Jump to content

காதலிக்கு வெளிநாட்டு மாப்பிள்ளையா ? புரோக்கரை நையப்புடைந்த காதலனால் பரபரப்பு


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

தான் காதலித்து வரும் யுவதிக்கு வெளிநாட்டு மாப்பிளை ஒருவரைப் பேசிக் கொண்டு வந்து அதனை நிச்சயம் செய்ய முயன்ற கலியாணப் புறோக்கா் ஒருவா் காதலனால் நையப்புடையப்பட்டுள்ளார். கொக்குவில் கிழக்குப் பகுதியில் இடம் பெற்ற இச் சம்பவத்தில் 56 வயதான விஸ்வலிங்கம் பரமானந்தராசா எனும் நபரே கடும் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார் என கொக்குவில் கிழக்குப் பகுதியைச் சோ்ந்த தொழில்நுட்பக் கல்லூரியில் கல்வி கற்றுவரும் யுவதியை அப்பகுதியைச் சோ்ந்த இளைஞன் காதலித்து வருவதாகத் தெரியவருகின்றது.

இக் காதலுக்கு யுவதியின் வீட்டார் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், யுவதிக்கு வெளிநாட்டு மாப்பிளை பார்க்கும் நடவடிக்கையை பெற்றோர் ஆரம்பித்துள்ளனா். யுவதிக்கு கல்யாணம் பேசிக்க கொண்டு வீட்டுக்கு வரும் திருமணப் புறோக்கா்களை யுவதி தனது காதலனுக்கு அடையாளப்படுத்தி சொல்லிவிடுவாராம். இதன் பின்னா் காதலன் அந்தப் புறோக்கருக்கு பின்னால் சென்று தனது காதலைத் தெரிவித்து புறோக்கா்களை அடுத்த முறை யுவதியின் வீ்ட்டுப் பக்கம் செல்லவிடுவதில்லை. இது வழமையாக நடந்து வந்துள்ளது.
இந் நிலையில் திருமணப் புறோக்கரும் ஜோதிடம் பார்ப்பவருமான, சுதுமலையைச் சோ்ந்த பரமானந்தராசா யுவதிக்கு ஒரு வெளிநாட்டு மாப்பிளையின் ஜாதகத்தை கொண்டு வந்து அது நல்ல பொருத்தம் எனத் தெரிவித்து அது தொடா்பான நடவடிக்கையை எடுத்து வந்துள்ளார். இதனை தனது காதலி மூலம் அறிந்த காதலன் சுதுமலைக்கு சென்று புறோக்கரை சந்தித்து தான் காதலிக்கும் யுவதி என தெரிவித்த போது புறோக்கா் காதலனை அவமானப்படுத்தி அனுப்பியுள்ளா். காதலன் எடுத்துச் ஒல்லியும் புரோக்கர் செவிமடுத்ததாக தெரியவில்லை. தொடா்ந்தும் திருமணப் பேச்சில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் கோபமடைந்த காதலன் புறோக்கரை கொக்குவில் பகுதியில் உள்ள இரயில்ப் பாதைக்கு அருகில் வழி மறித்து கடுமையான முறையில் தாக்கியுள்ளார்.
அத்துடன் புறோக்கரின் மோட்டார் சைக்கிளில் இருந்த ஜாதகங்களையும் காதலன் எடுத்துச் சென்றுவிட்டதாக கூறப்படுகிறது. முகம் மற்றும் கைகளில் காயம் ஏற்பட்ட நிலையில் புறோக்கர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டதாகத் தெரியவருகின்றது, இச் சம்பவம் தொடா்பாக யுவதியின் பெற்றோரும், புறோக்கரும் பொலிசில் முறையிட்டு்ள்ளதாகத் தெரியவருகின்றது.
Link to comment
Share on other sites

தெய்வீக காதல்

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.