Jump to content

சிட்னி அன்னதானத்தில் யாழ் கள உறவுகள்


Recommended Posts

ம்ம் இப்படியெல்லாம் சந்திகிறீர்கல் மார்கழி மாதம் நானும் சிட்னி பக்கம் வருகிறேன் இன்னொரு அன்னதானத்தில் சந்திப்போம் :lol:

வாங்கோ வாங்கோ சுண்டல்பாபா மார்கழி மாதத்தில் கோயிலில் அன்னதானம் இருக்கிறதா எப்ப என்று முன்கூட்டியே அவருக்கு சொன்னால் தான் இலகுவாக இருக்கும்

:wink: :wink: :wink:

Link to comment
Share on other sites

  • Replies 72
  • Created
  • Last Reply

ஈஸ்ற்றிலயும் வெஸ்றிலயும் சந்திச்சிட்டாங்க இனி மிடில்ல இருக்கிறவங்க எப்ப சந்திக்கப் போறா(ம்)ங்க. :wink: 8)

மிடிலில் எப்ப அன்னதனமோ அப்ப தான்

:wink: :wink: :wink:

Link to comment
Share on other sites

கந்தப்புவை குஞ்சியாச்சி பார்த்தாரே ஒரு பார்வை, மனுஷன் பொசுங்கிப் போனார்.

யாழுக்கு புதிதாக வந்த சிலுக்கோட உமக்கென்ன காணும் கதை எண்டு குஞ்சியாச்சி கந்தப்புவை வறுத்தெடுத்துப் போட்டார்.

:lol::D:lol::(

Link to comment
Share on other sites

படம் வச்சிருக்கிறன், சுண்டலின்ர அனுமதியோட தான் வெளியிடுவன்

அன்னதானத்தில் சுண்டலும் நேற்று கொடுத்தவங்களோ அது சரி உங்களுக்கு நேற்று சோறு கிடைத்ததோ

:lol::D:lol:

Link to comment
Share on other sites

நன்றி தாத்தா யம்மு அடக்காமா தான் இருந்தவா கந்தப்பு தாத்தாவே அதை கண்டு ஆச்சரியபட்டு யம்முவுக்கு தான் மாப்பிள்ளை தேடுறன் என்று சொன்னவர்

:wink: :wink: :wink:

:oops: :oops: :oops:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

aus2ar2.jpg

இந்த மிருகத்தை உங்கள் அன்னதான meetingல் கண்டீர்களா?

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

கானா.பிரபாண்ணா நீங்க என்ன செய்தனீங்க. சுண்டல் எறிஞ்ச இடங்கள படம் பிடிச்சனீங்களா. படம்பிடிச்சிருந்தா உங்கட வலைப்பூவில போட்டுவிடுங்க. சுண்டல் என்னத்த எறிஞ்சவர் எண்டு நாங்களும் பாக்கத்தான் :wink: :P

அது தானே நாங்களும் பார்த்து வைத்தால் எறியலாம் தானே :lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி தாத்தா யம்மு அடக்காமா தான் இருந்தவா கந்தப்பு தாத்தாவே அதை கண்டு ஆச்சரியபட்டு யம்முவுக்கு தான் மாப்பிள்ளை தேடுறன் என்று சொன்னவர்

:wink: :wink: :wink:

அப்ப நானும் அவர் கூட சேர்ந்து தேடவா :?: :P

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

:oops: :oops: :oops:

சுன்டல் என்னாச்சு உங்களுக்கு :roll:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

aus2ar2.jpg

இந்த மிருகத்தை உங்கள் அன்னதான meetingல் கண்டீர்களா?

பருத்தித்துரைக்கே பருத்துரை வடையா :?: நன்றி தூயா.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஈழத்தை விட்டு புலம்பெயர்ந்து சிட்னியில் வாழும் நான் சிட்னி முருகன் கோவில் தேர், முக்கியதிருவிழா என்றால் அங்கே கட்டாயம் செல்வேன். அதற்கு பல காரணங்கள் இருக்கிறது. முக்கிய காரணம் ஒன்று கூடல். பலரைச் சந்திக்ககூடியதாக இருக்கிறது. நாட்டு விசயம், உள்ளுர் அரட்டை என பலவற்றினை அறிய,பகிறக்கூடியதாக இருக்குது. சென்ற சனிக்கிழமை புரட்டாசிச் சனிக்கு நானும் அக்கோவிலுக்கு சென்றேன்.தவிர்க்க முடியாத காரணங்களினால் இம்முறை முதல்3 சனிக்கும் செல்ல வில்லை. சென்ற வருடத்தை விட இம்முறை சனம் குறைவாக இருந்தாலும் பலரைச் சந்திக்கக்கூடியதாக இருந்தது. எனினும் கோவில் மகிழூர்ந்து தரிப்பிடத்தில் மகிழூர்ந்தினை விட இடம் கிடைக்காவில்லை.

எள்ளெண்ணைச் சட்டி வாங்க பலர் ஒரு வரிசையில் நின்றார்கள். இன்னொரு வரிசையில் எள்ளெண்ணைச்சட்டியில் தீயினை ஏற்ற சிலர் நின்றார்கள். சில பெண்மணிகள் வரிசையில் நிற்ப்பவர்கள் பற்றிக் கவலைப்படாமல் வரிசைக்கு இடையில் புகுந்தும் இடம் பிடித்தார்கள். கோவிலின் வெளிப்புறத்திலும் இன்னொரு வரிசை அன்னதானம் பெற நிண்டது. எள்ளெண்ணைச்சட்டியில் தீ ஏற்ற நின்ற வரிசையில் கடைசியாக யாழ் கள யமுனா நின்றிருந்தார். அவருக்குப்பக்கத்தில் புத்தனின் மனைவியும் நின்றிருந்தா. புத்தனை எனக்கு 3 வருடங்களாகவும், யமுனாவினை ஒரு வருடமாகவும் தெரியும். ஆனால் இந்த யமுனா தான் யாழில் வருபவர் என்று சில நாட்களின் முன்பே எனக்கு தெரிந்தது. புத்தனின் மனைவியிடம் புத்தன் எங்கே என்றேன். யாழில் வரும் பெடியங்களினால் யமுனாவுக்கு தொல்லை கொடுப்பதினால் தான் காவலுக்கு நிற்பதாகவும், என்னைக்காவலாக நிக்கச் சொல்லிச் சொன்னா. புத்தன் அன்னதானம் முடிய முன்பாவது வருவார் என்று சொல்லி விட்டுப் போய்விட்டா. தலைக்குப்பூச்சிப் பூசியும் அவவுக்கு என்னைப் பெடியனாகத்தெரியவில்லை போல. யமுனாவுடன் யாழ்களம் பற்றிக் கதைத்துக்கொண்டு சனீஸ்வரனைச் சுற்றிக்கொண்டு வந்தேன். சென்றவருடம் சந்தித்த சைவசித்தானந்த அறிஞர் சொன்னது யாபகத்துக்கு வந்தது. 500 வருடங்களுக்கு முன்பு சனீஸ்வரன் வழிபாடு இல்லை என்றும், அதன் பிறகே வந்தது என்றும் சொன்னார். சனி தோசம் பிடித்த ஒருவர் சிவனை வழிபட்டு சனி நீங்கியதாகவும்,இப்பொழுது நாங்கள் சனீஸ்வரனைக் கும்பிட்டால் சனி பிடிக்காதா என்று கேட்டிருந்தார். அதைவிட சிவபெருமானை வழிபடலாம் தானே என்று சொன்னார். இதை யோசித்துக் கொண்டிருக்கும்போது யமுனாவினைக்காணவில்லை. எட புத்தனின் மனைவிக்கு என்ன சொல்வது என்று யோசித்துக் கொண்டு தேட கோவிலின் ஒரு பகுதியில் ஒரு இளைஞனுடன் கதைத்துக்கொண்டிருந்தா. கிட்டப்போனேன். சிவபூசையில் கரடி என்று சொல்வாவோ என்ற பயம் வேற. அவ்விளைஞன் யமுனாவினைப்பார்த்து இந்த சுரிதாரில் பார்க்கும் போது நயன்ந்தாரா போல இருக்கிறீர் என்றார். அதற்கு யமுனா, நீங்கள் மட்டும் என்னவாம் சூரியா போலத்தானே இருக்கிறிர்கள் என்றார். எனக்குத்தான் ஒன்றும் விளங்கவில்லை. ஒருவேளை பேரழகன் சூரியாவைச் சொல்கிறாரோ அல்லது கஜனி சூரியாவைச் சொல்கிறாரோ அல்லது அ ஆ சூரியாவைச் சொல்கிறாரோ. நான் ஒரு பெரிசு பக்கத்தில் நிக்கிறேன் என்று ஒரு மரியாதை ஒன்றையும் காணவில்லை. வணக்கம் என்றேன். அப்பதான் யமுனா இவர் யார் தெரியுமா என்று என்னைக்காட்டி அந்த இளையனுக்கு அறிமுகப்படுத்தினார். அவர் தான் யாழில் அடிக்கடி முக அடையாளங்கள் காட்டும் நம்ம சுண்டல். அவருடைய குரலை வானொலியில் கேட்டிருந்தேன். இப்பொழுது தான் நேரில் பாக்கிறேன். அப்படியே அன்னதானத்துக்கு செல்ல கடைசியில் புத்தனும் இணைந்து கொண்டார். சாப்பிட்டுக் கொண்டிருக்க கானாபிரபா தமிழக வலைப்பின்னல் நண்பர்களுடன் சந்திக்க அங்கே வந்திருந்தார். யாழ் பற்றி நகைச்சுவையோடு எல்லோரும் கருத்துக்கள் பகிர்ந்து கொண்டோம். எங்களுடன் மேலும் சிலர் அருகில் இருந்து கருத்துக்கூறமால் எங்களின் பேச்சை கேட்டுக் கொண்டிருந்தார்கள். அவர்களில் ஒருவரைத்தான் சுண்டல் 6 வதாகக்குறிப்பிட்டவர். அவர் தான் போட்டி நடாத்தும் அரவிந்தன். சுண்டலுக்கு தெரியாத மற்றைய இருவரும் யாழுக்கு ஆடிக் கொருக்காக வருபவர்கள். அவர்களில் ஒருவர் கடவுளின் பெயர் உடையவர். மற்றையவர் நடிகை குஸ்பு இதனால் அண்மையில் பெயர் பெற்றவர். ஆனால் தூயாவும், ராஜனையும் எனக்கு யார் என்று தெரியாது. அன்று கோவிலில் நின்றார்களோ தெரியாது.

Link to comment
Share on other sites

நான் அன்று கோயிலுக்கு வரவில்லை கந்தப்பு...ராஜன் யார்? யாழில் எனக்கு பார்த்த நினைவு இல்லையே!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் அன்று கோயிலுக்கு வரவில்லை கந்தப்பு...ராஜன் யார்? யாழில் எனக்கு பார்த்த நினைவு இல்லையே!

http://www.yarl.com/forum3/profile.php?mod...wprofile&u=2648

Link to comment
Share on other sites

ஓ நீங்கள் இணைப்பு குடுத்து, பார்த்ததில் தான் இவர் சிட்னியில் இருந்து வருகிறார் என தெரிந்துகொண்டேன் :lol:

புலத்தில் வரும் ராஜன்...ஒரு கற்பனை கதாபாத்திரம்:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஓ ஹாய் கந்தப்ஸ், ஒங்க ஒயிப் குஞ்சியாச்சி ரொம்ப மோசங்க, என்னோட நீங்க பேச்சுகொடுத்ததுக்கு ரொம்ப துள்னாங்களாமே. என்னங்க இது

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஓ ஹாய் கந்தப்ஸ், ஒங்க ஒயிப் குஞ்சியாச்சி ரொம்ப மோசங்க, என்னோட நீங்க பேச்சுகொடுத்ததுக்கு ரொம்ப துள்னாங்களாமே. என்னங்க இது

கந்தப்புக்கு கோயில் அன்னதானந்துக்கு பிறகு, அன்னம் விட்டிலயும் இப்பைல்லையாம்.எல்லாம் இந்த சிலுக்கால் தானாம் ......சனீஸ்வரன் க்கு ஒழுங்காக............

:lol::lol::lol::lol::lol::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நான் அன்று கோயிலுக்கு வரவில்லை கந்தப்பு...ராஜன் யார்? யாழில் எனக்கு பார்த்த நினைவு இல்லையே!

பார்த ஞாபகம் இல்லையோ :?: :?: :?: புலத்தில் புதியமதமென்றப்குதியில் அட்டகாசமா பட்ம் எல்லாம் போட்டுஇருக்கிறார் :idea: :idea: :idea:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

காகம் தான் கண்டோம் இதைகாணவில்லை,உது இடப வாகனம் மிஸ்டர் சனிஸ்வரன்க்கு பிடிக்காது :lol::lol::lol::lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

aus2ar2.jpg

இந்த மிருகத்தை உங்கள் அன்னதான meetingல் கண்டீர்களா?

-------------------------

என்ன,

ஒரு வரிகுதிரையும்

ஒஸியில் பிறந்த/ வளர்ந்த கங்கரூவும்

உங்கள் ஊர் அருமை-எருமை கடா அவர்களும்

ஒன்றாக சேர்ந்து நின்றார்களா...

என்றா கேட்கிறீர்கள்? :lol::lol:

ஆமா, யார் அந்த வரிகுதிரை? :mrgreen:

Link to comment
Share on other sites

அதன்ங்க நம்ம சிலுக்கு மாறு வேஷத்தில...

யார்

:?: :?: :?: :?:

Link to comment
Share on other sites

  • 8 months later...

அந்த நாள் ஞாபகம் நெஞ்சினில் வந்ததே கந்தப்பு...கந்தப்பு.சரி சரி அடுத்த.........அன்னதானதிற்கு ரெடி பண்ணுவமோ...........

:P :rolleyes: :P

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.