Jump to content

உலக கிண்ண கிரிக்கெட் போட்டி - 2015 செய்திகளும் கருத்துக்களும்


Recommended Posts

உலகக்கிண்ணத்தில் சுப்பர் ஓவர் நீக்கம் : பரிசுத் தொகை ரூபா 60 கோடி
 

 

2015 ஆம்ஆண்டு இடம்பெறவுள்ள உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் நொக் அவுட் சுற்றில் சுப்பர் ஓவர் நீக்கப்பட்டுள்ளதுடன் பரிசுத் தொகையாக ரூபா 60 கோடி வழங்கப்படவுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) எதிர்வரும் 2015 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 14ஆம் திகதி முதல் மார்ச் மாதம் 29ஆம் திகதி வரை அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் இடம்பெறவுள்ளது.

இந்தப் போட்டி குறித்து சர்வதேச கிரிக்கெட் சபை (ஐ.சி.சி) நேற்று ஆலோசனை செய்தது.
இதன்படி உலகக் கிண்ண நொக்அவுட் சுற்றில் சுப்பர் ஓவரை நீக்குவது என்று முடிவு செய்யப்பட்டது.

 

காலிறுதியிலோ அல்லது அரை இறுதியிலோ ஆட்டம் சமநிலையில் முடிந்தால் சுப்பர் ஓவர் முறை பின்பற்றப்பட மாட்டாது. குழு ஆட்டத்தில் அதிக புள்ளிகள் பெற்றதன் அடிப்படையில் முடிவு செய்யப்படும்.

அதேவேளை, இறுதி ஆட்டம் சமநிலையில் முடிந்தாலோ அல்லது மழையால் பாதிக்கப்பட்டு நடைபெற முடியாமல் போனாலோ இரு அணிகளுக்கும் இணைந்து கூட்டாக கிண்ணம் வழங்கப்படும்.

 

உலகக் கிண்ண போட்டிகள் நடைபெறும் 49 ஆட்டமும் நடுவரின் முடிவை மறுபரிசீலனை செய்யும் டி.ஆர்.எஸ். முறை பின்பற்றப்படும். இந்தப்போட்டியின் மொத்த பரிசுத் தொகை ரூ.60 கோடியாகும்.

2011ஆம் ஆண்டு உலகக் கிண்ண போட்டியை விட இது 20 சதவீதம் கூடுதலாகும். இந்தியா, இலங்கை, பங்களாதேஷ் ஆகிய 3 நாடுகள் இணைந்து நடத்திய 2011ஆம் ஆண்டு உலகக் கிண்ண போட்டியில் மொத்தம் ரூ.48 கோடி பரிசுத் தொகை தான் வழங்கப்பட்டது.

 

2015ஆம் ஆண்டு உலகக் கிண்ண போட்டியில் சம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.23.85 கோடி பரிசாக வழங்கப்படும்.

அதேநேரத்தில் தோல்வி எதையும் சந்திக்காமல் கிண்ணத்தை கைப்பற்றினால் ரூ.24 கோடி வழங்கப்படும். 2ஆவது இடத்தைப் பிடிக்கும் அணிக்கு ரூ.10 கோடியும், அரை இறுதியில் தோற்கும் அணிகளுக்கு தலா 3.6 கோடியும், காலிறுதியில் தோற்கும் 4 அணிகளுக்கு தலா ரூ.1.8 கோடியும் வழங்கப்படும்.

 

 

http://www.virakesari.lk/articles/2014/11/11/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE-60-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF

Link to comment
Share on other sites

  • Replies 827
  • Created
  • Last Reply

உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் நாட்டாம தீர்ப்ப மாத்த சொல்லி கேட்கலாம்! 

 

துபாய்: உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் டிஆர்எஸ் எனப்படும் நடுவரின் முடிவை மறு பரிசீலனை செய்யும் நடைமுறை அமல்படுத்தப்படும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற உள்ள கிரிக்கெட் உலக கோப்பை போட்டிக்கான பரிசு தொகை, உள்ளிட்ட பல அம்சங்கள் குறித்து ஐசிசி அதிகாரிகள் ஆய்வு நடத்தியுள்ளனர். இதுகுறித்து ஐசிசி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் நாட்டாம தீர்ப்ப மாத்த சொல்லி கேட்கலாம்! உலக கோப்பையில் மொத்தம் 49 போட்டிகள் நடக்கும்.

 

அனைத்திலும் டிஆர்எஸ் நடைமுறை அமலில் இருக்கும். நாக்-அவுட் சுற்றில் மட்டுமே, ஒருநாள் ஓய்வு இருக்கும். நாக்-அவுட் சுற்றுகள் ஆரம்பித்த பிறகு போட்டி டையில் முடிந்தால் சூப்பர் ஓவர் மூலம் வெற்றி-தோல்வி கணிக்கப்படாது. அதற்கு பதிலாக, லீக் ஆட்டங்களில் எந்த அணி அதிக புள்ளிகள் பெற்றதோ அதுவே வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும். உலக கோப்பையின் இறுதி போட்டி டையில் முடிந்தால், இரு அணிகளுமே வெற்றி பெற்றதாகத்தான் அறிவிக்கப்படும். இவ்வாறு அந்த செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது. டிஆர்எஸ் எனப்படும் நடைமுறை, 2009ம் ஆண்டு நியூசிலாந்து-பாகிஸ்தான் டெஸ்ட் போட்டியில் முதன் முதலில் அமலுக்கு வந்தது.

 

2011ல் நடந்த கடந்த, உலக கோப்பை கிரிக்கெட் போட்டியிலும் டிஆர்எஸ் நடைமுறையில் இருந்தது. இருப்பினும் இந்திய கிரிக்கெட் வாரியம் எதிர்ப்பு தெரிவித்ததால் இந்திய அணி ஆடும் இருதரப்பு போட்டிகளில் டிஆர்எஸ் நடைமுறை அமலாகாது என்று ஐசிசி சலுகை அளித்திருந்தது. ஆனால் உலக கோப்பையில் பல அணிகளும் மோதும் என்பதால் டிஆர்எஸ் நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. இதன்மூலம் அம்பையர் எடுக்கும் முடிவே எதிர்த்து, அந்த முடிவால் பாதிக்கப்படும் அணி கேப்டன் மறு ஆய்வு செய்ய கோர முடியும்.

 

Read more at: http://tamil.oneindia.com/news/sports/drs-be-used-cricket-world-cup-2015-214643.html

Link to comment
Share on other sites

உலகக்கோப்பை: இந்திய-பாக். போட்டிக்கான டிக்கெட்டுகள் 12 நிமிடங்களில் முற்றிலும் விற்பனை

பிப்ரவரி 15, 2015 அன்று அடிலெய்டில் நடைபெறும் இந்தியா-பாகிஸ்தான் உலகக்கோப்பை போட்டிக்கான டிக்கெட்டுகள் 12 நிமிடங்களில் விற்றுத் தீர்ந்தன.

50,000 பேர் அமர்ந்து பார்க்ககூடிய கொள்திறன் கொண்ட அடிலெய்ட் மைதானத்தில் பொதுப்பார்வையாளர்களுக்கான டிக்கெட்டுகள் 12 நிமிடங்களில் விற்றுத் தீர்ந்தன.

மேலும், இந்தியாவிலிருந்து 20,000 ரசிகர்கள் இந்தப் போட்டியை காண ஆஸ்திரேலியா வருகை தருவதாக அடிலெய்ட் மைதான நிர்வாகி தெரிவித்தார்.

பிப்ரவரி 15-ஆம் தேதியன்று இந்தியா-பாகிஸ்தான் போட்டி முழு ரசிகர்களுடன் மைதானத்தில் களைகட்டவுள்ளதாக அவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

உலகக்கோப்பை போட்டித் தொடரின் 2-வது நாள் இந்தப் போட்டி நடைபெறுகிறது.

உலகக்கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் இந்தியாவை பாகிஸ்தான் வீழ்த்தியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அடிலெய்ட் மைதானத்தில் மட்டும் 4 உலகக் கோப்பை போட்டிகள் நடைபெறுகிறது.

http://tamil.thehindu.com/sports/உலகக்கோப்பை-இந்தியபாக்-போட்டிக்கான-டிக்கெட்டுகள்-12-நிமிடங்களில்-முற்றிலும்-விற்பனை/article6590980.ece?homepage=true

Link to comment
Share on other sites

அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் 14 திகதியில் இருந்து மார்ச் மாதம் 29 திகதி வரை உலக கிண்ண கிரிக்கெட் போட்டிகள் ஆஸ்திரேலியா, நியூசீலாந்து நாடுகளில் நடைபெறவுள்ளது.  

 

                                2015_Cricket_World_Cup_logo_zpsccbd2138.                                                                                                                                                                                        

                                            இந்த போட்டிகளில் பங்கு பற்றும் நாடுகள் இரு பிரிவுகளாக பிரிக்கபட்டுள்ளது

 

                              cricketworldcup_zps6c58da85.jpg

                                  

                            போட்டி நடைபெறும் நாட்களும் இடங்களும்

                                                                                                                                                                                                                                                                                         

               sch_zpscfb831d8.png           

 

           இந்த முறை இந்த யாருக்கு கிண்ணம் என்று   பொறுத்து இருந்து பார்ப்பம்.

                                                                  Cricket-World-Cup-2015_zps41e21f15.jpg                                                                                                                                                                                                                                                                                      

இதுவரை நடைப்பெற்ற உலக கிண்ண போட்டிகளில் உலக கிண்ணத்தை வென்ற நாடுகள்

 

                 icccricketworldcuppastwinners_zps1801612

                                                                                                                         

Link to comment
Share on other sites

12 நாடுகள் மட்டும்  உலக கோப்பையை விளையாட ஒன்றரை மாதம் எடுக்கிறது.

Link to comment
Share on other sites

உலக கிண்ண கிரிக்கெட் இறுதி ஆட்டம் சமநிலையில் முடிந்தால் இணை சம்பியன்கள் பிரகடனப்படுத்தப்படுவர்
 

 

உலக கிண்ண கிரிக்கெட் தொடரில், மெல்பர்ன் கிரிக்கெட் விளை­யாட்­ட­ரங் கில் 2015 மார்ச் 15ஆம் திகதி நடை­பெ­ற­வுள்ள இறுதி ஆட்டம் சம­நி­லையில் முடி­வ­டைந்தால் அல்­லது மழை­யினால் கைவி­டப்­பட்டால் இணைச் சம்­பி­யன்கள் அறி­விக்­கப்­பட்டு உலகக் கிண்ணம் பகி­ரப்­படும்.


அவுஸ்­தி­ரே­லி­யா­விலும் நியூ­ஸி­லாந்தி லும் நடை­பெ­ற­வுள்ள உலகக் கிண்ண கிரிக் கெட் போட்­டி­களின் இறுதிச் சுற்றில் (நொக் அவுட்) போட்­டிகள் சம­நி­லையில் முடி­வ­டைந்தால் சுப்பர் ஓவரைப் பயன்­ப­டுத்­து­வ­தில்லை என சர்­வ­தேச கிரிக்கெட் பேரவை (ஐ.சி.சி) தீர்­மா­னித்­துள்­ளது.

2011இல் நடை­பெற்ற உலகக் கிண்ணப் போட்­டி­களின் இறுதிச் சுற்று ஆட்­டங்கள் சம­நி­லையில் முடி­வ­டைந்தால் சுப்பர் ஓவர் பயன்­ப­டுத்­து­வ­தென தீர்­மா­னிக்­கப்­பட்­டி­ருந்­தது.


ஆனால், இம்­முறை கால் இறுதி அல்­லது அரை இறுதி ஆட்டம் சம­நி­லையில் முடி­வ­டைந்தால் அந்­தந்த அணி­களின் குழு­நிலை முடி­வுகள் கருத்தில் கொள்­ளப்­பட்டு முன்­னி­லையில் உள்ள அணி அடுத்த கட்­டத்­திற்கு முன்­னேறும்.

 

அதா­வது அவுஸ்­தி­ரே­லி­யா­வுக்கும் தென் ஆபி­ரிக்­கா­வுக்கும் இடையில் எஜ்­பஸ்­டனில் 1999இல் நடை­பெற்ற அரை இறுதி ஆட்டம் சம­நி­லையில் முடி­வ­டைந்­ததை அடுத்து 'சுப்பர் ஆறு' சுற்றில் அவுஸ்­தி­ரே­லியா முன்­னி­லையில் இருந்­ததால் இறுதி ஆட்­டத்­திற்கு முன்­னே­றி­யது. இதே­போன்ற நிலைப்­பாடு இம்­முறை உலகக் கிண்ண இறுதிச் சுற்றில் பின்­பற்­றப்­படும்.

எனினும் இறுதி ஆட்டம் சம­நி­லையில் முடி­வ­டைந்தால் இணைச் சம்­பி­யன்கள் பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­பட்டு உலகக் கிண்ணம் பகி­ரப்­படும்.  அத்­துடன் சீரற்ற கால நிலை நிலவும் பட்­சத்தில் கால் இறுதிச் சுற்­றி­லி­ருந்து போட்­டி­க­ளுக்கு ஒரு நாள் மேல­தி­க­மாக ஒதுக்­கப்­படும்.


பணப்­ப­ரிசு அதி­க­ரிப்பு

உலகக் கிண்ண கிரிக்கெட் போட்­டி­க­ளுக்­கான மொத்தப் பணப்­ப­ரிசு (2011ஐ விட 25 வீதம் அதி­க­ரிப்பு) 10 மில்­லியன் அமெ­ரிக்க டொலர்­க­ளாகும்.
சம்­பி­ய­னாகும் அணிக்கு 3,750,000 அமெ­ரிக்க டொலர்­களும் இரண்டாம் இடத் தைப் பெறும் அணிக்கு 1,750,000 அமெ­ரிக்க டொலர்­களும் காத்­தி­ருக்­கின்­றது.

முதல் சுற்றில் விளையாடும் சகல அணி களுக்கும் 35,000 அமெரிக்க டொலர்கள் கிடைப்பது உறுதி. முதல் சுற்றில் ஒரு வெற்றிக்கு 45,000 அமெரிக்க டொலர்கள் மேலதிகமாகக் கிடைக்கும்.
- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=7691#sthash.sS9AqZfz.dpuf

Link to comment
Share on other sites

cricketworldcup_zps6c58da85.jpg

 

                                 POOL A  இல்                                POOL B  இல்

                                  SCOTLAND                                    IRELAND

                                  AFGHANISTAN                               UAE     

 

 

                              பங்குபற்றும் மேலதிக நாடுகள்

Link to comment
Share on other sites

  • 3 weeks later...

உலக கோப்பை பயிற்சியில் இந்தியா-ஆஸி., மோதல்
டிசம்பர் 01, 2014.

 

துபாய்: உலக கோப்பை பயிற்சி போட்டியில் இந்திய அணி, ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தானுடன் மோதுகிறது.      

உலக கோப்பை கிரிக்கெட் தொடர் (50 ஓவர்), வரும் 2015, பிப்., 14 முதல், மார்ச் 29 வரை, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மண்ணில் நடக்கவுள்ளது. மொத்தம் பங்கேற்கும் 14 அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.      

‘பி’ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணியுடன், தென் ஆப்ரிக்கா, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே, அயர்லாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகள் உள்ளன.      

இதற்காக 2015, பிப்., 8 முதல் 13 வரை, மொத்தம் 14 பயிற்சி போட்டிகள் நடத்தப்படுகின்றன. ‘நடப்பு சாம்பியன்’ இந்திய அணி, தனது முதல் பயிற்சி போட்டியில் (பிப்.,8) ஆஸ்திரேலியாவை சந்திக்கிறது.      

 

அடுத்து பிப்., 10ல் ஆப்கானிஸ்தானுடன் மோதுகிறது. பகலிரவு போட்டிகளாக நடத்தப்படும் இதில், இரு தரப்பில் இருந்தும் தலா 15 வீரர்கள் பங்கேற்கலாம். அதேநேரம், 11 பேர்கள் மட்டும் தான் களத்தில் இருக்க வேண்டும்.      

போட்டியை காண ரசிகர்களுக்கு டிக்கெட், இலவசமாக வழங்கப்படவுள்ளது

 

http://sports.dinamalar.com/2014/12/1417454384/worldcupcricketindiaaustraliawarmupmatch.html

Link to comment
Share on other sites

உலக கோப்பை கிரிக்கெட்டுக்கு ஒரே ஒரு இந்திய அம்பையர் தேர்வு!

 

மும்பை: உலக கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடருக்கான நடுவர்களில் இந்தியாவை சேர்ந்த ஒருவர் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியா-நியூசிலாந்தில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற உள்ள உலக கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடரில் பணியாற்ற உள்ள நடுவர்களின் பெயர் பட்டியலை ஐசிசி வெளியிட்டுல்ளது.

 

உலக கோப்பை கிரிக்கெட்டுக்கு ஒரே ஒரு இந்திய அம்பையர் தேர்வு! அலீம்டார்-பாகிஸ்தான், பில்லி பவுடன்-நியூசிலாந்து, புருஸ் ஒக்ஸ்போர்ட்-ஆஸ்திரேலியா, இயன் குல்ட்-இங்கிலாந்து, குமார் தர்மசேனா-இலங்கை, மராய்ஸ் எராமுஸ்-தென் ஆப்பிரிக்கா, நிகல் லியாங்க்-இங்கிலாந்து, பவுல் ரெய்பெல்-ஆஸ்திரேலியா, ரிச்சர்ட் இலிங்வொர்த்-இங்கிலாந்து, ரிச்சர்ட் கெட்லபோரா-இங்கிலாந்து, ராட் டக்கர் மற்றும் ஸ்டீவ் டேவிஸ்-ஆஸ்திரேலியா. இவர்களே அம்பையர் குழுவில் உள்ளவர்களாகும். இதில் இந்தியாவை சேர்ந்த எஸ்.ரவி மட்டும் அம்பையராக வாய்ப்பு கிடைத்துள்ளது. இவர் சர்வதேச பேனல் அம்பையர் பொறுப்பில் இருப்பார்.

 

Read more at: http://tamil.oneindia.com/news/sports/world-cup-2015-match-officials-named-only-1-indian-216189.html

Link to comment
Share on other sites

உலகக்கோப்பை அரையிறுதியில் இந்தியா, தெ.ஆ., ஆஸ்திரேலியா, நியூசிலாந்து: சேவாக் கணிப்பு
 

 

2015-ஆம் ஆண்டு உலகக்கோப்பை போட்டிகள் அரையிறுதிக்கு இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் தகுதி பெற வாய்ப்பு என்று அதிரடி வீரர் சேவாக் கணித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:

பாகிஸ்தானுக்கு எதிராக நியூசிலாந்து டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாடியது. உலகக்கோப்பை கிரிக்கெட்டில் அவர்கள் தங்கள் சொந்த மண்ணில் விளையாடுகின்றனர். தென் ஆப்பிரிக்காவும் சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அங்கு விளையாடியது. அனைத்துப் போட்டிகளுமே நெருக்கமான ஆட்டங்கள். அரையிறுதிக்கு முன்னேறும் அணிகளை கணிப்பது கடினம் என்றாலும், இந்தியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேற வாய்ப்பிருக்கிறது என்று நான் கருதுகிறேன்.

 

இந்திய அணி ஆஸ்திரேலியாவில் உலகக்கோப்பைக்கு முன்னதாக டெஸ்ட் மற்றும் முத்தரப்பு ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. எனவே வீரர்களுக்கு தங்களை அந்தப் பிட்ச்களுக்கு ஏற்ப மாற்றிக்கொள்வது ஒன்றும் பெரிய கடினமல்ல.

ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் பிட்ச்கள் ஒரே மாதிரிதான் இருக்கும், அங்கு சிறப்பாக பேட்டிங், பவுலிங் இரண்டையுமே செய்ய பிட்ச்கள் அமைக்கப்படும். கிரிக்கெட் ஆட ஆஸ்திரேலியா சிறந்த இடம். நல்ல வேகமான ஆட்டக்களங்களில் பந்துகள் எழும்பும், பேட்டிற்கு பந்துகள் அருமையாக வரும். அங்கு பேட்டிங், பவுலிங் இரண்டையுமே மகிழ்ச்சியாக நிறைவேற்ற முடியும்.

 

டெஸ்ட் போட்டிகளிலும் இங்கிலாந்தில் போல் அல்லாமல் ஆஸ்திரேலியாவில் இந்திய அணி சிறப்பாகவே விளையாடும் என்று கருதுகிறேன்.

2015 உலகக்கோப்பையில் தனது வாய்ப்பு பற்றி...

30 வீரர்கள் கொண்ட உத்தேச அணியில் என் பெயர் இடம்பெறும் என்று நான் நினைக்கிறேன். கிரிக்கெட் விளையாடும் எந்த ஒரு வீரரும் தன் நாட்டிற்காக உலகக்கோப்பை கிரிக்கெட்டில் ஆட விருப்பம் கொள்வார்கள். இந்த உலகக் கோப்பையில் நான் விளையாடுவேன் என்றே கருதுகிறேன்.

நான் தொடக்க வீரராக களமிறங்கினாலும், சமீபமாக ஒன்றாம், இரண்டாம், மூன்றாம், ஏன் 4ஆம் நிலையில் கூட களமிறங்கி ஆடி வருகிறேன். எந்த நிலையில் ஆடினால் என்ன? என்னால் ரன்கள் எடுக்க முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. பந்தை கடைசி வரை பார்க்கவேண்டும், என் பகுதிக்கு வாகாக இருந்தால் அடிக்க வேண்டும். டெல்லி அணிக்காக வரும் காலத்தில் 3 அல்லது 4ஆம் நிலையில் களமிறங்குவேன்.

 

உலகக் கோப்பையில் இந்திய அணியின் வாய்ப்பு பற்றி...

2011-ஆம் ஆண்டு உலக சாம்பியன்கள் ஆனோம். கோப்பையை தக்க வைக்க வாய்ப்பு பிரகாசமாகவே உள்ளது. நல்ல அணி நம்மிடம் உள்ளது. ஒருநாள் கிரிக்கெட்டில் நாம் நன்றாகவே விளையாடி வருகிறோம்.

 

2011 உலகக்கோப்பை வெற்றி பற்றி...

நாக் அவுட் சுற்றில், அதாவது காலிறுதி, அரையிறுதி, இறுதிப் போட்டி வெற்றிகளை இரவு முழுதும் கொண்டாடினோம். ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இலங்கை போன்ற கடினமான அணிகளுக்கு எதிராக ஆடினோம். அந்த உலகக் கோப்பை முழுதுமே மகிழ்ச்சியாக ஆடினோம், ஒவ்வொருவரும் பங்களிப்பு செய்தனர்.

இறுதிப் போட்டி பற்றி அதிகம் கவலைப்படவில்லை, காரணம் அதற்கு முன்பு 2 ஆண்டுகாலமாக இலங்கைக்கு எதிராக வெற்றிகளைக் குவித்துள்ளோம் என்பது எங்களுக்கு பெரிய பக்கபலமாக இருந்தது. ஆனால் பாகிஸ்தான் போட்டியே சற்று கவலை அளித்தது. 260 ரன்களையே அடித்திருந்தோம், பிட்சும் பேட்டிங்கிற்கு வாகாக இருந்தது. அந்தப் பிட்சில் 260 ரன்கள் போதாது. ஆனால் பவுலர்கள் அருமையாக, ஆக்ரோஷமாக வீசினர். ஆஷிஷ் நெஹ்ரா, ஹர்பஜன் சிங், ஜாகீர் கான், யுவ்ராஜ் சிங் ஆகியோர் போட்டியை வெற்றிபெற்று தந்தனர்.

இவ்வாறு கூறினார் சேவாக்.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%86-%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/article6655610.ece

Link to comment
Share on other sites

உலகக்கோப்பை: 30 வீரர்கள் கொண்ட தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு
 

 

2015 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளுக்கான 30 வீரர்கள் கொண்ட உத்தேச தென் ஆப்பிரிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இறுதி 15 வீரர்கள் கொண்ட அணி ஜனவரி மாதம் அறிவிக்கப்படவுள்ளது.

 

வீரர்கள் விவரம் வருமாறு:

ஏ.பி.டிவிலியர்ஸ் (கேப்டன்), ஹஷிம் ஆம்லா (துணை கேப்டன்), கைலி அபாட், பர்ஹான் பிஹார்டீன், குவிண்டன் டி காக், மர்செண்ட் டீ லாங்கே, டுமினி, டு பிளேசிஸ், டீன் எல்கர், பியுரன் ஹெண்ட்ரிக்ஸ், ரீசா ஹெண்ட்ரிக்ஸ், இம்ரான் தாஹிர், ரோரி கிளீன்வெல்ட், ரியான் மெக்லாரன், டேவிட் மில்லர், மோர்னி மோர்கெல், கிறிஸ் மோரிஸ், ஜஸ்டின் ஆண்டாங், வெய்ன் பார்னெல், ராபின் பீட்டர்சன், ஆரோம் பாங்கிசோ, வெர்னன் பிலாண்டர், ஆண்ட்ரூ புட்டிக், காஜிசோ ரபடா, ரைலி ரூசோ, மிதகோசி ஷேஸி, டேல் ஸ்டெய்ன், லொன்வாபோ சொட்சோபி, மோர்னி வான் விக், டேவிட் வீஸ்.
http://tamil.thehindu.com/sports/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-30-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/article6658578.ece

 

Link to comment
Share on other sites

உலகக்கோப்பை: 30 வீரர்கள் கொண்ட உத்தேச இந்திய அணி வியாழக்கிழமை தேர்வு
 

 

2015 உலகக்கோப்பை போட்டிகளுக்கான 30 வீரர்கள் கொண்ட உத்தேச அணியைத் தேர்வு செய்ய வியாழக்கிழமை அணித் தேர்வுக்குழுவினர் மும்பையில் கூடுகின்றனர்.

நாளை, தேர்வுக்குழுத் தலைவர் சந்தீப் பாட்டீல் தலைமையிலான 5 நபர் தேர்வுக்குழு உறுப்பினர்கள் மதியம் 1 மணியளவில் உத்தேச அணி தேர்வுக்காக மும்பையில் கூடுகின்றனர் என்று பிசிசிஐ செயலர் சஞ்சய் படேல் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு தெரிவித்த்ள்ளார்.

 

ஜாகீர் கான், இர்பான் பத்தான் ஆகியோர் காயத்திலிருந்து மீண்டதாகத் தெரியவில்லை எனவே இவர்கள் பெயர் பட்டியலில் இடம்பெறாது என்று தெரிகிறது.

ஆனால் ஆஷிஷ் நெஹ்ரா பெயர் இடம்பெறலாம் என்று தெரிகிறது. யுவராஜ் சிங், கம்பீர், சேவாக், ஹர்பஜன், நெஹ்ரா ஆகியோர் 2011 உலகக் கோப்பையில் ஆடியவர்கள் ஆனால் தற்போது பெரிய அளவுக்கு பார்மில் இல்லை

 

32 வயதாகும் யுவ்ராஜ் சிங், 2011 உலகக்கோப்பை போட்டிகளின் தொடர் நாயகன், ஆனால் விஜய் ஹசாரே கோப்பையில் ஒரேயொரு அரைசதத்திற்கு பிறகு ஒன்றும் சோபிக்கவில்லை. தியோதர் கோப்பையில் இவர் ஆடிய ஒரு இன்னிங்ஸில் பெரிதாக ரன் எடுக்கவில்லை.

மேலும் ஆல்ரவுண்டர் அக்சர் படேல், ரவீந்திர ஜடேஜா இருக்கையில் யுவராஜ் கதை உலகக்கோப்பையைப் பொறுத்தவரை முடிந்தது என்றே கூறலாம். இவர் இனி டெஸ்ட் போட்டிகளில் விளையாட தன்னை முழுதும் தயார் படுத்திக் கொள்வது நலம்.

 

சேவாக், ஆஸ்திரேலிய பிட்ச்களில் பயன்படுவார் என்று கருத இடமுண்டு, மேலும், ரவி சாஸ்திரி, சேவாகின் மிகப்பெரிய விசிறி. 10 போட்டிகளில் 3 ஆட்டங்களில் மட்டுமே சேவாக் சிறப்பாக ஆடுகிறார் என்றால் கூட நான் அவரை அனைத்து போட்டிகளிலும் ஆடவைப்பேன் என்று ஒருமுறை ரவிசாஸ்திரி கூறியது நினைவுகூரத்தக்கது.

அதேபோல் ஹர்பஜன் சிங் அனுபவமா அல்லது பர்வேஸ் ரசூலின் இளம் திறமையா, இதில் எந்த முடிவுக்கு தேர்வுக்குழுவினர் வருவார்கள் என்பது அறுதியிட முடியாத ஒரு விஷயம்.

 

இலங்கைக்கு எதிராக விளையாடிய 14 வீரர்கள் மற்றும் தோனியுடன் 15 வீரர்கள் பெயர்கள் இடம்பெறுவது உறுதி, மீதி 15 வீரர்களில் மனோஜ் திவாரி, மணீஷ் பாண்டே, ராபின் உத்தப்பா, பாபா அபராஜித், மயங்க் அகர்வால், சூரியகுமார் யாதவ், விக்கெட் கீப்பர் நமன் ஓஜா, சஞ்சு சாம்சன் பவுலர்களில் பங்கஜ் சிங் ஆகியோர் தேர்வு செய்யப்பட வாய்ப்பிருக்கிறது

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-30-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81/article6658453.ece

Link to comment
Share on other sites

உலகக் கோப்பை உத்தேச இந்திய அணியில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு: சேவாக், யுவராஜ், கம்பீருக்கு இடமில்லை
 

 

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான 30 பேர் கொண்ட உத்தேச இந்திய அணி வியாழக்கிழமை அறிவிக்கப்பட்டது. அதில், மூத்த வீரர்களான யுவராஜ், சேவாக், கம்பீர், ஜாகீர் கான், ஹர்பஜன் உள்ளிட்டோர் இடம்பெறவில்லை.

கடந்த உலகக் கோப்பையைக் கைப்பற்றிய இந்திய அணியில் இருந்த 4 மூத்த வீரர்கள் மட்டுமே உத்தேச அணியில் இடம்பெற்றுள்ளனர்.

இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளித்து, பிசிசிஐ தேர்வுக் குழு தேர்ந்தெடுத்துள்ள 30 பேர் கொண்ட உத்தேச அணி விவரம்:

தோனி (கேப்டன்)

 

ஷிகர் தவண்

ரோஹித் சர்மா

ரஹானே

உத்தப்பா

விராட் கோலி

ரெய்னா

ராயுடு

கேதர் ஜாதவ்

மனோஜ் திவாரி

மணீஷ் பாண்டே

சாஹா

சஞ்சு சாம்சன்

அஸ்வின்

பர்வேஸ் ரசூல்

கார்ன் சர்மா

அமித் மிஸ்ரா

ரவீந்திர ஜடேஜா

அஷார் படேல்

இஷாந்த் சர்மா

புவனேஷ்வர் குமார்

முகமது சமி

உமேஷ் யாதவ்

வருண் ஆரோன்

ஆஷோக் திண்டா

ஸ்டுவர்டு பின்னி

மோஹித் சர்மா

குல்தீப் யாதவ்

முரளி விஜய்

தாவல் குல்கர்னி

கடந்த உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியிலிருந்து தோனி, கோலி, அஸ்வின் ரெய்னா ஆகிய நான்கு பேர் மட்டுமே தற்போதுள்ள உத்தேச அணியில் இடம்பெற்றுள்ளனர் என்பது கவனிக்கத்தக்கது.

கடந்த உலகக் கோப்பையில் பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் கலக்கி தொடர்நாயகன் விருதை வென்ற யுவராஜ் சிங், பார்மில் இல்லாததால் இந்திய அணியில் இடம்பிடிக்க முடியவில்லை. இதேபோல் சேவாக், கடந்த உலகக் கோப்பையில் அசத்தியிருந்தாலும் இப்போது அணியில் இல்லை. மூத்த பந்துவீச்சாளர்களான ஜாகீர் கான், ஹர்பஜன் உள்ளிட்டோருக்கும் வாய்ப்பு வழங்கப்படவில்லை.

 

http://tamil.thehindu.com/sports/உலகக்-கோப்பை-உத்தேச-இந்திய-அணியில்-இளம்-வீரர்களுக்கு-வாய்ப்பு-சேவாக்-யுவராஜ்-கம்பீருக்கு-இடமில்லை/article666168

Link to comment
Share on other sites

அனுபவத்தை விட ஃபார்ம் முக்கியம்: 5 மூத்த வீரர்கள் புறக்கணிப்பு குறித்து சுனில் கவாஸ்கர்
 

 

2015 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளுக்கான 30 வீரர்கள் கொண்ட பட்டியலில் சேவாக், கம்பீர், யுவராஜ், ஹர்பஜன், ஜாகீர் கான் இடம்பெறாதது பெரும் சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது.

இந்நிலையில் சுனில் கவாஸ்கர் இவர்கள் இடம்பெறாதது ஒன்றும் ஆச்சரியமல்ல, அனுபவத்தை விட நடப்பு ஃபார்ம் முக்கியம் என்று தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

“இது ஒன்றும் ஆச்சரியமானதல்ல. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இவர்கள் ஆடும் 11 வீரர்களில் இடம்பெறவில்லை. உள்நாட்டு கிரிக்கெட்டில் விக்கெட்டுகளை எடுத்து, ரன்களை அடித்திருந்தால் நிச்சயம் இடம்பெற்றிருப்பார்கள்.

ஆனால், கிரிக்கெட் இப்போது வேகம், விரைவு நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது இந்த நிலையில் அணிகள் பாசஞ்சரை நம்பமுடியாதல்லவா?

வெற்றி பெற்றேயாக வேண்டும் என்ற போட்டியில் அனுபவம் நிச்சயம் கைகொடுக்கும், அங்கு அனுபவம் பெருமதிப்புடையதாக இருக்கும். ஆனால், உண்மை என்னவெனில் (5 வீரர்கள்) ஃபார்மில் இல்லை என்பதை நாம் ஒப்புக் கொள்ள வேண்டும். 30 வீரர்கள் பட்டியலில் இடம்பெறவில்லை என்பது அவர்கள் இப்போதுள்ள ஃபார்மின்மையை சுட்டுவதாகும்.

இது பழக்கமில்லாததுதான், ஆனால் இதுதான் கிரிக்கெட் ஆட்டத்தின் இயல்பு. இப்படித்தான் கிரிக்கெட் ஆட்டம் வளர்ச்சி கண்டுள்ளது.

அதற்காக அவர்கள் கிரிக்கெட் வாழ்க்கை அஸ்தமனமாகி விட்டது என்று கூறுவதற்கில்லை. ஏனெனில் கிரிக்கெட் ஒரு வேடிக்கையான விளையாட்டு, முடிந்து விட்டது என்று நினைப்போம் ஆனால் அவர்கள் டன் கணக்கில் ரன்களை அடித்து மீண்டும் தங்களைத் தேர்வு செய்ய வலியுறுத்தலாம், யார் கணிக்க முடியும்?” என்கிறார் சுனில் கவாஸ்கர்.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-5-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D/article6667997.ece

Link to comment
Share on other sites

ஷோயப் மாலிக், கம்ரன் அக்மல், அஜ்மல் தேர்வு: உலகக்கோப்பை பாக். உத்தேச அணி அறிவிப்பு
 

 

2015 உலகக்கோப்பை போட்டிகளுக்கான 30 வீரர்கள் கொண்ட பாகிஸ்தான் அணியில் மூத்த வீரர்களான ஷோயப் மாலிக், கம்ரன் அக்மல், சயீத் அஜ்மல் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

சயீத் அஜ்மல் எதிர்காலம் கேள்வுக்குறியாகியுள்ள போதும் பாகிஸ்தான் அவரைத் தேர்வு செய்துள்ளது. ஏனெனில் ஜனவரி 7ஆம் தேதி இறுதி 15 வீரர்களை அறிவித்தால் போதும் என்பதால் அஜ்மல் அதற்குள் பந்து வீச்சை சரி செய்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அணி விவரம்:

மொகமது ஹபீஸ், அகமது ஷேஜாத், நசீர் ஜாம்ஷெட், ஷர்ஜீல் கான், சமி அஸ்லம், மிஸ்பா உல் ஹக், யூனிஸ் கான், ஆசாத் ஷபிக், அசார் அலி, ஷோயப் மக்சூத், பவாத் ஆலம், ஹாரிஸ் சொஹைல், ஷோயப் மாலிக், உமர் அக்மல், மொகமது இர்பான், வஹாப் ரியாஸ், ஜுனைத் கான், உமர் குல், ஈஷான் அடில், மொகமது தால்ஹா, சயீத் அஜ்மல், சுல்பிகர் பாபர், ராசா ஹசன், யாசிர் ஷா, ஷாகித் அப்ரீடி, அன்வர் அலி, பிலாவல் பட்டி, சொஹைல் தன்வீர், சர்பராஸ் அகமட், கம்ரன் அக்மல்.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%B7%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/article6668134.ece

Link to comment
Share on other sites

உலகக் கிண்ணம்: 30 பேர் கொண்ட இலங்கை அணி அறிவிப்பு

34ya4vl.jpg

2015 ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான 30 பேர் கொண்ட உத்தேச இலங்கை  அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தேச அணியில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பந்து வீசுவதற்கு தடைசெய்யப்பட்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணியின் சுழல் பந்துவீச்சாளர் சச்சித்ர சேனாநாயக்க மற்றும் அறிமுக வீரராக இடது கை பந்து வீச்சாளர் லகஷன் சந்தகன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

 

அறிவிக்கப்பட்டுள்ள உத்தேச அணி வீரர்கள் விவரம் வருமாறு:

ஏஞ்சலோ மெத்தியூஸ்(அணித் தலைவர்), திலகரட்ன டில்சான், லஹிரு திரிமன, குமார் சங்கக்கார, மஹேல ஜயவர்தன, குசேல் ஜனித் பெரேரா, உப்புல் தரங்க, திமுது கருணாரத்ன, தினேஸ் சந்திமால், டில்ருவன் பெரேரா, சீக்குககே பிரசன்ன, அஜந்த மெண்டிஸ், சச்சித்திர சேனாநாயக்க, தரிந்து கௌசல், ஜீவன் மெண்டிஸ்,  ரமித் ரம்புக்வெல, சுரங்க லக்மால், நுவான் குலசேகர, லசித் மாலிங்க, தம்மிக்க பிரசாட், சமிந்த ஹேரங்க, திசர பெரேரா, பர்விஸ் மஹ்ரூப், நுவான் பிரதீப், லஹிரு கமகே, லகஷன் சந்தகன், மேலதிக வீரர்களாக டில்கார பெர்ணன்டோ, சாமர கப்புகெதர ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

 

http://www.virakesari.lk/articles/2014/12/07/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-30-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ரமித் ரம்புகெல கிரிக்கெட் என்டால் என்னென்டு இவருக்குத் தெரியுமோ:lol:

Link to comment
Share on other sites

ரமித் ரம்புகெல கிரிக்கெட் என்டால் என்னென்டு இவருக்குத் தெரியுமோ :lol:

 

அவரது அப்பா கெகலிய ரம்புகெலவிக்கு தெரியுமாம் அதுதான் :icon_mrgreen::lol:

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

2015 உலகக் கோப்பை கிரிக்கெட் தூதராக சச்சின் டெண்டுல்கர் நியமனம்
 

 

ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் நடைபெறும் ஐசிசி 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடருக்கான தூதராக இந்திய நட்சத்திரம் சச்சின் டெண்டுல்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.

2011 உலகக்கோப்பை போட்டிகளுக்கான தூதராகவும் சச்சின் டெண்டுல்கர் பொறுப்பு வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

2015 பிப்.14-ஆம் தேதி முதல் மார்ச் 20-ஆம் தேதி வரை நடைபெறும் இந்த உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளுக்கு விளம்பரத் தூதராகவும், ஐசிசி-யின் பல்வேறு முயற்சிகளையும் சச்சின் டெண்டுல்க்ர் விளம்பரப்படுத்துவார்.

 

சச்சின் டெண்டுல்கர் 463 ஒருநாள் போட்டிகளிலும் 200 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடியுள்ளார். உலகக் கோப்பை போட்டிகளில் சச்சின் டெண்டுல்கர் 45 போட்டிகளில் 2,278 ரன்களை 56.95 என்ற சராசரியில் எடுத்து அதிக ரன்களுக்கான சாதனையை தன்வசம் வைத்துள்ளார் சச்சின்.

2003 உலகக் கோப்பை போட்டித் தொடரில் 673 ரன்கள் எடுத்து தொடர் நாயகன் விருதைப் பெற்றார் சச்சின்.

 

“தொடர்ந்து 2-வது முறையாக ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தூதராக நியமிக்கப்பட்டதை எனது மிகப்பெரிய கவுரவமாக கருதுகிறேன்.

கடந்த 6 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிய பிறகு இந்த உலகக் கோப்பை எனக்கு வித்தியாசமான அனுபவமாக இருக்கும், ஏனெனில் நான் போட்டிகளை பார்வையிடுபவனாக இருப்பேன். 1987-ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டிகளின் போது பந்துகள் எடுத்துப் போடும் சிறுவனாக இருந்தேன், அதன் பிறகு இப்போது விளையாடாமல் போட்டிகளில் வேறு விதமாக பங்கேற்கிறேன்.

 

ஒரு சாம்பியன அணி உலகக் கோப்பையை வென்று கோப்பையைத் தூக்கும் போது அது பல இளம் தலைமுறையினருக்கு உத்வேகத்தை அளிக்கும். இலக்கை நோக்கி பயணிக்கும் கனவை அவர்களிடத்தில் வித்திடும். நானும் 22 ஆண்டுகளாக இத்தகைய கனவை துரத்தி கடைசியில் 2011-ல் பூர்த்தி அடைந்தேன்” என்றார் சச்சின் டெண்டுல்கர்.

 

http://tamil.thehindu.com/sports/2015-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/article6715749.ece

Link to comment
Share on other sites

உலகக் கோப்பை கிரிக்கெட்: காதலியை அழைத்து செல்ல வீரர்களுக்கு தடை!
 

koli-anushka.jpgபுதுடெல்லி: உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்காக சுற்றுப்பயணம் மேற்கொள்ளும்போது, தங்களது காதலியை உடன் அழைத்து செல்ல இந்திய வீரர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

தற்போது, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து, 4 டெஸ்ட் மற்றும் 3 நாடுகள் போட்டியில் கலந்து கொண்டுள்ள இந்திய வீரர்களுக்கு, தங்கள் மனைவியை உடன் அழைத்து செல்ல அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், தங்களது காதலியை அழைத்து செல்ல தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், 11வது உலகக் கோப்பை கிரிக்கெட் (50 ஓவர்) போட்டி நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் பிப்ரவரி 14ஆம் தேதி தொடங்கி மார்ச் 29ஆம் தேதி வரை நடக்கிறது. இதனால், தொடர்ந்து வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் இருப்பதால், இந்திய கிரிக்கெட் வீரர்கள் 4 மாதங்களுக்கு மேலாக தங்களது குடும்பத்தினரை பிரிந்து இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த சுற்றுப்பயணத்தின்போதும் இந்திய கிரிக்கெட் வீரர்கள் தங்களுடன் மனைவியை அழைத்து செல்லலாம் எனவும், தங்களது காதலியை அழைத்து செல்லக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால், இந்திய துணை கேப்டன் விராட் கோலியின் காதலியும், இந்தி நடிகையுமான அனுஷ்கா சர்மா, கோலியுடன் இணைந்து இருக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது விராட்கோலி, தனது காதலி அனுஷ்கா சர்மாவுடன் ஜோடியாக சுற்றி திரிந்தார். இதனால் அவரது பேட்டிங் பாதிக்கப்பட்டதாக கடும் விமர்சனத்துக்கு உள்ளானார் என்பது குறிப்பிடத்தக்கது. 

http://news.vikatan.com/article.php?module=news&aid=36486

 

Link to comment
Share on other sites

காதலிக்கு சொந்த பணத்தில் பயண சீட்டுகளை எடுத்து அண்மையில் உள்ள ஹோட்டேல் ஒன்றில் தங்க வைத்து free time ல் அவருடன் சுற்றலாமே. அப்படி செய்பவனே உண்மையான காதலன். அதை தடுக்கமுடியாதே.

Link to comment
Share on other sites

காதலியில் பயிற்சி செய்ய ஆரம்பித்துவிடுவார்கள் என்கிற பயம்தான் காரணம்..! :D

Link to comment
Share on other sites

உலகக்கிண்ணத்தில் விளையாடுவேன்: கிளார்க்

சத்திர சிகிச்சை செய்துள்ள மைக்கல் கிளார்க், தான் உலகக்கிண்ண தொடரில் விளையாட உடற் தகுதி பெற்றுவிடுவேன் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார். அவுஸ்திரேலியா பத்திரிகையில் அவர் எழுதிவரும் பத்தியில் இதனை தெரிவித்துள்ளார்.

இந்தியா அணியுடனான முதற் டெஸ்ட் போட்டியில் தசைப் பிடிப்பு ஏற்பட்டத்தை அடுத்து, தொடரில் இருந்து விலகி சத்திர சிகிச்சை மேற்கொண்டார். அப்போது தன்னால் இனி கிரிக்கெட் விளையாட முடியும் என்று தான் நம்பவில்லை எனவும், அந்த போட்டியே தன் கடைசிப் போட்டியாக அமைய வாய்ப்புக்கள் உள்ளதாகவும் மைக்கல் கிளார்க் தெரிவித்து இருந்தார். இருப்பினும், தனது காயம் சிறப்பாக குணமடைந்து வருவதாகவும், தான் நடக்கும் போது எந்த வலிகளையும் உணரவில்லை எனவும், எனவே மிக விரைவில் தன் காயம் சுகமடைந்து விடும் எனவும், தன்னால் உலகக்கிண்ண தொடரில் விளையாட முடியும் எனவும் கிளார்க் கூறியுள்ளார்.

 

இந்த நிலையில் நாளை ஆரம்பிக்கவுள்ள இந்தியா - அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் நேர்முக வர்ணனையாளராக மைக்கல் கிளார்க் செயற்படவுள்ளார். இது ஒரு வித்தியாசமான அனுபவமாக தனுக்கு அமையவுள்ளது என கூறியுள்ள கிளார்க், வீரர்களுடன் இருந்து போட்டியை பார்பதை விட, வர்ணனை அறையில் இருந்து பார்ப்பது வித்தியாசமாக இருக்கும் எனவும் கூறியுள்ளார்.

 

- See more at: http://www.tamilmirror.lk/136407#sthash.PM8EqOGy.dpuf

Link to comment
Share on other sites

‘அஜ்மல் விலகலால் பாகிஸ்தானுக்கு பாதிப்பு’
 

 

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியிலிருந்து சுழற்பந்து வீச்சாளர் சயீத் அஜ்மல் விலகியிருப்பது பாகிஸ்தான் அணிக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்று முன்னாள் வீரர்சோயிப் அக்தர் கூறியுள்ளார். பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் சயீத் அஜ்மல் பிப்ரவரியில் தொடங்கும் உலகக்கோப்பையிலிருந்து விலகியுள்ளார்.

 

இதுபற்றி சோயிப் அக்தர் கூறும்போது, “முழங்கையில் உள்ள குறைபாடு காரணமாக அஜ்மலால் விதிமுறைக்கு உட்பட்டு பந்துவீச முடியவில்லை. அஜ்மல் உலகக்கோப்பையில் கலந்துகொள்ள முடியாத காரணத்தால் பாகிஸ்தான் அணிக்கு நிச்சயம் பாதிப்பு ஏற்படும்” என்றார்.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%85%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/article6734907.ece

Link to comment
Share on other sites

உலக கோப்பை: ஜடேஜாவுக்குப் பதில் யுவராஜ்?
ஜனவரி 03, 2015.

 

புதுடில்லி: உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் ‘ஆல் ரவுண்டர்’ ஜடேஜா தேர்வு செய்யப்படுவாரா என, சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இவருக்குப் பதில் ஜடேஜா தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மண்ணில் 11வது உலக கோப்பை தொடர் வரும் பிப்., 14 முதல் மார்ச் 29 வரை நடக்கவுள்ளது. இதன் 30 பேர் கொண்ட உத்தேச இந்திய அணியில் இடம் பெற்றிருந்தவர் ‘ஆல் ரவுண்டர்’ ஜடேஜா, 26. தற்போதைய ஆஸ்திரேலிய தொடரில் இடம் பெற்றிருந்த இவர், தோள்பட்டை காயத்தால் ஒரு போட்டியில் கூட பங்கேற்காமல் பாதியில் திரும்பினார்.      

 

இவர், சென்னையின் போரூரில் உள்ள தனியார் மையத்தில் மறுவாழ்வு பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். இதனிடையே, உலக கோப்பை, ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ள முத்தரப்பு ஒருநாள் தொடருக்கான இந்திய அணித் தேர்வு வரும் 6ம் தேதி நடக்கிறது. இதற்கு முன் ஜடேஜா குணமடைவது சந்தேகமாக உள்ளது.     

 

இதனால், இவருக்குப் பதில், சமீபத்திய இலங்கைத் தொடரில் சிறப்பாக செயல்பட்ட மற்றொரு ‘ஆல் ரவுண்டர்’ அக்சர் படேல், 20, தேர்வு செய்யப்படலாம் எனத் தெரிகிறது. அல்லது உத்தேச அணியில் இடம் பெறாத மற்றொரு அனுபவ ‘ஆல் ரவுண்டர்’ யுவராஜ் சிங் சேர்க்கப்பட்டாலும் ஆச்சரியம் இல்லை. ஏனெனில், தற்போது நடக்கும் ரஞ்சி கோப்பை தொடரில் ‘ஹாட்ரிக்’ சதம் அடித்து அசத்தல் ‘பார்மில்’ உள்ளார்.

 

http://sports.dinamalar.com/2015/01/1420299999/WorldCupCricketJadejaYuvrajIndia.html

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • காஸா போர்: ஐ.நா தீர்மானத்தால் இஸ்ரேல் தனிமைப்படுத்தப்படுகிறதா? அமெரிக்கா கூறுவது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி கட்டுரை தகவல் எழுதியவர், டேவிட் கிரிட்டன் பதவி, பிபிசி நியூஸ் 7 மணி நேரங்களுக்கு முன்னர் காஸாவில் இஸ்ரேலுடனான போர் நிறுத்தத்திற்கான தற்போதைய முன்மொழிவை ஹமாஸ் நிராகரித்துள்ளதாக இஸ்ரேல் கூறியுள்ளது. உடனடி போர் நிறுத்தம் கோரிய ஐ.நா பாதுகாப்பு சபையின் தீர்மானம் 'சேதத்தை' ஏற்படுத்தியுள்ளது என்பதை இது காட்டுகிறது. பாலத்தீன ஆயுதக் குழுவின் ஏற்க முடியாத கோரிக்கைகளுக்கு இஸ்ரேல் அடிபணியாது என்று பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகுவின் அலுவலகம் தெரிவித்துள்ளது. காஸாவில் இருந்து இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் முழுமையாக வெளியேற வேண்டும் என்றும், போரை நிறுத்தவும் ஹமாஸ் கோரிக்கை விடுத்துள்ளதாக இஸ்ரேல் கூறுகிறது. அதேநேரம் இஸ்ரேலின் அறிக்கை கிட்டத்தட்ட எல்லா விஷயங்களிலும் தவறானது என்று அமெரிக்கா கூறியுள்ளது. திங்கட்கிழமை ஐ.நா. பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பு நடப்பதற்கு முன்னதாகவே ஹமாஸின் அறிக்கை தயாரிக்கப்பட்டதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் வலியுறுத்தியுள்ளார். ஹமாஸ் ராணுவப் பிரிவின் துணைத் தலைவர் மர்வான் இசா இரண்டு வாரங்களுக்கு முன்னர் நுசைரத் அகதிகள் முகாமின் சுரங்கப்பாதை வளாகத்தில் நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டதை உறுதி செய்திருப்பதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது.   24 மணிநேரத்தில் 81 பேர் பலி பட மூலாதாரம்,REUTERS “உளவுத்துறை அறிக்கைகள் அனைத்தையும் நாங்கள் சரிபார்த்தோம். மார்வான் இசா வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்டார்,” என்று இதுகுறித்து இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி தெரிவித்தார். இஸ்ரேல் தெரிவிப்பதில் தனக்கு 'நம்பிக்கை இல்லை என்றும் அந்த அமைப்பின் ராணுவத் தலைமை மட்டுமே இதுகுறித்து 'இறுதியாக ஏதாவது சொல்லும்' என்றும் ஹமாஸ் அரசியல் தலைவரான இஸாத் அல் ரிஷ்க் கூறுகிறார். இசா இந்தக் குழுவின் 'மூன்றாம் நிலையில் இருக்கும் தலைவர்' என்றும், அக்டோபர் 7ஆம் தேதி தெற்கு இஸ்ரேல் மீது நடத்தப்பட்ட தாக்குதலின் 'முக்கிய ஏற்பாட்டாளர்களில் ஒருவர்' அவர் என்றும் ரியர் அட்மிரல் ஹகாரி கூறியுள்ளார். இஸ்ரேல் மீதான ஹமாஸ் தாக்குதலில், 1,200 பேர் கொல்லப்பட்டனர், 253 பேர் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். இதைத் தொடர்ந்து இஸ்ரேல் காஸாவில் பதில் தாக்குதல் மேற்கொண்டது. காஸாவில் இதுவரை 32,400க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளதாகவும், கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 81 பேர் உயிரிழந்துள்ளதாகவும் ஹமாஸ் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. காஸாவில் போர் நிறுத்த ஒப்பந்தம் தொடர்பாக முட்டுக்கட்டை நிலவி வருகிறது. காஸாவில் உடனடியாக போர் நிறுத்தத்தை அமல்படுத்த ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் முதன்முறையாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதற்கு எதிராக இஸ்ரேல் கடும் எதிர்வினையைப் பதிவு செய்துள்ளது.   தீர்மானத்தில் ஹமாஸை கண்டனம் செய்வது பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்பின் போது அமெரிக்கா வாக்களிக்கவில்லை. இந்தத் தீர்மானத்திற்கு ஆதரவாக பிரிட்டன் உட்பட 14 பாதுகாப்பு சபை உறுப்பினர்கள் வாக்களித்தனர். போர் நிறுத்தம், மீதமுள்ள பிணைக் கைதிகளை நிபந்தனையின்றி விடுவித்தல் மற்றும் மனிதாபிமான உதவியை விரிவுபடுத்துதல் ஆகியவை இந்தத் தீர்மானத்தில் அடங்கும். இஸ்ரேலின் நெருங்கிய கூட்டாளியும் ராணுவ ஆதரவாளருமான அமெரிக்கா, அக்டோபர் 7 தாக்குதலுக்கு ஹமாஸை கண்டிக்கத் தவறிய தீர்மானத்தை விமர்சித்துள்ளது. இருப்பினும் இஸ்ரேலின் போர் முறைகள் தொடர்பாக அதிகரித்து வரும் கோபம் காரணமாக இந்தத் தீர்மானத்தின் மீது வாக்களிப்பதில் இருந்து அமெரிக்கா விலகிக் கொண்டது. ஆனால் அமெரிக்கா இந்தப் போரின் முக்கிய நோக்கங்களுக்கு முழு ஆதரவளிப்பதாகக் கூறியது. இந்த முன்மொழிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இஸ்ரேல், வாஷிங்டனுக்கான தனது தூதுக்குழுவின் பயணத்தை ரத்து செய்துள்ளது. காஸாவின் தெற்கு நகரமான ரஃபாவில் தரைவழித் தாக்குதலை நடத்துவதற்கான திட்டத்தைப் பற்றி விவாதிக்க தூதுக்குழு அங்கு செல்வதாக இருந்தது. தற்போது 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் ரஃபாவில் தஞ்சமடைந்துள்ளனர். முழு அளவிலான தாக்குதல் மனித பேரழிவாக நிரூபிக்கப்படலாம் என்று அமெரிக்கா எச்சரித்துள்ளது. பின்னர் ஹமாஸ் போர் நிறுத்த திட்டத்தை நிராகரித்து அறிக்கை வெளியிட்டது. அமெரிக்கா, கத்தார் மற்றும் எகிப்து நாடுகளின் மத்தியஸ்தத்துடன் தோஹாவில் நடைபெற்ற மறைமுக பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்தத் திட்டம் உருவானது. "நிரந்தர போர் நிறுத்தத்துடன்" காஸாவில் இருந்து இஸ்ரேலிய படைகள் முற்றிலுமாக வெளியேறவும், இடம்பெயர்ந்த பாலத்தீனியர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பவும் அழைப்பு விடுத்த தன் அசல் கோரிக்கையைத் தான் பற்றி நிற்பதாக ஹமாஸ் கூறியது. ஹமாஸின் நிலைப்பாடு, 'பேச்சுவார்த்தை மூலமான ஒப்பந்தத்தில் அதற்கு எந்த ஆர்வமும் இல்லை என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. கூடவே ஐ.நா. பாதுகாப்பு சபையின் தீர்மானத்தால் ஏற்பட்ட சேதத்தை உறுதிப்படுத்துகிறது,” என்று செவ்வாய்கிழமை காலை இஸ்ரேலிய பிரதம மந்திரி அலுவலகம் தெரிவித்தது. ஹமாஸின் திசை திருப்பும் கோரிக்கைகளை இஸ்ரேல் ஏற்றுக் கொள்ளாது என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. "ஹமாஸின் ராணுவ மற்றும் அரசாங்க திறன்களை அழித்தல், எல்லா பிணைக் கைதிகளையும் விடுவித்தல், காஸா, இஸ்ரேலிய மக்களுக்கு எதிர்கால அச்சுறுத்தலை ஏற்படுத்தாததை உறுதி செய்தல் போன்றவற்றை உள்ளடக்கிய தனது போர் நோக்கங்களை இஸ்ரேல் தொடர்ந்து அடையும்," என்றும் அறிக்கை தெரிவிக்கிறது.   இஸ்ரேலின் பேச்சுவார்த்தைக் குழு திரும்பிவிட்ட செய்தி பட மூலாதாரம்,EPA-EFE/REX/SHUTTERSTOCK அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் மேத்யூ மில்லர் இந்த விமர்சனங்களை நிராகரித்துள்ளார். "இந்த அறிக்கை கிட்டத்தட்ட எல்லா வகையிலும் தவறானது. பிணைக் கைதிகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கு இது நியாயம் இல்லாதது" என்று அவர் வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் கூறினார்.“செய்தி அறிக்கைகள் மூலம் ஹமாஸின் எதிர்வினை பற்றிய தகவல்கள் பகிரங்கமாயின. ஆனால் அவர்களது பதிலின் உண்மையான சாராம்சம் இதுவல்ல. இந்த எதிர்வினை ஐநா பாதுகாப்பு சபையில் வாக்கெடுப்புக்கு முன் தயாரிக்கப்பட்து, அதற்குப் பிறகு அல்ல என்று என்னால் கூற முடியும்,” என்றார் அவர். கத்தாரின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாஜித் அல்-அன்சாரி தோஹாவில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், மறைமுகப் பேச்சுவார்த்தைகள் நிறுத்தப்படவில்லை, அவை தொடர்கின்றன என்றார். "பேச்சுவார்த்தைகளுக்கான கால அட்டவணை எதுவும் இல்லை. ஆனால் நாங்கள் எங்கள் கூட்டாளர்களுடன் பேச்சுவார்த்தை முயற்சிகளைத் தொடர்ந்து செய்து வருகிறோம்," என்று அவர் கூறினார். ஆனால் 10 நாட்கள் பேச்சுவார்த்தைக்குப் பிறகு இஸ்ரேல் தனது பேச்சுவார்த்தைக் குழுவைத் திரும்ப அழைத்ததாக இஸ்ரேலிய அதிகாரிகளை மேற்கோள் காட்டி இஸ்ரேலிய ஊடகங்களும் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையும் தெரிவித்துள்ளன. இரானுக்கு பயணம் மேற்கொண்ட ஹமாஸ் அரசியல் தலைவர் இஸ்மாயில் ஹனியா, இஸ்ரேல் முன்னெப்போதும் இல்லாத வகையில் அரசியல் தனிமையை எதிர்கொள்வதை ஐ.நா.பாதுகாப்பு சபையின் தீர்மானம் காட்டுவதாகத் தெரிவித்தார். கடந்த ஆண்டு நவம்பர் மாத இறுதியில் ஒரு வார கால போர் நிறுத்தத்தின் போது இஸ்ரேலிய சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த சுமார் 240 பாலத்தீன கைதிகள் 105 இஸ்ரேலிய பிணைக் கைதிகளுக்கு ஈடாக விடுவிக்கப்பட்டனர். ஹமாஸ் நிராகரித்த புதிய ஒப்பந்தம், ஆறு வாரங்களுக்கு போர் நிறுத்தத்தை முன்மொழிந்ததாகக் கூறப்படுகிறது. கூடவே 800 பாலத்தீன கைதிகளுக்கு ஈடாக ஹமாஸால் பிடிக்கப்பட்ட 40 இஸ்ரேலிய பிணைக் கைதிகளை விடுவிப்பதும் இதில் அடங்கும். ஆனால் காஸாவில் போரில் தோல்வியை ஏற்கும் அறிகுறி இன்னும் தெரியவில்லை. சமீபத்திய இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் பல டஜன் பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாகக் கூறப்படுகிறது. ரஃபாவின் புறநகரில் உள்ள குடியிருப்பு கட்டடத்தின் மீது நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் ஒன்பது குழந்தைகள் உட்பட குறைந்தது 18 பேர் கொல்லப்பட்டதாக பாலத்தீன ஊடகங்களும் உள்ளூர் சுகாதார ஊழியர்களும் கூறுகின்றனர். முசாபா பகுதியில் உள்ள அபு நக்கீராவின் வீட்டில் டஜன் கணக்கான இடம்பெயர்ந்த மக்கள் தஞ்சம் அடைந்திருந்தனர் என்றும் கூறப்பட்டது. காஸா நகரில் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு அருகே வான்வழித் தாக்குதலில் 30 பேர் கொல்லப்பட்டதாக வடக்கு காஸாவில் உள்ள அபு ஹசிரா குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் தெரிவித்தனர். கடந்த 24 மணிநேரத்தில் 60 இலக்குகளைக் குறிவைத்ததாகவும், 'பயங்கரவாத சுரங்கப்பாதைகள், பயங்கரவாத உள்கட்டமைப்புகள் மற்றும் ராணுவ உள்கட்டமைப்புகள்' இதில் அடங்கும் என்றும் இஸ்ரேலிய ராணுவம் செவ்வாய்கிழமை காலை தெரிவித்தது. இஸ்ரேலிய பாதுகாப்புப் படையினர் 'அல்-ஷிஃபா மருத்துவமனை பகுதியில் துல்லியமான தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்' என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.   மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும் போது 18 பேர் கொல்லப்பட்டனர் பட மூலாதாரம்,REUTERS கடுமையான சண்டை காரணமாக நோயாளிகள், சுகாதாரப் பணியாளர்கள் மற்றும் இடம்பெயர்ந்த மக்கள் ஆபத்தில் இருப்பதாக பாலத்தீனர்கள் மற்றும் உதவிக் குழுக்கள் தெரிவித்துள்ளன. 175 'பயங்கரவாதிகள்' கொல்லப்பட்டுள்ளதாகவும், பொதுமக்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என்றும் ராணுவம் தெரிவித்துள்ளது. வடக்கு காஸாவில் விமானத்தில் இருந்து போடப்பட்ட மனிதாபிமான உதவிகளைச் சேகரிக்கும்போது 18 பாலத்தீனர்கள் கொல்லப்பட்டதாக காஸாவில் உள்ள ஹமாஸின் அரசு ஊடக அலுவலகம் செவ்வாயன்று கூறியது. உணவுப் பொட்டலங்களைச் சேகரிக்கும்போது 12 பேர் கடலில் மூழ்கி இறந்தனர். அதேநேரம் பொருட்களை எடுக்கும்போது ஏற்பட்ட ' கூட்ட நெரிசலில்' சிக்கி ஆறு பேர் இறந்தனர் என்று கூறப்பட்டது. இந்த அறிக்கையில் மேலதிக தகவல்கள் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. திங்களன்று வடக்கு நகரமான பைட் லாஹியாவில் கடற்கரைக்கு அருகே ஏர் டிராப்பின் போது குறைந்தது ஒரு நபராவது நீரில் மூழ்கியதை வீடியோ காட்சிகள் காட்டின. திங்களன்று அமெரிக்க விமானம் வடக்கு காஸாவில் 18 மனிதாபிமான உதவிப் பொட்டலங்களைப் போட்டதாக பென்டகனை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் தெரிவித்தது. ஆனால் பாராசூட்டில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அவை தண்ணீருக்குள் விழுந்தன. ஆனால் யாரும் உயிரிழந்ததை உறுதிப்படுத்த முடியவில்லை. இஸ்ரேலிய பிணைக் கைதி யூரியல் பரூச் கொல்லப்பட்டதாகவும், அவரது உடல் ஹமாஸிடம் இருப்பதாகவும் இஸ்ரேலிய ராணுவம் அவரது குடும்பத்திடம் கூறியதாக பிணைக்கைதிகள் மற்றும் காணாமல் போன குடும்பங்களின் மன்றம் தெரிவிக்கிறது. 35 வயதான, இரண்டு பிள்ளைகளின் தந்தையான பரூச், அக்டோபர் 7ஆம் தேதி சூப்பர்நோவா இசை விழாவின் போது காயமடைந்தார். பின்னர் அவர் கடத்தப்பட்டார். அதே நேரத்தில் காஸாவில் ஒரு காவலர் துப்பாக்கி முனையில் தன்னை பாலியல் வன்புணர்வு செய்ததாக நவம்பரில் விடுவிக்கப்பட்ட ஒரு பெண் பிணைக் கைதி நியூயார்க் டைம்ஸ் செய்தித்தாளிடம் கூறினார். நாற்பது வயதான அமித் சுசானா தான் சிறைப்பிடிக்கப்பட்ட போது பாலியல் வன்முறைக்கு ஆளானதாகத் தெரிவித்ததாக செய்தித்தாள் குறிப்பிடுகிறது. பிணைக் கைதிகள் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டதற்கான தெளிவான மற்றும் உறுதியான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாகவும், "அத்தகைய வன்முறை தொடரக்கூடும் என்று நம்புவதற்கு நியாயமான காரணங்கள் உள்ளன," என்றும் இந்த மாதத் தொடக்கத்தில் ஐ.நா குழு கூறியது. https://www.bbc.com/tamil/articles/cv2y4zzp76mo
    • பெரிய‌வ‌ரே நாம் த‌மிழ‌ர் க‌ட்சி 2021 ச‌ட்ட‌ ம‌ன்ற‌ தேர்த‌லில் பெற்ற‌ ஓட்டு ச‌த‌ வீத‌ம் 6:75 8ச‌த‌வீத‌ வாக்கு எடுத்து இருந்தா அங்கிக‌ரிக்க‌ ப‌ட்ட‌ க‌ட்சியாய் மாறி இருக்கும்...............இது கூட‌ தெரிய‌ வில்லை என்றால் உங்க‌ளுக்கு நாம் த‌மிழ‌ர் க‌ட்சியின் கொள்கை எப்ப‌டி தெரியும்...........சீமானுக்கு எதிரா எழுதுப‌வ‌ர்க‌ளின் க‌ருத்தை வாசிப்ப‌தில் உங்க‌ளுக்கு எங்கையோ த‌னி சுக‌ம் போல் அது தான் குறுக்க‌ ம‌றுக்க‌ எழுதுறீங்க‌ள்😁😜..............
    • 😀..... மிக்க நன்றி. இல்லை, நான் இங்கு முந்தி எழுதவில்லை. இந்த மாதம் முதலாம் திகதி தான் நான் இங்கு இணைந்தேன். இது சத்தியமான உண்மை. ஆனால் பல வருடங்களாக களத்தை வாசித்து வருகின்றேன்.
    • Courtesy: Mossad   இவ்விரு கருத்துருவாக்கங்களும் தற்கால இலங்கைத் தமிழ் அரசியல்ச் சூழலில் சுமந்திரன் என்ற தமிழரசுச் கட்சியின் முக்கிய பிரமுகருக்கு உரித்துடையவை. இருபதாம் நூற்றாண்டின் இறுதிக் காலப்பகுதிகளில் மென் வலு என்ற கருத்துடைவாத வார்த்தை ஜோசப் நையலினால் பிரபலப்படுத்தப்பட்டாலும் இருபத்தியோராம் நூற்றாண்டில் சர்வதேச உறவுகளை வடிவமைக்கவும், மேம்படுத்தவும், கையாளவும் தங்களது இலக்குகளை அடைவதற்கான வகையில் பிரயோகிக்கப்படும் ஒரு நியாயப்படுத்தல் பதமாக மாறி முக்கியத்துவம் பெற்றிருக்கின்றது. இவ் வார்த்தைப்பதமானது அரசியலில் பிரயோகிக்கப்படும் சந்தர்ப்பத்தில் குறித்த தளத்திற்கு ஒரு கொள்கைப் பிரகடனத்தின்பால் இறமையுடன் செயற்படும் ஒரு அங்கீகரிக்கப்பட்ட அரசாக அமைந்திருக்க வேண்டும். அரசுக்கு மாத்திரமே ராஜதந்திர நடவடிக்கைகள் மற்றும் நகர்வுகளை மேற்கொள்ள முடியும். பூகோள அரசியலின் நகர்வுகளுக்கு அமைவான நகர்வுகளை நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்ட இலக்கினை அடைவதற்காக மேற்கொள்ள முடியும். வெவ்வேறுபட்ட இரு வேறு நிலைப்பாட்டை உடைய அதிகார இறமைத் தளங்கள் தான் ஒன்றின் மீது மற்றொன்று மென்வலுவைப் பிரயோகிக்க முடியும். தொடர்தேர்ச்சியாக கால ஓட்டத்திற்கு அமைவாக மாற்றம்பெறும் தேவைகளை அடைவதில் பிரயோகிக்கப்படும் நெகிழ்ச்சியைக் குறிக்கும் ஒரு பதமாக மென்வலுப்பிரயோகம் என்பது அர்த்தப்படுத்தப்பட முடியும்.   அரசியலில் மென் வலுவைப் பிரயோகத்திற்கு உட்படுத்துவதற்கு இறமையுடைய மக்கள் ஆணையைப்பெற்ற ஒரு தளம் இன்றியமையாதது. அத் தளத்தின் இலக்குகள் மற்றும் தேவைகள் என்பன கால மாற்றத்திற்கு உட்பட்டவைகளாகவும் காலத்திற்கு காலம் மாறிகளாகவும் காணப்படுதல் அவசியமானது. கட்சிகள் மென்வலுவைப் பாவிக்க முடியுமா என்றதொரு ஆழமான கேள்விவரும் நிலையில், ஒரு நாட்டுக்குள் இருக்கும் கட்சிகள் இயல்பான நிலையில் ஒன்றுடன் ஒன்று மென்வலுவில் அணுக முடியாது. ஒரு கட்சி தன்னுடன் சம பயணத்தில் இருக்கும் பிறிதொரு கட்சியுடன் மென்வலுவில் அணுகுகின்றது என்றால் அணுகப்படும் கட்சியை விடவும் அணுகும் கட்சி மிகவும் நெய்மையான நிலையில் இருப்பதையும் கொள்கைகள் குன்றி வீரியம் குறைந்து வழியற்ற நிலையில் பிறிதொரு நிலைப்பாடுடைய கட்சியை தனது நலனுக்காக ஆதரிக்கின்றது என்ற கருத்து மேலோங்கலும், அணுகும் கட்சிக்கு கொள்கைகள், கோட்பாடுகள் என்பன நிலையானதாக இருக்க முடியாது என்பதையும் வெளிப்படுத்துவதாக அமையும். தமிழரசுக்கட்சியில் மென்வலு அரசியல் முன்னெடுப்புக்கள் தொடர்பில் பேசும்போது சுமந்திரனைத் தவிர்த்து ஒருவிடயங்களையும் பேச முடியாது. காரணம் தமிழரசுக் கட்சியில் மென்வலு அரசியலின் பிதாமகர் சுமந்திரனே ஆவர். தமிழரசுக் கட்சியானது அல்லது அன்றைய தமிழ்த்தேசியக் கூட்டமைப்பானது மென்வலு அரசியல் பிரயோகத்தினை இலங்கையின் அரசாங்கத்துடன் மேற்கொண்டிருந்தது. இங்கே தான் விடயச் சிக்கல்கள் உருவாகின்றது. இலங்கை அரசுடன் யாருக்கு மென்வலு நகர்வை மேற்கொள்ள முடியும்? இரு தரப்பும் வென்று அரசு அமைக்கும் ஒரே நோக்கத்திற்காக தேர்தலில் போட்டியிடுகின்றார்கள், ஒவ்வொரு கட்சியும் கூட்டணியும் தனித்துவமான தங்களது பண்புகளைக் கூறி வாக்குச்சேகரிக்கின்றார்கள். ஒரு தரப்பினர் ஆட்சியமைக்கின்றார்கள், மற்றைய தரப்புக்கள் எதிர்த்தரப்பு ஆகின்றார்கள். எதிர்த்தரப்பு ஆன தழிழரசுக்கட்சி அல்லது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு ஆளுந்தரப்புடன் ஏதோவொரு சந்தர்ப்பத்தில் பொருத்திக்கொள்ளும் இணக்கங்களுக்கு மென்வலு அணுகுமுறை என அர்த்தம் கற்பிப்பதை விடவும் டக்ளஸ் தேவானந்தாவின் கட்சி அமைக்கப்பட்ட அரசாங்கத்துடன் இணைந்து இணக்க அரசியல் என்ற பதத்தினை பாவித்துக்கொண்டு பயணிப்பது நேர்மையானதும் உண்மையானதும் ஆகின்றது.   அரசியல் கட்சிகள் மென்வலு அரசியலைப் பிரயோகிப்பதை தெளிவாக வரையறுப்பதாயின், தேர்தலில் விஞ்ஞாபன ரீதியாக முன்வைக்கப்பட்ட விடயதானங்களை அப்பட்டமாக மீறி வாக்களித்த வாக்காளர்களையும் கட்சியின் தொண்டர்களையும் ஏமாற்றி அவ் வாக்குக்களால் ஆட்சியேறிய வேட்பாளர்கள் சுயதேவைக்காக தீர்மானங்களை மாற்றி அவற்றிற்கு அர்த்தம் கற்பிக்க பிரயோகிக்கும் ஒரு கவசவாய்க்கியமே மென்வலு என வரையறுக்கலாம். தமிழரசுக் கட்சி யார்மீது மென்வலு பிரயோகித்திருக்க முடியும்? ஒரு கட்சி தன்னுடைய கொள்கைகள், கோட்பாடுகள் மற்றும் பிரகடனங்களுடன் இணங்கிப்போகின்ற நிலையுடன் ஏதோ ஒரு பொது சிந்தனைக்காக இணைந்துள்ள ஒரு கட்சியுடன் அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கட்சிக் கூட்டணியுடன் ஒரு நெகிழ்ச்சித் தன்மையான அணுகு முறைகளை கையாள முனைவதுதான் மென்வலு அணுகுமுறையாகும். மாறாக கட்சிகள் என்ற நிலையில் இருந்து ஆட்சியாளர்களானபின்னர் அது அரசாங்கம் என அழைப்படும். இவ்வாறு அரசாங்கத்துடன் மென்வலு அணுகுமுறை என கூறி ஒட்டிக்கொள்வது நிபந்தனைகள் அற்ற ஆதரவு என்பதே நிதர்சனமானது. இதற்கு பிரதியுபகாரமாக ஆட்சியாளர்கள் தங்களை தக்கவைப்பதற்காக இவ்வாறான கட்சிகளுக்கு பல சலுகைகளை வழங்கவோ அல்லது மென்வலுதாரர்கள் பெற்றுக்கொள்ளவோமுடியும். தமிழரசுக் கட்சியானது தான் அடங்கு கூட்டமைப்பாக உள்ள ஏனைய கட்சிகளுடனோ அல்லது கூட்டணிகளுடனோதான் மென்வலு அணுகுமுறையைக் கையாள முடியும். சற்று ஆழமாக நோக்கின் தமிழ் தேசிய கூட்டமைப்பில் காணப்படும் அங்கத்துவ கட்சிகளுடன் தமிழரசுக் கட்சி மென்வலுவைப் பிரயோகிக்க வேண்டுமே அன்றி அரசாங்கத்துடன் அல்ல என்பது மாத்திரமே யதார்த்தமாக உள்ளது. தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆரம்பத்தில் அகில இலங்கைத் தமிழ் மக்கள் காங்கிரஸ் தொடக்கம் ஈற்றில் ரெலோ, புளொட் வரைக்கும் மென்வலுவின் தோல்வி காரணமாகவே சிதைந்து சென்றன என்பதை யாரும் மறுக்க முடியாது. இவ் அனைத்து சிதைவுகளிலும் ஒற்றுமைத்தன்மையான விடயமாக காணப்படுவது வெளிச்சென்ற அத்தனை கட்சிக்காரர்களது கைகளும் காட்டிய காரணகர்த்தா சுமந்திரன் மாத்திரமே. இவ்வாறான நிலையில் இலங்கை அரசாங்கத்துடன் தமிழ்தேசிய கூட்டமைப்பு மேற்கொண்ட இணக்க அரசியலை மென்வலு அணுகுமுறை என சுமந்திரன் தரப்பு விளிப்பது வேடிக்கைக்குரிய கருத்தாடல் ஆகின்றது. தமிழரசுக் கட்சி தான் அடங்கிய மற்றும் முன்னிலையில் இருந்த கூட்டணியில் கட்சிகளுக்கு இடையே உறவுகளை வடிவமைக்கவும், மேம்படுத்தவும,; கையாளவும் தங்களது இலக்குகளை அடைவதற்கான வகையில் பிரயோகிக்க வேண்டிய மென்வலு அணுகுமுறையை தவற விட்டு தமிழ் மக்களது தரப்பின் அரசியல் ஸ்திரத்தினை அடியோடு சாய்த்துவிட்டது என்ற பழியை எவ்வகையிலும் கடந்துசெல்ல முடியாது. இவ் அனைத்து கைங்கரியங்களும் தனியே சுமந்திரன் என்றதொரு ஒற்றை அரசியல்வாதியை மாத்திரமே நேரடியாகச் சாருகின்றன. மறுபுறம் இவற்றிற்கு எவ்வித எதிர்ப்பும் தெரிவிக்காது அனுமதித்த தமிழரசுக் கட்சியின் ஏனைய கட்சி உறுப்பினர்களையும் மௌமாக அனுமதித்தது, அல்லது இடையூறுகள் மேற்கொள்ளாது துணைபுரிந்தது என்ற வகையில் தவறானவர்கள் ஆக்குகின்றது. அவசியமான இடத்தில் பிரயோகிக்கத் தவறிய மென்வலுவை தங்களது சுயதேவை நிகழ்சிநிரல் நிறைவேற்றங்களுக்காக பாவிக்கப்பட்டதா? என்ற கேள்விக்கு தமிழரசுக் கட்சியின் 2024 கட்சித்தலைவர் போட்டி தேர்தல் வரைக்கும் சென்றதும் அதில் ஒரு வேட்பாளராக சுமந்திரன் முன்னிலைப்பட்டதற்குமுரிய அடிப்படை நடவடிக்கைத் தொடர்புகள் பற்றி சற்றே சிந்திக்கவேண்டியுள்ளது. சுமந்திரனின் ஆதரவுத் தளத்தில் உள்ள தமிழரசுக் கட்சிக்காரர்களுக்கு பாராளுமன்ற உறுப்பினர், மாகாண சபை உறுப்பினர் மற்றும் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர் பதவிகளை வழங்குவதாயின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற சாம்பார் வாளியில் இருந்து தமிழரசுக் கட்சி என்ற கரண்டியை வெளியே எடுக்கவேண்டிய தேவை சுமந்திரனுக்கு பல ஆண்டுத் திட்டமிடலில் இருந்திருக்கின்றது என்ற விடயம் புலப்படுகின்றது.   ஆக மென்வலு என்பதற்குரிய வரைவிலக்கணத்தினை வினயமாக பாவித்து காரியமாற்றப்பட்டிருந்தால் தழிழர் தரப்பின் அரசியல் இன்னும் ஒரு படி முன்னகர்ந்து இருக்க வேண்டும். இங்கே மாறாக தமிழர் அரசியல் சுக்குநூறாகக் காணப்படுகின்றது. தமிழர் தரப்பின் எதிர்காலம் தொடர்பில் தெளிவான எந்தவொரு நடைமுறை அரசியல் நோக்கமும் தமிழ் தரப்பில் உள்ள அரசியல் கட்சிகளிடம் இல்லை. இவற்றுக்கு அப்பால் குறைந்தபட்சம் தமிழர்தரப்பு ஒற்றுமைகூட இல்லை. இருந்த ஒற்றுமையையும் சீர்குலைத்த சிறப்பு சுமந்திரனை மட்டுமே சார்ந்ததாக கடந்தகால செயற்பாடுகள் காண்பிக்கின்றன. மேலும், மென்வலுற்கு கிடைத்த பிரதியுபகாரமாக அமைச்சரவை அந்தஸ்துக்கு ஒப்பான வசதி வாய்ப்புக்களுடன் நல்லாட்சிக் காலத்தில் சுமந்திரன் நாடாளுமன்ற உறுப்பினராக வலம்வந்தார். உணர்வுமிக்க வாக்காளர்களுக்கு தனது செயற்பாடுகள் மீது நியாயம் கற்பிக்க கையாண்ட கவச வாய்க்கியமே மென்வலுவாக அர்த்தம்கொள்ளப்பட்டுள்ளது. மக்களது அங்கீகாரத்தில் அதிகாரத்தில் இருக்கும் அத்தனை அரசியல்வாதிகளும் எண்ணவேண்டும் தங்களது செயற்பாடுகளுக்குரிய அங்கீகாரம் பொதுவாக்காளர்ப் பெருமக்கள் போட்ட பிச்சையே அன்றி தங்கள் தங்களுக்குரிய ஆளுமைகள், ஆற்றல்கள் மற்றும் திறன்களால் கிடைக்கப்பெற்றவைகள் அல்ல என்றும், அலரி மாளிகையில் பருகும் ஒருகோப்பை விசேட அதிதிகளுக்கான தேனீர் கூட உங்களுக்கு உரியவைகள் அல்ல அது மக்களது ஆணைக்கு உரியவைகள் என்பதை தெளிவாக உணரவேண்டும். அலரி மாளிகையில் அதிகூடிய விசேட அதிதிகளுக்குரிய தேனீர் பருகிய முதல்நிலைத் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர் என்றால் இன்றுவரையான காலப்பகுதியில் சுமந்திரன் மட்டுமே முன்னிலை வகிக்கின்றார். தாங்கள் செய்ய வேண்டிய கருமம் என்ன என்பதை குறைந்தபட்சம் அறியாத அல்லது பின்பற்றாத அரசியல் தலைமைகள் தமிழ் மக்களது உரிமை மற்றும் வாழ்வியல் மேலும் மேலும் சிக்கல்ப்பட கோடரிக் காம்புகளாக வலம் வருவார்களே அன்றி மீட்டார்கள் இல்லை என்ற வாதத்தினை மீணடும் உறுதிசெய்து செல்கின்றது சுமந்திரனின் மென்வலு பிரயோகம். உட்கட்சி ஜனநாயகம் என்ற பதம் தமிழரசுக் கட்சிக்குள் யாப்பிற்கு புறநீங்கலாகவும், எழுபது வருடங்களுக்கு மேற்பட்ட கால ஓட்டத்தில் இருக்காத ஒரு தத்துவமாகவும் 2024 தழிழரசுக்கட்சித் தலைவர் தெரிவிற்கான போட்டியில் இருந்து சுமந்திரன் வெளியிட்டுவரும் ஒரு நாகரீகக் கருத்தாக அமைந்திருக்கின்றது. உட்கட்சியின் தீர்மானங்கள் ஒவ்வொன்றும் ஜனநாயகப் பண்பில் எட்டப்பட்டவைகள் ஆக இருப்பின் அவை மிக மிக சிறப்பானது. தலைவர் பதவிக்காக சுமந்திரன் உட்கட்சி ஜனநாயகத்தின் உச்சப்பட்ச நம்பிக்கையில் போட்டியிட்டிருந்தார். சுமந்திரன் நிழல்த் தலைவராக தமிழரசுக் கட்சியில் செயற்பட்ட காலத்தில் நடைபெற்ற உட்கட்சி சம்பவங்கள் சிலவற்றை பட்டியலிட்டு பார்க்கையில், 01.தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயற்பாடுகளுக்குள் ஏனைய கட்சிகளுக்கு வழங்கிய செயன்முறைப் பெறுமானம். 02.தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து கட்சிகள் வெளியேறியமை மற்றும் உள்வாங்கப்பட்டமை. 03.போர்க்குற்ற சர்வதேச விசாரணை முடிந்து விட்டது, 04.விக்னேஸ்வரன் முதலமைச்சராக இருந்த காலப்பகுதியில் ஏற்பட்ட முரண்பாடு. 06.மாவை சேனாதிராசாவுக்கு தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உரிமை மறுத்து கலையரசனுக்கு வழங்கியது. 07.சம்பந்தரது முதுமை காரணமாக பதவிவிலக அவரில் அக்கறை கொண்டு இரஞ்சியது. உதாரணத்திற்கு இது போன்ற சில பிரபலமான உட்கட்சிச் செயற்பாடுகளில் உட்கட்சி ஜனநாயகம் அறிந்து செயற்பட்ட தருணங்களை வாக்காளர்கள் உண்மையை உண்மையாக சிந்திக்க வேண்டும் என கேட்டுக்கொண்டு, சுமந்திரன் மீண்டும் உட்கட்சியின் ஜனநாயகத்தினை அறிவதற்காக தமிழரசுக் கட்சியின் தலைமைக்கு போட்டியிட்டாரம். இன்று கட்சி வழக்குவரை முன்னேறியிருக்கின்றது. ஜனநாயகம் என்றால் என்ன? என்பதற்கு சுமந்திரன் ஒரு நேர்காணலில் வழங்கிய ஒரு உவமானக் கதையுடன், ஒரு குடும்பத்தில் மூன்று பெண்பிள்ளைகளும் ஒரு ஆண்பிள்ளையும் இருக்கின்றார்கள். இவர்களது விடுமுறைக்கு வெளியே செல்ல குடும்பமாக திட்டமிடும் சந்தர்ப்பத்தில் ஆண்பிள்ளை ஒரு சாகசம் போன்றதொரு சுற்றுலாவை விரும்புகின்றார், பெண்பிள்ளைகள் மூவரும் இவ்வகையைத் தவிர்த்து ஒருமித்த குரலில் வேறு ஒரு விடயத்தினை தெரிவு செய்வார்கள். இவ்வாறான சந்தர்ப்பத்தில் ஜனநாயக தீர்மானமாக பெண்பிள்ளைகளின் தெரிவுதான் அமையும் என்ற கருத்துப்பட ஒரு அழகான கதையைக் கூறியிருந்தார். இன்று உட்கட்சி விவகாரம் நீதிமன்றத்தில் இருக்கின்றது. இச் சந்தர்ப்பத்தில் ஏழுபேருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்திருக்கின்றார்கள். இதில் சுமந்திரனை தவிர ஏனைய அறுவரும் ஒத்த நிலைப்பாட்டில் நீதிமன்றத்திற்கு தங்களது நிலைப்பாட்டினை அறிவித்திருக்கின்றார்கள். அதன்பால் வழக்கு முடிவுறுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. மாறாக மறு முனையில் சுமந்திரன் ஏனைய அறுவரது நிலைப்பாட்டுடனும் பொருந்தாது தான் மாத்திரம் வழக்கினை தொடர இருப்பதாக தெரிவித்திருப்பதாக அறிய முடிகின்றது. சுமந்திரன் தலைவர் தெரிவில் கூறிய உட்கட்சி ஜனநாயகம், சுமந்திரன் கூறிய உவமானக் கதை ஆகியவற்றின் அடிப்படையில் பார்க்கும்போது சுமந்திரனது இந்த தீர்மானம் மென்வலுப்பிரயோகமா? அல்லது உட்கட்சி ஜனநாயகமா? எந்த வகுதிக்குள் அடங்கும் என தலையைப் பிய்த்துக்கொள்ளவேண்டியுள்ளது. ஈற்றில் ஒன்றுமட்டும் தெளிவாகின்றது தன் தன் வசதிக்காக பல பல தத்துவங்களை பேசுபவர்கள் தவறிழைப்பவர்கள் என்பதை நிறுவுவதில் சுமந்திரனும் தவறவில்லை என்பதுடன், இவ்வழக்கு வென்றாலும் தோல்வி சுமந்திரனுக்கே, வழக்கு தோற்றாலும் தோல்வி சுமந்திரனுக்கே ஆகும். எதிர்வரும் தேர்தல் மிகவும் சவாலானது. கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் வந்து மனோகணேசன் தமிழரசுக் கட்சியில் தேர்தலில் தோன்றினால் எப்படியோ அதையும் தாண்டியதொரு நிலையிலேயே சுமந்திரனும் தேர்தலில் தோற்றவேண்டியிருக்கும். அடுத்த தேர்தலில் சுமந்திரன் யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தினை தவிர்த்து மட்டக்களப்பு மாவட்டத்தில் தேர்தலில் போட்டியிட்டு வெல்வாராக இருப்பின் தமிழரசுக் கட்சிக்குள் மென்வலுவும் உட்கட்சி ஜனநாயகமும் உயிர்ப்புடன் உள்ளது என்பதை நிறுவிக்காட்டமுடியும்.   பொறுப்பு துறப்பு! இக்கட்டுரையானது பொது எழுத்தாளர் Independent Writer அவரால் எழுதப்பட்டு, 28 March, 2024 அன்று தமிழ்வின் இணையத்தளத்தில் வெளியிடப்பட்டது. இக்கட்டுரைக்கும் தமிழ்வின் தளத்திற்கும் எந்தத் தொடர்பும் இல்லை. https://tamilwin.com/article/sumandran-politics-and-internal-party-democracy-1711577764
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.