Jump to content

ஒரு இரவு யானையுடன் ...!


Recommended Posts

வாழ்வின் மரணத்துக்கு பக்கதில் இருந்து திரும்புதல் என்பது இப்பொழுது சுகமான மீட்டலா இருந்தாலும் அவ்வேளைக்ளும் அந்த தருணங்களும் படபடப்பானவை ஒவ்வெரு நொடியும் பொழுதும் பக் பக் என வாங்கும் மூச்சை வேகமா விடவும் முடியாமல் அமைதி காப்பது என்பது அதை விட கொடிது ..

 

அவ்வாறு அனுபவித்த ஒரு சம்பவத்துக்கு உங்களை கூட்டி போகலாம் வாருங்கள் ..

 

பயிற்ச்சிகள் முடித்தா வேளை மூன்று அணிகள் பிரித்து இரண்டு இரவுகள் காட்டில் மறைந்து வாழ்வெனும் ஒரு அணி அவர்களை தேடி மிகுதி இரண்டு அணியும் செல்ல வேணும் கண்டு பிடித்தால் பிடித்து வந்து தண்டனை கொடுக்கலாம் எப்படியும் என்று சொல்லி ஏழு ஏழு பேர்களா பிரித்து குலுக்கள் முறையும் தெரிவு நடக்கு முதல் அணியே எங்கள் அணி தலைமறைவு ஆகணும் இரண்டு இரவு இன்று பின்னேரம் நீங்கள் போகலாம் உங்களுக்கான உலர் உணவு ...ஒரு சோறு பை தயார் எடுத்துட்டு கிளம்புங்க என்று மாஸ்டர் மார்ஷல் சொல்லிட்டு சொன்னார் இங்கிருத்து நீங்கள் ஆறு கிலோமீட்டர் சுற்றுக்குள் நிக்க வேணும் சரியா என்று ஓகே அனைவரும் தங்களின் குடிலுக்கு வந்து அனைத்து பொருள்களும் எடுத்து வைத்துகொண்டு கிளம்பு தயார் ஆனோம் ...

 

எங்களில் ஒருவன் இருந்தான் நிரந்தர இடமா ஸ்கந்தபுரம் மணியம் குளம்  என்னும் இடத்தில் பிறந்தவன் சிறு வயது முதல் வேட்டை காடு என்று திரிபவன் அவனுக்கு கொம்பாஸ் இல்லாமல் எங்க போக வேணுமோ அங்க சும்மா நடந்து போவான் அது எந்த ஈறல் காடா இருந்தாலும் சரி அவனுக்கு கை வந்த கலை தான் நடந்தால் காடு விலத்தி கொடுக்கும் என்று சொல்லுவான் இசையாளன் எப்பொழுதும் எங்கள் அணியில் இருப்பதால் கொஞ்சம் நம்பிக்கை அதிகம் எமக்கு ..

 

சரி சாயங்காலம் ஒரு ஐந்து மணிக்கு பின் நாம் மாஸ்டருக்கு என்ன பகையில் போகுறோம் என்று தனிமையில் சொல்லி விட்டு கிளம்பி போனோம் பனிச்சம் குளம் மேற்கா இப்படியே நேர போனா தேராம்கண்டால் காடு வரும் அதுக்கு இடையில் நாம் எங்காவது தங்கிட்டு திரும்புவம் என இசையாளன் முன்னே சொல்கிறான் இரவு பொழுது மங்க தொடங்க காடு தன் இருளை வாங்கியது கைகள் எட்டும் துரத்தில் வாருங்கள் என்று சொல்லிக்கொண்டு சில் வண்டுகளின் ரீங்காரம் கேட்டபடி நாம் கால்கள் படும் இடங்களில் இருந்து ஓடும் உயிர்கள் சாகாமல் சருகுகள் குலையாமல் நடக்க வேணும் காரணம் நாம் போகும் தடம் எங்களை பின்தொடர உதவும் என்பதால் ....

 

அப்படியே போய் ஒரு சிறிய நீர் தேக்கம் கிட்டவா போயிட்டம் கடும் இருட்டில் இவ்வளவு நேரம் நடந்தால் எத்தினை கிலோமிட்டர் என்று ஒரு கணக்கில் இங்கின ஒரு இடத்தில் தங்குவம் என்னும் முடிவில் ஒரு சூரை பத்தை பக்கத்தில நிக்கிறம் நல்ல இடம் அப்படியே தடவி கீழ இருங்கோ என்னும் கட்டளைக்கு இருந்தம் இப்ப பொழுதை போக்குவம் எப்படியும் நாளைக்குதான் காலை அவங்கள தேடி கிளம்புவாங்கள் அதுக்குள்ளே நாங்க ஒளியும் இடம் தேடி பிடிக்கலாம் என்று சொல்லியபடி ஆளை ஆள் பக்கத்தில் இருந்து பழைய புதுக்கதை என்று தூக்கம் இல்லாத இரவு விடிந்தது முதல் நாள் .........

 

 

ஓகே தம்பிகள் உங்களை தேடி இரண்டு அணியும் கிளம்பிட்டு பிடிபட்டால் பச்சை மிளகாய் தீத்துவாங்கள் கவனம் என்று தொடர்பில் சொன்னார் மாஸ்டர் இருந்த இடத்தில் இருந்து இன்னும் கொஞ்சம் நடந்து அங்கும் ஒரு சூரை பத்தையுடன் கூடிய பெரிய பாலை மரம் அருகில் ஒரு முதிரை ஓகே நல்ல இடம் என்று கொண்டுவந்த படுக்கை யூரியா பையை விரித்து போட்டு ஆளை ஆள் உள்ளே நுழைந்து பக்கம் பக்கமா கிடந்து உலர் உணவை சாப்பிட ஒருவன் அதுக்குள் கிடந்த பேரிச்சம் பழம் சாப்பிட்டு கொட்டையை ஏறிச்சு போட்டான் பக்கத்தில் இருந்து எங்க விழுகுது என்று பார்த்து கொண்டு இருந்து விட்டு இருநாடான் கேட்டான் மச்சி நாளைக்கு ஐந்து பேரிச்சம்பழம் போட்டது எங்க ஐந்து கொட்டையும் என்று வாத்தி கேட்டா எப்படி கொடுப்ப என்று தடார் என்று எழும்பி ஓம் மச்சான் மறந்து போனேன் எங்கடா விழுந்தது என்று உள்ள சருகு குப்பை எல்லாம் ஒரு அலசு அலசி களைத்து போனான் அமரன் சரி விடு எனக்கு உன் பையில் இருக்கும் லட்டை கொடு நான் உனக்கு ஏறிச்ச கொட்டையை தாரன் என்று பேரம் பேசி வாங்கினான் நாடான் ஒரே சிரிப்பு ஒரு அதுக்கு பிறகு அவனுக்கு பெயர் பழம் ஆனது ....

 

சரி சத்தம் வேணாம் இனி எல்லோரும் ஒவ்வெரு பக்கமா பாருங்கோ அவதானம் ஆளுக்கு ஒரு திசையை பிடித்து அவதானியுங்கோ ...எங்காவது அவங்கள் வரும் சருகு சத்தம் கதை கேட்குதா உன்னிப்பா பாருங்கோ இன்று இரவும் சமாளிச்சா போதும் என்னும் நினைப்பில் மெதுவா இருள தொடங்கிட்டு ஓகே மச்சான் அவங்கள் இனி பிடிக்க மாட்டங்கள் என்று சொல்ல அமரன் சொன்னான் சிலவேளை எங்காவது பக்கத்தில வந்து கிடந்திட்டு இரவுதான் அடி விழுகுதோ தெரியவில்லை எதுக்கும் ஒருக்கா ஒரு சுற்று சுற்றி வந்து பிறகு படுப்பம் ஓகே என்று சந்தேகத்தை தீர்த்து போட்டு உறங்கு நிலைக்கு தயார் ஆனோம் ....

 

முதல் நாளும் பகிடி பம்பல் என்று கதையுடன் போனதால் எல்லோரும் வேகமா உறங்க தொடங்க ஒருவனை சென்றி விட்டு மிகுதி ஆறும் நித்திரை போக ஒரு சாமம் கடந்து இரண்டு மூணு மணி இருக்கும் படார் என்று ஒரு மரம் முறியும் சத்தம் மிக அருகில் சென்றிக்கு இருந்தவன் டேய் எழும்புங்கடா என்று கத்திய கணத்தில் எல்லோரும் கும் இருட்டில் என்ன என்று ஆளை ஆள் முழிக்க எங்களுக்கு மிக அருகில் யானை ...

 

பெரு மூச்சு ஆளை தூக்கும் அளவு கேட்குது முடிச்சுது கதை கூட்டமா வேற வந்திருக்கு எது எங்க காலை வைக்கும் என்று தெரியாது இருட்டில் எது எங்க நிக்கு என்று வேற தெரியாது இசையாளன் சொன்னான் பயப்பிட வேணாம் ரைபிள் வாசனைக்கு கிட்டவா வராது அது பத்தடி தள்ளித்தான் நிக்கு வெடி வைக்க வேணாம் இடம் தெரியும் கத்தி கித்தி சத்தம் போட்டியல் அது எங்காவது கலைத்து ஓட எங்களுக்கு மேலாலும் ஓடும் நாங்க நிக்கும் இடத்துக்கு கிட்ட எங்கையோ ஒரு மொட்டை இருக்கு அது தண்ணிக்கு வந்திருக்கும் சும்மா இருங்கடா என்று சமதானம் சொன்னான்.... அட பாவி காடு தெரியும் காடு தெரியும் என்று யானை கிட்டவா கூட்டி வந்த இரடி உனக்கு விடிய உயிர் இருந்தா என்று சிறைவாணன் சவால் விட இசையாளன் சொன்னான் புலிகளின் குரல் செய்திகள் யானை மிதித்து லெப் சிறைவாணன் சாவு டேய் சிரிக்க முடில வயிறு கலக்குது உனக்கு பகிடி கேட்குது என்று இரண்டு பேச்சு விழுந்துது இசையாளனுக்கு மச்சான் கட்டான் கொண்டுவந்து விட்டன் பாரு சும்மா இரு பாலையை கட்டி பிடி என்றான் அமரன் ..........

 

மூச்சும் சத்தமும் யானை எங்களை விட்டு போற பிளேன் இல்லை போல அதுக்கு விரும்பிய மரம் அல்லது அறுகம்புல் கண்டுட்டு போல நிலவு தாழ தான் போகும் சும்மா இருங்கடா என்று இசையாளன் பேசுவது எவனும் கேட்பதா இல்லை யானை திரும்பும் சத்தம் கால்கள் கீழே கிடக்கும் தடிகள் சுள்ளிகளில் பட்டு அவை நெருங்கும் சத்தம் எல்லாம் ஒரு எ ஆர் ரகுமானை கண்ணுக்குள் கொண்டுவரும் மாட்டினா உங்க எலும்பும்  இப்படித்தான் நொறுங்கும் மச்சி அப்படியே பின்னாடி போவம் வேணாம் காத்து வழம்  எங்கட வாடை யானைக்கு இன்னும் பிடிக்க வில்லை இப்படி இருங்கோ சிலவேளை எங்களில் வாடை பிடித்தால் அது மிரள தொடங்கும் சும்மா இதிலையே இருங்கோ ......அட இவன் எங்களை வைத்து யானை ஆராய்ச்சி பண்ணுறம் போல எல்லாத்துக்கும் கதை சொல்லுறான் பாரு டேய் மம்மில் பிள்ளையார் என்று ஒரு பிள்ளையார் இருக்கிறார் அவரை கும்பிடு யானை உனக்கு கிட்டவா வராது அது சரி இவ்வளவு நேரம் நீ அவரையா கும்பிட்டு கொண்டு எங்களுக்கு கதை சொன்னனி என்று சிறைவாணன் சொல்லிட்டு சொன்னான் அந்தாள் ஆமி வந்தவுடன் இடம் பெயர்த்து போயிட்டார் அதுக்கும் நீ மணியம் குளம் வைரவரை கும்பிடும் என்று ...

 

இழவு வேட்கி வேலை செய்யுது எடுக்கவா வேணாமா வாத்தி தொடர்பில வேணாம் சுணங்கி எடுப்பம் சென்ரி இருக்கா என்று பார்க்க தான் ஆள் எடுக்குது பிறகு எல்லோரும் நித்திரை என்று நாளைக்கு பத்து ரவுண்டு ஓட விடும் அதுக்கு யானை மிரிச்சாலும் பருவாயில்லை போடா என்று விட்டு தொடர்பை எடுத்தான்... சொல்லுங்கோ பெடியள் ஓகேயா என்ன செய்யுறாங்கள் சாப்பிட்டவங்களா கொண்டுபோன தண்ணி காணுமா எல்லோருக்கும் என்று கேட்டுட்டு கவனம் பாம்பு ...பூரான் சரிடா தம்பியல் நாளைக்கு சந்திப்பம் என்று அணைத்தார் தொடர்பை... மச்சி வாத்தி வேற இந்த நேரம் அன்பா கதைக்குது என்ன சிக்கல் நல்லதா தெரியவில்லை எனக்கு ....போடா அவரு பயிற்ச்சி செய்யும் மட்டும்தான் ஆள் இறுக்கம் மற்றும்படி சுப்பர் ஆள் என்று அமரன் ம்ம் சாகிற நேரம் வாத்திக்கு சான்றுதல் கொடுக்கிறான் இவன் என்று ஆளை ஆள் கடி ........

 

ஒரு பொழுதா இரண்டு மணித்தியாலம் யானையும் நாங்களும் ரவுண்டு கட்டி கொஞ்சம் கொஞ்சமா ஓய்வுக்கு வந்தம் சத்தம் குறைய தொடங்கிட்டு அப்படியே இந்த யானை தென்னியம்குளம் ஊடா போகும் இது அதுகிண்ட வழமையான பாதை எடா என்று தன் காட்டு அனுபவத்தை வைத்து சொன்னான் இசையாளன் ...அந்த மணித்தியாலம் ஒரு நொடியும் கடந்த நேரம் என்பது மிக மிக கொடுமை எனலாம் இருட்டில் அடுத்த காலடி எங்க மேல கூட இருக்கும் என்று கழிந்த நொடி பொழுதுகள் இன்றும் நினைக்கும் பொழுதுகளில் ஒரு முறை கலங்கடித்து செல்லும் ...

 

இசையாளன் சொன்னான் நானும் எங்க அப்பாவும் ஒரு முறை தனியன் யானையிடம் மாட்டி தப்பி வந்தனாங்கள் இது கூட்டமா வரும் யானை ஆக்களுக்கு ஒன்னும் பண்ணது ...அது சரி நாங்க உன்னிடா மாட்டினது போல என்று சொல்லுற என்று பழையபடி சிரிப்புக்கு வந்தான் சிறைவாணன் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்களுக்கு ஒரு இரவுதான் யானையோட எங்களுக்கு ஒவ்வொரு இரவும்( குறட்டையை சொல்கிறேன்)

Link to comment
Share on other sites

நன்றி மீரா வருகைக்கு ...கருத்துக்கும் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் ஏ.சி யிலிருந்து தேசியம் பேச, போராளிகள் ...பல கஸ்டங்களின் மத்தியில் ......

Link to comment
Share on other sites

நாங்கள் ஏ.சி யிலிருந்து தேசியம் பேச, போராளிகள் ...பல கஸ்டங்களின் மத்தியில் ......

நன்றி புத்தன் அண்ணே ..

 

அது எல்லாம் எங்களுக்கு தெரியாது கீபோட்டில் நாடு பிடிக்கலாம் என்று மட்டும் தெரியும் அண்ணே  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முற்றுப்புள்ளிகள் போட்டுப் பழகுங்கோ. அப்பத்தான் வாசிப்பவருக்கு சலிப்பு வராது. அஞ்சரண்

Link to comment
Share on other sites

நன்றி சுமோ அக்கா வரவுக்கு ...

 

புள்ளி போடுறது நமக்கு கீபோட்டில் சூட்டாலும் வருது இல்லை நான் என்ன பண்ணுற  :unsure:

 

 

வருகை தந்த அனைத்து உறவுகளுக்கும் நன்றி .

Link to comment
Share on other sites

உங்கள் கதையை இப்பதான் வாசித்தேன் அஞ்சரன்.   உயிர் செத்துப் பிழைத்த சொந்த அனுபவத்தினை கதையாக்க முயன்று இருக்கின்றீர்கள்.

ஆனல் கதையை பின் தொடர்வதும், அனுபவத் தொற்றலுக்குள்ளாவதும் கடினமாக இருக்குமளவுக்கு  உங்கள் எழுத்து இருக்கு அஞ்சரன். பல எழுத்துப் பிழைகள், முற்றுப் புள்ளிகள் இல்லாமை, இருவர் கதைக்கும் போது இட வேண்டிய quotation marks, மற்றும் 'கமா' க்கள் இல்லாமை போன்றவற்றால் உங்கள் எழுத்துகளை புரிய கடினமாக இருக்கு (முக்கியமாக கதைகளை).

 

நன்றி

Link to comment
Share on other sites

உங்கள் கதையை இப்பதான் வாசித்தேன் அஞ்சரன்.   உயிர் செத்துப் பிழைத்த சொந்த அனுபவத்தினை கதையாக்க முயன்று இருக்கின்றீர்கள்.

ஆனல் கதையை பின் தொடர்வதும், அனுபவத் தொற்றலுக்குள்ளாவதும் கடினமாக இருக்குமளவுக்கு  உங்கள் எழுத்து இருக்கு அஞ்சரன். பல எழுத்துப் பிழைகள், முற்றுப் புள்ளிகள் இல்லாமை, இருவர் கதைக்கும் போது இட வேண்டிய quotation marks, மற்றும் 'கமா' க்கள் இல்லாமை போன்றவற்றால் உங்கள் எழுத்துகளை புரிய கடினமாக இருக்கு (முக்கியமாக கதைகளை).

 

நன்றி

நன்றி நிழலி அண்ணா நானும் முயற்சி செய்வது உண்டு ஆனால் முடியாமல் அப்படியே விடுவது கூகுளில் டூல் தான் எழுதுகிறேன் அது ஒரு கமா அல்லது முற்று புள்ளி இடும்போது மீண்டும் கணணி மொழிக்கு மாறி விடுகிறது அதனால் மீண்டும் வெளியில் போய் உள்ளே வரவேண்டிய நிலை எனக்கு அதனால் கொப்பி பண்ணித்தான் போய் வரவேணும் ...........

 

இலகுவா கீபோட் பாவிக்க எனக்கு  கடினமா இருக்கு அதனால் இவைகளை இடுவதில் சிக்கல் அதை நிவர்த்தி செய்ய முயற்ச்சி செய்கிறேன் கணணி பற்றி அறிவுள்ளவர்களிடம் கேட்டு ..

 

நன்றி வருகைக்கும் கருத்துக்கும் .

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் அனுபவத்தை எங்களுடன் பகிர்ந்தமைக்கு நன்றி அஞ்சரன் :):o

Link to comment
Share on other sites

நன்றி நிழலி அண்ணா நானும் முயற்சி செய்வது உண்டு ஆனால் முடியாமல் அப்படியே விடுவது கூகுளில் டூல் தான் எழுதுகிறேன் அது ஒரு கமா அல்லது முற்று புள்ளி இடும்போது மீண்டும் கணணி மொழிக்கு மாறி விடுகிறது அதனால் மீண்டும் வெளியில் போய் உள்ளே வரவேண்டிய நிலை எனக்கு அதனால் கொப்பி பண்ணித்தான் போய் வரவேணும் ...........

 

இலகுவா கீபோட் பாவிக்க எனக்கு  கடினமா இருக்கு அதனால் இவைகளை இடுவதில் சிக்கல் அதை நிவர்த்தி செய்ய முயற்ச்சி செய்கிறேன் கணணி பற்றி அறிவுள்ளவர்களிடம் கேட்டு ..

 

நன்றி வருகைக்கும் கருத்துக்கும் .

 

நன்றி அஞ்சரன்...  ஈ கலப்பை மென்பொருள் பயன்படுத்தி பார்த்துள்ளீர்களா?  இங்கு சென்று தரவிறக்கம் செய்யலாம்:  வின்டோஸ் 8 என்றால் கொஞ்சம் பிரச்சனை தரும். அதற்கு குறைவான இயங்குதளம் என்றால் நன்கு வேலை செய்யும்.

 

http://thamizha.org/2010/11/19/ekalappai-v3.html

 

அன்ரோயிட் கருவிகளில் இருந்து எழுதுகின்றீர்கள என்றால் 'செல்லினம்' நல்லதொரு மென்பொருள். Google play store இல் இலவசமாகக் கிடைக்கும்.

Link to comment
Share on other sites

கள வாழ்வின் கடினங்கள் அவற்றிலும் ஒரு மகிழ்வும் பெருமையும் உங்கள் அனுபவத்தினை தொடர்ந்து பதியுங்கள். அடர்காட்டின் வாசனையும் அதன் இனிமையும் அனுபவித்தவர்களால் தான் உணர முடியும். பலரது நினைவுகளை பலரது முகங்களை ஒரு இரவு காட்டின் அனுபவத்திலிருந்து நினைவு தருகிறது.

Link to comment
Share on other sites

நன்றி சாந்தி அக்கா வருகைக்கு .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
    • 15/2/24  மூன்று பேர் வைத்தியசாலைக்கு போய் தாமதமானதால் கடையில் வடை மூன்று தேநீர் ஒன்று வாங்கினோம், எண்ணூற்று பத்து ரூபா எடுத்து விட்டு மிகுதி காசைத்தந்தார் ஒரு கடைக்காரர். ஒருவேளை அவர்  கணக்க்கில மட்டோ அல்லது  என்னைப்பார்த்து பரிதாபப்பட்டு தர்மம் இட்டாரோ தெரியவில்லை! இதுக்கு யாரும் நீதிமன்றம் செல்ல எத்தனிக்கக் கூடாது.
    • சென்ரல் கொமாண்டின் மறுப்பு.
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.