Jump to content

மனது இளமை என்று துள்ளாதே!!


Recommended Posts

பதிவுகளையும் அவற்றிற்கான பின்னூட்டங்களையும் கூடுதலாகப் பதிந்து, பச்சைப் புள்ளிகளையும் அதிகம் பெற்ற யாழ் உறவுகளை வாழ்த்துவது உறவுகளின் ஆர்வத்தை ஊக்குவிப்பதோடு மனதுக்கு மகிழ்வையும் தரும் நிகழ்வாகும். அந்தவகையில் மன மகிழ்வை நானும் பெற்றேன். என்னை வாழ்த்திய விதமும் புதுமையாக இருந்தது. வாழ்துக்கான படங்களையும், அவற்றுக்கான கவிகளையும் பார்த்தவுடன் மனம் துள்ளவே செய்தது. ஆனாலும் நான் துள்ளவில்லை!. ஏன் துள்ளவில்லை? என்ற உறவொன்றின் கேள்வியும் எழுந்து நின்றது. யோசித்தேன்! நான் ஏன் துள்ளவில்லை? திரும்பத் திரும்ப படங்களையும், கவிகளையும் புரட்டிப் பார்த்தபோது என் சிந்தனையில் எழுந்தவற்றை இங்கு தருகிறேன்.

http://i60.tinypic.com/nwc9kw.gif

யாழ்களத்தின் ஒளியைத்தான் கோபுரம் பரப்பியது! நீதான் அந்த ஒளியென்று துள்ளாதே!!

http://i60.tinypic.com/nwc9kw.gif

பஞ் டயலக் பேசுபவர் பாஞ்சின் முன்னூறு மூவாயிரம் என்றதும்! மிதமிஞ்சித் துள்ளாதே!!

http://i60.tinypic.com/nwc9kw.gif

பனைமரம் மரம் பழசு! ஆனாலும் பனம்கொட்டை புதுசுதான்! பவிசுகொண்டு துள்ளாதே!!

http://i60.tinypic.com/nwc9kw.gif

சித்தரின்கையில் புத்தகமா? பாஞ்சுக்கு பச்சைகளா? கேள்விவரும். புள்ளி எண்ணித் துள்ளாதே!!

http://i60.tinypic.com/nwc9kw.gif

பித்தன் இருக்கிறார் சங்கு ஊதிடுவார். தட்சனைப்போல் தலையில் பித்தம் பிடித்துத் துள்ளாதே!!

http://i60.tinypic.com/nwc9kw.gif

வயது முதிர்கிறது உடல் உமிதூக்கும் பலமும் அற்றுப்போகும் மனது இளமை என்று துள்ளாதே!!

http://i60.tinypic.com/nwc9kw.gif

நிலத்துக்கு நீ என்ன செய்தாய்? யாழ்முதல்வர் கேட்கிறார் அவரையும் ஏமாற்றித் துள்ளாதே.!!

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

திரு. பாஞ்ச் அவர்களே,

எந்த மனிதனும் அங்கீகாரதிற்காக ஏங்குவது இயல்பு.

 

அந்தவகையில் யாழ்களமும் கள உறவுகளை ஊக்குவிக்கவும் சக உறவுகளுக்கு வழிமுறை செய்து கொடுத்துள்ளது.. யாழ்கள குழுமத்திலேயே உறவுகளை தொடர்ந்து இறுக்கி வைக்க, இந்த வாழ்த்தும் ஒரு உந்துசக்தியாக உதவும் என்பது எனது நம்பிக்கை.

 

குடும்பப் பொறுப்புகளால் களத்தை அடிக்கடி மறந்துவிடும்( ??? :lol: ) உங்களை ஊக்கப்படுத்தி, தங்களது அனுபவங்களை & அழியாத கோலங்களை எங்களோடு இங்கே பகிர்ந்து இறுத்தவே அவ்வாழ்த்து மடலை அலுவலக வேலைகளுக்கிடையே தயாரித்து வெளியிடப்பட்டது.

வாழிய நலமோடு, இனிதே தொடரவும் யாழோடு! :)
 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

பாஞ்ச் அண்ணா,
உங்கள் பதிவை வாசித்த போது... நிறைகுடம் தழும்பாது என்ற பழமொழி தான், நினைவுக்கு வந்தது.
உங்கள் உணர்வை, நாம் புரிந்து கொள்கின்றோம்.
வழக்கமாக....  100, 500, 1000, 2000 என்று பச்சைப் புள்ளிகளை எடுத்தவர்களை தான்...

யாழ் களத்தில் வாழ்த்துவது என்று முன்பு உறவுகளால்... கருத்து தெரிவிக்கப்பட்டது.

 

அப்படி இருந்தும்....
உங்கள் அனுபவத்தையும், வயதையும், இதுவரை ஆற்றிய சமூகப் பணிகளையும்....

இந்த நேரத்தில் கௌரவிக்கும் முகமாக, இந்தத் தருணத்தை....

ராஜவன்னியனும், புங்கையூரனும் பயன் படுத்திக் கொண்டதில்....எனக்கு அளவிடமுடியாத மகிழ்ச்சி.

 

கே.எஸ். பாலச்சந்திரன் அவர்கள், யாழ்களத்தில்... இரு பெயரில் எழுதியும்,

அவரை உரிய முறையில்.... நாம் கௌரவிக்கவில்லை என்ற மனக் குறை,

மீண்டும் ஏற்படக் கூடாது என்பதில் உறுதியாக உள்ளோம்.

 

ஆனபடியால்... உங்களுக்கு கிடைத்த வாழ்த்தை, மகிழ்ச்சியாக துள்ளி கொண்டாடுங்கள். :D

 

அத்துடன் முதல் படத்தில் உள்ள கோபுரத்தையும்,  அந்த சித்தரின் பெயரையும்... உங்களுக்கு தெரியும்.
அதனை எவை என்று, நீங்கள் இன்னும் கண்டு பிடிக்காதது, ஆச்சரியமாக உள்ளது. :)

Link to comment
Share on other sites

பாஞ்ச் அண்ணா,

உங்கள் பதிவை வாசித்த போது... நிறைகுடம் தழும்பாது என்ற பழமொழி தான், நினைவுக்கு வந்தது.

உங்கள் உணர்வை, நாம் புரிந்து கொள்கின்றோம்.

வழக்கமாக....  100, 500, 1000, 2000 என்று பச்சைப் புள்ளிகளை எடுத்தவர்களை தான்...

யாழ் களத்தில் வாழ்த்துவது என்று முன்பு உறவுகளால்... கருத்து தெரிவிக்கப்பட்டது.

 

அப்படி இருந்தும்....

உங்கள் அனுபவத்தையும், வயதையும், இதுவரை ஆற்றிய சமூகப் பணிகளையும்....

இந்த நேரத்தில் கௌரவிக்கும் முகமாக, இந்தத் தருணத்தை....

ராஜவன்னியனும், புங்கையூரனும் பயன் படுத்திக் கொண்டதில்....எனக்கு அளவிடமுடியாத மகிழ்ச்சி.

 

கே.எஸ். பாலச்சந்திரன் அவர்கள், யாழ்களத்தில்... இரு பெயரில் எழுதியும்,

அவரை உரிய முறையில்.... நாம் கௌரவிக்கவில்லை என்ற மனக் குறை,

மீண்டும் ஏற்படக் கூடாது என்பதில் உறுதியாக உள்ளோம்.

 

ஆனபடியால்... உங்களுக்கு கிடைத்த வாழ்த்தை, மகிழ்ச்சியாக துள்ளி கொண்டாடுங்கள். :D

 

அத்துடன் முதல் படத்தில் உள்ள கோபுரத்தையும்,  அந்த சித்தரின் பெயரையும்... உங்களுக்கு தெரியும்.

அதனை எவை என்று, நீங்கள் இன்னும் கண்டு பிடிக்காதது, ஆச்சரியமாக உள்ளது. :)

 

எனக்குக் கிடைத்த வாழ்த்தை,நிறைந்த மகிழ்வோடு மனம் துள்ளக் கொண்டாடினேன். :) 
 
ராசவன்னியன் அவர்களின் கற்பனையில் இணைந்த சித்திரங்கள் வியக்கவைத்தது. அதற்கான புங்கையூரன் அவர்களின் கவியும், புவியில் என்னைத் துள்ளவைத்தது. எனக்குமட்டும் அல்ல, யாழ்கள உறவுகள் பலருக்கும் பரவசமூட்டும் வண்ணம் தொழில்நுட்பங்களுடன் கூடிய,  சித்திரங்களையும், வாழ்த்து மடல்களையும், தயாரித்தளித்த ராசவன்னியரின் திறன் கண்டு வியந்துள்ளேன். :o  
 
தமிழரின் விடுதலைப் போராட்டம் ஆயுதப்போராட்டம்வரை வளர்ந்தும் வெற்றிபெறாது அடைந்த பின்னடைவு ஏற்படுத்திய மன அழுத்தம் நித்திரையும் கொள்ளவிடாது துன்புறுத்தியது. அந்த அழுத்தத்தை மேன்மேலும் வளர்ப்பதற்கு சில தமிழ் உடகங்களே முனைந்த வேளையில், ஆறுதலைத்தரும் ஆக்கங்களை வெளியிட்டு, யாழ்களம் மனதிற்கு  ஆறுதலைத் தந்தது. அதில் ஆழ்ந்த கருத்துக்களையும் பகிடிபோல் உறவுகள் பதிந்தது என்னையும்  கவர்ந்ததால் நானும் பதிவுகளையும், பின்னூட்டங்களையும் பகிடிகளை இணைத்தே பதிந்துவந்தேன். பகிடிச்சிங்கம் என்று எனக்கும் பட்டந்தர யாழ்களம் என் பெயரைத் தெரிவுசெய்ததும் உண்டு.  :lol:
 
பச்சைப் புள்ளிகளைப் பெற்ற வாழ்த்துக்கும் பகிடியாகவே ஊட்டம் எழுதிப் பதிந்தேன்.  இருந்தும் பகிடியைப் பாம்பு கடிக்கும் என்பதை மறந்துவிட்டேனா? என இச்சமயம் எண்ணத் தோன்றுகிறது. எவரையும் மனம் நோகச்செய்வது எனது நோக்கமல்ல. அப்படியும் யாரையாவது நான் மனம்நோகச் செய்திருந்தால் தயவுடன் அவர்கள் என்னை மன்னிக்கும்படி வேண்டிக் கேட்டுக்கொள்கிறேன்.  :huh:  
 
உங்களின் பின்னூட்டம் என்னை நீங்கள் அறிந்திருப்பதை உணர்த்துகிறது.  :icon_idea:
 
படத்தில் உள்ள கோபுரத்தை எங்கள் வீட்டிலிருந்து பார்க்கலாம், :rolleyes:  
 
அந்த சித்தரின் பெயர் இன்னமும் என் புத்திக்கு வரவில்லை.  :(
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

....

அந்த சித்தரின் பெயர் இன்னமும் என் புத்திக்கு வரவில்லை.  :(

 

 

2e4dldz.jpg

 

இவர்தான் "தங்க தாத்தா" , உங்கள் "நவாலியூர் தாத்தா.."

 

யாழ்ப்பாணம் ஆஸ்பத்திரி வீதியில் தவமிருக்கிறார். :rolleyes:

 

"குருமடம் புகுந்தவுருவி லாக்காமன்

கல்விச்சாலையை பெற்றமிழ்ப் பித்துத்

தாய் மொழிமடவார் வாய்மொழியாக்கிச்

சமயமும் லீலாசமயமாய்ச் செய்து

நிகலில் தீக்கை நிருவாணமாக்கிச்

சந்நிதானங்கள் தந்நதானம் விடக்

குன்றிலுங்க குழியிலும் விழுத்தி

வருகின்றான்"

 

என எழுதி வைத்து சென்றுள்ளார்..!  பெயர் தெரியும் தானே? :)

 

Link to comment
Share on other sites

ஆடிப் பிறப்புக்கு நாளை விடுதலை
ஆனந்தம் ஆனந்தம் தோழர்களே!
கூடிப் பனங்கட்டிக் கூழுங் குடிக்கலாம்
கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே!!

 

 

நன்றி ராசவன்னியரே! 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

ஆடிப் பிறப்புக்கு நாளை விடுதலை

ஆனந்தம் ஆனந்தம் தோழர்களே!

கூடிப் பனங்கட்டிக் கூழுங் குடிக்கலாம்

கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே!!

 

 

நன்றி ராசவன்னியரே! 

 

ஆகா... கண்டுபிடித்துவிட்டீர்கள்...!  bjr2.gif

 

வாழ்த்துக்கள்..! :)

 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • 5 எள்ளு பாகுகள் பாக்கெட்டில் அடைத்து லேபல் ஒட்டி - வீட்டில் போய் வாங்கினால் ரூ 200 ( 50 பென்ஸ்). இலண்டனில் தமிழ் கடையில் குறைந்தது £3.50? ஏற்றுமதி செலவை கழித்து பார்த்தாலும்? பிகு எள்ளை இடித்து மாவாக்கி பிசையும் உருண்டை. எள்ளுருண்டை அல்ல.
    • அவள் ஒருநாள் வீதியோரம் கூடை நிறைந்த கடவுளர்களை கூவிக் கூவி விற்றுக்கொண்டிருந்தாள்   போவோர் வருவோரிடம் 'கடவுள் விற்பனைக்கு' என்று கத்திச் சொன்னாள்   அவள் சொன்னதை யாரும் கவனித்ததாகத் தெரியவில்லை   பிள்ளை பாலுக்கு அழுதது கடவுளர்களின் சுமை அவளின் தலையை அழுத்தியது   'கடவுள் விற்பனைக்கு' அவள் முகம் நிறைந்த புன்னகையுடன் மீண்டும் கூவினாள்   கடவுள் மீது விருப்புற்ற பலரால் கடவுள் அன்று பேரம் பேசப்பட்டார்   அந்நாளின் முடிவில் அவளின் வேண்டுதலை ஏற்றுக் கடவுளர்கள் அனைவரும் விலை போயினர்     தியா - காண்டீபன் மார்ச் 29, 2024 காலை 7:20
    • வருகை, கருத்துக்கு நன்றி. இரெண்டு வாரம் இல்லை. மாதம். ஆனால் இதை வைத்தும் கணிக்க முடியாதுதான். ஒரு ஊக கணிப்புத்தான். பேசிய பலரும் யாருக்கும் வாக்களிக்காத மனநிலையில், ஒதுங்கி போவதாகவே இருந்தார்கள். இவர்கள் வீட்டில் இருக்க, சலுகை அரசியலை விரும்புவோர் வாக்களித்தால் யாழில் தமிழ் தேசிய எம்பிகள் அளவு குறையும் என நினைக்கிறேன்.  ஜேவிபி க்கு முன்னர் இல்லாத ஆதரவு யாழில் உள்ளது. பிள்ளையார் இன்னில் அண்மையில் கூட்டம் வைத்து, உள்ளூர் பிரமுகர்கள் பலரும் சமூகமாகி இருந்தனர்.
    • சிறப்பான கவிதை... மகிழ்ச்சியாக இருங்கள் 
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.