Jump to content

ஆண்களுக்கான... கருத்தடை, அவசியமா?


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

ஆண்களுக்கான... கருத்தடை, அவசியமா?

 

ஆம்.... என்று, சொல்வேன் நான்.
இரண்டு, பிள்ளைகளை பெற்ற நான்...!?

மூன்றாவது, பிள்ளையையும்... பெற்றால்,  என் பொருளாதார நிலைமை, வீட்டில் இட வசதி இல்லாதது என்பதால்....  எனது மனைவி வயிற்றில் உருவாகிய...  (ஆறு கிழமை ஆன)  மூன்றாவது கருவை அழிக்க, வைத்தியர் உதவியை நாடினேன்.

 

அவர்களும்.... கருவில், உருவாகும் குழந்தையை அழிப்பது தவறு.
உங்களுக்கு, சில வழிகட்டுகின்றோம் என்று, இரண்டு மாதம், ஒவ்வொரு அலுவலகமும் ஏறி, இறங்கி வைத்து அன்பான... ஆலோசனையால் காலம் கடந்து......
மூன்று மாதம், ஆகி விட்டது.
 

இப்போ..... கருவை, கலைக்கத் தயார், என்று.....

அவர்கள் பச்சைக் கொடி காட்டிய போது....எங்களுக்கு, கொஞ்ச தயக்கம்,

அந்த இடத்திற்கு சென்ற, மனைவியின்... நடையை நினைத்தால்... மனம் இப்போதும் கலங்கும்.

 

சிறிது பேசியும், உற்சாகம் கொடுத்தும்....

கருக் கலைப்பு நிலையத்துக்குச் சென்று....
எல்லாச் சோதனைகளும், கேள்விகளும் முடித்து....
 

என்னை.... வெளியே... அனுப்பி,
ஊசி போட,  ஆரம்பிக்கும் போது...
ஊசியை.... தட்டி விட்டு, மனைவி....
பச்சை உடுப்புடன், என் முன் வந்து, நின்று,
நான்.... என், குழந்தையை கொல்ல... அனுமதிக்க மாட்டேன், என்று கத்தினார்........

 

(தொடரும்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

என்னப்பா... நடந்தது, என்று...
 

எனது, மனதில் உள்ள, பதட்டத்தை தணிக்க முடியாது,
அவளை... ஆலோசனை கேட்டேன்...

 

இது, சரி வராது. இவங்கள், என்னையும் பிள்ளையும் சேர்த்து கொல்லப் போறாங்கள்,
வாங்கோ..... வீட்டுக்குப் போவம். என்னும் போது....
 

மருத்துவர்களும், ஊழியர்களும் எம்மை... விநோதமாக பார்க்காமல்,

சிரித்துக் கொண்டே..... இது, இங்கு... வழமையாக நடப்பது தான்...
உங்களது.... மூன்றாவது, பிள்ளைக்கு வாழ்த்துக்கள் என்று கூறி...
ஒரு விசிடிங் கார்ட்டை, கையில் தந்து விட்டார்கள்.
 

அதில்..... "அப்பா, நீங்கதான்  கவன மாயிருக்கணும்."
என்ற மாதிரி...ஒரு வாசகமும் தொலை பேசி இலக்கமும்..
இது... என்ன, சிக்கலாய்.... என்று,

 

எதுக்கும்.... வீட்டை, போய்... யோசிப்பம் என்று விட்டு...
வாயில், புன்னகை பூத்த படி.... காரை ஸ்ரார்ட் பாண்ணினேன்.

 

(தொடரும்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தொடருங்கள் தமிழ்சிறி...வாசிக்க ஆவல்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வருகின்ற, வெள்ளிக்கிழமை தான்..... மிகுதி எழுதுவேன்.
அது வரை..... பொறுமை காக்கும் படி, உறவுகளை அன்பாக வேண்டுகின்றேன்.fahrrad.gif:D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருத்தடை சிகிச்சை தேவையற்றது என நினைக்கிறேன்..

 

சிந்தித்தால் வழிமுறைகளுமுண்டு,  ஐம்புலன்களையும் கட்டுப்பாடுடன் ஆள, வாழவும்  முடியும்.

மனமிருந்தால் மார்க்கமுமுண்டு, சிறப்பான வாழ்வுமுண்டு.

Link to comment
Share on other sites

ஒரு நாள் கவனக் குறைவு கூட உங்களை இக்கட்டான நிலைக்கு தள்ளலாம் :)  ஆதலால் ஆண்களுக்கு கருத்தடை அவசியம்தான் !!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளி முடிந்து சனியும் வந்திட்டுது.இன்னும் தெளியவில்லையோ?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

மனைவியின் வயிற்றில் வளரும் கரு வளரட்டும்,
அதற்கிடையில் நானே.... கருத்தடை செய்வது என்று தீர்மானித்து,

அப்பாவிடம் ஆலோசனை கேட்டேன். அவர், இதனை ஆண்கள் செய்வது நல்லதல்ல என்று கூறி,

மூன்றாவது குழந்தை பிறக்கும் போது....ஆஸ்பத்திரியில் வைத்து,

மனைவிக்கு கரு உருவாகாமல், அறுவை சிகிச்சை செய்ய முடியும் என்று கூறியதை,

மனைவியிடம் சொல்ல... அவர் தயங்கினார்.

 

இது சரிவாரது.... "ஆறின கஞ்சி, பழங் கஞ்சி" என்று விட்டு,
அடுத்த நாள், அவர்கள் தந்த தொலை பேசி அட்டையில் உள்ள வைத்திய நிலையத்துக்கு தொலை பேசி எடுத்து,

எனக்கு... நேரம்  ஒன்றை ஒதுக்கி தரும் படி கேட்ட போது.....

அடுத்த நாள், தம்மை வந்து சந்திக்கும் படி, நேரம் ஒதுக்கி தந்தார்கள்.

 

பல் வைத்தியர், கண் வைத்தியர், காது வைத்தியரை சந்திக்க கிழமை கணக்கில் காத்திருக்க வேணும்,

வெட்டி எறியிறதுக்கு மட்டும்..... உடனை வரச்  சொல்லுறாங்களே....

என்று, எனக்கு கொஞ்சம் உள்ளூறப் பயம் வரத்தான் செய்தது......

 

(தொடரும்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

அடுத்த நாள் அங்கு சென்ற போது....
எனது உடல் நிலையை சோதித்து விட்டு, "வாசெக்டமி" அறுவை  சிகிச்சை செய்ய.....  

உடல் தயாரான நிலையில் உள்ளதாக தெரிவித்து, சில படிவங்களில் கையெழுத்து இட வேண்டும்,

அதற்கு முன் உங்களுக்கு உள்ள சந்தேகங்களை கேளுங்கள் என்றார் வைத்தியர்.

 

அப்போ... நான் சிலவேளை..
எப்போதாவது, நாலாவது பிள்ளை பெற விரும்பினால்.... முடியுமா?
இதனை மீண்டும் சீரமைக்க முடியும். ஆனால்... 100% உத்தரவாதம் தர முடியாது என்று கூறினார்

 

இதனால்... எனது ஆண்மைக்கு, பாதிப்பு ஏற்படுமா? என்று கேட்டேன்.
அதற்கு அவர், ஆண்மைக்கு எவ்வித பாதிப்பும் இல்லை.
விதைப் பையிலிருந்து, விந்து அணுவை சுமந்து வரும் நரம்பை.....

இரு பக்கமும் வெட்டி, தைத்து விடுவோம். அதனால் விந்து வெளியேறுவதில் பாதிப்பு இல்லை.

வழமை போல் எல்லாம் இருக்கும்.ஆனால் கருத்தரிக்க முடியாது என்று கூறினார் வைத்தியர்.

 

எனக்கும் திருப்தி ஏற்பட்ட பின்... அவர்களது படிவங்களில்.... கையெழுத்து  இட்டு. 

அடுத்த கிழமை, ஒருநாள் சிகிச்சையை மேற்கொள்ள காலை எட்டு மணிக்கு, வரச் சொன்னார்கள்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இதென்னப்பு... பொறுத்த இடத்தில கொண்டுவந்து கதையை நிப்பாட்டிப்போட்டு...! :o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறிய மனப் போராட்டத்துடன்.... அடுத்த கிழமையும், வந்தது.
காலை எட்டு மணிக்கு அங்கு, சென்ற போது....
என்னை வரவேற்பறையில்... காத்திருக்கச் சொன்னார்கள்.
ஐந்து நிமிடத்தில்... எனது பெயரை அங்குள்ள, ஒலிபெருக்கியில் அறிவித்து....

இரண்டாம் இலக்க அறைக்கு, போகச் சொன்னார்கள்.

 

எனக்கு... இப்ப, நெஞ்சு பக்,பக் என்று அடிக்க தொடங்கிவிட்டது.
தேவையில்லாத வேலை பாத்திட்டனோ.... என்றும் யோசித்தேன்.
சரி இனி ஒன்றும் செய்யமுடியாது என்ற படி, அவர்கள் குறிப்பிட்ட  அறையை நோக்கி சென்றேன்.

 

இரு அழகிய ஜேர்மன் பெண்கள், காலை வணக்கம் சொல்லி வரவேற்றார்கள்.
அட.. இது வேறையா... இவங்களா..... எனக்கு, ஆபரேஷன் பண்ணப் போறாங்கள் எண்டு யோசித்துக் கொண்டிருக்க.....

 

ஒரு சிறிய அறையை காட்டி, அதற்குள் என் ஆடைகளை கழட்டி விட்டு,

அவர்கள் தந்த ஆடையை அணிந்து வரும்படி கூறினார்கள்.
அதனை அணிந்து வந்த பின்.... அங்கிருந்த அறுவைச் சிகிச்சை கட்டிலில் என்னை, படுக்கும் படி கூறி.....
இரண்டு ஊசியை.... இரண்டு விதைப் பக்கமும் மெதுவாக ஏற்றிய போது...

"கட்டெறும்பு" கடித்த மாதிரி, சிறிதாக.... ஒரு வலி மட்டும் ஏற்பட்டது.

 

(தொடரும்)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

...

எனக்கு... இப்ப, நெஞ்சு பக்,பக் என்று அடிக்க தொடங்கிவிட்டது.

தேவையில்லாத வேலை பாத்திட்டனோ.... என்றும் யோசித்தேன்.

சரி இனி ஒன்றும் செய்யமுடியாது என்ற படி, அவர்கள் குறிப்பிட்ட  அறையை நோக்கி சென்றேன்.

 

இரு அழகிய ஜேர்மன் பெண்கள், காலை வணக்கம் சொல்லி வரவேற்றார்கள்.

அட.. இது வேறையா... இவங்களா..... எனக்கு, ஆபரேஷன் பண்ணப் போறாங்கள் எண்டு யோசித்துக் கொண்டிருக்க.....

...

(தொடரும்)

 

என்னவாகுமோ என்ற பயம் குழப்பம் ஒரு நிச்சயமற்ற தன்மை... உங்கள் மனநிலையை உணர முடிகிறது.. சிறி!

 

சின்ன ஃப்ளாஷ் பேக்!

இரு வருடத்திற்கு முன் விடுப்பில் தமிழகம் சென்றபோது உடல்நிலை சரியில்லாமல் போக, குடுமப்த்தினரின் வற்புறுத்தலுக்கிணங்க மருத்துவமனை சென்று சில பரிசோதனைகளை முடித்த பின், மருத்துவர் அறிக்கையை படித்துவிட்டு, என்னை மட்டும் அருகிலுள்ள அறைக்கு போகச் சொன்னார்கள். 'சரி, டாக்டர் உடம்பை பிடித்து பரிச்சோதனை செய்யப் போகிறார் போல' என எண்ணியவாறு படுக்கை மேடையில் அமர்ந்திருந்தேன்.

 

சிறிது நேரம் கழித்து ஒரு பெண் நர்ஸ், 'சார்.. உங்களுக்கு இந்த ஊசி போடவேண்டும் படுங்கள்' என கூறினார். 'இல்லம்மா.. நான் உட்கார்ந்து கொள்கிறேன், இதுவே வசதியாக இருக்கிறது' என முழுக்கை சட்டையின் கையை மடித்து காண்பித்தேன்.

பெண் நர்ஸ், 'ஹலோ சார், நீங்கள் பேன்ட்டை தளர்த்திவிட்டு திரும்பப் படுங்கள்' என்றவுடன் வெறுத்தே போய்விட்டது!

 

'இல்லம்மா.. நீ போய் ஆண் நர்ஸ்ஸை வரச் சொல்லு.. நான் அவரிடமே போட்டுக்கொள்கிறேன்' என்றவுடன், நர்ஸ் சிரித்துக்கொண்டே வெளியே நின்ற என் மனைவியை அழைத்து 'உங்களவருக்கு நீங்கள் சொல்லுங்கள்' என கூறிவிட்டு சென்றுவிட்டது..

வேறு வழி..?

பின்னர் வந்த அந்த பெண் நர்ஸ், பின்னாடி ஊசியை செலுத்திவிட்டு, 'இதெல்லாம் எங்கள் தொழிலில் சகஜம்' என் முன்முறுவலுடன் போய்விட்டது.

 

எனக்கு கூச்சமும், தர்மசங்கடமுமாகிவிட்டது.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
சிறிஅண்ணா முழுவதையும் அப்படியே பகிருங்கள்.
 
இப்படி ஒரு எண்ணம் எனக்கும் தோன்றி இருக்கிறது. சென்ற மாதம்தான் கூகிளில் தேடி சில விடயங்களை வாசித்தேன். உங்கள் அனுபவத்தை வாசிக்க ஆவலாக இருக்கிறது. 
 
 
ஒரு வாரம் மிகுந்த வலியாக இருக்கும் என்று வாசித்தேன். இந்த வலி பற்றிய அனுபவம் அறிய ஆவல். 
வேலைக்கு போக முடியாதா? 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சில நிமிடங்களில்... வைத்தியர் வந்து, நலம் விசாரித்து விட்டு,
தாம் இப்போது... அறுவைச் சிகிச்சையை ஆரம்பிக்கப் போவதாகவும்,

பயப்பட வேண்டாம் என்று கூறிய போது, தாதியர்... எனக்கு, இடுப்பு பகுதி தெரியாதவாறு.... 

ஒரு பச்சை திரைச்சீலையால் மறைப்பு போட்டார்கள்.

 

அந்தப் பகுதிக்கு மட்டும், விறைப்பு ஊசி போட்டதால்...

எனக்கு என்ன செய்கிறார்கள் என்றே... தெரியவில்லை.

30 நிமிடம் அளவில்.... சிகிச்சை முடிந்து விட்டது, என்று வைத்தியர், திரைச்சீலையை அகற்றி... 

இரத்தப் போக்கு உள்ளதா என்பதை கண்காணிப்பதற்காக....

இன்னும் கொஞ்ச நேரம் படுத்து இருக்கும் படி கூறி அவரும் செல்ல, தாதியரும் சென்று விட்டனர்.
 

இடையிடையே... தாதியர் வந்து பார்த்துச் சென்றதில்.....

அவர்களும் திருப்தியாக இருந்ததை, அவதானிக்கக் கூடியதாக இருந்தது.

அவர்கள் இப்போ...என்னை, வீட்டில் இருந்து போட்டுக் கொண்டு வந்த கால்சட்டையை அணிந்து வரும்படி...

என்னை கட்டிலால் இறங்க உதவி செய்தார்கள்.
 

உடை மாற்றி வெளியே வந்த பின் வைத்தியர், உங்களை கூப்பிடும்  வரை,

வரவேற்பறையில் காத்திருக்கும் படி தாதியர் கூறினார்கள்.

 

(தொடரும்...)

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

"இடையிடையே... தாதியர் வந்து பார்த்துச் சென்றதில்.....

அவர்களும் திருப்தியாக இருந்ததை, அவதானிக்கக் கூடியதாக இருந்தது"

 

எதைப்பார்த்து / வைத்து அவர்கள் திருப்திபட்டார்கள் என்று கூறுகின்றீர்கள்  :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்னெண்டால் அவங்கள் சரியாய் வெட்டவில்லைப் போலத் தோணுது.யாழ்க்களத்தின் கிளுகிளுப்பு மன்னர் சிறியர்தானே!!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் எழுத்து நல்ல விறுவிறுப்பையும் ஆவலையும் தூண்டி விட்டது சிறி. தொடருங்கள் மிகுதியை.


எல்லாத் துன்பத்தையும் பெண்கள் மட்டுமே அனுபவிக்க வேணுமோ ??? ஆனாலும் கருத்தடை செய்வதாயின் ஆண்களுக்குச் செய்வதே நல்லது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சிறிது நேரத்தில், வைத்தியரும் அழைக்க.... அவரின் அறைக்குச் சென்றேன்.
அவர் என்னை அமரச் சொல்லி விட்டு, சத்திர சிகிச்சை எவ்வித சிக்கலும் இல்லாமல் முடிந்து விட்டது,

இப்போ அவ்விடத்தில்.... "பிளாஸ்ரர்" போடப்பட்டுள்ளது,

தண்ணீர் படாமல், கவனமாக இருக்கும் படியும்...

மூன்று நாளில், மீண்டும் வந்து சந்திக்கும் படியும் கூறி,

மருத்துவ விடுப்பு எழுதும் படிவத்தை எடுத்தார்.

 

இப்போ... ஏற்கெனவே, 10 மணியாகி விட்டதால்,

இன்றைய ஒரு நாளுக்கு மருத்துவ விடுப்பு எழுதி தரப் போவதாக கூறினார்.
அப்போ  நான், "ஷிப்ற்" வேலை செய்ததால்....

எனக்கு பிற்பகல் இரண்டு மணிக்குத்தான் வேலை ஆரம்பிக்கின்றது,

இன்று வேலைக்குப் போகலாமா என்று கேட்டேன்.

அவர் தனக்கு, ஆட்சேபனை இல்லை.
ஆனால்... அதிகம் நடக்கவோ, பாரம் தூக்கவோ.... வேண்டாம் என்று கூறி, வழியனுப்பி வைத்தார். 

 

எனது காரிலேயே... நானே வாகனத்தை ஓடிக் கொண்டு வீடு வந்து,

அழைப்பு மணியை... அடித்து, உள்ளே சென்ற போது...
மனைவி ஒன்றும், பேசாமல்.... கண்ணீர் விட்டுக் கொண்டிருந்தார்.
(தொடரும்...)

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இது என்ன கரைச்சலாய்.... இருக்கு என்று நினைத்துக் கொண்டு,

"ஏனப்பா அழுகிறீர்" என்று கேட்டேன்.
அவர்....  நான் அழவில்லை,  தனக்காக... நான் சத்திர சிகிச்சை செய்த,

உங்களின் பெருந்தன்மையை நினைக்க, ஆனந்தக் கண்ணீர் வந்தது என்று,

ஒரு கப்பில் பிழிந்து வைத்திருந்த தோடம்பழச் சாறை தந்தார்.

 

அதனை குடித்து விட்டு, எனது தேசிய உடையான சாறத்தை (லுங்கி) கட்டிக் கொண்டு,

சோபாவில் கால்நீட்டி அமர்ந்திருக்க, அந்த இடத்தில் சாதுவான நோ இருக்கிற மாதிரி தெரிந்தது.

ஆனால்... அது பாரதூரமாக  தெரியா விட்டாலும்,

விறைப்பு ஊசியின்.. வீரியம் குறைய இன்னும் அந்த வலி, அதிகரிக்குமோ என்ற அச்சம் இருந்தது.

இதற்குள் வைத்தியரிடம் இருந்து மருத்துவ விடுமுறைக்கான படிவத்தை பெற்றிருக்கலாமோ என்று யோசித்தேன்.

இனி ஒன்றும் செய்யமுடியாது.... வேலைக்குப்  போய்த்தான் ஆகவேண்டும் என்ற நிலைமை. 

 

மதிய உணவருந்தி விட்டு, வேலைக்குப் புறப்பட்ட போது...
மனைவி, "கவனமப்பா...... தட்டுப் படாமல் பாத்துக் கொள்ளுங்கோ...."

என்று கூறி வழியனுப்பி வைத்தார்.

 

அப்போது வேலை செய்த இடத்தில்.....

பல "வம்பன்கள்" வேலை செய்த படியால்....

இதனை தட்டுப் படாமல், எப்படி பாதுகாக்கலாம்? என்று யோசித்த படி வாகனத்தை ஓடிக் கொண்டிருந்தேன்.
 

(தொடரும்...) 

   

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விரைவில். இத் திரி முற்றுப் பெற உள்ளது.
அதற்கிடையில்.... வாசகர்களின் கருத்துக்கள், வரவேற்கப் படுகின்றது. :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கருத்து என பார்த்தால், 'ஏன் இவர் வம்பை விலைகொடுத்து வாங்குகிறார்?' என்றே தோன்றுகிறது.. :o

 

**** ல் விவரமானவர், சுய கட்டுப்பாட்டிலும் நிச்சயம் விவரமாக இருக்க வேண்டுமே! :)

 

ஏன் இல்லை? :rolleyes:

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • ஆமாம் நானும் விரும்புகிறேன்   நடக்குமா??  நடக்காது ஓருபோதும்.  நடக்கப்போவதில்லை,....காரணம் தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை    சீமானை முதல்வர் ஆக்க தமிழ்நாட்டு மக்கள் விரும்பவில்லை   6.23 கோடி வாக்குகளில். குறைந்தது 3.5 கோடி வாக்குகள். பெற்றால் தான்   முதல்வர் ஆக முடியும் அது தனி கட்சி அல்லது பல கட்சிகளின் கூட்டமைப்பு      தனியா போட்டி இடும் சீமான் 0.3 கோடி வாக்குகளைப் பெற்று எப்படி  முதல்வர் ஆகலாம்??   சீமான் தலைமையில் எந்தவொரு கட்சியும். கூட்டணி அமைக்காது   சீமான் தான்  மற்ற கட்சிகளின் தலைமையில் கூட்டணி அமைக்கலாம்   அப்படி அமையும் கூட்டணியில். சீமானுக்கு முதல்வர் பதவி கிடைக்காது  சீமான் வென்றால் தேர்தல் ஆணையம் நல்லது,....வாக்கு எண்ணும் மெசினும். நல்லது    சீமான் தோற்கும்போது இவை இரண்டுமே கூடாது      மேலும் என்னை சீமான் எதிர்ப்பாளர். என்று ஏன் முத்திரை குற்ற வேண்டும்  ...?? ஒருவர் வெல்லும் வாய்ப்புகள் இல்லை என்று கருத்து எழுதும் போது   அவரின் எதிர்ப்பாளர். என்பது சரியான கருத்தா?? இல்லையே?? 
    • கொழும்பான் கூட்டுனா அது கொத்து, கனடால அடிச்ச அது தமிழன் கெத்து  இதுக்கு யாழில குத்தி முறிந்து கொடுக்கிறோம் பாரு சூ... (சப்பாத்து)
    • "பழைய சில பகிடிகள்"    1. Which is the longest word in the English dictionary? / ஆங்கில அகராதியில் மிக நீளமான சொல் எது? Smile -  Because after 'S' there is a 'mile'. 2.”மழைமேகம் [மழை may come] க்கு எதிர்சொல் என்ன?  மறுமொழி : மழை  may not come. 3.சாப்பிட  எதுவும்  சூடாக  கிடைக்காத  ஹோட்டல்  எது ?  மறுமொழி : ஆறிய  பாவன்   4. Which is the coolest alphabet in English? / ஆங்கிலத்தில் குளிரான  எழுத்து எது? மறுமொழி : ‘B’. ஏன்னா  அது  ‘A”C’ க்கு நடுவிலே  இருக்கு . 5. What is common to robbers and tennis players ? / கொள்ளையர்களுக்கும் டென்னிஸ் வீரர்களுக்கும் பொதுவானது என்ன? Ans: They both involve rackets(racquets) and courts! 6. கிண்ணத்துல  கல்லை  போட்டால்  ஏன்   மூழ்கிறது ?  மறுமொழி: அதுக்கு  நீச்சல்  தெரியாது  7. In a grocery store, a Sardarji was starring at an orange juice for couple of hours. You know why ? / ஒரு மளிகைக் கடையில், ஒரு சர்தார்ஜி இரண்டு மணி நேரம் ஆரஞ்சு ஜூஷை உற்றுப் பார்த்துக்கொண்டே  கொண்டிருந்தார். ஏன் தெரியுமா? Ans: Because it said CONCENTRATE. 8. What is the difference between a fly and a mosquito?  Ans: A MOSQUITO can FLY but a FLY cannot MOSQUITO!! 9. ஒரு  அறையிலே  ஒரு  மூலையில்  ஒரு  பூனை  இருக்கு . வலது மூலையில் ஒரு  எலி . இடது மூலையில்  ஒரு கிண்ணத்தில் பால். கேள்வி  : பூனையின்  கண்  இதில்  இருக்கும்  ?  மறுமொழி: பூனையின்  கண்  அதோட  முகத்தில்தான்  இருக்கும்   10. Which runs faster, Hot or Cold? / எது வேகமாக ஓடுகிறது? Hot or Cold?? ANS: Hot, because anyone can catch a cold
    • வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம். 
    • "ஓடம்"   "கற்பகம் என்ற புகழ் பனையின் வளங்கள் - உந்தன்  காலடியில் களஞ்சியமாய்க் கண்ட பலன்கள்  பொற்பதியில் பஞ்சம் பசி பட்டினி தீர்க்கும் - தீராப் போரினிலும் அஞ்சேலென மக்களைக் காக்கும்!"  "கல்வி நிலையங்கள் கோயில் குளங்கள் - குதிரை  காற்றாய்ப் பறந்து செல்லும் நீண்ட வெளிகள் தொல்லை துயரம் தீர்க்கும் மருந்து மூலிகைகள் - உனைத்  தொட்டுக் கண்ணிலே ஒற்றித் தோயும் அலைகள்!"  "தென்னைமர உச்சியிலே திங்கள் தடவும் - கடல்  திசைகளெல்லாம் மணிகளை அள்ளி எறியும் வெள்ளை மணல் துறைகளை அலைகள் மெழுகும் - எங்கள் உள்ளம் அதிலே பளிங்கு மண்டபம் காணும்!" வித்துவான் எஸ் அடைக்கலமுத்து நெடுந்தீவை வர்ணித்தவாறு, நீலப் பச்சை வண்ணம் கொண்ட இரத்தினக் கல் போன்ற  நீர் இலங்கையின் கரையை முத்தமிடும் இந்தியப் பெருங்கடலின் மையத்தில், இலங்கையின் நெடுந்தீவு என்று அழைக்கப்படும் டெல்ஃப்ட் தீவு உள்ளது. இங்கே, கடல் மற்றும் கரடுமுரடான நிலப் பரப்புகளின் காலத்தால் அழியாத அழகுக்கு மத்தியில், நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் இளம் கணித ஆசிரியராக, கூர்மையான பார்வை, முறுக்கு மீசை, வாட்டசாட்டமான உடல்வாகு, வெளிப்படையான பேச்சு என கிராமத்து மனிதர்களின் அத்தனை சாயல்களையும் ஒருங்கே பெற்ற வெண்மதியன் கடமையாற்றிக் கொண்டு இருந்தான். இவர் நெடுந்தீவையே பிறப்பிடமாகவும் கொண்டவர் ஆவார்.  அதுமட்டும் அல்ல, கடல் வாழ்வுடன் நெருங்கிய தொடர்பு கொண்ட வரும் ஆவார். அதனால் தனக்கென ஒரு ஓடம் கூட வைத்திருந்தான். போர் சூழலால் வடமாகாணம் அல்லல்பட்டுக் கொண்டு இருந்த தருணம் அது. மகா வித்தியாலயத்தில் ஓர் சில முக்கிய பாடங்களை கற்பிக்கும் ஆசிரியர்கள் தினம் யாழ்ப்பாணத்தில் உள்ள குறிக்கடுவான் ஜெட்டியில் இருந்து தான் வந்து போனார்கள். என்றாலும் படகு சேவை, பல காரணங்களால் ஒழுங்காக இருப்பதில்லை. தான் படித்த பாடசாலை இதனால் படிப்பில் பின்வாங்கக் கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் தன் ஓடத்திலேயே, வசதிகளை அமைத்து காலையும் மாலையும் இலவச சேவையை, தேவையான நேரங்களில் மட்டும், அவர்களுக்காக, பாடசாலைக்காக தனது ஆசிரியர் தொழிலுடன், இதையும் செய்யத் தொடங்கினான். இதனால் வெண்மதியனை 'ஓடக்கார ஆசிரியர்' என்று கூட சிலவேளை சிலர் அழைப்பார்கள். விஞ்ஞானம் கற்பிப்பதில் ஆர்வம் கொண்ட உற்சாகமான இளம் பெண் எழிற்குழலி, தனது பட்டப் படிப்பை முடித்து, முதல் முதல் ஆசிரியர் தொழிலை யாழ் / நெடுந்தீவு மகா வித்தியாலயத்தில் பதவியேற் பதற்காக, அன்று குறிக்கடுவான் படகுத்துறைக்கு, மிகவும் நேர்த்தியாக சேலை உடுத்திக் கொண்டு வந்தார். உடையே ஒரு மொழி. அது ஒரு காலாசாரம் மட்டுமல்லாது சமூக உருவாக்கமுமாகும். உடை உடுத்துபரை மட்டுமின்றி பார்ப்பவரின் புரிதல்களையும் பாதிக்க வல்லது. அது மனிதர்களிடையே வேறுபாடுகளை ஏற்படுத்தவும் செய்கிறது. மனிதன் உடுத்தும் உடை அவன் மீது அவனுடன் உறவாடும் மற்ற மனிதர்களின் உள்மனத் தீர்ப்புகளைத் தீர்மானிக்கிறது என்பது கட்டாயம் அவளுக்கு தெரிந்து இருக்கும். அதனால்த் தான், தன் வேலைக்கான முதல்  பயணத்தில், தன்னை இயன்றவரை அழகாக வைத்திருக்க முயன்றால் போலும்!  அன்று வழமையான படகு சேவை சில காரணங்களால் நடை பெறவில்லை. என்றாலும் பாடசாலை ஏற்கனவே அவளுக்கு, தங்கள் பாடசாலை கணித ஆசிரியர், இப்படியான சந்தர்ப்பங்களில், தனது ஓடம் மூலம் உங்களுக்கு பயண ஒழுங்கு செய்வாரென அறிவுறுத்தப் பட்டு இருந்ததால், அவள் கவலையடையவில்லை.  அன்று வழமையாக வரும் மூன்று ஆசிரியர்கள் கூட வரவில்லை. அவள் அந்த கணித ஆசிரியர் ஒரு முதிர்ந்த அல்லது நடுத்தர ஆசிரியராக இருக்கலாம் என்று முடிவுகட்டி, அங்கு அப்படியான யாரும் ஓடத்துடன் நிற்கிறார்களா என தன் பார்வைக்கு எட்டிய தூரம் வரை பார்த்தாள். அவள் கண்ணுக்கு அப்படி யாரும் தெரியவில்லை. அந்த நேரம் ஜெட்டிக்கு ஒரு இளம் வாலிபன் ஓடத்தை செலுத்திக் கொண்டு வந்து, அவளுக்கு அண்மையில் அதை கரையில் உள்ள ஒரு கட்டைத்தூணுடன் [bollard] கட்டி நிறுத்தினான்.  எழிற்குழலி, இது ஒருவேளை கணித ஆசிரியாரோவென, தனது அழகிய புருவங்களை உயர்த்தி, ஒரு ஆராச்சி பார்வை பார்த்துக் கொண்டு இருந்தாள். வெண்மதியன் ஒரு சிறிய புன்னகையுடன், எந்த தயக்கமும் இன்றி, அவள் அருகில் வந்து, நீங்கள் விஞ்ஞான ஆசிரியை எழிற்குழலி தானே என்று கேட்டான். கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றியது நம் தமிழ் மட்டும் அல்ல, காதல் உணர்வுகளும் தான் என்பதை அவர்கள் இருவரும் அந்த தருணம் உணரவில்லை. அவளுக்கு இது முதல் உத்தியோகம், தான் திறமையாக படிப்பித்து பெயர், புகழ் வாங்க வேண்டும் என்பதிலேயே மூழ்கி இருந்தாள். அவனோ எந்த நேரம், என்ன நடக்கும் என்ற பரபரப்பில், கெதியாக பாதுகாப்பான நெடுந்தீவு போய்விட வேண்டும் என்பதிலேயே குறியாக இருந்தான்.  அவர்கள் இருவரும் ஓடத்தில் ஏறினார்கள், வெண்மதியன், எழிற்குழலியை பாதுகாப்பாக இருத்தி விட்டு ஓடத்தை ஜெட்டியில் இருந்து நகர்த்தினான். இது ஒரு சாதாரண பயணம் அல்ல, இருவரின் வாழ்க்கையை என்றென்றும் மாற்றும் ஒரு பயணத்தைத் ஓடத்தில் தொடங்குகிறார்கள் என்பதை அவர்கள் கண்கள், ஒருவரை ஒருவராவர் மௌனத்தில் மேய்ந்து கொண்டு இருந்தது, உண்மையில் சற்று உறக்கச் அவர்களின் இதயத்துக்கு சொல்லிக்கொண்டு இருந்தது. ஆனால் அவர்கள் இருவரும், அதை கவனிக்கும் கேட்கும் நிலையில் இருக்கவில்லை.   “நிலவைப் பிடித்துச் சிறுகறைகள் துடைத்துக் - குறு முறுவல் பதித்த முகம், நினைவைப் பதித்து - மன அலைகள் நிறைத்துச் - சிறு நளினம் தெளித்த விழி .” இந்த அழகுதான் அவனையும் கொஞ்சம் தடுமாற வைத்துக் கொண்டு இருந்தது. அவர்கள் இருவரும், தம்மை சுற்றிய சூழல் மறந்து, ஒவ்வொருவரின் இரண்டு விழிகளும் மௌனமாக பேசின. எத்தனை முறை பார்த்தாலும் விழிகளுக்கு ஏன் தாகம் தணிவதில்லை?  ஆர்பாரிக்கும் பேரலை ஒருபக்கம், அந்த இரைச்சலுக் குள்ளும் அவர்கள் தங்களை தங்களை அறிமுகம் செய்தார்கள். அனுமதியின்றி சிறுக சிறுக சிதறின இருவரினதும் உறுதியான உள்ளம். அவர்களின் உள்ளுணர்வு மிகவும் வித்தியாசமாய் இன்று இருந்தது. அவளின் கண்ணசைவுக்கு பதில் கூறிக் கொண்டிருந்த வெண்மதியன், ஏனோ அவளின் உதட்டசைவிற்கு செவிசாய்க்க முடியாமல் தவித்துக் கொண்டு இருந்தான். “ஹலோ” என்று மீண்டும் அவளின் குரல் கேட்க, தன் எண்ணங்களை சட்டென்று விண்ணிலிருந்து கடலிற்கு கொண்டு வந்தான்! " இன்னும் எவ்வளவு நேரம் இருக்கு ?", பொதுவாக ஒரு பயணம் 45 நிமிடம் எடுக்கும். இன்று சற்று கூட எடுத்து விட்டது. 15 நிமிடம் என்றான். அதன் பின்பு அவர்கள் இருவரும் மௌனமாக நெடுந்தீவு அடைந்தனர். என்றாலும் அவர்களின் எண்ணங்கள் அவர்களின் ஓடத்தை உலுக்கிய மென்மையான அலைகளைப் போல பின்னிப் பிணைந்தன. அவர்கள் அன்றில் இருந்து ஓடத்தில் பயணம் செய்த போது எல்லாம், எழிற்குழலியும் வெண்மதியனும் ஒன்றாக எதிர்காலத்தை உருவாக்குவதற்கான கனவுகளைப் பகிர்ந்து கொண்டனர். அவர்களின் உரையாடல்கள் சிரிப்பாலும், அபிலாஷைகளாலும் நிரம்பியிருந்தன, அவர்களின் இதயங்கள் கடலின் தாளத்துடன் ஒத்திசைந்து துடித்தன. என்றாலும் இன்னும் அவர்கள் வெளிப்படையாகத் தங்கள் ஆசைகளை ஒருவருக் கொருவர் சொல்ல வில்லை. எது எப்படியாகினும் அவர்களின் சொல்லாத காதலுக்கு ஓடமே சாட்சியாக இருந்தது? அவர்கள் இருவரும் ஒருவருக் கொருவர் தெரியாமல் ஓடத்துக்கு நன்றி தெரிவித்தனர்.  ஓடம் ஒவ்வொரு முறையும், இந்தியப் பெருங்கடலில் ஒரு ரத்தினமாக விவரிக்கப் படும் நெடுந்தீவுக்கு போகும் பொழுது அல்லது அங்கிருந்து திரும்பும் பொழுது, அதன் அழகு அலைகளுக்கு மத்தியில் மின்னும் விலைமதிப் பற்ற கல்லின் அழகு போல அவர்களுக்கு இப்ப இருந்தது. ஓடத்தில் இருந்து, நெடுந்தீவின் கரடு முரடான நிலப்பரப்புகள், காற்று வீசும் சமவெளிகள், நெடுந்தீவுக்கே உரித்தான கட்டைக் குதிரைகள் மற்றும் பெருக்கு மரம் எனப்படும் பாவோபாப் மரம் போன்றவற்றை, பயணித்துக் கொண்டு, அவை மறையும் மட்டும் அல்லது தெரியும் மட்டும் பார்ப்பதில் இருவரும் மகிழ்வு அடைந்தனர். அப்படியான தருணங்களில் இருவரின் நெருக்கமும் எந்த அச்சமும் வெட்கமும் இன்றித், இருவருக்கும் இடையில் உள்ள இடைவெளியை குறைத்துக் கொண்டு வந்தன. "ஓடத்தான் வந்தான் அன்று-விழி ஓரத்தால் பார்த்தான் நின்று சூடத்தான் பூவைத் தந்தான்-பூவை வாடத்தான் நோவைத் தந்தான்!" 'ஓடத்தைக் கைகள் தள்ளும்-கயல் ஓடிப்போய் நீரில் துள்ளும் நாடத்தாம் கண்கள் துள்ளும்-பெண்மை நாணத்தால் பின்னே தள்ளும்!" "வேகத்தால் ஓடஞ் செல்லும்-புனல் வேகத்தைப் பாய்ந்தே வெல்லும் வேகத்தான் வைத்தான் நெஞ்சம்-அந்த வீரத்தான் வரவோ பஞ்சம்!" கவியரசர் முடியரசனின் கவிதை அவளுக்கு ஞாபகம் அடிக்கடி வந்து, தன் வாய்க்குள் மெல்ல மெல்ல முணுமுணுப்பாள். ஒருமுறை எழிற்குழலி, தன் மாணவர்களுக்கு பிரத்தியேக வகுப்பு எடுக்க வேண்டி இருந்தது. மற்ற மூன்று ஆசிரியர்களும் வழமையான படகு சேவையில் திரும்பி விட்டனர். மறையும் சூரியனின் தங்க நிறங்கள் ஓடத்தின் நிழலை கடல் அலையில் பிரதிபலிக்க, எழிற்குழலியும் வெண்மதியனும் ஓடத்தில் கைகோர்த்து அமர்ந்து இருந்தனர். ஓடத்தில் மோதிய அலைகளின் சத்தம் அவர்களின் அந்தரங்க தருணத்திற்கு ஒரு இனிமையான பின்னணியை வழங்கியது. எழிற்குழலி, வெண்மதியன் மார்பில் சாய்ந்தாள், அவனின் கையை வருடி முத்தமிட்டாள். அவளுடைய கண்கள் வானத்தின் எண்ணற்ற வண்ணங்களைப் பிரதிபலித்தன. "இந்த இடம் முற்றிலும் மூச்சடைக்கக் கூடியது அல்லவா?" அவள் முணுமுணுத்தாள், அவள் குரல் ஒரு கிசுகிசுவுக்கு மேல் தாண்டவில்லை. வெண்மதியன் ஓடத்தை கவனமாக பார்த்து செலுத்திக் கொண்டு, மெல்ல தலையசைத்தான், அவனது பார்வை அவளது கதிரியக்க புன்னகையில் கூடிக் குலாவியது. "இந்த தருணத்தின் அழகை ரசிக்க,  காலமே ஓடாமல் நின்று விட்டது போல் இருக்கிறது" என்று அவன் பதிலளித்தான், அவனது குரலில் ஒரு மயக்கம் நிறைந்து இருந்தது.  அவர்களின் விரல்கள் பின்னிப் பிணைந்தன, அவர்கள் நீலக்கடலின் அழகில் உலாவினர். என்றாலும் அவ்வப் போது அடிவானத்தில் சூரியன் கீழே இறங்குவதைப் பார்த்தார்கள். ஒவ்வொரு நொடியும், அவர்களின் இதயங்கள் ஒருமனதாக துடித்தன, ஒவ்வொரு கணத்திலும் அவர்களின் இணைப்பு மேலும் மேலும் வலுவடைந்தது. ஒரு வார இறுதியில், இருவரும் நெடுந்தீவில் சந்தித்தனர். அங்கே அவர்கள் ஒரு ஒதுக்குப்புற இடத்தை அடைந்ததும், வெண்மதியன் எழிற்குழலியைத் தன் கைகளுக்குள் இழுத்துக் கொண்டான், கடலின் மென்மையான தாளத்தை ரசித்தபடி, அவர்கள் ஒரு மென்மையான இதழுடன் இதழ் முத்தத்தைப் முதல் முதல் பகிர்ந்து கொண்டனர், அதன் பின், நட்சத்திரங்கள் நிரம்பிய வானத்தின் விதானத்தின் [கூரையின்] கீழ், எழிற்குழலியும் வெண்மதியனும், யாழ்பாணத்தை நோக்கி அமைதியான நீரில், நிலவொளியில் ஓடத்தில் பயணம் செய்தனர். இருள் சூழ்ந்திருந்த பரந்து விரிந்திருந்த நிலவின் மென் பிரகாசம், அவர்களின் முகங்களில் ஒளி வீசியது. ஒருவரையொருவர் அணைத்துக் கொண்டு, அருகருகே அமர்ந்து, தண்ணீரில் உள்ள நிலவின் மின்னும் பிரதிபலிப்பைப் பார்த்தபடி விரல்கள் பின்னிப் பிணைந்தன. அவர்களுக்கிடையேயான அமைதி, அவர்களின் காதல், சொல்லப்படாத மொழியால் நிரம்பியிருந்தது. "என் வாழ்க்கையில் உன்னைப் பெற்றதற்கு நான் எவ்வளவு உண்மையிலேயே பாக்கியவான் என்பதை இது போன்ற தருணங்கள் எனக்கு உணர்த்துகின்றன," என்று வெண்மதியன் கிசுகிசுத்தான், அவனது குரல் அலைகளின் மென்மையான தாளத்திற்கு மேலே கேட்கவில்லை. எழிற்குழலி தன் தலையை அவன் தோளில் சாய்த்துக் கொண்டாள், அவள் இதயம் உணர்ச்சியால் பொங்கி வழிந்தது. "மற்றும் நான், நீ," அவள் பதிலளித்தாள், அவளுடைய குரல் நேர்மையுடன் மென்மையாக இருந்தது. "இரவின் அழகால் சூழப்பட்ட உங்களுடன் இங்கே இருப்பது ஒரு கனவா? நனவா ?." என்றாள்.  அவர்களின் ஓடம் அலைகளின் குறுக்கே சிரமமின்றி சென்றது, இரவின் இதயத்திற்கு அது அவர்களை மேலும் கொண்டு சென்றது. கடந்து செல்லும் ஒவ்வொரு தருணத்திலும், அவர்களின் காதல் ஆழமடைந்தது, நேரத்தையும் இடத்தையும் தாண்டிய ஒரு பிணைப்பில் அவர்களை ஒன்றாக 'ஓடம்' இணைந்தது!  நன்றி  [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]      
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.