Jump to content

புலம்பெயர்ந்து வாழும் தேசங்களில் தமிழர் கலாச்சாரம் நீடிக்குமா? அல்லது இன்றைய தலைமுறையினருடன் முடியுமா?


Recommended Posts

புலம்பெயர்ந்து வாழும் தேசங்களில்

தமிழர் கலாச்சாரம் நீடிக்குமா? அல்லது இன்றைய தலைமுறையினருடன் முடியுமா?

 

அன்பான யாழ் கழ உறவுகளே!

                                                           நாம் புலம்பெயர்ந்து உலகின் பல பாகங்களில் சிதறிக்கிடக்கிறோம். அப்படியிருந்தும் எமது மொழி, கலை, கலாச்சாரம் பண்பாடு பழக்க வழக்கங்களை ஓரளவாவது கட்டிக்காத்து வருகிறோம். இந்நிலையில் நாம் வாழும் நாடுகளில் இதனைத் தொடர்ந்து கட்டிக் காப்போமா? கைவிடுவோமா என்றொரு கேள்வி என்னில் எழுகிறது. இதற்கான தலைப்பைத்தான் மேலே தெரிவு செய்துள்ளேன்.   இதனை வாதப்பொருளாகக் கொண்டு, உங்கள் ஆக்கபூர்வமான கருத்துக்களை முன்வைத்து இளைய தலைமுறயினரை ஊக்குவிக்க ஆவன செய்வீர்களென எதிர்பார்க்கின்றேன்.

 

                                                           உலகின் வாழும் தொன்மையான மொழிகள் ஆறு. அவற்றில் தமிழ்மொழியும் ஒன்று. இவ்வாறான தொன்மையான மொழியைப் பேசும் இனம் தமிழினம்.  குமரிக்;(லெமுரியா); கண்டத்தில் முதல் தோன்றிய மனிதனும் தமிழனே. முதல் பேசப்பட்ட மொழியும் தமிழே|| என, மொழிஞாயிறு ஞா.தேவநேயப்பாவாணர் அவர்கள் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறான தமிழினம் தனக்கென தனியான நாகரிகம், பண்பாடு ஆகியவற்றைக் கொண்டுள்ளது. ஒரு இனத்தின் தொன்மையை இவ்விரண்டின் மூலமாகவே வரலாற்று ஆராய்ச்சி அறிஞர்கள் கணக்கீடு செய்கிறார்கள்.

                                                           இன்று எமது நிலையென்ன? தமிழனுக்கென தனியாக ஒரு நாடு உண்டா? ஒரு நாடு இருக்கும்போதுதான் அவற்றைப் பேணிப் பாதுகார்க்க முடியும்? தமிழன் நிரந்தரமாக வாழும் நாடுகளிலேயே தமிழ்மொழி ஆட்டம் காண்கிறது. தமிழர் நாகரிகம், கலாச்சாரம், பண்பாடு சிதைக்கப்படுகின்றன. குறிப்பாக தமிழ் நாட்டை நோக்கினால் அங்கு தமிழ் படும்பாட்டையும் சினிமா, சின்னத்திரையில் நடைபெறும் தமிழ்கொலைகளையும், கலாச்சார சிரழிவுகளையும்  பண்பாட்டுச் சிதைப்புகளையும் நோக்கலாம். இதனைப் புலம்பெயர் தேசங்களுக்கும் விரிவுபடுத்தியுள்ளார்கள். அன்னிய மொழியின் ஆதிக்கத்திற்குள் வாழ்ந்து வரும் நம் இளைய தலைமுறையினர் இதனால் ஈர்க்கப்பட்டு, உள்ளதையும் இழக்கும் நிலைக்கு தள்ளப்படுகிறார்கள்.  ஆகவே நான் மிகச் சுருக்கமாகக் குறிப்பிட்டவற்றை விரிவாக ஆராயலாமெனக் கருதுகிறேன். இதுபற்றிய உங்களின் ஆக்கபூர்வமான கருத்துகளை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்.

நன்றி

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல ஒரு முயற்சி, செண்பகன்!

 

பல சந்தர்ப்பங்களில், புலத்து வாழ்க்கை அனுபவங்களில்... சிலரது கலாச்சாரங்கள் என்று சொல்லப்படுபவை என்னை முகம் சுழிக்க வைத்திருக்கின்றன !

 

ஒரு திறந்த, பரந்த ஒரு சமுதாய அமைப்பு (multiculturalism) என்பதன் கருத்து, மிகவும் பரந்தது என்பது எனது கருத்தாகும்!

 

குறுகிய மனப்பான்மை கொண்ட சமூகங்கள், பல அதனைப் பிழையாகப் புரிந்து கொண்டு.. தங்கள் கலாச்சாரம் என்று கூறப்படுவதை மட்டும் பெரும்பான்மைச் சமூகம் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று நினைப்பதும், பெரும்பான்மைச் சமூகங்களின் சகிப்புத் தன்மையைச் சோதிப்பதும் நடை பெறுவதுண்டு!

 

சில உதாரணங்களைத் தேவை ஏற்படின்.. நாம் இங்கு எழுதலாம் என நினைக்கிறேன்!

 

முதலில், எமது கலாச்சாரம் என்பது எதுவென்று வரையறை செய்யுங்கள்.. பின்னர் ஒரு விவாதமொன்றைத் தொடரலாம்!

 

சேலை அணிவதும், வேட்டி கட்டுவதும், பொட்டு வைப்பதும், தாலி அணிவதும் தான் எமது கலாச்சாரம் எனில்.. நான் இந்த விவாதத்தில் பங்கெடுக்கப் போவதில்லை!

 

அல்லது கோவில்களும், பஜனை நிலையங்களும், அரங்கேற்றங்களும், சாமத்திய வீடுகளும் தான் எமது கலாசாரம் எனில், அதிலும் எனக்கு உடன்பாடில்லை!

 

மற்றும், புட்டும், இடியப்பமும், தோசையும், மிளகாத்தூளும் தான் எமது கலாசாரம் எனில் அது ஒருநாளும் அழிந்து போகாது!

 

பெண்ணடிமைத்தனம், வன்முறை, குழந்தைகள் மீது வன்முறை..போன்றவையும் 'பல் கலாச்சாரம்' என்ற போர்வையில் சில நாடுகளில் மறைக்கப்படுகின்றன!

 

ஆனால் மொழி என்று வரும்போது.. அது இரண்டாவது மொழியாகவேனும் வீட்டில் பேசப்படவேண்டும் என்பதில் எனக்கு இரு கருத்துக்கள் இல்லை! 

 

ஆனால் 'தமிழ் மொழியின் வளர்ச்சி' என்பது புலம் பெயர்ந்தவர்களில் மட்டும் தங்கியிருக்கவில்லை என்பது எனது கருத்தாகும்!

 

Link to comment
Share on other sites

எனக்குள் பல கேள்விகள் இருக்கின்றன.
 
1. வெளி நாட்டில் வாழும் எம் சந்ததி ஏன் தமிழ் பேச வேண்டும் ?
2. பேசுவதால் அவர்களுக்கு ஏற்படும் நன்மைகள் என்ன ?
3. பேசாவிட்டால் ஏற்படும் இழப்புகள் என்ன ?
4. அவர்கள் ஊருக்கு உண்மையில் போவார்களா ?
5. தமிழை அவர்களுக்கு திணிக்கின்றோமா ?
6. உண்மையில் இந்தத் தமிழ்ச் சமுதாயம் மதிப்பிற்குரிய ஒரு சமுதாயமா ?
Link to comment
Share on other sites

எங்கள் தமிழ்மொழி பற்றி ஆராயலாம். தற்போது எங்களிடம் உள்ள கலை, கலாச்சாரம்,பண்பாடு என எங்களுக்கு உரிமை இல்லாதவற்றை ஆராய்வதில் பயனுண்டா.

Link to comment
Share on other sites

முதல் இந்த ஐரோப்பா அம்மாமார் பிள்ளை அப்படி பண்ணாத .....இப்படி பண்ணாத .....அதை  பண்ணு ......இதை பண்ணு ........அங்க பண்ணு ......இங்க பண்ணு என்று இந்த பண்ணு என்று சொல்லி சொல்லும் வழக்கத்தை விட ஏதாவது வழி இருக்கா .... :rolleyes:

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

எனக்குள் பல கேள்விகள் இருக்கின்றன.
 
1. வெளி நாட்டில் வாழும் எம் சந்ததி ஏன் தமிழ் பேச வேண்டும் ?
2. பேசுவதால் அவர்களுக்கு ஏற்படும் நன்மைகள் என்ன ?
3. பேசாவிட்டால் ஏற்படும் இழப்புகள் என்ன ?
4. அவர்கள் ஊருக்கு உண்மையில் போவார்களா ?
5. தமிழை அவர்களுக்கு திணிக்கின்றோமா ?
6. உண்மையில் இந்தத் தமிழ்ச் சமுதாயம் மதிப்பிற்குரிய ஒரு சமுதாயமா ?

 

அண்ணை குறை நினைக்காமல் இதே கேள்விகளை லண்டனில் ஐந்தாவது தலைமுறையாய் வாழும் குயராத்தி களிடம் குயராத்தி பாஷையை (இந்தி அல்ல) தொடர்கினமென்டு கேட்டு பாருங்கள் அவர்களை தேடத்தேவையில்லை பக்கத்தில் இருக்கும் பாமஸிகடையில் இருப்பினம்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முதலில் இருக்க வீடு வேண்டும். அதாவது எமக்கென ஒரு நாடு வேண்டும். அப்போதுதான் சகலதையும் தக்கவைக்கமுடியும்.

 
புலம்பெயர் நாடுகளில் எமது மொழி என்று பார்க்கப்போனால் பிள்ளைகளிடம் மிகமிக அரிதாகிக்கொண்டே வருகின்றது. இதனை பெற்றோர்கள் தான் நிவர்த்தி செய்ய வேண்டும்.தமிழை மனதளவிலாவது கட்டாய கல்வியாக்க வேண்டும்.தமிழ் பாடசாலைகளை நாம் ஊக்குவிக்க வேண்டும்.ஆசிரியர்களை மதிக்க வேண்டும்.
 
 உணவும் உடையும் பழக்கவழக்கங்களும் ஒரு மனிதனின் கலாச்சார இன காவிகள். என்றைக்கு இவை அனைத்தையும் கைவிடுகின்றானோ அன்றைக்கு அவன் இனம் அழிந்ததிற்கு சமன். :icon_idea:
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ் மொழியின் இருப்பு என்பது வேறு கலாச்சார விழுமியங்கள் இல்லாது போவது என்பது வேறு...

புலம்பெயர் நாடுகளில் தமிழ் மொழி இன்றைய காலத்தில் ஓரளவுக்கேனும் வாழ்கிறது. ஆனால் எதிர்காலத்தில் அது வாழும் என்று யாரும் உறுதியாக கூற முடியாது. ஆனால்  பெற்றோர்களின் அக்கறையே தமிழை வளர்க்கும்... வீட்டில் மட்டுமே பிள்ளைகள் தமிழில் பேசுவார்கள் தமிழ் நண்பர்களுடன் கூட அவர்கள் தமிழில் கதைப்பதில்லை. (பக்கத்தில் நிற்கும் வேற்றினத்தவர்களுக்கு விளக்க கூடாது என்றால் தமிழ் பேசுவார்கள்) இந்த விடயத்தில் நான் சீன நாட்டவர்களை பார்த்து பெருமிதமடைவதுண்டு. சிறு குழந்தைகள் முதல் இளைஞர்கள் வரை தமது மொழியில் தான் உரையாடுவார்கள்..

கலாச்சாரம் என்பது பற்றிய வரையறை எனக்கு தெரியாத காரணத;தால் அதை விட்டுவிடுகின்றேன்...

ஆனாலும் தமிழ் மொழியை பேசாது விட்டாலும் ஆடை அணிகலன்களில் இருந்து தமிழர்கள் மாறு பட மாட்டார்கள் .... நல்ல விலைக்கு சேலை... நல்ல பட்டு வேட்டி... அதற்க்கு ஏற்ற வேற கலர்ல ஒரு சேட்டு பேட்டுத் தான் திருமண நிகழ்வுகளுக்கு இளைஞர்கள் பேவதை காணக்கூடியதாக உள்ளது (கனடாவில்) 

திருமண முறையும் மாறப்பேவதில்லை... மண்டப நடாத்துனர்கள் மாற்றினால் சில நேரம் அது மாற சந்தர்ப்பம் உண்டு.. தமிழ் பாடசாலைகளின் வளர்ச்சி நிலை மத்தமாக உள்ளதுடன் ஒரே மாதிரியான பாடத்திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும். 

 

தமிழ் எழுதுவது சிக்கலாக இருக்கின்ற போதும்... ஐ போன் போன்ற தமிழ் கீ போர்ட் வந்த பின் எழுத தெரியாதவர்களும் எழுத முயற்ச்சிக்கின்றனர்.


ஒட்டு மொத்தமாக காலம் தான் பதில் சொல்லனும்..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

------

தமிழ் எழுதுவது சிக்கலாக இருக்கின்ற போதும்... ஐ போன் போன்ற தமிழ் கீ போர்ட் வந்த பின் எழுத தெரியாதவர்களும் எழுத முயற்ச்சிக்கின்றனர்.

------

 

அவ்வளவு தூரம் ஏன் போவான், நிதர்சன்.

தமிழ் கணணி தட்டச்சு வந்து யாழில் எழுத தொடங்கியிருக்காவிட்டால்....

ஈழத்தில் தமிழில் கல்வி கற்ற என்னால்,  இன்று சரியான தமிழில் எழுதுவேனா என்ற சந்தேகம் உள்ளது. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

எனக்குள் பல கேள்விகள் இருக்கின்றன.
 
1. வெளி நாட்டில் வாழும் எம் சந்ததி ஏன் தமிழ் பேச வேண்டும் ?
2. பேசுவதால் அவர்களுக்கு ஏற்படும் நன்மைகள் என்ன ?
3. பேசாவிட்டால் ஏற்படும் இழப்புகள் என்ன ?
4. அவர்கள் ஊருக்கு உண்மையில் போவார்களா ?
5. தமிழை அவர்களுக்கு திணிக்கின்றோமா ?
6. உண்மையில் இந்தத் தமிழ்ச் சமுதாயம் மதிப்பிற்குரிய ஒரு சமுதாயமா ?

 

 

1. இந்த ஒரு கேள்வியே போதும் உங்கள் ஏனைய கேள்விகள் இதைச் சார்த பதிலிலே பதிலளிக்கப்பட்டிருக்கும்.

 

2. தமிழ் மொழியில் பேசுவதால் உடனடி நன்மை...

         - இரு மொழிகளை அறிதல்

         - வேற்று நாட்டுத் தமிழர்களுடன் பொதுவான ஒரு மொழியான தமிழில் உரையாடுதல்

         - கனடாவில் வேலை வாய்ப்புகள் உண்டு  (வங்கி - மொழிபெயர்ப்பு -காவல்துறை )

         - தாய் மொழியை பேசுவதால் தமிழன் என்ற இன அடையாளத்தை இழக்காதிருத்தல்

 

3.- இன அடையாளம் இழந்த ஒரு சமூகம் உருவாகும்

   - ஏனைய மொழி பேசும் தமிழர்களோடு தொடர்பாடல் துண்டிக்கப்படும்

 

4. ஊருக்கு போவதற்காக யாரும் தமிழ் பேசும் படி கேட்கவில்லை. மாறாக ஊரில் செத்துக் கொண்டிருக்கும் தமிழை நாங்களாவது காப்பாற்றுவோம் , பேசுவோம் என்கிறார்கள். தமிழ் தெரியாதவர்கள் ஊருக்கு போக முடியாது என்ற நிலை இல்லை.

 

5. தமிழ் மொழியை ஒரு திணிப்பாக கருதும் எந்த குழந்தையும் -மாணவனும் தமிழைக் கற்றுக்கொள்ள மாட்டார். தமிழ் மொழியை ஒரு விருப்ப பாடமாக உயர்கல்வி நிலையங்களில் மாணவர்கள் தெரிவு செய்து கற்கிறார்கள் (கனடாவில் தெரிவு செய்ய முடியும்)  ஆனாலும் பெற்றோர் குழந்தைகளை எப்படி வீட்டில் வளர்க்கிறார்களோ அந்த வகையில் தான் பிள்ளைகள் வளரும்... எனக்கு தெரிந்த ஒருவர் வெளியில் தனது நண்பர்களோடு தமிழில் பேசியதே இல்லை. ஆனால் எங்களோடு வந்திருக்கும் போது தமிழில் பேசுவார். இப்போது எழுதுவதை கூட நன்றாக வாசிப்பார் ஆனால் தமிழ் நண்பர்களுடன் (அவரது பள்ளி) தமிழில் பேச மாட்டார் அல்லது அவரது நண்பர்கள் அதை விரும்பவில்லை. ஆனால் நிறைய ஆண்கள் -மாணவர்கள் தங்களுக்குள் தமிழில் பேசுவதை அவதானிக்க முடியும்... பெண்கள் தமிழ் கதைக்க வெட்கப்படுகிறார்கள் போல..!

6. நீங்கள் உங்கள் சமூகத்தை முதலில் எப்படிப் பார்க்கிறீர்கள் என்பதை சொன்னால் தான் மற்றவர்கள் கருத்துச்  சொல்ல முடியும். என்னைப் பொறுத்தவரை எனது சமூகம்  மதிப்புக்குரிய சமூகமே.. எந்த தொழிலை எடுத்தாலும் அதில் தமது கடின உழைப்பை காட்டி முன்னுக்கு வரும் இனமாகவும், தொன்மையான இனமாகவும் இருக்கிறது தமிழினம்.

அவ்வளவு தூரம் ஏன் போவான், நிதர்சன்.

தமிழ் கணணி தட்டச்சு வந்து யாழில் எழுத தொடங்கியிருக்காவிட்டால்....

ஈழத்தில் தமிழில் கல்வி கற்ற என்னால்,  இன்று சரியான தமிழில் எழுதுவேனா என்ற சந்தேகம் உள்ளது. 

 

அது மட்டுமன்றி, யாழில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த , ஆங்கிலம் தவிர்ந்த மொழி பேசுபவர்கள் இருக்கின்றனர். அவர்களை இணைத்து வைத்துள்ளது தமிழ் தான். நீங்கள் உங்கள் நாட்டு மொழியில் எழுதுவீர்களாக இருந்தால் என்னால் புரிந்து கொள்ள முடியாமல் போயிருக்கும்..!

Link to comment
Share on other sites

தனது கலாச்சாரம், பண்பாடு, மொழி மீது உயர்ந்த மதிப்பீடு இல்லாத ஒரு சமூகத்தால் எதையும் தக்க வைக்க முடியாது.  தமிழர் கலாச்சாரம் தான் வாழும் பிரதேசங்களிலே நிலைத்து நிற்க போராடும்போது புலம்பெயர் தேசம் எல்லாம் எம்மாத்திரம் !!??

Link to comment
Share on other sites

இசை, இலக்கியம், வாழ்க்கைமுறை, உணவு, ஓவியம், சிற்பம், நாடகம், திரைப்படம் போன்ற மனிதருடைய கலைப் பொருள்களிலும் நடவடிக்கைகளிலும் வெளிப்படும் இயல்பையே பண்பாடு என்கிறோம்.

இவற்றை எல்லாம் புலம்பெயர் தேசங்களில் தக்க வைக்க முடியுமா?

 

இவற்றை எல்லாம் அறிந்து கொள்ளவும், புரிந்து கொள்ளவும் முதலில் தமிழ் மொழி தெரிந்திருக்க வேண்டும்.

 

மொழி என்பது ஒரு உரையாடல் கருவி மட்டுமல்ல. அது ஒரு அறிவு பெட்டகம். பல்லாயிரம் வருடங்களாக வாழ்ந்த நமது மூதாதையர்களின் மொத்த அறிவும் / அனுபவமும் நூல் வடிவாக, செய்தியாக, கதையாக, பாடலாக மொழி மூலம் பரப்படுகிறது. அந்த மொழி அழியும்போது அதனோடு  அந்த அறிவும் அனுபவமும் சேர்ந்தே அழிந்து போகும்.

 

எல்லாவற்றியும் விட தமிழன், தமிழ் என்பது நமது அடையாளம். இன்சியல் இல்லாமல் இருப்பது போலத்தான் அடையாளம் தொலைப்பதும்....  பொருளாதரத்தையும் தாண்டி யோசித்தால்தான் இது எல்லாம் சாத்தியமாகும்.

 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மொழி பற்றிய எனது கருத்து கொஞ்சம் வித்தியாசமானது!

 

'Oriental Languages' என்னும் மொழித் தொகுதி படிப்பதற்கு மிகவும் சிக்கலானது! ஜப்பானிய, சீன, கொரிய, மற்றும் இந்திய மொழிகள் இதில் அடங்குமென நினைக்கிறேன்!

 

உயிர் எழுத்துக்களும், மெய் எழுத்துக்களும் கலந்து மொழி உருவானதால் . குழந்தை நிலையில் இருக்கும் போதே, ஒரு விதமான தர்க்க அறிவை இந்த மொழிகள் வளர்த்து விடுகின்றன!

 

இதுவே கணிதப் பிரச்னைகளையும், மென் பொருள் பிரச்சனைகளையும்,வாழ்க்கைப் பிரச்சனைகளையும் தீர்ப்பதற்கு ஒரு முன்மாதிரியாக 'தர்க்க அறிவை' இந்த இனங்களுக்கு வழங்குகின்றது என்பது எனது அனுமானமாகும்!

 

இந்த அறிவே கள்ள மட்டை அடிப்பதற்கும், உணவுக் கலப்படங்களுக்கும், ஆள் கடத்தல்களுக்கும் பயன்படுகின்றது என்பது வேறு விடயம்! :o

 

ஏனெனில் இந்த 'மொழிப்பின்னணி' குழந்தைப் பருவத்தில், அறவே இல்லாத இளையவர்களிடம்.. கணிதம் போன்ற பாடங்கள் அதிகம் வரவேற்பைப் பெறுவதில்லை!

 

இது மொழி சம்பந்தமாக,எனது தனிப்பட்ட அனுமானம் மட்டுமே!

Link to comment
Share on other sites

மேற்குறிப்பிடப்பட்ட  தலைப்பை தொடங்கியபோது உரிமையுடன் முன்வந்து கருத்தெழுதிய புங்கையூரன்.   ஈசன்.  பஞ்ச். அஞ்சரன். பெருமாள்    ஆகியேருக்கு எனது மனமுவர்ந்த பாராட்டுக்கள். உங்கள் கேள்விகளுக்கு பதில் அளிக்குமகமாகவும். இளம் தலை முறையினருக்கு ஏதுவாகவும் எனது கருத்துக்களை முன்வைக்கிறேன். இதில் தவறிருந்தால் சுட்டிக்காட்டி. சரியான கருத்துக்களையும்  ஆக்கபூர்வமான விமர்சனத்தையும்  பிரயோசனமளிக்கும் விதத்தில் முன் வைப்பீர்களென எதிர்பார்க்கின்றேன்.

 

         உலகில் வாழும் தொன்மையான இனங்களில் தமிழினமும் ஒன்று. இவ்வினத்தின் மொழி தமிழ். இதுவும் பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமைவாய்ந்த மொழியாகும்.  இம்மொழியில் சிறப்பையும் இம் மொழியைப் பேசும் இனத்தின் சிறப்பையும் எடுத்துக் காட்டுவனவாக இருப்பவை நாகரிகம்> பண்பாடு ஆகியவையாகும். இதில் பண்பாடு  கலாச்சாரம் என்றும் அழைக்கப்படுகிறது.  

 

*"மனிதனின் புறநல ஆக்கமாக விளங்கும் உணவு உடை - உறையுள் - ஊர்தி - நிலம் -  புலம் -  தோட்டம் - துரவு கழனி காடு அணி மணி மாடமாளிகை - கூடகோபுரம் – எழிலுடல். ஏற்றநிலை போன்றவற்றின் சிறப்பையும் செம்மையையும் உணர்த்துவது நாகரிகம்.||

*"மனிதனின் அகநல ஆக்கமாக விளங்கும் அன்பு -  அறிவு -  ஆற்றல் - இன்பம் -  இயல்பு - உணர்ச்சி -  எழிற்சி -  வீரம் - தீரம் -  ஈவு -  இரக்கம் -  அமைதி -  அடக்கம் - ஒப்பரவு - ஒழுக்கம் -  உண்மை - ஊக்கம் -  சினம் - சீற்றம் போன்றவற்றின் மேன்மையையும் உயர்வையும் உணர்த்துவது பண்பாடு என்று அழைக்கப்படுகிறது.|| (பைந்தமிழர் போற்றிய பண்பாடுகள் - இரா.நெடுஞ்செழியன்.)

 

பண்டைத் தமிழர்கள் தமக்கென இறைமையுள்ள நாடுகளில் வாழ்ந்தார்கள். அவர்களுக்கென நாகரிகம். பண்பாடுகள் இருந்தன. அதனால் அவன் முழுமைபெற்ற சிறப்புமிக்க ஒரு இனமாக வாழ்ந்தான். அப்படியான ஒரு இனம் இன்று அடிமைகளாகவும் அகதிகளாகவும் பல நாடுகளில் வாழும் நிலையில் உள்ளது. நிரந்தரமாக வசிக்கும் நாடுகளில் கூட அவனது மொழி. கலாச்சாரம் போன்றவை என்ன நிலையில் உள்ளன என்பதை மனச்சாட்சியுடன் சிந்தியுங்கள்.  இந்நிலையில் புலம்;பெயர்ந்து வாழும் தேசங்களில் தமிழர் கலாச்சாரம் நீடிக்குமா? அல்லது இன்றைய தலைமுறையினருடன் முடியுமா? ஏன்பதே கேள்வியாக உள்ளது.

 

புலம்பெயரும் ஒருவர் முதல் சந்திக்கும் மாற்றம் ஒரு நாட்டின் தட்பவெட்ப மாற்றங்களே. குறிப்பாக ஐரோப்பிய நாடுகளை நோக்கினால் அந்நாட்டுக் கால நிலைக்கேற்ப குளிரிலிருந்து தன்னைக் காப்பாற்ற உடையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். அதன் பின் அந்நாட்டு மொழியைக் கற்றாக வேண்டும். அந்நாட்டு மொழி அத்தியாவசிய தொடர்புசாதனமாக அமைகிறது. இதன் பின் உணவிலும் பண்பாட்டிலும் படிப்படியாக மாற்றங்கள் ஏற்படுகின்றன.

 

இந்நிலையில்தான்  புலம்பெயர்ந்து வந்த தமிழ் மக்கள் தமதுமொழி. கலை கலாச்சாரங்களைப் பேணிப் பாதுகாப்பதில் கவனம் செலுத்தினார்கள். இதன் விளைவாக தமிழ்மொழி கற்பிப்பதற்கு பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டன. கலைவகுப்புகள் நடாத்துவதற்கான பயிற்சிக்கூடங்கள் அமைக்கப்பட்டன. கலாச்சார நிகழ்வுகள்  நடைபெறுவதற்கான   மண்டபங்கள் ஒழுங்கு செய்யப்பட்டன. சமய வழிபாடுகள் மேற்கொள்வதற்கு கோவில்கள் அமைக்கப்பட்டன. தமிழ்மொழிப் பாடசாலைகள் அமைக்கப்படும்போது தமிழ்மொழி கற்பிப்பதில் பெற்றோர் பெருமளவில் ஈடுபடவில்லை. தமிழ்மொழி கற்பதால் என்ன பயன் என்று பலர் பேசியதைக் கேட்கக் கூடியதாக இருந்தது. திருப்பி அனுப்பினால் அங்குபோய் பிள்ளைகள் பல பிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டிவரும் என்ற மனப்பாங்கில் சிலர் தமிழ்மொழி கற்பிக்க உடன் பட்டார்கள். தமிழ்மொழி கற்பிற்க்கூடிய பல பயற்றப்பட்ட ஆசிரியர்கள் இருந்தும் அவர்கள் கற்பிப்பதற்கு முன்வரவில்லை. இந்நிலையில்தான்  கற்பிக்க ஆர்வம் உள்ளவர்களைக்கொண்டு பாடசாலைகள் நடாத்தப்பட்டன.  பின்னர் தமிழ்மொழியில் ஈடுபாட்டையும் ஊக்கத்தையும் ஏற்படுத்தும் முகமாகவும் போட்டிகள் நடாத்தப்பட்டு. திறமையாகச் சித்திஎய்துபவர்களுக்கு பரிசில்களும்   வழங்கப்படட்டன.  இதேபோன்று  கலைவகுப்புகளிலும் மேற்கொள்ளப்பட்டதாலும் தமிழ்மொழி. தமிழ்க்கலைகளில் முன்னேற்றம் காணும் நிலை ஏற்பட்டதுடன் தமிழ் இளைஞர்கள் தாய் மொழியான தமிழ் மொழியிலும் தமிழர் கலை கலாச்சார நிகழ்வுகளிலும் பெரும் ஈடுபாட்டுடன் செயற்பட்டார்கள்.

இதன்பின்  மாணவர்கள் மேற்கல்வி கற்கும் நிலைக்கு வந்தபோது தமிழ்மொழி. கலைப்பாடங்கள் இரண்டாம் நிலைக்குத் தள்ளப்பட்டன. இவர்கள் பல்கலைக்கழக அனுமதி பெற்றபோது தமிழ் மொழியைத் தொடர்ந்து பயிலும் நிலை தடைப்பட்டது.  

 

இக்காலகட்டத்தில் பெற்றோர்கள் பலர் புலம்பெயர்ந்து வாழும் நாட்டின் மொழியில்; பேசும் திறன் அற்றவர்களாக இருந்ததால். பிள்ளைகளுக்கும் பெற்றேருக்குமிடையே தமிழ்மொழி தொடர்பு மொழியாக இருந்தது. இந்நிலையில் பிள்ளைகள் பெற்றோருடன் தாய் மொழியிலும் அயலவர்களுடன் நண்பர்களுடனும்  வாழும் நாட்டு மொழியிலும் உரையாடத் தொடங்கினார்கள். இதனால் தமிழ்மொழி பழக்கம் குறைவடையத் தொடங்கியது. சில இடங்களில் கலைப்பாடங்கள் வாழும் நாட்டு மொழியிலே நடாத்த வேண்டிய தேவை ஆசிரியர்களுக்கு ஏற்பட்டது. இதனால் தமிழ்மொழிப் பாவனை  மேலும் வீழ்ச்சியடையத் தொடங்கியது. கலைப்பாடங்களில் பரதநாட்டியம் ஒருவித ஈடுபாட்டை இளம்பெண்களிடையே ஏற்படுத்தியதால்  அதனை பயிலும் சூழ்நிலையில் அவர்கள் இருந்தார்கள். இதுவும் காலப்போக்கில் குன்றத் தொடங்கியது. வாழும் நாடுகளில் அந்நாட்டு மொழி. கலை. கலாச்சாரம் போன்றவை தமிழ்மொழி. கலை கலாச்சாரம் பண்பாடு போன்றவற்றில் பாரிய தாக்கத்தை ஏற்பத்தி நெருக்ககடிக்குள்ளாகும் நிலையில்.  இந்தியாவில் இருந்து ஒலிபரப்பப்படும் தொலைக்காட்சிகள் தமிழருக்குரித்தில்லா நாகரிகம். பண்பாடு போன்றவற்றை புலம்பெயர்ந்து வாழ்பவர்களிடையே திணித்து வருவதுடன் ஆங்கிலத் தமிழையும் திணித்து வருகின்றன. இவற்றைக் கடைப்பிடித்து  ஐரோப்பாவில்  இருந்து ஒலிபரப்பப்படும்  தொலைக்காட்சிகளும் செயற்படுவதால் புலம்;பெயர்ந்து வாழும் தேசங்களில் தமிழ்மொழி. தமிழர் கலாச்சாரம் மேலும் நெருக்ககடிக்குள்ளாகும். இந்நிலையில் இன்றைய தலைமுறையினர் ஓரளவாவது கட்டிக் காத்தாலும் அதற்கடுத்த தலைமுறையினரிடையே தமிழ்மொழி. கலை கலாச்சாரம் பண்பாடு போன்றவை வாழுவதற்கான சாத்தியங்கள் இல்லை என்பதே உண்மை.

தொடரும்.

 

Link to comment
Share on other sites

குமாரசாமி: நிதர்சன், தமிழ்சிறி, ஆதித்த இளம்பிறையான் ஆகியோருக்கு எனது நன்றிகள்.

 

ஈசனின் கேள்விகளுக்கு நிதர்சன் பதிலளித்திருந்தார். அதையொட்டி எனது கருத்துக்களையும் இங்கே பதிகிறேன்.

மொழியென்பது ஒரு இனத்தின் அடையாளம். அதனை பழகாமல் விடின் அது  வழங்கொழிந்துபோய்விடும். பல மொழிகள் பழகாமலே இறந்துவிட்டன.  

மொழி அடையாளம் இழந்த இனம், நாடோடி இனம்.

மேலும் இரண்டு தமிழர்கள் ஒரு இடத்தில் நின்று ஆங்கில மொழியிலோ அல்லது பிரான்ஸ் மொழியிலோ பேசிக்கொண்டு நின்றால் அவர் எந்த நாட்டைச் சோந்தவர் என்று சிந்திக்கும் நிலை தோன்றும். பின்னர் அவர்கள் பாகிஸ்தானியரா? ஆப்கானிஸ்தானியரா? பங்களாதேசத்தவரா? சொர்ணாமா…? கேரளாவா? ஆந்திராவா? என்று மண்டையைக் குடையும் நிலை தோன்றும். இருவரும் தமிழில் உரையாடிக்கொண்டு நின்றாள் இந்நிலை தோன்றுமா?  

மொழி தெரியாமல் ஊருக்குப் போன ஒரு குழந்தை, விசரர் பைத்திய காரர் போன்று அங்கு நடந்து கொண்டதாகக் கேள்வி… காரணம் அவர் ஒருவருடனும் பழகக்கூடிய நிலை இல்லை.

மேலும் பிரான்ஸ், நோர்வே, இங்கிலாந்து, யேர்மனி, இத்தாலி போன்ற நாடுகளில் உள்ளவர்கள் அந் நாட்டு மொழிகளுடன் தமிழையும் கற்றிருந்தால் தமிழ்மொழி அனைத்துத் தமிழ் மக்களையும் தொடர்பு படுத்தக்கூடியதாக இருக்கும். இதற்காகத்தான் தமிழால் ஒருங்கிணைவோம் என்ற வாசகம் சேர்க்கப்பட்டது.

இன்றைக்கு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்று பாடியுள்ளார் சங்கப் புலவர் கணியன்பூங்குன்றனார் அவர்கள்.  மேலும் தமிழ் மொழி, அறிவியல், மருத்துவம்,  இலக்கியம், கலை, பொறியியல், விஞ்ஞானம், விவசாயம், ஆன்மிகம், சிற்பம் சாத்திரம், ஓவியம் போன்ற பழமைமிக்க  வாழ்வியலைக் கொண்ட இனம் தமிழினம். தமிழரின் பெருமை தமிழருக்குத் தெரியாது. சீனா, யப்பான், போத்துக்கல், இத்தாலி, யேர்மனி  போன்ற தேசத்தவருக்குத் தெரியும்.   
 

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

மேற்குறிப்பிடப்பட்ட  தலைப்பை தொடங்கியபோது உரிமையுடன் முன்வந்து கருத்தெழுதிய புங்கையூரன்.   ஈசன்.  பஞ்ச். அஞ்சரன். பெருமாள்    ஆகியேருக்கு எனது மனமுவர்ந்த பாராட்டுக்கள். உங்கள் கேள்விகளுக்கு பதில் அளிக்குமகமாகவும். இளம் தலை முறையினருக்கு ஏதுவாகவும் எனது கருத்துக்களை முன்வைக்கிறேன். இதில் தவறிருந்தால் சுட்டிக்காட்டி. சரியான கருத்துக்களையும்  ஆக்கபூர்வமான விமர்சனத்தையும்  பிரயோசனமளிக்கும் விதத்தில் முன் வைப்பீர்களென எதிர்பார்க்கின்றேன்.

 

      

 

புலம்பெயர்ந்து வாழும் தேசங்களில் தமிழர் கலாச்சாரம் நீடிக்குமா? அல்லது இன்றைய தலைமுறையினருடன் முடியுமா?

 

                          தமிழ் மக்கள் புலம்பெயர்ந்து உலகின் பல பாகங்களில் சிதறி வாழ்கிறார்கள். அப்படி வாழும் நிலையில் தமது மொழி, கலை, கலாச்சாரம் பண்பாடு பழக்க வழக்கங்களை ஓரளவாவது கட்டிக்காத்து வருகிறார்கள். இந்நிலையில் அவர்கள் வாழும் நாடுகளில் இதனைத் தொடர்ந்து கட்டிக் காப்;பார்களா? கைவிடுவார்களா என்று சிந்தித்து அதற்கான காரணிகளை சுருக்கமாக ஆராய்வோம்.

                          உலகில் வாழும் தொன்மையான இனங்களில் தமிழினமும் ஒன்று. அதேபோல்  தொன்மையான மொழிகள் ஆறில்,  தமிழ்மொழியும் ஒன்று. இவ்வாறான தொன்மையான மொழியைப் பேசும்   தமிழினம். உலகின் தோன்றிய முதல்  மாந்தனென  மொழிஞாயிறு ஞா.தேவநேயப்பாவாணர் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.

குமரிக்;(லெமுரியா); கண்டத்தில் முதல் தோன்றிய மனிதனும் தமிழனே. முதல் பேசப்பட்ட மொழியும் தமிழே||  இக்கூற்றை நோக்கும்போது தமிழினத்தினதும் தமிழ்மொழியனதும் தொன்மையைப்; புரிந்துகொள்ள முடியும்.

 

ஒரு இனத்தின் தொன்மையை நாகரீகம்;, பண்பாடு ஆகியவற்றின் வரலாற்று ஆதாரங்கள் மூலமாகவே, வரலாற்று ஆராய்ச்சி அறிஞர்கள் கணக்கிடுகிறார்கள். இவற்றில்; பண்பாடு  கலாச்சாரம் என்றும் அழைக்கப்படுகிறது.  இதில் நாகரிகம் \\மனிதனின் புறநல ஆக்கமாக விளங்கும், உணவு உடை - உறையுள் - ஊர்தி - நிலம் -  புலம் -  தோட்டம் - துரவு கழனி காடு அணி மணி மாடமாளிகை - கூடகோபுரம் - எழிலுடல் ஏற்றநிலை போன்றவற்றின் சிறப்பையும் செம்மையையும் உணர்த்துவது|| எனவும் \\அன்பு -  அறிவு -  ஆற்றல் - இன்பம் -  இயல்பு - உணர்ச்சி -  எழிற்சி -  வீரம் - தீரம் -  ஈவு -  இரக்கம் -  அமைதி -  அடக்கம் - ஒப்புரவு - ஒழுக்கம் -  உண்மை - ஊக்கம் -  சினம் - சீற்றம் போன்றவற்றின் மேன்மையையும் உயர்வையும் உணர்த்துவது பண்பாடு|| எனவும் இரா நெடுஞ்செழியன் அவர்கள் பைந்தமிழர் போற்றிய பண்பாடுகள் என்ற நூலில் குறிப்பிட்டுள்ளார்.

 

பண்டைக் காலத்தில்  தமிழர்கள் தமக்கென இறைமையுள்ள நாடுகளில் வாழ்ந்தார்கள். அதனால் மேற்கூறப்பட்ட நாகரீகம், பண்பாடு ஆகியவற்றில் முழுமைபெற்ற, சிறப்புமிக்க ஒரு இனமாக வாழ்ந்தார்கள். இதற்குப் பல சான்றுகளும் உள்ளன. இப்படியான ஒரு இனத்திற்கு இப்போது தனியாக இறமையுள்ள  நாடு இல்லை. இருந்தால் அதனைப் பாதுகாக்க முடியும் என சிலர் விவாதிக்கலாம். அதில் உண்மை உண்டு.  ஆனால் தமிழன் இப்போது நிரந்தரமாக வாழும் நாடுகளில் அவனது மொழி, கலை, கலாச்சாரங்களைப் பேணிக்காக்க முடிகிறதா? குறிப்பாக தழிழ்நாட்டில் தமிழின் நிலை என்ன? தமிழ் பண்பாட்டின் நிலை என்ன? சிந்தித்துப் பாருங்கள் அல்லது அங்கே சென்று பாருங்கள் புரியும். இந்நிலையில் தமிழர் புலம்பெயர்ந்து வாழும் இடங்களில் அதன் நிலைப்பாடு எப்படி அமைந்துள்ளது. எப்படி அமையப்போகிறது?

 

1983ம் ஆண்டுக்குப்பின்னர்  புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் தமிழ் மக்களில்  பெருந்தொகையானவர்கள்  இலங்கையைச் சேர்ந்தவர்களே. இவர்கள் இலங்கையில் இனவாத சிங்கள அரசின் இராணுவக் கொடுமையினால் உயிரைக் காப்பாற்றும்பொருட்டு  இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்தார்கள். புலம்பெயர்ந்தவர்கள் குறிப்பிட்ட ஒரு நாட்டுக்குப் புலம்பெயரவில்லை. உலகில் உள்ள பல நாடுகளுக்குப் புலம்பெயர்ந்து சென்றார்கள். புலம்பெயர்ந்து வாழும் தேசங்களில் தமது மொழி, கலாச்சாரங்களைப் பேணிப் பாதுகாக்கவும் தலைப்பட்டார்கள்.

 

புலம்பெயரும்போது, ஒருவர் முதல் சந்திக்கும் மாற்றம் ஒரு நாட்டின் தட்பவெட்ப நிலை மாற்றங்களே. குறிப்பாக ஐரோப்பிய நாடுகளை நோக்கினால் அதிகமான நாடுகளில் பெரும் குளிரே காணப்படும். அதற்கேற்ப வாழ அவர்; தன்னை மாற்றிக் கொள்ள வேண்டும். அதற்கமைவாக  குளிரிலிருந்து தன்னைக் காப்பாற்ற உடையில் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். அதன் பின் அவர் மற்றவர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்துவதற்கு அந்நாட்டு மொழியைக் கற்றாக வேண்டும். இதனால் அவர் தாய் மொழியான தமிழ்மொழியின் ஈடுபாடு குன்றத் தொடங்குகிறது.  இதன் பின் உணவிலும்  பண்பாட்டிலும் படிப்படியாக மாற்றங்கள் ஏற்படுகின்றன.

 

இந்நிலையில்தான்  புலம்பெயர்ந்து வந்த தமிழ் மக்கள் சிலர் தமிழ்மொழி, கலை, கலாச்சாரங்களைப் பேணிப் பாதுகாப்பதில் கவனம் செலுத்தினார்கள். இதன் விளைவாக தமிழ்மொழி கற்பிப்பதற்கு பாடசாலைகள் ஆரம்பிக்கப்பட்டன. கலைவகுப்புகள் நடாத்துவதற்கான பயிற்சிக்கூடங்கள் அமைக்கப்பட்டன. கலாச்சார நிகழ்வுகள்  நடைபெறுவதற்கான   மண்டபங்கள் ஒழுங்கு செய்யப்பட்டன. சமய வழிபாடுகள் மேற்கொள்வதற்கு கோவில்கள் அமைக்கப்பட்டன. தமிழ்மொழிப் பாடசாலைகள் அமைக்கப்படும்போது பெற்றோர் தமது பிள்ளைகளுக்கு தமிழ்மொழி கற்பிப்பதில்  பெருமளவில் ஆர்வம் காட்டவில்லை. இக்காலகட்டத்தில்  \\தமிழ்மொழி கற்பதால் என்ன பயன்? ||; என்று கேட்பவர்கள் பலரைக் காணக் கூடியதாக இருந்தது.  வாழும் நாடுகளில் தொடர்ந்து வாழ்வதற்கான அனுமதிப் பத்திரம் கிடைக்காததனால் இ.லங்கைக்குத் திருப்பி அனுப்பினால்  அங்குபோய் பிள்ளைகள் பல பிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டிவரும் என்ற மனப்பாங்கில் சிலர் தாமதமாகத் தமிழ்மொழி கற்பிக்க உடன் பட்டார்கள். அன்றைய சூழலில் தமிழ்மொழி கற்பிற்க்கூடிய பல பயிற்றப்பட்ட ஆசரியர்கள் இருந்தும் அவர்கள் கற்பிப்பதற்கு முன்வரவில்லை. இந்நிலையில்  கற்பிக்க ஆர்வம் உள்ளவர்களைக்கொண்டு பாடசாலைகள் நடாத்தப்பட்டன.  பின்னர் தமிழ்மொழியில் ஈடுபாட்டையும் ஊக்கத்தையும் ஏற்படுத்தும் முகமாகவும் திறமையாகச் சித்தி எய்துபவர்களுக்கான போட்டிகள் நடாத்தப்பட்டு பரிசில்களும்   வழங்கப்படட்டன.  இதேபோன்று  கலை வகுப்புகளிலும் மேற்கொள்ளப்பட்டதாலும் தமிழ்மொழி, தமிழ்க்கலைகளில் முன்னேற்றம் காணும் நிலை ஏற்பட்டதுடன் தமிழ் இளைஞர்கள் தாய் மொழியான தமிழ் மொழி கற்பதிலும் தமிழர் கலை, கலாச்சார நிகழ்வுகளிலும் பெரும் ஈடுபாட்டைக் காட்டினார்கள். 

 

பெற்றோர்கள் பலர் புலம்பெயர்ந்து வாழும் நாட்டின் மொழியில்; பேசும் திறன் அற்றவர்களாக இருந்ததால். பிள்ளைகளுக்கும் பெற்றேருக்குமிடையே தமிழ்மொழி தொடர்பு மொழியாக இருந்தது. பிள்ளைகள் பெற்றோருடன் தாய் மொழியிலும் அயலவர்களுடன் நண்பர்களுடனும்  வாழும் நாட்டு மொழியிலும் உரையாடத் தொடங்கினார்கள். இச் செயலே  தமிழ் மாணவர்களிடையே தமிழ்மொழிப் பழக்கம் குறையத் ஆரம்பமாக அமைந்தது.  இதன்பின்  மாணவர்கள் மேற்கல்வி கற்கும் நிலைக்கு வந்தபோது தமிழ்மொழி, கலைப்பாடங்கள் இரண்டாம் நிலைக்குத் தள்ளப்பட்டன. இவர்கள் பல்கலைக்கழக அனுமதி பெற்றபோது தமிழ் மொழியைத் தொடர்ந்து கற்கும் நிலையில் மாற்றம் ஏற்பட்டு, தமிழ்மொழி பழக்கம் மேலும்  குறைவடையத் தொடங்கியபோது. பரதநாட்டியம், குரலிசை,  வீணை போன்ற கலைப்பாடங்களில் ஈடுபாடு கொண்ட மாணவர்களுக்கு அவர்கள் வாழும் நாட்டு மொழியிலே அப்பாடங்களை நடாத்த வேண்டிய தேவை ஆசிரியர்களுக்கு ஏற்பட்டது. இதனால் தமிழ்மொழிப் பாவனை முன்னரைவிட  மேலும் வீழ்ச்சியடையத் தொடங்கியது. இதன்பின்  பரதநாட்டியம்  ஒருவித ஈடுபாட்டை இளம்பெண்களிடையே ஏற்படுத்தியதால்  அதனைத் தொடர்ந்து  பயிலும் நிலையில்  சில மாணவர்கள் இருந்தார்கள். இதிலும்  காலப்போக்கில்  வீ;ழ்ச்சி ஏற்பட்டது.

 

இந்நிலையில் தமிழ்மக்கள் நிரந்தரமாக வாழும் நாடுகளில் தமிழ் மொழியையும் தமிழர் கலாச்சாரத்தையும் பாதிப்புக்குள்ளாக்கி வரும்  சினிமா, தொலைக்காட்சி, சின்னத்திரை போன்றவை  புலம்பெயர்ந்த தேசங்களுக்கும் விஸ்தரிக்கப்பட்டுவருகின்றன. சினிமா மக்கள் மத்தியில் எதையும் சுலபமாகக் கொண்டு செல்லக்கூடிய பாரிய பிரச்சார ஊடகம். இப்போது அது வர்த்தக நோக்கிலேயே தயாரிக்கப்படுவதால் தமிழ் மக்களை  விழிப்பூட்டக் கூடிய கதை அம்சங்களைக் கொண்டவையாகத் தயாரிக்கப்படுவதில்லை. முற்றுமுழுதாகப் பொழுதுபோக்கு அம்சங்களைக் கொண்டதாகவும் மொழிக் கலப்புச் செய்வதாகவும் மாறுபட்ட கலாச்சாரத்ததைப் புகுத்துவதாகவுமே தயாரிக்கப்படுகிறது. இச்செயற்பாடு  தமிழ்நாட்டைப் பாதித்துவருவதுபோல் புலம் பெயர்ந்து வாழும்  தமிழ்மக்களையும் பாதிக்கத் தொடங்கியுள்ளது. புலம்பெயர்ந்து வாழும்  நாடுகளில் அன்னிய மொழி, கலை, கலாச்சாரத்துக்குள் சிக்கித் தவிக்கும் தமிழ்மக்களிடையே இவ் ஊடகத்தின் செயற்பாடுகள் மேலும் பாதிப்புகளை ஏற்படுத்திவருகின்றன. குறிப்பாக தமிழ் மொழியிலும் தமிழர் கலாச்சாரத்திலும் ஆங்கிலத் தமிழையும் வட இந்தியக் கலாச்சாரத்தையும்  புகுத்தி வருவதை இங்கு குறிப்பிடலாம். ஐரோப்பாவிலிருந்து ஒளிபரப்பப்படும் தொலைக்காட்சிச் சேவைகள் கூட இத் தொலைக்காட்சிகளைப் பின்பற்றி ஒளிபரப்படுவது வேதனைக்குரிய விடயமாகும்

 

இத்தருணத்தில் இந்தியாவிலிருந்து ஒளிபரப்பப்படும் தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் சிலவற்றை உதாரணத்துக்கு இங்கே இணைக்கிறேன். சினிமா நட்சத்திரங்களுடன் நடைபெறும் உரையாடல்கள், நிகழ்ச்சித் தலைப்புக்கள், விளம்பரங்கள் ஆகியவற்றைப் பாருங்கள்.  அவை புலம்பெயர்ந்து வாழும் தேசங்களிலுள்ள இளைஞர்களைப் எந்தெந்த வகையில் பாதிக்குமென சிந்தியுங்கள். 

 

நிகழ்ச்சித் தலைப்புக்கள்:

சுப்பர் சிங்கர் - Samaiல் – Star Junction Super Singer Koffee with dd  - கொனெக்~ன் Top 10 Home minister - ஜோடி நம்பர் 1  - கிச்சன் Super star…

விளம்பரங்கள்:

\\கட் பண்ணுங்க கொக் பண்ணுங்க ரேஸ்ட் பண்ணுங்க. றைஸ் ரெடி..

கொமடி இருக்கு சோங் இருக்கு பைற் இருக்கு லவ் இருக்கு... .||

உரையாடல்:

\\சோ... ஒகே...  ஓகே  எங்கட  றிலேசனசிப்  வெறி வெல்  நாங்க

சேர்ந்து வேக் பண்ணுறம் நல்லா என்சொய் பண்றம்  

ஒரு சின்னப் பிறேக்..    .||

                    

ஒளிபரப்;ப்படும் தொடர் நாடகங்களில் பெரும்பகுதி  முற்றுமுழுதாக வட இந்திய கலாச்சாரத்தில் தயாரிக்கப்பட்ட நாடகங்களாகவே காணப்படுகின்றன. அவை தமிழ் மொழிக்கு மாற்றப்பட்டு வெளியிடப்படுகின்றன.  இங்குள்ளவர்கள் அதனைப் பார்த்து அந்தக் கலாச்சாரத்துக்குள்ளேயே மூழ்கிறார்கள். அதில் வரும் நடைர் உடை, பாவனைகளைப் பின்பற்றி தாங்களும் அவ்வாறே நடக்க முனைகிறார்கள். தமிழர்  திருமண முறைகள், பூப்புனித நீராட்டு விழாக்கள் இக் கலாச்ச்சாரத்தைப் பின்பற்றி நாடக பாணியிலேயே பெருந்தொகைப் பணம் செலவு செய்து நடைபெறுகின்றன. நாடகத்தில் கதாபாத்திரங்கள் அணிந்துவரும் உடைகள் மாதிரி வேண்டுவதற்காக

நாடு நாடாக அலைபவர்களும் அவ்  உடைகளுக்காகவும் அதில் வரும் அரங்குகள் மாதிரி அமைத்து திருமண நிகழ்ச்சிகள், பூப்பனித நீராட்டுவிழா நிகழ்ச்சிகள்  செய்வதற்காகவும்  பெருந்தொகைப் பணம் செலவு செய்து  கடனாளியானவர்களும் பலருண்டு. மேலும் இந் நாடகங்கள் தமிழரின் சிந்தனைச் சக்தியை மூழ்கடித்து, தொலைக்காட்சிப் பெட்டியில் ஒட்டிய பூச்சியாக தமிழ்;மக்களை மாற்றியுள்ளது. சின்னத்திரை நாடகம் பார்த்துக் கொண்டிருந்தபோது வீடுகள் எரிந்த சம்பவங்களும் பல உண்டு.  இதே வேளை சினிமாவைச் சொல்லத் தேவையில்லை. இதன் மூலம்  தமிழ் மொழியும்  தமிழர் கலாச்சாரமுமு; வளர்வதற்குப் பதிலாக வீழ்ச்சியடையும் நிலையே உருவாகிறது.  இதை எம்மவர்கள் மௌனமாக வரவேற்பது கவலையான விடயம்.

 

தமிழர்கள் கூட்டுக்குடும்ப வாழ்க்கையை பின்பற்றி வாழ்பவர்கள். உறவு முறை, பெரியோரை மதித்தல், உணவுமுறை, திருமண முறை, வழிபாட்டு முறை எல்லாமே தனிப்பண்பு வாய்ந்தவையாக இருந்தன. புலம்பெயர்ந்து வாழும் இடத்தில் இவை அனைதும்  அடியோடு பிரட்டிப்போட்டதுமாதிரி மாறிவிட்டன. பிள்ளைகள் பதினெட்டு வயதுக்கு மேல் தனியான இடங்களுக்கு மாறி விடுகிறர்கள். இதனால் பெற்றோர் தனித்து விடப்பட்டு, கூண்டுக்குள் அடைபட்ட சோடிப் புறாக்கள்போல் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்தவண்ணம் நோயும் பிணியுமாக கவலையுடன் காணப்படுகிறார்கள்.

 

பிள்ளைகள் தனியாக வாழும் நிலை தோன்றியுள்ளதால் அவர்கள் பெரியேரை மதிப்பவர்களாகவோ, உறவுமுறை தெரிந்தவர்களாகவோ, தமிழரின் பாரம்பரிய உணவுகளையோ பழக்கவழக்கங்களையோ  பேணுபவர்களாகவோ, வழிபாட்டுத் தலங்களுக்குச் செல்பவர்களாகவோ  இல்லை. இதேவேளை அவர்கள் தமக்கு விரும்பமான ஒருவரை, வாழ்க்கைத் துணையாகத் தாமாகவே  தேடிக்கொள்ளுகிறார்கள். பின்னர்  இவர்களே விவாகரத்தும் பெற்றுத் தனிமையில் வாழ்கிறார்கள்.  மேற்காணும் திருமண முறைகளினால்  தமிழரிடையே காணப்படும் சாதி அமைப்பு முறையும் சமய சம்பிரதாய முறைகளும் தகர்க்கப்படுகின்றன. பலரின் திருமண நிகழ்வுகள் வாழும் நாட்டு முறைப்படியே நடைபெறுகின்றன. அதே வேளை தமிழரல்லாதவர்களைத் திருமணம் செய்து கொள்பவர்களும் உண்டு. எதிர்காலத்தில் இவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகள் தமிழர் கலாச்சாரத்தையோ தமிழ் மொழியையோ கடைப்பிடிக்காதவர்களாகத்தான் வளர முடியும். 

 

பெற்றோருக்கமைவாக நடக்கும் பிள்ளைகளையும் காணக்கூடியதாக இருக்கிறது. இவர்களில்  பலர் பெற்றோரின் வற்புறுத்தலுக்கமைவாகச் செயல்பட வேண்டிய கட்டாயத்துக்குள்ளாவதால் விரத்தி நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள். சிலர் வழிபாட்டுத் தலங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கே ஐயர்மாரின் காலில் விழும்படி  தள்ளிவிடப்படுகிறார்கள். வழிபாட்டுத் தலங்கள்; பாதிக்கப்பட்டுவரும் தமிழருக்கும் உதவுவதில்லை. தமிழ்மொழி தமிழர் கலாச்சாரம் போன்றவற்றையும் பேணிப்பாதுகாக்க முன்வருவதில்லை. மாறாகப் பணம்கறக்கும் இடங்களாகவே செயல்படுகின்றன. இத்தலங்கள் நேரத்திற்கும் மதிப்பளிப்பதில்லை.  இதனை அவதானித்து வரும் இளைஞர்கள் வழிபாட்டுத் தலங்களுக்கு (சைவக் கோவில்கள்) செல்வதையே வெறுக்கிறார்கள்.

 

புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களுக்கு அடுத்த தலைமுறை,  வாழும் நாட்டுக் கலாச்சாரத்தை உள்வாங்கி,  அந்நாட்டு  மொழியிலேயே  சகல தொடர்புகளையும் பேணி வருவதாலும்  அவர்களுக்கு பிறக்கும் குழந்தைகளுக்கு வைக்கும் பெயரும் மாற்றம் பெறுவதாலும் இரண்டாவது தலைமுறை  தமிழ்மொழியில் பேசுவதற்கான வாய்ப்போ தமிழர் கலாச்சாரத்தைப் பேணுவதற்கான வாய்ப்போ  கிடையாதென்பது எனது கருத்து  அவர்கள் முற்றுமுழுதாக வாழும் நாட்டுக் கலாச்சாரத்திலேயே வளர்ந்து வாழும் நாட்டு மொழியையே பேசுவார்கள்.   அதனால் தமிழர் கலாச்சாரமோ மொழியோ  எதிர்காலத்தில் கைவிடப்படும். இக்கட்டத்தில் காக்கையின் கூடுகள்  என்றொரு சிறுகதையில் வரும் பகுதியை இக்கே குறிப்பிடலாம். அது இப் பந்திக்குப் பொருத்தமாகவும் அமையுமெனக் கருதுகிறேன்.

 

\\காக்கையின் கூடுகளில் குயில் முட்டையிட காகத்தினால் அது அடைகாக்கப்பட்டு  பொரிக்கப்பட்ட பின் குஞ்சுகள் காக்கா என்று கத்தாமல் கூ...கூ...  என்றுதானே கூவத் தொடங்குகின்றன. ஆனால் நம் தமிழ்க் குஞ்சுகளைப் பார்த்தீர்களா? எந்த நாட்டில் பிறந்ததுகளோ அந்த நாட்டு மொழியில் அல்லவா பேசுதுகள்.|| 

 

இந்நிலையில் ஆரம்பகாலங்களில் பாடசாலைகளை ஆரம்பித்தவர்கள் தமிழ்மொழி வளர்க்கும் நோக்கில் மிக்க  ஆர்வத்துடன் மாணவர்களை அணுகிப் தமிழைப் படிக்கத்தூண்டி. பாடசாலையை நடாத்தினார்கள். அதனால் பல  மாணவர்கள் ஆர்வத்துடன் படிக்க சென்று கொண்டிருந்தார்கள். இப்போது அந்த நிலை இல்லை. பாடசாலையை நடாத்தும் சிலர்,  தமிழ் மொழியை வளர்ப்பதில் ஆர்வமற்றவர்களாகவே காணப்படுகிறார்கள். அதனால் கல்வி கற்க வரும் மாணவர்களும் தமிழ்மொழி கற்பதில் கவனம் செலுத்துவது மிகக் குறைவாக உள்ளது. இதேபோன்றுதான் கல்வி போதிக்கும் சில ஆசிரியர்களும்  கௌரவநோக்கை அடிப்படையாக வைத்துத்தான்  பாடசாலைக்கு செல்லுகிறார்களே தவிர தமிழ்மொழியைப் பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டர்களாக இல்லை. கலைப்பாடங்கள் நடாத்தும் பாடசாலைகளோ ஆசிரியர்களோ பணத்தைக் குறியாகக்கொண்டே இயங்குகிறார்கள். தமிழர் நலன்சார்ந்த சமூக அமப்புகள் பல அமைக்கப்பட்டிருந்தும் அவைகூட சுயநலப் போக்கிலும் பதவிப் போட்டிகளிலும் அரசியல் காழ்ப்புணர்வுகளுக்குள்ளும் சிக்கி ஏட்டளவில்தான் செயல்படுகின்றன. சில மேடை நிகழ்சிகள் செய்வதுடனேயே நின்று விடுகின்றன.  மேடை நிகழ்ச்சிகளில் தெலுங்குப்பாடல்களே முன்னணி வகுக்கின்றன. இச் செயற்பாடுகளும் தமிழ்மொழியினதும் தமிழ் கலையினதும் எதிர்காலத்தைப்  பாதிப்புக்குள்ளாக்குகின்றன.

 

தமிழ் மக்கள்   புலம்பெயர்ந்து   வாழும் தேசங்களில்,  தமிழ் மக்களின் முதலாவது தலமுறையில், வாழும் நாட்டு கலாச்சாரமும் மொழியும் அழுத்தத்தைக் கொடுப்பதினாலும் தமிழ் இளைஞர்கள் மனங்களில் தமிழ் மொழிபற்றிய ஆர்வம் குறைவடைந்து வருவதாலும் தமிழ்நாட்டி லிருந்து ஒளிப்பரப்பபடும் தொலைக்காட்சிச் சேவைகளும்  சினிமாவும் சின்னத்திரையும் தமிழருக்குரித்தில்லாத கலாச்சாரத்தைத் திணிப்பதாலும் தமிழ்கொலை செய்வதாலும் கல்விக்கூடங்கள் கலைக்கூடங்கள் வழிபாட்டுத் தலங்கள் வியாபார நோக்கில் நடப்பதினாலும் இவை சம்பந்தமாக அவர்களிடையே போட்டி பொறாமைகள் ஏற்பட்டு அவை முழுத் தமிழ்மக்களையும் பாதிப்படையச் செய்வதாலும்   தமிழ் மக்களிடையே உள்ள நற்பண்புகள் மாறி வருவதாலும் தமிழ்மொழிப் பற்றில்லாமல் நடப்பதாலும்,  நாட்டுப் பற்று, மொழிப் பற்று தமிழரிடையே அருகி வருவதாலும் அதில் பலர் போலித்தனமாக ஈடுபடுவதாலும்; இளம் தலைமுறையினருக்கு தமிழினத்தின் மேலும் தமிழர் கலாச்சாரத்தின் மேலும் சலிப்பு ஏற்படவும்  அவர்கள் தமது குழந்தைகளைத் (இரண்டாவது தலைமுறை )தாம் வாழும்  நாட்டுக் கலாச்சாரத்துக்குள்ளேயே  வளர்ப்பார்கள். 

அதனால் தமிழர்  புலம்பெயர்ந்து வாழும் தேசங்களில் தமிழ் மொழியோ தமிழ் கலாச்சாரமோ முதலாவது தலைமுறையுடன் முடிவுக்கு வரும் அவல நிலையே தோன்றும். கூலிகளாகப் பிடித்துச் சென்று   தென்னாபிரிக்கா, பர்மா, செனகல், கயானா, பிஜி, சூரினாம் ஆகிய நாடுகளில் வாழும் தமிழ் மக்களும் கல்வி பயில்வதற்காகவும் வேலை வாய்ப்புக்கருதியும் இங்கிலாந்து, வட அமெரிக்கா சென்று வாழ்ந்து வரும் தமிழ் மக்களும், தமிழ் தெரியாமலே வாழுகிறார்கள் இவர்கள் இதற்கு உதாரணம்.

 

ஆகவே அன்பு உள்ளங்களே, தமிழ்மொழிக்காகவும் தமிழருக்கு ஒரு தேசம் வேண்டுமென்றும் தமது விலைமதிப்பற்ற உயிர்களை ஆகுதியாக்கியவர்களை ஒரு கணம் சிந்தித்துப் பார்த்து, புலம்பெயர்ந்து வாழும் தேசங்களில் எமது மொழி, கலை, கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றைக் தொடர்ந்து காப்பாற்றுவதற்கான  முன்னெடுப்புகளை இப்பொழுதே எல்லோரும் ஒன்றிணைந்து ஆரம்பியுங்கள். 

 

              \\தமிழுக்கும் அமுதென்று பேர் - அந்தத்

                                           தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! ||

 

 

 

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

http://www.youtube.com/watch?v=xyN98UqBWXM

Link to comment
Share on other sites

பொங்குதமிழ் பக்கம் வந்து எனது கருத்தையும் கவனித்து உங்கள் கருத்தையும் பதிவு செய்த புங்கையூரான்,  ஈசன், Paanchஅஞ்சரன்பெருமாள்குமாரசாமி,   நிதர்சன்,   தமிழ்சிறி,  ஆதித்ய இளம்பிறையான்       ஆகியோருக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.

எமது தேசத்தில் தமிழர் அடையாளங்களை அழிப்பதையே நோக்கமாகக் கொண்டு சிங்கள இனவாதிகள் செயற்படுகிறார்கள். ஆதலால் நாம் தமிழர் மொழி, கலை கலாச்சார விழுமியங்களை  இங்கு பாதுகாத்து காப்பாற்றி வந்தால்தான் அதனை நமது தேசத்தில் நாற்றாக நட முடியும்.  ஒவ்வொரு பெற்றோரும் சிந்திக்க வேண்டும். தமிழ்படிப்பிக்க ஊக்குவிக்க வேண்டும்நாமும் செயற்படுவோம். 

மேலும் உங்கள் கருத்துக்களைத் தொடருகங்கள்.

நன்றி.

பாடல் இணைத்த தமிழ் சிறிக்கு மனமார்ந்த நன்றிகள். சங்கே முழங்கு பாடலையும் இதன் கீழ் இணைத்துவிடுங்கள்

Link to comment
Share on other sites

சங்கே முழங்கு பாடலை இணைத்த புங்கையூரான் க்கு மனமார்ந்த நன்றிகள்.

மேலும் உங்கள் கருத்துக்களைத் தொடருங்கள்.

நன்றி.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • கொதிக்கும் காய்ச்சலுடன், தாயின் முன்னிலையில் கண்ணீரை வென்ற ‘சஞ்சுமல் பாய்ஸ்’ வீரர் பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக 29 மார்ச் 2024, 03:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஒவ்வொரு அணியிலும் ஒரு ரியல் ஹீரோ இருப்பார். அனைத்து நேரங்களிலும் அவர்களின் உதயம் இருக்காது, தேவைப்படும் நேரத்தில் அவர்களின் எழுச்சி அணியை வெற்றிக்கு அழைத்துச் செல்லும். அந்த வகையில் “சஞ்சுமெல் பாய்ஸ்” என்று அழைக்கப்படும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு நேற்றைய ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஒளிர்ந்தவர் ரியான் பராக் மட்டும்தான். ஜெய்ப்பூரில் நேற்று நடந்த ஐபிஎல் டி20 தொடரின் 9-வது லீக் ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை 12 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2ஆவது வெற்றி பெற்றது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. முதலில் பேட் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 185 ரன்கள் சேர்த்தது. 186 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் சேர்த்து 12 ரன்களில் தோல்வி அடைந்தது. இந்த வெற்றியின் மூலம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சொந்த மைதானத்தில் இந்த சீசனில் தொடர்ந்து 2ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. முதல் வெற்றி பெற்றவுடன் நிகர ரன்ரேட்டை ஒன்று என வைத்திருந்த ராஜஸ்தான், 2 வெற்றிகளில் 4 புள்ளிகள் பெற்றும் நிகர ரன்ரேட் 0.800 புள்ளியாகக் குறைந்துவிட்டது. டெல்லி கேபிடல்ஸ் அணி அடுத்தடுத்து இரு தோல்விகளைச் சந்தித்துள்ளது. இதனால் இன்னும் புள்ளிக்கணக்கைத் தொடங்க முடியாமல், நிகர ரன்ரேட்டும் மைனஸ் 528ஆக பின்தங்கியுள்ளது. இந்த ஆட்டத்தில் ரியல் ஹீரோவாக ஜொலித்தவர் ரியான் பராக் (45 பந்துகளில் 84 ரன்கள் 6சிக்ஸர்கள், 7பவுண்டரிகள்) மட்டும்தான். ஒரு கட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி 3 விக்கெட் இழப்புக்கு 36 ரன்கள் என்று இக்கட்டான நிலையில் தடுமாறியது. ஆனால், 4வது பேட்டராக களமிறங்கிய ரியான் பராஸ், அஸ்வினுடன் ஜோடி சேர்ந்து 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும், ஜூரெலுடன் சேர்ந்து 52 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து அணிக்கு கவுரமான ஸ்கோரை பெற்றுக் கொடுத்தார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு கட்டத்துக்கு மேல் அதிரடி ஆட்டம்தான் ஸ்கோரை உயர்த்த கை கொடுக்கும் என்பதை அறிந்த ரியான் பராக் டெல்லி பந்துவீச்சாளர்களை வெளுக்கத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் 20 பந்துகளில் 16 ரன்கள் என்று மெதுவாக ஆடிய பராக் அதன்பின் பேட்டை சுழற்றத் தொடங்கினார். பராக் தான் சந்தித்த கடைசி 19 பந்துகளில் மட்டும் 58 ரன்களைச் சேர்த்தார். அதிலும் அதிவேகப்பந்துவீச்சாளர் நோர்க்கியா வீசிய கடைசி ஓவரில் மட்டும் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் என 25 ரன்களை பராக் சேர்த்தார். ராஜஸ்தான் அணியை ஒற்றை பேட்டராக கட்டி இழுத்து பெரிய ஸ்கோருக்கு கொண்டு வந்த ரியான் பராக் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த 3 சீசன்களிலும் ரியான் பராக் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. கடந்த சீசனில் 7 இன்னிங்ஸில் பராக் சேர்த்தது வெறும்78 ரன்கள்தான், 2022ம் ஆண்டு சீசனில் பராக் 14 இன்னிங்ஸ்களில் 148 ரன்கள் சேர்த்தார், 2021 சீசனில் 10 இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் என பராக் பேட்டிங் மோசமாகவே இருந்தது. இதனால் அணியில் இருந்தாலும் பல போட்டிகளில் ப்ளேயிங் லெவனில் இடம் பெறவில்லை. ஆனால், கடந்த ஆண்டில் உள்நாட்டுப் போட்டிகளில் ரியான் பாராக் தீவிரமான ஆட்டத்தால் கிடைத்த அனுபவம் ஆங்கர் ரோல் எடுத்து அணியை இக்கட்டான நிலையில் இருந்து மீ்ட்டுள்ளது. 2024 சீசன் தொடங்கியதில் இருந்தே பராக்கின் பேட்டிங்கில் முதிர்ச்சியும், பொறுப்புணர்வும் அதிகம் இருந்ததைக் காண முடிந்தது. முதல் ஆட்டத்திலும் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து பராக் 93 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தது பெரிய ஸ்கோருக்கு கொண்டு சென்றது. அந்த ஆட்டத்திலும் பராக் 29 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்தார். இரு போட்டிகளிலும் தன்னுடைய ஆட்டத்தின் முதிர்ச்சியை, பொறுப்புணர்வை பராக் வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்லாமல் கடந்த 3 நாட்களாக ரியான் பராக்கிற்கு கடும் காய்ச்சல், உடல்வலி இருந்துள்ளது.ஆனால், மாத்திரைகளை மட்டும் உட்கொண்டு, அந்த உடல் களைப்போடு நேற்றைய ஆட்டத்தில் பராக் விளையாடினார் என ராஜஸ்தான் நிர்வாகம் தெரிவித்துள்ளது.   பட மூலாதாரம்,GETTY IMAGES தாயின் முன் சிறப்பாக ஆடியது மகிழ்ச்சி ஆட்டநாயகன் விருது வென்ற ரியான் பராக் பேசுகையில் “ என்னுடைய உணர்ச்சிப் பெருக்கு அடங்கிவிட்டது, என்னுடைய தாய் இந்த ஆட்டத்தை இங்கு வந்து நேரில் பார்த்தால் அவர் முன் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருக்கிறேன். என்னை இங்கு கொண்டுவருவதற்கு அவர் பல போராட்டங்களை சந்தித்துள்ளார். நான் சிறப்பாக ஆடுகிறேனோ இல்லையோ, என்னுடைய திறமை என்னவென்று எனக்குத் தெரியும், அதை ஒருபோதும் மாற்றியதில்லை. உள்நாட்டுப் போட்டிகளில் அதிகமான போட்டிகளில் பங்கேற்றேன், அதிகமான ரன்களும் குவித்தேன். டாப்-4 பேட்டராக வருபவர் ஆட்டத்தை கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டும் அதை செய்திருக்கிறேன். முதல் ஆட்டத்தில் கேப்டன் சஞ்சுவுடன் சேர்ந்து நல்ல பார்ட்னர்ஷிப் அமைத்தேன். இன்று சஞ்சு செய்த பணியை நான் செய்தேன். நான் 3 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் இருந்தேன். இந்த ஆட்டத்துக்காக கடினமாக உழைத்துள்ளேன். என்னால் விளையாட முடியும் என மனதை தயார் செய்து பேட் செய்தேன்” எனத் தெரிவித்தார். ஆட்டத்தை திருப்பிய பந்துவீச்சாளர்கள் ஒரு கட்டத்தில் ஆட்டம் டெல்லி கேபிடல்ஸ் கையில்தான் இருந்தது. அதை அவர்களிடம் இருந்து பறித்தது ராஜஸ்தான் பந்துவீச்சாளர்கள்தான். கடைசி 5 ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 60 ரன்கள் தேவைப்பட்டது. 16-வது ஓவரை வீசிய சஹல் 6 ரன்கள் மட்டுமே கொடுத்து அபிஷேக் போரெல் விக்கெட்டை கைப்பற்றினார். அஸ்வின் வீசிய 17-வது ஓவரில் டெல்லி பேட்டர் ஸ்டெப்ஸ் 2 சிக்ஸர்கள் உள்பட 19 ரன்கள் சேர்த்தால் ஆட்டம் பரபரப்பானது. ஆவேஷ் கான் 18-வது ஓவரை வீசியபோது, ஸ்டெப்ஸ் ஒரு பவுண்டரி உள்பட 9 ரன்களைச் சேர்த்து அணியை வெற்றி நோக்கி நகர்த்தினார். கடைசி இரு ஓவர்களில் டெல்லி வெற்றிக்கு 32 ரன்கள் தேவைப்பட்டது. சந்தீப் சர்மா வீசிய 19-வது ஓவரில் முதல் இருபந்துகளில் பவுண்டரி, சிக்ஸர் என ஸ்டெப்ஸ் பறக்கவிட்டதால் ஆட்டம் டெல்லி பக்கம் சென்றது.அந்த ஓவரில் டெல்லி 15 ரன்கள் சேர்த்தது. கடைசி ஓவரில் டெல்லி வெற்றி பெற 17 ரன்கள் தேவைப்பட்டது.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெத்ஓவர் ஸ்பெஷலிஸ்ட் கடந்த முதல் ஆட்டத்திலும் டெத் ஓவரில் கடைசி ஓவரை ஆவேஷ்கான் வீசி வெற்றி தேடித்தந்ததால் இந்த முறையும் கேப்டன் சஞ்சு, ஆவேஷ் கானை பயன்படுத்தினார். கடைசி ஓவரை ஆவேஷ்கான் மிக அற்புதமாக வீசினார். நல்ல ஃபார்மில் இருந்த ஸ்டெப்ஸை ஒரு பவுண்டரி, சிக்ஸர்கூட அடிக்கவிடாமல், 3 பந்துகளை அவுட்சைட் ஆஃப்ஸ்டெம்பிலும் வீசினார். 4வது பந்தை ஸ்லாட்டில் வீசியும் ஸ்டெப்ஸ் அடிக்கவில்லை. 5-வது பந்தை ஃபுல்டாசாகவும், கடைசிப்பந்தில் ஃபுல்டாசாக வீசி டெல்லி பேட்டர்களை கட்டிப்போட்டார் ஆவேஷ் கான். அதிரடியாக ஆடிய அஸ்வின் நெருக்கடியான கட்டத்தில் பேட்டிங் வரிசையில் தரம் உயர்த்தப்பட்டு நடுவரிசையில் அஸ்வின் நேற்று களமிறக்கப்பட்டார். ரியான் பராக்கிற்கு நல்ல ஒத்துழைப்பு அளித்து அஸ்வின் ஸ்ட்ரைக்கை மாற்றி, 54 ரன்கள் பார்ட்னர்ஷிப்பும் அமைத்துக் கொடுத்தார். ரியான் பராக் தன்னுடைய முதல்பாதி இன்னிங்ஸில் ரன் சேர்க்க திணறினார், ஆனால் அஸ்வின் அனாசயமாக 3 சிக்ஸர்களை வெளுத்தார். குறிப்பாக குல்தீப், நோர்க்கியா ஓவர்களில் அஸ்வின் 3 சிக்ஸர்களைப் பறக்கவிட்டார். அஸ்வின் அடித்த திடீர் சிக்ஸால்தான் ராஜஸ்தான் ரன்ரேட் 6 ரன்களைக் கடந்தது. அஸ்வின் தன்னுடைய பணியில் சிறிதும் குறைவி்ல்லாமல் சிறிய கேமியோ ஆடி 19 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்து பெவிலியன் சென்றார்.   பட மூலாதாரம்,GETTY IMAGES டெல்லிக்கு தொல்லையாகிய சஹல் ராஜஸ்தான் அணி தொடக்கத்திலேயே பர்கர், போல்ட் இருவருக்கும் 6 ஓவர்களை வீசச் செய்து பவர்ப்ளேயோடு முடித்துவிட்டது. இதனால் 14 ஓவர்கள்வரை நல்ல ஸ்கோர் செய்யலாம் என டெல்லி பேட்டர்கள் நினைத்திருக்கலாம். டேவிட் வார்னரும் களத்தில் இருந்தார். ஆனால், ஆவேஷ் கான் ஆஃப் சைடில் விலக்கி வீசி வார்னரை அடிக்கச் செய்து ஆட்டமிழக்கச் செய்தார். மிக அருமையாக பந்துவீசிய சஹல் இரு இடதுகை பேட்டர்களான கேப்டன் ரிஷப் பந்த், போரெல் இருவரையும் வெளியேற்றினார். 4 ஓவர்கள் வீசிய சஹல் 19 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினார், இவரின் பந்துவீச்சில் ஒரு சிக்ஸர் மட்டுமே அடிக்க முடிந்தது, பவுண்டரி ஒன்றுகூட அடிக்கவில்லை. சஹல் 7 டாட் பந்துகளையும் வீசியதை கணக்கிட்டால் 2 ஓவர்களில்தான் சஹல் 19 ரன்களை வழங்கியுள்ளார். இரு முக்கியமான பேட்டர்களை சஹல் தனது பந்துவீச்சின் மூலம் வெளியேற்றியது டெல்லி அணிக்கு பெரிய பின்னடைவாக மாறியது. நடுங்கவைத்த பர்கர் ராஜஸ்தான் அணிக்கு இந்த சீசனில் கிடைத்த பெரிய பலம் டிரென்ட் போல்ட், ஆன்ட்ரூ பர்கர் ஆகிய இரு இடதுகை வேகப்பந்துவீச்சாளர்கள்தான். போல்ட் இந்த ஆட்டத்தில் விக்கெட் ஏதும் எடுக்காவிட்டாலும், பர்கர் இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதிலும் ரிக்கி புயிக்கு பர்கர் வீசிய பவுன்ஸர் சற்று தவறியிருந்தால் ஹெல்மெட்டை பதம் பார்த்திருக்கும், ஆனால், கிளவ்வில் பட்டு சாம்சனிடம் கேட்சானது. அதேபோல நல்ல ஃபார்மில் இருந்த மார்ஷ்(23) விக்கெட்டையும் பர்கர் தனது அதிவேகப்பந்துவீச்சில் வீழ்த்தினார். தொடக்கத்திலேயே மார்ஷ், ரிக்கி புயி விக்கெட்டுகளை வீழ்த்தி டெல்லிக்கு பெரிய சேதாராத்தை பர்கர் ஏற்படுத்தினார். மணிக்கு சராசரியாக 148கி.மீ வேகத்தில் பந்துவீசும் பர்கர், பெரும்பாலான பந்துகளை துல்லியமாக, லைன் லென்த்தில் கட்டுக்கோப்பாக வீசுவது ராஜஸ்தான்அணிக்க பெரிய பலம்.   பட மூலாதாரம்,GETTY IMAGES வாய்ப்புகளை தவறவிட்ட டெல்லி அணி டெல்லி அணி பந்துவீச்சிலும்சரி, பேட்டிங்கிலும் சரி கிடைத்த வாய்ப்புகளை சரியாகப் பயன்படுத்தி இருந்தால் வெற்றி கிடைத்திருக்கும். பந்துவீச்சில் தொடக்கத்திலேயே ராஜஸ்தான் பேட்டர்கள் ஜெய்ஸ்வால்(5), பட்லர்(11), சாம்ஸன்(15) என 3 முக்கிய பேட்டர்களையும் முகேஷ் குமார், குல்தீப், கலீல் அகமது வீழ்த்திக் கொடுத்தனர். இந்த நெருக்கடியை தொடர்ந்து ஏற்படுத்தி தக்கவைத்திருந்தால், ராஜஸ்தான் அணி ஸ்கோர் 120 ரன்களை கடந்திருக்காது. 14 ஓவர்கள் வரை ராஜஸ்தான் அணி 100 ரன்களைக் கூட கடக்கவில்லை. ஆனால், கடைசி 5 ஓவர்களில் அதிலும் டெத் ஓவர்ளில் டெல்லி பந்துவீச்சு மோசமானதை, பராக் பயன்படுத்தி வெளுத்து வாங்கினார். கலீல் அகமது, அக்ஸர் படேல் தவிர எந்தப் பந்துவீச்சாளரும் வாய்ப்பைப் பயன்படுத்தவில்லை. அதேபோல பேட்டிங்கிலும், பவர்ப்ளேயில் 59 ரன்களும், 12 ஓவர்களில் 100 ரன்களை எட்டி டெல்லி அணி வெற்றி நோக்கி சீராக சென்றது. ஆனால், ஒரு கட்டத்தில் ரிஷப் பந்த், போரெல், வார்னர் ஆகியோர் 25 ரன்களுக்குள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது டெல்லிக்கு பின்னடைவாக மாறியது. கடைசி 5 ஓவர்களில் 60 ரன்களை எட்டுவதற்கும் ஸ்டெப்ஸ் கடுமையாக முயன்று வெற்றிக்கு அருகே கொண்டு சென்றார். ஸ்டெப்ஸுடன் நல்ல பவர் ஹிட்டர் பேட்டர் இருந்தால் ஆட்டம் திசைமாறியிருக்கும். டெல்லி அணியில் வார்னர்(49), ஸ்டெப்ஸ்(44) தவிர எந்த பேட்டரும் பெரிதாக ஸ்கோர் செய்யவில்லை. https://www.bbc.com/tamil/articles/clm7pvlmprko
    • Published By: DIGITAL DESK 3   29 MAR, 2024 | 09:47 AM   உலகில் வாழும் கிறிஸ்தவர்கள் இன்று யேசுக்கிறிஸ்துவின் பாடுகள், மரணத்தை நினைவு கூர்ந்து புனித வெள்ளியை அனுஷ்டித்து வருகின்றனர். இயேசுவின் மறைவு புனித வெள்ளியாக இன்று அனுசரிக்கப்படுகிறது. அவர் உயிர்த்தெழுந்த நாள் 'ஈஸ்டர்' ஞாயிறாக அனுஷ்டிக்கப்படுகின்றது. யேசுக்கிறிஸ்து இறந்தது துக்க நிகழ்வு என்றாலும், அதனால் மனித குலத்திற்கு விளைந்த நன்மைகளை வைத்தே 'புனித வெள்ளி' என்றழைக்கின்றனர் கிறிஸ்தவர்கள். வரலாற்றில் முக்கிய நிகழ்வான இயேசு கிறிஸ்துவின் பாடுகள், மரணம், உயிர்ப்பை உலகளவில் கிறிஸ்தவர்கள் நினைவு கூர்ந்து வருகின்றனர். அந்தவகையில் இயேசு கிறிஸ்து உயிர்விட்ட நாளை இன்று உலகிலுள்ள அனைத்து கிறிஸ்தவர்களும் இன்று 'பெரிய வெள்ளி'யாக நினைவு கூருகின்றனர். பெரிய வெள்ளி, புனித வெள்ளி, Good Friday என்று சொல்லும் போதே இயே­சுவின் மர­ணம் தான் சர்வ உலக மக்களின் நினை­விலும் வரும். அந்த நாளுக்கு பெரி­ய­வர்கள் அல்­லது முன்­னோர்கள் சரி­யாக பெய­ரிட்­டுள்­ளனர். நல்ல வெள்ளி, புனித வெள்ளி, எல்லா வெள்­ளி­க­ளிலும் பெரிய வெள்ளி என்று மிகவும் பொருத்­த­மா­கவே பெய­ரிட்­டுள்­ளனர். ஆனால், அந்த பெயர்­களின் அடிப்­ப­டையில் அந்த நாள் அனுஷ்­டிக்­கப்­ப­டு­கின்­றதா என்று கேட்டால் இல்லை என்­றுதான் சொல்­ல­வேண்டும். ஒரு கெட்ட மனி­த­னு­டைய மர­ண­மா­யி­ருந்­தாலும் அதற்கு அனு­தா­பப்­ப­டு­கிற உல­கமே நாம் வாழும் இவ்­வு­லகம். ஒரு மனி­த­னுக்கும் தீங்கு நினை­யாமல் எல்லா மனித வாழ்­விலும் நன்மை செய்த தேவ­கு­மாரன் இயே­சுவின் மரண நாளுக்கு வைக்­க­வேண்­டிய பெயரை வைக்­காமல் அந்த நாளுக்கு நல்ல நாள் என்றும், புனித நாள் என்றும், பெரிய நாள் என்றும் ஏன் பெய­ரிட்­டார்கள்? ஆம் பிரி­ய­மா­ன­வர்­களே, இந்த நாள் உல­கத்­தி­லுள்ள எல்லா மனி­தர்­க­ளுக்கும் நல்ல நாள். ஏனென்றால், ஜீவ கால­மெல்லாம் மரண பயத்­தி­னாலே அடி­மைத்­த­னத்­திற்­குள்­ளா­ன­வர்கள் யாவ­ரையும் விடு­தலை பண்­ணும்­ப­டிக்கு தேவ­கு­மா­ரனாம் இயேசு சர்­வத்­தையும் படைத்­தவர், சர்­வத்­தையும் ஆளுகை செய்ய வேண்­டி­யவர். பிள்­ளைகள் மாமி­சத்­தையும் இரத்­தத்­தையும் உடை­ய­வர்­க­ளா­யி­ருக்க அவரும் நம்­மைப்போல் மாமி­சத்­தையும் இரத்­தத்­தையும் உடை­ய­வ­ராகி மர­ணத்தின் அதி­ப­தி­யா­கிய பிசா­சா­ன­வனை தம்­மு­டைய மர­ணத்­தினால் அழிக்கும் படிக்கும், நம்மை மரண பயத்­தி­லி­ருந்து விடு­விக்­கும்­ப­டிக்கும் மர­ணத்­துக்­கே­து­வான ஒன்றும் அவ­ரிடம் காணப்­ப­டாத போதும், மரணம் மனித வாழ்வில் பயத்­தையோ அடி­மைத்­த­னத்­தையோ கொடுக்­கக்­கூ­டாது என்று காண்­பிக்கும் படிக்கும் மர­ணத்தை ஏற்றுக் கொண்டார். பிரி­ய­மா­ன­வர்­களே, இந்த உலகில் வாழும் எல்லா மனி­த­னுக்கும் மரணம் என்­பது மாமி­சத்­துக்கும் இரத்­தத்­துக்­கும்தான். நம்­மு­டைய ஆவி, ஆத்­து­மா­வுக்­கல்ல. சரீ­ரத்தில் இரத்த ஓட்டம் நின்று சரீரம் செய­லற்றுப் போவ­துதான் மரணம். எனவே பரி­சுத்த வேதா­கமம், ‘ஆத்­து­மாவைக் கொல்ல வல்­ல­வர்­க­ளா­யி­ராமல், சரீ­ரத்தை மாத்­திரம் கொல்­லு­கி­ற­வர்­க­ளுக்கு நீங்கள் பயப்­பட வேண்டாம்; ஆத்­து­மா­வையும் சரீ­ரத்­தையும் நர­கத்­திலே அழிக்க வல்­ல­வ­ருக்கே பயப்­ப­டுங்கள்’ (மத் 10:28) என்று சொல்­கி­றது. மேலே சொல்­லப்­பட்­ட­து­போல மரண பயத்­தினால் பிசா­சா­னவன் யாவ­ரையும் அடி­மைப்­ப­டுத்­தி­யி­ருந்தான். நம் இயேசு சிலுவை மர­ணத்தை ஏற்றுக் கொண்டு உல­கி­லுள்ள எல்லா மனி­தர்­க­ளுக்கும் ‘இவ்­வு­லகில் மரணம் என்­பது வெறும் சரீ­ரத்­திற்கே சொந்­த­மா­னது’ என்ற உண்­மையை தெளி­வு ­ப­டுத்­தினார். எனவே உல­கத்­தி­லுள்ள எந்த மனு­ஷனும் மனு­ஷியும் இயே­சுவின் மர­ணத்தை ஏற்றுக் கொள்ளும் போது, மரண பயத்­திற்கு நீங்­க­லாகி பிசாசின் அடி­மைத்­த­னத்­திற்கு நீக்­க­லாக்­கப்­ப­டு­கி­றார்கள். ஆக­வேதான் அதை நல்ல வெள்ளி (Good Friday) என்று உலகம் அழைக்­கி­றது. அடுத்து புனித வெள்ளி என்று ஏன் சொல்­லு­கிறோம்? தேவன் மனி­தனை தம்­மைப்போல் வாழும்­ப­டி­யாயும், பரி­சுத்த சந்­த­தியை உரு­வாக்­கும்­ப­டி­யாயும் படைத்தார். ஆனால் முதல் மனிதன் ஆதாமின் கீழ்­ப­டி­யாமை, மீறு­த­லினால் உல­கத்தில் பாவம் வந்­தது. எல்லா மனி­தர்­க­ளையும் பாவம் ஆளுகை செய்­தது. ஒரு மனித வாழ்­விலும் புனிதம் (பரி­சுத்தம்) இல்லை. பாவம் கழு­வப்­ப­ட­வில்லை. ‘இரத்தம் சிந்­து­த­லினால் மாத்­தி­ரமே பாவப்­பி­ரா­யச்­சித்தம் உண்டு’ என்­பது உலகில் வாழும் அநே­க­மானோர் ஏற்றுக் கொள்ளும் ஒன்று. ஆகவே, தேவ­னு­டைய ஆதி விருப்­பத்­தின்­படி இயேசு சிலு­வையில் சிந்­திய இரத்தம் மாத்­தி­ரமே மனித வாழ்வின் பாவத்தை கழுவி பரி­சுத்­த­மாக்­கி­யது. இரண்டாம் ஆதாம் என்று அழைக்­கப்­படும் இயே­சுவின் கீழ்­ப­டிதல், தாழ்­மையின் மூலம் உலகில் கிரு­பையும், சத்­தி­யமும் வந்­தது. யார் இயேசு மூலம் வந்த கிரு­பையைக் கொண்டு சத்­தி­யத்தை பின்­பற்­று­கி­றார்­களோ அவர்கள் வாழ்வில் கீழ்­ப­டிவும், தாழ்­மையும் காணப்­படும். இயே­சுவின் கீழ்­ப­டிவும் தாழ்­மையும் முழு­மையாய் கல்­வாரி சிலு­வையில் காட்­டப்­ப­டு­கி­றது. இயேசு அங்கே சிந்­திய இரத்­தத்­தி­னால்தான் நாம் பரி­சுத்­த­மாக்­கப்­பட்டோம். ஆக­வேதான் புனித (பரி­சுத்த) வெள்ளி என்று அந்நாள் போற்­றப்­ப­டு­கி­றது. பிரி­ய­மா­ன­வர்­களே, எத்­த­னையோ வெள்­ளிக்­கி­ழ­மைகள் இருக்க இந்­நாளை மட்டும் ஏன் பெரிய வெள்ளி என்று சொல்­கிறோம்? இந்த நாள் மனித வாழ்வில் மரண பயத்தை நீக்கி, அடி­மைத்­தன நுகத்தை முறித்து, மனித வாழ்வில் சாப­மாக வந்த பாவத்தைக் கழுவி, ஆசிர்­வா­தத்தை உண்­டாக்கி, மனி­தனை சிந்­தனை செய்ய வைத்த நாள். இது துக்­கத்தின் நாளும் அல்ல, சந்­தோ­ஷத்தின் நாளும் அல்ல. இது அர்ப்­ப­ணிப்பின், தீர்­மா­னத்தின் நாள். இயே­சுவின் மர­ணத்தில் நம்மை பங்­குள்­ள­வர்­க­ளாக்கும் நாள். நம்­மு­டைய பாவ, சாப, தரித்­திர, மரண வல்­ல­மையை முறி­ய­டித்த நாள். நாம் நம் இயே­சுவின் மர­ணத்தை ஏற்று அதில் நாம் பங்­கு­டை­ய­வர்­க­ளா­கிறோம் என்­ப­துதான் நம் வாழ்வில் நாம் எடுத்த தீர்­மா­னங்­களில் மிகவும் பெறு­ம­தி­யான, விலை­ம­திக்க முடி­யாத தீர்­மானம். நம் வாழ்வில் நாம் எடுக்கும் வெற்றியான தீர்மானத்தின் நாள்தான் நம் வாழ்வின் பெரிய நாளாய் இருக்கும். ஆகவே, இந்த நாள் நல்ல, புனித, பெரிய நாளாய் என் வாழ்வில் அமைந்துள்ளது. உங்கள் வாழ்விலும் அமைய இயேசுவோடு கூட நீங்கள் சிலுவையில் அறையப்பட உங்களை ஒப்புக் கொடுக்கும் தீர்மானம்; உங்கள் பாவ, சாப, பலவீனங்களை சிலுவையில் அறைந்து இயேசுவின் தேவ, தூய பண்புகளை உங்கள் வாழ்வில் கொண்டு வரும். இந்நிலையில், இலங்கையைப் பொருத்தவரையில் மக்கள் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகின்ற நிலையில், கிறிஸ்தவர்கள் புனித வாரத்தை அனுஷ்டிக்கின்றனர். மக்கள் தற்போது எதிர்நோக்கியுள்ள இன்னல்களில் இருந்து விடுபட அனைவரும் பிரார்த்திப்போமாக ! சிலுவையைப் பெற்றுக் கொள்வோம்! ஜெயமாய் வாழ்வோம்! ஆமென்! பெரிய வெள்ளிக்கிழமையை முன்னிட்டு கொழும்பு-13 புதுச்செட்டித் தெரு புனித வியாகுல மாதா ஆலயத்தில் யேசுவின் பாடுகளை நினைவு கூர்ந்து சிலுவைப்பாதை இடம்பெற்றதை படங்களில் காணலாம். (படப்பிடிப்பு :- ஜே.சுஜீவகுமார்) https://www.virakesari.lk/article/179948
    • கணேசமூர்த்தியின் இந்த விபரீத முடிவுக்கு வைகோ தான் காரணம்..!  
    • ஓயாத நிழல் யுத்தங்கள்-5 வியட்நாம் கதை இரண்டாம் உலகப் போரின் பின்னர், இரு துருவங்களாகப் பிரிந்து நின்ற உலக நாடுகளில், இரு அணுவாயுத வல்லரசுகளின் நிழல் யுத்தம் பனிப்போராகத் தொடர்ந்தது. அந்தப் பனிப்போரின் மையம், அண்டார்டிக் கண்டம் தவிர்ந்த உலகின் எல்லாக் கண்டங்களிலும் இருந்தது. தென்கிழக்கு ஆசியாவில், உலக வல்லரசுகளின் பனிப்போரின் தீவிர வடிவமாகத் திகழ்ந்த வியட்நாம் போர் பற்றிப் பார்ப்போம். வியட்நாம் மக்களின் வரலாற்றுப் பெருமை பொதுவாகவே ஆசியக் கலாச்சாரங்களில் பெருமையுணர்வு (pride) ஒரு கலாச்சாரப் பண்பாகக் காணப்படுகிறது. வியட்நாமின் வரலாற்றிலும் கலாச்சாரத் தனித்துவம், தேசிய அடையாளம் என்பன காரணமாக ஆயிரம் ஆண்டுகளாக அதன் அயல் நாடுகளோடு போராடி வாழ வேண்டிய நிலை இருந்திருக்கிறது. பிரதானமாக, வடக்கேயிருந்த சீனாவின் செல்வாக்கிற்கு உட்படாமல் வியட்நாமியர்கள் தனித்துவம் பேணிக் கொண்டிருந்தனர். ஆனால், வியட்நாம் என்பது ஒரு தேசிய அடையாளமாக திரளாதவாறு, மத, பிரதேச வாதங்களும் அவர்களுக்குள் நிலவியது. கன்பூசியஸ் நம்பிக்கைகளைப் பின்பற்றிய வட வியட்நாமிற்கும், சிறு பான்மைக் கிறிஸ்தவர்களைக் கொண்ட தென் வியட்நாமிற்குமிடையே கலாச்சார வேறு பாடுகள் இருந்தன. இந்த இரு தரப்பில் இருந்தும் வேறு பட்ட மலைவாழ் வியட்நாமிய மக்கள் மூன்றாவது ஒரு தரப்பாக இருந்திருக்கின்றனர். 19 ஆம் நூற்றாண்டில், ஐரோப்பிய காலனித்துவம் இந்தோ சீனப் பகுதியில் கால் பதித்த போது, வியட்நாம், லாவோஸ், கம்போடியா ஆகிய பகுதிகள் பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் வந்தன. காலனித்துவத்தை எதிர்ப்பதிலும் கூட, வியட்நாமின் வடக்கிற்கும், தெற்கிற்குமிடையே வேறுபாடு இருந்திருக்கிறது. எனினும், பிரெஞ்சு ஆதிக்கத்தை வியட்நாமியர் தொடர்ந்து எதிர்த்து வந்தனர். இரண்டாம் உலகப் போரின் போது, 1945 இல் ஜப்பான் பிரான்சிடமிருந்து இந்தோ சீனப் பிராந்தியத்தை பொறுப்பெடுத்த போது, பிரெஞ்சு ஆட்சியில் கூட நிகழாத வன்முறைகள் அந்தப் பிராந்திய மக்கள் மீது நிகழ்த்தப் பட்டன.   அதே ஆண்டின் ஆகஸ்டில், ஜப்பான் தோல்வியடைந்து சரணடைந்த போது, உள்ளூர் தேசியத் தலைமையாக இருந்த வியற் மின் (Viet Minh) என அழைக்கப் பட்ட கூட்டணியிடம் ஆட்சியை ஒப்படைத்து வெளியேறியது. இதெல்லாம் நடந்து கொண்டிருந்த காலப் பகுதியில், உலக கம்யூனிச இயக்கத்தினால் ஈர்க்கப் பட்டிருந்த ஹோ சி மின் நாடு திரும்பி வட வியற்நாமில் கம்யூனிச ஆட்சியை பிரகடனம் செய்கிறார். இந்தக் காலப் பகுதி, உலகம் இரு துருவங்களாகப் பிரிவதற்கான ஆரம்பப் புள்ளிகள் இடப் பட்ட ஒரு காலப் பகுதி. முடிந்து போன உலகப் போரில் பங்காளிகளாக இருந்த ஸ்ராலினின் சோவியத் ஒன்றியமும், மேற்கு நாடுகளும் உலக மேலாண்மைக்காகப் போட்டி போட ஆரம்பித்த காலம் இந்த 1940 கள் - சீனாவின் மாவோ இன்னும் அரங்கிற்கே வரவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். மீண்டும் ஆக்கிரமித்த பிரான்ஸ் கம்யூனிச விரிவாக்கத்திற்கு ஹோ சி மின் ஆட்சி வழி வகுக்கலாமெனக் கருதிய பிரிட்டன், ஒரு படை நடவடிக்கை மூலம் தென் வியட்நாமைக் கைப்பற்றி, தென் வியட்நாமை மீளவும் பிரெஞ்சு காலனித்துவ வாதிகளிடம் கையளித்தது. ஒரு கட்டத்தில், வியட்நாமை பிரெஞ்சு ஆட்சியின் கீழ் இருக்கும் ஒரு சுதந்திர தேசமாக அங்கீகரிக்கும் ஒப்பந்தம் கூட பிரான்சுக்கும், வியற் மின் அமைப்பிற்குமிடையே கைச்சாத்தானது. ஆனால், இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் வெறும் 2 மாதம் தான். பிரெஞ்சுப் படைகள் வடக்கை நோக்கி முன்னேற, வியற் மின் பின்வாங்க பிரெஞ்சு வியட்நாம் போர் ஆரம்பித்தது. இந்தப் போரில், முழு வியட்நாமும் பிரெஞ்சு ஆதிக்கத்தை எதிர்க்கவில்லையென்பதையும் கவனிக்க வேண்டும். வியட்நாமின் அரச வாரிசாக இருந்த பாவோ டாய் (Bao Dai), பிரெஞ்சு ஆதிக்கத்தின் கீழ் ஒரு தனி தேசமாக வியட்நாம் தொடர்வதை இறுதி வரை ஆதரித்து வந்தார். தொடர்ந்த யுத்தம் 1954 இல் ஒரு சமாதான ஒப்பந்தத்துடன் முடிவுக்கு வந்த போது, லாவோஸ், கம்போடியா ஆகிய நாடுகள் பிரான்சிடமிருந்து சுதந்திரமடைந்தன. புதிதாக வியட்நாம் தலைவராக நியமிக்கப் பட்ட டியெம், தென் வியட்நாமைத் தனி நாடாகப் பிரகடனம் செய்ததோடு, வடக்கில் இருந்த வியற் மின் தரப்பிற்கும், தென் வியட்நாமிற்கும் போர் மீண்டும் மூண்டது. அமெரிக்காவின் வியட்நாம் பிரவேசம் அமெரிக்கா, உலகப் போரில் பாரிய ஆளணி, பொருளாதார இழப்பின் பின்னர் தன் படைகளை இந்தோ சீன அரங்கில் இருந்து வெகுவாகக் குறைத்துக் கொண்டு, ஐரோப்பிய அரங்கில் கவனம் செலுத்தத் தீர்மானித்திருந்தது (இதனால், 50 களில் வட கொரியா தென் கொரியா மீது தாக்குதல் தொடுத்த போது கூட உடனடியாக சுதாரிக்க இயலாமல் அமெரிக்கப் படைகளின் பசுபிக் தலைமை தடுமாறியது). அமெரிக்கா ஏற்கனவே பிரிட்டனின் காலனித்துவத்தில் இருந்து விடுபட்ட ஒரு நாடு என்ற வகையில், அந்தக் காலப் பகுதியில் ஒரு காலனித்துவ எதிர்ப்பு மனப் பாங்கைக் கொண்டிருந்தமையால், பிரெஞ்சு, பிரிட்டன் அணிகளின் வியட்நாம் மீதான தலையீட்டில் பங்கு கொள்ளாமல் விலகியிருந்தது. இத்தகைய காலனித்துவ எதிர்ப்பின் விளைவாக, உலகில் கம்யூனிச மேலாதிக்கம் உருவாகும் போது எதிர் நடவடிக்கையின்றி இருக்க வேண்டிய சங்கடமான நிலை அமெரிக்காவிற்கு. இப்படியொரு நிலை உருவாகும் என்பதை ஏற்கனவே உணர்ந்திருந்த அமெரிக்க வெளியுறவுத் துறையின் அதிகாரியான ஜோர்ஜ் கெனன், 1947 இலேயே Policy of Containment என்ற ஒரு வெளியுறவுக் கொள்கை ஆவணத்தை தயாரித்து வெளியிட்டிருந்தார். ட்ரூமன் கொள்கை (Truman Doctrine) என்றும் அழைக்கப் படும் இந்த ஆவணத்தின் அடி நாதம்: “உலகின் எந்தப் பகுதியிலும் மக்கள், பிரதேசங்கள் சுதந்திரம், ஜனநாயகம் என்பவற்றை நாடிப் போராடினால், அமெரிக்காவின் ஆதரவு அவர்களுக்குக் கிடைக்கும்” என்பதாக இருந்தது. மறைமுகமாக, "தனி மனித அடக்கு முறையை மையமாகக் கொண்ட கம்யூனிசம் பரவாமல் தடுக்க அமெரிக்கா உலகின் எந்த மூலையிலும் செயல்படும்" என்பதே ட்ரூமன் கொள்கை.   இந்த ட்ரூமன் கொள்கையின் முதல் பரீட்சார்த்தக் களமாக தென் வியட்நாம் இருந்தது எனலாம். 1956 இல், டியேம் தென் வியட்நாமை சுதந்திர நாடாக பிரகடனம் செய்த சில மாதங்களில், அமெரிக்காவின் இராணுவ ஆலோசனையும், பயிற்சியும் தென் வியட்நாமின் படைகளுக்கு வழங்க அமெரிக்கா ஏற்பாடுகளைச் செய்தது. தொடர்ந்து, 1961 இல், சோவியத் ஒன்றியத்திடமிருந்து கடும் சவால்களை எதிர் கொண்ட அமெரிக்க அதிபர் கெனடி, அமெரிக்காவின் விசேட படைகளை தென் வியட்நாமிற்கு அனுப்பி வைக்கிறார். விரைவாகவே, பகிரங்கமாக தென் வியட்நாமில் ஒரு அமெரிக்கப் படைத் தலைமயகப் பிரிவு வியட்நாமின் (US Military Assistance Command Vietnam- MACV) நடவடிக்கைகளுக்காகத் திறக்கப் படுகிறது. கெனடியின் கொலையைத் தொடர்ந்து அமெரிக்க அதிபரான லிண்டன் ஜோன்சன், நேரடியான அமெரிக்கப் படை நடவடிக்கைகளை வியட்நாமில் ஆரம்பிக்க அனுமதி அளித்தது 1965 பெப்ரவரியில். இந்த நடவடிக்கைக்கு அமெரிக்க காங்கிரஸ் அனுமதி அளித்திருந்தது குறிப்பிடத் தக்கது. Operation Rolling Thunder என்ற பெயருடன், வட வியட்நாம் மீது தொடர் குண்டு வீச்சு நடத்துவது தான் அமெரிக்காவின் முதல் நடவடிக்கை.  வடக்கும் தெற்கும் 1954 இன் ஜெனீவா ஒப்பந்தம், வியட்நாமை வடக்கு தெற்காக 17 பாகை அகலாங்குக் கோட்டின் படி இரு நாடுகளாகப் பிரித்து விட்டிருந்தது. 10 மாதங்களுக்குள் இரு பாதிகளிலும் இருக்கும் வியட்நாமிய மக்கள் தாங்கள் விரும்பும் பாதிக்கு நகர்ந்து விடுமாறும் கோரப் பட்டிருந்தது. வடக்கிலும் தெற்கிலும் இருந்து பழி வாங்கல்களுக்கு அஞ்சி மக்கள் குடிபெயர்ந்த போது குடும்பங்கள், உறவுகள் பிரிந்தன. ஹோ சி மின்னின் கம்யூனிச வழியை ஆதரித்த மக்கள், வடக்கு நோக்கி நகர்ந்தனர், இவர்களில் பலர் வியற் கொங் என அழைக்கப் பட்ட கம்யூனிச ஆயுதப் படையில் சேர்ந்தனர். தென் வியட்நாமில், கம்யூனிச வடக்கை ஆதரித்த பலர் தங்கவில்லையாயினும், நடு நிலையாக நிற்க முனைந்தவர்களே நிம்மதியாக வசிக்க இயலாத கெடு பிடிகளும், கைதுகளும் தொடர்ந்தன. இந்த நிலையில், வடக்கின் கம்யூனிச ஆயுதப் பிரிவான வியற் கொங், வியட்நாமின் அடர்ந்த காடுகளூடாக Ho Chi Minh trail எனப்படும் ஒரு இரகசிய வினியோக வழியை உருவாக்கி, தென் வியட்நாமை உள்ளிருந்தே ஆக்கிரமிக்கும் வழிகளைத் தேடியது.  இந்த இரகசிய காட்டுப் பாதை வட வியட்நாமில் இருந்து 500 கிலோமீற்றர்கள் வரை தெற்கு நோக்கி லாவோஸ் மற்றும் கம்போடியா நாடுகளினூடாக நகர்ந்து தென் வியட்நாமில் 3 - 4 இடங்களில் எல்லையூடாக ஊடறுத்து உட் புகும் வழியை வியற் கொங் போராளிகளுக்கு வழங்கியது. இந்த வினியோக வழியை முறியடிக்கும் இரகசிய யுத்தமொன்றை, அமெரிக்க விசேட படைகள் லாவோஸ் காடுகளில் வியட்நாம் ஆக்கிரமிக்கப் படும் முன்னர் இருந்தே முன்னெடுத்து வந்தன. சின்னாபின்னமான வியட்நாம் மக்கள் பனிப்போர் காலத்தில் அமெரிக்கா நடத்திய யுத்தங்களுள், மிக உயர்வான பொது மக்கள் அழிவை உருவாக்கியது வியட்நாம் போர் தான். 1965 முதல் 1975 வரையான வியட்நாம் யுத்தத்தில் கொல்லப் பட்ட மக்கள் தொகை 2 மில்லியன்கள்: வியட்நாமியர், கம்போடியர், லாவோஸ் நாட்டவர் இந்த 2 மில்லியன் பலிகளில் அடங்குகின்றனர். இதை விட 5.5 மில்லியன் பொது மக்கள் காயமடைந்தனர். வாழ்விடங்கள், பயிர்செய்கை நிலங்கள் அழிக்கப் பட்டன. இந்த 10 வருட யுத்தத்தில், அமெரிக்காவின் நேரடிப் பிரசன்னம் 1972 வரை நீடித்த அமெரிக்க வியட்நாம் யுத்தம். இந்தக் காலப் பகுதியில், அமெரிக்கப் படைகள் மட்டுமன்றி, பசுபிக்கில் அமெரிக்காவின் நேச அணியைச் சேர்ந்த தென் கொரியா, அவுஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகளின் படைகளும் பெருமளவில் யுத்தத்தில் பங்கு பற்றின. இந்தப் படைகளும், அமெரிக்கப் படைகளுடன் சேர்ந்து வியட்நாம் மக்களுக்கெதிரான கொடூர வன்முறைகளை நிகழ்த்தினாலும், குறிப்பிடத் தக்க பாரிய வன்முறைகளை அமெரிக்கப் படைகளே செய்தன. இந்த வன்முறைகள் பற்றி ஏராளமான சாட்சியங்களும், அவற்றின் அடிப்படையிலான நூல்களும் வெளிவந்திருக்கின்றன. வியட்நாம் போரில், அமெரிக்கப் படைகள் பொது மக்களை நடத்திய விதத்திற்கு மிகச் சிறந்த உதாரணமான சம்பவம் மை லாய் (My Lai) படுகொலைச் சம்பவம். 1968 இல், ஒரு மார்ச் மாதம் காலையில் மை லாய் கிராமத்தில் நூற்றுக் கணக்கான வியட்நாமிய பொது மக்களைச் சுற்றி வளைத்த அமெரிக்கப் படைப்பிரிவின் அணியொன்று, மிகக் குறுகிய நேர விசாரிப்பின் பின்னர் அவர்களைச் சரமாரியாகச் சுட்டுக் கொன்றது. கொல்லப் பட்ட மக்கள் ஒரு 500 பேர் வரை இருப்பர், அனைவரும் நிராயுத பாணிகள், பெரும்பாலானோர் பெண்களும் குழந்தைகளுமாக இருந்தனர். இந்தப் படுகொலை பாரிய இரகசியமாக அல்லாமல், நூற்றுக் கணக்கான அமெரிக்கப் படையினரின் முன்னிலையில் நடந்தது. அந்த நடவடிக்கைப் பகுதியில், உலங்கு வானூர்தி விமானியாக சுற்றித் திரிந்த ஹியூ தொம்சன் என்ற ஒருவரைத் தவிர யாரும் இதைத் தடுக்க முயலவில்லை. தொம்சன், தன்னுடைய உலங்கு வானூர்தியை அமெரிக்கப் படைகளுக்கும் கொல்லப் படவிருந்த மக்கள் கூட்டத்திற்குமிடையில் தரையிறக்கி ஒரு சிறு தொகையான சிவிலியன்களைக் காப்பாற்றினார். காயமடைந்த சிலரை உலங்கு வானூர்தி மூலம் அகற்றிய பின்னர், மேலதிகாரிகளுக்கும் மை லாய் படுகொலை பற்றித் தெரிவித்தார் தொம்சன். மிகுந்த தயக்கத்துடன் விசாரித்த அமெரிக்க படைத்துறை, படு கொலை பற்றிச் சாட்சி சொன்னவர்களைத் தண்டனை கொடுத்து விலக்கி வைத்தது. படு கொலைக்குத் தலைமை தாங்கிய படை அதிகாரி வில்லியம் கலி, 3 வருடங்கள் கழித்து இராணுவ நீதி மன்றில் சிறைத் தண்டனை விதிக்கப் பட்டாலும், 3 நாட்கள் மட்டுமே சிறையில் கழித்த பின்னர் மேன்முறையீடு, பிணை என இன்று வரை சுதந்திரமாக உயிரோடிருக்கிறார். இந்தப் படுகொலையில் சரியாக நடந்து கொண்ட விமானி தொம்சனையும் இன்னும் இருவரையும் 1998 இல் - 30 ஆண்டுகள் கழித்து- அமெரிக்க இராணுவம் விருது கொடுத்துக் கௌரவித்தது. இத்தகைய சம்பவங்கள் மட்டுமன்றி, ஒட்டு மொத்தமாக வியட்நாம் மக்களை வகை தொகையின்றிக் கொன்ற நேபாம் குண்டுகள் (Napalm - இது ஒரு பெற்றோலியம் ஜெல்லினால் செய்யப் பட்ட குண்டு), ஏஜென்ற் ஒறேஞ் எனப்படும் இரசாயன ஆயுதத் தாக்குதல் என்பனவும் அமெரிக்காவின் கொலை ஆயுதங்களாக விளங்கின. 1972 இல், அமெரிக்காவில் உள்ளூரில் வியட்நாம் போருக்கெதிராக எழுந்த எதிர்ப்புகளால், அமெரிக்கா தன் தாக்குதல் படைகளை முற்றாக விலக்கிக் கொண்ட போது 58,000 அமெரிக்கப் படையினர் இறந்திருந்தனர். இதை விட இலட்சக் கணக்கான உயிர் தப்பிய அமெரிக்கப் படையினருக்கு, PTSD என்ற மனவடு நோய் காரணமாக, அவர்களால் சாதாரண வாழ்க்கைக்குத் திரும்ப இயலாத நிலை ஏற்பட்டது. வியட்நாம் போரின் முடிவு அமெரிக்காவின் படை விலகலுக்குப் பின்னர், படிப்படியாக அமெரிக்காவின் தென் வியட்நாமிற்கான நிதி, ஆயுதம், பயிற்சி என்பன குறைக்கப் பட்டன. 1975 ஏப்ரலில், வடக்கு வியட்நாமின் படைகள் மிக இலகுவாக தெற்கு வியட்நாமின் சாய்கன் நகரை நோக்கி நெருங்கி வந்த போது, அமெரிக்காவின் ஆதரவாளர்கள், அமெரிக்கப் பிரஜைகள் ஆகியோரை Operation Frequent Wind  என்ற நடவடிக்கை மூலம் அவசர அவசரமாக வெளியேற்றினார்கள். தெற்கு வியட்நாமை ஆக்கிரமித்த வடக்கு வியட்நாம், மேலும் முன்னேறி, கம்போடியாவையும் ஒரு கட்டத்தில் ஆக்கிரமித்து, இந்தோ சீனப் பிரதேசத்தை ஒரு தொடர் கொலைக் களமாக வைத்திருந்தது. இந்தப் பிரதேசங்களில் இருந்து கடல் வழியே தப்பியோடிய மக்கள் “படகு மக்கள்” என அழைக்கப் பட்டனர். இன்று றொஹிங்கியாக்களுக்கு நிகழும் அத்தனை அனியாயங்களும் அவர்களுக்கும் நிகழ்ந்தன. -          தொடரும்
    • தமிழ்நாட்டில் நடக்கும் அநிஞாயங்கள் பாலியல் வல்லுறவுகள் கூட்டு பாலியல் கொலை கொள்ளை என்று திராவிட கும்பல்களால் தினமும் செய்திகள் வருகின்றன. எவருமே அதைப்பற்றி அக்கறை கொள்வதில்லை. ஆனால் சீமானைப்பற்றி ஏதாவது நல்ல செய்தி வந்தால் உடனே கூட்டமாக சேர்ந்து தாக்குதல் நடக்குது. என்ன கூட்டமோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.