Jump to content

ஜெமினி கணேசன் பிறந்தநாள்: நவம்பர் 17 - காதல் மன்னன் பிறந்த கதை


Recommended Posts

gemini_2203597g.jpg

பாச மலர்' படத்தில் கணவன் - மனைவியாக ஜெமினி, சாவித்திரி

 
gemini1_2203596g.jpg
'காலம் மாறிப்போச்சு' படத்தில் ஜெமினி, அஞ்சலி தேவி
 
திரையில் கதாநாயகியைக் காதலிப்பதில் எம்.ஜி.ஆர். கைதேர்ந்தவராக இருந்தார். பிறகு மெல்ல மெல்ல வளர்ந்து வாள் சண்டை, குஸ்தி என ஆக்‌ஷன் காட்சிகளில் அதிகம் ரசிக்கப்படும் நாயகனாக உருப்பெற்றார். சிவாஜியோ உணர்ச்சிகரமான நடிப்புக்காக உச்சிமுகரப்பட்டார். இந்த இரண்டு ஜாம்பவான் நாயகர்கள் ஜம்மென்று தங்கள் ராஜபாட்டையில் பயணித்துக்கொண்டிருந்தபோது உருகும் காதலனாக, நொறுங்கிய கணவனாக உள்ளே நுழைந்தவர்தான் ஜெமினி கணேசன். இந்தியாவின் மிக உயரிய விருந்தான பத்மஸ்ரீயைத் தன் புகழின் உச்சியிலேயே (1971) பெற்றுக்கொண்டவர் ‘காதல் மன்னன்’.
 
கேஸ்டிங் உதவியாளர்
 
சுதந்திர வேட்கை சுள்ளென்று சூடு பறந்த 40களில் மதுரையும் தஞ்சையும் நூற்றுக்கணக்கான கலைஞர்களைத் தமிழ் சினிமாவுக்குக் கொடுக்க, ஜெமினி கணேசன் வந்ததோ, தஞ்சை – மதுரை கலாச்சாரங்கள் சங்கமித்த புதுக்கோட்டையிலிருந்து. ஜெமினியின் இயற்பெயர் ராமசாமி கணேசன். நடுத்தர வர்க்க பிராமணக் குடும்பத்தில் பிறந்த ஜெமினி கணேசன் சொந்த ஊரில் பள்ளிக் கல்வியை முடித்துவிட்டுப் பட்டப் படிப்புக்காக மதராஸப் பட்டணம் வந்தார். சென்னையில் உள்ள தாம்பரம் கிறிஸ்தவக் கல்லூரியில் இளங்கலை அறிவியல் பட்டப் படிப்பில் இடம் கிடைத்தபோது அவருக்குப் பதினாறு வயது. விளையாட்டு, பேச்சு, பாட்டு எனப் பல திறமைகள் கொண்ட மாணவராக இருந்ததால், அங்கே பாதிரியார்களின் கவனதுக்குரிய செல்லப்பிள்ளையாக இருந்தார் ஜெமினி. படிப்பு முடிந்ததும் அங்கேயே சில மாதங்கள் பயிற்சி ஆசிரியராக வேலை செய்தார். ஏனோ ஆசிரியர் பணி அவருக்குப் பிடிக்கவில்லை. அப்போதுதான் ஜெமினி ஸ்டூடியோ அதிபர் எஸ்.எஸ். வாசனைச் சென்று சந்திக்கும்படி சிபாரிசுக் கடுதாசு ஒன்று வீட்டிலிருந்து தபாலில் வந்து சேர்கிறது. கடுதாசியை வாங்கிப் பார்த்த வாசன் வாஞ்சையுடன் அவரை கேஸ்டிங் உதவியாளராக நியமிக்கிறார். 1940-ல் ஜெமினியில் பணியில் சேர்ந்த ஜெமினி கணேசன் அதன் பிறகு ஸ்டூடியோவின் எல்லாத் தளங்களிலும் சுதந்திரமாக உலா வந்தார்.
 
‘முதலாளியின் உறவுக்காரப் பையன்’ என்ற அடைமொழியோடு வலம் வந்தவரைத் தன் கேமரா கண்களால் பார்த்தவர் ஜெமினி ஸ்டுடியோவின் தயாரிப்பு நிர்வாகிகளுள் ஒருவராக இருந்த ஆர். ராம்நாத்.
 
தயாரிப்பு நிர்வாகியாக மட்டுமல்லாமல், திரைக்கதை எழுத்தாளர், இயக்குநர் எனப் புகழ்பெற்ற ராம்நாத், மிஸ் மாலினி என்னும் படத்தில் கதாநாயகனின் உதவியாளராக ஜெமினி கணேசனை அறிமுகப்படுத்தினார். இப்படத்தின் கதை, பிரபல எழுத்தாளர் ஆர்.கே.நாராயணனுடையது. இப்படத்தைக் கொத்தமங்கலம் சுப்பு இயக்கிக் கதாநாயகனாகவும் நடித்திருந்தார். சுதந்திர இந்தியாவில் வெளியான முதல் சமூகப் படமான மிஸ் மாலினி 1947 செப்டம்பர் 26-ம் தேதி வெளியாகி, தரமான படம் என்ற பாராட்டைப் பெற்று வெற்றிபெற்றது. ஜெமினி நிறுவனத்துக்காக ராம்நாத் தயாரித்த ஜெமினி கணேசனின் அறிமுகப் படத்தில் பங்குபெற்ற கலைஞர்களின் பெயர்களோடு ஜெமினியின் இயற்பெயரான ராமசாமி கணேசன் என்பதன் சுருக்கமாக ‘ஆர்.ஜி’என்று டைட்டிலில் போடப்பட்டது.
 
காதல் மன்னன் பிறந்தார்
 
இதன் பிறகு ஜெமினி நிறுவனம் தயாரித்த பல படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்துவந்தவருக்கு, 1952-ம் ஆண்டு கே. ராம்நாத் மறுபடியும் முக்கியத்துவம் கொடுக்கிறார். ராம்நாத் இயக்கத்தில் 1952-ல் வெளிவந்த ‘தாய் உள்ளம்’ திரைப்படத்தில் ஆர். எஸ். மனோகர் கதாநாயகனாவும், எம். வி. ராஜம்மா கதாநாயகியாகவும் நடிக்க, அழகான இளம் வில்லன் வேடத்தில் ஜெமினி கணேசன் நடித்தார். அது பெரிய வெற்றியைப் பெறவில்லை என்றாலும் விருது பெறத்தக்க சிறந்த படமாகப் பெயர் பெற்றது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால், இத்திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்த ஆர். எஸ். மனோகர், பிற்காலத்தில் வில்லன் கதாபாத்திரங்களில் புகழ்பெற்றார். இதற்கு நேர்மாறாக வில்லனாக நடித்த ஜெமினி கணேசன் காதல் கதாநாயகனாக வலம் வர ஆரம்பித்தார்.
 
ஜெமினியின் தொடக்க காலத் திரைப் பயணத்தில் மிகப் பெரிய திருப்புமுனையை அமைத்துக் கொடுத்த படம், அடுத்த ஆண்டே வெளியான ‘மனம்போல மாங்கல்யம்’. முப்பத்து மூன்று வயதே நிரம்பியிருந்த ஜெமினி கணேசன் கவனம்பெறத் தொடங்கிய நான்காவது படத்திலேயே அவருக்கு இரட்டை வேடம் கிடைத்தது ஓர் அசாதாரணமான வாய்ப்பு. அந்நாள் தெலுங்குத் திரையுலகின் திரைக்கதை மன்னன் என்று போற்றப்பட்ட ‘வேம்பட்டி’ சதாசிவ பிரம்மம் எழுதிய முழுநீள சமூக நகைச்சுவை திரைக்கதையைத் தமிழில் எழுதியவர் உமாசந்திரன். ஒரே தோற்றம் கொண்ட இருவரில் தன் காதலன் யார் எனத் தெரியாமல் பழகுகிறார் கதாநாயகி. அந்த இருவரில் ஒருவர் மனநலக் காப்பகத்திலிருந்து தப்பித்து வந்தவர். கதை எத்தனை கலாட்டாவாக இருந்திருக்கும் என்று யோசிக்க முடிகிறது அல்லவா? இந்தப் படத்தில் நடிப்பில் மட்டுமல்ல, காதல் காட்சிகளிலும் தன் தனித்த மென்னுணர்ச்சி முத்திரையை அழுத்தமாகப் பதித்தார் ஜெமினி கணேசன். இந்தப் படத்தில்தான் ஜெமினி கணேசன் என்று முதன்முதலாக டைட்டில் போடப்பட்டது. படம் மிகப் பெரிய வெற்றிபெற்று ஜெமினியைக் காதல் மன்னனாக உயர்த்தியது. ஜெமினியின் சொந்த வாழ்க்கையிலும் மிகப் பெரிய பங்காற்றியது. இந்தப் படத்தில் சாவித்திரியுடன் நடித்தபோது ஏற்பட்ட நட்பே பின்னர் மெல்ல மெல்ல காதலாகக் கனிந்து திருமணம் வரை வந்து நின்றது. பாசமலரில் இந்த ஜோடி காதலித்தபோது அது நிஜமென்றே ரசிகர்கள் நம்பினார்கள்.
 
இந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து காதல், குடும்பம், சமூகம், சரித்திரம், வீரம் எனத் தான் ஏற்று மிளிராத கதாபாத்திரம் இல்லை என்று சாதித்துக் காட்டினார். ஜெமினியைக் காதல் மன்னனாகப் பார்க்கும் ரசிகர்கள் சிவபெருமான் வேடம் ஏற்ற அந்நாளின் கதாநாயர்களில் ஜெமினிக்கே அது கச்சிதமாகப் பொருந்தியதாகச் சொல்கிறார்கள். ஜெமினி இறுதிவரை இயக்குநர்கள் விரும்பும் நடிகராக இருந்தார். காரணம் தனது நடிப்புப் பொறுப்பை இயக்குநர்களிடம் விட்டுவிடுவார். இயக்குநர் சிகரம் கே. பாலச்சந்தர் இயக்கத்தில் ஜெமினி நடித்த ‘வெள்ளி விழா’படத்தில் முதுமை பற்றி ‘வந்தால் வரட்டும் முதுமை உனக்கென்ன குறைச்சல்,’ என்ற பாடலை எழுதியிருப்பார் வாலி. ஆனால் பழுத்த முதுமையில் இயற்கையுடன் கலந்த ஜெமினி கணேசன் இன்றும் இளமையான ‘ காதல் மன்னனாகவே’ ரசிகர்களின் மனதில் படிந்திருக்கிறார். அதற்கு அவரது நடிப்பாளுமையை மீறிய மற்றொரு காரணமும் உண்டு. தமிழ்த் திரையிசையின் மறக்க முடியாத கலைஞர்களாக இருக்கும் ஏ.எம். ராஜா, பி.பி. ஸ்ரீநிவாஸ் ஆகிய இருவரது குரலும் ஜெமினியின் குரலாகவே தமிழ் ரசிர்கள் மனதில் பதிந்துவிட்டதுதான் அந்தக் காரணம்.
 
Link to comment
Share on other sites

ஜெமினிகணேசனின் புத்திசாலித்தனம்!

 

ஜெமினி பிறந்தநாள் - நவ.,17

 

சினிமாவில் ஏராளமாக சம்பாதித்த பல நடிகர், நடிகைகள் அந்த வருமானத்தை தக்க வைத்துக் கொள்ளாமல், கடைசி காலத்தில் வாடகை வீட்டில் வாழ்ந்தும், கடன்பட்டு கஷ்டப்பட்ட வரலாறு பல உண்டு. அந்த வரிசையில், அக்கால சூப்பர் ஸ்டார் எம்.கே.தியாகராஜ பாகவதர், கடைசி காலத்தில் மருத்துவமனை செலவுக்கு கூட பணமின்றி சிரமப்பட்டார். ஆனால், இதற்கு விதிவிலக்கு ஜெமினி கணேசன்!
சினிமாவில் தான் சம்பாதித்ததை ஆடம்பரமாக வீண் செலவு செய்யாமல், புத்திசாலித்தனமாக முதலீடு செய்தார். சென்னை நுங்கம்பாக்கம் ஹைரோட்டில் ஒன்பதரை கிரவுண்டு இடம் வாங்கி, அதில் பங்களா கட்டி, தன் ரசிகர்கள் அனைவரையும் அழைத்து, கிரகப்பிரவேசம் செய்தார்.
புதுமனை விழாவிற்கு காமராஜர், அண்ணாதுரை மற்றும் கருணாநிதி வந்து வாழ்த்தினர். தற்போது, இந்த பங்களாவின் பின்புறம், அவரின் மகள் டாக்டர் கமலாவின் ஜி.ஜி.மருத்துவமனை உள்ளது.

இதே போன்று ஒருமுறை, பாசமலர் படப்பிடிப்பிற்காக கொடைக்கானல் சென்ற ஜெமினி, 'ரெட்லிஞ்ச்' என்ற பெயரில், நான்கு ஏக்கர் பரப்பளவில், தோட்டத்தோடு கூடிய விஸ்தாரமான பெரிய பங்களாவை பார்த்தார். அதன் அழகில் மயங்கியவர், அதுக் குறித்து விசாரித்தார். அது, இங்கிலாந்தில் வசிக்கும் பிரபல மதுபான தயாரிப்பாளரான ஹேவார்ட்ஸ் என்பவருக்கு சொந்தமானது. ஆங்கிலேயர் ஆட்சியின் போது அவர் வாங்கிப் போட்டிருந்த பங்களாவை, இந்தியா விடுதலை அடைந்ததும், ஒருவரின் நிர்வாக பொறுப்பில் விட்டு, இங்கிலாந்து சென்று விட்டார். அந்த பங்களாவை விற்கப் போவதாக அறிந்த ஜெமினி, அதை எப்படியும் வாங்கி விட முடிவு செய்தார்.

கருமுத்து தியாகராஜ செட்டியார், டி.வி.எஸ்., நிறுவனத்தார் அந்த பங்களாவை வாங்க முயல்வதாக கேள்விப்பட்டார். தியாகராஜ செட்டியார், ஹேவார்ட்சுக்கு நெருக்கமான நண்பர் என ஜெமினிக்கு தெரியும். அதனால், பங்களாவை தியாகராஜ செட்டியாருக்கு விற்றுவிடுவாரோ என்ற பயம் ஜெமினிக்கு இருந்தது. அதனால், சமயோசிதமாக ஒரு திட்டத்துடன் தியாகராஜ செட்டியாரை சந்தித்து, 'கொடைக்கானலில் எனக்கு ஒரு நல்ல பங்களா வாங்க வேண்டும்...' எனச் சொன்னவுடன், 'அதற்கென்ன ஏற்பாடு செய்துட்டா போச்சு...' என்றார் செட்டியார். உடனே, 'உங்க நண்பர் ஹேவார்ட்ஸ் தன்னுடைய ரெட்லிஞ்ச் பங்களாவை விற்கப் போவதாக கேள்விப்பட்டேன்; அதை, விலை பேச நீங்க தான் ஏற்பாடு செய்யணும்...' என்றார்.

ஜெமினி இப்படி உதவி கேட்பார் என்று எதிர்பார்க்கவில்லை தியாகராஜ செட்டியார். அதனால், அவர், 'நானே வாங்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருந்தேன்; இப்ப நீங்க விரும்புறதால கண்டிப்பா ஏற்பாடு செய்கிறேன்...' என்று கூறி, ஹேவார்ட்சுக்கு கடிதம் எழுதவும் செய்தார்.
ஆனால், தியாகராஜ செட்டியாரிடம் கேட்டுக் கொண்டு விட்டோமே என அசால்டாக இல்லாமல், ஜெமினியும் தன் பங்கிற்கு ஹேவார்ட்சுக்கு கடிதம் எழுதினார். அக்கடிதம்:
திரு ஹேவார்ட்ஸ் அவர்களுக்கு, கொடைக்கானல் படப்பிடிப்பிற்கு சென்றிருந்த போது, உங்கள் ரெட்லிஞ்ச் பங்களாவை பார்த்தேன். அதை நீங்கள் விற்க இருப்பதாக கேள்விப்பட்டேன். என் மனதில் பதிந்து விட்ட அந்த பங்களாவை நானே வாங்க ஆசைப்படுகிறேன்; நீங்கள் விற்கும் பட்சத்தில் எனக்கே கொடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்.
— இப்படிக்கு,
ஜெமினி கணேசன்.

அதோடு நிற்காமல், பின்குறிப்பாக, 'இவ்வளவு அழகான பங்களாவை விற்க உங்களுக்கு எப்படி மனது வந்தது? உங்களிடத்தில் நானிருந்தால் கை நழுவி போக விடவே மாட்டேன்...' என்று எழுதியிருந்தார்.
சில நாட்களுக்கு பின், விற்பனைக்கு பொறுப்பேற்றிருந்த ஜப்பார் என்பவரை பார்க்க சென்றார் ஜெமினி. 'நீங்கள் தான் ஜெமினி கணேசனா...' என்று கேட்டு, 'என்ன விலை கொடுப்பதாக இருக்கிறீர்கள்...' என்று கேட்டார் ஜப்பார்.
'நீங்கள் மூன்று லட்சம் சொல்வதாக கேள்விப்பட்டேன்; இதுவரை அதிகபட்சமாக கூறப்பட்ட விலையை சொன்னால் நான், என் விலையை கூறுகிறேன்...' என்று, அவர் பக்கமே கேள்வியை திருப்பினார்.
அவர் சிரித்தபடி, 'ஒரு லட்சம்...' என்றார்.

உடனே ஜெமினி, 'என் விலை ஒரு லட்சத்து பத்தாயிரம்...' என்று கூறியவுடன், அவர் ஜெமினியின் கையை குலுக்கியபடி, 'பங்களாவை உங்களுக்கே கொடுக்க முடிவு செய்து விட்டேன்...' என்றார். உடனே பத்தாயிரம் ரூபாய் காசோலையை முன் பணமாக கொடுத்து விட்டார் ஜெமினி.
அதை வாங்கிக் கொண்டவர், புன்னகையுடன் ஜெமினியிடம் ஒரு தந்தியை காண்பித்தார். அது, ஹேவார்ட்ஸ் அனுப்பியது.
அதில், 'என்ன விலை கொடுத்தாலும் பங்களாவை, நடிகர் ஜெமினி கணேசனுக்கே கொடுத்து விடுங்கள்...' என்று இருந்தது. அதை படித்த ஜெமினி, ஆச்சரியத்திலிருந்து மீள்வதற்குள், காசோலையை காட்டி, 'இந்த பத்தாயிரத்துக்கே கேட்டிருந்தாலும் கொடுத்திருப்பேன்; நான் ஒரு வியாபாரி. அதனால் தான் விலை பேசிய பின், தந்தியை காட்டினேன்...' என்றார்.

ஜெமினி வாயடைத்து போனார்.
இது, 1961ல் நடந்தது. இன்று அந்த பங்களா, பல நூறு கோடி ரூபாய் பெறும். கொடைக்கானல் வரும் சுற்றுலாவாசிகள் மற்றும் ரசிகர்கள் இந்த பங்களாவை, 'ஜெமினி பங்களா' என்று ஆர்வமாக நின்று பார்த்து செல்வதை, இன்றும் காணலாம்.

* 'தவறு செய்யாத மனிதர்களே கிடையாது; ஆனால், தன் தவறை மறைக்காமல் நேரிடையாக ஒப்புக் கொள்ளும் துணிச்சல்காரர் என் அப்பா...' என்று, ஜெமினி - சாவித்திரி மகன் சதீஷ், பெருமையுடன் கூறுகிறார்.

* விடியற்காலை, 4:30 மணிக்கு எழுந்து, தானே சமையலறை சென்று, காபி போடும் ஒரு சராசரி குடும்பத்தலைவராக திகழ்ந்தார்.
* காய்கறிகளை பொறுக்கி வாங்குவதிலிருந்து, அதை நறுக்கி சமைக்கவும் தெரிந்தவர்.
* எதையும் வித்தியாசமாக ஆராய்பவர்; ராமாயணத்தை, ராவணன் கோணத்தில் நின்று சிந்திக்கும் மனிதர்.
* 'என் வாழ்க்கை ஒரு திறந்த புத்தகம்...' என்று அடிக்கடி கூறுவார்.
* ஜெமினி சிறுவனாக இருக்கும் போது, பள்ளி நாடகத்தில் குட்டி கிருஷ்ணன் வேடத்தில் பாடி, நடித்தாராம். 'அன்று, குட்டி கிருஷ்ணனாக நடித்த என்னை, நிஜ வாழ்க்கையிலும் கிருஷ்ணனாகவே வாழச் செய்து விட்டது விதி...' என்று கூறிய ஜெமினி, 'காதல் மன்னன் என்ற பட்டப்பெயரை கேட்டாலே, மனதில் வெறுப்பு வருகிறது...' என்பார்.

 

http://www.dinamalar.com/supplementary_detail.asp?id=22709&ncat=2

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • அற்புதனின் தொடரில் பல ஊகங்களும் இருந்தன,  உண்மைகளும் இருந்தன.  ஈழப்போராட்ட உண்மைகளை அறிய வேண்டுமானால் பக்க சார்பற்ற முறையில் வெளிவந்த  பல நூல்களையும் அந்த கால பத்திரிகை  செய்திகளையும்வாசிப்பதன் மூலமே அதனை அறிந்து கொள்ளலாம்.  உதாரணமாக தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் களப்பலியான முதல் பெண்போராளி ஈபிஆர்எல் ஐ சேர்ந்த சோபா என்பதை அண் மையில் தான் அறிந்தேன். அதுவரை மாலதி என்றே தவறான தகவலை நம்பியிருந்தேன்.  
    • ஹிந்திக் கார‌ன் த‌மிழ் நாட்டுக்கை வ‌ந்து ஹிந்தி க‌தைக்க‌ த‌மிழ் நாட்டுக் கார‌ன் ஹிந்தி தெரியாது என்று சொல்ல‌ நீ இந்திய‌னே இல்லை என்று சொல்லுறான் என்றால் வ‌ட‌ நாட்டு கோமாளிக‌ளுக்கு எவ‌ள‌வு தினா வெட்டு   ஏதோ ஹிந்தி உல‌க‌ம்  முழுதும் பேசும் மொழி மாதிரி ஹா ஹா..................மான‌த் த‌மிழ் பிள்ளைக‌ள் வீறு கொண்டு எழுந்தால் ஒரு சில‌ வார‌த்தில் த‌மிழை த‌விற‌ வேறு மொழிக்கு இட‌ம் இல்லை என்ற‌ நிலையை உருவாக்க‌லாம்................ஹிந்தி என்றால் அதை மிதி என்ற‌ கோவ‌ம் த‌மிழ‌ர்க‌ளின் ர‌த்த‌த்தோடு க‌ல‌ந்து இருக்க‌னும்................எழுத்து பிழை விட்டு என் தாய் மொழிய‌ நான் எழுதினாலும் என‌க்கு எல்லாமே த‌மிழ் தான்...............................
    • 👍... நீங்கள் சொல்வது உண்மையே. இவர்கள் எப்படித்தான் எங்களை இப்படித் துல்லியமாக அறிந்து வைத்திருக்கின்றார்களோ என்று ஒரு 'பயம்' கூட சில நேரங்களில் வருவதுண்டு.....😀
    • Macroeconomics இல் மனம் மலத்தை மனிதன் கையால் அள்ளுவதை வளர்ச்சி என்று வரையறுக்கிறார்களா?போலியான தரவுகளைக் கொடுத்தால் போலியான முடிவுகள்தான் கிடைக்கும்.இந்தியாவில் மனித மலத்தை மனிதர்கள் அள்ளுவது பொய்யென்று சொல்கிறீர்களா?எத்தனையோ மனிதர்கள் நச்சு வாயுவைச் சுவாசித்து மரணித்து இருக்கிறார்கள்.அதெல்லாம் உங்கள் கணக்கீட்டில் வருகிறதா?
    • விற்றுப் போடுவார்கள் என்பதால்த் தான் பூட்டுக்கு மேல் பூட்டைப் போட்டு பூட்டிவிட்டு இருக்கிறார்களோ?
  • Our picks

    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 19 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 4 replies
    • களத்தில் தற்போது சமயம் சம்ம்பந்தமாக பெரியா கருத்து பரிமாற்றம் நடக்கிறது, அங்கே கருத்தாடு பெரியவர்களே, அறிஞோர்களே உங்களால் இறைவன் இருக்கார் என்று ஆதாரத்துடன் நிரூபிக்க முடியுமா...........? முடிந்தால் நிரூபியூங்கள், நிரூபித்து விட்டு உங்கள் கருத்து மோதலை தொடருங்கள்
      • 37 replies
    • சமூகத்துக்கு பயனுடைய கல்விநிலை எது?

      பேராசிரியர் சோ. சந்திரசேகரன்

      இன்று நாட்டில் உள்ள கல்விமுறையையும் அதற்கு அப்பால் உள்ள கல்வி ஏற்பாடுகளையும் நோக்குமிடத்து, பல்வேறு கல்வி நிலைகளை இனங்காண முடியும். அவையாவன: ஆரம்பக்கல்வி, இடைநிலைக் கல்வி, பல்கலைக்கழகக் கல்வி உள்ளடங்கிய உயர் கல்வி, பாடசாலையில் வழங்கப்படும் (1-11 ஆம் வகுப்பு வரை) பொதுக்கல்வி, தொழில்நுட்பக்கல்வி, வளர்ந்தோர் கல்வி என்பன, இவை தவிர கருத்தாக்க ரீதியாக முறைசாராக் கல்வி, வாழ்க்கை நீடித்த கல்வி, தொடர்கல்வி எனப் பலவற்றை இனங்காண முடியும். இவற்றில் ஆரம்பக்கல்வி, இடைநிலைக்கல்வி, உயர்கல்வி என்னும் கல்வி நிலைகளே முறைசார்ந்த (Formal) கல்வியின் பிரதான நிலைகள் அல்லது கூறுகளாகும்.
      • 5 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.