Jump to content

விஷேட வேவு புலிகள் ...!


Recommended Posts

இருளுக்குள்ளும் நிழலை தேடியவர்கள் ...
கண்ணி வெடிகள் விதைத்த வயலில் பாதை தேடியவர்கள் ..
 
சன்னங்கள போகும் உயரம் அளத்தவர்கள் ...
கந்தக பொதி சுமந்து வந்தோருக்கு பாதை காட்டியவர்கள் ..
 
ஓடும் பாதையில் இருக்கும் தடைகள் அறிந்தவர்கள் ...
கம்பி வேலியின் எண்ணிக்கை தெரிந்தவர்கள் ...
 
பலமான  இடத்தில் பலவீனம் தேடியவர்கள் ..
தலைவன் சொல்லும் பாதையை எடுப்பவர்கள் ..
 
வெடி விழுந்தாலும் கதறி அழாதவர் ...
தோழனுக்கு சைகையால் ஓடிடு என்று சொன்னவர்கள் ...
 
குண்டை  கழட்டி தன்னுடன் அணைத்தவர் ...
எதிரி நெருக்கி திருப்ப எமனாகி போனவர்கள் ..
 
தங்களின் பணியை தரவுடன் தந்தவர்கள் ...
தலைவன் சொல்லுக்கு தலைசாய்த்து நின்றவர்கள் ..
 
தாக்கும் இறுதி கணம் வரை ரகசியம் காத்தவர் ...
வெற்றி களிப்பிலும் இணையாது விழி முடியவர் ...
 
உறங்காத கண்மணிகள் இவர்கள் உறங்காது இருப்பார்கள் ..
தேசம் மீட்க்கும் நாள்வரை இலக்கை தேடுவர் .
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்தக் கவிதையைப் படிக்கும்போது உள்ளத்தில் எழும் எண்ணங்கள் பல. வேவுப் புலிகளின் வாழ்க்கை, வீரம், தியாகம், நட்பு, அர்ப்பணிப்பு, உறுதி என்பனவற்றை வரிகள் அருமையாகச் சொல்லி நிற்கின்றன. புலிகளின் வெற்றிகளுக்குப் பின்னேயெல்லாம் இவர்களின் பசியும் உறக்கமும் ஆகுதியாக்கப்பட்டிருக்கும். நன்றி அஞ்சரன்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

இருளுக்குள்ளும் நிழலை தேடியவர்கள் ...
கண்ணி வெடிகள் விதைத்த வயலில் பாதை தேடியவர்கள் ..
-----
வெடி விழுந்தாலும் கதறி அழாதவர் ...
தோழனுக்கு சைகையால் ஓடிடு என்று சொன்னவர்கள் ...
------
தாக்கும் இறுதி கணம் வரை ரகசியம் காத்தவர் ...
வெற்றி களிப்பிலும் இணையாது விழி முடியவர் ...
 
உறங்காத கண்மணிகள் இவர்கள் உறங்காது இருப்பார்கள் ..
தேசம் மீட்க்கும் நாள்வரை இலக்கை தேடுவர் .

 

இதுவரை நான்.... வேவு புலிகளைப் பற்றிய பதிவுகளை, எங்குமே வாசித்திருக்கவில்லை.

அவர்களின் குணாதிசயத்தை... அழகிய கவிதையாக வடித்த, அஞ்சரனுக்கு நன்றி.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

விலை மதிக்க முடியாத தியாகங்கள், அர்ப்பணிப்புகள், துணிகரச் செயல்கள் ...!

 

அத்தனையும் விழலுக்கு இறைத்த நீராகிப் போனதை நம்பவும் முடியவில்லை, நம்பாமல் இருக்கவும் இயலவில்லை!

 

அனைத்துக்கும் ஒரு பலன் கிடக்கும் நாள் விரைவில் வரவேண்டும்!

 

கவிதைக்கு நன்றிகள் அஞ்சரன்! 

Link to comment
Share on other sites

கவிதைக்கு நன்றி அஞ்சரன் அண்ணா. தொடருங்கள்

Link to comment
Share on other sites

நன்றி வருகைக்கு வாலி ..தமிழ்ஸ்ரீ ..புங்கையூரான்  பெரியவர்களுக்கும் தங்கை துளசிக்கும் கருத்துக்கும்  :rolleyes:

Link to comment
Share on other sites

இந்த கவிதையூடு மேமாதம் பதினைந்தாம் திகதி நந்திக்கடல் ஊடுருவலுக்காக முன்னணி காவலரண்களை பார்க்க சென்றவேளை வீரச்சாவை தழுவிக்கொண்ட, பல விசேட வேவுப் போராளிகளை உருவாக்கிய சசிக்குமார் மாஸ்டர் (மித்திரன் - மானிப்பாய் ) அவர்களுக்கு வீர வணக்கத்தை தெரிவித்து கொள்கிறேன்.

அன்பான நண்பர், பாசமான அண்ணன், எனக்கு கவலைகள் வரும்போது எல்லாம் சந்திக்கும் ஆறுதலுக்கான தளபதி, ஆசான்.

வட்டக்கச்சி உருத்திரனில், பானு அண்ணாவுடன் கூழ் குடிச்ச ஞாபகங்களும், வட்டத்தொப்பியுடன் பீல்ட் பைக்கில் வரும் நினைவுகள் என்னை விட்டு அகல மறுக்கின்றன.

கிளிநொச்சியை இராணுவம் சுத்தி வளைச்சு இருந்த வேளையிலும், ஆமி தொப்பி அணிச்சபடி, A9 வீதியில் பரந்தன் சந்திக்கு அருகில் என்னை கட்டி அணைச்சு குஞ்சு பரந்தன் நிலைகளை பலப்படுத்த சொன்ன ஞாபகங்கள் என்னை விட்டு அகலவில்லை.

நீங்கள் சென்ற கடைசி நாளில் கூட, பழ டின் ஒன்றை உடைத்து நானும் நீங்களும் அன்னாசி பழ துண்டுகளை பகிர்ந்து சாப்பிட்டதை மறக்க முடியவில்லை மாஸ்டர். உங்கள் மகள் காயப்பட்ட வேளையிலும் கொஞ்சம் கூட கலங்காமல் இப்போ வரேண்டா என்று சென்ற சசிக்குமார் மாஸ்டர் திரும்ப வரவே இல்லை.

வீர வணக்கங்கள் சசிக்குமார் மாஸ்டர்/அண்ணா.

நன்றிகள் அஞ்சரன் பதிவிற்கு.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வேவுப்புலிகள் பற்றிய பதிவுகள் மிகக்குறைவே..தனித்து அவர்களைப்பற்றி எழுத நிறையவே விடயங்கள் இருக்கின்றன. ச்பந்தப்பட்டவர்கள் அன்றி யாராலம் அவர்களை எழுதி விடமுடியாது... நன்றி அஞ்சரன் உங்கள் பதிவுக்கு

Link to comment
Share on other sites

இந்த கவிதையூடு மேமாதம் பதினைந்தாம் திகதி நந்திக்கடல் ஊடுருவலுக்காக முன்னணி காவலரண்களை பார்க்க சென்றவேளை வீரச்சாவை தழுவிக்கொண்ட, பல விசேட வேவுப் போராளிகளை உருவாக்கிய சசிக்குமார் மாஸ்டர் (மித்திரன் - மானிப்பாய் ) அவர்களுக்கு வீர வணக்கத்தை தெரிவித்து கொள்கிறேன்.

அன்பான நண்பர், பாசமான அண்ணன், எனக்கு கவலைகள் வரும்போது எல்லாம் சந்திக்கும் ஆறுதலுக்கான தளபதி, ஆசான்.

வட்டக்கச்சி உருத்திரனில், பானு அண்ணாவுடன் கூழ் குடிச்ச ஞாபகங்களும், வட்டத்தொப்பியுடன் பீல்ட் பைக்கில் வரும் நினைவுகள் என்னை விட்டு அகல மறுக்கின்றன.

கிளிநொச்சியை இராணுவம் சுத்தி வளைச்சு இருந்த வேளையிலும், ஆமி தொப்பி அணிச்சபடி, A9 வீதியில் பரந்தன் சந்திக்கு அருகில் என்னை கட்டி அணைச்சு குஞ்சு பரந்தன் நிலைகளை பலப்படுத்த சொன்ன ஞாபகங்கள் என்னை விட்டு அகலவில்லை.

நீங்கள் சென்ற கடைசி நாளில் கூட, பழ டின் ஒன்றை உடைத்து நானும் நீங்களும் அன்னாசி பழ துண்டுகளை பகிர்ந்து சாப்பிட்டதை மறக்க முடியவில்லை மாஸ்டர். உங்கள் மகள் காயப்பட்ட வேளையிலும் கொஞ்சம் கூட கலங்காமல் இப்போ வரேண்டா என்று சென்ற சசிக்குமார் மாஸ்டர் திரும்ப வரவே இல்லை.

வீர வணக்கங்கள் சசிக்குமார் மாஸ்டர்/அண்ணா.

நன்றிகள் அஞ்சரன் பதிவிற்கு.

சசிக்குமார் மாஸ்டர் ஆரம்ப வேவு தளபதி தொண்ணூற்றி ஆறு ஏழு  லெப்டினன்ட்  கேணல் தனம் அண்ணை பெரிய மடு சண்டையில் வீரச்சாவு பின்னர் தளபதி  ஜெரி சிறிய காலம் பின்னர் வெளியில் வந்து கருணாம்மான் உடன் ஒரு சாதாரண போராளியா தளபதி ஜெயம் நின்றார் தாண்டிக்குளம் மீதான ஊடறுப்பு சண்டையில் கருணாம்மான் ஒரு பிளாட்டூன் லீடரா தளபதி ஜெயத்தை விட்டார் ......

 

அப்போது எல்லாம் அவரு பின்னாடி நின்று சொல்வார்கள் மாத்தையா பிரச்சினை இவருமாம் என்று ஏனெனில் போராளிகளுக்கு அவரின் ஆரம்ப படிநிலை தெரியாது ஆனால் அவரும் எதையும் கண்டுகொள்ள மாட்டார் தனக்கு கொடுக்கபட்ட வேலை செய்தார் தாண்டிக்குளம் மீதான சண்டையில் துடையில் காயம் அடைத்து கூட மூன்று நாள் அவர் களத்தை விட்டு வெளியில் வரவில்லை தான் மரணிக்க வேணும் என்னும் ஒரு மனநிலையில் இரத்தம் போயும் காயம் பற்றி சொல்லவில்லை ...

 

பின்னர் கவனித போராளிகள் ஆளை பின்னுக்கு அனுப்பினார்கள் காயம் ஆறி ஆள் தொண்ணூற்றி எட்டில் வந்து இறங்கினார் தனம் அண்ணைக்கு எடுத்த  லான்ஸ் குறொசர் வாகனத்தில் இருந்தல் தலை முட்டும் மேல ....

 

இனி இவர் தான் பொறுப்பு என்று பிஸ்டல் மிடுக்கான உடை நடை ஆளை பார்த்தால் ஒரு கம்பீரம் வரும் கேணல் ஜெயமா கடைசிவரை அதே விசுவாசம் பற்றுடன் நின்ற ஒரு தளபதி அவர் ...

 

தாண்டிக்குளம் சண்டை கரும்புலி நிதன் ...யாழினி ..சாதுரியன் ...தடை உடைக்க போகும்வரை இவர்கள்தான் கரும்புலிகள் என்று தெரியாது கண்ணீர் முட்டும் காட்சிகள் அவை  :(  :(

நன்றி அபிராம் ..சகாறா அக்கா வருகைக்கு .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இதற்கான சின்ன உதாரணம் Pearl  harbour பற்றியது. 100 தொடக்கம் 150 விமானங்களை ரேடாரில் கண்டதாக ஒரு உயர் அதிகாரியிடம் ஒருவர் கூறும்போது 10 தொடக்கம் 15 சோதனை  பறப்பில் ஈடுபட்ட விமானங்கள்தான் அவை என கூறி அதை அப்படியே விட்டுவிடும்படி கூறினார் என்பதெல்லாம் நம்பக்கூடியதாகவா உள்ளது. அமெரிக்க ஊடகங்களில் எல்லாம் அலசப்பட்ட விடயம் என்றால் அது உண்மையாகிவிடுமா? இதே போல்தான் ரஷ்யா உக்ரைன் விடயங்களிலும் RT இல் வந்த செய்திகள் என்றால் எல்லாம் பொய், அதே BBC , CNN என்றால் அதுவே வேத வாக்கு என்பது. முயலுக்கு 3 கால்தான் என்று அடம்பிடிப்பது உங்கள் பழக்கம். இல்லை 4 கால்தான் என்றால் உடனே ஆதாரம் காட்டுங்கள் என்பது.
    • இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது - ஜெரூசலேம் விஜயத்தில் டேவிட் கமரூன் 18 APR, 2024 | 10:58 AM   ஈரானின் தாக்குதலை தொடர்ந்து இஸ்ரேல் பதில் தாக்குதலை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது என பிரிட்டனின் வெளிவிவகார அமைச்சர் டேவிடகமரூன் தெரிவித்துள்ளார். ஜெரூசலேத்திற்கான விஜயத்தின்போது அவர் இதனை தெரிவித்துள்ளார். பதற்றத்தை மேலும் அதிகரிக்காத வகையில் இஸ்ரேல் தனது நடவடிக்கையை முன்னெடுக்கவேண்டும் என எதிர்பார்ப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இஸ்ரேல் அடுத்த கட்ட நடவடிக்கையை முன்னெடுப்பது குறித்து தீர்மானித்துள்ளனர் என்பது தெளிவாகின்றது என டேவிட் கமரூன் தெரிவித்துள்ளார். இதன் மூலம் இஸ்ரேலின் தாக்குதல்தவிர்க்க முடியாத விடயம் என்பதை ஏற்றுக்கொண்ட முதலாவது வெளிநாட்டு அரசியல்வாதியாக டேவிட்கமரூன் மாறியுள்ளார். https://www.virakesari.lk/article/181353
    • 18 APR, 2024 | 01:20 PM யாழ்ப்பாண பல்கலைக்கழகம் யாழ்ப்பாண வளாகம் எனும் பெயரில் இலங்கை பல்கலைக்கழகத்தின் ஓர் அங்கமாக ஆரம்பிக்கப்பட்டு இவ்வருடத்துடன் ஐம்பது ஆண்டுகளை பூர்த்தி செய்து பொன்விழா காண்கிறது. ஈழத் தமிழர்களின் அறிவுக் கருவூலமாக திகழும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தமிழ்ச் சமூகத்தின் இருப்புக்கும் வளர்ச்சிக்கும் ஆற்றிய பங்களிப்பு ஏராளம். அந்த வகையில் ஐம்பதாவது ஆண்டு நிறைவிலும் அது புதிய பல பரிமாணங்களை பிரசவிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.  அந்த வகையில், முதலாவது சர்வதேச கல்வியியல் ஆய்வு மாநாட்டை யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் உயர்பட்டப் படிப்புக்கள் பீடமும் கலைப்பீடத்தைச் சேர்ந்த கல்வியியல் துறையும் இணைந்து ஒழுங்கமைத்துள்ளன.  ‘நாளையை வலுப்படுத்தல் - கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வட மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் கருப்பொருளில் இம்மாநாடு திட்டமிடப்பட்டுள்ளது. யாழ்ப்பாண பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர்.சி.சிறிசற்குணராசா தலைமையிலும் உயர்பட்டப்படிப்புக்கள் பீட பீடாதிபதி பேராசிரியர் செ.கண்ணதாசன் மற்றும் கலைப் பீடாதிபதி பேராசிரியர்.சி.ரகுராம் ஆகியோரின் இணைத்தலைமையிலும் இந்த ஆய்வு மாநாடு அரங்கேறவுள்ளது.  கல்வியியல் துறைத் தலைவர் கலாநிதி ஆ.நித்திலவர்ணண் மாநாட்டின் இணைப்பாளராக செயற்படுகிறார்.  வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ம. பற்றிக் டிரஞ்சன் மற்றும் வட மாகாண கல்விப் பணிப்பாளர் தி.ஜோன் குயின்ரஸ் ஆகியோர் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொள்கின்றனர்.   எதிர்வரும் 20ஆம் திகதி சனிக்கிழமையும் 21ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமையும் காலை மற்றும் மாலை அமர்வுகள் நடைபெறவுள்ளன.  இம்மாநாட்டின் காலை அமர்வுகள் கைலாசபதி கலையரங்கிலும் மாலை அமர்வுகள் உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்திலும் நடைபெறவுள்ளன.  சனிக்கிழமை நடைபெறவுள்ள அங்குரார்ப்பண நிகழ்வில் திறவுகோல் உரையினை கொழும்புப் பல்கலைக்கழக கல்வியியல் பீட கல்வி உளவியல் இருக்கை பேராசிரியர் மஞ்சுளா விதாணபத்திரண நிகழ்த்தவுள்ளார்.  ‘வாண்மைத்துவ விருத்திக்கான ஆய்வு மைய புத்தாக்கங்கள் : வடக்கு இலங்கையின் ஆசிரியர் கல்விக்கான தந்திரோபாய அணுகுமுறை’ எனும் தலைப்பில் இந்த உரை நிகழவிருக்கிறது.  திறவுகோல் உரையினைத் தொடர்ந்து மாநாட்டின் கருப்பொருளை மையப்படுத்திய மையக்கருத்துரைகள் இடம்பெறவுள்ளன. இக்கருத்தரங்குக்கு உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் தலைமைதாங்கவுள்ளார்.  ‘இலங்கையின் ஆரம்ப பிள்ளைப்பருவக் கல்வியை முறைமைப்படுத்தல் - சவால்களும் பிரச்சினைகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீட பேராசிரியர் தி.முகுந்தனும், ‘வட மாகாண கல்வியின் சமகால உள சமூக நிலைமைகள்’ எனும் தலைப்பில் உள மருத்துவ நிபுணர் சி.சிவதாஸும், ‘இலங்கையின் பாடசாலைக் கலைத்திட்டத்தின் சவால்களும் புதிய போக்குகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீட பேராசிரியர் எவ்.எம்.நவாஸ்தீனும், ‘சட்டத் தீர்மானங்களை அறிவிப்பதில் கல்வியியல் ஆய்வுகளின் தேவைகள்’ எனும் தலைப்பில் களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற நீதிபதி ஜே.பி.ஏ.ரஞ்சித்குமாரும் உரையாற்றவுள்ளனர்.  ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இரண்டாம் நாள் நிகழ்வுகளுக்கு யாழ்ப்பாண பல்கலைக்கழக கல்வியியல் துறைப் பேராசிரியர் ஜெயலக்சுமி இராசநாயகம் தலைமைதாங்கவுள்ளார். இந்நிகழ்வில் திறவுகோல் உரையை தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக கல்வியியல் மற்றும் மேலாண்மைத் துறைத் தலைவர் பேராசிரியர் கு.சின்னப்பன் ‘தமிழ் கற்பித்தலில் புதிய போக்குகள்’ எனும் தலைப்பில் நிகழ்த்தவுள்ளார்.  அதனைத் தொடர்ந்து ‘நாளையை வலுப்படுத்தல் - கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வட மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் தலைப்பில் கலைப்பீட பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம் தலைமையில் திறந்த புலமைத்துவக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது. இக்கலந்துரையாடலில் ஓய்வுபெற்ற வலயக் கல்விப்பணிப்பாளரும் அதிபருமான என்.தெய்வேந்திரராஜா, கல்வியியல் ஆய்வாளரும் அகவிழி மற்றும் ஆசிரியம் சஞ்சிகைகளின் ஆசிரியருமான தெ.மதுசூதனன், தேசிய கல்வி நிறுவன விரிவுரையாளர் ஐ.கைலாசபதி, கிளிநொச்சி விவேகானந்தா வித்தியாலய அதிபர் ஐயா மாணிக்கவாசகர், இலங்கை பரீட்சைகள் திணைக்களப் பணிப்பாளர் எம்.ஜீவராணி புனிதா, யாழ்ப்பாணம் இந்து கல்லூரி அதிபர் இ.செந்தில்மாறன், யாழ்ப்பாண பல்கலைக்கழக கல்லூரியின் முன்னாள் பணிப்பாளரும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் திட்ட முகாமையாளருமான ஜே. ஜூட் வோல்ற்றன் மற்றும் கிளிநொச்சி வடக்கு கல்வி வலய தொழில் வழிகாட்டல் அலுவலர் சு.வீரசுதாகரன் ஆகியோர் பங்குபற்றவுள்ளனர். பார்வையாளர்களின் வினாக்களுக்கும் விடையளிக்கும் நிகழ்வாகவும் இக்கலந்துரையாடல் திட்டமிடப்பட்டுள்ளது.  ‘வடக்கு மாகாண பாடசாலைகளின் வெற்றிகளும் பின்னடைவுகளும்’, ‘பாடசாலைகளும் சமூகமும் - எங்கு நாம் நிற்கின்றோம் - முன்னோக்கிப் போவதற்கான வழிகள்’, ‘எதிர்பார்க்கப்படும் கற்றல் பேறுகளை அளவிடுதல்’ மற்றும் ‘கல்வியும் வேலைவாய்ப்பும் - சந்தர்ப்பங்களும் சவால்களும்’ எனும் தலைப்புக்களில் இக்கலந்துரையாடல் கட்டமைக்கப்பட்டுள்ளது. கலந்துரையாடலின் கருத்துச்செறிவுகளை மாநாடு நிறைவுபெற்ற பின்னர் கொள்கை ஆவணமாக வெளியிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.  இரண்டு நாட்களும் மாலை அமர்வுகள் பலாலி வீதியில் அமைந்துள்ள உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்தில் நடைபெறும். இரண்டு நாள் மாலை அமர்வுகளிலும் தலா நாற்பத்து நான்கு ஆய்வுக் கட்டுரைகள் பல்வேறு தலைப்புக்களிலும் சமர்ப்பிக்கப்படவுள்ளன. பல்கலைக்கழகங்களின் ஆய்வு மாணவர்கள், விரிவுரையாளர்கள், கல்வியியல் கல்லூரிகள் மற்றும் ஆசிரிய பயிற்சிக் கலாசாலை ஆசிரியக் கல்வியியலாளர்கள், கல்வி நிர்வாகிகள், பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் என பன்முகப்படுத்தப்பட்ட ஆய்வாளர்களினால் பல்வேறு தலைப்புக்களில் ஆய்வுக் கட்டுரைகள் முன்வைக்கப்படவுள்ளன. https://www.virakesari.lk/article/181365
    • அரச பெருந்தோட்ட நிறுவனங்களின் கீழ் பணியாற்றும் ஊழியர்களின் செலுத்தப்படாத சட்டரீதியான பங்களிப்புகளை (EPF/ETF) செலுத்துவது தொடர்பான அமைச்சரவை பத்திரம் அடுத்த வாரம் அமைச்சரவைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது. அரச பெருந்தோட்ட நிறுவன மறுசீரமைப்பு அமைச்சரும் நிதி இராஜாங்க அமைச்சருமான ரஞ்சித் சியம்பலாபிட்டிய இதனைத் தெரிவித்துள்ளார். இதன்படி ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியத்தின் மேலதிக கட்டணங்களுடன் 500 கோடி ரூபாவிற்கும் அதிகமான தொகை செலுத்தப்பட உள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த வருடத்தின் முதல் கடமையாக அமைச்சின் செயலாளருக்கு தேவையான அறிவுறுத்தல்களை வழங்கியதாக சுட்டிக்காட்டிய இராஜாங்க அமைச்சர், உழைக்கும் மக்களின் சட்ட உரிமைகளை பாதுகாத்து பெருந்தோட்ட நிறுவன சீர்திருத்தங்களை ஆரம்பிக்க வேண்டும் என்றார். இது தொடர்பாக ஊழியர்கள் தரப்பினால் 2000க்கும் மேற்பட்ட வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், சட்டத்தரணி கட்டணமாக சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் பெருமளவு பணத்தை செலவிடுவதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார். https://thinakkural.lk/article/299474
    • ஆகவே தாங்கள்  அவரது குடும்பம் கோத்திரம் எல்லாவற்றையும் நன்கு அறிந்திருக்கிறீர்கள். அந்த அடிப்படையில்தான் அவரது செயலைக் குறிப்பிடும்போது குலவழக்கம் என்று குறிப்பிட்டீர்கள்.  சூப்பரப்பூ சூப்பர்,.........👏 @கிருபன்@பெருமாள்@குமாரசாமி
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.