Jump to content

உலக கிண்ண கிரிக்கெட் போட்டி - 2015 செய்திகளும் கருத்துக்களும்


Recommended Posts

12 வருடங்களுக்கு பிறகு முதல் முறையாக, உலக கோப்பையில் இலங்கையை வீழ்த்திய நியூசிலாந்து!

 

கிறைஸ்ட்சர்ஸ்: ஆஸ்திரேலியா-நியூசிலாந்து இணைந்து நடத்தும் 11வது உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இன்று தொடங்கின. முதல் ஆட்டம் நியூசிலாந்து கிறைஸ்ட்சர்ச் மைதானத்தில் இலங்கை-நியூசிலாந்து நாடுகளிடையே தொடங்கியது. டாஸ் வென்ற இலங்கை அணி, பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனடிப்படையில் முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி, 50 ஒவரில், 6 விக்கெட் இழப்பிற்கு 331 ரன்கள் எடுத்தது. இலங்கை அணிக்கு 332 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயித்துள்ளது. நியூசிலாந்து அணியின் சார்பில் ஆண்டர்சன் 75,மெக்கல்லம் 65, வில்லியம்சன் 57 ரன்கள் எடுத்தனர்.

 

சிறப்பான தொடக்கம் இதையடுத்து இலங்கை துரத்தலை தொடர்ந்தது. திரிமனே, தில்ஷன் இருவருமே சிறப்பான தொடக்கத்தை கொடுத்தனர். ஆனால் ஸ்கோர் 13 ஓவரில் 67 ரன்களாக இருந்தபோது வெட்டோரி பந்து வீச்சில், அவரிடமே கேட்ச் கொடுத்து 24 ரன்களில் தில்ஷன் அவுட் ஆனார்.

 

சங்ககாரா அவுட் இதைத் தொடர்ந்து நம்பிக்கை நட்சத்திரம் சங்ககாரா களமிறங்கினார். இதனிடையே 65 ரன்களில் டிரென்ட் பவுல்ட் பந்து வீச்சில் திரிமனே போல்ட் ஆனார். சிறப்பாக ஆடிய சங்ககாரா 38 பந்துகளில் 39 ரன்களில் பவுல்ட் பந்து வீச்சில் எல்பிடபிள்யூ முறையில் அவுட் ஆனார்.

 

முதல் முட்டை ஜெயவர்த்தனேவுக்கு.. இந்த உலக கோப்பையுடன் ஓய்வு பெறப்போகும் ஜெயவர்த்தனே 4 பந்துகளை சந்தித்து, வெட்டோரி பந்தில் ரோன்சியிடம் கேட்ச் கொடுத்து டக் அவுட் ஆனார். நடப்பு உலக கோப்பையின் முதல் டக் அவுட் பேட்ஸ்மேன் என்ற மோசமான சாதனையும் ஜெயவர்த்தனேக்கு கிடைத்தது.

 

இலங்கை தடுமாற்றம் இதனிடையே கருனரத்னே 14 ரன்களிலும், ஜீவன் மென்டிஸ் 4 ரன்களிலும் அவுட் ஆன நிலையில், இலங்கை 32 ஓவர்களில் 168 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அப்போதே இலங்கையின் தோல்வியும் உறுதி செய்யப்பட்டது.

 

நியூசிலாந்து வெற்றி இருப்பினும் கேப்டன் மேத்யூஸ் போராட்டத்தால் இலங்கை ஓரளவுக்கு தாக்குப்பிடித்து ஆடியது. இருப்பினும், குலசேகரா 10 ரன்களிலும், ஹீரத் 13 ரன்களிலும், மலிங்கா முதல் பாலில் டக்அவுட்டிலும் வெளியேற, மேத்யூசும் 46 ரன்களில் நடையை கட்டினார். 46.1 ஓவர்களில் இலங்கை அணி 233 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. லக்மல் 7 ரன்களுடன் ஆட்டம் இழக்காமல் இருந்தார். இதன்மூலம், 98 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து வெற்றி பெற்றது.

 

12 வருடங்களுக்கு பிறகு.. 2003 உலக கோப்பை போட்டித் தொடரில் இருந்து இதுவரை ஐந்து முறை இவ்விரு அணிகளும் உலக கோப்பை போட்டிகளில் மோதியுள்ளன. அதில் 5 போட்டிகளிலுமே இலங்கைதான் வெற்றி பெற்றுள்ளது. 2003ல் ஒரு முறையும், 2007 மற்றும் 2011 உலக கோப்பைகளில் தலா இருமுறையும் நியூசிலாந்தை இலங்கை வீழ்த்தியுள்ளது. 12 வருடங்களுக்கு பிறகு உலக கோப்பையில் இலங்கைக்கு எதிரான ஒரு ஆட்டத்தில், நியூசிலாந்து வெற்றி பெற்றுள்ளது.

 

Read more at: http://tamil.oneindia.com/news/sports/icc-world-cup-2015-new-zealand-srilanka-220975.html

Link to comment
Share on other sites

  • Replies 827
  • Created
  • Last Reply

கடந்த வேல்ட் கப்பில் கடைசி பந்தை வீசிய பவுலரே இந்த உலக கோப்பையின் முதல் பந்தை வீசிய ஆச்சரியம்!

 

கிறைஸ்ட்சர்ச்: கடந்த உலக கோப்பையில் கடைசி பந்தை வீசிய நுவான் குலசேகரா, இந்த உலக கோப்பையின் முதல் பந்தையும் வீசினார். 2011ம் ஆண்டு நடந்த உலக கோப்பை கிரிக்கெட் இறுதி போட்டி மும்பையில் நடந்தது. இந்தியா-இலங்கை மோதின. இரண்டாவது பேட்டிங் செய்த இந்தியா 48.2வது ஓவரில் டோணியின் இமாலய சிக்சருடன் வெற்றிக் கனியை பறித்தது. அந்த ஓவரை வீசியது இலங்கை மிதவேக பந்து வீச்சாளர் குலசேகராவாகும்.

 

ஆக.. கடந்த உலக கோப்பையின் கடைசி பந்தை குலசேகரா வீசியதாக வரலாறு பதிவு செய்தது. கடந்த வேல்ட் கப்பில் கடைசி பந்தை வீசிய பவுலரே இந்த உலக கோப்பையின் முதல் பந்தை வீசிய ஆச்சரியம்! இந்நிலையில் 2015ம் ஆண்டு உலக கோப்பை போட்டிகள் இன்று தொடங்கின. முதல் போட்டியில் இலங்கை-நியூசிலாந்து மோதின.

 

நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஓவரை குலசேகரா வீசினார். இதன் மூலம், கடந்த உலக கோப்பையின் கடைசி பந்தையும், இந்த உலக கோப்பையின் முதல் பந்தையும் வீசிய பெருமையை குலசேகரா யதேர்ச்சையாக பெற்றுள்ளார். போன ஜென்ம பந்தம் என்பதை போல போன உலக கோப்பை தொடர்ச்சி போலும் இது..

 

Read more at: http://tamil.oneindia.com/news/sports/nuwan-kulasekara-last-first-ball-record-220977.html

Link to comment
Share on other sites

அதிர்ச்சி வைத்திய நிபுணர் ஜிம்பாப்வேவுடன் தென் ஆப்பிரிக்கா நாளை பலப்பரிட்சை!

 

ஹேமில்டன்: இந்தியா-பாகிஸ்தான் போட்டி நாளைக்கு மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ள போதிலும், தென் ஆப்பிரிக்கா-ஜிம்பாப்வே போட்டியும் கவனம் ஈர்க்காமல் இல்லை. நியூசிலாந்தின் ஹேமில்டனில், இந்திய நேரப்படி நாளை காலை 6.30 மணிக்கு இந்த போட்டி தொடங்க உள்ளது. கடந்த 2 ஆண்டுகளில் 30 போட்டிகளில் விளையாடியுள்ள ஜிம்பாப்வே அதில் 6 போட்டிகளை வென்றுள்ளது.

 

அதில் பாகிஸ்தான், ஆஸ்திரேலியாவுக்கு எதிராக பெற்ற தலா ஒரு வெற்றிகள் கவனம் ஈர்க்கின்றன. வேல்ட் கப் பயிற்சி ஆட்டத்தின்போது இலங்கையை வீழ்த்தி அதிர்ச்சி கொடுத்துள்ளது ஜிம்பாப்வே. தென் ஆப்பிரிக்கா என்னதான் பலமான அணியாக இருந்தாலும், ஜிம்பாப்வேயை குறைத்து மதிப்பிட்டு களத்தில் இறங்கப்போவதில்லை என்பது மட்டும் நிச்சயம். தென் ஆப்பிரிக்க கேப்டன் ஏபிடி வில்லியர்சும், இதையேத்தான் சொல்லியுள்ளார்.

 

தென் ஆப்பிரிக்கா ஐசிசி தரவரிசையில் 3வது இடத்திலும், ஜிம்பாப்வே 10வது இடத்திலும் உள்ளது. கடந்த இரு வருடங்களில் 50 ஒருநாள் போட்டிகளில் ஆடியுள்ள தென் ஆப்பிரிக்கா அதில் 29 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள நாடுகள் பட்டியலில் தென் ஆப்பிரிக்காவும் இடம் பெற்றுள்ளது. இது ஆப்பிரிக்க நாட்டு அணிகளும் மோத உள்ள இந்த போட்டியும் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

Read more at: http://tamil.oneindia.com/news/sports/south-africa-vs-zimbabwe-icc-cricket-world-cup-2015-match-preview-221014.html

Link to comment
Share on other sites

இந்திய - பாக். போட்டி | கோலி, ரெய்னாவின் பக்கம் அதிர்ஷ்டம்
 

 

அடிலெய்டில் இந்தியா- பாகிஸ்தான் உலகக் கோப்பை போட்டியில் பாகிஸ்தான் ஃபீல்டர்கள் செய்த தவறினால் கோலி, ரெய்னாவின் பக்கம் அதிர்ஷ்டக் காற்று அடித்தது.

விராட் கோலி களமிறங்கி 3 ரன்களில் இருந்தபோது, ஆட்டத்தின் 11-வது ஓவரை ஷாகித் அஃப்ரீடி வீச, அளவு சற்றே குறைந்த பந்தை புல் ஆடினார். அப்ரீடி பந்து காற்றில் வேகமாக வரக்கூடியது, பிட்ச் ஆன பிறகும் சற்று வேகத்துடன் வரக்கூடியது. இந்நிலையில் அந்தப் பந்தை புல் ஆடினார். ஷாட் சரியாக சிக்காமல் லாங் ஆனில் கேட்ச் ஆகச் சென்றது.

 

அது நீளமான பவுண்டரி என்பதால் யாசிர் ஷா முன்னால் கேட்சுக்கு ஓடி வரநேரிட்டது. ஆனால் பந்து முன்னமேயே தரையை நெருங்க, யாசீர் ஷா டைவ் அடித்துப் பார்த்தார், பந்து கையில் பட்டு கீழே தவறியது. இதைப் பிடித்திருந்தால் அசாத்தியமான கேட்ச் என்பதோடு இந்தியாவுக்கு சிக்கல் ஏற்பட்டிருக்கும்.

அதன் பிறகு கோலி சில அபாரமான ஷாட்களை ஆடினார். குறிப்பாக கவர் டிரைவ், இன்சைட் அவுட் டிரைவ் அனாயசமாக அவருக்கு வந்தது.

கோலி 76 ரன்களில் இருந்த போது ஆட்டத்தின் 32-வது ஓவரை பாகிஸ்தானின் இடது கை சுழற்பந்து வீச்சாளர் ஹாரிஸ் சோஹைல் வீச கோலியின் மட்டை விளிம்பில் பட்டு விக்கெட் கீப்பர் அக்மலிடம் விரைவாகச் சென்றது. சாதாரணமாக விக்கெட் கீப்பர்கள் அது போன்ற கேட்ச்களை பிடிப்பதுதான் வழக்கம், ஆனால் உமர் அக்மல் வழக்கமான விக்கெட் கீப்பர் இல்லை, கோட்டை விட்டார். தப்பினார் கோலி, அவருக்குக் கிடைத்த 2-வது வாழ்வு இது.

 

ஆட்டத்தின் 34-வது ஓவரில் இந்த முறை சுரேஷ் ரெய்னா பிழைத்தார். அதிர்ஷ்டமில்லாத அந்த வீச்சாளர் மீண்டும் ஹாரிஸ் சோஹைல்தான். ஷாட் பிட்ச் பந்தை ரெய்னா புல் செய்ய பந்து டீப் மிட்விக்கெட்டுக்குச் சென்றது. அங்கு எல்லைக்கோட்டருகே யாசிர் ஷா நின்றிருந்தால் கையில் வந்து நேராக கேட்ச் உட்கார்ந்திருக்கும், ஆனால், அவர் சற்று முன்னே நிற்க கடைசியில் கேட்சைப் பிடிக்க முயன்று, தனக்குத்தானே கடினமாக்கிக்கொண்டு பந்தை சிக்சருக்குத் தட்டி விட்டார்.

 

பார்ப்பதற்கு, அசாத்தியமான கேட்ச் போல் இருந்திருக்கும். ஆனால், அவர் சரியான நிலையில் நிற்கவில்லை என்பதே ரெய்னாவின் அதிர்ஷ்டம்.

ஆகவே, அடிலெய்டில் கோலி, ரெய்னா ஆகியோருக்கு வாழ்வளித்தது பாகிஸ்தான்!
 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF-%E0%AE%B0%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D/article6898391.ece?homepage=true

Link to comment
Share on other sites

உலகக் கோப்பை: இந்தியா - பாகிஸ்தான் போட்டியின் பதிவுகள்

கோலி, தவண், ரெய்னா அபாரம்: பாகிஸ்தானுக்கு 301 ரன்கள் இலக்கு

பாகிஸ்தானுக்கு எதிரான உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில், இந்திய அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 300 ரன்கள் குவித்தது.

இதன்மூலம், பாகிஸ்தான் அணிக்கு 301 ரன்கள் என்ற சற்றே சவலான வெற்றி இலக்கை இந்திய இணி நிர்ணயித்தது.

 

ஷிகார் தவண், விராட் கோலி, சுரேஷ் ரெய்னா ஆகியோரின் அபாரமான பேட்டிங் பங்களிப்பால், இந்திய அணியின் ரன் எண்ணிக்கை வெகுவாக உயர்ந்தது. நிதானமான துவக்கத்தைத் தந்தாலும், பின்னர் இந்திய அணி வீரர்கள் விளாசத் தொடங்கினர். ஆனால், கடைசி ஓவர்களில் சொதப்பலான ஆட்டத்தால் ரன் குவிப்பு வேகம் தடைபட்டது.

அடிலெய்டில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட் செய்ய தீர்மானித்து களமிறங்கியது.

துவக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா 20 பந்துகளில் 15 ரன்கள் எடுத்த நிலையில், சோஹாலி கான் பந்துவீச்சில் மிப்ஸாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

 

ஷிகார் தவண் 73

பின்னர், பாகிஸ்தானுக்கு எதிராக மிகச் சிறப்பாக பேட் செய்து வந்த ஷிகார் தவண் 76 பந்துகளில் 73 ரன்கள் குவித்த நிலையில், மிஸ்பா உல் ஹக்கின் சாதுரிய செயல்பாட்டால் ரன் அவுட் ஆனார். தவணின் பொறுப்பான ஆட்டம் அணிக்கு உறுதுணையாக அமைந்தது.

 

கோலி சதம்

தவணுடன் இணைந்து பொறுப்புடனும் சற்று அதிரடியாக பேட் செய்த துணைக் கேப்டன் விராட் கோலி, 126 பந்துகளில் 107 ரன்கள் எடுத்தார். இவரது சதமும் அணிக்கு மிகுந்த பலம் சேர்த்தது. இவரது விக்கெட்டையும் சோஹாலி கான் பறித்தார்.

 

ரெய்னா அதிரடி

தவண் ஆட்டமிழந்த பிறகு, கோலியுடன் இணைந்த சுரேஷ் ரெய்னா ஆரம்பம் முதலே அதிரடியாக பேட் செய்தார். அவர் 54 பந்துகளில் 74 ரன்கள் குவித்த நிலையில், சோஹாலி கான் பந்துவீச்சில் ஹாரிஸ் சோஹாலியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

 

விக்கெட் சரிவு...

ரெய்னாவுக்குப் பின் தோனி 13 பந்துகளில் 18 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஜடேஜா 3 ரன்களில் வெளியேறினார். ரஹானே ரன் ஏதும் எடுக்கவில்லை. அஸ்வின் ஆட்டமிழக்காமல் ஒரு ரன்னும், ஷமி ஆட்டமிழக்காமல் 3 ரன்களும் எடுத்தனர்.

இறுதியில், இந்திய அணி 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 300 ரன்கள் சேர்த்தது.

 

பாகிஸ்தான் தரப்பில் சோஹாலி கான் மிகச் சிறப்பாக பந்துவீசி 5 விக்கெட்டுகளை சாய்த்தார். வஹாப் ரியாஸ் ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.

 

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article6898327.ece

Link to comment
Share on other sites


ஸிம்பாவேயை சுழற்றியடித்த தென்னாபிரிக்கா 66 ஓட்டங்களால் வெற்றி
 

 

11ஆவது உலக கிண்ண கிரிக்கெட் போட்டிகளின் மூன்றாவது போட்டியில் தென்னாபிரிக்கா அணி 66 ஓட்டங்களால் ஸிம்பாவே அணியை தோற்கடித்து தனது முதலாவது வெற்றியை பதிவு செய்துள்ளது.

ஹெமில்டனில் இன்று ஞாயிற்றுக்கிழமை(15) ஆரம்மபமான மூன்றாவது போட்டியில் தென்னாபிரிக்கா – ஸிம்பாவே அணிகள் மோதின.

நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற ஸிம்பாவே அணி, களத்தடுப்பில் ஈடுபடுவதற்கு தீர்மானித்தது.

 

முதலில் களமிறங்கிய தென்னாபிரிக்கா அணி, 50 ஒவரில், 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 339 ஓட்டங்களை குவித்தது.

தென்னாபிரிக்கா சார்பாக மில்லர் 92 பந்துகளுக்கு 7 நான்கு ஓட்டங்கள், 9 ஆறு ஓட்டங்கள் அடங்கலாக 138 ஓட்டங்களை குவித்தார்.

அவ்வணியின் டுமினி, 3 ஆறு ஓட்டங்கள், 9 நான்கு ஓட்டங்கள் அடங்கலாக 115 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தார்.

ஆட்ட நிறைவின்போது மில்லர் மற்றும் டுமினி ஆகிய இருவரும் ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

340 ஓட்டங்களை பெற்றால் வெற்றி என்ற இலக்கினை துரத்திய ஸிம்பாவே அணி, 48.2 ஓவர்களில் 277 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்து தோல்வியை தழுவியது.

- See more at: http://www.tamilmirror.lk/139808#sthash.Nx3a73o6.dpuf

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

எனக்கென்னவோ இந்த மட்ச்சியில் பாக்கிஸ்தான் வெல்லும் போல இருக்கு

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

இந்த தடவை உலக கோப்பைக்கான ஆடுகளம் பந்து வீச்சாளார்களை விட துடுப்பாட்டகாரருக்கே சாதகமாய் இருக்கின்றது

Link to comment
Share on other sites

பாகிஸ்தான் 102/4 24 வது ஓவர் முடிவில்


எனக்கென்னவோ இந்த மட்ச்சியில் பாக்கிஸ்தான் வெல்லும் போல இருக்கு

 

உலக கிண்ண போட்டிகளில் இதுவரை  இந்தியாவை  பாகிஸ்தான் வெல்லவில்லை
 


103/5 24.4 over

 

Link to comment
Share on other sites

வென்றது தென் ஆப்பிரிக்கா.. கடைசி வரை போராடிய ஜிம்பாப்வே 62 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி

 

ஹாமில்டன்: தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே இடையிலான பி பிரிவு மோதலில் ஜிம்பாப்வே அணியின் அதிரடி பந்து வீச்சில் தென் ஆப்பிரிக்க அணி சற்றே நிலை குலைந்தாலும், பின்னர் டேவிட் மில்லர் மற்றும் ஜேபி டுமினியின் சிறப்பான ஆட்டத்தால் வலுவான நிலையை எட்டி ரன் குவித்தது. 340 ரன் இலக்கைத் துரத்திய ஜிம்பாப்வே அணி 62 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

 

நியூசிலாந்தின் ஹாமில்டனில் தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே அணிகள் மோதின. டாஸ் வென்ற ஜிம்பாப்வே முதலில் பீல்டிங்கைத் தேர்வு செய்தது. இதையடுத்துக் களம் இறங்கிய தென் ஆப்பிரிக்காவின் தொடக்க ஆட்டக்காரர்கள் குவின்டன் டி காக், ஹசிம் அம்லா ஆகியோர் சொற்ப ரன்களில் வீழ்ந்தனர். டூ பிளஸ்சிஸ்ஸும் 2 ரன்களில் ஆட்டமிழந்தார். கேப்டன் டிவில்லியர்ஸும் 25 ரன்களில் விழவே தென் ஆப்பிரிக்க ரசிகர்கள் மேலும் அதிர்ச்சி அடைந்தனர்.

 

வென்றது தென் ஆப்பிரிக்கா.. கடைசி வரை போராடிய ஜிம்பாப்வே 62 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி ஆனால் டேவிட் மில்லரும், டுமினியும் இணைந்து நிலைத்து நின்று ஆடத் தொடங்கினர். இருவரும் அதிரடி ஆட்டத்தில் குதித்தனர். இதில் மில்லர் படு வேகமாக ஆடி சதம் அடித்தார். டுமினியும் தன் பங்குக்கு சூப்பர்ப் ஆக ஒரு சதம் போட்டார். மில்லர் சிறப்பாக ஆடி 135 ரன்களைக் குவித்தார். மறு முனையில் டுமினியும் அதிரடியாக ஆடி 115 ரன்களைக் குவித்தார். இவர்களின் அதிரடியான ஆட்டத்தால் 4 வி்க்கெட் இழப்புக்கு 339 ரன்களை தென் ஆப்பிரிக்கா குவித்தது. ஜிம்பாப்வே தரப்பில் ஆரம்பத்தில் அபாரமாக இருந்த பந்து வீச்சை இந்த இரண்டு பேரும் சேர்ந்து கடைசி நேரத்தில் தவிடு பொடியாக்கி விட்டனர்.

 

ஜிம்பாப்வே தரப்பில் பன்யங்கரா, சதரா, சிகம்பரா, முங்கோஸி ஆகியோர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து 340 ரன்கள் என்ற பெரிய இலக்கைத் துரத்தத் தொடங்கிய ஜிம்பாப்வே ஒரு கட்டத்தில் தென் ஆப்பிரிக்க பந்து வீச்சை சமாளித்து ஆடத் தொடங்கியது. தொடக்க ஆட்டக்காரர் சிபாபா சிறப்பாக ஆடி 64 ரன்களைக் குவித்தார். அதேபோல மஸ்கட்ஸா அதிரடியாக ஆடி 74 பந்துகளில் 80 ரன்களைக் குவித்தார். பிரென்டன் டெய்லர் 40 பந்துகளில் 40 ரன்களைக் குவித்தார். முதல் விக்கெட்டை 32 ரன்களில் இழந்த ஜிம்பாப்வே 2வது விக்கெட்டை 137வது ரன்னில்தான் இழந்தது. தென் ஆப்பிரிக்க பந்து வீச்சைச் சமாளித்து ஆடி வந்தன ஜிம்பாப்வே வீரர்கள் கடைசி வரைப் போராடிப் பார்த்தனர்.

 

இருப்பினும் 48.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்த ஜிம்பாப்வே 277 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. தென் ஆப்பிரிக்கத் தரப்பில் பிலான்டர், மார்னி மார்க்கல் ஆகியோர் தலா 2 விக்கெட்களைச் சாய்த்தனர். இம்ரான் தாஹிர் 3 விக்கெட் வீழ்த்தினார். டேல் ஸ்டெயின், டுமினி ஆகியோர் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.

 

Read more at: http://tamil.oneindia.com/news/sports/miller-duminy-steady-the-sa-innnings-221020.html

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
137913.jpg
இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் 4வது லீக் ஆட்டம் ஆஸ்திரேலியாவில் உள்ள அடிலெய்டில் நடைபெறுகிறது. இதில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த இந்திய அணி 7 விக்கெட் இழப்புக்கு 300 ரன்கள் குவித்தது. 
 
இதையடுத்து விளையாடிய பாகிஸ்தான் அணி 224 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது. 
 
உலகக் கோப்பை போட்டிகளில் 6வது முறையாக பாகிஸ்தான் அணியை வீழ்த்தியது இந்திய அணி.
 

 

Link to comment
Share on other sites

அபாரம்.. அசத்தல்... முதல் போட்டியில் இந்தியா பிரமாதம்.. பாக்.கை 76 ரன்களில் வீழ்த்தியது!

 

அடிலைட்: உலகக் கோப்பையை பிரமாதமான, ஸ்பெஷல் வெற்றியுடன் தொடங்கியுள்ளது இந்தியா. அடிலைட் ஓவல் மைதானத்தில் இன்று நடந்த தனது முதல் போட்டியில் பரம வைரி பாகிஸ்தானை 76 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தி விட்டது இந்தியா. முதலில் பேட்டிங்கில் பிரமாதப்படுத்திய இந்தியா, பின்னர் பவுலிங்கிலும் ஒரு மாதிரியாக சிறப்பாக செயல்பட்டு முதல் போட்டியை வெற்றியில் முடித்து விட்டது.

 

அபாரம்.. அசத்தல்... முதல் போட்டியில் இந்தியா பிரமாதம்.. பாக்.கை 76 ரன்களில் வீழ்த்தியது! இந்தியாவின் பந்து வீச்சைச் சமாளிக்க முடியாமல் பாகிஸ்தான் வேகமாக விக்கெட்களை இழந்து 47 ஓவர்களில் ஆல் அவுட் ஆகி விட்டது. மேலும் இன்றைய போட்டியின் மூலம் தனது வருகையையும், உலகக் கோப்பையை தக்க வைக்க தாங்கள் முழுத் தகுதியுடன் இருப்பதையும் பிற அணிகளுக்கு எச்சரிக்கைச் செய்தியாகவும் மாற்றியுள்ளது இந்தியா. முன்னதாக டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்தது. விராத் கோஹ்லி போட்ட அபார சதம், சுரேஷ் ரெய்னாவின் புயல் வேக ஆட்டம், ஷிகர் தவானின் பிரில்லியன்ட் ஆட்டம் காரணமாக இந்தியா 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 300 ரன்களைக் குவித்தது.

 

தனது 22வது ஒரு நாள் சதத்தை இன்று அடிலைட் ஓவல் மைதானத்தில் போட்டார் கோஹ்லி. தொடர்ந்து சிறப்பாக ஆடி வந்த அவரை சொஹைல் கான் அவுட்டாக்கி வெளியேற்றினார். அபாரம்.. அசத்தல்... முதல் போட்டியில் இந்தியா பிரமாதம்.. பாக்.கை 76 ரன்களில் வீழ்த்தியது! கோஹ்லி வெளியேறினாலும் கூட சுரேஷ் ரெய்னா தொடர்ந்து சிறப்பாக ஆடி வந்தார். 56 பந்துகளில் 74 ரன்களைக் குவித்திருந்த ரெய்னா சொஹைல் கான் பந்து வீச்சில், ஹாரிஸ் சொஹைலிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவரது ரன்களில் 5 பவுண்டரிகளும், 3 சிக்ஸர்களும் அடக்கமாகும். இவர் போன சிறிது நேரத்தில் ரவீந்திர ஜடேஜா 3 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். ஆரம்பத்தில் இந்திய வீரர்கள் விக்கெட் விழுந்து விடாமல் தடுப்பதற்காக தடுப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

 

ரோஹித் சர்மா 15 ரன்கள் எடுத்திருந்த நிலையில் சோஹைல் கான் பந்து வீச்சில், தூக்கி அடித்து மிஸ்பா உல் ஹக்கிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அதன் பின்னர் ஷிகர் தவானும், விராத் கோஹ்லியும் இணைந்தனர். இருவரும் இணைந்ததும் ஆட்டத்தில் சூடு பிடித்தது. சிங்கிள் ரன்களில் அதிக ஆர்வம் காட்டிய இருவரும், சரியான பந்துகள் சிக்கியபோது பவுண்டரிக்கு விரட்டவும் தயங்கவில்லை. ஒவ்வொரு பந்தையும் வீணாக்காமல் ரன்னாக மாற்றி அதிரடியாக ஆடி வந்தனர். அபாரம்.. அசத்தல்... முதல் போட்டியில் இந்தியா பிரமாதம்.. பாக்.கை 76 ரன்களில் வீழ்த்தியது! இந்தியா 100 ரன்களைக் கடந்ததும் ஷிகர் தவான் அடுத்த சில பந்துகளில் அரை சதம் போட்டார். அவரைத் தொடர்ந்து விராத் கோஹ்லியும் அரை சதம் போட்டார். ஷிகர் தவான் 76 பந்துகளில் 73 ரன்களை எடுத்திருந்த நிலையில், 30வது ஓவரின் போது துரதிர்ஷ்டவசமாக ரன் அவுட் செய்யப்பட்டு விட்டார். ஹாரிஸ் சொஹைல் பந்தை அடித்த கோஹ்லி அதை மிட் விக்கெட்டுக்கு விரட்டினார்.

 

இதையடுத்து தவான் மறு முனையிலிருந்து ஓடி வந்தார். இதைப் பார்த்த கோஹ்லியும் ஓடி வர எத்தனித்தார். ஆனால் அதற்குள் மிஸ்பா பந்தைத் தடுத்துப் பிடித்தார். இதைப் பார்த்த கோஹ்லி திரும்பினார். இதனால் தவானும் திரும்ப முயலுகையில் பந்தை சஷாத் வாங்கி விக்கெட்டை நோக்கி வீசி ரன் அவுட் செய்து விட்டார். தவான் ஆட்டமிழந்த பிறகு சிறப்பாக ஆடி வந்த விராத் கோஹ்லி ரசிகர்களுக்கு பெரும் ரன் விருந்து படைத்தார். தொடர்ந்து பாகிஸ்தான் பந்து வீச்சை சிதறடித்து ஆடிய அவர் 107 ரன்களில் இருந்தபோது சொஹைல் கான் பந்து வீச்சில், விக்கெட் கீப்பர் உமர் அக்மலிடம் கேட்ச் ஆகி வெளியேறினார்.

 

அபாரம்.. அசத்தல்... முதல் போட்டியில் இந்தியா பிரமாதம்.. பாக்.கை 76 ரன்களில் வீழ்த்தியது! 126 பந்துகளைச் சந்தித்த கோஹ்லி 8 பவுண்டரிகளுடன் இந்த சதத்தைப் போட்டார். அவருக்குப் பின்னர் சுரேஷ் ரெய்னா தொடர்ந்து சிறப்பாக ஆடி 74 ரன்களில் ஆட்டமிழந்தார். ஆனால் கடைசி நேரத்தில் ஜடேஜா (3), டோணி (18), ரஹானே (0) ஆகியோர் சடசடவென்று ஆட்டமிழந்ததால் இந்தியாவால் மிகப் பெரிய ஸ்கோரை எட்ட முடியாமல் போனது. 50 ஓவர்கள் முடிவில் இந்தியா 7 விக்கெட் இழப்புக்கு 300 ரன்கள் எடுத்தது. பாகிஸ்தானில் சொஹைல் கான் பந்து வீச்சுதான் பிரமாதமாக இருந்தது. சிறப்பாக பந்து வீசிய அவர் 5 விக்கெட்களைச் சாய்த்தார். கடைசி நேரத்தில் அடுத்தடுத்து 2 விக்கெட்களை அவர் எடுத்தது இதில் முக்கியமானது. மற்றவர்களில் வஹாப் ரியாஸுக்கு ஒரு விக்கெட் கிடைத்தது. கடைசி 5 ஓவர்களில் இந்தியா சற்று சொதப்பி விட்டது. இல்லாவிட்டால் இன்னும் மிகப் பெரிய ஸ்கோரை இந்தியா எடுத்திருக்க முடியும்.

 

பின்னர் ஆட வந்த பாகிஸ்தான் நிதானமாகத்தான் ஆடியது. விக்கெட் விழாமல் பார்த்துக் கொண்டு ஆடியது. இதனால் இந்தியா பதைபதைப்புடன்தான் இருந்தது. அபாரம்.. அசத்தல்... முதல் போட்டியில் இந்தியா பிரமாதம்.. பாக்.கை 76 ரன்களில் வீழ்த்தியது! அதிலும் அபாயகரான பேட்ஸ்மேனான அகமது அகமது செஷாத் வீழும் வரை இந்தியா பதைப்புடன்தான் இருந்தது. அவர் 47 ரன்கள் எடுத்திருந்தபோது உமேஷ் யாதவ் அவரை ஆட்டமிழக்கச் செய்தார். யூனிஸ்கானை 6 ரன்களில் வெளியேற்றி விட்டபோதிலும் செஷாத்தும், ஹாரிஸ் சொஹைலும் நிலைத்து நின்று ஆடியதால் இந்தியத் தரப்பு கவலையில் மூழ்கியது. இந்த நிலையில் ஹாரிஸ் சொஹைலை 36 ரன்களுக்கு அஸ்வின் பந்தில் ரோஹித் சர்மா கேட்ச் செய்து வெளியேற்றினார். அதன் பின்னர் சொஹைப் மக்சூத் டக் அவுட் ஆனார். உமர் அக்மலும் டக் அவுட் ஆனார். அதன் பின்னர் அப்ரிடியும், மிஸ்பா உல் ஹக்கும் சேர்ந்து நிலைத்து ஆட ஆரம்பித்தனர். இந்த ஜோடியைப் பிரிக்க இந்தியா சற்று தடுமாறியது.

 

இந்த நிலையில், உமேஷ் யாதவ் பந்து வீச்சில், அப்ரிடி தூக்கி அடிக்க அதை அழகாக கேட்ச் செய்தார் விராத் கோஹ்லி. 22 பந்துகளில் 23 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார் அப்ரிடி. அவரைத் தொடர்ந்து வஹாப் ரியாஸும் ஆட்டமிழந்தார். அபாரம்.. அசத்தல்... முதல் போட்டியில் இந்தியா பிரமாதம்.. பாக்.கை 76 ரன்களில் வீழ்த்தியது! பின்னர் மிஸ்பா உல் ஹக் தொடர்ந்து அதகளம் செய்து வந்தார்.

 

இதனால் பரபரப்பு தொற்றிக் கொண்டது. நல்ல வேளையாக மிஸ்பா உல் ஹக் ஆட்டமிழந்ததும்தான் இந்தியாவின் வெற்றி உறுதியானது. தனி நபராகப் போராடிய மிஸ்பா ரன்கள் எடுத்தார். 47 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்த பாகிஸ்தான் 224 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆகி 76 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது. ஆட்ட நாயகனாக சதம் அடித்த விராத் கோஹ்லி அறிவிக்கப்பட்டார்.

 

Read more at: http://tamil.oneindia.com/news/sports/india-opts-batting-first-against-wc-match-against-pak-221018.html

Link to comment
Share on other sites

வேர்ல்ட் கப்: 6வது முறையாக பாக்.கை வீழ்த்திய இந்தியா... 99ல் இருந்து ஆல் அவுட்டாகும் பாக்.!

 

அடிலெய்ட்: உலகக் கோப்பை போட்டிகளில் பாகிஸ்தான் அணி இதுவரை ஒரு முறை கூட இந்தியாவை வீழ்த்தியதே இல்லை. உலகக் கோப்பபை போட்டிகளில் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதிய ஆட்டம் ஆஸ்திரேலியாவின் அடிலெய்ட் நகரில் இன்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் டோணி பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்தியா 50 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 300 ரன்கள் எடுத்தது. இதையடுத்து விளையாடிய பாகிஸ்தான் 47 ஓவர்களில் 224 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

 

6 முறை உலகக் கோப்பை போட்டிகளில் இன்றைய ஆட்டத்தோடு சேர்த்து இந்தியா-பாகிஸ்தான் அணிகள் 6 முறை மோதியுள்ளன.

 

இந்தியா உலகக் கோப்பை போட்டிகளில் 6 முறையும் இந்தியா பாகிஸ்தானை வீழ்த்தியுள்ளது. பாகிஸ்தானால் இந்திய அணியை ஒரு முறை கூட தோற்கடிக்கவே முடியவில்லை.

 

ஆல் அவுட் உலகக் கோப்பை போட்டியில் பாகிஸ்தான் ஒரு முறை கூட இந்தியாவை ஆல் அவுட் ஆக்கியது இல்லை. ஆனால் இந்திய அணி பாகிஸ்தான் அணியை 1992, 1999 மற்றும் 2011 ஆகிய ஆண்டுகளில் ஆல் அவுட் ஆக்கியுள்ளது. இதையடுத்து இன்றும் பாகிஸ்தான் அணி ஆல் ஆவுட் ஆக்கப்பட்டது.

 

போட்டி உலகக் கோப்பையில் இந்தியா-பாகிஸ்தான் இடையேயான முதல் போட்டி 1992ம் ஆண்டு மார்ச் 4ம் தேதி சிட்னி மைதானத்தில் நடைபெற்றது. அதன் பிறகு பெங்களூர்(96), மான்செஸ்டர்(99), சென்ச்சுரியன்(03), மொஹாலியில்(2011) நடைபெற்றது. இன்று ஆஸ்திரேலியாவின் அடிலெய்டில் 6வது போட்டி நடைபெற்றது.

 

Read more at: http://tamil.oneindia.com/news/sports/worldcup-india-beats-pakistan-the-6th-time-221043.html

Link to comment
Share on other sites

பாகிஸ்தானை வீழ்த்திய தோனியின் கள வியூகமும் இந்தியாவின் முப்பெரும் எழுச்சியும்!
 

 

உலகக் கோப்பைப் போட்டிகளில் பாகிஸ்தான் இன்னமும் இந்தியாவை வீழ்த்தவில்லை... தொடரும் ஆதிக்கம்... ஆம்! அப்படித்தான் 2019 ஆம் ஆண்டு உலகக் கோப்பை வரை இனி பேசப்படுவதற்கான சாத்தியம் மிகுதியாகி இருக்கிறது.

 

இந்தியா - பாகிஸ்தான் போட்டி... அதுவும் உலகக் கோப்பை போட்டி என்றால் கேட்கவே வேண்டாம். ஞாயிற்றுக்கிழமை சாலைகள் வெறிச்சோடியே கிடந்தன; காய்கனிக் கடைகள் முதல் தேநீர் கடைகள், மருந்து கடைகள் எங்கும் தொலைக்காட்சிப் பெட்டிகளில் லைவ் ரிலே. கையில் நோட்டும் பேனாவுமாக கடை முதலாளிகள் கல்லாவை விடவும் இந்தியா எவ்வளவு ரன்கள் எடுக்கும் என்ற ஆர்வத்தில் பதற்றத்துடன் காணப்பட்டனர்.

 

இனி உலகக் கோப்பை வெல்லாவிட்டாலும் பரவாயில்லை என்று தங்களை நாட்டுப்பற்றாளர்கள் என்று காட்டிக்கொள்ளும் சில தரப்பினர் மகிழ்ச்சியில் கருத்து தெரிவிக்க, மற்ற சிலரோ, பாகிஸ்தானை வென்று விட்டோமா... இனி இந்தியாவை இந்த உலகக் கோப்பை போட்டியில் இந்தியாவை அசைக்க முடியாது என்றும் பரவலாக கலவையான கருத்துகள் உலா வந்தபடி உள்ளன.

 

இந்தியாவை இனி அசைக்க முடியாது என்று பலரும் கருதுவதற்குக் காரணம், இந்திய அணி இன்று தன் ஆட்டத்தின் மூலம் தங்களை மிகவும் பலமாக வெளிப்படுத்திக் கொண்டுள்ளனர். பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என்று இன்று இந்திய வீரர்கள் காட்டிய வெற்றி முனைப்பு மற்றும் தீவிரம் பாகிஸ்தான் தனது பலவீனத்தை மீறி எழுச்சிபெற விடாமல் செய்தது.

ஆம், உலகக் கோப்பை 'பி' பிரிவு லீக் ஆட்டத்தில், பாகிஸ்தான் அணியை 76 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வீழ்த்தியது இந்திய அணி.

 

தோனியின் கள வியூகம்

முதலில் டாஸ் வென்றது; தயங்காமல் பேட்டிங் செய்தது; ரோஹித் சர்மாவை விரைவில் இழந்தாலும், ஷிகர் தவண், விராட் கோலி, சுரேஷ் ரெய்னா ஆகியோர் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டி என்று எந்தவித அழுத்தத்தையும் மன நெருக்கடிகளையும் கருத்தில் கொள்ளாமல் பிட்சில் விழுந்த பந்துகளுக்கு தங்களுக்கேயுரிய வகையில் அபாரமாக வினையாற்றினர்.

 

குறிப்பாக நோக்கினால், தோனி கடந்த சில நாட்களாகக் குறிப்பிட்டதைப் போல ஜோடி சேர்ந்து ரன்களை எடுத்து விக்கெட்டுகளைத் தக்க வைத்தல், விராட் கோலி ஒரு முனையைத் தாங்கிப் பிடிக்க மற்றவர்கள் அவரை வைத்துக் கொண்டு அழுத்தம் இல்லாமல் இயல்பான ஆட்டத்திறனை வெளிப்படுத்தியது போன்றவை.

தோனியின் எதிர்பார்ப்பையும், அவர் அடிக்கடி கூறும் திட்டமிடுதலை களத்தில் சிறப்பாகச் செயல்படுத்துவது என்பதும் இன்றைய முக்கிய ஆட்டத்தில் கைகூடியது.

 

பாகிஸ்தான் பின்னடைவுகள்

நிச்சயம் முத்தரப்பு ஒருநாள் தொடருக்குப் பிறகு தோனி "கிரிக்கெட் கிட் பேக்-ஐ பூட்டிவிட்டோம்" என்று ஓய்வின் அவசியத்தை வலியுறுத்தியது இந்திய அணியின் எழுச்சிக்கு ஏதோ ஒரு விதத்தில் காரணமாக அமைந்தது.

 

பாகிஸ்தான் அணி எப்போதும் பந்துவீச்சில் பயங்கர பலம் பெற்று களமிறங்கும், ஆனால், இம்முறை அவர்களின் பிரதான் இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஜுனைத் கான் உலகக்கோப்பை போட்டிகளுக்கு முன் காயமடைந்தது பெரிய பின்னடைவை ஏற்படுத்தியது. மேலும், தொடக்கத்தில் களமிறங்கி அபாயமாக ஆடியும், பந்து வீச்சில் சிக்கனம் காட்டி தொடக்கத்தில் தனது ஸ்பின் பந்து வீச்சை வீசி முக்கிய விக்கெட்டுகளைக் கைப்பற்றும் முகமது ஹபீஸ் காயம் காரணமாக விலகியதும் பாகிஸ்தானுக்கு சொல்லொணா பின்னடைவை ஏற்படுத்திவிட்டது.

 

7 அடி உயர முகமது இர்பான் ஏதோ செய்துவிடுவார் என்று நம்மூர் ராகுல் திராவிட் கூட பயம் காட்டினார். ஆனால், ஷிகர் தவண் அவரது ஷாட் பிட்ச் பவுன்சரை சிக்சருக்குத் தூக்கி கிளீன் மெசேஜை தெரிவித்தார். மேலும், அவர் ஒரு நேரத்தில் பந்துவீசும் போது பிட்சை சேதப்படுத்துகிறார் என்று 2-வது முறையாக எச்சரிக்கப்பட்டு அவரால் ஓவர் தி விக்கெட்டில் பந்து வீச முடியாமல் போனது. இதுவும் பாகிஸ்தானுக்குப் பின்னடைவே.

 

'பவர்'ஃபுல் பேட்டிங் யுக்தி

இந்திய பேட்டிங்கை எடுத்துக்கொண்டால், பவர் பிளேயில் முன்னணி பேட்ஸ்மென்கள் களத்தில் இருந்தும் அதிக ரன்களை எடுக்கவில்லை என்பது சற்று சங்கடத்தை ஏற்படுத்தியது. ஆனால், பவர் பிளே என்பது எப்போதுமே சாதகமாக அமையாது, விரைவு ரன்களைக் குவிக்கப்போய் மடமடவென விக்கெட்டுகளை இழந்து ஆட்டத்தின் போக்கையே மாற்றிவிடக்கூடியது. பவர் பிளே என்பது இரண்டு விதத்தில் வெற்றி, தோல்விகளை தீர்மானிக்கக் கூடியது.

 

எனவேதான் இந்திய அணி தோனியின் கேப்டன்சியில் பவர் பிளேயில் விக்கெட்டுகளை இழக்கக் கூடாது என்று சில காலங்களாக ஆடி வருகிறது. இன்றும் அப்படித்தான் ஆடியது. தோனியின் வாதம் என்னவெனில், பவர் பிளேயில் விக்கெட்டுகளை இழக்காமல் இருந்தால் கடைசி 10 ஓவர்களில் அடித்து நொறுக்கலாம் என்பதே. இன்றும் இந்தியா 192 ரன்களிலிருந்து 217 ரன்களையே எட்டியது. பவர் பிளேயில் 25 ரன்கள்தான். ஆனால் விக்கெட்டுகள் விழவில்லை.

கடைசி 10 ஒவர்களில் 83 ரன்கள். அப்போது 30 ரன்களில் இருந்த ரெய்னா, முன்னதாக அவுட் ஆகாமல் இருந்ததால்தான் அவர் அதன் பிறகு அதிரடியாக விளையாடி 56 பந்துகள் மொத்தம் சந்தித்து 5 பவுண்டரி 3 சிக்சர்களுடன் 74 ரன்களை எடுக்க முடிந்தது. இதுவே மிக முக்கியம்.

 

கடைசியில் தோனி, ஜடேஜா 50 ஓவர்கள் விளையாடியிருந்தால் ஸ்கோர் 320 அல்லது 330 ரன்கள் சென்றிருக்கும். ஆனால் 3 ரன்னில் கோலி இருந்தபோது அவர் அடித்த ஷாட்டை யாசிர் ஷா கேட்ச் பிடித்திருந்தால் ஆட்ட முடிவு எப்படி வேண்டுமானாலும் திரும்பியிருக்கும். மேலும் அவருக்கு உமர் அக்மல் கேட்ச் ஒன்றைவிட்டார். அதுவும் மிக முக்கியமானது. அனைத்தையும் விட முக்கியமானது ரெய்னாவுக்கு பவுண்டரி அருகே நிற்காமல் முன்னால் நின்று கேட்சை சிக்சருக்குத் தள்ளிவிட்டது. இவையெல்லாம் பாகிஸ்தானை காயப்படுத்தியிருக்கும்.

 

மூவரின் அசத்தல் ஆட்டம்

கடந்த சில நாட்களாகவே ரசிகர்களின் கடும் விமர்சனத்துக்கு ஆளான துவக்க ஆட்டக்காரர் ஷிகர் தவண் எதுபற்றியும் பதற்றமின்றி ஆடி, நல்ல அடித்தளம் அமைத்து கொடுத்தவிதம், அவர் மீதான நம்பிக்கையைக் கூட்டியிருக்கிறது. அதேபோல், கோலியின் பொறுப்பான சதம் , அவரிடம் உள்ள 'க்ளாஸ்' ஆட்டத்தை வெளிப்படுத்தியது. சுரேஷ் ரெய்னாவின் அதிரடியின் துணை மிகவும் குறிப்பிடத்தக்க அம்சம்.

 

இந்திய பந்துவீச்சு...

இந்தியப் பந்துவீச்சு பலவீனம் என்ற கவலையில் பலரும் இலக்கு போதாது என்றே கருதியிருப்பர். ஆனால், எப்போதுமே விளக்கு வெளிச்சத்தில் 300 ரன்கள் இலக்கை துரத்துவது எந்த அணிக்கும் அவ்வளவு சுலபமல்ல.

இந்தியப் பந்துவீச்சு பலவீனத்தை நினைத்து பலரும், தோனி உட்பட, சற்றே அச்சம் கொண்டிருக்கும் அதே வேளையில் பாகிஸ்தான் பேட்டிங் பலவீனத்தைக் கண்டு அந்த அணி பயந்து கொண்டுதான் இருந்தது.

 

யூனிஸ் கானை தொடக்கத்தில் களமிறக்கினார்கள். ஆனால், அவர் பாகிஸ்தானின் ஒட்டுமொத்த பதற்றத்தையும் தன்னிலே வெளிப்படுத்தினார். அனுபவமிக்க ஒரு வீரர் ஆடும் நல்ல தற்காப்பு ஆட்டம் கூட அவருக்குப் பதட்டத்தில் கை கூடாமல் போக, முகமது ஷமி வீசிய துல்லிய பவுன்சரை விட்டு விலகுவதா, அடிப்பதா என்ற இரட்டை அரைகுறை ஆசையில் தோனியிடம் பிடி கொடுத்து அவுட் ஆனார்.

 

அதன் பிறகு ஹாரிஸ் சோஹைல் இறங்கி மிகவும் அனாயசமாக ஆட, அகமத் ஷெசாத்தும் தன்னம்பிக்கைப் பெற பாகிஸ்தான் இன்னிங்ஸில் அந்த ஒரு பகுதி மட்டும் நம்பிக்கை அளிப்பதாக இருந்து. அதுவும் உமேஷ் யாதவ்வை ஒரே ஓவரில் 3 பவுண்டரிகளை ஹாரிஸ் சோஹைல் அடிக்கவும், 'ஆரம்பிச்சுட்டாங்கய்யா' என்றே தோன்றியது.

இந்த நிலையில் ஹாரிஸ் சோஹைல் ஒரு பந்தை தேர்ட் மேன் திசையில் தட்டி விட்டு 2-வது ரன்னுக்காக வேகமாக முக்கால் கிரவுண்ட் வந்து விட, ஷெசாத் ஓட மறுக்க பந்து தோனிக்கு பக்காவாக வர, அவர் த்ரோவை தன் முனையில் உள்ள ஸ்டம்பை அடித்தார். ஆனால் எதிர்முனையில் சோஹைல் வர இன்னும் சில வினாடிகள் இருக்கின்றன. தோனி த்ரோவை ரன்னர் முனைக்கு எறிந்திருந்தால் சோஹைல் அப்போதே ரன் அவுட். இந்த வாய்ப்பு பறிபோனது வேறு ரசிகர்களிடையே கவலையை ஏற்படுத்தியிருக்கும்.

 

திருப்புமுனை ஏற்படுத்திய அஸ்வின்

இந்நிலையில், அஸ்வின் பந்து வீச அழைக்கப்பட, அவர் விதம் விதமாக கோணங்களை மாற்றி வீச, தோனியின் கள வியூகமும் ரன்களை விட்டுக் கொடுக்காமல் அமைய, ஒருநாள் கிரிக்கெட்டில் ஓர் அரிய மெய்டன் ஓவரை வீசினார். இதில் ஷெசாத் கடுமையாக டென்ஷன் ஆனார்.

 

ஒரு புறம் ஜடேஜா, மோஹித் சர்மாவும் நெருக்கடி கொடுக்க சோஹைல், ஷெசாத்தின் பதற்றம் அதிகரித்தது. அப்போதுதான் 18-வது ஓவரை வீச வந்த அஸ்வின், ஹாரிஸ் சோஹைலுக்கு 5 டாட் பந்துகளை வீச, அவரது பதற்றம் அதிகரித்ததைக் கண்ட தோனி ஏற்கெனவே ஸ்லிப்பில் ரெய்னாவைக் கொண்டு வந்து நிறுத்தியிருந்தார். அப்போது 6-வது பந்தை அருமையான ஆஃப் ஸ்பின்னாக வீச எட்ஜ் எடுத்து ரெய்னாவிடம் கேட்ச் ஆனது. பாகிஸ்தான் 79/2 என்று ஆனது. அரிய ஒருநாள் கிரிக்கெட் மெய்டனுடன், அடுத்ததாக விக்கெட் மெய்டன் சாதனையையும் நிகழ்த்தி திருப்புமுனை ஏற்படுத்தினார் அஸ்வின்.

 

அஸ்வின் கொடுத்த நெருக்கடியினால் சரிந்த விக்கெட்டுகள்:

தொடர்ந்து இந்திய பந்து வீச்சாளர்கள் கடும் நெருக்கடி கொடுக்க 23-வது ஓவர் முடிவில் பாகிஸ்தான் 101/2 என்று சற்று நம்பிக்கையுடன் இருந்தாலும் ரன் விகிதம் எகிற எகிற பதற்றமும் கூடியது.

அப்போதுதான் தோனியின் மாஸ்டர் ஸ்ட்ரோக் கை கொடுத்தது, உமேஷ் யாதவ்வை 24-வது ஓவரில் கொண்டு வந்தார். 47 ரன்கள் எடுத்து நன்றாக ஆடிவந்த ஷெசாத், யாதவ் வீசிய பந்தை கட் செய்ய அது பாயின்ட் திசையில் நேராக ஜடேஜாவிடம் சென்றது, ஷாட்டின் வேகத்தினால் அதனை விட்டுப் பிடித்தார் ஜடேஜா, ஒரு வினாடி இந்திய ரசிகர்களின் இருதயத் துடிப்பு நின்று பிறகு வந்தது.

பந்துவீச்சில் முகமது ஷமியின் முனைப்பான ஆட்டமும், உமேஷ் யாதவின் பங்களிப்பும் மிகவும் குறிப்பிடத்தக்கது.

 

தோனியின் அபார அப்பீல்!

மக்சூத் களமிறங்கினார். இவரையெல்லாம் இந்திய பவுலர்கள் பார்த்ததேயில்லை. அவர் சிறந்த பேட்ஸ்மென். ஆனால் தோனி, ஸ்லிப்பில் ரெய்னாவை மீண்டும் கொண்டு வர, யாதவ் வீசிய வேகப்பந்து சற்றே எழும்ப கட் செய்தார்... நேராக ரெய்னாவிடம் கேட்ச் ஆனது.

மீதமிருப்பது அபாய வீரர் உமர் அக்மல், இவரெல்லாம் நின்றால் எந்த ஓர் இலக்கும் ஒன்றுமில்லாமல் ஆகும். ஆனால் இன்று கடும் நெருக்கடி, பதற்றம். என்ன செய்வார் அவர்? ஜடேஜா வீசிய பந்து ஒன்று குட் லென்த்தில் பிட்ச் ஆகி திரும்ப மிக மெலிதாக எட்ஜ் செய்தார், தோனி அதனை அபாரமாக பிடித்து முறையீடு செய்ய நடுவர் மறுத்தார். ஆனால் உடனேயே 3-வது நடுவரிடம் அப்பீல் செய்தார். மிக மெலிதான அந்த எட்ஜ் 'அவுட்' என்று தீர்ப்பளிக்கப்பட்டது. தோனியின் துல்லியமான கணிப்பு கைகொடுத்தது.

 

79/2 என்ற நிலையிலிருந்து 105/5 என்று பாகிஸ்தான் சரிய, வழக்கம் போல் மிஸ்பா, ஷாகித் அஃப்ரிதி ஜோடியால்தான் ஏதாவது செய்ய முடியும் என்ற நிலை உருவானது. ஆனால் அப்ரிதி சிறிது நேரம் தனது பவர் ஹிட்டிங்கைக் காண்பித்தாலும், இந்திய பவுலிங் மற்றும் தோனியின் கள வியூகம் வெற்றிக்கான ரன் விகிதத்தை பாகிஸ்தானுக்கு அதிகரிக்கவே செய்தது. அதனால்தான் 25-வது ஓவர் முதல் 34-வது ஓவர் வரை 9 ஓவர்களில் பாகிஸ்தான் 51 ரன்களையே எடுக்க முடிந்தது.

 

மிஸ்பாவின் தவிப்பு

பவர் பிளே 33-வது ஓவரில் எடுக்கப்பட்டது. பவர் பிளேயில் 2 ஓவர்களில் 12 ரன்கள் எடுக்கப்பட்டது. இதில் உமேஷ் யாதவ் 34-வது ஓவரில் 10 ரன்களை விட்டுக்கொடுத்தார்.

ஆனால், 35-வது ஓவரை ஷமி வீச 22 ரன்கள் எடுத்த அஃப்ரிதி, கோலியிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆக, மிஸ்பா தனித்து விடப்பட்டார்.

149/6 என்ற நிலையில் மிஸ்பா சில பல ஷாட்களை ஆடினார். ஒரு சாம்பியன் போல்தான் தனிநபராக அவர் சமீபகாலங்களில் ஆடிவருகிறார். ஆனால் இன்று இந்திய அணியின் தீவிரத்துக்கு முன்னால் அவரால் ஒன்றும் செய்ய முடியவில்லை. அவரிடம் இருந்த தவிப்பு எளிதில் வெளிப்பட்டது.

 

கடைசியில் 46-வது ஓவரில் ஷமி பந்தில் 76 ரன்களில் வெளியேறினார். 47-வது ஓவரில் ஆட்டம் முடிந்தது.

அக்னிப் பரீட்சையில் இந்தியா வெற்றி முகம் கண்டது. ஆட்டத்தின் போக்கில் சில டென்ஷன்கள் இருந்தாலும் இந்திய அணி பாகிஸ்தானை மிக எளிதாகவே வென்றனர் என்று கூறலாம்.

 

பாகிஸ்தானுக்கு எதிராக முன்பு அடிக்கடி இந்தியா விளையாடும். இதனால் ஒவ்வொரு வெற்றியும், தோல்வியுமே இந்திய அணியை பலப்படுத்தி வந்தது. ஆனால், சமீப காலங்களாக பாகிஸ்தானுடன் அதிகமாக ஆடுவதில்லை. தற்போது இந்த அபார வெற்றி இனிவரும் காலங்களில் இருதரப்பு போட்டிகள் அதிகம் நடைபெறும் என்று எதிர்பார்க்கலாம்.

 

ஒட்டுமொத்தமாக, இந்தப் போட்டியில் கேப்டன் தோனியின் கள வியூகமும், பேட்டிங் - பவுலிங் - ஃபீல்டிங் ஆகிய மூன்று அம்சங்களிலும் ஏற்பட்ட மும்பெரும் எழுச்சியும் பாகிஸ்தானை வீழ்த்தி, இந்திய ரசிகர்களின் கொண்டாட்டத்துக்கு காரணமாக அமைந்தது.

இந்த வெற்றியின் மூலம் மட்டுமல்ல, இன்று இந்திய அணி ஆடிய விதம் - உலகக் கோப்பையில் மற்ற அணிகளுக்கு ஓர் எச்சரிக்கை மணியை ஒலித்துள்ளது என்றே கூற முடியும்.
 

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%95%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%B4%E0%AF%81%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D/article6898640.ece

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.




×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.