Jump to content

ஒருநாள் போட்டியில் அதிகபட்ச ரன்கள்: சேவாக் உலக சாதனையை முறியடித்தார் ரோஹித் சர்மா


Recommended Posts

ஒருநாள் போட்டியில் அதிகபட்ச ரன்கள்: சேவாக் உலக சாதனையை முறியடித்தார் ரோஹித் சர்மா
rohit_1_2201619f_zps19431cee.jpg

இலங்கைக்கு எதிராக இரட்டைச் சதம் எடுத்த ரோகித் சர்மா, ஒருநாள் சர்வதேச கிரிக்கெட்டில் 2-வது இரட்டைச்சத சாதனையுடன் சேவாகின் சாதனையையும் முறியடித்தார். மேலும் ஒருநாள் சர்வதேச கிரிக்கெட்டில் 250 ரன்களைக் கடந்த முதல் வீரர் என்ற சாதனையையும் நிகழ்த்தினார் ரோகித் சர்மா.

கொல்கத்தாவில் இலங்கைக்கு எதிராக நடைபெற்று வரும் 4-வது ஒருநாள் போட்டியில் ரோகித் சர்மா இரட்டை சதம் அடித்தார். இதன் மூலம் ஒருநாள் கிரிக்கெட்டில் 2-வது இரட்டை சதம் அடித்த முதல் வீரர் என்ற சாதனையை நிகழ்த்தினார்.

மேலும் சேவாக் மே.இ.தீவுகளுக்கு எதிராக எடுத்த 219 ரன்களையும் கடந்து சாதனை புரிந்தார். எரங்கா பந்தை லாங் ஆஃப் திசையில் மிகப்பெரிய சிக்சர் அடித்து சேவாக் எடுத்த அதிகபட்ச ஒருநாள் கிரிக்கெட் ரன்கள் சாதனையைக் கடந்தார் ரோகித்.

ஏற்கெனவே ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 209 ரன்களை எடுத்த ரோகித் சர்மா, இன்று மீண்டும் இரட்டைச்சதம் விளாசினார்.

 

முதல் 100 பந்துகளில் சரியாக 100 ரன்களை எடுத்த ரோகித், அடுத்த 50 ரன்களை 26 பந்துகளில் எடுத்து 150 ரன்கள் எடுத்தார். பிறகு 151 பந்துகளில் 200 ரன்களை கடந்தார் ரோகித். குலசேகரா பந்தை எக்ஸ்ட்ரா கவர் திசையில் அபார பவுண்டரி அடித்து அவர் இரட்டைச் சதம் கண்டார். இரண்டாவது 100 ரன்களை அவர் 51 பந்துகளில் எடுத்தார். இதில் அவர் 25 பவுண்டரிகளையும் 5 சிக்சர்களையும் அடித்தார்.

 

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இரட்டைச் சதம் எடுத்த போதும் கோலி ரன் அவுட் ஆனார். இந்த முறையும் கோலி ரன் அவுட் ஆனார்.

சச்சின் டெண்டுல்கர் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக முதன் முதலாக இரட்டைசதம் எடுத்து சாதனை நிகழ்த்தினார்.

ஒருநாள் கிரிக்கெட்டில் தற்போது இந்திய அணியிலிருந்து 4 இரட்டைச் சதங்கள் எடுக்கப்பட்டுள்ளது.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A-%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE/article6594923.ece

Link to comment
Share on other sites

ரோஹித் சர்மாவை முன் வைத்து ஒருநாள் கிரிக்கெட்டில் சாதனைகள் ஒரு பார்வை
 

 

கொல்கத்தாவில் இன்று இலங்கைக்கு எதிராக 264 ரன்கள் எடுத்து சாதனை புரிந்தார் ரோஹித் சர்மா. ஒருநாள் கிரிக்கெட்டில் பெரிய சதங்கள் பற்றிய ஒரு பார்வையே இந்தப் பதிவு.

ஒருநாள் கிரிக்கெட்டில் 170 ரன்களுக்கும் மேல் எடுப்பது என்பது இப்போதெல்லாம் சாதாரணமாகிவிட்ட நிலையில். ஒருநாள் கிரிக்கெட்டின் ஆரம்ப காலக்கட்டத்தில் இருந்து இத்தகைய பெரிய சதங்களை எடுத்த வீரர்கள் பற்றி பார்ப்போம்:

1975 உலகக்கோப்பை போட்டிகளுக்கு முன்பாக ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் ஆட்டம் என்பது அவ்வளவு பிரபலமடையவில்லை. அப்போது 60 ஓவர்கள் கொண்ட போட்டிகளாக உலகக் கோப்பை ஒருநாள் போட்டிகள் அமைந்தன. அதுவும் இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கோப்பை போட்டிகளில் மட்டும்தான்.

அதன் பிறகு உலகக் கோப்பை போட்டிகள் இங்கிலாந்தை விட்டு வெளியே வரத் தொடங்கியதும் 50 ஓவர்கள் போட்டியாகவே நடத்தப்பட்டது.

1970-களில் குறிப்பாக 1975 உலகக் கோப்பைப் போட்டிகளில் முதன் முதலாக 170 ரன்களைக் கடந்த பேட்ஸ்மென் நியூசி. அணியின் கேப்டனும் தொடக்க வீரருமான கிளென் டர்னர். இவர் கிழக்கு ஆப்பிரிக்கா அணிக்கு எதிராக 171 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாக திகழ்ந்தார். இதற்காக அவர் 201 பந்துகளை எதிர்கொண்டார். அதில் 16 பவுண்டரிகள் 2 சிக்சர்கள் அடித்தார்.

 

 

1971 உலகக் கோப்பை போட்டிகளுக்குப் பிறகு சிலபல ஒருநாள் சர்வதேச போட்டிகள் நடைபெற்றன. 1979 உலகக் கோப்பைப் போட்டிகளில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விவ் ரிச்சர்ட்ஸ் எடுத்த ஸ்கோர் 153 ரன்கள். அந்த உலகக் கோப்பையில் இதுவே அதிகபட்ச ரன்கள். கிளென் டர்னர் சாதனையை அவரால் முறியடிக்க முடியவில்லை.

ஆனால் 1983 உலகக் கோப்பை போட்டிகளில்தான் இந்திய வீரர்களால் சாதிக்க முடியும் என்பது கபில்தேவினால் உருவானது. அவர் 18 ஜூன், 1983-ல் டர்ன்பிரிட்ஜ் வெல்ஸில் ஜிம்பாவே அணிக்கு எதிராக 175 ரன்களை எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்து கிளென் டர்னர் ரெக்கார்டை முறியடித்தார். 138 பந்துகளைச் சந்தித்த கபில்தேவ் 16 பவுண்டரிகள் 6 சிக்சர்களை அதில் விளாசியிருந்தார். இந்த இன்னிங்சின் மிகப்பெரிய நம்பமுடியாத விஷயம் என்னவெனில் பந்துகள் பயங்கரமாக ஸ்விங் ஆகிக்கொண்டிருந்தது.’

கபில்தேவ் களமிறங்கும் போது இந்தியா 9/4 என்று சரிவு கண்டது. அவர் இறங்கி 2 பவுண்டரிகளை அடித்த பிறகு ஸ்கோர் 17 ரன்களை எட்டிய போது 5-வது விக்கெட் விழுகிறது. 17 ரன்களுக்கு 5 விக்கெட்டுகள் சரிவு. கபில்தேவ் அதன் பிறகு 175 ரன்களை விளாசியது அனைத்து காலத்திற்குமான தலை சிறந்த ஒருநாள் சர்வதேச இன்னிங்ஸ் என்றால் அது மிகையான கூற்றல்ல. இந்த இன்னிங்ஸ்தான் கபிலையும் இந்திய அணியையும் ஒருநாள் கிரிக்கெட்டில் உலக அணிகளைத் திரும்பிப் பார்க்க வைத்தது. இந்த உலகக் கோப்பையில் இந்திய அணி பெரிய அச்சுறுத்தல் என்பதை மற்ற அணிகள் உணரவைத்த இன்னிங்ஸ் கபிலுடையது.

 

 

1983-ற்குப் பிறகும் கூட 170 ரன்களுக்கும் மேலான ஸ்கோர் என்பது நினைத்துப் பார்க்க முடியாததாகவே இருந்தது. ஆனால் விவ் ரிச்சர்ட்ஸ் 1984 ஆம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிராக 189 ரன்களைக் குவித்தது நீண்ட நாட்களுக்கு உடைக்க முடியாத ஒருநாள் சர்வதேச சாதனையாகவே இருந்தது. ரிச்சர்ட்ஸே தன் சாதனையை முறியடிக்க 1987 உலகக் கோப்பையில் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் அப்போது இலங்கைக்கு எதிராக அவர் 181 நாட் அவுட் என்று முடித்தார்.

அதன் பிறகு 13 ஆண்டுகள் சென்ற பிறகே இந்தியாவுக்கு எதிராக சென்னையில் பாகிஸ்தானின் சயீத் அன்வர் 194 ரன்களை அடித்து விவ் ரிச்சர்ட்ஸை முறியடித்து உலக சாதனையை தன் வசம் வைத்திருந்தார்.

 

2009ஆம் ஆண்டு ஜிம்பாவே வீரர் கோவெண்ட்ரி வங்கதேசத்திற்கு எதிராக 194 ரன்கள் எடுத்து சமன் செய்யவே முடிந்தது.

ஆனால் 24 பிப்ரவரி, 2010-ல் மாஸ்டர் பேட்ஸ்மென் சச்சின் டெண்டுல்கர், பலமான தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக குவாலியரில் முதன் முதலில் ஒருநாள் சர்வதேச இரட்டைச் சதம் எடுத்து சாதனை புரிந்தார்.

அதற்கு ஓராண்டுக்குப் பிறகு சேவாக் 219 ரன்கள் எடுத்தார். ரோகித் சர்மா ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 2013ஆம் ஆண்டில் 209 ரன்கள் எடுத்தார். இப்போது ரோகித் 2014ஆம் ஆண்டு 264 ரன்கள் எடுத்து சாதனை புரிந்துள்ளார்.

கள வியூகத்த்தில் ஏற்பட்டுள்ள புதிய விதிமுறைகளால் இத்தகைய இன்னிங்ஸ்கள் இப்போது சர்வசாதாரணமாகிவிட்டது. 50 ஓவர்களுக்கும் பீல்டிங்கில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இது கபில்தேவ் 175 அடித்த காலத்தில் கிடையாது.

ஆனாலும்... பெரிய இன்னிங்ஸ்களை விளையாட தனி எனெர்ஜியும், வெறியும் தேவை, அந்த விதத்தில் இரண்டரை மாத இடைவெளிக்குப் பிறகு ரோஹித் செய்த இந்த உலக சாதனையை குறைத்து மதிப்பிடுவதற்கில்லை.

 

இலங்கை அணியும் 2 மாத காலம் வலைப்பயிற்சி இல்லாமல்தான் இந்தத் தொடரில் திடீரென பங்கேற்றது. ஆனாலும் அவர்களால் ரோஹித் காட்டிய எனெர்ஜிக்கு முன்னால் ஒன்றும் செய்ய முடியவில்லை என்பதையும் நாம் கவனிக்க வேண்டும்.

ஆனாலும் அனைத்துப் பிட்ச்களிலும் இதே எனெர்ஜியுடன் அவர் விளையாடினால் சிறப்பாக இருக்கும், இந்த இன்னிங்ஸ், 2015 உலகக் கோப்பை போட்டிகளில் இவர் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. அதனை சுகமான சுமையாக ரோஹித் சர்மா சுமப்பாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும்.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%88/article6595626.ece

Link to comment
Share on other sites

'இன்னும் 50 ஓவர்கள் கூட விளையாடியிருப்பேன்': ரோஹித் சர்மா
 

 

இரட்டைச் சத உலக சாதனை நாயகனான ரோஹித் சர்மா, இன்று தான் இன்னும் 50 ஓவர்களைக் கூட ஆடியிருப்பேன் என்று கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறும்போது, “அணியின் ஸ்கோர் என்னவென்பதில் கவனம் தேவை, அப்படித்தான் இன்னிங்ஸைக் கட்டமைக்க வேண்டும். நம் அணி எந்த நிலையில் உள்ளது என்பதை அவ்வப்போது அறிய வேண்டும்.

எவ்வளவு ஓவர்களில் எவ்வளவு ரன்கள் எடுத்துள்ளோம், எந்த பவுலருக்கு எத்தனை ஓவர்கள் மீதமுள்ளன, இவையனைத்தையும் சிந்தித்த படியேதான் இன்னிங்ஸை கட்டமைக்க வேண்டும். அதைத்தான் இன்று செய்தேன்.

 

சில மாதங்கள் இடைவெளிக்குப் பிறகு ஆடினாலும் நான் உண்மையில் களைப்படையவில்லை. இன்று பெரிய இன்னிங்ஸ் ஒன்றை ஆடவேண்டும் என்ற உறுதியுடன் இருந்தேன். 50 ரன்களை எடுத்த பிறகே இதனை பெரிய ஸ்கோராக மாற்ற வேண்டும் என்று கருதினேன், ஏனெனில் இது ஒரு நல்ல பேட்டிங் பிட்ச். இந்த பிட்சில் 300-350 ரன்களைத் துரத்த முடியும், எனவேதான் கடைசி வரை நின்று பெரிய ஸ்கோரை எட்ட வேண்டும் என்று முடிவெடுத்தேன்”

என்றார் இன்று 173 பந்துகளில் 264 ரன்கள் எடுத்த ரோஹித் சர்மா.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%87%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-50-%E0%AE%93%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%82%E0%AE%9F-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%BE/article6595424.ece

Link to comment
Share on other sites

ரோஹித் உலக சாதனையை ட்விட்டரில் புகழ்ந்து தள்ளிய கிரிக்கெட் வீரர்கள்
 

 

இலங்கைக்கு எதிராக 264 ரன்கள் விளாசி உலகசாதனை புரிந்த ரோஹித் சர்மாவுக்கு கிரிக்கெட் வீரர்கள் பலர் ட்விட்டரில் புகழாரம் சூட்டியுள்ளனர்.

முதன் முதலில் ஒருநாள் போட்டிகளில் 2-வது இரட்டை சதம் எடுத்ததோடு, சேவாகின் 219 ரன்கள் உலக சாதனையை முறியடித்து, முதன் முதலாக 250 ரன்களுக்கும் மேல் குவித்து 3 சாதனைகளை நிகழ்த்திய ரோஹித் சர்மாவுக்கு நிறைய வாழ்த்துக்கள் குவிந்துள்ளன.

 

கேப்டன் தோனி: மிகச்சிறப்பாக ஆடினாய் ரோஹித், இதுதான் அனைவருக்குமான ரோஹித் சர்மா. முழுத்திறமை.. அருமையான இன்னிங்ஸை மகிழ்வுடன் பார்த்து ரசித்தேன்.

 

ரவீந்திர ஜடேஜா தனக்கேயுரிய பாணியில்: ரோஹித் சர்மா, கடவுள் ராமருக்குப் பிறகு இலங்கைகு எதிராக சிறந்த இத்தகைய திறமையை வெளிப்படுத்தியுள்ளார்.

 

ஹர்பஜன் சிங்: இந்த சாதனை நிலைத்து நிற்கும். பார்க்க மிகவும் அபாரமாக இருந்த இன்னிங்ஸ். வரலாறு உருவாக்கியதற்காக பாராட்டுக்கள்.

 

அனில் கும்ளே: அடுத்த இலக்கு ஐபிஎல் கிரிக்கெட்டில் இரட்டைச் சதம். எதுவும் முடியும் (அவரால்), இன்னும் என்னால் நம்ப முடியவில்லை.

 

சஞ்சய் மஞ்சுரேக்கர்: நல்ல பேட்டிங் பிட்ச், வெகு சாதாரணமான பந்துவீச்சு, என்ற பேச்செல்லாம் நிலைக்காது, 173 பந்துகளில் 264 ரன்கள் என்பது சாதாரணமானடு அல்ல.

 

இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வான்: முச்சதம் எடுக்கவில்லை என்பதை என்னால் நம்ப முடியவில்லை. 2 ஒருநாள் இரட்டைச் சதம் எடுத்துள்ளார். என்னால் ஒரு சதம் கூட எடுக்க முடியவில்லை. யூஸ்லெஸ்.

 

இவ்வாறு அவர்கள் தங்கள் ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளனர்.

 

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%B9%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article6595547.ece

Link to comment
Share on other sites

சாதனைகள் பலவுடன் 250 ஓட்டங்களை கடந்தார் ரோகித்
 

rohith_zpsab2f97f2.jpg

இலங்கை அணிக்கு எதிராக இடம்பெற்றுவரும் 4 ஆவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் துடுப்பாட்ட வீரர் ரோகித் சர்மா அதிரடியாக துடுப்பெடுத்தாடி 264 ஓட்டங்களைப் பெற்று  புதிய உலக சாதனையை படைத்துள்ளார்.

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான நான்காவது ஒரு நாள் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் அரங்கில் இடம்பெற்று வருகின்றது.

இலங்கைக்கு எதிராக இரட்டைச் சதம் எடுத்த ரோகித் சர்மா, ஒருநாள் சர்வதேச கிரிக்கெட்டில் 2 ஆவது இரட்டைச்சத சாதனையுடன் சேவாகின் சாதனையையும் முறியடித்தார்.

 

1907889_10152461483437555_40464825000722
மேலும் ஒருநாள் சர்வதேச கிரிக்கெட்டில் 250 ஓட்டங்களைக் கடந்த முதல் வீரர் என்ற சாதனையையும் நிகழ்த்தினார்.

இதேவேளை, ஒருநாள் கிரிக்கெட்டில் 2 ஆவது இரட்டை சதம் அடித்த முதல் வீரர் என்ற சாதனையையும் நிகழ்த்தினார்.

மேலும் சேவாக் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராக எடுத்த 219 ஓட்டங்களையும் கடந்து சாதனை புரிந்தார்.

முதல் 100 பந்துகளில் சரியாக 100 ஓட்டங்களை எடுத்த ரோகித், அடுத்த 50 ஓட்டங்களை 26 பந்துகளில் எடுத்து 150 ஓட்டங்களை எடுத்தார். பிறகு 151 பந்துகளில் 200 ஓட்டங்களை கடந்தார்.

 

 

இரண்டாவது 100 ஓட்டங்களை அவர் 51 பந்துகளில் எடுத்தார். இதில் அவர் 25 பவுண்டரிகளையும் 5 சிக்சர்களையும் அடித்தார்.

சச்சின் டெண்டுல்கர் தென்னாபிரிக்காவுக்கு எதிராக முதன் முதலாக இரட்டைசதம் எடுத்து சாதனை நிகழ்த்தினார்.

ஒருநாள் கிரிக்கெட்டில் தற்போது இந்திய அணியிலிருந்து 4 இரட்டைச் சதங்கள் எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இந்திய அணி 50 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகளை இழந்து 404 ஓட்டங்களைப் பெற்றுள்ளது.

 

http://www.virakesari.lk/articles/2014/11/13/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B2%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-250-%E0%AE%93%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%88-%E0%AE%95%E0%AE%9F%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B0%E0%AF%8B%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D

Link to comment
Share on other sites

இலங்கை கிரிக்கட் அணி சொதப்பினால் இலங்கை அரசாங்கத்துக்கு கட்டம் சரியில்லை என்று பொருள்.. :lol:

Link to comment
Share on other sites

201411140200240591_One-day-cricketMatche
ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் ரோகித் சர்மா உலக சாதனை 264 ரன்களை குவித்தார்
 
இலங்கைக்கு எதிராக நேற்று நடைபெற்ற ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 264 ரன்கள் குவித்து ரோகித் சர்மா உலக சாதனை படைத்தார்.

கொல்கத்தா, 

மேத்யூஸ் தலைமையிலான இலங்கை கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் பங்கேற்றுள்ளது.

முதல் 3 ஆட்டங்களில் இந்திய அணி வெற்றி பெற்றது.

கொல்கத்தா போட்டி

இந்த நிலையில் இந்தியா- இலங்கை இடையிலான 4-வது ஒரு நாள் போட்டி கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானத்தில் நேற்று நடந்தது. டாசில் ஜெயித்த இந்தியா முதலில் பேட் செய்தது. இதில் தொடக்க ஆட்டக்காரராக களம் புகுந்த ரோகித் சர்மா இரட்டை சதம் எடுத்து புதிய வரலாற்று நாயகனாக உருவெடுத்தார்.

அவர் ஆரம்பத்தில் நிதானத்தை கடைபிடித்து ரசிகர் களை கொஞ்சம் வெறுப்பேற்றினார் என்றே சொல்லலாம். 72 பந்துகளில் தான் 50 ரன்களை தொட்டார். அதைத் தொடர்ந்து சதத்தை கடந்ததும் அவரது ஆட்டத்தில் சூடுபிடித்தது.

விழிபிதுங்கியபவுலர்கள்

மைதானத்தின் நாலாபுறமும் பந்துகளை விரட்டியடித்து பிரமிக்க வைத்த ரோகித் சர்மா இலங்கையின் பந்து வீச்சை வெளுத்து வாங்கினார். ஆடுகளம் முழுக்க முழுக்க பேட்டிங்குக்கு சொர்க்கமாக திகழ்ந்தது அவருக்கு இன்னும் வசதியாக போய் விட்டது. 7 பந்து வீச்சாளர்களை பயன்படுத்தி பார்த்தும் அவரது ரன்வேட்டையை கட்டுப்படுத்த முடியாமல் இலங்கை கேப்டன் மேத்யூஸ் விழிபிதுங்கி நின்றார்.

குலசேகராவின் ஓவரில் சிக்சர்களும் பவுண்டரிகளும் பறந்தன. சுழற்பந்து வீச்சாளர் அஜந்தா மென்டிசின் ஒரே ஓவரில் தொடர்ந்து 4 பவுண்டரிகள் ஓடின. பிரசன்னா, மேத்யூஸ், திசரா பெரேரா, எரங்கா என்று அவரது தாக்குதலில் இருந்து எந்த பந்து வீச்சாளரும் தப்பவில்லை.

ரோகித் சர்மா 264 ரன்

ரோகித் சர்மாவின் விசுவரூபத்தால் மிரண்டு போன இலங்கை வீரர்கள் இறுதி கட்டத்தில், ரசிகர்கள் போல் கைகட்டி வேடிக்கை மட்டுமே பார்த்தனர். அந்த அளவுக்கு அவரது பேட் சுழன்று, சுழன்று ருத்ரதாண்டவமாடியது.

வாணவேடிக்கையால் மகிழ்ச்சியிலும், ஆர்ப்பரிப்பிலும் மிதந்து கொண்டிருந்த ஈடன்கார்டன் ஸ்டேடியத்தில், ரோகித்...ரோகித்... என்று ரசிகர்கள் விடாமல் கோஷம் எழுப்பிக் கொண்டே இருந்தனர். 151 பந்துகளில் தனது 2-வது இரட்டை சதத்தை பூர்த்தி செய்த ரோகித் சர்மா இன்னிங்சின் கடைசி பந்தில் 264 ரன்கள் (173 பந்து, 33 பவுண்டரி, 9 சிக்சர்) விளாசிய நிலையில் கேட்ச் ஆகி ஆட்டம் இழந்தார். அவரது சரவெடியால் இந்திய அணி 5 விக்கெட்டுக்கு 404 ரன்கள் சேர்த்தது.

புதிய சாதனை

ரோகித்சர்மா ஏற்கனவே கடந்த ஆண்டு இதே நவம்பர் மாதம் பெங்களூரில் நடந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 209 ரன்கள் திரட்டியிருந்தார். இதன் மூலம் 41 ஆண்டுகால ஒரு நாள் கிரிக்கெட் போட்டி சரித்திரத்தில் இரண்டு முறை இரட்டை சதம் ருசித்த முதல் வீரர் என்ற புதிய சாதனையை எட்டினார். இதில் 186 ரன்களை அவர் பவுண்டரி, சிக்சர் மூலமே எடுத்து விட்டார்.

அத்துடன் ஒரு நாள் போட்டியில் அதிகபட்ச ரன்கள் குவித்த வீரர் என்ற பெருமையும் அவருடன் ஒட்டிக் கொண்டது. இதற்கு முன்பு இந்தியாவின் ஷேவாக் 2011-ம் ஆண்டு வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக 219 ரன்கள் எடுத்ததே அதிகபட்சமாக இருந்தது. அவரது 3 ஆண்டு கால சாதனைக்கு ரோகித் சர்மா நேற்று ‘வேட்டு’ வைத்திருக்கிறார்.

மேலும் ஒரு இன்னிங்சில் அதிக பவுண்டரிகள் (33 பவுண்டரி) அடித்த வீரர் என்ற சிறப்பும் அவரது வசம் ஆனது. முன்பு சச்சின் தெண்டுல்கரும், ஷேவாக்கும் தங்களது இரட்டை சதத்தின் போது தலா 25 பவுண்டரி விளாசியதே அதிகபட்சமாக இருந்தது.

ஈடன்கார்டன் கொண்டாட்டம்

கிரிக்கெட் உலகை திரும்பி பார்க்க வைத்துள்ள மும்பையைச் சேர்ந்த 27 வயதான ரோகித் சர்மா, கடந்த ஆகஸ்டு மாதம் இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தின் போது கைவிரலில் ஏற்பட்ட காயத்தால் இரண்டரை மாதங்கள் ஓய்வில் இருந்தார். அதன் பிறகு களம் இறங்கிய முதல் ஆட்டத்திலேயே மெய்சிலிர்க்க வைத்து விட்டார்.

கொல்கத்தா ஈடன்கார்டன் மைதானம் உருவாக்கப்பட்டு தற்போது 150-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளது. இதையொட்டி நடத்தப்பட்ட இந்த போட்டி ரசிகர்களின் மனதில் என்றென்றும் நினைவில் இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.

அவருக்கு கேப்டன் டோனி உள்பட பல்வேறு வீரர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

 
Link to comment
Share on other sites

ரோஹித் சர்மாவுக்காக நிர்வாண போட்டோவை அர்ப்பணித்த சோபியா ஹயாத்

 

மும்பை: நடிகையும், மாடலுமான சோபியா ஹயாத் தனது முன்னாள் காதலரும், கிரிக்கெட் வீரருமான ரோஹித் சர்மா இலங்கைக்கு எதிரான ஒருநாள் போட்டியில் 264 ரன்கள் குவித்ததற்காக நிர்வாண போட்டோவை வெளியிட்டுள்ளார். கிரிக்கெட் வீரர்கள் வெற்றி பெற்றால் அவர்களை நேரிலோ, போனிலோ பாராட்ட வேண்டியது தானே. ஆனால் தற்போது மாடல்கள் பூனம் பாண்டே, சோபியா ஹயாத் போன்றோர் தங்கள் பப்ளிசிட்டிக்காக பாராட்டுகிறேன் என்ற பெயரில் நிர்வாண புகைப்படத்தை வெளியிடுகிறார்கள். இந்த பழக்கத்தை நம் நாட்டில் துவங்கி வைத்த புண்ணியம் இந்த பூனம் பாண்டேவைச் சேரும்.

 

கொல்கத்தா நைட்ரைடர்ஸ் ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி கோப்பையை வென்றபோது பூனம் நிர்வாணமாக போஸ் கொடுத்த போட்டோவை வெளியிட்டார்.

ரோஹித் சர்மா ரோஹித் சர்மா இலங்கைக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 264 ரன்கள் எடுத்து புதிய சாதனை படைத்துள்ளதை பாராட்டுகிறேன் என்ற பெயரில் நிர்வாண போட்டோவை வெளியிட்டுள்ளார் சோபியா ஹயாத்

 

அர்ப்பணிப்பு என் நிர்வாண போட்டோஷூட்டை வரலாற்று சாதனை ரன்களை குவித்த ரோஹித் சர்மாவுக்கு அர்ப்பணிக்கிறேன். இது உனக்காக. இந்தியாவுக்கு பெருமையான தினம் என்று சோபியா ட்வீட் செய்து நிர்வாண போட்டோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

வழிகள் இருக்கு பாராட்டுவதற்கு எத்தனையோ வழிகள் உள்ளது. இந்நிலையில் எதற்கெடுத்தாலும் பொசுக்கு பொசுக்கென்று நிர்வாண போஸ் போட்டோவை வெளியிடுவதை பார்த்து பலரும் முகம் சுளிக்கிறார்கள் என்பதை சோபியா போன்றோர் என்று புரிந்து கொள்வார்களோ.

 

http://tamil.filmibeat.com/news/sofia-hayat-dedicates-full-nude-pic-rohit-sharma-after-his-record-double-ton-031799.html

 

Link to comment
Share on other sites

நொந்து போனது பந்து: ரோகித் அடித்து நொறுக்கியது எப்படி
நவம்பர் 14, 2014.

கோல்கட்டா: ஒருநாள் கிரிக்கெட் அரங்கில் உச்சத்தை தொட்டிருக்கிறார் ரோகித் சர்மா. இலங்கைக்கு எதிரான கோல்கட்டா போட்டியில் பந்தே நொந்து போகும் அளவுக்கு அதிரடியாக ஆடிய இவர், பல்வேறு சாதனைகளை படைத்தார். தனது சாதனை பயணம் இன்னும் தொடரும் என்று உற்சாகமாக கூறும் இவர், அடுத்த உலக கோப்பை தொடரிலும் அசத்த காத்திருக்கிறார்.

கோல்கட்டாவில் நடந்த இலங்கைக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியில், இந்தியாவின் ரோகித் சர்மா 264 ரன்கள் எடுத்தார். இதன்மூலம் ஒருநாள் அரங்கில், இரண்டாவது முறையாக இரட்டை சதம், ஒரு இன்னிங்சில் அதிக ரன்கள், அதிக பவுண்டரிகள்(33) அடித்து புதிய உலக சாதனை படைத்தார்.

இதுகுறித்து ரோகித் கூறியது:

ஒருநாள் அரங்கில் இரண்டாவது முறையாக இரட்டை சதம் அடித்தது மகிழ்ச்சி. இத்துடன் எனது சாதனை பயணம் முடிந்து விடாது. ஏனெனில் சாதிப்பதற்கு நிறைய உள்ளன. இதற்கு எல்லை கிடையாது. இளம் வயதில் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் விளையாட விரும்பினேன். அப்போது, உலக சாதனை படைப்பேன் என நினைக்கவில்லை. இந்த சாதனை மூலம், என் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

 

சாதனை எப்படி:

காயத்தில் இருந்து மீண்டு, இரண்டு மாதங்களுக்கு பின், கோல்கட்டா போட்டியில் பங்கேற்ற போது ஒருவித பதட்டம் இருந்தது. இருப்பினும், நீண்ட நேரம் பேட்டிங் செய்ய வேண்டும் என, எனக்கு நானே மனதுக்குள் கூறிக் கொண்டேன். இதற்கேற்ப மறுமுனையில் நின்ற ரகானே, வேகமாக ரன் சேர்த்ததால், என்னால் நிதானமாக விளையாட முடிந்தது. முதல் 15 ஓவர்கள் சவாலாக இருந்தது. அதன்பின் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி இரட்டை சதம் அடித்தேன்.

எனது வெற்றிக்கு பி.சி.சி.ஐ., ‘பிஸியோதெரபிஸ்ட்’ வைபவ் முக்கிய காரணம். கடந்த இரண்டு மாதங்களாக காயத்தில் இருந்த போது, இழந்த உடற்தகுதியை மீட்க உதவினார்.

 

ரசிகர்கள் ஆதரவு:

கடந்த முறை 209 ரன்கள் எடுத்த போது, என்னுடன் இருந்த சகவீரர்கள் சிலர் இன்னும் 10 ரன்கள் எடுத்திருந்தால் சேவக் சாதனையை சமன் செய்திருக்கலாம் என்றனர். இலங்கைக்கு எதிரான போட்டியில், சேவக்கின் சாதனையை முறியடித்தது ஆச்சரியம் அளித்தது. இப்போட்டியில் துவக்க வீரராக களமிறங்கி, கடைசி ஓவர் வரை ‘பேட்டிங்’ செய்தது மகிழ்ச்சி.

கோல்கட்டா, ஈடன் கார்டன் மைதானம் எனக்கு ராசியானதாக உள்ளது. இங்கு விளையாடிய டெஸ்ட், ரஞ்சி, ஐ.பி.எல்., போட்டிகளில் சதம் அடித்துள்ளேன். இதற்கு ரசிகர்கள் தந்த ஆதரவு முக்கிய காரணம்.

உலக கோப்பை தொடர் குறித்து சிந்திக்கவில்லை. அதற்கு இன்னும் நிறைய நாட்கள் உள்ளன. இதிலும் நிச்சயமாக சாதிப்பேன். தற்போது கவனம் முழுவதும் ஆஸ்திரேலிய பயணத்தின் மீது மட்டும் உள்ளது. ஆஸ்திரேலிய அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்துவது கடினம் என்பதால், இந்திய அணிக்கு கடுமையான சவால் காத்திருக்கிறது. முத்தரப்பு தொடருக்கு முன், டெஸ்ட் தொடரில் விளையாடுவது இந்திய அணிக்கு சாதகமான விஷயம்.

இவ்வாறு ரோகித் சர்மா கூறினார்.

 

சச்சின் வாழ்த்து

சச்சின் கூறுகையில், ‘‘இப்போட்டியை என்னால் பார்க்க முடியவில்லை. இருப்பினும் இரண்டாவது முறையாக இரட்டை சதம் அடித்த ரோகித் சர்மாவுக்கு வாழ்த்துகள். இது, அடுத்து வரவுள்ள ஆஸ்திரேலிய தொடருக்கு ஊக்கம் அளிக்கும்,’’ என்றார்.

 

186

இலங்கைக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியில், இந்தியாவின் ரோகித் சர்மா எடுத்த 264 ரன்னில், பவுண்டரி (33), சிக்சர் (9) மூலம் 186 ரன்கள் கிடைத்தன. இதன்மூலம் ஒருநாள் அரங்கில், ஒரு போட்டியில் பவுண்டரி, சிக்சர் மூலம் அதிக ரன்கள் எடுத்த வீரர்கள் வரிசையில், முதலிடம் பிடித்தார். முன்னதாக கடந்த 2010ல் வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் 185 ரன்கள் எடுத்த ஆஸ்திரேலியாவின் ஷேன் வாட்சன், பவுண்டரி (15), சிக்சர் (15) மூலம் 150 ரன்கள் எடுத்தது சாதனையாக இருந்தது.

 

198

இலங்கைக்கு எதிரான 4வது ஒருநாள் போட்டியில், இந்தியா சார்பில் அதிக ரன்கள் எடுத்த ரோகித் சர்மா (264 ரன்), விராத் கோஹ்லி (66) ஆகியோருக்கு இடையிலான வித்தியாசம் 198 ரன்கள். இதன்மூலம் ஒருநாள் அரங்கில், இப்போட்டியில் தான் அதிக ரன்கள் எடுத்த முதலிரண்டு வீரர்களுக்கு இடையே அதிக வித்தியாசம் இருந்தது. இதற்கு முன், 1984ல் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் அதிக ரன்கள் எடுத்த வெஸ்ட் இண்டீசின் விவியன் ரிச்சர்ட்ஸ் (189), எல்டின் பாப்டிஸ்டி (26) ஆகியோருக்கு இடையிலான வித்தியாசம் 163 ரன்களாக இருந்தது.

 

153

இந்தியாவின் ரோகித் சர்மா (264, எதிர்–இலங்கை, 2014, கோல்கட்டா), சச்சின் (200*, எதிர்–தென் ஆப்ரிக்கா, 2010, குவாலியர்), சேவக் (209, எதிர்–வெஸ்ட் இண்டீஸ், 2011, இந்துார்) ஆகியோர் இரட்டை சதம் அடித்த போது இந்திய அணி 153 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது, ஒற்றுமையான விஷயம்.

 

http://sports.dinamalar.com/2014/11/1415984895/rohitindiacricket.html

Link to comment
Share on other sites

இன்றுதான் இந்த ஆட்டத்தினைப் பார்த்தேன்.. இவர் பத்து ஓட்டங்களுக்குள் எடுத்து இருக்கும்போது ஒரு பிடியை தவறவிட்டார்கள். அதற்கான தண்டனையை அனுபவித்தார்கள்.. :D

Link to comment
Share on other sites

ரோஹித் சர்மா 4 ஓட்டங்கள் எடுத்து இருந்தபோது திஸ்சேர பெரேரா கேட்ச்யை பிடிக்க தவறவிட்டார். அதன் பிறகு 200 ஓட்டங்கள் அவர் எடுத்த பிறகும் 3 கேட்ச்களை தவற விட்டார்கள்.  இந்த தொடர் முழுவதும் சதம் அடித்த இந்திய வீரர்களின் கேட்ச்கள் தவற விட பட்டபின்தான் சதம் அடித்தார்கள்.

Link to comment
Share on other sites

ரோஹித் ஷர்மாவின் சாதனையும் முறியடிக்கப்படுமா?

 

கொல்­கட்­டாவின் ஈடன் கார்டன் மைதா­னத்தில் கடந்த 13ஆம் திக­தி­யன்று இலங்­கைக்கு எதி­ரான 4ஆவது ஒருநாள் போட்­டியில் இந்­திய அணியின் ரோஹித் ஷர்மா இரண்­டா­வது முறை­யாக இரட்டை சதம் அடித்­த­துடன், 264 ஓட்­டங்­களை குவித்து ஒருநாள் அரங்கில் அதிக ஓட்­டங்­களை விளா­சிய வீரர் என்ற புதிய உலக சாத­னையை நிகழ்த்­தினார். இவர் 173 பந்­து­களை எதிர்­கொண்டு 33 பௌண்­ட­ரிகள் 9 சிக்­ஸர்கள் அடங்­க­லாக 264 ஓட்­டங்­களை பெற்­றுக்­கொண்டார். ஒரு நாள் அரங்கில் குறித்த இன்­னிங்­ஸொன்றில் வீர­ரொ­ரு­வரால் பெறப்­பட்ட அதி­கூ­டிய பெளண்­ட­ரி­களின் எண்­ணிக்­கையும் இது­வாகும்.

 

இந்த அதி­கூ­டிய தனி நப­ருக்­கான ஓட்ட சாதனை என்ற உலக சாத­னையை ரோஹித் சர்மா தன்­வசம் படைப்­ப­தற்கு முன்னர் 11 வீரர்­க­ளுக்குச் சொந்­த­மா­ன­தாக இருந்­தது. இதுவே சாத­னைகள் என்­றா­வது முறி­ய­டிக்­கப்­படக் கூடி­யன என்­பதற்கு ஓர் சிறந்த எடுத்­துக்­காட்­டாகும்.

இந்த சாத­னைகள்

 

விபரம் குறித்து ஓர் பார்வை...

 

ஜோன் எட்ரிச் -– இங்­கி­லாந்து

இங்­கி­லாந்து கிரிக்கெட் அணி வீர­ரான இவர் முதல் முத­லாக நடை­பெற்ற சர்­வ­தேச ஒரு நாள் கிரிக்கெட் போட்­டியில் தனி­ந­ப­ருக்­கான அதி­கூ­டிய ஓட்­டங்­களை பெற்­ற­வ­ராவார். இன்று ரோஹித் சர்மா படைத்­தி­ருக்கும் சாத­னைக்கு முதல் சொந்­தக்­காரர் இவரே ஆகும். முத­லா­வது சர்­வ­தேச கிரிக்கெட் விளை­யாட்டுப் போட்டி 1971ஆம் ஆண்டு ஜன­வரி 5ஆம் திகதி அவுஸ்­தி­ரே­லி­யாவின் மெல்போர்ன் நகரில் இங்­கி­லாந்து கிரிக்கெட் அணிக்கும் அவுஸ்­தி­ரே­லிய கிரிக்கெட் அணிக்கும் இடையில் நடை­பெற்­றது.

இந்த போட்­டி­யி­லேயே ஜோன் எட்ரிச் 82 ஓட்­டங்­களைப் பெற்­றுக்­கொண்டார். இதுவே ஒரு நாள் கிரிக்கெட் அரங்கில் தனி­நபர் ஒருவர் பெற்­றுக்­கொண்ட அதி­கூ­டிய ஓட்ட எண்­ணிக்­கை­யாகும். இவர் தனது கிரிக்கெட் அரங்கில், 77 டெஸ்ட் போட்­டி­களில் பங்­கு­பற்றி 5,138 ஓட்­டங்­களை பெற்­றுள்­ள­துடன் ஆட்­ட­மி­ழக்­காமல் 310 ஓட்­டங்­களை பெற்­றுக்­கொண்­ட­மையே இவரின் அதிக பட்ச ஓட்ட எண்­ணிக்­கை­யாகும். சர்­வ­தேச ஒருநாள் கிரிக்­கெட்டில் 7 போட்­டி­களில் பங்­கு­பற்றி 223 ஓட்­டங்­க­ளையும் பெற்­றுள்ளார். இவர் அதி­க­பட்­ச­மாக 90 ஓட்­டங்­களை பெற்­றுள்ளார்.

 

டென்னிஸ் ஆமிஸ் -– இங்­கி­லாந்து

ஜோன் எட்ரிச் படைத்த சாத­னையை இரண்­டா­வது சர்­வ­தேச ஒருநாள் போட்­டி­யி­லேயே இங்­கி­லாந்தின் டென்னிஸ் ஆமிஸ் முறி­ய­டித்து தனது பெயரை அதில் பதித்­துக்­கொண்டார். இந்தப் போட்டி 1972 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 24 ஆம் திகதி இங்­கி­லாந்தின் மென்­செஸ்­டரில் இடம்­பெற்ற போட்­டியில் டென்னிஸ் ஆமிஸ் 103 ஓட்­டங்­களைப் பெற்று சாதனை படைத்தார். இவர் 50 டெஸ்ட் போட்­டி­களில் பங்­கு­பற்றி 3,612 ஓட்­டங்­களை பெற்­றுள்­ள­துடன் அதிக பட்­ச­மாக ஆட்­ட­மி­ழக்­காமல் 262 ஓட்­டங்­களை பெற்­றுள்ளார். சர்­வ­தேச ஒருநாள் கிரிக்­கெட்டில் 18 போட்­டி­களில் பங்­கு­பற்றி 859 ஓட்­டங்­களை பெற்­றுள்­ள­துடன் அதி­க­பட்­ச­மாக 137 ஓட்­டங்­களை பெற்­றுள்ளார். ஒரு நாள் கிரிக்கெட் அரங்கில் முத­லா­வது சதத்தை பெற்ற வீர­ருக்­கு­ரிய சாத­னையைப் படைத்­த­வரும் இவரே ஆவார்.

 

ரோய் ப்ரெட்றிக்ஸ் –- மேற்­கிந்­தியத் தீவுகள்

சர்­வ­தேச ஒரு நாள் அரங்கின் 9ஆவது போட்டி 1973ஆம் ஆண்டு செப்­டெம்பர் 7 ஆம் திகதி லண்டன் ஓவல் மைதா­னத்தில் நடை­பெற்­றது.

இப்­போட்­டியில் இங்­கி­லாந்து அணியை மேற்­கிந்­தியத் தீவுகள் அணி எதிர்த்து விளை­யா­டி­யி­ருந்­தது. இந்த போட்­டியில் மேற்­கிந்­தியத் தீவுகள் அணியின் ரோய் ப்ரெட்றிக்ஸ் 105 ஓட்­டங்­களைப் பெற்று அது­வரை இங்­கி­லாந்து வச­மி­ருந்த சாத­னையை தன்­வ­சப்­ப­டுத்­திக்­கொண்டார். இவர் 59 டெஸ்ட் போட்­டி­களில் பங்­கு­பற்றி 4,334 ஓட்­டங்­களை பெற்­றுள்­ள­துடன் அதிக பட்­ச­மாக 169 ஓட்­டங்­களை பெற்­றுள்ளார். சர்­வ­தேச ஒருநாள் கிரிக்­கெட்டில் 12 போட்­டி­களில் பங்­கு­பற்றி 311 ஓட்­டங்­களை பெற்­றுள்­ள­துடன் அதி­க­பட்­ச­மாக 105 ஓட்­டங்­களை பெற்­றுள்ளார்.

 

டேவிட் லொய்ட்- – இங்­கி­லாந்து

இங்­கி­லாந்தின் நொட்­டிங்ஹாம் மைதா­னத்தில் சர்­வ­தேச ஒரு நாள் அரங்கின் 14 ஆவது போட்டி 1974ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31ஆம் திக­தி­யன்று பாகிஸ்தான் அணிக்­கெ­தி­ராக நடை­பெற்ற போட்­டியில் இங்­கி­லாந்து அணியைச் சேர்ந்த டேவிட் லொயிட் மேற்­கிந்­தியத் தீவுகள் அணியின் ரோய் ப்ரெட்றிக்ஸ் படைத்­தி­ருந்த சாத­னையை முறி­ய­டித்தார். இவர் இந்தப் போட்­டியில் ஆட்­ட­மி­ழக்­காமல் 116 ஓட்­டங்­களைப் பெற்­றுக்­கொண்டார். இவர் 9 டெஸ்ட் போட்­டி­களில் பங்­கு­பற்றி 552 ஓட்­டங்­களை பெற்­றுள்­ள­துடன் அதிக பட்­ச­மாக ஆட்­ட­மி­ழக்­காமல் 214 ஓட்­டங்­களை பெற்­றுள்ளார். சர்­வ­தேச ஒருநாள் கிரிக்­கெட்டில் 8 போட்­டி­களில் பங்­கு­பற்றி 285 ஓட்­டங்­களை குவித்­துள்ளார். இவர் படைத்த சாத­னையே இவரின் அதி­க­பட்ச ஓட்ட எண்­ணிக்­கை­யாகும்.

 

கிெளன் டேர்னர் –- நியூ­ஸி­லாந்து

நியூ­ஸி­லாந்து கிரிக்கெட் அணி யைச் சேர்ந்த கிெளன் டேர்னர் 1975ஆம் ஆண்டு ஜூன் 7ஆம் திகதி இங்­கி­லாந்தின் பேர்­மிங்ஹாம் மைதா­னத்தில் கிழக்கு ஆபி­ரிக்க அணிக்­கெ­தி­ரான போட்­டி­யின்­போது 171 ஓட்­டங்­களை பெற்று சாதனை படைத்தார். இதுவே ஒரு நாள் முதன் முறை­யாக தனி­நபர் ஒருவர் 150 ஓட்­டங்கள் என்ற மைல்­கல்லை கடந்த முத­லா­வது சந்­தர்ப்­ப­மாக அமைந்­தது. இது சர்­வ­தேச ஒருநாள் கிரிக்கெட் அரங்கின் 20 ஆவது ஒருநாள் போட்­டி­யாகும். இவர் தனது கிரிக்கெட் வாழ்வில் 41 டெஸ்ட் போட்­டி­க­ளிலும் 41 ஒருநாள் போட்­டி­க­ளிலும் விளை­யா­டி­யுள்ளார். அதில் 2,991 ஓட்­டங்­களை டெஸ்ட் அரங்­கிலும் 1,598 ஓட்­டங்­களை ஒரு நாள் அரங்­கிலும் பெற்­றுள்ளார். இதில் 259 ஓட்­டங்கள் டெஸ்ட் போட்­டி­யிலும் 171 ஓட்­டங்­களை ஆட்­ட­மி­ழக்­காமல் பெற்­றுக்­கொண்­ட­மையும் இவரின் அதிக பட்ச தனி­நபர் ஓட்ட எண்­ணிக்­கையாகும்.

 

கபில் தேவ் –- இந்­தியா

இந்­தி­யா­வுக்கு முதல் முறை­யாக உலகக் கிண்­ணத்தை வென்று கொடுத்­தவர் இந்­தி­யாவின் முன்னாள் அணித்­த­லை­வ­ரான கபில் தேவ் ஆவார். சர்­வ­தேச ஒருநாள் அரங்கின் 216 ஆவது போட்டி 1983 ஆம் ஆண்டு ஜூன் 18 ஆம் திக­தி­யன்று டுன்­பி­ரிட்ஜ்வெல்ஸ் மைதா­னத்தில் ஸிம்­பாப்வே மற்றும் இந்­திய அணி­க­ளுக்­கி­டையில் நடை­பெற்­றது. இப் போட்­டியில் கபில் தேவ் 175 ஓட்­டங்­களை ஆட்­ட­மி­ழக்­காமல் பெற்று 8 வரு­டங்­க­ளாக கிளன் டேர்னர் வச­மி­ருந்த சாத­னையை முறி­ய­டித்து தன்­வ­சப்­ப­டுத்­தினார். இச்­சா­த­னையைப் புரிந்த முதல் இந்­திய வீரர் என்ற பெரு­மையும் இவ­ரையே சாரும்.

இவர் 131 டெஸ்ட் போட்­டி­களில் பங்­கு­பற்றி 5,248 ஓட்­டங்­களை பெற்­றுள்­ள­துடன் அதிக பட்­ச­மாக 163 ஓட்­டங்­களை பெற்­றுள்ளார். சர்­வ­தேச ஒருநாள் கிரிக்­கெட்டில் 225 போட்­டி­களில் பங்­கு­பற்றி 3783 ஓட்­டங்­களை குவித்­துள்ளார். இவரின் அதி­க­பட்ச ஓட்ட எண்­ணிக்கை ஆட்­ட­மி­ழக்­காமல் பெற்­றுக்­கொண்ட 175 ஓட்­டங்­க­ளாகும்.

 

விவ்­வியன் ரிச்சர்ட்ஸ் – மேற்­கிந்­தியத் தீவுகள்

மேற்­கிந்­தியத் தீவுகள் அணியின் ஜாம்­ப­வா­னான சேர்.விவ்­வியன் ரிச்சர்ட்ஸ் ஆட்­ட­மி­ழக்­காமல் 189 ஓட்­டங்­களைப் பெற்று கபில் தேவ் படைத்­தி­ருந்த சாத­னையை ஒரு வருட கால இடை­வெ­ளிக்குள் முறி­ய­டித்தார். இந்தப் போட்டி 1984ஆம் ஆண்டு மே மாதம் 31ஆம் திக­தி­யன்று இங்­கி­லாந்து அணிக்­கெ­தி­ராக மென்­செஸ்­டரில் நடை­பெற்ற இப்­போட்­டியில் ஆட்­ட­மி­ழக்­காமல் 189 ஓட்­டங்­களைப் பெற்றார். இப்­போட்டி சர்­வ­தேச ஒரு நாள் அரங்கின் 264ஆவது போட்­டி­யாகும்.

அன்­றைய காலப்­ப­கு­தியில் அபா­ய­க­ர­மான துடுப்­பாட்ட வீர­ராக காணப்­பட்ட வீர­ராக சேர். விவ்­வியன் ரிச்சர்ட்ஸ் காணப்­பட்டார். இவரே அன்­றைய காலத்தில் பல்­வேறு சாத­னை­க­ளுக்கு சொந்­தக்­கார திகழ்ந்­த­துடன் இன்று முறி­ய­டிக்­கப்­பட்டு வரும் பெரும்­பா­லான சாத­னைகள் இவர் வச­மி­ருந்­த­வையே ஆகும். இவர் 121 டெஸ்ட் போட்­டி­களில் பங்­கு­பற்றி 8,540 ஓட்­டங்­களை பெற்­றுள்­ள­துடன் அதிக பட்­ச­மாக 291 ஓட்­டங்­களை பெற்­றுக்­கொண்டார். ஒருநாள் அரங்கில் 187 போட்­டி­களில் விளை­யாடி 6,721 ஓட்­டங்­களைப் பெற்­றுள்­ள­துடன் ஆட்­ட­மி­ழக்­காமல் 189 ஓட்­டங்­களை பெற்­ற­மையே இவரின் அதி­க­பட்ச ஓட்ட எண்­ணிக்­கை­யாகும்.

 

சயீட் அன்வர்- – பாகிஸ்தான்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியில் உரு­வான சிறந்த ஆரம்பத் துடுப்­பாட்ட வீர­ராக சயீட் அன்­வரை குறிப்­பிட்டுக் கூறலாம். இவர் இந்­தி­யாவின் சென்­னையில் 1997ஆம் ஆண்டு மே மாதம் 21ஆம் திக­தி­யன்று இந்­திய அணிக்­கெ­தி­ராக

194 ஓட்­டங்களைப் பெற்று 13 வரு­டங்­க­ளாக முறி­ய­டிக்­கப்­ப­டா­ம­லி­ருந்­து­வந்த சேர். விவ்­வியன் ரிச்­சர்ட்ஸின் சாத­னையை முறி­ய­டித்து கிரிக்கெட் உலகில் தனக்­கென்று தனி­முத்­தி­ரையை பதித்தார். சர்­வ­தேச ஒருநாள் அரங்கின் 1,209ஆவது போட்­டி­யாக இது அமைந்­தது.

இக்­காலப் பகு­தியில் சச்சின், சனத் ஜய­சூ­ரிய, சயீட் அன்வர் ஆகி­யோ­ருக்­கி­டையில் ஒரு நாள் அரங்கில் அதிக சதங்­களை அடிக்­கின்ற போட்டி காணப்­பட்டு வந்­தது.

சயீட் அன்வர் 55 டெஸ்ட் போட்­டி­களில் விளை­யாடி 4052 ஓட்­டங்­களைப் பெற்­றுள்­ள­துடன் அதி­க­பட்­ச­மாக 188 ஓட்­டங்­களை ஆட்­ட­மி­ழக்­காமல் பெற்­றுக்­கொண்­டுள்ளார். அத்­துடன் ஒருநாள் அரங்கில் 247 போட்­டி­களில் விளை­யாடி 8,824 ஓட்­டங்­களை பெற்­றுள்­ள­துடன் 194 ஓட்­டங்­களை அதி­க­பட்­ச­மாக பெற்­றுக்­கொண்டார்.

 

சார்ள்ஸ் கொவென்ட்ரி -– ஸிம்­பாப்வே

கிரிக்­கெட்டில் உலகில் இன்­ற­ளவும் கடைக்­குட்­டி­யா­கவே விளங்­கி­வரும் ஸிம்­பாப்வே அணி காணப்­பட்டு வரு­கின்­ற­போ­திலும், பலம்­பொ­ருந்­திய அணி­க­ளுக்கு சவால் அளிக்­கக்­கூ­டிய அணி­யாக இவ்­வணி காணப்­ப­டு­கின்­றது. 2009ஆம் ஆண்டு பெப்­ர­வரி 24ஆம் திக­தி­யன்று பங்­க­ளாதேஷ் அணிக்­கெ­தி­ராக ஸிம்­பாப்வே அணி சார்பில் ஆரம்ப துடுப்­பாட்ட வீர­ராக கள­மி­றங்­கிய சார்ள்ஸ் கொவென்ட்ரி ஆட்­ட­மி­ழக்­காமல் 194 ஓட்­டங்­களைப் பெற்று சயீட் அன்­வரின் சாத­னையை சமப்­ப­டுத்­தினார். இதன் மூலம் முழு உலகின் பார்­வையும் இவரின் மேல்­பட்­டது. இப்­போட்­டி­யா­னது சர்­வ­தேச ஒரு நாள் அரங்கின் 2,873ஆவது போட்­டி­யாகும்.

இவர் 2 டெஸ்ட் போட்­டி­களில் மாத்­திரம் பங்­கு­பற்றி 88 ஓட்­டங்­களை பெற்­றுள்­ள­துடன் அதி­க­பட்­ச­மாக 37 ஓட்­டங்­களைப் பெற்­றுள்ளார். ஒருநாள் அரங்கில் 37 போட்­டி­களில் விளை­யாடி 821 ஓட்­டங்­களை பெற்­றுள்ளார். இவர் வந்த வேகத்தில் மின்னி மறை யும் மின்­ன­லு க்கு ஒப்­பா­ன­வ­ராக கரு­தப்­ப­டு­கிறார்.

 

சச்சின் டெண்­டுல்கர் –- இந்­தியா

கிரிக்கெட் உலகில் எண்­ணற்ற சாத­னை­களை படைத்­தவர் இந்­திய கிரிக்கெட் அணி யின் முன்னாள் ஜாம்­பவான் சச்சின் டெண்­டுல்கர் ஆகும். இவர் 1989ஆம் ஆண்டு கிரிக்­கெட்டில் தனது 16ஆவது வயதில் காலடி எடுத்து வைத்­தது முதல் கிரிக்­கெட்டில் பல்­வேறு வகை­யான சாத­னை­களை படைத்­துள்ளார். 2012ஆம் ஆண்டு பெப்­ர­வரி 24ஆம் திகதி குவா­லியர் மைதா­னத்தில் தென் ஆபி­ரிக்க அணிக்­கெ­தி­ரான போட்­டியில் ஆட்­ட­மி­ழக்­காமல் 200 ஓட்­டங்­க­ளைப்­பெற்று அதிக ஓட்­டங்­க­ளை­ பெற்ற சாத­னையை தன்­வ­சப்­ப­டுத்­தினார். மேலும் ஒரு நாள் முத­லா­வது இரட்டைச் சதத்­தையும் பதித்த முத­லா­வது வீரரும் இவரே ஆவார். இப்­போட்டி சர்­வ­தேச ஒரு நாள் அரங்கின் 2,962ஆவது போட்­டி­யாகும்.

இவர் 200 டெஸ்ட் போட்­டி­களில் விளை­யாடி 5,921 ஓட்­டங்­களை பெற்று அதி­க­பட்­ச­மாக 248 ஓட்­டங்­க­ளையும் பெற்­றுக்­கொண்டார். ஒரு நாள் அரங்கில் 463 போட்­டி­களில் பங்­கு­பற்றி மொத்­த­மாக 18,426 ஓட்­டங்­களை பெற்­றுள்ளார். டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்­டி­களில் அதிக ஓட்­டங்­களை பெற்ற வீரர் என்ற சாதனை இவரிடமே காணப்படுகின்றது.

 

விரேந்திர ஷேவாக் – இந்தியா

2013ஆம் ஆண்டு டிசம்பர் 8ஆம் திகதி யன்று இந்தூர் மைதானத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கெதிரான ஒரு நாள் போட் டியின்போது இந்தியாவின் அதிரடி துடுப் பாட்ட வீரரான விரேந்திர ஷேவாக் 219 அதிரடியாக பெற்று சச்சின் படைத்த சாத னையை முறியடித்தார். இது ஒருநாள் அரங் கின் 3,223ஆவது போட்டியாகும்.

இந்தியாவின் அதிரடி ஆரம்பத் துடுப் பாட்ட வீரரான ஷேவாக் 104 டெஸ்ட் போட்டிகளில் பங்குபற்றி மொத்தமாக 8,586 ஓட்டங்களை பெற்று, 319 ஓட்டங்களை அதிக பட்சமாக பெற்றுள்ளார். ஒரு நாள் அரங்கில் 251 போட்டிகளில் பங்குபற்றி மொத்தமாக 8,273 ஓட்டங்களை குவித்து 219 ஓட்டங்களை அதிகபட்ச ஓட்ட எண்ணி க்கையாக பெற்றுள்ளார்.

பொதுவாக விளையாட்டு உலகை எடுத் துக்கொண்டால் இதுவரையான சாதனைப் பட்டியல்கள் அனைத்தும் குறித்த ஒருவ ரால் படைக்கப்படும்போது, அது மற்று மொருவரால் முறியடிக்கப்படும் என்பது இயற்கையின் நியதி. ஆகவே சாதனையா னது முறியடிக்கப்படுவதற்காகவே படைக் கப்படுகின்றன என்பது உண்மையே.

 

http://epaper.virakesari.com:8080/home/index?editionId=19&editionDate=16/11/2014

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.