Jump to content

யார் தமிழன் ...(சாட்டை சுழருது)


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

பல நூற்றாண்டுகளுக்கு முன் தமிழகத்தில் வந்து வாழும் நாயக்கர் சாதிக்காரங்களை குறிவைத்தே இந்த தெலுங்கன் எனும் புரளி கிளப்படுகிறது.

இஸ்லாமியரை அரபிகள் என்று சொல்வதற்கு நிகராரான புரட்டு இது. சீமான் போன்றவர்கள் வேண்ட்மென்றே தமிழனை சாதிவாரியாக பிர்க்கின்றனர்.

Link to comment
Share on other sites

மொழி வாரியாக மாநிலங்களைப் பிரிக்கலாம். அது தப்பில்லை. ஆனால் அந்த மொழிக்குரியவன்தான் ஆளத் தகுதியானவன் என்று சொன்னால் அவன் ஃபாசிஸ்ட். :D

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நந்தன் அண்ணையோ அல்லது கோசானோ கூறும் விடயங்கள் எந்த ஆதாரமும் அற்ற வெறும் ஊகக்கதைகளே... தமிழன் தமிழ்மொழி என்ற எங்கள் உயிரான விடயங்களை யாரும் கவனியாது எந்த திராவிட மாநிலத்தவனும் ஏற்றுக்கொள்ளாத உண்மையில் யதார்த்தில் இல்லாத ஒன்றின்மீது தமிழர்களின் உணர்வுகளை திசைமாற்றி (இதில் பயணம் செய்யும் பல இன உணர்வுள்ள தமிழர்கள் மன்னிக்கவும். நீங்களும் திராவிடமாயை புரிந்துகொண்டு வெளிவரவேண்டும் என்பது இன உணர்வுள்ள ஒவ்வொரு தமிழனதும் விருப்பு) அரசியல் நடத்திய திராவிட கட்சிகளில் உள்ள சிலர்தான் தாமாக வெளிவந்து தம்மை தெலுங்கர்கள் என்றும் வந்தேறிகள் என்றும் சொல்லிக்கொண்டு நாம்தமிழர் மீதும் சீமான் மீதும் தமது அரசியல் இருப்பு குறித்த பயத்தினால் வசைபாடுகிறார்களே அன்றி நாம் தமிழர் யாரையும் அடையாளப்பரிசோதனை செய்யவும் இல்லை இதுகுறித்த நிகழ்வுகளும் இல்லை.. இதுகுறித்து எப்பவோ ஏற்கனவே கேட்கப்பட்ட கேள்விக்கு சீமான் தெளிவாக பதில் சொல்லி இருக்கிறார். குறித்த காணொளியும் உள்ளது.. அரசியலில் நியாயமான விமர்சனங்களுக்கு பதில் சொல்வதும் தவறு என்றால் திருத்திக்கொள்வதும் ஒரு அரசியல் கட்சியின் வளர்ச்சிக்கு முக்கியமானது..ஆனால் வேண்டுமென்று சொல்லப்படும் செவிவழி மற்றும் முகப்புத்தக தூற்றல்கள் செயல்பாட்டில் உறுதியாகவும் திறமையாகவும் உள்ள ஒரு அமைப்பை பலவீனப்படுத்தப்போவதில்லை..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தம்பி  சுபேசுக்கு  வணக்கம்

 

 

 

ஒரு கணணியும்

முகநூலும் இருந்துவிட்டால் விவாதங்கள் செய்வதும்

ஒருவரை தூற்றுவதும்

திட்டம போட்டு நாத்துவம் வாங்கோ என்பதும் 

இன்றைய  உலகின் வல்லமை பொருந்திய மக்கள் சேவைகள்...

 

வை.கோ அண்ணன் எமது சொத்து

எந்தநிலையிலும் வேண்டாமே

நன்றி  மறவாதிருப்போம்  தம்பி....

 

புரிந்து கொள்வீர்கள் என்ற நம்பிக்கையுடன்......

 

 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

தம்பி சுபேசுக்கு வணக்கம்

ஒரு கணணியும்

முகநூலும் இருந்துவிட்டால் விவாதங்கள் செய்வதும்

ஒருவரை தூற்றுவதும்

திட்டம போட்டு நாத்துவம் வாங்கோ என்பதும்

இன்றைய உலகின் வல்லமை பொருந்திய மக்கள் சேவைகள்...

வை.கோ அண்ணன் எமது சொத்து

எந்தநிலையிலும் வேண்டாமே

நன்றி மறவாதிருப்போம் தம்பி....

புரிந்து கொள்வீர்கள் என்ற நம்பிக்கையுடன்......

அண்ணா.. சீமானுக்கு முன்னமே வைகோ எமக்காக பேசியவர் பேசிக்கொண்டு இருப்பவர். அந்த நல்லமனிதனை ஈழத்தமிழினம் ஒருபோதும் மறவாது. அதேபோல் எமக்காக பேசும் சீமானும். சீமானும் வைகோவும் எமக்காக எப்பொழுதுமே கைகோர்ப்பவர்கள் ஒன்றாக. அவர்களிடம் அந்தபுரிதல் இருக்கிறது.. ஆனால் எம்மவர்களிடம்தான் அந்த புரிதல் இல்லை. வைகோவின் தம்பிகள் அவர்களது அரசியலை அங்கு அவர்கள் நாட்டில் பேசும்போது ஈழத்தமிழர்களில் ஒரு பகுதியினர் அவற்றை காவிவந்து தமிழ் மொழிக்கும் சீமானுக்கும் ஈழப்பிரச்சினைக்கும் முடிச்சுபோட்டு எழுதும்போதே இவற்றை எல்லம் வெளியில் இருந்து பார்க்கும் நாமும் மனசாட்சியின் குத்தல் தாங்கமுடியாமல் எழுதவேண்டி இருக்கிறது நமக்குதெரிந்த புரிந்துகொள்ளும் உண்மைகளை..மற்றும்படி யாரையும் புண்படுத்தவோ எழுதுபவை அல்ல..

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

சீமான் அரசியல் செய்வது எம்மிடம் அல்ல.. அவரது மக்களிடம்.. அதிலிருந்து எமக்கானது எது இருக்கிறது என்று பார்க்கும்போது அவர் மூலம் எம் பிரச்சினைகளை பேச ஒரு இலவச ஊடக இடம் கிடைக்கிறது.. உலகத்திடம் வேண்டாம் தமிழ் நாட்டின் கிராமங்களுக்கு கூட எம்பிரச்சினைகளை பற்றிஎடுத்து செல்ல ஊடகப்பலமற்ற வக்கற்றவர்கள் நாங்கள்..கிடைக்கும் சந்தர்ப்பங்களில் எல்லாம் எமக்கான கொழுகொம்புகளினூடாக பயணம் செய்வதே புத்திசாலித்தனமானது, அத்துடன் தமிழ் இனம் மற்றும் தமிழ் மொழிகுறித்த விழிப்புணர்வை வெறும் முட்டைக்கும் பிரியாணிக்கும் தண்ணிக்கும் ஓட்டுப்போடும் அடிமட்ட மக்கள் கூட்டத்திடம் எடுத்து செல்கிறார். இது நமக்கும் அவர்களுக்கும் பொதுவான பிரச்சினை. எனவே இவற்றினூடாகவே சீமானை அணுகவேண்டுமே ஒழிய இங்கு பலர் உணர்ச்சி வசப்பட்டு திட்ட்டுவது போல் அல்ல.

Link to comment
Share on other sites

இன்றைக்கு நாம் தமிழர் என்பது ஒரு அமைப்பு முழுமையான அரசியல் கட்சியல்ல. இனிவரும் காலத்தில் எப்படியோ...! ம.தி.மு.க ஒரு பிரதான அரசியல் கட்சி. அது தேர்தலில் குறிப்பிட்ட இடங்களை பெற இரு பெரும் திராவிட கட்சிகளை சார்ந்திருக்க வேண்டியுள்ளது. பதவிகளில் இல்லாத ஒரு கட்சி அமைப்பு ரீதியாக பலவீனமாகவே காணப்படும். அதற்கு நல்ல எ.கா ம.தி.மு.க வே. ஈழ தமிழர் நலன்சார்ந்து போரடி வருபவர் நெடுமாறன் ஐய்யாவும், வைகோவும் அன்றிலிருந்து. இன்றைக்கு நெடுமாறன் ஐய்யா வயோதிப.பருவத்தில் உள்ளார். இன்றளவும் வைகோ நிலையான இடத்தை பெற போராடிவருகிறார்.

2009க்கு பிறகு தமிழகத்தில் ஈழ ஆதரவு நிலையானது குறிப்பிடதக்க அளவில் மாற்றமடைந்துள்ளது. அதிலும் குறிப்பாக இளையோரிடத்தில். இப்படியான சூழ்நிலையில் ஈழ அரசியலை கையில் எடுத்து கொண்டார் சீமான். மற்றவர்களை காட்டிலும் அதில் தீவிரமாக ஈடுபாட்டை கொண்டுள்ளார். அவரது வருகை பலரால் ஏற்றுகொள்ள முடியவில்லை, என்னாலும்கூட முழுமையாக ஆதரிக்கபடவில்லை. அவரது ஆரம்பகால அரசியல் செயற்பாடுகளும் வாய்மூல வாக்குமூலங்களும் அவ்வறு இருந்தன. ஆனால் சொல்லத்தக்க அளவில் மாற்றங்களும் வந்தன. அதுவரை தேசிய தலைவரின் படங்களை பாவிக்க முடியாத சூழலை மாற்றினார். ஒரு முறை அலுவலகத்துக்கு செல்லும் வழியில் சிக்னலுக்காக காத்திருந்த நேரத்தில் பெரிய அளவில் தேசிய தலைவரின் பதாகை வைக்கப்பட்டிருந்தை காண மட்டற்ற மகிழ்ச்சி உண்டானது.

எனது ஊகத்தின்படி சீமானின் கட்சியில் உள்ளவர்கள் முழுவதுமாக அவரை நம்பி இணைந்திருப்பார்கள் என தோன்றவில்லை. அவர் மற்றவரை காட்டிலும் மக்களிடம் துணிந்து தலைவரை எடுத்து செல்வதால் இருக்கலாம். ஏனெனில் இப்போதுள்ள தெரிவுகள் சிலவே. காலமாற்றத்தில் அவரது செயற்பாடுகளே அவரை முன்னிருத்தும் அல்லது தூக்கி எறியும். ஆனால் இன்றைய தேவை இளைஞர்களிடையே வெற்றிடத்தை ஏற்படுத்திவிடாதிருக்க வேண்டும். அதற்காவது சீமான் தேவையாயுள்ளார். அவரது அண்மைய செயற்பாடுகள் ஒரளவு திருப்திகரமானதாக உள்ளது.

இனத்தின் அவலங்களை மற்ற இந்திய தேசிய இனங்களுக்கு கொண்டு சென்றது பாரட்டதக்கது. அவரால் ஒரளவு நமதினத்தின் அவலங்களும் தேசிய தலைவரும் விடுதலை போரட்டமும் ஒரளவு எடுத்து செல்லப்படுகிறது என்ற யதார்த்ததையும் புரிந்து கொள்ள வேண்டும். ஒருபோதும் சீமானோ மற்ற எவருமோ எக்காலத்திலும் ஒரு மாவீரரின் புகழையோ புனிதத்தையோ பெற முடியாது. புலத்திலும் புலம்பெயர்ந்த தேசங்களிலும் இன்னும் வலுப்பெற வேண்டியுள்ளது.

இன்று குர்திஸ்தான் பலநாடுகளாலும் அங்கிகரிக்கப்பட்டுள்ளது. அவர்களைவிட பன்மடங்கு ஆயுத பலத்துடன் இருந்த நாம் அங்கிகரிக்கப்படாததற்கு காரணம் நமது போரட்டத்தின் தார்மிக காரணங்களை எடுத்து செல்லாததே. ஏதோ ஒருவகையில் எடுத்து செல்லப்படுகிறது சீமானால். அது ஒருவகையில் ஆதாயமே. திருமுருகன் காந்தி நல்ல செயற்பாட்டாளராக தெரிகிறார் இவரிலும். காலம் மாறும் காட்சிகளும் மாறும். அப்போது உரியவர் உரிய இடத்திலிருப்பார். எது எப்படியோ தேசிய தலைவரை தலைவராக ஏற்று கொண்ட ஒருவரை ஆதரிக்காவிட்டாலும் எதிர்க்காமல் இருக்கவே விரும்புகிறேன்.

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

யார் தமிழன் ..2

 

Link to comment
Share on other sites

தம்பி  சுபேசுக்கு  வணக்கம்

 

 

 

ஒரு கணணியும்

முகநூலும் இருந்துவிட்டால் விவாதங்கள் செய்வதும்

ஒருவரை தூற்றுவதும்

திட்டம போட்டு நாத்துவம் வாங்கோ என்பதும் 

இன்றைய  உலகின் வல்லமை பொருந்திய மக்கள் சேவைகள்...

 

வை.கோ அண்ணன் எமது சொத்து

எந்தநிலையிலும் வேண்டாமே

நன்றி  மறவாதிருப்போம்  தம்பி....

 

புரிந்து கொள்வீர்கள் என்ற நம்பிக்கையுடன்......

அண்ணே கீபோட்டில நாடே பிடிக்கிறமாம் ...மற்றவனுக்கு துரோகி பட்டம் கூட இருந்த இடத்தில கொடுக்கிறமாம் கருத்து எழுதுவது எல்லாம் ஒரு பிரச்சினையா .

சீமான் அரசியல் செய்வது எம்மிடம் அல்ல.. அவரது மக்களிடம்.. அதிலிருந்து எமக்கானது எது இருக்கிறது என்று பார்க்கும்போது அவர் மூலம் எம் பிரச்சினைகளை பேச ஒரு இலவச ஊடக இடம் கிடைக்கிறது.. உலகத்திடம் வேண்டாம் தமிழ் நாட்டின் கிராமங்களுக்கு கூட எம்பிரச்சினைகளை பற்றிஎடுத்து செல்ல ஊடகப்பலமற்ற வக்கற்றவர்கள் நாங்கள்..கிடைக்கும் சந்தர்ப்பங்களில் எல்லாம் எமக்கான கொழுகொம்புகளினூடாக பயணம் செய்வதே புத்திசாலித்தனமானது, அத்துடன் தமிழ் இனம் மற்றும் தமிழ் மொழிகுறித்த விழிப்புணர்வை வெறும் முட்டைக்கும் பிரியாணிக்கும் தண்ணிக்கும் ஓட்டுப்போடும் அடிமட்ட மக்கள் கூட்டத்திடம் எடுத்து செல்கிறார். இது நமக்கும் அவர்களுக்கும் பொதுவான பிரச்சினை. எனவே இவற்றினூடாகவே சீமானை அணுகவேண்டுமே ஒழிய இங்கு பலர் உணர்ச்சி வசப்பட்டு திட்ட்டுவது போல் அல்ல.

எங்களுக்கு என்ன நன்மை அதுதான் எங்களுக்கு முக்கியம் சுபேஸ் ...மத்திய அரசு மாநிலத்தை மதிப்பதே இல்லை அப்படி இருக்க என்ன மாற்றம் வந்திடும் என்று சொல்லுறியள் ..

 

 

பிரபாகரனை  உலகத்துக்கே தெரியும் அப்படி இருக்க இது என்ன சீமான் தான் தமிழ்நாட்டில் இப்ப கொண்டு சென்று சேர்க்கிறார் என்றால் முப்பது வருட போராட்டம் தமிழ்நாட்டு மக்களுக்கு தெரியாமல் இருந்ததா .

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • தினமுரசு ஒரு ஜனரஞ்சக பத்திரிகை என்பதில் சந்தேகமேயில்லை. அதில் அற்புதன் எழுதிவந்த துரையப்பா முதல் அற்புதன் வரை எனும் தொடர் பல நிகழ்வுகளை சொல்லி வந்தது. இதற்காகவே அந்த பத்திரிகையை வாங்கி தொடர் தொடராக வாசித்து வந்தேன். அவற்றையெல்லாம் கட்டி பத்திரமாக இன்றும் வைத்திருக்கின்றேன். கதையை வாசித்தவர்களுக்கு கொலையாளி யாரெனெ தெரிந்திருக்கும்.
    • தினமுரசு பத்திரிகையில் ஈழமக்கள் முன்னணியில் இருந்து தொடர்கதையாக எழுதி வந்த பத்திரிகையாளர் அற்புதன் எமது போராட்டம் எப்படி யார்யார் தொடங்கினார்கள்.                   எமது போராட்டம் பற்றிய உடனடி கள தகவல்களுடன் தினமுரசு பத்திரிகை வெளிவந்து கொண்டிருந்தது.துரோக கும்பலில் உள்ளவர்களால் எழுதப்பட்டாலும் ஒவ்வொரு கிழமை வெளிவந்த பத்திரிகையையும் வாங்கி வாசித்து பலருக்கும் வாசிக்க கொடுத்து சேர்த்து வைத்திருந்தேன்.                  பலரும் ஒவ்வொரு கிழமையும் எப்படா தினமுரசு வரும் என்று காவல் இருந்து வாங்கி வாசித்துக் கொண்டிருந்த காலத்தில் திடீரென பத்திரிகையாளர் அற்புதன் சுட்டுக் கொல்லப்பட்டார்.                அவரது கொலை அவர்களது இயக்கமான ஈபிடிபி யே காரணம் என எல்லோராலும் பேசப்பட்டது.டக்ளஸ் ஏற்கனவே அற்புதனை எச்சரிகை செய்தும் தொடர்ந்தும் பல உண்மைகளை எழுதியதால்த் டக்ளசால் கொல்லப்பட்டாக சொல்கிறார்கள்.                             அற்புதனின் தினமுரசு பத்திரிகையை வாசிக்காதவர்கள் எமது போராட்ட ஆரம்ப வரலாறு தெரியாதவர்கள் இந்த தொடரை பாருங்கள்.                 வரலாற்றை அறிந்து கொள்ளுங்கள்.   பாகம்1    
    • உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள். இப்ப ஜேர்மனியிலை எதுக்கெடுத்தாலும் தொட்டால் பட்டால் புட்டின் தான் குற்றவாளி.அந்த மாதிரி மக்களை மூளைச்சலவை செய்துகொண்டு போகின்றார்கள். இணக்க அரசியலுக்கு பெயர் போன ஜேர்மனி இப்படி ஆகிவிட்டது. உள்ளதைத்தான் சொல்லியிருக்கின்றீர்கள்.  
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.