Jump to content

கனடிய தமிழ் வானொலி முன்னெடுத்த மலையக மக்களுக்கான நிதி சேர் நிகழ்வு:


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்
CTR24-Radio-seithycom-news-350.jpg

மண்ணையும் மனங்களையும் நேசிக்கும் கனேடிய தமிழ் வானொலியூடாக கனடியத் தமிழர்கள் பெருமளவில் பங்கு கொண்டு மலையக மக்களது அவலத்திலும் ஆழ்ந்த இழப்பிலும் தமது துயர் பகிர்வை செய்தனர். எமது மலையக உறவுகளுக்கான ஆறுதலை தெரிவித்த கனடியத் தமிழ் மக்கள் பாதிக்கப்பட்ட மலையக தமிழ் மக்ளுக்கு உடனடியாக உதவ நிதி சேகரிப்பிலும் தம்மை இணைத்துக் கொண்டனர். எமது தாயக மக்களுக்கு தொடர்ச்சியாக உதவிவரும் 'மண்வாசனை" அமைப்பினரும் கனடியத் தமிழ் வானொலியும் இணைந்து நடாத்திய ' எம் மலையக உறவூகளின் துயர் துடைப்போம்" நிகழ்வில் பெருமளவு கனடியத் தமிழ் மக்களும் கனடிய தமிழ் வானொலியுடன் நீண்ட காலமாக இணைந்திருக்கும் ஐரோப்பிய மற்றும் வெளிநாட்டு உறவுகளும் பங்கு பற்றினர்.

   

அண்மையில் மலையகத்தில் ஏற்பட்ட மண்சரிவினால் தமது உறவுகள் பலரை இழந்தும் தமது இருப்பிடங்களை தொலைத்தும் நிற்கும் எம் மலையக உறவுகளுக்காக கனேடிய தமிழ் வானொலியூடாக பங்கு கொண்ட எம்மக்கள் குறுகிய நேரத்துக்குள் இருபத்தைந்து ஆயிரம் டொலர்களை முன்வந்து வழங்கினர்.

சில மணி நேரங்களே நடைபெற்ற இவ்வானொலி நிகழ்ச்சியூடாக தமது உறவுகளுக்காக குரல் கொடுத்த எம்மக்கள் மலையக உறவுகள் நீண்டகாலமாக எதிர் கொண்டு வரும் அநீதிகளையூம் அரச அடக்குமுறைகளையும் பேசியதோடு மலையக தமிழர் சமூகமாக அவர்களது வாழ்வுரிமைக்கான போராட்டத்தில் எமது தொடர்ச்சியான பங்களிப்பும் ஆதரவூம் இருக்க வேண்டும் எனவும் தமது கருத்துக்களை முன்வைத்தனர் . கடந்த ஐம்பது வருடங்களுக்கு மேலாக ஒரு சமூகமாக எமது உரிமைகளுக்காகப் போராடிவரும் நாம் அதுவும் குறிப்பாக அதே 'சிறிலங்கா நாட்டின்" இன்னொரு சமூகமாக இருந்துவரும் மலையக மக்கள் எதிர்கொள்ளும் அநீதிகளிற்காக குரல் கொடுப்பதன் மூலமே அவர்களது போராட்டத்தைப் பலப்படுத்தவும் அதனுடாக எமது போராட்டத்திற்கான ஆதரவை வலுப்படுத்தவும் முடியூம் என்னும் வகையிலான காத்திரமான கருத்துப் பரிமாற்றங்களுக்குமான களமாக இவ்வானொலி நிகழ்ச்சி நடைபெற்றது.

இவ்வாறான வகையில் ஆரோக்கியமான உரையாடல்களையும் ஆக்கபூர்வமான பங்களிப்புக்களையும் உருவாக்கும் ஒரு ஊடகமாக எம்மை தொடர்ந்து வளர்த்துக் கொள்வதில் கனடியத் தமிழ் வானொலி எம் மக்களுடன் சேர்ந்து பெருமை கொள்கின்றது. இந் நிகழ்ச்சியில் இணைந்து செயற்பட்ட மண்வாசனை அமைப்பிற்கும் மற்றும் இதில் இணைந்து பங்கெடுத்த அனைத்து உறவுகளுக்கும் எமது மனமார்ந்த நன்றி.

 

செய்தி - கனடிய தமிழ் வானொலி

 

http://seithy.com/breifNews.php?newsID=120451&category=TamilNews&language=tamil

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பணம் பேய்ச் சேர்ந்தால் சந்தோசம்..!

Link to comment
Share on other sites

இருபது வருடமாக சேர்த்த எந்த காசும் ஊருக்கு போனதாக எனக்கு தெரியாது .டொராண்டோவில் நாலு கட்டிடம் இருக்கு .(எல்லாம் நம்மட ஆட்கள் தான் )

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

துன்பப் பட்ட, மக்களின்... பெயரில் சேர்த்த பணத்தை.... அந்த மக்களிடம் கொடுப்பதே... மனித தர்மம்.
மேலுள்ள குற்றச்சாட்டுக்களை, தவிர்ப்பதற்காக, கனடிய வானொலி...

அப்பணத்தை அந்த மக்களிடம், சேர்த்ததற்கான ஆதாரங்களை    வெளியிடுவது தான் முறை. 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

துன்பப் பட்ட, மக்களின்... பெயரில் சேர்த்த பணத்தை.... அந்த மக்களிடம் கொடுப்பதே... மனித தர்மம்.

மேலுள்ள குற்றச்சாட்டுக்களை, தவிர்ப்பதற்காக, கனடிய வானொலி...

அப்பணத்தை அந்த மக்களிடம், சேர்த்ததற்கான ஆதாரங்களை    வெளியிடுவது தான் முறை. 

 

எனக்கு தொிந்து இதுவரையில் எந்த நிதி சோ்ப்புக்கும் ஆதாரங்கள் காட்டப்படவில்லை.

 

தற்போது நிா்வாக மாற்றங்களால் ஏதும் நடந்தால் சாி..!

இருபது வருடமாக சேர்த்த எந்த காசும் ஊருக்கு போனதாக எனக்கு தெரியாது .டொராண்டோவில் நாலு கட்டிடம் இருக்கு .(எல்லாம் நம்மட ஆட்கள் தான் )

 

எல்லா கருத்துக்களுடனும் உடன் படா விட்டாலும்....!

நாலு கட்டிடங்கள் மட்டும் தான் அண்ணாக்கு தொியும் போல..?

Link to comment
Share on other sites

  • 2 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

CTR24-Radio-seithycom-news-350.jpgஇயற்கை அனர்த்த மண்சரிவினால் பாதிக்கப்பட்ட எம் தமிழ் மலையக உறவுகளின் அடிப்படை வாழ்வாதாரத்திற்கு உடனடியாக உதவும் முகமாக CTR வானொலியூடாக உதவிக்கரம் நீட்டுங்கள் என்ற அறிவித்தல் விடுக்கப்பட்டதும், கனடியத்தமிழர் மட்டுமல்ல உலகப்பரப்பெங்கும் இணையத்தளமூடாக வானொலியை கேட்ட தமிழ் மக்களும் கூட வங்கி மூலமும் Pay Pal மூலமும் பணத்தினை வைப்பிலிட்டமையானது உலகப்பரப்பில் நாம் எங்கு வாழ்ந்தாலும், உலகு வாழ் எந்த தமிழர் எங்கு பாதிக்கப்பட்டாலும், நாங்கள் தமிழர்கள் என்ற இன ஒற்றுமையுடன் உதவிக்கரம் கொடுப்போம் என்பதை நிரூபித்திருக்கின்றார்கள்.   

எம் தமிழ் மலையக மக்களுக்கு உதவிக்கரம் நீட்டிய அத்தனை உறவுகளுக்கும் கனடியத்தமிழர் தேசிய அவையின் மண்வாசனை வேலைத்திட்டம் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கின்றோம். நீங்கள் அனுப்பிய அத்தனை பணமும் மலையக மக்களின் நலனில் அக்கறையோடு உழைக்கும் திரு மனோகனேசன் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இலங்கைப் பணம் (25,78,800.00 ரூபாய்கள்) இருபத்தைந்து இலட்சத்து எழுபத்தெட்டாயிரத்து எண்ணூறு ரூபாய்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

பணம் தந்தவர்களின் விபரங்கள் இத்துடன் கீழ் இணைக்கப்பட்டுள்ளது.

கனடியத் தமிழர் தேசிய அவை (NCCT)

 

 

http://seithy.com/breifNews.php?newsID=121134&category=TamilNews&language=tamil

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

CTR24-Radio-seithycom-news-350.jpg

----

அத்தனை பணமும் மலையக மக்களின் நலனில் அக்கறையோடு உழைக்கும் திரு மனோகனேசன் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இலங்கைப் பணம் (25,78,800.00 ரூபாய்கள்) இருபத்தைந்து இலட்சத்து எழுபத்தெட்டாயிரத்து எண்ணூறு ரூபாய்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

-----

 

மலையக மக்களுக்கு உதவி, தேவைப்பட்ட போது....

தனது நேயர்களிடம் இருந்து திரட்டிய நிதியை,

தகுந்த ஒருவருக்கே அனுப்பி வைத்த "கனேடிய தமிழ் வானொலிக்கு" நன்றி.

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • நாங்கள் மேலைத்தேச நாடுகளில் மத்தியதர வர்க்கம் ஆனால் இலங்கை போன்ற 3ஆம் உலக நாடுகளுக்கு சென்றால் உயர்தட்டு வர்க்கம், அங்கே விடுமுறைகாலத்தில் அங்கேயுள்ள மக்களால் பெறமுடியாத பொருள், சேவைகளை பெற்றுகொள்ளலாம், மேலும் வெளிநாட்டில் இருந்துவிட்டு இந்த மாதிரி 3ஆம் உலக நாடுகளில் குடியேறும்போது எமது பணத்தின் மூலம் பொருள்கள், சேவைகளை அதிகமாக பெற்று வசதியாக வாழலாம், இந்த சொந்த அனுபவம் ஒட்டு மொத்த இலங்கை மக்களின் நாளாந்த வாழ்வு பிரதிபலிக்குமா என்பது தெரியவில்லை.
    • கடலை போட்டவரிடம் பால் கேட்டிருக்கலாமே! எருமைப் பாலாவது கிடைத்திருக்கும்😜
    • பெரிய வெள்ளியான இன்று மட்டக்களப்பில் திருச்சிலுவைப் பாதை நிகழ்வுகள் 29 MAR, 2024 | 02:32 PM   இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட நாளான இன்றைய தினம் (29) பெரிய வெள்ளியாக உலகெங்கும் அனுஷ்டிக்கப்படுகிறது. மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள தேவாலயங்களில் இன்று பெரிய வெள்ளியை முன்னிட்டு பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் திருச்சிலுவை பாதை நிகழ்வுகள் பக்திபூர்வமாக நடைபெற்றன. மனுக்குலத்தின் விடியலுக்காகவும் உலக மாந்தர்களின் மீட்புக்காகவும் அன்று கல்வாரியில் துன்பங்களை அனுபவித்து சிலுவைச் சாவினை ஏற்றுக்கொண்ட இயேசு கிறிஸ்துவின் திருப்பாடுகளின் வெள்ளியான இன்று மட்டக்களப்பில் உள்ள பல தேவாலயங்களில் சிலுவைப் பாதை நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன.    தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயம்  மட்டக்களப்பு தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயத்தில் திருச்சிலுவைப் பாதை நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன. இந்த சிலுவைப் பாதை ஊர்வலம் குருக்கள்மடம் தூய அசீசியார் ஆலயத்தில் இருந்து செட்டியாளயம், மாங்காடு, தேற்றாத்தீவு ஆகிய ஊர்களின் பிரதான வீதியூடாக தேற்றாத்தீவு புனித யூதாததேயு தேவாலயத்தை வந்தடைந்தது. புனித யூதாததேயு திருத்தலத்தின் அருட்தந்தையின் தலைமையில் நடைபெற்ற இந்த சிலுவைப் பாதை நிகழ்வில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர். புளியந்தீவு புனித மரியாள் பேராலயம்  மட்டக்களப்பு மாவட்டத்துக்கான பிரதான சிலுவைப்பாதை நிகழ்வு புளியந்தீவு புனித மரியாள் பேராலயத்தின் பங்குத்தந்தை அருட்பணி ஜே.நிக்ஸன் அடிகளார் தலைமையில் நடைபெற்றது.  இந்த சிலுவைப் பாதை புனித மரியாள் பேராலயத்தில் இருந்து ஆரம்பிக்கப்பட்டு, மத்திய வீதி வழியாக சென்று, வைத்தியசாலை வீதியை அடைந்து, மீண்டும் பேராலயத்தை  அடைந்தது.  இந்த சிலுவைப்பாதையில் அதிகளவிலான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டு பக்திபூர்வமாக சிலுவை சுமந்து வழிபாடுகளில் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில், இயேசு கிறிஸ்து உயிர்த்தெழுந்த தினத்தை நினைவுகூரும் உயிர்த்த ஞாயிறு தேவாராதனை ஞாயிற்றுக்கிழமை (31) இடம்பெறவுள்ளது.  https://www.virakesari.lk/article/179968
    • அபிவிருத்தி லொத்தர் சபை அதன் 40 வருட வரலாற்றில் 2023 இல் அதிகூடிய இலாபத்தை பதிவு செய்துள்ளது. இதன்படி, அபிவிருத்தி லொத்தர் சபையானது 2022-2023 ஆம் ஆண்டில் 32% இலாபமீட்டி புதிய சாதனையை படைத்துள்ளது, இது 2022 இல் பெற்ற இலாபத்தின் இருமடங்காகும். இதன்டபடி, ஜனாதிபதி நிதியத்திற்கு அபிவிருத்தி லொத்தர் சபையினால் வழங்கப்பட்ட பங்களிப்பு கடந்த வருடத்துடன் ஒப்பிடும் போது 13 வீதத்தால் அதிகரிக்கப்பட்டுள்ளது. 3,622,506,725 ரூபா 03 பில்லியன் இலக்கை கடந்துள்ளது. அதே சமயம், அரசாங்கத்திற்கான பங்களிப்பை 6% உயர்த்தி 5,193,833,721 ரூபாவினை வழங்கியுள்ளது. அவிருத்தி லொத்தர் சபையின் தலைவரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான அஜித் குணரத்ன நாரங்கல இது குறித்து கருத்து தெரிவிக்கையில், சவாலான காலப்பகுதியில் நாட்டின் பொருளாதாரத்தின் எதிர்மறையான விளைவுகளை குறைக்க அபிவிருத்தி லொத்தர் சபை கையாண்ட உத்திகளால் மிகக் குறுகிய காலத்தில் வருமான அதிகரிக்க வழி செய்துள்ளது. வழமையான லொத்தர் சீட்டுகள் மற்றும் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ள விசேட சீட்டுகளுக்கு வழங்கப்படும் பரிசுத் தொகையை அதிகரிக்க அபிவிருத்தி லொத்தர் சபை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், இந்நாட்டு பயனாளிகளுக்கு புதிய அனுபவத்தை வழங்கும் வகையில் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் ஊடாக லொத்தர் சீட்டுகளை அறிமுகப்படுத்தும் நடவடிக்கையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தலைவர் தெரிவித்தார். அபிவிருத்தி லொத்தர் சபையின் வருமானத்தில் 50% இந்த நாட்டில் கல்வி மற்றும் சுகாதாரத்திற்காக ஒதுக்கப்படுவதாகவும் அவர் அவர் மேலும் குறிப்பிட்டார். https://thinakkural.lk/article/297543
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.