் பார்மாக மாற்ற வேண்டும். கடந்த ஜூலை மாதம் ஏர்டெல் நிறுவனத்துடன் இணைந்து internet.org என்ற அப்ளிகேசனை ஜாம்பியா நாட்டில் வெளியிட்டது ஒரு புது அனுபவமாக இருந்தது. 

internet.org  என்பது உடல் நலம், கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் தொலைத்தொடர்பு சம்பந்தமான இணையதள சேவைகளை இலவசமாக பெற்றுக்கொள்ள வழிவகை செய்யும் ஒரு அப்ளிகேசன். இந்த சேவைக்கு கிடத்த வரவேற்பு மகிழ்ச்சியளிக்கிறது. இந்த சேவையை இன்னும் பல நாடுகளுக்கு வழங்க வேண்டும். கடந்த பல மாதங்களாகவே பல நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டு பல நிறுவனங்களுடன் ஆலோசனை செய்துள்ளேன். இதை ஒரு நீண்ட கால இலக்காக எடுத்துக்கொண்டு செயல்பட வேண்டும்" என தெரிவித்தார்.

''இந்த காலாண்டு வெற்றிகரமாக அமைந்துள்ளது. இந்த மகிழ்ச்சியான தருணத்தில் அனைத்து ஃபேஸ்புக் பணியாளர்களுக்கும், பங்குதாரர்களுக்கும் நன்றியை தெரிவிக்க விரும்புகிறேன். இன்னும் நீண்ட தூரம் நாம் பயணிக்க வேண்டும். நாம் தேர்ந்தெடுத்துள்ள பாதை மிகச் சரியான பாதை. நம் முன்னேற்றமும் அதுபோலவே மிகச்சீராக இருப்பது கண்டு நான் பெருமைப்படுகிறேன்" எனத் தெரிவித்தார்.

எஸ்.தினேஷ்குமார்

(மாணவப் பத்திரிகையாளர்)

vikatan

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Posts

    • இந்தியாவில் லோக்சபா தேர்தல் கட்டம் கட்டமாக நடப்ப்துதான் வழமை. பெரிய மாநிலங்களில் பிரிப்பார்கள். ஆனால் வெறும் 39 தொகுதிகள் உடைய மத்திய அளவு மாநிலமான தமிழ் நாட்டில் ஒரே நாளில்தான் வைப்பார்கள்.  
    • கெட்ட வார்த்தை பின்னோட்டங்கள் இட்டவர்கள் எல்லோரும் நாம் தமிழர் கட்சிகளை சேர்ந்தவர்களாம்.
    • பதில் 9 புள்ளிகளில் வழங்கப்பட்டுள்ளது.
    • என்றுமே உண்மையாக இருந்தால் இந்த உலகில் வாழ்வது மிக சிரமம்.
    • நாளைய தினம் முதல் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படக் கூடிய அபாயம் உள்ளதாக  எரிபொருள் விநியோகஸ்தர்கள்  சங்கம் தெரிவித்துள்ளது.    எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வற் வரி காரணமாக இந்த நிலைமை ஏற்படக்கூடிய ஆபத்து உள்ளது என்று  அந்த சங்கத்தின் பொதுச் செயலாளர் கபில நாவுதுன்ன(Kapila Navuthunna) தெரிவித்துள்ளார். இதன்படி, எரிபொருள் நிரப்பு நிலையங்களின்  வற் தவணைகள் நாளை முதல் செலுத்தப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார். நாளை முதல் செலுத்த வேண்டிய வற் வரி இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், எரிபொருள் நிலையங்கள் கடும் நெருக்கடி நிலைக்குள்ளாகியுள்ளது. எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வற் வரி என்பது உரிமையாளருக்கு கிடைக்க கூடிய சிறிய தொகையில் செலுத்த வேண்டிய வற் வரியாகும். அதற்குரிய வற் தவணைகள் நாளை முதல் செலுத்தப்பட வேண்டும்.   அவ்வாறு செலுத்தப்படாது விட்டால் எரிபொருள் நிலையங்களின் அடுத்தக்கப்பட்ட பயணங்கள் மேற்கொள்ள முடியாத நிலைமை ஏற்படும். கடந்த 3 மாதங்களாக இந்த பிரச்சினையை தீர்க்க கோரிக்கை விடுத்தோம். எனினும் கலந்துரையாடல் மேற்கொள்வதற்கேனும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. 20ஆம் திகதிக்கு பின்னர் எரிபொருள் நிலையங்களில் கடும் நெருக்கடியை சந்திக்கும்.     இந்த VAT வரியால் சிறிய நிரப்பு நிலையங்கள் கூட 10 லட்சத்திற்கும் அதிக VAT வரி செலுத்த நேரிடும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.   https://tamilwin.com/article/fuel-shortage-in-the-country-1713508148?itm_source=article
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.