Jump to content

வீட்டை அலங்கரிக்க எளிய வழிகள்


Recommended Posts

alangaram_2205819f.jpg

 

வீட்டை அழகாகக் கட்டுவதைக் காட்டிலும் கட்டிய வீட்டை அலங்கரிக்கப்பது அவசியம். அப்போதுதான் முழுமையான அழகு வீட்டுக்குக் கிடைக்கும். வீட்டு அலங்காரம் என்றதும் செலவு அதிகம் ஆகும் என நினைக்க வேண்டாம். புதுமையான சிந்தனைகள் இருந்தாலேயே போதுமானது. வீட்டைக் கண்ணைக் கவரும் வகையில் மாற்றலாம்.
 
வீட்டை அழகுபடுத்தும் பொருள்களுள் பூ ஜாடிகளுக்கு முக்கியப் பங்குண்டு. பூஜாடிகளில் பிளாஸ்டிக் பூக்களை இட்டு அழகாக வைக்கலாம். வீட்டின் வரவேற்பறையில், புத்தக மேஜையில் வைக்கலாம். கண்ணாடி ஜாடிகளில் தண்ணீர் நிரப்பி நிஜப் பூக்களையும் வைக்கலாம். அப்படிவைக்கும்போது பூக்களின் மீது சிறிது தண்ணீர்த் தெளித்து வைக்கும்போது பார்வைக்குக் குளிர்ச்சியாக இருக்கும். வீட்டுக்கு அழகைத் தரும். வீட்டுக்குள்ளேயே வளரும் குரோட்டன் வகை தளிர்களையும் வளர்க்கலாம். தாவரப் பச்சை கண்ணுக்கும் மனதுக்கும் குளுமையைத் தரும்.
 
alangaram2_2205818a.jpg
 
வீட்டின் வரவேற்பறையில் இனிய நினைவூட்டும் உங்கள் குடும்பப் புகைப்படங்களை மாட்டி வைக்கலாம். புகைப்படங்களை வைப்பதற்கான பலவிதமான போட்டோ ஃப்ரேம்கள் இப்போது சந்தைகளில் கிடைக்கின்றன. அவற்றை வாங்கி மாட்டலாம். உங்கள் தாத்தா, பாட்டியின் புகைப்படங்களை அழகான ஃப்ரேம்களில் இட்டு மாட்டலாம். இல்லை எனில் அழகான ஓவியங்களை உங்கள் வீட்டின் வண்ணத்திற்கேற்பத் தேர்வுசெய்து மாட்டலாம்.
 
வீட்டின் வரவேற்பறையில் உள்ள சோபாக்களில் அழகான வண்ணங்களில் குஷன் களை இடலாம். இது வீட்டை ஆடம்பர, அழகான இல்லமாகக் காட்டும். படுக்கையறையையும் மெத்தைகள் மீதும் அழகான குஷன்களை ஆங்காங்கு வைத்து அலங்கரிக்கலாம்.
 
முக்கியமான மற்றொரு விஷயம் திரைச்சீலைகள். ஜன்னல்கள், அறையின் வாசல்களுக்குப் பொருத்தமான திரைச் சீலைகளைத் தேர்வுசெய்தாலேயே வீட்டுக்குப் பாதி அழகு வந்துவிடும். தரைக்கு அழகான விரிப்புகளைப் பயன்படுத்தலாம்.
 
Link to comment
Share on other sites

குதூகலமான குழந்தைகள் அறை
 
children_2205782f.jpg
 
இன்றைய சூழலில் குழந்தைகளுக்கு ஏற்ற மாதிரி, அவர்களின் மனநிலையைப் பிரதிபலிக்கும் வகையில் அறையை வடிவமைப்பது என்பது சவாலான விஷயமே. குழந்தைகள் தங்கள்
 
அறையைத் தூங்குவதற்காக மட்டும் பயன்படுத்துவதில்லை. விளையாடுவது, படிப்பது, நண்பர்களைச் சந்திப்பது, கனவு காண்பது என எல்லாவற்றுக்கும் தங்கள் அறையைத்தான் அவர்கள் தேர்ந்தெடுக்கின்றனர். குழந்தைகளின் விருப்பங்கள் அடிக்கடி மாறும் தன்மையுடையவை என்பதால் அவர்களுக்கான அறையை வடிவமைப்பதில் பொறுமையைக் கடைப்பிடிக்க வேண்டும். குழந்தைகளின் அறையை வடிவமைப்பதற்கான சில வழிகள்:
 
நிறம் முக்கியம்
 
அறையின் சுவரில் ஆரம்பித்து கட்டில், படிக்கும் மேஜை போன்ற அனைத்து அறைக்கலன்களையும் தேர்ந்தெடுக்கும்போது அவற்றின் நிறங்களில் ஒற்றுமையைக் கடைப்பிடிக்கலாம். சிவப்பு - பச்சை, நீலம் - ஆரஞ்சு, மஞ்சள் - பச்சை என இரண்டு கான்ட்ராஸ்ட் வண்ணங்களில் அவர்களின் அறைக்கலன்களை வடிவமைக்கலாம். பளிச் நிறங்களைத் தேர்ந்தெடுப்பதால் அவர்கள் அறையில் இருக்கும்போது உற்சாகமான உணர்வைப் பெறுவார்கள்.
 
கார்ட்டூன் சுவர்கள்
 
சுவர் ஓவியங்கள் குழந்தைகளின் அறையை அலங்கரிப்பதற்கான எளிய வழி. அவர்களுடைய மனதுக்குப் பிடித்த கார்ட்டூன்களைச் சுவர்களில் வரைந்தோ, சுவரில் மாட்டியோ வைக்கலாம். ஓவியம் வரைவதில் ஆர்வமுள்ள குழந்தைகளின் கைவண்ணத்தைச் சுவரில் காட்டச் சொல்லலாம். தங்கள் அறையை வடிவமைத்த திருப்தி அவர்களுக்குக் கிடைக்கும். ஸ்டென்சில்களாலும் சுவர்களை அழகாக்கலாம்.
 
அடுக்கு கட்டில்கள்
 
ஒரே அறையை இரண்டு குழந்தைகளும் பகிர்ந்துகொள்வதாய் இருந்தால், அடுக்கு கட்டில்கள் சிறந்த தேர்வாக இருக்கும். இது இடத்தை மிச்சப்படுத்துவது மட்டுமில்லாமல் குழந்தை களுக்குப் பகிர்தலின் அருமையையும் உணர வைக்கும்.
 
பிரத்யேகமான தீம்கள்
 
குழந்தைகளின் ரசனைக்கேற்ற தீம்களிலும் அவர்களின் அறையை வடிவமைக்கலாம். உதாரணமாக, உங்கள் குழந்தைக்குப் பயணம் செய்வது பிடிக்கும் என்றால், டிராவல் தீமை வைத்தே அவர்களின் அறையை வடிவமைக்கலாம். பயணம் மட்டுமல்லாமல் விலங்குகள் சாம்ராஜ்ஜியம், கார்ட்டூன் கதாபாத்திரங்கள் என உங்கள் குழந்தையின் படைப்பாற்றலை அதிகரிக்கும் தீம்களிலும் அறையை வடிவமைக்கலாம்.
 
பொம்மை அலமாரிகள்
 
குழந்தைகள் தங்களிடம் இருக்கும் பொம்மைகளை அனை வரும் பாராட்ட வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். அதனால் அதற்கு ஏற்றபடி பொம்மைகளை அடுக்கிவைப்பதற்கான அலமாரிகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அலமாரியில் குழந்தைகளையே அவர்களுக்குப் பிடித்தமாதிரி பொம்மைகளை அடுக்கச் சொல்லாம். இதனால், பொம்மைகளை எப்படி அடுக்குவது என்ற உங்கள் குழப்பத்தைத் தவிர்க்கலாம்.
 
ஜன்னலும், வெளிச்சமும்
 
குழந்தைகள் அறையில் நல்ல காற்றோட்டம் இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். ஜன்னல் இல்லாத அறையைக் குழந்தைகளுக்கு ஒதுக்க வேண்டாம். போதுமான காற்றுவசதி இல்லையென்றால் அவர்களின் செயல்பாடுகளில் தொய்வு ஏற்படும். காற்றோட்டமும், வெளிச்சமும் இருந்தால் அவர்கள் படிப்பதற்கு ஏற்ற சூழலை அது உருவாக்கும்.
 

 

Link to comment
Share on other sites

பால்கனியை அற்புதமாக்குவது எப்படி?

 

Untitled_2216848h.jpg

 

வீட்டின் உட்புறத்தை அழகுப் படுத்துவதைப் போல் வெளித்தோற்றத்தையும் அழகு படுத்துவதற்கும் வாய்ப்புகள் இருக்கின்றன. மழைக்காலம், கோடைக்காலம் எனக் காலங்களின் அழகை வீட்டிலிருந்தபடியே ரசிப்பதற்குப் பால்கனிகள் உதவுகின்றன. பால்கனி சிறியதாக இருந்தாலும், அந்த இடத்தை உங்கள் ரசனைக்கு ஏற்றபடி அலங்கரிக்க முடியும். பால்கனியையும், வராண்டாவையும் அழகு படுத்துவதனால் வீட்டிற்கு வெளியே நீங்கள் செலவிடும் நேரம் அதிகரிக்கும். பணத்தையும், நேரத்தையும் அதிகமாகச் செலவழிக்காமல் எளிமையான வழிகளில் பால்கனியை அழகாக்கலாம். அதற்கான சில வழிகள்:

 

அலங்காரச் செடிகள்

மனதிற்குப் புத்துணர்ச்சியை அளிப்பதில் செடிகளைவிடச் சிறந்த மருத்துவர்கள் கிடையாது. பால்கனியின் அமைப்பிற்கு ஏற்ற மாதிரியான செடிகளைத் தேர்ந்தெடுப்பது அவசியம். சுவர்ச் செடிகள், சுவரில் மாட்டக்கூடிய செராமிக் பானைகள் எனப் பால்கனியில் வளர்ப்பதற்கு நிறைய அலங்காரச் செடிகள் இருக்கின்றன. இந்த மாதிரி செடிகள் பால்கனியைப் பசுமையாக்குவதுடன், வீட்டின் முகப்பு அழகையும் கூட்டுகின்றன.

 

இயற்கையின் வண்ணங்கள்

செடிகள் வளர்ப்பதற்கு ஆர்வமோ, நேரமோ இல்லாதவர்கள் பால்கனியை அலங்கரிக்கும் பொருள்களின் நிறத்தால் அழகாக்கலாம். பச்சை - நீல நிறக் கலவையில் பொருள்களைத் தேர்ந்தெடுக்கலாம். இந்த நிறங்கள் இயற்கையுடன் இணைந்திருப்பதைப் போன்ற எண்ணத்தை மனதிற்கு அளிக்கும்.

 

நேர்த்தியான குஷன்கள்

பால்கனியின் ஃபர்னிச்சர்களுக்கு ஏற்ற குஷன்களை வாங்குவது முக்கியமானது. அவுட்டோர் குஷன்கள் என்று பிரத்யேகமாகவும் கிடைக்கின்றன. ஒருவேளை, அவுட்டோர் குஷன்கள் கிடைக்கவில்லையென்றால், குஷன்களை வெயில், மழைலிருந்து பாதுகாப்பதற்காகத் தனியாக ஒரு ஸ்டோரேஜ் பெஞ்ச் வாங்கிக்கொள்ளலாம். ஃபர்னிச்சர்களுக்குப் பொருந்தக்கூடிய நிறத்தில் குஷன்கள் இருந்தால் கூடுதல் அழகாக இருக்கும்.

 

தரைவிரிப்புகள் பயன்படுத்தலாம்

பால்கனியிலும், வராண்டாவிலும் தரைவிரிப்புகள் போட்டுவைப்பது வீட்டின் முகப்பை இன்னும் அழகாக்கும். ஆனால், தரைவிரிப்புகள் ஃபர்னிச்சர்கள் பயன்பாட்டிற்கு ஏற்ற வகையில் பெரிதாக இருக்க வேண்டும். அல்லது காபி டேபிளுக்கு அடியில் மட்டும்கூட தரைவிரிப்புகளைப் பயன்படுத்தலாம்.

 

பளிச் குடைகள்

பால்கனியோ, வராண்டாவோ வெட்டவெளியாக இருந்தால் ஒரு பெரிய குடையை வைக்கலாம். கூடுமானவரை, ஃப்ரீஸ்டாண்டிங் குடையாக இருந்தால், தேவையில்லாதபோது மடக்கி வைத்துவிடலாம்.

 

கண்ணாடி மாட்டி வைக்கலாம்

பால்கனியின் அமைப்பு மேற்கூரை இருப்பதுபோல் இருந்தால் கண்ணாடி மாட்டி வைக்கலாம். இது பால்கனியில் அளவைப் பெரிதாக்கிக் காட்டும். கண்ணாடியின் ஃப்ரேமை ஃபர்னிச்சருக்கு ஏற்ற வகையில் தேர்ந்தெடுக்கலாம்.

 

http://tamil.thehindu.com/society/real-estate/%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%BF/article6625129.ece

Link to comment
Share on other sites

எண்ணத்தைச் சொல்லும் வண்ணம்

 

paint3_2205785g.jpg

 

சொல்லும்போதே மனசுக்குள் மழை பொழிய வைக்கும் சொல் வீடு, அதுவும் சொந்த வீடு. அதற்கு ஈடு இணையே இல்லை. வீடு கட்டுவது வெறும் கட்டிடம் எழுப்பும் செயல் அல்ல. வீடு என்பது அந்தஸ்தின், ரசனையின் வெளிப்பாடாக அமைய வேண்டும் என்பதே பெரும்பாலானவர்களின் ஆசை. யாரும் கட்ட முடியாத வீட்டைத் தான் கட்ட வேண்டும் அதைச் சொல்லிப் பெருமைப்பட வேண்டும் என்னும் ஆர்வம் இல்லாதவர்களில்லை. எனவேதான் வீட்டின் நிமித்தம் பெரும் பிரயத்தனங்களை மனிதர்கள் மேற்கொள்கிறார்கள்.
 
வீட்டின் கட்டுமானம் தரமாகவும் உறுதியாகவும் இருக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் பார்த்தவுடன் தெரிவது வீட்டுக் கட்டுமானத்தின் தரமல்ல. வீட்டு வண்ணத்தின் வசீகரமே. வீடு கட்டுவதைப் பொறுத்தவரை கட்டுமானத்தில் தொழில்நுட்பங்களே ஆளுமையைச் செலுத்தும் சூழலில் வர்ணத்தைத் தேர்ந்தெடுப்பதை நமது ரசனைத் தன்மையே முடிவுசெய்கிறது. ஆகவே வீட்டைக் கட்டுபவர்கள் அந்தப் பணியை ஒப்பந்தக்காரரிடம் ஒப்படைத்தாலும் தங்களுக்குத் திருப்தி தரும் வண்ணத்தில் வீட்டின் பூச்சு அமைய வேண்டும் என்பதில் கருத்தாய் இருப்பார்கள்.
 
பளிச்சிடும் வீடுகள்
 
paint2_2205786g.jpg
 
 
இப்போதெல்லாம் பளிச்சென்ற வண்ணத்திலேயே பல வீடுகள் பளபளக்கின்றன. கூடுமானவரையில் வீட்டுக்குள் குளுமையை உணரச் செய்யும் வகையில் வீடுகளுக்கான வண்ணங்களைத் தேர்ந்தெடுக்கலாம். பளிச்சென்ற வண்ணங்களை வீட்டின் புறச்சுவர்களுக்குப் பூசும்போது வெயில், மழை போன்ற இயற்கையை அவை தாங்கி நிற்கும் என்பதால் அவற்றைத் தேர்ந்தெடுக்கிறார்கள்.
 
மிகவும் மென்மையான வண்ணத்தைப் பூசும்போது அது எளிதில் நிறமிழந்துவிடும் என்பதால் புறச்சுவர்களுக்கு மென்மையைப் புறக்கணிக்கிறார்கள். ஆனால் புறச் சுவர்களுக்கு வண்ணம் பூசும்போது அந்த வண்ணத்தின் வெப்பத்தைக் கிரகித்து வெளியிடும் தன்மையைக் கருத்தில்கொண்டு புறச் சுவருக்கான வண்ணத்தைத் தேர்ந்தெடுப்பது நல்லது. அடர்த்தியான நிறம் அதிகமான வெப்பத்தை உள்வாங்கிவைத்துக்கொள்ளும் என்னும் சூழலில் சிறிது மென்மையான வண்ணத்தைப் பூசலாம்.
 
வரவேற்பறை, படுக்கையறை, சமையலறை, குளியலறை என வீட்டின் ஒவ்வொரு அறைக்கும் ஏற்ற வண்ணத்தைத் தேர்ந்தெடுக்கும் முன்னர் அந்தந்த அறைகளில் நாம் புழங்கும்போது நமக்கு ஏற்படும் உணர்வைக் கணக்கிலெடுத்துக்கொண்டு நிறத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
 
paint4_2205784g.jpg
 
நிறங்களின் சேதி
 
ஆரஞ்சு நிறம் என்பது நன்னம்பிக்கையை ஊட்டுவதாகவும் சமூகத் தொடர்புக்கு ஏற்றதாகவும் கருதப்படுகிறது. ஆரஞ்சு வண்ணம் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் என்றும் துன்ப காலங்களில் தேவைப்படும் மன உறுதியைத் தரும் என்றும் சொல்கிறார்கள். எப்போதும் வீட்டில் அமைதி தவழ வேண்டும், அக்கம்பக்கத்தினருடன் உறவு மேம்பட வேண்டும் என்பதை விரும்புபவர்கள் இந்த வண்ணத்தைத் தேர்ந்தெடுக் கலாம்.
 
மஞ்சள் நிறம் அறிவு நிரம்பிய மனத்தின் நிறமாகக் கொள்ளப்படுகிறது. இது நேர்மறையான எண்ணத்தையும், உற்சாகம் ததும்பும் மனநிலை யையும், புதிதுபுதிதான எண்ணங்களையும், வசீகரமான கற்பனைகளையும் உருவாக்கும் என்கிறது வண்ணம் தொடர்பான உளவியல். மஞ்சள் என்பது மங்கலகரமானது என்னும் நம்பிக்கையையும் இதனுடன் தொடர்புபடுத்திப் பார்த்துக்கொள்ளலாம். அறிவும் மங்கலமும் உற்சாகமும் புத்துணர்ச்சியும் நிறைந்த சூழல் தேவைப்படுபவர்கள் மஞ்சள் நிறத்தைப் பயன்படுத்தி வீட்டுக்கு வண்ணமடிக்கலாம்.
 
பச்சை வண்ணத்தைப் பொறுத்தவரை, சமச்சீரான தன்மைக்கும் இணக்க மான சூழலுக்கும் உத்திரவாத மளிக்கிறது என்கிறார்கள். ஏதாவது ஒரு சிக்கலான தருணத்தில் முடிவெடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டால் இதயத்தின் வார்த்தைகளையும் மூளையின் சொற்களையும் நடுநிலையாக ஆராய இந்த நிறம் உதவும் என்று சொல்லப்படுகிறது. வளர்ச்சியைக் குறிக்கும் நிறமும் பச்சையே. அதே சமயத்தில் பச்சை வண்ணம் ஒருவிதமான பொஸஸிவ்வான எண்ணத்தையும் உருவாக்கி விடும் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்ற மென்மையான எச்சரிக்கையும் தருகிறார்கள் வண்ணம் தொடர்பான கல்வி கற்றவர்கள்.
 
நீல நிறமோ நம்பிக்கைக்கும் நேர்மைக்கும் அடையாளமாகச் சொல்லப்படுகிறது. எந்த மோதலையும் உருவாக்காமல் அதனதன் கதியில் இயங்கச் செய்யும் வல்லமை கொண்டது நீல நிறம் என்கிறார்கள். நீல நிறம் நம்பத் தகுந்தது, பொறுப்புணர்வு அளிப்பது என்று சொல்கிறது நிறங்களுக்கான உளவியல். பாதுகாப்பு உணர்வையும் நம்பிக்கையான எண்ணத்தையும் உற்பத்தி செய்வதில் நீல நிறம் சிறப்பாகச் செயல்படுகிறது என்கிறார்கள். கடினமான காலங்களில் சரியான முடிவுகளை எடுக்க இந்த நிறம் உதவும் என்று சொல்கிறார்கள் நிபுணர்கள்.
 
குளு குளு கூரை
 
கட்டிடத்தின் கூரையைப் பொறுத்தவரை வெள்ளை நிறத்தைப் பூசினால், கட்டிடத்தில் படரும் வெயிலால் உருவாகும் வெம்மையைப் பெருமளவு குறைக்க முடியும் என்கிறார்கள் கட்டிட நிபுணர்கள். இதை ஆய்வு மூலம் நிரூபித்திருக்கவும் செய்கிறார்கள்.
 
ஆக, வீட்டுக்கான வண்ணப்பூச்சைத் தேர்ந்தெடுக்க வெறும் ரசனை மட்டும் போதாது. ஏனெனில் ஒவ்வொரு வண்ணத்திற்கும் ஒவ்வொரு பொருள் இருக்கிறது. ஒவ்வொரு வண்ணமும் ஒவ்வொரு உணர்வைத் தருவதாக உள்ளது. ஆகவே வண்ணத்தைத் தேர்ந்தெடுக்கும் முன்னர் வண்ணத்தில் நிபுணத்துவமும் ரசனையும் கொண்ட ஒருவரின் ஆலோசனையைப் பெற்றுக்கொள்வது நலம். இல்லை எனில் நீங்கள் ஆசை ஆசையாய் வண்ணம் பூசிய வீட்டைப் பார்க்க வரும்
 
உங்கள் நண்பர் இதென்ன இப்படி ஒரு வண்ணத்தைப் பூசியிருக்கிறாய் என எளிதாக உங்கள் மூஞ்சியில் கரிபூச முயல்வார். அந்த வண்ணத்தின் அடிப்படையைப் புரிந்துகொண்டு அதை ஏன் தேர்ந்தெடுத்தீர்கள் என்ற தெளிவு உங்களுக்கு இருந்தால், நண்பரின் வாயை அடைப்பது எளிதாகிவிடும்.
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

220px-Alt_Telefon.jpg2296356082_7b181fce74.jpgr3.jpg

வீட்டு அலங்காரம் பற்றிய, தகவல்களை இணைக்கும் ஆதவனுக்கு முதலில் நன்றி.
வீட்டு அலங்காரம், ஒவ்வொருவருக்கும் வயதுக்கு ஏற்ப மாறு படும்.
என்னைப் பொறுத்த வரையில், வீட்டின் வரவேற்பறையில் ஐந்து அடி உயரமான குத்து விளக்கு வைத்து,

அதனருகில்.... சில பழையகால (Antik) பொருட்களை... (பழைய வானொலிப் பெட்டி, தொலை பேசி) வைத்திருந்தால்...

அதன் அழகே, தனி. :)

Link to comment
Share on other sites

மகிழ்ச்சியை மாட்டி வைக்கலாம்!

 

maaati3_2226754g.jpg

 

maatti2_2226753g.jpg

 

maatti4_2226752g.jpg

 

வாழ்க்கையின் மகிழ்ச்சியான தருணங்களை நழுவவிடுவதற்கு யாரும் விரும்புவதில்லை. அப்படிப்பட்ட மகிழ்ச்சியான தருணங்களைத் தக்கவைப்பதில் ஒளிப்படங்கள்தான் நமக்குப் பெரிதும் உதவுகின்றன. குடும்பத்தினர்கள், நண்பர்கள் உடனான நம்முடைய அற்புதமான நிகழ்வுகளை ஒளிப்படங்கள் மூலம் எப்போதும் வீட்டில் தக்கவைக்கலாம்.
 
குடும்பப் படங்களை வீட்டின் சுவர்களில் மாட்டிவைப்பதும் ஒரு கலைதான். ஏனென்றால் வீட்டுச்சுவர்களில் இருக்கும் படங்கள் குடும்பத்தினருக்கு உற்சாகத்தையும், மகிழ்ச்சியையும் அளிக்கும். ஒளிப்படங்கள் மூலம் வீட்டில் அன்பையும், மகிழ்ச்சியையும் கொண்டுவர சில எளிமையான வழிகள்.
 
ஒளிப்படங்களால் ஒரு சுவர்
 
ஒளிப்படங்களை ஃப்ரேம் செய்துதான் வீட்டுச் சுவரில் மாட்ட வேண்டும் என்பதில்லை. மொத்தமாக உங்களிடம் இருக்கும் ஒளிப்படங்களை வைத்துச் சுவரில் ஒரு அழகான போட்டோ கொலாஜ் செய்துவிடலாம். சுவரில் ஓட்டும் போட்டோ க்ளிப்களைக் கொண்டு இந்த கொலாஜை உருவாக்கலாம். படங்களைக் குடும்ப நிகழ்வுகளின் அடிப்படையில் வரிசைப்படுத்தி ஒட்டினால் அந்தப் படங்களே உங்கள் குடும்பத்தின் கதையை அழகாகச் சொல்லிவிடும். படங்கள் பாதுகாப்பாக இருக்க அவற்றை லேமினேட் செய்யலாம். அல்லது போட்டோ கொலாஜ் மீது கிளாஸி பேப்பர் ஒட்டலாம். இதற்கு அதிகமாகச் செலவாகாது.
 
வண்ண போட்டோ ஃப்ரேம்கள்
 
போட்டோ ஃப்ரேம்களை விரும்புபவர்கள் இந்த முறையைப் பின்பற்றலாம். முக்கியமான சில படங்களைத் தேர்ந்தெடுத்து அவற்றை பளிச் நிறங்களைப் பின்னணியாக வைத்து ஃப்ரேம் செய்துமாட்டலாம். இதை வீட்டின் வரவேற்பறை சுவர் களில் மாட்டினால் அழகாக இருக்கும்.
 
குடும்ப மரம்
 
படங்களை வைத்தே வீட்டுச்சுவரில் ஒரு குடும்ப மரத்தை உருவாக்க முடியும். சுவரில் ஒட்டக்கூடிய இந்த ‘பேமிலி ட்ரீ’ வினைல் ஸ்டிக்கர்கள் பல ஆன்லைன் தளங்களிலேயே கிடைக்கின்றன. இந்த வினைல் சுவர் ஸ்டிக்கர்கள் ரூ.500 முதல் கிடைக்கின்றன. இந்த மரத்தில் படங்களை மாட்டுவதற்கு ஃப்ரேம்கள் வரையப்பட்டிருக்கும். வீட்டில் படங்களை மாட்டுவற்கு இந்தக் குடும்ப மரம் ஒரு சிறந்த வழி.
 
போட்டோ சுவர்க் கடிகாரம்
 
இந்த போட்டோ சுவர்க் கடிகாரத்தை உருவாக்க ஒரு கடிகார செட், பன்னிரண்டு படங்கள் இருந்தால் போதும். இந்தக் கடிகாரத்தை போட்டோ ப்ரேம்களைக் கொண்டும் உருவாக்கலாம். வீட்டில் நேரம் பார்க்கும்போதெல்லாம் உங்கள் மகிழ்ச்சியான தருணங்களை நினைத்துப் பார்ப்பதற்கு போட்டோ சுவர்க் கடிகாரம் ஒரு சிறந்த வழி.
 
போட்டோ ஜாடிகள்
 
சமையலறையில் பயன்படுத்தாத கண்ணாடி ஜாடிகள் இருக்கின்றனவா? அவற்றை வைத்தும் ஒர் அழகான போட்டோ டிஸ்பிளேவை வீட்டில் உருவாக்கலாம். குடும்பத்தின் பழைய படங்களை இந்தக் கண்ணாடி ஜாடிகளில் போட்டு மேசை மீதோ அல்லது ஷெல்ஃப்களிலோ வரிசையாக அடுக்கிவைக்கலாம். இது ஒருவிதமான ‘வின்டேஜ் லுக்’கை வீட்டுக்குக் கொடுக்கும்
 
Link to comment
Share on other sites

  • 2 weeks later...

திரைச்சீலைகள்

 

kaatru_2235128f.jpg

 

கதவுகளிலும், ஜன்னல்களிலும் ஆடும் திரைச்சீலைகள்தான் ஒரு வீட்டின் அலங்கார ரசனையை விருந்தாளிகளுக்கு முதலில் பறைசாற்றுகின்றன. உங்கள் வீட்டைப் பற்றிய முதல் அபிப்பிராயத்தைத் திரைச்சீலைகள்தான் உருவாக்குகின்றன. அதனால் திரைச்சீலைதானே என்ற அலட்சியமில்லாமல் அவற்றைத் தேர்ந்தெடுப்பதில் கவனம் எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியம் இருக்கிறது. திரைச்சீலைகளை எப்படித் தேர்ந்தெடுப்பது, எப்படி மாட்டுவது என்பதற்கான சில வழிமுறைகள்.
 
1. திரைச்சிலைகள் வீட்டின் தோற்றத்தைப் பெரிதாகவும், உயரமாகவும், பிரம்மாண்டமாகவும் காட்டக்கூடிய வலிமையுடையவை. அவற்றை எப்படிப் பொருத்துகிறோம் என்பதில் இந்த அம்சங்கள் எல்லாம் அடங்கியிருக்கின்றன.
 
2. திரைச்சீலை மாட்டுவதற்கான கம்பியை எவ்வளவு உயரமாகப் பொருத்துகிறீர்களோ, அவ்வளவு உயரமாக உங்கள் ஜன்னல் தெரியும். உங்கள் வீட்டின் மேற்கூரை சிறியதாக இருந்தால் இந்த முறையைப் பயன்படுத்தலாம். வீட்டின் உயரத்தையும் இது உயரமாக்கிக் காட்டும்.
 
3. திரைச்சீலைகள் வழியாக வீட்டுக்கு உள்ளே வெளிச்சம் வர வேண்டும் என்றால், கம்பியை இருபுறமும் மூன்று இன்ச் நீட்டியிருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள்.
 
4. திரைச்சீலைகள் சுருங்கிப் போயிருந்தால் அவற்றை அயர்ன் செய்து மாட்டலாம்.
 
5. கோடைக்காலம், குளிர் காலம் இரண்டுக்கும் ஏற்ற மாதிரி திரைச்சீலைகள் கிடைக்கின்றன. குளிர்காலத்தில் லைனிங் திரைச்சீலைகளைப் பயன்படுத்தலாம்.
 
6. வளையங்கள் இருக்கும் திரைச்சீலைகளை வாங்குவது நல்லது. அடிக்கடி மூடித் திறக்கும்போது கம்பியில் வளையங்கள் இருந்தால் எளிதாக இருக்கும்.
 
7. திரைச்சீலைகள் இப்போது பலவிதமான வகைகளில் கிடைக்கின்றன. பிரின்ட்ஸ், ஃபோளரல், ப்ளேய்ன், கோடுகள் போன்ற எந்த வகை உங்கள் வீட்டின் சுவருக்கு ஏற்றதாக இருக்குமோ அதைத் தேர்ந்தெடுக்கலாம்.
 
8. டிரான்ஸ்ப்ரென்ட், லேஸ் திரைச்சீலைகள் வீட்டிற்குள் வெளிச்சம் கொண்டுவருவதற்கு உதவுகின்றன.
 
9. சில்க் திரைச்சீலைகள் சூரிய வெளிச்சத்தால் எளிதில் பாதிப்படைந்துவிடும். அதற்கு மாற்றாக காட்டன் கான்வாஸ் திரைச்சீலைகளைப் பயன்படுத்தலாம்.
 
10. திரைச்சீலைகள் பிரைவசியை உறுதிப்படுத்துவது மட்டுமல்லாமல் வீட்டின் தோற்றத்தையும் அழகாக்குகின்றன. வீட்டுச்சுவரின் நிறம், கலைநயம், அறைக்கலன்கள் போன்ற விஷயங்களுக்குக் கொடுக்கும் அதே முக்கியத்துவத்தைத் திரைச்சீலைகளுக்குக் கொடுக்கும்போதுதான் வீட்டின் உள் அலங்காரம் முழுமையாகிறது.
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல பதிவு

Link to comment
Share on other sites

இளங்காற்று உலவும் இல்லம்

 

air_2235155g.jpg

 

air2_2235154g.jpg

 

 

ஓடியாடிச் சம்பாதிக்கும் காலத்தில் வருமானத்தின் பெரும்பகுதியைச் செலவழித்த போதும் நல்ல வீடு ஒன்றைக் கட்டிக்கொண்டால் போதும் அதில் கிடைக்கும் நிம்மதிக்கும் சந்தோஷத்துக்கும் ஈடு இணையே இல்லை என்று நினைக்கிறோம். அப்படியான வீடு வாங்கும் போதோ கட்டும்போதோ அது எப்படி அமைய வேண்டும் என்ற கற்பனையிலேயே நாள்களைக் கழிக்கிறோம்.
 
பொதுவாக வீடு விஷயத்தில் நாம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். எல்லா வீடுகளும் ஒன்றுபோல் தோன்றினாலும் சின்னச் சின்ன மாறுபாடுகளைக் கொண்டிருக்கும். ஒரே போல் தென்படும் வீடுகளின் விலைகளில் சிறிய வேறுபாடு காணப்படும். நாம் பணத்தை மிச்சப்படுத்த வேண்டும் என்பதை இலக்காகக் கொண்டு செயல்பட்டால் வீட்டுக்குத் தேவையான சில அனுகூலங்களை இழந்துவிடும் ஆபத்து உண்டு. அதே சமயத்தில் அதிக விலை கொடுத்தாலும் சரியான வீட்டைத் தேர்ந்தெடுத்தால் நம்மால் சிறிது பணத்தைச் சேமிக்க இயலும்.
 
அதிக விலை கொடுத்து வாங்கும்போது எப்படிச் சேமிப்பு சாத்தியம் என்னும் கேள்வி எழுகிறதா? சில விஷயங்களைக் கவனித்துப் பார்த்து வீடு வாங்கினால் சேமிப்பு சாத்தியமே. என்ன விஷயத்தைக் கவனிக்க வேண்டும்?
 
நீங்கள் வாங்கப் போகும் வீட்டின் உள்புறத்தை நன்றாகக் கவனித்துப் பாருங்கள். வீட்டின் வெளிப் புறம் பார்ப்பதற்குப் பளிச்சென்று இருப்பது போல் உள்புறமும் நேர்த்தியாக அமைக்கப்பட்டிருக்கிறதா எனக் கவனியுங்கள்.
 
வீட்டின் உள்புற நேர்த்தி என்றால் அழகான, வசீகரமான வண்ணம், பள பளவென்ற தரை போன்றவை மட்டுமல்ல. வீட்டுக்குள்ளே நல்ல வெளிச்சமும் காற்றும் கிடைக்கும் படி வீடு அமைக்கப்பட்டிருக்கிறதா என்பதைப் பார்க்க வேண்டும். வீட்டில் வாழ்பவர்கள் புழங்கும் அறைகளில் ஆரோக்கியமான சூழல் நிலவத் தேவையான காற்று உட்புகுந்து வருவதற்கேற்ற வகையிலான ஜன்னல்கள் பொருத்தப்பட்டிருக்க வேண்டியது அவசியம். ஏனெனில் ஆரோக்கியமாக வாழ வீட்டிற்குள் சூரிய ஒளியும் சுத்தமான காற்றும் நிறைய வர வேண்டும்.
 
வெளிச்சமும் காற்றும்
 
வீட்டின் உள்ளே உருவாகும் வெப்பம் வெளியேறப் போதுமான வெண்டிலேஷன் அமைதலும் மிக அவசியம். அத்தகைய வெண்டிலேஷன் முறையாக அமைக்கப்பட்டிருக்கும்போது நச்சுக் காற்று வெளியேற வசதியாக இருக்கும். இதனால் வீட்டில் சுகாதாரக் கேடான காற்று உலவும் வாய்ப்பு அடைபட்டுப் போகும். வீட்டில் உள்ளவர்களின் ஆரோக்கியம் பேணப்படும்.
 
அவசியமான ஜன்னல்கள் வீட்டில் அமைக்கப்பட்டிருக்கும் பட்சத்தில் அநாவசியமாக விளக்கெரிக்க வேண்டிய தேவை இருக்காது. வீட்டில் அதிகப்படியான வெப்பம் உருவாகும் வாய்ப்பைக் குறைத்துவிட்டால், பகலில் அதிக நேரம் குளிர்சாதன வசதியைப் பயன்படுத்துவதைக் குறைத்துவிடலாம். அதிகமான கோடையில் மட்டுமே இத்தகைய வீட்டுக்கு ஏ.சி. தேவைப்படும். எந்நேரமும் ஏ.சி.யை இயங்கவிட வேண்டிய தேவை ஏற்படாது. அதேபோல் பகலில் விளக்கை எரிக்க வேண்டிய அவசியமும் இருக்காது. இரவில் மட்டும் விளக்குகளை ஒளிரவிட்டால் போதும்.
 
நமது புழக்கத்திற்குத் தேவையான இடங்களில் தண்ணீர் கிடைக்குப் போதுமான குழாய் வசதி அமைந்திருக்க வேண்டும். மின் சாதனங்களுக்குத் தேவைப்படும் மின்சாரத்தை அளிக்கும் வகையிலான சுவிட்ச் போர்டுகளும் சுவிட்சுகளும் பொருத்தப்பட்டிருக்க வேண்டும். இவையெல்லாவற்றையும் வீட்டில் குடிபோவதற்கு முன்னர் கவனித்துக்கொள்ள வேண்டும்.
 
ஒப்பந்தம் போட்டு வீடு கட்டினால் வீட்டு ஒப்பந்தத்திற்கு முன்னர் இதைப் போன்ற தேவைகளைப் பூர்த்திசெய்யும் வகையில் ஒப்பந்தம் மேற்கொள்ள வேண்டும். இவற்றை எல்லாம் கவனிக்காமல் வீட்டுக்குக் குடிபோய் விட்டால் அதிகச் சிரமத்தை எதிர்கொள்ள நேரிடும். அப்போது நமக்குத் தேவையான வசதிகளை மேற்கொள்ள முயலும்போது அதனால் அதிக நேரமும் பணமும் செலவாகும். இவை அநாவசிய விரயங்கள். நாம் சிறிது விழிப்புணர்வுடன் நடந்து கொண்டால் இவற்றை நம்மால் தவிர்க்க முடியும்.
 
வீட்டின் தரைகளில் என்ன தளம் போடப்பட்டிருக்கிறது என்பதை நிச்சயம் கவனமாக இருப்போம். தளத்தில் என்ன கட்டுமானப் பொருள் பதிக்கப்பட்டிருக்கிறது, டைல்ஸா மார்பிள்ஸா கிரானைட்டா என்பதில் எல்லாம் மிகவும் விழிப்புடன் இருப்போம். ஆனால் குளிய லறையில் தேவையான வாஷ் பேசின் இருக்கிறதா, போதுமான குழாய்கள் உள்ளனவா என்பவற்றையும் நினைவில் கொள்ள வேண்டும். ஏனென்றால் இவை அனுதினமும் அவசியப்படும் வசதிகள். இவை எல்லாவற்றையும்
 
முறையாகப் பரிசோதித்த பின்னரே வீட்டை வாங்க வேண்டும். அதை விடுத்துச் சிறிது விலை குறைவு என்பதால் உள்புறம் முறையாக இல்லாத வீட்டை வாங்கினால் அவதி தான் வந்து சேரும். ஏனெனில் அவற்றைப் எல்லாம் புதிதாக உருவாக்க அதிகச் செலவு பிடிக்கும் என்பதை மறந்துவிடாதீர்கள்.
 
வீடு என்பது நிம்மதியாக வாழ உதவ வேண்டும். எனவே நிதானமாக வீட்டைச் சோதித்துப் பார்த்து வீடு வாங்கினால் நிம்மதியாகக் காலத்தை அங்கே கழிக்கலாம்.
 
Link to comment
Share on other sites

வண்ணப்பூச்சுக்கான வழிகாட்டி

 

paint_2243052f.jpg

 

கட்டிடங்களுக்கு வெள்ளை நிறமும், மஞ்சள் காவியும் அடித்துப் பார்த்துக்கொண்டிருந்த காலமெல்லாம் மாறிப் போச்சு, இப்போதெல்லாம் கண்ணைப் பறிக்கும் பல நிறங்களில் வண்ணப்பூச்சுகள் வந்தாச்சு. கட்டிடங்களெல்லாம் பல வித்தியாசமான நிறங்களில் காட்சியளித்துக் கொண்டிருக்கின்றன. கட்டிடங்களுக்கு வண்ணம் பூசுவது தனிக் கலை. இந்தக் கலைநுட்பத்தை ஆங்கில மொழியிலான இணையதளம் ஒன்று நமக்குச் சொல்லிக் கொடுக்கிறது.

இந்த இணையதளத்தில் வண்ணப்பூச்சு நிகழ்படங்கள் (Painting Videos), வெளிப்புற வண்ணப்பூச்சு (Exterior Painting), உள்புற வண்ணப்பூச்சு (Indoor Painting), வீடுகளுக்கான வண்ணப்பூச்சு நிறங்கள் தேர்வு (Pick House Paint Colours) ஆதாரங்கள் (Resources) எனும் முதன்மைத் தலைப்புகள் இடம் பெற்றிருக்கின்றன.

 

வண்ணப்பூச்சு நிகழ்படங்கள் எனும் தலைப்பில் சொடுக்கினால், உயர் பளபளப்பு (High Gloss), கறுப்புக் கடை (Black Shop), வண்ணப்பூச்சு (Painting) எனும் துணைத் தலைப்புகள் இடம் பெற்றிருக்கின்றன. இத்துணைத் தலைப்புகளில் சொடுக்கித் தலைப்புடன் தொடர்புடைய நிகழ்படங்களைக் காண முடியும்.

 

வெளிப்புற வண்ணப்பூச்சு எனும் தலைப்பில் சொடுக்கினால், வெளிப்புற மேற்பரப்பு தயார் செய்தல் (Exterior Surface Prep), வெளிப்புற வண்ணப்பூச்சு/ விருப்பத் தேர்வுகள் மற்றும் பரிசீலனைகள் (Exterior Painting | Options And Considerations), வண்ணப்பூச்சு மேல்பட்டை உரிதல் ஏன்? (Why Does Paint Peel?) அழுத்தமாகக் கழுவுதல் (Pressure Washing), வெளிப்பக்க மேற்பரப்பு மறைப்புகளின் அடிப்படைகள் (Fundamentals Of Masking Outside Surfaces), உள்ளிட்ட பல தலைப்புகளில் தகவல்கள் இடம் பெற்றிருக்கின்றன.

 

உள்புற வண்ணப்பூச்சு எனும் தலைப்பில் வண்ணப்பூச்சுக்கு அறையைத் தயார் செய்தல் (Prepare a Room for Painting), என் சுவர்களில் இருப்பது என்ன? (What’s On My Walls?) எனும் இரு துணைத் தலைப்புகள் இருக்கின்றன. மட்டுமல்லாது வண்ணப்பூச்சுக்கு அறையைத் தயார் செய்தல் எனும் தலைப்பில் உள்புறச் சுவர் மறைப்புகள் (Masking Indoor Walls), வீட்டினுள்ளே மணல் எப்படி? (How to Sand Inside the Home) வண்ணப்பூச்சு திட்டங்களுக்கு அவசியமான ஆறு வழி மறைப்புகள் (Six Ways That Masking is Essential to Painting Projects), பாதுகாப்பாகவும் திறம்படவும் அறைக்கலன்களை நகர்த்துவது எப்படி? (How to Move Furniture Safely and Efficiently), உள்புற மேற்பரப்புகள் பழுதுபார்த்தல் மற்றும் முதன்மைப்படுத்தல் (Repairing and Priming Indoor Surfaces), அறையைத் தயார் செய்வதற்கான அடிப்படைகள் (Fundamentals of Preparing a Room) உங்கள் வீடுகளுக்கு வண்ணப்பூச்சு செய்வதற்கான அறையை எடுத்தல் (Getting the Rooms of Your House Ready to be Painted) என்பன போன்ற துணைத் தலைப்புகள் தரப்பட்டு விளக்கமளிக்கப்பட்டிருக்கின்றன.

 

வீடுகளுக்கான வண்ணப்பூச்சு நிறங்கள் தேர்வு எனும் தலைப்பில் வண்ணப்பூச்சு நிறங்கள் தேர்வு செய்வதற்கான தகவல்களைக் கொண்டிருக்கும் வேறு சில தளங்களுக்கு இணைப்புகள் தரப்பட்டிருக்கின்றன.

ஆதாரங்கள் எனும் தலைப்பில் வீட்டு வண்ணப்பூச்சுக் கட்டணம், வண்ணப்பூச்சால் வரும் உடல்நலக் குறைவைக் குறைப்பது எப்படி (How to Minimize the Health Risks of Lead Paint) போன்ற தகவல்களும் தரப்பட்டிருக்கின்றன. சில நிகழ் படங்களாகச் சேர்க்கப்பட்டிருக்கின்றன. சில கலந்துரையாடல்களாக இருக்கின்றன.

 

இவை தவிர வண்ணப்பூச்சு தொடர்புடைய பல்வேறு பயனுள்ள செய்திகள் அவ்வப்போது தனித்தலைப்புகளில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகின்றன. இவை தளத்தின் வலதுபுறம் இடம் பெற்றிருக்கின்றன.

கட்டிடங்களின் வண்ணப் பூச்சுகளுக்கான பல்வேறு பயனுள்ள தகவல்களைக் கொண்டிருக்கும் இத்தளத்துக்குச் செல்ல விரும்புபவர்கள் http://www.housepaintingguide.org/ எனும் இணைய முகவரியைப் பயன்படுத்தலாம்.

 

http://tamil.thehindu.com/society/real-estate/%E0%AE%B5%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF/article6687190.ece

 

Link to comment
Share on other sites

  • 4 weeks later...

வீட்டைப் பசுமையாக்கும் செடிகள்

 

plants_2274664f.jpg

 

குளிர்காலம் முடிந்து விரைவில் வசந்தகாலம் ஆரம்பிக்க இருக்கிறது. வசந்த காலத்தின் அழகை வெளியே சென்றுதான் ரசிக்க வேண்டும் என்பதில்லை. நாம் நினைத்தால் வீட்டுக்குள்ளேயே ஒரு வசந்த காலத்தை உருவாக்க முடியும். வீட்டுக்குள்ளேயே செடிகளை வளர்ப்பதன் மூலம் இதை எளிதில் சாத்தியப்படுத்தலாம். செடிகளை வீட்டுக்குள் வைப்பதற்கும் வளர்ப்பதற்கும் சில வழிகள்.
 
தொங்கும் குவளைகள்
 
வீட்டுக்குள் செடிகள் வளர்ப்பதற்காகவே வித்தியாசமான வடிவங்களில் கண்ணாடிக் குவளைகள் கடைகளில் கிடைக்கின்றன. இந்தக் கண்ணாடி குவளைகளில் காற்றில் வளரும் செடிகளை வளர்க்கலாம். இந்தச் செடிகள் காற்றில் இருந்தே தனக்கான ஊட்டச்சத்தை எடுத்துக்கொள்ளும். இவை வளர்வதற்கு மண் தேவையில்லை.
 
வீட்டின் வரவேற்பறையின் ஓரத்தில் இந்தக் குவளைகளைத் தொங்கவிடலாம். இந்தக் குவளைகளைத் தொங்கவிடும்போது வெவ்வேறு அளவுகளில் ஏற்ற இறக்கங்கள் இருக்குமாறு தொங்கவிடலாம். வீட்டுக்குள் நுழைபவர்களுக்குத் தேவையான புத்துணர்ச்சியை இந்தச் செடிகள் கொடுக்கும்.
 
வித்தியாசமான அலமாரிகள்
 
செடிகளை மொத்தமாக பால்கனியிலோ, வராண்டாவிலோ வைத்துப் பராமரிக்க முயலும்போது வித்தியாசமான அலமாரிகளில் வைக்கலாம். மிதக்கும் அலமாரிகள், பெரிய மர ஏணிகள் போன்றவற்றில் தொட்டிச் செடிகளை வித்தியாசமான முறையில் அடுக்கி வைக்கலாம்.
 
alamari_plant_2274658a.jpg
 
தொட்டிகளின் வண்ணங்களையும் உங்கள் ரசனைக்கு ஏற்றபடி தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். வண்ணத் தொட்டிகளில் செடிகளை அலமாரிகளில் வீட்டின் பால்கனியில் வைக்கும்போது வீட்டை வெளியில் இருந்து பார்க்கும்போது வீட்டுக்கு அழகான தோற்றம் கிடைக்கும்.
 
ஜாடிச் செடிகள்
 
கண்ணாடி ஜாடிகளையே தொட்டிகளாக்கி வீட்டுக்குள் மேசைகளின் மீது செடிகளை வளர்க்கலாம். கண்ணாடி ஜாடிகள், மக்குகள், மீன் தொட்டிகள் போன்றவற்றையும் பயன்படுத்திக்கொள்ளலாம். இந்த ஜாடிகளுக்குள் நேரடியாக மண்ணை நிரப்பியும் செடிகளை வளர்க்கலாம்.
 
jadi_plant_2274661a.jpg
 
சிறிய தொட்டிகளை ஜாடிகளுக்குள் வைத்தும் வளர்க்கலாம். இதன்மூலம் அலங்காரத் தொட்டிகளை வாங்கும் செலவுகளைக் குறைக்கலாம்.
 
அழகான தண்டுகள்
 
செடிகளைப் பராமரிப்பதற்கு உண்மையிலேயே நேரம் இல்லாதவர்கள் இந்த முறையைக் கடைப்பிடிக்கலாம். கண்ணாடி ஜாடிகளில் தண்ணீரை நிரப்பி அதில் பசுமையான தண்டுகளையோ, பூக்களையோ போட்டு வைக்கலாம்.
 
plants2_2274662a.jpg
 
இந்த ஜாடிகளை வீட்டின் ஜன்னல் ஓரங்களில் வைக்கலாம். இவற்றைப் பராமரிக்க வேண்டிய அவசியமில்லை.
 
தொட்டிகளை அலங்கரிக்கலாம்
 
தொட்டிகளையும், கண்ணாடி ஜாடிகளையும் அலங்கரிப்பதற்கு அவற்றில் கூழாங்கற்கள், கிளிஞ்சல்கள் போன்றவற்றைப் போட்டுவைக்கலாம்.
 
thotti_2274654a.jpg
 
கூழாங்கற்கள் தொட்டிகளில் இருந்து வழியும் அளவுக்கு அதிகமான தண்ணீரை உறிஞ்சுவிடும். அத்துடன் இந்தக் கற்கள் செடிகள் எப்போதும் ஈரப்பதத்துடன் இருக்கும்படியும் பார்த்துக்கொள்ளும்.
 
பசுமைச் சுவர்கள்
 
உங்கள் வீட்டின் வரவேற்பறை பெரிதாக இருந்தால் ஒரு பசுமைச் சுவரையே உருவாக்க முடியும். மரத்தலான சட்டகத்துக்குள் தகரைச் செடிகளையும், பாசிகளையும் வளர்க்கலாம்.
 
suvar_plant_2274663a.jpg
 
இவை அடர்த்தியான பசுமைத் தோற்றத்தையும், வெளிச்சத்தையும் வீட்டுக்குக் கொடுக்கும். கிட்டத்தட்ட ஒரு 3டி சுவர் ஓவியம் போல இது காட்சி தரும். இதைச் செங்குத்து தோட்டம் என்றும் அழைக்கிறார்கள்.
 
Link to comment
Share on other sites

  • 2 weeks later...

உல்லாச ஊஞ்சல்

 

oonjal_2288472f.jpg
 

 

மனதை உடனடியாக லேசாக்குவதற்கு இருக்கும் எளிமையான வழிகளில் ஒன்று ஊஞ்சல். குழந்தைகள் விளையாடுவதற்கானது மட்டுமல்ல ஊஞ்சல். பெரியவர்களும் இளைப்பாறுவதற்கு ஊஞ்சல் உகந்தது. மன அழுத்தத்திலிருந்து விடுபடுவதற்கு ஊஞ்சலாடுவது சிறந்த வழி. தென்னிந்தியாவைப் பொறுத்தவரை, வீட்டுக்குள் ஊஞ்சல் அமைப்பது பாரம்பரியமான வழக்கம்தான். அந்தக் காலத்தில் வீட்டின் கூடத்தில் மர ஊஞ்சல் அமைத்திருப்பார்கள்.

அந்த ஊஞ்சலில் ஆடினால், அது கூடத்தில் இருக்கும் நிலைக்கண்ணாடியில் தெரியுமாறு வடிவமைத்திருப்பார்கள். ஆனால், இப்போது இருக்கும் நவீன வீடுகளுக்கேற்ற நவீன ஊஞ்சல்கள் வரத் தொடங்கியிருக்கின்றன. காலையில் எழுந்தவுடன் உற்சாகமாக காப்பி குடிப்பதற்கும், மாலையில் பிடித்த புத்தகம் படிப்பதற்கும் ஊஞ்சலைவிடச் சிறந்த இடம் இருக்க முடியாது. வீட்டுக்குள் ஊஞ்சல் அமைப்பதற்கான சில வழிகள்:

 

மர ஊஞ்சல்

 

பாரம்பரியமான வீட்டு அலங்காரத்தை விரும்புபவர்களுக்கு ஏற்றது மர ஊஞ்சல்தான். இந்த மர ஊஞ்சலை வீட்டின் வரவேற்பறையிலும், பால்கனியிலும் அமைக்கலாம். ஆனால், இந்த ஊஞ்சலை அமைப்பதற்குச் சற்றுப் பெரிய இடம் தேவைப்படும். வரவேற்பறையில் ஊஞ்சலைப் பொருத்தினால் ஜன்னலுக்கு அருகில் இருக்குமாறு பார்த்துக்கொண்டால் காற்றோட்டம் கிடைக்கும்.

 

oonjal1_2288475a.jpg

 

மூங்கில் ஊஞ்சல்

எல்லோராலும் நினைத்தவுடன் வாங்கக்கூடியது இந்த மூங்கில் ஊஞ்சல்தான். இந்த மூங்கில் ஊஞ்சல் பார்ப்பதற்கு அழகாக இருப்பதோடு மட்டுமல்லாமல் குறைந்த விலையிலும் கிடைக்கிறது. மூங்கில் ஊஞ்சல் பயன்படுத்துவதற்கும் பராமரிப்பதற்கும் எளிமையானது. இதை அமைப்பதற்குப் பெரிதாக எந்தத் திட்டமிடலும், இடவசதியும் தேவையில்லை. பால்கனி, படுக்கையறை எனப் பிடித்த இடத்தில் இதைப் பொருத்திக்கொள்ளலாம்.

 

oonjal2_2288477a.jpg

 

குமிழி ஊஞ்சல்

 

பார்ப்பதற்கு குமிழி போன்ற தோற்றத்துடன் இருக்கும் இந்த ஊஞ்சல் நவீனத்தை விரும்புபவர்களுக்குப் பிடிக்கும். வரவேற்பறை, படிக்கும் அறை, படுக்கையறை, பால்கனி என எங்கே வேண்டுமானாலும் இதை வைத்துக்கொள்ளலாம். நாற்காலிகளும், சோஃபாக்களும் சலித்துவிட்டால் இளைப்பாறுவதற்கு ஏற்றதாக இந்தக் குமிழி ஊஞ்சல் இருக்கும்.

 

oonjal3_2288479a.jpg

 

தூங்கும் தொட்டில்

 

பொதுவாகத் தோட்டத்திலும், பால்கனியிலும் அமைக்கப்படும் இந்தத் தூங்கும் தொட்டிலை (hammock) இப்போது வீட்டுக்குள்ளும் அமைக்கத் தொடங்கயிருக்கிறார்கள். இதை வரவேற்பறை, படுக்கையறை, பால்கனி என எங்கு வேண்டுமானாலும் அமைக்கலால். ஆனால், இவற்றைப் பொருத்துவதற்கு ஏற்றமாதிரி வீட்டின் உத்தரமும், தூண்களும் இருக்க வேண்டும். மதிய நேரங்களில் குட்டித் தூக்கம் போடுபவர்களுக்கு இந்தத் தூங்கும் தொட்டில் ஏற்றதாக இருக்கும். வீட்டின் அழகைப் பிரதிபலிக்கும் வகையில் விதவிதமாக இவற்றை அமைத்துக்கொள்ளலாம்.

 

oonjal4_2288483a.jpg

 

உலோக ஊஞ்சல்

 

ஊஞ்சலில் நன்றாக ஆடவேண்டும் என்று விரும்பும் பெரியவர்களுக்கு ஏற்றது உலோக ஊஞ்சல்தான். இதை வீட்டில் அமைப்பதும் எளிமையானதுதான். குழந்தைகள் இருக்கும் வீடுகளுக்கு உலோக ஊஞ்சல் உதவிகரமாக இருக்கும். இளைப்பாறல் மட்டுமல்லாமல் குதூகலத்துடன் ஊஞ்சலாடுவதற்கு உலோக ஊஞ்சல் பயன்படும்.

 

oonjal5_2288484a.jpg

 

படுக்கை ஊஞ்சல்

 

படுக்கை அமைப்புடன் இருக்கும் பிரத்யேகமான ஊஞ்சலும் இருக்கிறது. ஆனால், இதை வைப்பதற்கு இடவசதி தேவைப்படும். இந்தப் படுக்கை ஊஞ்சலை பால்கனியில் வைத்தால் போர்வை, தலையணையுடன் இயற்கையான காற்றோட்டத்துடன் தூங்கலாம்.

oonjal6_2288486a.jpg

 

 

 
Link to comment
Share on other sites

  • 2 weeks later...

நீலம் என்னும் மாயம்

 

blue_2303401g.jpg

 

blue1_2303400g.jpg

 

ஒரு இடத்தை அலங்கரிப்பதில் வண்ணங்கள்தான் முக்கியப் பங்கு வகிக்கின்றன. பொதுவாக, வீட்டை அலங்கரிப்பதற்குப் பல வண்ணங்களைப் பயன்படுத்திவருகிறோம்.
 
அப்படியில்லாமல், ஒரே நிறத்தைப் பிரதானமாக வைத்துக்கூட வீட்டை அலங்கரிக்கலாம். அந்த வகையில், நீல நிறத்தை வைத்து வீட்டை எப்படி அலங்கரிக்கலாம் என்று பார்க்கலாம்.
 
நீலத்தின் பலம்
 
நாம் தேர்ந்தெடுக்கும் ஒவ்வொரு நிறமும் நம் மனநிலையையும், ஆளுமையையும் பிரதிபலிக்கக்கூடியவை. நீலம், மென் நிறங்களின் குடும்பத்தைச் சேர்ந்தது. அமைதியையும், இனிமையையும் தருவதில் நீல நிறத்தை எந்த நிறத்தாலும் அடித்துக்கொள்ள முடியாது. அத்துடன், மனதை ஒருமுகப்படுத்துவதற்கு நீல நிறம் உதவும்.
 
சுவர் அலங்காரம்
 
உங்கள் வீட்டின் சுவர் நிறம்தான் உங்கள் ஆளுமையை வெளிப்படுத்துவதில் பெரும்பங்காற்றுகிறது. நீங்கள் மென்மையை விரும்பக்கூடிய நபர் என்றால், உங்களுக்கு ஏற்ற நிறம் நீலம்தான். வரவேற்பறையின் பிரதானமான சுவரைத் தேர்ந்தெடுங்கள். அந்தச் சுவரில் நீல நிறத்தின் வலிமை வெளிப்படும்வகையில் அடர்த்தியாகப் பூசுங்கள். அப்படியில்லையென்றால், நீல வண்ணத்தில் டெக்ஸ்ச்சுரைஸ்டு தன்மையுடன் இருக்கும் வண்ணத்திலும் சுவரை அலங்கரிக்கலாம்.
 
அதுமட்டுமல்லாமல், விதவிதமான அலங்காரங்களுடன் கிடைக்கும் நீல வண்ண சுவர் காகிதங்கள், நீல வண்ணத்தலான புடைப்பு சிற்பங்களை வைத்தும் உங்கள் வீட்டின் சுவரை அலங்கரிக்கலாம். சுவரை மட்டுமில்லாமல், சுவரில் மாட்டிவைக்கும் பொருட்கள், அலமாரிகள் என எல்லாவற்றிலும் நீல வண்ணம் இருக்கும்படி பார்த்துக்கொள்ளலாம். உதாரணத்துக்கு, போட்டோ ஃபிரேம்களை நீல நிறத்தில் சுவரில் மாட்டிவைக்கலாம். இப்படிப் பல பொருட்களிலும் நீலம் இருக்கும்படி வீட்டை அலங்கரிக்கலாம்.
 
அறைக்கலன்களாலும் அலங்கரிக்கலாம்
 
அறைக்கலன்கள்தான் வீட்டு அலங்காரத்தின் ஆன்மாவாக இருக்கின்றன. ஒரு வீட்டின் தோற்ற அழகைத் தீர்மானிப்பதில் இவை 30 சதவீதம் எடுத்துக்கொள்கின்றன. நீல வண்ணத்தின் பல சாயல்களில் இந்த அறைக்கலன்கள் இருந்தால், அது வீட்டின் தோற்றத்தை மேலும் அழகாக்கும்.
 
வீட்டின் திரைச்சீலைகளைத் தேர்ந்தெடுக்கும் சுவருக்கு அடித்திருக்கும் அதே வண்ணத்தில் தேர்ந்தெடுக்கக் கூடாது. அதற்குப் பதிலாக, நீலமும் சாம்பலும், நீலமும் வெள்ளையும், நீலமும் பச்சையும் போன்ற இருநிறங்களும் இணைந்திருக்குமாறு வண்ணத்தைத் தேர்ந்தெடுக்கலாம்.
 
வீட்டின் தரைவிரிப்புகளிலும் நீல வண்ணம் பிரதானமாக இருக்கும்படி வடிவமைக்கலாம். வரவேற்பறை அறைக்கலன்களில் இடம்பெறும் மெத்தைகளையும் நீல வண்ண சாயல்களில் அமைக்கலாம். அப்படியில்லை என்றால், நீல வண்ணத்தின் கான்ட்ராஸ்ட் நிறமான ஆரஞ்சு நிறமாகவும் இருக்கலாம்.
 
அலங்காரப் பொருட்கள்
 
வீட்டின் தோற்ற அழகைப் பத்து சதவீதம் அலங்காரப் பொருட்கள் தீர்மானிக்கின்றன. அப்படியிருக்கும்போது, நீல வண்ணத்தில் வீட்டை அலங்கரிக்கும்போது வீட்டு அலங்காரப்பொருட்களிலும் தினசரி உபயோகப்படுத்தும் பொருட்களிலும் அந்த வண்ணத்தின் நீட்சி இருக்குமாறு பார்த்துக்கொள்ள வேண்டியது அவசியம்.
 
உதாரணமாக, அலங்கார விளக்குகள், கண்ணாடியின் ஃபிரேம், பூந்தொட்டிகள், மேஜை விரிப்புகள், அலங்கார ஜாடிகள் போன்ற பொருட்களிலும் இந்த நீல வண்ணத்தின் சாயல் தெரியவேண்டும். கடைசியாக, இவற்றைச் செய்து முடித்த பிறகு நீலநிறப் பூக்களின் வாசமும் வீட்டில் வீசுமாறு பார்த்துக்கொள்ளுங்கள்.
 
Link to comment
Share on other sites

  • 3 weeks later...

அடுக்குமாடி வீட்டை அழகாக்க ஸ்டிக்கர் போதும்!

 

sticker_2318115g.jpg

 

கம்பீரமான அடுக்குமாடிக் குடியிருப்பில் ஒரு ஃப்ளாட் வாங்கிவிட்டீர்கள். உங்கள் ஃப்ளாட்டில் உயர்தர சோபாக்கள் அடுக்கப்பட்ட வரவேற்பறையின் குறுக்கே ஓர் மின்கம்பம் சாய்ந்து நின்றால் எப்படி இருக்கும்?

 
அகலமாகக் கிளை பரப்பி நிற்கும் ஓர் ஆலமரம் படுக்கை அறையில் முளைத்திருந்தால் எப்படி இருக்கும்? மாடிப் படிக்கட்டுகளில் குட்டிப் பூனைகள் அங்குமிங்கும் துள்ளித் திரிந்து விளையாடினால் எப்படி இருக்கும்?
 
இப்படி நம் வழக்கமான சலிப்புத்தட்டும் வாழ்க்கையில் புதுமைகளைப் புகுத்தி நம்மை நாமே புதுப்பித்துக்கொள்ள வழிசெய்கின்றன சுவர் ஸ்டிக்கர்கள்.
 
பெயிண்ட் தேவையில்லை
 
உங்கள் வீட்டு வரவேற்பறையை வசீகரமாக மாற்ற வேண்டும் என நினைத்தால் இனி விலை உயர்ந்த பெயிண்டுகளைப் பூச வேண்டியதில்லை. அவ்வளவு ஏன் வால்பேப்பர் (wallpaper) எனப்படும் சுவர் காகிதங்களைக்கூட வாங்க வேண்டியதில்லை.
 
சுவர் காகிதம் அல்லது பெயிண்டு என்பவை ஒட்டுமொத்தமாக ஒரு அறையின் சுவர் முழுவதையும் வேறு தோற்றத்துக்கு மாற்றுபவை. முழுச் சுவருக்கும் பளீர் நிறத்தில் பெயிண்ட் பூசுவது பழைய பாணி. சுவரின் ஒரு சிறிய பகுதிக்கு மட்டும் வேறுவிதமான தோற்றம் தருவது புதிய பாணி.
 
நவீன அழகியல் கோட்பாடு இன்று மாறிவிட்டது. அழகூட்டுவது என்றால் அங்குமிங்குமாகச் சில நகாசு வேலைப்பாடுகள் செய்வதுதான். அத்தகைய நவீன வீட்டு அலங்காரத்துக்கு உகந்தவை சுவர் ஸ்டிக்கர்கள்.
 
குறைந்த செலவில் நிறைய அழகு
 
இவற்றைப் பயன்படுத்துவது சுலபம், துரிதமாக ஒட்டிவிடலாம், உங்கள் சவுகரியத்துக்கு ஏற்ப எந்தப் பகுதியிலும் ஒட்டிக் கொள்ள முடியும். விலையும் குறைவு. வெறும் ரூ.300 முதல் விதவிதமான சுவர் ஸ்டிக்கர்கள் விற்கப்படுகின்றன. ஆனால் மாயாஜாலம் போல உங்கள் ஃப்ளாட்டின் தோற்றத்தை அவை முற்றிலுமாக மாற்றிவிடும்.
 
சுவாரசியமான, நவீன வடிவங்களில் சுவர் ஸ்டிக்கர்கள் கிடைக்கின்றன. சுவர்களில் மட்டுமின்றி வீட்டு உபயோகப் பொருட்கள், மேஜை, நாற்காலி போன்ற சாமான்களின் மீதும் ஒட்டி அழகு பார்க்கலாம்.
 
கேலி, கிண்டல் ததும்பும் சுவர் ஸ்டிக்கர்கள், 3டி டிஜிட்டல் அச்சுகள், ஈர்க்கும் சுவர் கலை புகைப்படங்கள் என நீங்கள் விரும்பும் ஸ்டிக்கர்களை எங்கு வேண்டுமானாலும் ஒட்டலாம். சிறிது காலம் கழித்து அவற்றை அகற்றிவிட்டு வேறு படங்களும் ஒட்டலாம்.
 
எங்கும், எப்படியும்!
 
உயிரோட்டமற்ற பகுதி என்றால் வீட்டிலிருக்கும் சுவிட்ச் போர்டுதான். அத்தகைய சுவிட்ச் போர்டைப் பார்த்துப் பார்த்து சிரித்து ரசிக்கும்படி மாற்றும் ஸ்டிக்கர்கள் உள்ளன. சுவிட்ச் போர்ட்டுக்குள் மின்சாரம் எப்படிப் பாய்கிறது, அதிலிருந்து வெளியேறும் மின்சாரம் மற்ற கருவிகளை எப்படி இயக்குகிறது என்பது போன்ற அறிவியல் சார்ந்த விஷயங்களைக் கேலிச் சித்திரம் போல் காட்டும் ஸ்டிக்கர்கள் இவை.
 
வெறும் கறுப்பு வெள்ளை நிறங்களைக் கொண்டு மாயாஜாலம் செய்யும் சுவர் ஸ்டிக்கர்கள், நாட்டியப் பேரொளிகளை உங்கள் அறை சுவர்களில் நடனமாடச் செய்யும் ஸ்டிக்கர்கள், கேலி கிண்டல் கூடிய ஸ்டிக்கர்கள், குழந்தைகளை ஈர்க்கும் ஸ்டிக்கர்கள், மனிதர்கள் பொறிக்கப்பட்ட ஸ்டிக்கர்கள், விளையாட்டு, இசை இப்படி கலைநயம் மிக்க ஸ்டிக்கர்கள், செல்லப் பிராணிகள், பூச்சிகள், வண்ண வண்ணப் பூக்கள், மரங்கள், பறவைகள், வடிவியல் வடிவங்கள் பொறிக்கப்பட்ட ஸ்டிக்கர்கள் இப்படி விதவிதமாக உள்ளன.
 
‘என்ன பொழுதுபோகாம சுவரை வெறித்துப் பார்த்துகிட்டிருக்க!’ என யாரும் உங்களை இனிமேல் கேட்க மாட்டார்கள். சுவரைப் பார்ப்பதன் மூலமே உங்கள் பொழுதை சுவாரசியமாகக் கழிக்கலாம்.
 
sticker2_2318113g.jpg
 
 
sticker4_2318111g.jpg
 
 
sticker3_2318112g.jpg
 
sticker1_2318114g.jpg
 
Link to comment
Share on other sites

அறை அழகின் ரகசியங்கள்

 

room_2325727g.jpg

 

ஓர் அறையை எப்படி வேண்டுமானாலும் அலங்கரிக்கலாம். அதற்கு எந்த விதிமுறைகளும் இல்லை. உங்கள் ரசனைதான் அறை அலங்காரத்துக்கான அளவுகோல். அந்த ரசனையும் எப்போதும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டுமென்ற அவசியமல்லை.

 

அதுவும் காலத்துக்கு ஏற்றமாதிரி மாறும் தன்மையுடையதுதான். ஆனால், உங்கள் அறையின் தோற்றத்தை முழுமையாக்குவதற்குச் சில அம்சங்கள் தேவைப்படுகின்றன. அந்த அம்சங்களில் சரியாகக் கவனம் செலுத்தினால், அறையின் அழகை முழுமையாக்கிவிடலாம்.

 

கலை ரசனை

கலை ரசனையை வெளிப்படுத்தும் பொருட்கள் இல்லாமல் உங்களால் ஓர் அறையை அழகாக்கிவிட முடியாது. உங்கள் அறையில் வெளிப்படும் கலைத்தன்மையில்தான் உங்களுடைய காட்சி அழகியியல் வெளிப்படுகிறது. உங்களுக்குப் பிடித்த, உங்கள் ரசனைக்கு ஒத்துப்போகும் கலைப்பொருட்களை வைத்து அறையை அலங்கரியுங்கள். இந்தக் கலைப் பொருட்கள் உங்கள் அறைக்குப் புத்துணர்ச்சியையும், தனித்தன்மையையும் கொடுக்கும்.

 

சரியான வெளிச்சம்

ஒரு நல்ல அறைக்கும், சிறந்த அறைக்குமான வித்தியாசத்தை விதவிதமான விளக்குகளின் வெளிச்சம்தான் ஏற்படுத்துகிறது. ஒரு சின்ன அறைக்குக்கூட மூன்று விதமான விளக்கு வெளிச்சம் தேவைப்படுகிறது. இந்த அம்சத்தைப் பெரும்பாலும் நாம் மறந்துவிடுவோம். ஆனால், இந்த விளக்குகளின் வெளிச்சமும் அறை அலங்காரத்தைத் தீர்மானிப்பதில் முக்கிய பங்குவகிக்கிறது.

 

திரைச்சீலைகள்

திரைச்சீலைகளை வீட்டின் தனிமையை உறுதிப்படுத்துவதற்காக மட்டும் பயன்படுத்திய காலமெல்லாம் மலையேறிவிட்டது. இப்போது திரைச்சீலைகளும் அறையின் அழகைத் தீர்மானிக்கின்றன. உங்கள் அறையின் மற்ற அம்சங்களோடு ஒத்துப்போகுமாறு திரைச்சீலைகளை வாங்க வேண்டும். கோடை காலம், குளிர் காலம் என இரண்டிற்கும் ஏற்ற மாதிரி இப்போது தனித்தனியாகத் திரைச்சீலைகள் கிடைக்கின்றன. உங்கள் அறைக்கு மென்மையான தோற்றத்தை அளிக்கக்கூடிய வலிமை திரைச்சீலைகளுக்கு இருக்கின்றன. சுருள், வளையங்கள் போன்ற பல வித்தியாசமான அமைப்பில் வரும் திரைச்சீலைகளை வாங்கலாம்.

 

புதுமையான அமைப்பு

அறையில் வெளிச்சம், மென்மை இருந்தால் மட்டும் போதாது. சில புதுமையான டெக்ஸ்சர்களைத் தரும் குஷன்களும், தரைவிரிப்புகளும், சுவர் அலங்காரங்களும், செடிகளும் தேவை. அப்போதுதான் அந்த அறைக்கு ஆழமான தோற்றம் கிடைக்கும்.

 

தனி ரசனை

அறை வீட்டின் அங்கமாக இருக்கவேண்டுமானால், உங்கள் ஆளுமையை வெளிப்படுத்தும் பொருட்கள் அங்கு நிச்சயமாக இருக்க வேண்டும். அது உங்களுடைய இனிமையான பயணத்தின் நினைவுகளை வெளிப்படுத்தும் பொருட்களாக இருக்கலாம். உங்கள் ரசனைகளை வெளிப்படுத்தும் பொருட்களாக இருக்கலாம். ஆனால், உங்கள் அறையில் உங்களுடைய சுவடுகள் ஏதாவது ஒரு விதத்தில் இருக்கவேண்டியது அவசியம்.

இந்த ஐந்து அம்சங்களையும் சரியாகப் பயன்படுத்தினால், உங்கள் அறையின் தோற்றம் முழுமையடைந்துவிடும்.

 

room1_2325726g.jpg

 

room111_2325724g.jpg

 

room11_2325725g.jpg

 

room1111_2325723g.jpg

 

http://tamil.thehindu.com/society/real-estate/%E0%AE%85%E0%AE%B1%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B4%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%95%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article6944666.ece

Link to comment
Share on other sites

  • 4 months later...

வீட்டை நவீனமாக்கும் சுவரொட்டிகள்

புத்தர் வால் மியூரல்

புத்தர் வால் மியூரல்

ஃபேமிலி ட்ரீ வால் டாட்டூ

ஃபேமிலி ட்ரீ வால் டாட்டூ

3டி வால் மியூரல்

3டி வால் மியூரல் 
 

3டி வால் மியூரல்

3டி வால் மியூரல்

வீட்டை அலங்கரிப்பதற்கு வால்பேப்பர் எனப்படும் சுவரொட்டிகளைப் பயன்படுத்தும் போக்கு இப்போது அதிகமாகியிருக்கிறது. வீட்டு உள்அலங்காரத்தில் முக்கியமான அம்சமாகச் சுவர் அலங்காரத்தைச் சொல்லலாம். அந்தச் சுவர் அலங்காரத்தை எளிமையாகவும், அசத்தலாகவும் செய்வதற்கு உதவுகின்றன சுவரொட்டிகள்.

சுவரொட்டிகளில் இப்போது பலவகைகள் கிடைக்கின்றன. அழகு, கலைநயம், புதுமை, தனிநபர் ரசனை, பட்ஜெட் என எல்லா அம்சங்களையும் அலசி ஆராய்ந்து, நமக்குப் பொருத்தமான சுவரொட்டிகளைத் தேர்ந்தெடுக்க முடியும். அப்படி, உங்கள் வீட்டுக்குப் பொருத்தமான சுவரொட்டியைத் தேர்ந்தெடுக்க உதவுகிறது ஐடேக்கோர்வாலா (idecorwala) என்னும் இணையதளம். ‘தி இன்டிரியர் பீப்பிள்’ என்னும் உள்அலங்கார நிறுவனம் ‘ஐடேக்கோர்வாலா’ தளத்தை முதன்முதலில் பிரத்யேகமாகச் சுவரொட்டிகளுக்காகச் சமீபத்தில் ஆரம்பித்திருக்கிறது. இந்த ஆன்லைன் வால்பேப்பர் ஷாப்பிங், சுவரொட்டிகளின் பயன்பாட்டை எல்லோருக்கும் சாத்தியப்படுத்துகிறது.

yamini_2462222a.jpg

யாமினி

சுவரொட்டிகளில் நவீனம்

சுவரொட்டிகளால் வீட்டுக்கு நவீனத் தோற்றத்தை எளிமையாக வழங்க முடியும். அதுவும், தற்போது வீடுகளில் இந்தச் சுவரொட்டிகள் பலவகையில் பயன்படுத்தப்படுகின்றன. நவீனத்துடன் வீட்டில் வசிப்பவர்களின் ஆளுமையை வெளிப்படுத்துவதிலும் இந்தச் சுவரொட்டிகள் பெரிய பங்குவகிக்கின்றன. “ஒவ்வொரு குடும்பத்திலும் சொல்வதற்கு ஒரு கதை இருக்கும். அது பாரம்பரியம், கலை, தனி நபர் ரசனை என எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். அவர்களுடைய அந்தக் கதையை சுவரொட்டிகள் வழியாக நவீன மொழியில் சொல்வதுதான் ‘ஐடெக்கோர்வாலா’வின் நோக்கம்” என்கிறார் அதன் இயக்குநர் யாமினி.

புதுமையான வகைகள்

உங்களுடைய வீட்டின் தன்மைக்கேற்றபடி இந்தச் சுவரொட்டி வகைகளைத் தேர்ந்தெடுக்கலாம். உதாரணமாக, ‘வால் பேப்பர்’(Wall paper), ‘வால் மியூரல்’(Wall Mural), ‘வால் டாட்டூ’ (Wall Tattoo) என மூன்று வகையாக இதைப் பிரித்திருக்கிறது ‘ஐடேக்கோர்வாலா’ இணையதளம். இதில் ரசனை, பட்ஜெட், அறையைப் பொருத்து இந்தச் சுவரொட்டி வகைகளைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

வால் பேப்பர் என்னும் சுவரொட்டிகளிலேயே பல வகைகள் இருக்கின்றன. “ஃபேப்ரிக், ‘வினைல்’, ‘ஃபோம்’, ‘நான்-ஓவன்’ என நான்கு முக்கியமான சுவரொட்டிகள் இருக்கின்றன. இதில் சொந்த வீட்டில் இருப்பவர்களுக்கு ‘வினைல்’ வால் பேப்பர் ஏற்றது. ஏனென்றால் இந்த வகை ஏழு முதல் எட்டு ஆண்டுகள் வரை உழைக்கும். பத்துக்குப் பத்து சதுர அடிக்கு இந்த வினைல் வால்பேப்பரைப் பயன்படுத்தினால் சுமார் 5000 ரூபாய் வரை செலவாகும். அதேமாதிரி, உங்கள் ரசனைக்கும் வீட்டின் வடிவமைப்புக்கும் ஏற்ற மாதிரி நான்-ஓவன், ஃபேப்ரிக் போன்றவற்றையும் பயன்படுத்தலாம்” என்கிறார் யாமினி.

வாடகை வீட்டில் இருப்பவர்கள் சாதாரண காகித சுவரொட்டிகளைப் பயன்படுத்தலாம். இது ஓராண்டு வரை உழைக்கும். பட்ஜெட்டும் குறைவாக இருக்கும். இந்தக் காகித சுவரொட்டிகளிலும் பலவகையான டிசைன்கள் இருக்கின்றன. சர்வதேச உள் அலங்கார வடிவமைப்பாளர்களின் டிசைன்களும் ‘ஐடேக்கோர்வாலா’வில் கிடைக்கின்றன.

3டி சுவர்கள்

3டி வடிவமைப்பில் வீட்டுச் சுவர்கள் இருக்க வேண்டும் என்று விரும்புபவர்களுக்கும், ஒரு குறிப்பிட்ட கருப்பொருளில் வீட்டுச் சுவரை வடிவமைக்க விரும்புபவர்களுக்கு ‘வால் மியூரல்’ வடிவமைப்புகள் உதவியாக இருக்கும். நவீனத்தை விரும்பும் இளைஞர்களுக்கும், கார்ட்டூன்களை விரும்பும் குழந்தைகளுக்கும் வால் டேட்டூக்கள் சரியான தேர்வாக இருக்கும். சுவரொட்டிகளின் தன்மையைப் பொருத்து விலை மாறுபடும்.

‘ஐடேக்கோர்வாலா’வில் டாட்டூக்களை வடிவமைக்க ஆயிரம் ரூபாயில் இருந்தும், 3டி வால் பேப்பர்களை வடிவமைக்க 3,000 ரூபாயில் இருந்தும் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளன. “இந்த 3டி வால்பேப்பர்களில் எந்த ஓவியத்தையும், கருப்பொருளையும் உருவாக்க முடியும். உதாரணத்துக்குக் காட்டைக் கருப்பொருளாக வைத்து 3டி வால்பேப்பரையும், வீட்டின் உள்அலங்காரத்தையும் எளிமையாகச் செய்யமுடியும்” என்கிறார் இயக்குநர் யாமினி.

இன்ப அதிர்ச்சிகள்

உங்கள் குடும்பத்தினர்களின் பிறந்த நாள், திருமண நாள் போன்ற முக்கியமான நாட்களில் வால்பேப்பர் அலங்காரம் மூலம் இன்ப அதிர்ச்சிக் கொடுக்கும் வசதியையும் வழங்குகிறது இந்த இணையதளம். “கடந்த ஆண்டு, காதலர் தினத்தின் போது இந்த இன்ப அதிர்ச்சி தரும் டீல்களை அறிமுகப்படுத்தினோம். இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. உங்கள் குடும்பத்தினர் ஒருவருக்கு எதிர்பாராத பரிசாக இந்த வால்பேப்பரைக் கொடுக்க விரும்பினால், நீங்கள் தேர்ந்தெடுத்துக் கொடுக்கும் வால்பேப்பரை, அந்த நபர் இல்லாத நேரத்தில் வந்து ஒரே நாளில் வடிவமைத்துக் கொடுத்துவிடுவோம். இதனால், உங்கள் குடும்பத்தினருக்குச் சிறந்த பரிசளித்த உணர்வைப் பெற முடியும்” என்கிறார் யாமினி.

http://tamil.thehindu.com/society/real-estate/வீட்டை-நவீனமாக்கும்-சுவரொட்டிகள்/article7386726.ece

Link to comment
Share on other sites

  • 4 months later...

இனிமை தரும் இயற்கை ஒளி

nature_2620225h.jpg

இயற்கையில் கிடைக்கும் சூரிய ஒளி இனிய இல்லத்துக்கு மிகவும் அவசியம். எவ்வளவு சூரிய ஒளி வீட்டுக்குள் வருகிறதோ அந்த அளவுக்கு நம்முடைய வீட்டுக்கு நல்லது. சூரிய ஒளி வீட்டுக்கு உள்ளே தங்கு தடையின்றி வருவதால் வெளிச்சம் கிடைப்பது ஒரு பயன் என்றால் நமது ஆரோக்கியத்துக்கும் அது உதவும் என்பது கூடுதல் பயன். ஏனெனில் சூரிய ஒளியில் வைட்டமின் டி அதிக அளவில் உள்ளது.

மேலும் போதுமான சூரிய ஒளி வீட்டுக்குள் நுழைந்துவிட்டால் அநாவசியமாகப் பகல் வேளைகளில்கூட மின்விளைக்கை எரியவிட்டு மின்சாரச் செலவைக் கூட்டிக்கொள்ள வேண்டாம். ஆனால் பலவேளைகளில் வீட்டுக்குள் ஒளிவருவதைத் தடுக்கும் வகையில் நாம் நடந்துகொள்கிறோம் நமது செயல்கள் அமைந்துவிடுகின்றன என்பதை உணர்ந்துகொண்டாலே போதும்.

அந்தத் தவறை நாம் சரிசெய்துவிடலாம். தேவையான அளவுக்கு ஒளியையும் பெற்றுக்கொண்டுவிடலாம். குகையில் வாழ்வதைப் போல் வீட்டுக்குள் வாழ்ந்தால் பகல் முழுவதும் விளக்கெரிய வேண்டியதிருக்கும் ஆகவே அதைத் தவிர்க்க வேண்டும். வீட்டுக்குள் அதிக ஒளி வர என்ன செய்ய வேண்டும்?

வீட்டுக்குள் கண்ணாடிகளை அதிகமாக வைக்கலாம். இதன் மூலம் வீட்டுக்குள் வரும் சூரிய ஒளி பிரதிபலித்து வீட்டுக்கு அதிக இயற்கை ஒளி கிடைக்கும். சுவர்களில் எதிரெதிராக கண்ணாடிகளைத் தொங்கவிடலாம். கண்ணாடியிலான அறைக்கலன்களைப் பயன்படுத்தலாம். அறைக்கலன்கள் கண்ணாடியால் ஆனதாக இருக்கும்போது அதுவும் ஒளியைப் பிரதிபலிக்கும் ஆகவே வீட்டுக்குக் கிடைக்கும் வெளிச்சம் அதிகரிக்கும். கதவுகள், ஜன்னல்கள் போன்றவற்றுக்கும் கண்ணாடியைப் பயன்படுத்தலாம்.

வீட்டின் சுவர்களுக்கு வண்ணமடிப்பதிலும் தனிக் கவனம் செலுத்த வேண்டும். அடர்த்தியான நிறங்களைத் தவிர்த்துவிட வேண்டும். அடர் வண்ணங்கள் சூரிய ஒளியை அதிகமாகப் பிரதிபலிக்காது. எனவே மென் நிறங்களையே வீட்டுச் சுவர்களுக்கு வண்ணங்களாகத் தேர்ந்தெடுக்க வேண்டும். மென் நிறங்களைச் சுவர்களில் பூசும்போது அவை ஒளியை அதிகப்படியாகப் பிரதிபலித்து வீட்டின் இயற்கை ஒளியை ஏற்றித் தரும்.

வீடுகளின் பயன்பாட்டுக்காக நாம் போட்டுவைத்திருக்கும் அறைக்கலன்கள் சூரிய ஒளியை அடைப்பது போல் அமைந்துவிடக் கூடாது. பல வீடுகளில் கட்டில், பீரோ போன்றவற்றை ஜன்னலை அடைத்தது போல் போட்டுவிடுவார்கள். எனவே ஜன்னல்கள் வழியே உள்ளே புகும் சூரிய ஒளியை அவை தடுத்துவிடும். வீட்டுக்குக் கிடைக்க வேண்டிய இயல்பான ஒளியும் குறைந்துவிடும். கண்ணாடி அறைக்கலன்கள் பயன்படுத்தினால் இந்தத் தொல்லை இல்லை. இல்லாத பட்சத்தில் ஜன்னல்கள், கதவுகள் போன்றவற்றை அடைக்காத வகையில் அறைக்கலன்களைச் சிறிது இடம்விட்டுப் போட வேண்டும். எந்தக் காரணத்தைக் கொண்டும் சூரிய ஒளியைத் தடுக்கும் வகையில் அறைக்கலன்களைப் போடக் கூடாது என்பதைக் கவனமாகப் பின்பற்றுங்கள்.

nature_2_2620226a.jpg

நமக்கு எப்படி ஆடையைப் பார்த்துப் பார்த்து வாங்குவோமோ அப்படியே நமது பிரியத்துக்குரிய வீட்டுக்கும் கடை கடையாக அலைந்து திரிந்து அருமையான துணியை எடுத்து திரைச்சீலைகளைத் தைத்துப் போடுவோம். திரைச்சீலைகளும் சிலவேளைகளில் வீட்டுக்கு உள்ளே வரும் ஒளியைத் தடுத்துவிடும். மிகவும் அடர்த்தியான துணிகளில் திரைச்சீலைகளைத் தைத்துப் போட்டால் அவை வீட்டுக்குள் அதிக ஒளியை வர விடாது. ஆகவே ஒளி ஊடுருவும், மென்மையான துணியாலான திரைச்சீலைகளையே வீடுகளுக்குப் பயன்படுத்த வேண்டும்.

வீடுகளின் உள்ளே அடங்கிய அறைகளுக்கு மிகவும் தடிமனான கதவுகளைப் பொருத்தக் கூடாது. அப்படிப் பொருத்தினால் சிறிதுகூட வெளிச்சம் அந்த அறைக்குக் கிடைக்காது. கதவுகளிலேயே சிறிய திறப்புகள் இருக்கும்படி பார்த்துக் கொண்டால் நல்லது. இல்லையெனில் கண்ணாடிக் கதவை அங்கே பொருத்தலாம்.

இயற்கையாக நமக்குக் கிடைக்கும் ஒளியைப் பயன்படுத்தி வீட்டுக்குப் போதுமான வெளிச்சத்தைப் பெற்றுக்கொள்வது நம் கையில்தான் இருக்கிறது. இயற்கையான ஒளியைப் பயன்படுத்தினால் நமக்கும் நல்லது; சுற்றுச்சூழலுக்கும் நல்லது. அதுவும் இந்தியா போன்ற வெப்பமண்டல நாடுகளில் சூரிய ஒளியை முடிந்த அளவு பயன்படுத்த வேண்டும் என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தொடர்ந்து சொல்லிக்கொண்டுவருவதை மனதில் இருத்தி நம்மாலான முயற்சியைக் காலம் தாழ்த்தாது மேற்கொள்ள வேண்டும்.

http://tamil.thehindu.com/society/real-estate/%E0%AE%87%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%A4%E0%AE%B0%E0%AF%81%E0%AE%AE%E0%

Link to comment
Share on other sites

வீட்டுப் பராமரிப்பு: சில குறிப்புகள்

mait_2612873f.jpg
 

உண்ணவும், உறங்கவும், கதை பேசுவும் மட்டுமா வீடு? அன்னையின் அணைப்பின் கதகதப்பைத் தர வல்லதல்லவா வீடு? வெயில், மழை, பனி, குளிர் என அனைத்திலிருந்தும் நம்மைக் காப்பது வீடு. நம் துக்கம், சந்தோஷம், கோபம், விருப்பு, வெறுப்பு என அனைத்து உணர்ச்சிகளையும் மவுனமாய் உள்வாங்கிக்கொள்ளும் உயிரற்ற, ஆனால் உயிருக்குயிரான இடம் வீடு.

ஆனால் அதைப் பராமரிப்பதில் நம் காட்டும் அக்கறையைப் பற்றிச் சொல்ல வாரத்தைகள் இல்லை. பல லட்சம் செலவு செய்து வீட்டைக் கட்டி வந்தவுடன் முடிந்துவிடுவதில்லை நம் பணி. அதனை அழகுபடுத்துவதிலும் பராமரிப்பதிலும்தான் உண்மையான திறமை உள்ளது. அது ஒன்றும் கம்ப சூத்திரம் அல்ல. மிக எளிய வழிமுறைகளைப் பின்பற்றினால் நம்முடைய வீட்டை அனைவரும் ரசித்துப் பாராட்டும் வண்ணம் அமைக்கலாம்.

வீடு பொலிவுடன் திகழ அலங்காரமான, படோபமான பொருட்கள் தேவை என்றில்லை. எளிமைதான் என்றுமே அழகு. வீடெங்கும் நிறைந்திருக்கும் தேவையற்ற பொருட்களை நீக்கினாலேயே வீடு அழகு பெற்றுவிடும். வீடு சிறியதாக இருக்கிறது, ஆனால் பொருட்கள் எக்கச்சக்கமாக இருக்கின்றன, எதை எங்கே வைப்பது என்றே தெரியவில்லை என்று புலம்புபவர்களுக்கு ஒரு வார்த்தை.

பழையன கழிந்த பிறகு மட்டுமே புதியன புக வேண்டும். தேவைக்கு அதிகமான பொருட்களைச் சேர்க்காதீர்கள். என்றாவது ஒரு நாள் தேவைப்படும் என்று பொருட்களைச் சேகரிக்காதீர்கள். ஒரு பொருளை ஒரு மாதத்துக்கு ஒரு முறையேனும் நாம் உபயோகிக்கவில்லையெனின் அதன் பயன்பாடு நமக்குத் தேவையில்லை என்றே அர்த்தம். அதைத் தூர வீசிவிடலாம். மனமில்லை எனின் அட்டைப்பெட்டியில் போட்டு லாஃப்ட் என்னும் பரணில் வைத்துவிட்டு தேவையான நேரத்தில் எடுத்துக் கொள்ளலாம்.

வீட்டின் ஒவ்வொரு பகுதியும் முக்கியமானதே. சிலர் விருந்தாளிகள் வரலாம் என்று வரவேற்பறையை மட்டும் சுத்தமாக வைத்துக்கொண்டு பிற அறைகளைக் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவர். இது தவறு. சமையலறை, படுக்கையறை, குளியலறை என்று வீடு முழுக்கவுமே கண்ணும் கருத்துமாகப் பராமரிக்க வேண்டியது அவசியம். கூடுதலாகச் சில நிமிடங்கள் வீட்டைப் பேணுவதில் செலவழித்தால் இது சாத்தியமே.

வீட்டின் தரையைத் தினமும் சுத்தம் செய்வது போலவே சமையல் மேடையையும், சிங்க்-ஐயும் தினமும் சுத்தம் செய்ய வேண்டும். குளியலறையைத் தினமும் கழுவி நீரில்லாமல் துடைத்துவிட்டால் அவை நீண்ட நாட்கள் பொலிவுற விளங்கும். இரண்டு நாட்களுக்கு ஒரு முறை ஃபிரிட்ஜில் உள்ள காய், பழவகைகளைக் கை பார்க்க வேண்டும். மீந்த குழம்பு வகைகளைத் தூர வீச வேண்டும். வாரம் ஒரு முறை மைக்ரோவேவ் மற்றும் ஃபிரிட்ஜை சுத்தமாகத் துடைக்க வேண்டும்.

மாதமொரு முறை அனைத்து கப்போர்ட்களையும் ஒதுக்கி பேப்பர் மாற்ற வேண்டும். சமையலறைப் பொருட்களைச் சரி பார்த்து வெயிலில் காய வைக்க வேண்டியவற்றை வெயிலில் காய வைத்து எடுத்து வைக்க வேண்டும். மின் சாதனங்களை உபயோகப்படுத்தவில்லை என்றாலும் அடிக்கடித் துடைத்து சரிபார்த்து உள்ளே வைக்க வேண்டும். அழையா விருந்தாளிகளாய் வரும் தூசியும், பூச்சிகளும், தம்முடன் அழைத்து வருவது நோய் நொடிகளைத்தான் என்பதை உணர்ந்து சுத்தத்தைப் பேண வேண்டும்.

விருந்தினர் வரும் வீடு அழகாய்த் திகழ வேண்டும் என்பது அனைவரின் அவாவும்கூட. அந்நேரம் அனைத்தையும் ஒதுக்கி அடுக்கி வைக்காமல் எப்போதுமே அதுபோல் வைத்திருப்பதுதான் சாமர்த்தியம். எந்தப் பொருளையையுமே எடுத்த இடத்திலேயே திருப்பி வைத்தாலே பாதி வேலை முடிந்துவிடும். எந்தப் பொருளையும் தேடாமல் எடுத்துக் கொடுக்கும் வகையில் நம் வீட்டில் பொருட்கள் இருக்க வேண்டும். வீட்டில் உள்ள அனைவரும் இணைந்து முயன்றால் மட்டுமே வீட்டை அழகாகப் பராமரிக்க முடியும். வீட்டைக் கலைநயத்துடன் கட்டமைத்து, உள் அலங்காரம் செய்திருந்தாலும் அதைப் பராமரிப்பதைப் பொறுத்தே வீட்டின் அழகு வெளிப்படும்.

 

http://tamil.thehindu.com/society/real-estate/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/article7854658.ece

Link to comment
Share on other sites

ஒளிப்படங்களால் அறையை ஒளிர வைக்கலாம்

pic_2629250g.jpg

 

pic1_2629249g.jpg

 

pic11_2629248g.jpg

 

pic111_2629247g.jpg

 

வீட்டுச் சுவரை அலங்கரிப்பதற்கு ஒளிப்படங்களைத் தேர்ந்தெடுப்பது எளிமையானது. ஒளிப்படங்களால் ஓர் அறையின் தோற்றத்தை எப்படி வேண்டுமானாலும் மாற்றலாம். ஆனால், எந்த மாதிரியான ஒளிப்படங்களால் அறையை அலங்கரிக்கப் போகிறீர்கள் என்பது முக்கியம். வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பழைய கருப்பு-வெள்ளை ஒளிப்படங்கள், உங்கள் குழந்தைகளின் ஒளிப்படங்கள், இயற்கைக் காட்சிகள் என உங்களுக்குப் பிடித்த கருப்பொருளில் ஒளிப்படங்களைத் தேர்ந்தெடுக்கலாம். இவற்றை எப்படி அறையில் மாட்டுகிறீர்கள் என்பதில்தான் அலங்காரயுத்தி அடங்கியிருக்கிறது.

ஒரு பெரிய ஒளிப்படம்

ஒரே ஒரு பெரிய ஒளிப்படத்தை வைத்துக்கூட அறையின் தோற்றத்தை மாற்ற முடியும். உதாரணத்துக்கு, வெள்ளை நிறச் சுவரில், ஓர் அழகான பெரிய இயற்கைக் காட்சி ஒளிப்படத்தை மாற்றலாம். அது அறைக்குத் தேவைப்படும் வண்ணங்களைக் கொடுக்கும்.

முத்தான மூன்று

ஒரே கருப்பொருளில் மூன்று ஒளிப்படங்களைத் தேர்ந்தெடுத்து ஒரு ‘டிரைடிக்’கை (triptych) உருவாக்கலாம். ஒரே மாதிரி ஃப்ரேமில், அளவில் இந்த மூன்று ஒளிப்படங்களும் இருக்க வேண்டும். ஒருவேளை, உங்களுக்கு கட்டிடக் கலையில் ஆர்வம் இருந்தால், உங்களுக்குப் பிடித்த மூன்று கட்டிடங்களின் ஒளிப்படங்களை அறையில் மாட்டி வைக்கலாம். உங்கள் ஒளிப்படத்தைக்கூட இந்த ‘டிரைடிக்’கை உருவாக்கப் பயன்படுத்தலாம்.

சிறியதே அழகு

அறையில் இடப்பற்றாக்குறை பிரச்சினை இருப்பவர்கள் சிறிய ஒளிப்படங்களால் அறையை அலங்கரிக்கலாம். உங்கள் அறையின் சுவர் அடர் நிறத்தில் இருந்தால், ஒளிப்படங்களின் ஃப்ரேம்களையும், மேட்களையும் கறுப்பு வெள்ளையில் தேர்ந்தெடுக்கலாம். ஒளிப்படங்கள் வேறுவேறு கருப்பொருளில் இருந்தாலும், இவற்றை வித்தியாசமாக அடுக்கிவைக்க முடியும். ஓர் ஒளிப்படத்தைச் செங்குத்தாகவும், மற்றொன்றைக் கிடைமட்டமாகவும் தொங்கவிடலாம். இந்த மாறுபட்ட வரிசை அறைக்கு வித்தியாசமான அழகைக் கொடுக்கும்.

கண்காட்சி சுவர்

அறையின் நீளத்தைப் பொருத்து, சுவரில் ஒளிப்படங்களைக் கண்காட்சி போல அடுக்கி வைக்கலாம். விருப்பப்பட்டால், இந்த ஒளிப்படங்களுக்கு மேல் சிறிய விளக்குகளையும் அமைக்கலாம். ஒருவேளை, உங்கள் அறை நீளமாக இல்லாமல், கூரை உயரமாக இருந்தால் ஒளிப்படங்களைச் செங்குத்தாக மாட்டலாம். இந்த ஒளிப்படங்கள் அறையின் நீளத்தையும், உயரத்தையும் அழகாக எடுத்துக்காட்டும்.

ரயில் அமைக்கலாம்

ஒளிப்படங்களை வைத்து அறையில் ஒரு ‘போட்டோ ரயில்’ அமைக்கலாம். இரண்டு புறமும் சட்டகங்களை வைத்து அதில் ஒளிப்படங்களை வரிசையாக அடுக்கலாம்.

விதிகளை உடைக்கலாம்

ஒளிப்படங்களை ‘ஹெட்போர்ட்’(Headboard) அளவில்தான் மாற்ற வேண்டும் என்ற அவசியம் இல்லை. அறையில் எந்த உயரத்தில் வேண்டுமானாலும் மாற்றலாம். ஆனால், அந்த இடம் அறையின் ‘ஃபோகல் பாயிண்ட்’டாக இருக்க வேண்டியது முக்கியம்.

கண்ணாடித் தடுப்புகள்

ஒளிப்படங்களைச் சுவரில்தான் மாட்ட வேண்டும் என்ற அவசியமில்லை. உங்கள் வீட்டில் ஜன்னலுக்குப் பதிலாகக் கண்ணாடித் தடுப்புகள் இருந்தால் அதிலும் ஒளிப்படங்களைப் பொருத்தலாம்.

படிக்கும் மேசை

உங்கள் படிக்கும் மேசையை ஜன்னலுக்கு அருகில் அமைக்க முடியவில்லையென்றால், அந்த மேசைக்கு மேல் ஒரு ஒளிப்படத்தை மாட்டி வைக்கலாம். இந்த ஒளிப்படத்தின் அளவும், மேசையின் அளவும் ஒன்றாக இருக்க வேண்டியது அவசியம். அப்போதுதான், அது அறைக்குச் சமநிலை உருவாகும்.

http://tamil.thehindu.com/society/real-estate/%E0%AE%92%E0%AE%B3%E0%A

 

Link to comment
Share on other sites

அமைதியான படுக்கையறைக்கு ஐந்து வண்ணங்கள்

 

bed2_2638010g.jpg

 

bed1_2638011g.jpg

 

bed_2638012g.jpg

 

bed21_2638009g.jpg

 

1_2638013g.jpg

படுக்கையறை அமைதியாகவும், சொகுசானதாகவும் இருக்க வேண்டும் என்றே அனைவரும் விரும்புவார்கள். அதற்காக நீங்கள் விலை மதிப்பான கட்டில், மெத்தைகள் வாங்க வேண்டும் என்றில்லை. இந்த விருப்பத்தைச் சரியான வண்ணங்களைப் பயன்படுத்துவதன் மூலம் எளிமையாக நிறைவேற்ற முடியும். படுக்கையறை என்பது களைப்பிலிருந்து உங்களை விடுவிக்கும் வகையில் இருக்க வேண்டும். அதற்கு வண்ணங்களின் பங்கு மிக மிக அவசியம். கட்டில் விரிப்பாக இருக்கட்டும்; சுவராக இருக்கட்டும் எல்லாவற்றுக்கும் வண்ணம் அவசியம். வண்ணங்கள் மாயம் செய்யக்கூடியவை.

நிம்மதியான படுக்கையறையை உருவாக்கச் சாம்பல், நீலம், பச்சை, செவ்வூதா போன்ற வண்ணங்களைத் தேர்ந்தெடுக்கலாம். இந்த வண்ணங்கள் மன அழுத்தம், கவலை போன்ற பிரச்சினைகளைக் குறைக்க உதவும். அத்துடன், உங்கள் படுக்கையறைக்குப் பிரம்மாண்ட தோற்றத்தையும் கொடுக்கும்.

அடர் சாம்பல்-நீலம் (Dark grey-blue)

படுக்கையறையின் பிரதான சுவருக்கு ஏற்றது அடர் சாம்பல்-நீலம். அறைக்குள் அமைதியான அதிர்வலைகளை உருவாக்க இந்த நிறம் பெரிதும் உதவும். இந்த நிறத்தை உங்கள் அறைக்குத் தேர்ந்தெடுக்கும்போது ஒரு பெரிய கலைப்பொருளையும் கூரையில் பொருத்துவதற்குச் சேர்த்துத் தேர்ந்தெடுங்கள். அடர் சாம்பல்-நீலமாய் இருப்பதால் அறைக்குள் வெளிச்சம் ஊடுருவுவதற்காக வெள்ளை நிறத்தையும் பயன்படுத்த வேண்டும். அதனால், கூரையில் வெள்ளை நிறத்தை அடிக்கலாம். அத்துடன், வெள்ளை நிற மெத்தைகள், தலையணைகள், தரைவிரிப்புகள் போன்றவற்றையும் பயன்படுத்தலாம்.

மென்-சாம்பல் (Soft grey)

மென்மையான வண்ணங்களை விரும்புபவர்கள், மென் சாம்பல் நிறத்தைப் படுக்கையறைக்குத் தேர்ந்தெடுக்கலாம். பிரதான சுவர், மென் சாம்பல் நிறத்தில் இருப்பதால், கூரையில் வெள்ளை நிறத்துடன் சாம்பலையும் கலந்து அடிக்கலாம். இதனால் அறைக்குக் கூடுதல் அடர்த்தி கிடைக்கும். இந்த அறையில் பொருட்களை அடர்-சாம்பல், மற்றும் வெள்ளை நிறத்தில் வடிவமைக்கலாம்.

பனிக்கட்டி நீலம் (Icy Blue)

இயற்கையான வண்ணங்களைப் பயன்படுத்தும்போது வீட்டுக்குள் நிம்மதியை எளிமையாகக் கொண்டுவரலாம். அந்த வகையில், வான் நீல நிறத்தைப் படுக்கையறைக்குத் தேர்ந்தெடுக்கலாம். அதிலும் மென் நீலமாகத் தேந்தெடுப்பது கூடுதல் அழகைப் படுக்கையறைக்குக் கொடுக்கும். பனிக்கட்டி நீலமும் அறைக்கு நடுநிலையான தோற்றத்தைக் கொடுக்கும். அத்துடன், பனிக்கட்டி நீலத்துடன் எந்த நிறத்தையும் இணைக்கலாம். சாக்லெட் பிரவுன், சாம்பல் போன்ற நிறங்களுடன் இணைப்பது ஏற்றதாக இருக்கும்.

மென் பச்சை (Soft green)

அமைதிக்கும், மனநிறைவுக்கும் மென் பச்சை ஏற்றது. இந்த நிறத்தையும் நடுநிலை (neutral) டோனில் படுக்கையறைக்குப் பயன்படுத்தலாம். இந்த நிறத்தை மரப்பொருட்களுடன் பயன்படுத்தலாம்.

லாவண்டர்

மென் லாவண்டர் நிறமும் படுக்கை யறைக்குப் பொருத்தமாக இருக்கும். இந்த நிறத்துடன், அடர் சாம்பல், கறுப்பு, வெள்ளை போன்ற நிறங்களையும் சேர்த்து அறையில் பயன்படுத்தலாம். ஊதாவின் எல்லா நிறச் சாயல்களும் மன அழுத்தத்தைக் குறைக்கும். இந்த நிறத்துக்குப் பொருந்தும்படி, தரைவிரிப்புகளைச் சாம்பல் நிறத்தில் தேர்ந்தெடுக்கலாம்.

 

http://tamil.thehindu.com/society/real-estate/%E0%AE%85%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%A9-%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%

Link to comment
Share on other sites

  • 8 months later...

புதுப் புதுப் புத்தக அலமாரிகள்

புத்தகங்கள் நற்பண்புகள் தந்து நம்மைப் பேணக்கூடிய வழிகாட்டி எனச் சொல்லலாம். அப்படிப்பட்ட புத்தகங்களை நாமும் சரியாகப் பேண வேண்டும் அல்லவா? அதற்காகத்தான் புத்தக அலமாரிகள். இந்தப் புத்தக அலமாரிகளில் பல வகைகள் உள்ளன. மரபான அலமாரிகள் இல்லாமல் புதிய வடிவங்களிலும் இப்போது அலமாரிகள் கிடைக்கின்றன.

காட்சிப்படுத்தும் அலமாரி

இவ்வகை அலமாரிகள் புத்தகக் கடைகளில் பயன்படுத்தக் கூடியவை. பொதுவாக வீட்டு அலமாரிகளில் புத்தகங்கள் முதுகு காட்டியபடி அடுக்கப்பட்டிருக்கும். ஆனால் இந்த அலமாரியில் புத்தகங்கள் முகத்தைக் காட்டியபடி அடுக்கி வைக்கப்பட்டிருக்கும்.

பாரிஸ்டர் அலமாரி

பாரிஸ்டர் அலமாரி என்பது இங்கிலாந்தில் பாரிஸ்டர்களின் பயன்பாட்டுக்கு வந்தது. பாரிஸ்டர்கள் தங்களுக்குத் தேவையான சட்டப் புத்தகங்களை வைப்பதற்காகத் தயாரிக்கப்பட்டுப் புழக்கத்துக்கு வந்தது. இது ஒரு மரபான அலமாரி வகை. கண்ணாடிக் கதவுகள் கொண்டது. இதனால் புத்தகங்கள் தூசிபடமால் பாதுகாக்கப்படும். இன்று இவ்வகை அலமாரிகள் உலகம் முழுவதும் பரவலாகப் பயன்பாட்டில் உள்ளன.

மாடுலர் அலமாரி

kabord1_2961562a.jpg

 

மாடுலர் அலமாரிகள் பல மாதிரி வடிவங்களில் கிடைக்கின்றன. இவை மரபான அலமாரி வடிவங்களில் இருந்து வேறுபட்டவை. அதாவது முட்டை வடிவம், குறுக்குநெடுக்குமான வடிவம் போன்ற பல வடிவங்களில் கிடைக்கின்றன. இம்மாதிரி அலமாரிகள் நவீன வீடுகளில் அதிகமாகப் பயன்பட்டு வருகின்றன. சிறு வடிவிலிருந்து மிகப் பெரிய வடிவம் வரை கிடைக்கின்றன.

சுவர் ஓர அலமாரி

kabord_4_2961564a.jpg

 

சுவர் ஓரங்களில் அமைக்கப்படும் இவ்வகை அலமாரிகளும் சமீப காலத்தில் அதிகமாகப் பயன்படுத்தப்படும் அலமாரி வகை. புத்தகங்கள் அடுக்கிவைப்பதற்கு மட்டுமல்லாமல் வீட்டுக்கு அழகு சேர்ப்பதாகவும் இந்த அலமாரிகள் இருக்கும்.

ஏணி வடிவ அலமாரி

kabord_2_2961565a.jpg

ஏணியைச் சுவரோடு சேர்த்துச் சரித்துவைத்தால் எப்படி இருக்குமோ அப்படியான வடிவில் உருவாக்கப்பட்டவை இவ்வகை அலமாரிகள். ஏணி போன்ற வடிவமைப்பு என்பதால் ஒவ்வொரு அடுக்கின் அளவும் கீழிருந்து மேலே குறைந்துகொண்டே செல்லுமாறு அமைக்கப் பட்டிருக்கும். மேலே உள்ள அடுக்கு மிகச் சிறியதாக இருக்கும் அதில் பூச் சாடிகள், படங்கள் எதையாவது வைக்கலாம். புத்தகங்களைப் பாதுகாப்பது மட்டுமல்லாமல் வீட்டுக்கும் அழகு கூட்டும்.

http://tamil.thehindu.com/society/real-estate/புதுப்-புதுப்-புத்தக-அலமாரிகள்/article8952228.ece

ஒளிரும் சுவர்களால் பிரகாசிக்கும் அறைகள்!

liniya1_2952429g.jpg

 

liniya_2952430g.jpg

 

liniya2_2952428g.jpg

வீட்டின் சுவர்களை வித்தியாசமாக அலங்கரிக்க விரும்பும் அலங்காரப் பிரியர்களுக்காக ஒரு புதுமையான அறிமுகத்தைச் செய்திருக்கிறது சென்னையைச் சேர்ந்த ‘தி இன்டீரியர் பீப்பிள்’ நிறுவனம். பல்வேறு உள் அலங்காரச் சேவைகளை வழங்கும் இந்நிறுவனம் சமீபத்தில் ‘லுமினோஸ்’ (Luminos) என்ற சுவர் அலங்காரத் தயாரிப்பை வெளியிட்டிருக்கிறது. சாதாரண சுவரொட்டிகளுக்கு மாற்றாக இந்த ஒளிரும் சுவரொட்டிகளை அறிமுகப்படுத்தியிருக்கிறது இந்நிறுவனம்.

எப்படி ஒளிர்கிறது?

‘பாஸ்போ லுமினசென்ஸ்’ (Phospho luminescence) என்னும் நின்றொளிர்தல் என்னும் முறையைப் பயன்படுத்தி இந்த ‘லுமினோஸ்’ சுவரொட்டிகள் தயாரிக்கப்படுகின்றன. “இந்த சுவரொட்டிகள் வெளிச்சத்தில் வண்ணமயமான சுவரொட்டிகளாகவும் இருளில் பிரகாசம் வீசும் சுவரொட்டிகளாகவும் செயல்படுகின்றன. இந்தச் சுவரொட்டி தயாரிப்பில் வேதிப்பொருளான ‘பாஸ்பரஸ்’ பயன்படுத்தியிருக்கிறோம். ஆனால், ‘பாஸ்பரஸ்’ பயன்பாட்டால் மனிதர்களுக்கு எந்தப் பாதிப்புகளும் இல்லை என்பதை உறுதிப்படுத்திக்கொண்ட பிறகே, இந்த சுவரொட்டியைத் தயாரித்தோம்” என்று சொல்கிறார் இந்நிறுவனத்தின் இயக்குநர் யாமினி.

பிரகாசமான பயன்பாடுகள்

இந்த ‘லுமினோஸ்’ சுவரொட்டிகளைச் சுவர் அலங்காரம், கூரை அலங்காரம், தரை அலங்காரம், கதவு அலங்காரம் என வீட்டில் பலவிதமாகப் பயன்படுத்தலாம். “இருளிலும் அறையின் அழகை ரசிக்க விரும்புபவர்கள் இந்த ‘லுமினோஸ்’ சுவரொட்டிகளைத் தேர்ந்தெடுக்கலாம். அத்துடன், குழந்தைகள் அறைகளுக்கு இந்தச் சுவரொட்டிகள் பொருத்தமான தேர்வாக இருக்கும். சுவரொட்டி வடிவமைப்புக்கு அவர்களுக்குப் பிடித்த கார்ட்டூன் கதாபாத்திரங் களையோ, சினிமா போஸ்டரையோ தேந்தெடுக்கலாம். வெளிச்சம் இருந்தால்தான் தூங்குவேன் என்று அடம்பிடிக்கும் குழந்தைகளுக்கு இந்தச் சுவரொட்டிகள் மிகவும் பிடிக்கும்” என்று ஆலோசனை சொல்கிறார் யாமினி.

செலவு எவ்வளவு?

‘லுமினோஸ்’ சுவரொட்டிகளுக்குத் தேவையான பொருட்கள் வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டாலும், அதன் தயாரிப்பு பணிகள் இங்குதான் மேற்கொள்ளப்படுகின்றன. ‘இந்த ‘லுமினோஸ்’சுவரொட்டிக்கு ஒரு சதுர அடிக்கு ரூ. 180 என்று விலை நிர்ணயித்திருக்கிறார்கள். மற்ற சுவர் அலங்காரப் பொருட்களுடன் ஒப்பிடும்போது இந்த விலை குறைவுதான். இந்தக் காரணத்தால், சமீபத்தில் நடந்த பொருட்காட்சியில் நூற்றுக்கும் மேற்பட்டோர் இந்த ‘லுமினோஸ்’சுவரொட்டிகளைத் தங்களுடைய வீடுகள், நிறுவன அலங்காரத்துக்காகத் தேர்ந்தெடுத் திருக்கின்றனர்” என்கிறார் அவர்.

எப்படித் தேர்ந்தெடுப்பது?

‘தி இன்டீரியர் பீப்பிள்’ நிறுவனம் இதுவரை 55 வடிவமைப்புகளை ‘லுமினோஸ்’ சுவரொட்டிகளுக்காக அறிமுகப்படுத்தி யிருக்கிறது. இது மட்டுமல்லாமல், வாடிக்கையாளர்களும் அவர்களுக்குப் பிடித்த ஒளிப்படங்களையோ, வடிவமைப்புகளையோ சுவரொட்டியாகத் தேர்ந்தெடுக்கலாம். “இந்தச் சுவரொட்டிகள் முழுக்க முழுக்க டிஜிட்டலாகத்தான் தயாரிக்கப்படுகின்றன. அதனால், எந்த ஒளிப்படத்தையும் பிரிண்ட் செய்து அறையில் ஒளிரவைக்க முடியும். ஆனால், அந்த ஒளிப்படத்தில் இருளும், பிரகாசமும் கலந்த பகுதிகள் இருக்க வேண்டும்” என்கிறார் அவர்.

தற்போது, பெரும் பாலானவர்கள் வீடுகளுக்கும், நிறுவனங்களுக்கும் தனித்தன்மையான அலங்காரத்தை விரும்புவதால், இந்த மாதிரியான தயாரிப்புகளுக்கு வரவேற்பு அதிகரித்திருக்கிறது. தென்னிந்தியாவின் பெருநகரங்களில் இந்தச் சேவையை வழங்கிவரும் ‘தி இன்டீரியர் பீப்பிள்’ நிறுவனம் விரைவில் இந்தியா முழுக்க வழங்கத் திட்டமிட்டிருக்கிறது.

மேலும் விவரங்களுக்கு: http://theinteriorpeople.in/

 

http://tamil.thehindu.com/society/real-estate/ஒளிரும்-சுவர்களால்-பிரகாசிக்கும்-அறைகள்/article8920495.ece

Link to comment
Share on other sites

  • 1 month later...

வீட்டுக்குத் தனிக் கலை வேண்டாமா?

collectives_3021411f.jpg
 

வீட்டுக்கு என்று தனியாக ஓர் ஆளுமைத் தோற்றத்தை உருவாக்க வேண்டும் என்பதில் இன்று பலரும் ஆர்வம் காட்டத் தொடங்கியிருக்கிறார்கள். இந்த ஆர்வத்தைச் செயல்படுத்த நினைப்பவர்கள் வீட்டின் அறைக்கலன்களையும் அலங்காரப் பொருட்களையும் தனித்துவத்துடன் தேர்ந்தெடுக்க வேண்டும். இந்த இரண்டு அம்சங்களையும் வைத்து வீட்டுக்கான தனிக் கலையை நீங்களே வடிவமைக்க முடியும்.

பழமையின் அழகு

உங்களுடைய வீட்டை ரசனைக்குப் பொருந்தும்படி பாரம்பரியமான பொருட்களை வைத்து அலங்காரம் செய்தால் அது ஒருவிதமான ஆளுமையான தோற்றத்தை வீட்டுக்குக் கொடுக்கும். ஒரு பாரம்பரியமான வடிவமைப்பைக் கொண்ட சுவர்க்கடிகாரத்தை வீட்டின் வரவேற்பறையில் மாட்டிவைக்கலாம். ஒருவேளை, உங்களுடைய வீட்டின் முந்தைய தலைமுறை பயன்படுத்திய கடிகாரம் இருந்தால் அதைச் சரிசெய்து மீண்டும் பயன்படுத்தலாம். இது வீட்டுக்கு ஒரு வரலாற்றுத் தோற்றம் இருப்பதைப் போன்ற உணர்வைக் கொடுக்கும்.

ஓவியங்கள்

வீட்டின் வரவேற்பறையும், படுக்கையறையும் ஓவியங்கள் மாட்டிவைப்பதற்கான சிறந்த தேர்வாக இருக்கும். இந்த இரண்டு அறைகளிலும் உங்களுக்குப் பிடித்த மாதிரியான ஓவியங்களை மாட்டிவைக்கலாம். இயற்கையைப் பறைசாற்றும் மலர்கள், மரங்கள், மலைகள் போன்ற ஓவியக் காட்சிகள் இந்த இரண்டு அறைகளுக்கும் ஏற்றதாக இருக்கும்.

சிற்றுருவச் சிலைகள்

அலங்கரிப்பதற்குச் சிற்றுருவ சிலைகளைப் பயன்படுத்துவது வீட்டுக்குக் கம்பீரமான தோற்றத்தைக் கொடுக்கும். கம்பீரமான தோற்றத்தை விரும்புபவர்கள் வீட்டில் சிற்றுருவச் சிலைகளைப் பயன்படுத்தலாம். குதிரை, யானை, பறவைகள் போன்றவற்றின் சிற்றுருவச் சிலைகளை வைத்து வீட்டை அலங்கரிக்கலாம். வரவேற்பறை மேசைகள், பால்கனி, தோட்டம் போன்ற இடங்களில் இவற்றை வைக்கலாம். இந்தச் சிலைகள் வீட்டின் ஆளுமையைக் கம்பீரமானதாகக் காட்டும்.

தோட்டம் வேண்டும்

தோட்டம் வைப்பதற்கு என்று தனியாக இடமில்லையென்றாலும் வீட்டின் உள்ளே வெளிச்சமும் காற்றும் இருக்கும் இடத்தில் ஒரு சின்ன உட்புறத் தோட்டத்தை உருவாக்கலாம். வீட்டில் இருக்கும் பொருட்களை மறுசுழற்சி செய்துதான் இந்தத் தோட்டத்தை உருவாக்க முடியும். உதாரணமாக, உங்கள் வீட்டில் பயன்படுத்தப்படாத சைக்கிள் இருந்தால் அதைச் செடிகளை வைப்பதற்குப் பயன்படுத்திக்கொள்ளலாம். இப்போது இந்த மாதிரியான உட்புறத் தோட்ட அலங்காரம் நகர்ப்புறங்களில் பிரபலமாக இருக்கிறது.

பெட்டிகளும் கண்ணாடிகளும்

வீட்டின் பழைய மரப்பெட்டிகளும் கண்ணாடிகளும் இருந்தால் அவற்றுக்குப் புதிய வடிவம் கொடுத்துப் பயன்படுத்தலாம். இதுவும் வீட்டுக்கு ஆளுமையான தோற்றத்தைக் கொடுக்கும் வழிகளில் ஒன்று. பெட்டியை வரவேற்பறையிலும் கண்ணாடியைப் படுக்கையறையிலும் வைக்கலாம். இந்த இரண்டு பொருட்களையும் மற்ற பொருட்களோடு சேர்த்துவைக்காமல் அறையில் தனித்துத் தெரியும்படி வைக்கலாம்.

சுவர்களும் மேசைகளும்

நேர்த்தியும் பாரம்பரியமும் நிறைந்த ‘வால் ஹேங்கிங்ஸை’(Wall hangings) சுவரை அலங்கரிக்கப் பயன்படுத்தலாம். இவை வீட்டுக்குப் பழமை கலந்த வசீகரத் தோற்றத்தைக் கொடுக்கும். மேசைகளில் ‘ஹவர் கிளாஸ்’ போன்ற உங்களுக்கு ரசனைக்குப் பொருந்தும்படியான பொருட்களை வைத்து அலங்கரிக்கலாம்.

இப்படி உங்களுடைய ஆளுமையைப் பறைசாற்றும் பொருட்களை வைத்தே வீட்டுக்கு ஆளுமையான தோற்றத்தைக் கொடுக்க முடியும்.

 

http://tamil.thehindu.com/society/real-estate/வீட்டுக்குத்-தனிக்-கலை-வேண்டாமா/article9142407.ece?widget-art=four-all

Link to comment
Share on other sites

  • 2 weeks later...

திரைச்சீலைகள்: அழகு சேர்க்கும் திரைச்சீலைகள்

curtains_2_3038559g.jpg

curtains_3038558g.jpg

வீட்டுக்குள் தூசி புகுவதைத் தடுப்பவை; மிதமான வெளிச்சத்தை வீட்டுக்குள் விழவைப்பவை. சமீப ஜன்னல் திரைகள் வீட்டுக்கு அழகு சேர்ப்பவை. ஜன்னல்கள் வீட்டுக்கு வெளிச்சத்தையும் காற்றையும் கொண்டு வருபவை. திரைச்சீலைகள் தங்கள் பங்குக்கு வீட்டுக்கு அழகைச் சேர்ப்பவை.

வீட்டை அழகுபடுத்த பலவிதமான நவீன முறைகள் வந்தாலும் ஜன்னல் திரைகள் பல காலம் தொட்டே அந்த இடத்தைப் பிடித்துவருபவை. இன்று நவீன காலத்துக்குத் தகுந்தாற்போல் பலவிதத்தில் திரைச்சீலைகள் கிடைக்கின்றன.

திரைச்சீலைகளை அமைத்துத் தர இப்போது நிறுவனங்கள் உள்ளன. வீட்டுக்குத் தகுந்தாற்போல் சம்பந்தப்பட்ட நிபுணர்கள் வந்து வீட்டைப் பார்த்து திரைச்சீலைகளை அமைத்துத் தருவார்கள். அவர்கள் எந்த வண்ணத்தில் வீட்டுத் திரைச்சீலை அமைக்கலாம் என்பதற்கு ஆலோசனைகளும் தருவார்கள்.

வீட்டுக்கு, ஜன்னல்களுக்குத் திரைகள் இடத் தீர்மானித்துவிட்டால் உடனடியாகக் கிடைக்கின்ற திரைகளை வாங்கி மாட்டிவிடக் கூடாது. முதலில் என்ன நிறத்தில் திரைச் சீலைகள் வாங்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்க வேண்டும்.

உங்கள் அறைக்கு என்ன வண்ணத்தில் பெயிண்ட் அடித்திருக்கிறீர்களோ அந்த வண்ணத்திற்கு ஏற்றார்போல் திரைச் சீலைகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். உதாரணமாக நீல வண்ணம் பூசியிருந்தீர்கள் என்றால் அதற்குத் தோதாக அடர் நீல வண்ணத்தில் திரைச்சீலையைத் தேர்ந்தெடுக்கலாம்.

சிலருக்கு நேரெதிர் வண்ணம் பிடிக்கும். அப்படிப்பட்டவர்கள் அடர் மர வண்ணம் தேர்ந்தெடுக்கலாம். சுவரின் வண்ணம் மட்டுமல்லாது வீட்டில் இருக்கும் சோபா போன்ற அறைக்கலன்கள் அடிப்படையிலும் திரைச்சீலையின் வண்ணத்தைத் தேர்ந்தெடுக்கலாம். அடர் நிறங்களைவிட மெல்லிய வெளிர் நிறங்களே கண்களுக்கு குளிர்ச்சியாக இருக்கும்.

திரைச்சீலைகள் தேர்வில் இப்போது பல விதமான வகைகள் வந்துவிட்டன. தேர்ந்தெடுக்கும் பொருட்களிலிருந்து இதைப் பலவிதமாகப் பிரித்துப் பார்க்கலாம். துணியில், பிளாஸ்டிக் பொருளில், மர நார்களில், மூங்கில் கம்புகளில் எனப் பலவிதமான திரைச் சீலைகளைச் சந்தையில் பார்க்க முடிகிறது.

திரைச் சீலைகளைத் தேர்ந்தெடுக்க ஒரு கருப்பொருளை வைத்துக்கொள்வது நல்லது. படுக்கையறைக்கு ஒரு விதமான திரைச்சீலையைத் தேர்ந்தெடுத்தால் வரவேற்பறைக்கு வேறு விதமான திரைச்சீலையைத் தேர்ந்தெடுக்கலாம். மரப் பொருளான திரைச்சீலையைத் தேர்ந்தெடுக்கும்போது வீட்டுக்கு ஒரு கம்பீரத் தோற்றம் கிடைக்கும்.

அதுமட்டுமல்லாமல் திரைச்சீலைகளில் இப்போது நீங்கள் உங்களுக்குப் பிடித்த ஓவியங்களைத் தேர்ந்தெடுக்கலாம். அவை வீட்டுக்கு ஒரு கலையம்சத்தைத் தரும். இல்லையெனில் பூக்கள் படம் கொண்ட திரைச்சீலைகளை மாட்டும்போது ஒரு இதமான மனநிலையை அளிக்கக் கூடும். சிலருக்கு இதுவும் விருப்பமில்லை எனும்போது வெறுமனே ஒரே வண்ணத்தில் திரைச்சீலைகளைத் தேர்ந்தெடுக்கலாம்.

அதே சமயத்தில் ஒரே விதமான திரைச்சீலைகள் மட்டும் பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. திரைச்சீலைகளை மாற்றி மாற்றிப் பயன்படுத்தலாம். ஒரு மாதம் பிளாஸ்டிக்கால் ஆன திரைச்சீலை என்றால் அடுத்த மாதம் துணியால் வேறு வண்ண திரைச்சீலையைப் பயன்படுத்தலாம்.

திரைச்சீலைகள் வீட்டைத் தூசிகளிலிருந்து காப்பவை. ஆதலால் வெளியிலிருந்து வரும் தூசிகள் திரைச்சீலையில் படிந்து இருக்கும். நாள் கணக்காக அதைச் சுத்தம் செய்யாமல் விடக் கூடாது. அதனால் வாரம் ஒரு முறையேனும் வீட்டைச் சுத்தப்படுத்த வேண்டும்.

- குமார்

http://tamil.thehindu.com/society/real-estate/திரைச்சீலைகள்-அழகு-சேர்க்கும்-திரைச்சீலைகள்/article9201677.ece

மிதமான வெளிச்சம்... கண்ணுக்கு குளிர்ச்சி... வீட்டுக்கு அழகு திரை சீலைகள்

ld4415.jpg

வீட்டை அழகுபடுத்த பலவித நவீன முறைகள் வந்தாலும், ஜன்னல் திரைகள் பல காலம் தொட்டே அந்த இடத்தை பிடித்து வருபவகை ஆகும். இன்று நவீன கலகட்டத்துக்கு ஏற்றார்போல பல வித வகைகளில் திரைசீலைகள் கிடைக்கின்றன.திரைச்சீலைகள் வீட்டுக்குள் மிதமான வெளிச்சத்தை கொண்டு வருபவை. மேலும் வீட்டுக்குள் தூசி புகாத வண்ணம் காப்பவை. ஆனால் இதை எல்லாவற்றையும் மீறி ஜன்னல் திரைகள் வீட்டுக்கு அழகு சேர்ப்பவையாகவும் இருக்கின்றன. ஜன்னல் இல்லாத வீடுகள் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல. அதுபோல திரைச்சீலைகள் இல்லாத ஜன்னல்கள் வீட்டுக்கு அழகல்ல.

திரைச்சீலைகளை அமைத்துத் தர இப்போது பல்வேறு நிறுவனங்கள் உள்ளன. வீட்டிற்குத் தகுந்தாற்போல் சம்பந்தப்பட்ட நிபுணர்கள் வந்து வீட்டைப் பார்த்து திரைச்சீலைகளை அமைத்துத் தருவார்கள். அவர்கள் எந்த வண்ணத்தில் வீட்டுத் திரைச்சீலை அமைக்கலாம் என்பதற்கு ஆலோசனைகளும் தருவார்கள்.வீட்டுக்கு, ஜன்னல்களுக்குத் திரைகள் இடத் தீர்மானித்து விட்டால் உடனடியாகக் கிடைக்கின்ற திரைகளை வாங்கி மாட்டிவிடக் கூடாது. முதலில் என்ன நிறத்தில் திரை சீலைகள் வாங்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்க வேண்டும்.

உங்கள் அறைக்கு என்ன வண்ணத்தில் பெயின்ட் அடித்திருக்கிறீர்களோ அந்த வண்ணத்திற்கு ஏற்றார்போல் திரைச் சீலைகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும். உதாரணமாக நீல வண்ணம் என்றால் அதற்குத் ஏற்ப அடர் நீல வண்ணத்தில் திரைச்சீலையைத் தேர்ந்தெடுக்கலாம்.சிலருக்கு நேரெதிர் வண்ணம் பிடிக்கும். சுவரின் வண்ணம் மட்டுமல்லாது வீட்டில் இருக்கும் சோபா போன்ற அறைக்கலன்கள் அடிப்படையிலும் திரைச்சீலையின் வண்ணத்தைத் தேர்ந்தெடுக்கலாம். அடர் நிறங்களைவிட மெல்லிய வெளிர் நிறங்களே கண்களுக்கு குளிர்ச்சியாக இருக்கும்.

திரைச்சீலைகள் தேர்வில் இப்போது பல விதமான வகைகள் வந்துவிட்டன. தேர்ந்தெடுக்கும் பொருள்களில் இருந்து இதைப் பலவிதமாகப் பிரித்துப் பார்க்கலாம். துணியில், பிளாஸ்டிக் பொருளில், மர நார்களில், மூங்கில் கம்புகளில் எனப் பலவிதமான திரைச் சீலைகளைச் சந்தையில் விற்பனைக்கு உள்ளன. படுக்கையறைக்கு ஒரு விதமான திரைச் சீலையைத் தேர்ந்தெடுத்தால் வரவேற்பறைக்கு வேறு விதமான திரைச்சீலையைத் தேர்ந்தெடுக்கலாம். மரப் பொருளான திரைச்சீலையைத் தேர்ந்தெடுக்கும்போது வீட்டுக்கு ஒரு கம்பீரத் தோற்றம் கிடைக்கும்.

இப்போது திரைச்சீலைகளில் இப்போது பிடித்த ஓவியங்களைத் தேர்ந்தெடுக்கலாம். அவை வீட்டுக்கு ஒரு கலையம்சத்தைத் தரும். இல்லையெனில் பூக்கள் படம் கொண்ட திரைச்சீலைகளை மாட்டும்போது ஒரு இதமான மனநிலையை அளிக்கக் கூடும். சிலருக்கு இதுவும் விருப்பமில்லை எனும்போது வெறுமனே ஒரே வண்ணத்தில் திரைச்சீலைகளைத் தேர்ந்தெடுக்கலாம்.

அதே சமயத்தில் ஒரே விதமான திரைச்சீலைகள் மட்டும் பயன்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. திரைச்சீலைகளை மாற்றி மாற்றிப் பயன்படுத்தலாம். ஒரு மாதம் பிளாஸ்டிக்கால் ஆன திரைச்சீலை என்றால் அடுத்த மாதம் துணியால் வேறு வண்ண திரைச்சீலையைப் பயன்படுத்தலாம்.திரைச்சீலைகள் வீட்டைத் தூசிகளில் இருந்து காப்பவை. ஆதலால் வெளியிலிருந்து வரும் தூசிகள் திரைச்சீலையில் படிந்து இருக்கும். நாள் கணக்காக அதைச் சுத்தம் செய்யாமல் விடக்கூடாது. அதனால் வாரம் ஒரு முறையேனும் வீட்டைச் சுத்தப்படுத்த வேண்டும்.

http://www.dinakaran.com/Ladies_Detail.asp?Nid=4417&Cat=501

Link to comment
Share on other sites

வீட்டை அலங்கரிக்கப் புதிய வழிகள்

 

decor_3045715g.jpg

decor1_3045714g.jpg

 

வீட்டை ஒரு குறிப்பிட்ட முறையில் வடிவமைப்பதை இப்போது பலரும் விரும்புகின்றனர். வீட்டின் ஒட்டுமொத்த அலங்காரத்துக்குப் பொருந்தும்படி இந்தப் புதிய முறையில் வீட்டின் வடிவமைப்பைத் தேர்ந்தெடுக்க வேண்டியது அவசியம். வடிவமைப்பைத் தேர்ந்தெடுப்பதற்கான சில ஆலோசனைகள்:
‘வாட்டர் கலர்’ சுவர்கள்
வீட்டின் சுவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இந்த ‘வாட்டர் கலர்’ முறையைத் தேர்ந்தெடுக்கலாம்.

ஆனால், அது பூக்களாலான வடிவமைப்பாக இருக்க வேண்டுமா அல்லது ஜியோமெட்ரிக் வடிவமைப்பாக இருக்க வேண்டுமா என்பதை உங்களுடைய ரசனைக்கேற்றபடி முடிவுசெய்துகொள்ளலாம்.
மென்மையின் அழகு
பூக்களை விரும்புபவர்கள் மென் நிற (Soft-hue) ‘ஃப்ளோரல்’முறையைத் தேர்ந்தெடுக்கலாம்.

இதில் வழக்கமான வடிவமைப்புகளைவிட முற்றிலும் வித்தியாசமான ‘ஃப்ளோரல்’ முறையைத் தேர்ந்தெடுப்பது இப்போது அதிகரித்திருக்கிறது. இந்த முறையை ஜன்னல் திரைச்சீலைகள், தரை விரிப்புகள் போன்றவற்றுக்குப் பயன்படுத்தலாம்.
வடிவங்கள் பேசும்
எல்லாமே சமச்சீராக விளங்க வேண்டும் என்று விரும்புபவராக இருந்தால், உங்களுக்கு ஏற்றது ‘ஜியோமெட்ரிகல் முறை’தான். இந்த ‘ஜியோமெட்ரிக்’ முறையை ‘உலோக’ வண்ணங்களில் பயன்படுத்துவது இப்போதைய டிரண்ட்.
இயற்கையின் எழில்
எப்போதும் உற்சாகத்தை விரும்புவர்களுக்கு ‘டிராபிகல் (Tropical) முறை’ சரியான தேர்வாக இருக்கும். இந்த ‘டிராபிகல் முறை’ வீட்டையே வண்ணமயமாக மாற்றிவிடும்.

decor11_3045716a.jpg

ஆனால், இந்த முறையைக் கூடுமானவரை 
பெரிய இடத்தில் பயன்படுத்துவது நல்லது.
இணைப்பது நல்லது!
உங்களுக்கு ‘ஃப்ளோரல்’, ‘ஜியோமெட்ரிக்’, ‘இகட்’ எனப் பல வகையான முறைகளும் பிடித்திருந்தால், ஏதாவது ஓர் அடர்த்தியான வண்ணத்தைத் தேர்ந்தெடுங்கள். அதில் இந்த எல்லா முறைகளையும் பயன்படுத்திக்கொள்ளலாம்.


புதுமையும் தேவை
கோடுகள், பூக்கள், போல்கா புள்ளிகள் என வழக்கமான முறைகளுக்குள் சிக்கிக்கொள்ள விரும்பாதவர்கள், கலை ரசனை மிளிரும் முறைகளைத் தேர்ந்தெடுக்கலாம். உதாரணத்துக்கு, உங்களுக்குப் பிடித்த ஓவியரின் ஓவியங்களிலிருந்தே ஒரு முறையை நீங்களே உருவாக்கலாம். அந்த முறையைப் பின்னணியாக வைத்து வீட்டின் அலங்காரத்தை வடிவமைக்கலாம்.

decor111_3045717a.jpg

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Popular Now

  • Topics

  • Posts

  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.