Jump to content

புதினப்பலகை: ‘மீண்டும் தொடங்கும் மிடுக்கு’


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

‘மீண்டும் தொடங்கும் மிடுக்கு’*

கடந்த ஓகஸ்ட் 18ம் நாள் ‘புதினப்பலகை’ செய்தித்தளம் முடங்கிப்போனது. எங்கள் தொழில்நுட்ப அறிவும் சொற்பமானது என்பதால் என்ன நடந்தது என்பதை ஊகிக்கவே முடியவில்லை. பதட்டமாகவே இருந்தது. அரைமணி, கால்மணி நேர இடைவெளியில் புதினப்பலகையை திறப்பதற்காக முயற்சித்து முயற்சித்து களைத்துப்போனோம். ‘புதினப்பலகை’ ஒரு கூட்டு முயற்சியாகவே 2009 நவம்பரில் உருவாக்கப்பட்டிருந்தது. ஒவ்வொருவரும் ஒவ்வொரு பொறுப்பை ஏற்றிருந்தனர். எங்கே என்ன தவறு நிகழ்ந்தது என்பதை அறிய மூன்று நாட்களாயிற்று.

எமது தளம் இயங்க பணம் பெற்று இடமளித்த ‘வழங்கி’ [server] நிறுவனம் எமது இயங்குதலை முடக்கி இருந்தது. ஏறத்தாழ பதினோராயிம் பதிவுகள் அந்த முடக்கத்துள் சிக்கி உள்ளது. ஏன் முடக்கியது? இன்றுவரை தெளிவான காரணத்தை அறியமுடியவில்லை. இந்நிலையில் புதினப்பலகை ஆர்வலர்களிடமிருந்து விசாரிப்புகளுடன் மின்னஞ்சல்கள் வரத்தொடங்கின. இன்னும் நெருக்கமானோர் தொலைபேசி வழியாகவும் தொடர்புக்கு வந்தனர். அப்போது நாம் தனித்தில்லை தோள்கொடுக்க பலருண்டு என்ற உணர்வும் மகிழ்ச்சியும் ஆட்கொண்டது.

‘புதினப்பலகை’ அறியவைக்கவும், தெளிவை ஏற்படுத்தவும், செய்தியை செய்தியாக வழங்க வேண்டும் என்பதிலேயே எம் கவனத்தை குவித்திருந்தோம். இதனைத் தெளிவாகவே எமது முதல் ஆசிரியர் குறிப்புரையான புதினப்பார்வையில் தெரிவித்திருந்தோம். ஆனால் எமது இருப்பு அதாவது புதினப்பலகையின் இருப்பு ‘தோற்றப் போலிகள்’ பலருக்கும் சங்கடத்தை ஏற்படுத்தி இருந்தது என்பதையும் அறிவோம். எம்மை எவ்வழியிலாயினும் முடக்க வேண்டுமென முயற்சித்திருந்தனர். அவர்களுக்கு எமது முடக்கம் நிம்மதியை தந்திருக்கும். ஆனாலும் அதே மிடுக்குடன் மீளவும் எழுந்துள்ளோம்.

எமது ‘மீண்டும் தொடங்கும் மிடுக்கு’டன் தொடரும் பயணத்திற்கு தோள் கொடுத்த அனைவருக்கும் எமது நன்றிகள். குறிப்பாக தன்னலமற்ற உணர்வுடன் புதிய தளத்தின் வடிவமைப்பை செய்த ‘இளம் தொழில்நுட்பவியலாளனுக்கு’ நெஞ்சார்ந்த நன்றிகள்.

‘அறி – தெளி – துணி’ எனவாய் ‘மீண்டும் தொடங்கும் மிடுக்கு’.

நன்றி.

‘புதினப்பலகை’ குழுமத்தினர்.

03 -11 – 2014

* ஈழத்து கவிஞர் ‘மஹாகவி’ உருத்திமூர்த்தியின் கவிதை ஒன்றின் வரி நன்றியுடன் தலைப்பாக எடுத்தாளப்பட்டுள்ளது.

http://www.puthinappalakai.net/2014/11/04/puthinappaarvai/191

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முன்பு 'புதினம்' என்றொரு இணைய தளம் இருந்தது.. அடிக்கடி வாசிப்பதுண்டு.. 2009 க்கு பின்னர், எது அசல், எது போலி என்ற குழப்பத்தால் எந்த இணையத்தையும் செய்திகளுக்காக நம்ப முடியவில்லை. :o

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முன்பு 'புதினம்' என்றொரு இணைய தளம் இருந்தது.. அடிக்கடி வாசிப்பதுண்டு.. 2009 க்கு பின்னர், எது அசல், எது போலி என்ற குழப்பத்தால் எந்த இணையத்தையும் செய்திகளுக்காக நம்ப முடியவில்லை. :o

பல போலிகள் காணாமல் போய்விட்டன. ஆனால் சில இப்போதும் இருக்கின்றன.

புதினப்பலகைக்கும் ஒரு அரசியல் பின்புலம் இருக்கின்றதுதான். எனவே எதையும் அப்படியே நம்பாமல் எமது பகுத்தறிவையும் பட்டறிவையும் கொண்டு உண்மைகளை இனங்காணவேண்டும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

முன்பு 'புதினம்' என்றொரு இணைய தளம் இருந்தது.. அடிக்கடி வாசிப்பதுண்டு.. 2009 க்கு பின்னர், எது அசல், எது போலி என்ற குழப்பத்தால் எந்த இணையத்தையும் செய்திகளுக்காக நம்ப முடியவில்லை. :o

அந்த "புதினத்தில்" இருந்து யாழுக்கு நேரடியாக செய்திகள் இணைப்பார்கள்:lol:

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புதினத்தில் இணைந்து பணியாற்றியவர்களின் உருவாக்கமே புதினப்பலகை.  புதினம் இணையத்தளத்தை தேசியத்தின் பெயரால் சிலர் முடக்கியமையும்...  தனிப்பட்ட காரணங்களுக்காக புதினம் மற்றும் தமிழ் நாதம் இணையத்தளங்கள் மூடப்பட்டமை என்பதும் ஏற்றுக் கொள்ள முடியாத விடயங்கள். 

புதினத்தின் மூடல்... பல ஊடக வியாபாரிகளை எமக்குள் உருவாக்கி விட்டது. குறிப்பிட்டு சொல்ல போனால் தமிழ் வின்...!

Link to comment
Share on other sites

புதினத்தில் இணைந்து பணியாற்றியவர்களின் உருவாக்கமே புதினப்பலகை.  புதினம் இணையத்தளத்தை தேசியத்தின் பெயரால் சிலர் முடக்கியமையும்...  தனிப்பட்ட காரணங்களுக்காக புதினம் மற்றும் தமிழ் நாதம் இணையத்தளங்கள் மூடப்பட்டமை என்பதும் ஏற்றுக் கொள்ள முடியாத விடயங்கள். 

புதினத்தின் மூடல்... பல ஊடக வியாபாரிகளை எமக்குள் உருவாக்கி விட்டது. குறிப்பிட்டு சொல்ல போனால் தமிழ் வின்...!

 

இப்படி எழுதுவதற்கு நிதர்சன் மன்னிக்கவும்.
 
புதினத்தை யாரும் நிறுத்தவில்லை. இறுதி முடிவுகளின் பின்னர் தானாகவு பொய்யான காரணத்தை சொல்லி புதினம் நடாத்தியவர் ஒதுங்கினார். அது மட்டுமன்றி கனடா பரபரப்பு ரிஷியுடன் இணைந்து கே.பி.யுடன் இலங்கையில்  நீண்டகாலமாக கே.பி.ரூ கோவுடன் கைகோர்த்தது யாரும் அறியேல்லயா ? 
 
புதினம் வருதற்கு முதல் இருந்த இணையங்களை முடக்குவதில் முன்னின்று சிறப்பாக பணியாற்றியவர் புதினத்தை இயக்கியவர். சமாதான செயலகத்தையும் நிதர்சனம் ,புலிகளின் குரல் மற்றும் ஊடக பேச்சாளர் தயாமாஸ்ரரின் பந்தத்தில் இயங்கிய தனிராச்சியம் புதினம். 
 
புதைகுளி வெட்டுவதில் பின்னிற்காமல் பணியாற்றியவரின் ஒதுங்கலுக்கு அவரே காரணம். புலிகள் அதிகாரத்தில் இருந்த போது உண்மையில் விசுவாசத்தோடு பணியாற்றிய பல ஊடகத்துறை சார்ந்தவர்களை ஒதுங்க வைத்ததில் பெரும்பங்கு தவபாலன், புதினம் கரன் ஆகிய இருவருக்கும் உண்டு.  சிலருக்கு துரோகிப்பட்டமும் இவ்விருவராலும் வழங்கப்பட்டது. தவபாலன் இல்லாத இந்த நாட்களில் அவரை எழுதுதல் நாகரீகமில்லை. ஆனால் தவிர்க்க முடியாதுள்ளது.
 
தமிழ்வின் இதர ஊடகங்களின் செய்திகைளை எவ்வித உறுத்தலுமின்றி வெட்டியொட்டி தன்னை ஒரு நிறுவனமயமாக்கியது. அதுவொரு வியாபார ஊடகம். யாரின் மீதும் ஏறிமிதித்து தன்னை வளர்க்கவும் வியாபாரத்தில் வளரவும் தன்னை வியாபாரமாகவே வளர்த்த ஊடகம். 
 
புதினத்துக்கு முதல் யாழ் களம் ஆரம்பித்திருந்தது. யாழ் மோகன் எதற்கும் யாருக்கும் காக்கா பிடிக்காமல் இருந்தமையால் இன்று யாழ் தேசத்துக்கான தனது பணியையும் பலத்தையும் வழங்கிக் கொண்டிருக்கிறது. 
 
அன்று புதினம் கரன் தேசத்தோடு இணைந்து பணியாற்றியவர்களை பணியாற்றிய ஊடகங்களையும் ஊடகர்களையும் போட்டுக்கொடுத்து பொய்காரணம் திரித்து ஒதுங்க வைக்காமல் விட்டிருந்தால் இன்று புதினம் மிஞ்சியிருக்கலாம்.
 
சரிதம் என்றொரு இணையத்தை அறிந்திருப்பீர்கள். அந்த இணையத்தில் இருக்கும் பலர் புதினத்தை வளர்க்க வெடிகுண்டுக்கு மத்தியிலும் நின்று செய்திகளை கொடுத்தவர்கள். அவர்களால் வழங்கப்பட்ட ஆவணங்களுக்கே விலைகேட்டவர் புதினம் கரன்.
 
புதினம் பற்றியும் அதன் இயக்குனர் பற்றியும் சொல்ல வேண்டிய கதைகள் நிறைய இருக்கிறது. இது அதற்கான தளம் இல்லையென்பதால் இத்தோடு முடிக்கிறேன்.

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி சாந்தி அக்கா, 

புதினத்தை கரனே நிறுத்தினாா் என்பதும், அதற்கு ” தனிப்பட்ட காரணங்களுக்காக” என்று காரணத்தையும் அவா் வழங்கியிருந்தாா். 

 

புதினத்தின் வளா்ச்சி பாதையில் பலாின் வீழ்ச்சி இருந்தமையை நான் அறிந்திருக்கவில்லை. மன்னிக்கவும்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

 

சரிதம் என்றொரு இணையத்தை அறிந்திருப்பீர்கள். அந்த இணையத்தில் இருக்கும் பலர் புதினத்தை வளர்க்க வெடிகுண்டுக்கு மத்தியிலும் நின்று செய்திகளை கொடுத்தவர்கள். அவர்களால் வழங்கப்பட்ட ஆவணங்களுக்கே விலைகேட்டவர் புதினம் கரன்.

போர் முடிவுக்கு வந்ததும் இன்னும் ஐந்து வருடத்தில் மக்களால் புலி,புலிக்கொடி,தனித்தமிழ்ஈழம் மறக்கடிக்கப்பட வேண்டும் பிரபாகரன் எனும் நாமம் சிதைக்கடிக்கப்படவேண்டும். எனும் திட்டத்திற்க்கு அமையவே சில உடணடியாக நிறுத்தபட்டன சிலதுகள் உள்ளுக்குள்ளால் விலை போயின.

 

ஆத்த முடியாமல் புலி வேசத்துடன் புதிய வெப்புகள் முளைத்தன ஆனால் நடந்தது வேறு மக்களை முட்டாளாக்கமுடியாது ஆனாலும் சிங்களம் சோர்ந்துவிடவில்லை இம்முறை இரட்டைமுக கருக்களை விதைப்பை மேற்கொன்டுள்ளது இவை 2013 பின்னரே அதிகரித்துள்ளன.

 

உதாரணத்துக்கு சிங்களம் தெரிந்தபடியால் கட்டுநாயக்காவில் இலகுவாக வெளியில் வரமுடியும் இதன் அர்த்தம் நீங்களும் சிங்களத்தை படித்தால் நல்லது ஆனால் அதே ஆள் கீழே ஒருவரிவிடுவார் சிங்களம் தெரியாமல் இருப்பது எவ்வளவோ நல்லது இது யாரையென்றால் தன்னையும மீண்டும் விஷகருத்துக்களை மெல்ல பரப்புவதற்க்கும் ஏதுவாய் எழுதும் வரி இப்படியாண விஷமமற்று புதினபலகை வீறு நடைபோடவேண்டும் ஏனெனில் திறைமைமிக்க ஊடகம் மக்களை வழி நடத்தும் சக்தி பெற்றதாகிறது இதையே ஆங்கிலத்தில் 

CNN effect    http://en.wikipedia.org/wiki/CNN_effect
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
முள்ளிவாக்கால் சம்பவத்துக்கு பின்.......
நாம் எதற்காக வந்தமோ அது வெற்றிகரமாக முடிந்துவிட்டது  இத்துடன் எமது இணையத்தை மூடுகின்றோம் என வெற்றிவாகை சூடிய இணயத்தளங்களும் உள்ளன.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெருமாள், கோசான் என்று பேரை சொல்லியே சேறடிக்கலாமே? எதுக்கு உங்களுக்கு பொருந்தாத நாகரீக வேசம்?

எந்தவித வலுவும் இன்றி, தனிமனிதனாய் நின்று கருத்துச் சொல்லும் என்னையே - CNN effect என்று மகிந்த ராசபட்சவின் உளவாளி ரேஞ்ச்சுக்கு ஏத்துறீங்களே? யாழில் வந்து கருத்து எழுதுபவர்களுக்கு இன்னும் இலங்கை அரசு படியளக்கிறது என்று அப்பாவித்தனமாக நினைக்கும் உங்கள் போன்றவர்கள் இருக்கும் வரை. பேரினவாதத்துக்கு தொடர் வெற்றிதான்.

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பெருமாள், கோசான் என்று பேரை சொல்லியே சேறடிக்கலாமே? எதுக்கு உங்களுக்கு பொருந்தாத நாகரீக வேசம்?

எந்தவித வலுவும் இன்றி, தனிமனிதனாய் நின்று கருத்துச் சொல்லும் என்னையே - CNN effect என்று மகிந்த ராசபட்சவின் உளவாளி ரேஞ்ச்சுக்கு ஏத்துறீங்களே? யாழில் வந்து கருத்து எழுதுபவர்களுக்கு இன்னும் இலங்கை அரசு படியளக்கிறது என்று அப்பாவித்தனமாக நினைக்கும் உங்கள் போன்றவர்கள் இருக்கும் வரை. பேரினவாதத்துக்கு தொடர் வெற்றிதான்.

இதற்க்கு பதில் சொல்லக்கூடிய திரி அல்ல இத்திரி இது தெரியாமல் வந்து நீங்களாவே கற்பனையில் உளறவேண்டாம் -----------

புதின பலகையின் விடயங்கள் மாத்திரமே இங்கு. :)

 

நியானி: ஒரு வரி நீக்கப்பட்டுள்ளது.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • "காலம் மாறும் கவலைகள் தீரும்?"     'காலம் மாறும் கவலைகள் தீரும்' கேட்க நல்லாகத் தான் இருக்கிறது. ஆனால் இலங்கை தமிழர்கள் வாழ்வில், 76 ஆண்டுகள் கடந்தும் இன்னும் கவலைகள் தீரவில்லை என்பதே உண்மை! தன் மகனை, இராணுவம் விசாரணைக்கு என்று கூப்பிடும் பொழுது, தானே தன் கையாயால், இராணுவத்திடம் ஒப்படைத்த தாயின் மற்றும் தங்கையின் கண்ணீர் மூன்று தசாப்தம் கடந்தும் இன்னும் வடிந்து கொண்டே இருக்கிறது. காலம் மட்டும் மாறியுள்ளது. ஆமாம் யுத்தம் முடிந்தே பதினைந்து ஆண்டுகள் கடந்து விட்டது. இலங்கை சூழ்நிலை எவ்வளோவோ மாறி உள்ளது, ஆனால் தமிழரின் வாழ்வில் மட்டும், தமிழ் மொழியின் அரச பாவனையில் மட்டும் எந்த மாற்றமும் இல்லை, முன்னையதை விட பின்னோக்கியே போய்க் கொண்டு இருக்கிறது!   அவன் அப்போது உயர்தர பரீடசை எடுத்து விட்டு மறுமொழிக்காக காத்திருந்த காலம். யாழ் மத்திய கல்லூரியில் படிப்பில் முதலாவதாகவும் விளையாட்டில் சிறப்பாகவும் திகழ்ந்தவன். குடும்ப சூழலை முன்னிட்டு, பரீடசைக்கும் மறுமொழிக்கும் இடையில் இருக்கும் இடைவெளியில்  அவன் காங்கேசன் துறை சீமெந்து தொழிற்சாலையில் ஒரு தற்காலிக வேலை எடுத்து, அதில் மிக ஈடுபாடுடன் வேலை செய்து கொண்டு இருந்தான்.    யாழ்ப்பாணத்தின் வடக்கே காங்கேசன் துறையில் சுமார் 700 ஏக்கர்கள் இடப்பரப்பில் அமைக்கப்பட்டுள்ள இந்தத் தொழிற்சாலையில் சுமார் 1500 தொழிலாளர்கள் வரை கடமையாற்றினர். வருடமொன்றிற்கு சுமார் 760 000 மெற்றிக் தொன் சீமெந்து இங்கிருந்து உற்பத்தி செய்யப்பட்டது. சீமெந்து உற்பத்திக்கான மூலப்பொருட்களில் சுண்ணாம்புக்கல் அருகிலுள்ள நிலப்பகுதிகளில் இருந்தும் களிமண்ணானது மன்னாரின் முருங்கன் பகுதியில் இருந்தும் பெறப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.    அவனின் பொல்லாத காலம்  இந்தத் தொழிற்சாலையின் செயற்பாடுகள் போர்ச்சூழலின் காரணமாக 1990 ஆம் ஆண்டு இடைநிறுத்தப்பட்டன. அது அவனை பெரிதாக பாதிக்காவிட்டாலும்,  அதை தொடர்ந்து ராணுவத்தின் சந்தேகம் அங்கு வேலையில் இருந்த இளம் தலைமுறையினர் பக்கம் சென்றது தான் அவனுக்கு பிரச்னையைக் கொடுத்தது. அவனை விசாரணைக்கு என, வீடு வந்து கேட்கவும், அவனின் தாய்,  விசாரணையின் பின் விடுவார்கள் என்ற நம்பிக்கையில் தானே, ராணுவ கேம்ப் போய் கொடுத்ததை முப்பத்தி மூன்று ஆண்டுகள் கழித்தும் இன்னும் சொல்லிக் கொண்டே இருந்தாள் .       எத்தனை அரசு மாறிவிட்டது. ஆனால் என்ன பிரயோசனம்? தமிழ் பேசும் மக்களின் அடிப்படை உரிமையும் பிரச்சனையும் மட்டும்  தீர்ந்தபாடில்லை. இலங்கையில் 1990களில் இருந்து, 2014 வரை வடக்கு - கிழக்குப் பகுதிகளில் சுமார் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் காணாமல் போயிருப்பதாக சொல்லப்படுகிறது. காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள், சுமார் ஐந்து / ஆறு வருடங்களுக்கு மேலாக தொடர் போராட்டங்களை அவர்களது உறவினர்கள் முன்னெடுத்து வருகின்றனர். இவ்வாறு போராட்டங்களை முன்னெடுத்த பெற்றோரில் பலர், இன்று உயிர் இழந்துவிட்டனர். அப்படித்தான் இவனின் தாயும் கடந்த ஆண்டு இறந்துபோனார் என்பது கவலைக்குரிய செய்தியாகும். என்றாலும் இப்ப அவனின் தங்கை அந்த பொறுப்பை எடுத்துள்ளாள்.   அவள் திருமணம் செய்து இரு பிள்ளைகளின் தாய். கணவனோ ஒரு விபத்தில் சிக்கி, ஊனமுற்றவராக இருந்தாலும் வீட்டில் இருந்து பிள்ளைகளை கவனிப்பதுடன் நிகழ்நிலையில் கணக்காளர் பணி [Online accountant job] புரிகிறார். அவளும் உயர்வகுப்பு கணித ஆசிரியை. அவர்களின் வருமானம் காணும் என்றாலும், அண்ணனின் தேடுதல் தொடர்ந்து கவலையையே  கொடுத்துக் கொண்டு இருந்தது. இந்த நிலையில், இன்று  ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்குவதாக அரசாங்கத்தின் உயர்பீடம் அறிவித்தது, அவளுக்கு கையும் காலும் ஓடவில்லை. பாடசாலையில் இருந்து கவலை தோய்ந்த நிலையில் வீடு திரும்பினாள். கணவன், அவளின் இரு பிள்ளைகளும் அவளையே உற்று நோக்கினார். என்ன செய்வது என்று ஒருவருக்கும் புரியவில்லை. காலம் இன்று மாறி உள்ளது என்பது உண்மையே. ஆனால் இவர்களின் கவலை மட்டும் இன்னும் தொடர்கிறது!   “காலம் ஒருநாள் மாறும் – நம் கவலைகள் யாவும் தீரும் வருவதை எண்ணி சிரிக்கின்றேன் வந்ததை எண்ணி அழுகின்றேன் சிலர் அழுவார் சிலர் சிரிப்பார் – நான் அழுதுகொண்டே சிரிக்கின்றேன்”   தன் வாழ்வும் தன் பிள்ளைகளின் வாழவும் சரியாக வருவதை எண்ணி மகிழும் அதே நேரத்தில், வந்ததை , ராணுவத்திடம் விசாரணைக்காக நேரடியாக தாயால் ஒப்படைக்கப் பட்ட அவளின் அண்ணாவை எண்ணி இன்னும் அழுது கொண்டுதான் இருக்கிறாள்!!    அவள் இப்ப போராட்டத்துக்கு தலைமை தங்கினாள். தன் ஆசிரியர் பதவியை தூக்கி எறிந்தாள். "வாழும் வரை போராடு" இப்ப அவளின் தாரகமந்திரம். தாயின் ஆத்மா சாந்தியடைய வேண்டும். அதற்கா எதையும் செய்யத் துணிந்து விட்டாள். அவளுக்கு வேறு வழி ஒன்றும் தெரியவில்லை. இதை  இதனுடன் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். என் பிள்ளைகள் உரிமையுடன் மதிப்புடன் வாழவேண்டும் என்பதே இப்ப அவளின் ஒரே குறிக்கோள் !      "வாழும் வரை போராடு வழி உண்டு என்றே பாடு    இன்று ரோட்டிலே நாளை வீட்டிலே மழை என்றும் நம் காட்டிலே   வீதியில் பாடும் பாடல் நாளை ஊரையே விலை பேசும் எந்நாளும் என் கீதம் மண்ணாழும் உண்மையே ஒரு காலம் உருவாகும் நிலை மாறும் உண்மையே!"   இறுதி யுத்தத்தில் கண்கண்ட சாட்சியாக ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்கப்படுவ தென்றால், கைது செய்யப்பட்ட அனைவரும் கொலை செய்யப்பட்டார்களா? இது தான் அவளின் கேள்வி? இது நியாயமான கேள்வியே! அப்படி என்றால் ராணுவத்திடம் ஒப்படைக்கப் பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை அரசு கூற வேண்டும் என்ற சுலோகத்துடன் அவள் வீதிக்கு புறப்பட்டாள்! இனி அவளின் வாழ்வு  நீதி கிடைக்கும் வரை ஓயபோவதில்லை! காலம் ஒரு நாளும் காத்திருக்காது. அப்படி என்றால்? எப்ப அவளின் காட்டில் மழை பெய்யும் ? யாம் அறியேன் பராபரமே!!   "கருணை என்னும் கண் திறந்து காட்ட வேண்டும் காவல் என்னும் கை நீட்டிக் காக்க வேண்டும் ஒற்றுமை கொண்டு ஒன்றாய் நிற்க வேண்டும்  ஒரே குரலில் நீதி விசாரணை கேட்க வேண்டும்!"     [கந்தையா தில்லைவிநாயகலிங்கம் அத்தியடி, யாழ்ப்பாணம்]       
    • வயதைப் பார்த்தால் வேலை செய்பவர்கள் போல தெரியலை.
    • @nunavilan என்ன‌ அண்ணா க‌ள‌த்தில் குதிக்கிற‌ ஜ‌டியா இல்லையா இன்னும் சில‌ ம‌ணி நேர‌ம் தான் இருக்கு🙏🥰...................................
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 46 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.